Search This Blog

Sunday 29 July 2012

உலக -இந்திய ஜோதிடம்


“நாஸ்டர்டாம்ஸ்”—கி.பி.௧௫௦௩- ௧௬௩௦ -- 1503-1630  டைக்கோப்ரே கி.பி -- 1546—1601 மற்றும் கேப்லர் கி.பி -- 1571—1630 ஆகியோர் ஜோதிட அறிவு வளர முத்தாய்ப்பாக தங்கள் பங்கை அளித்தார்கள்.

“கலிலியோ”டெலஸ்கோப்பை கி.பி 1609 கண்டுபிடித்தார் .அதன் மூலமாக கிரகங்களையும் நட்சத்திரங்களையும் சுலபமாக ஆராயும் நிலைஏற்பட்டது.

“நியுட்டன்” கி.பி 1642 – 1727 வானியல் மற்றும் ஜோதிடத்தைப் பற்றி ஆராய்ந்து  2884 நட்சத்சிரங்களைப் பற்றிய விவரங்களைத் தொகுத்தார்.

இவ்வாறாக- பண்டைய உலகத்தில் ஜோதிடம் வளர்ந்து – படிப்படியாக வளர்ச்சியடைந்தது.

பௌர்ணமி – மாதத்திற்கு ஒருமுறை தோன்றுவதை அடிப்படையாகக்கொண்டு சூரிய பாதை அல்லது இராசி மண்டலம் 12 சமபாகங்களாக நம் முன்னோர்கள் பிரித்துள்ளனர். இதுவே இராசி என குறிப்பிடப்படுகிறது.

இராசி மண்டலப் பிரிவின் கிரகங் களான சூரியன்- சந்திரன்-செவ்வாய்-புதன்- குரு- சுக்கிரன்-சனி பற்றிய அடிப்படை உண்மைகள் மாறாமல் அப்படியே உள்ளன.

இந்திய ஜோதிடம்

            உலகில் இந்திய ஜோதிடமென்பது காலத்தாற் சோதிக்கப்பட்ட மிக பழமையான ஜோதிட முறையாகும்.ஜோதிஷா எனும் சமஸ்கிருத வார்த்தைக்கு      ஒளியின் விஞ்ஞானம் எனப் பொருள். மேலைநாடுகளால் வேதாங்க ஜோதிடமென அழைக்கப்படுகிறது.

இந்துக்கள் கோட்பாடுகளைக் கோண்டுள்ள வேதத்திலிருந்து தோன்றியதே ஜோதிட  சாஸ்திரமாகும். இந்தப் பிரபஞ் சத்தின் விவரிக்க முடியாத தாக்கத்தை நாம் புரிந்துகொள்ளக்   கூடிய விஞ்ஞானம் ஜோதிடமாகும்.பண்டைய முனிவர்களின்  வாழ்க்கையைப் பற்றிய அவர்களின் புரிதலையும் அனுபவத்தையும் வேதஜோதிடம் பிரதிபலிக்கிறது.

 இந்து முனிவர்கள் மற்றும் தத்துவஞானிகள் கடவுளைப் பற்றி விளக்க மிக சிரமங்களை எடுத்துக்கொண்டனர் . இந்த உலகமே தெய்வசக்தியால் இயங்குவதாக விளக்கினர். இந்த கடவுளின் உயர்ந்த ஞானமானது. ஒவ்வொரு    மனிதனையும் காத்து-அவன்.

வளர்ச்சிக்கான நல்ல சந்தர்பங்களையும் அவனுக்கு உருவாக்கித் தந்தது. நம்பிக்கையையும்-தைரியத்தையும் அளித்தது.

வேத ஜோதிடம் மனிதனின் பக்திமயமான நடத்தை மீது நம்பிக்கை வைக்கிறது. மேலும், தான் யார் ?என்ற உண்மையையும்,அவனே உணர வழிகாட்டுகிறது.

இந்த ஆன்மாவுக்கு சுப்ரீம் பவரான கடவுள் மற்றும் கிரகங்கள் அளித்த வழிகாட்டுதலாலும்,அதன மூலமாக அவனுக்கு ஏற்பட்ட   நம்பிக்கையாலும் , ஜோதிடர்கள் கணிக்கின்ற பலன்கள் உண்மையாகின்றன,எப்போதும் தவறுவதில்லை என்பதை அவன் தெரிந்து கொள்கிறான். ஜோதிட நூல்களில் மிகப் பழமையான நூல் “ரிக் ஜோதிட”மாகும். இது ”லகதா” வால் எழுதப் பட்டது. இதில் ௫/ 5 வகை வருடங்கள்,இரு அயனங்கள்,நட்சத்திரங்கள் கொடுக்கப் பட்டடுள்ளன. இருபத்தியேழு நட்சத்திரங் கள்,வசந்த கால சமகாலப்புள்ளிகளின் வக்ரகதி பற்றியும் விளக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment