Search This Blog

Sunday 29 July 2012

உலகஜோதிடம்


உலகஜோதிடம்  பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எகிப்து,பெரு,மெக்சிகோ ஆகிய நாடுகளில்தான்,வானியல் வேர்கள் ஊடுருவியதாக கருதப்படுகிறது. கி,மு,4000 ஆண்டுகளுக்கு முன் எகிப்தியர்கள் கிரக நிலைகளைப் பற்றிய அறிவைப் பெற்றிருந்தார்கள் அவர்கள் பஞ்சாங்கங்களைத் தயாரித்தனர்.

அதே காலத்தில்,சீனர்களுக்கும் வானியல் அறிவு இருந்ததாகத் தெரிகிறது. ஏனெனில் கி.மு, 2608 ல் கோயாஸ்குட்டே என்ற சீன அரசர் கோள்அரங்கம் கட்டியதாக தெரியவருகிறது.கி.மு.530 ல் பித்தாகோரஸ் – பூமி தன்னைதானே தன் அச்சிலே சுழல்வதாகக் கண்டறிந்தார்கள்..கி.மு. 275 சுமாரில் அரிஸ்டார்சஸ் என்ற அறிஞர் பூமி,சூரியனையும் சுற்றிசுழல்வதாகக் கண்டறிந்தார் . கி.மு.320 – 260 க்கு இடையே அரிஸ்டலின் மற்றும் டிமோரிஸ் ஆகியோர் நட்சத்திரங்களின் நிலைகளைப் பற்றிய அட்டவணை ஒன்றைத் தயாரித்தார்கள் .

இவ்வாறாக ,அறிஞர்கள் அளித்த கிரகங்கள்,நட்சத்திரங்கள்,அதன் அசைவுகள் என்று அவர்கள் வழங்கிய அறிவின் மூலமாகவே , இந்தக் கிரகங்களின் அசைவுகளை அடிபடையாகக் கொண்டு , மனிதனின் எதிர்காலம் பற்றி, அறிவிக்கும்,ஜோதிடம் பிறந்ததென்றால் மிகையாகாது.

கிளாடியஸ்பிலோமி (கி.மு. 120 – 180) என்ற அறிஞர் ஹிபார்க்கஸ் என்ற அறிஞரைத் தழுவி வானியல் மற்றும் ஜோதிடம் பற்றி எழுதிய அல்மாஜெஸ்ட் என்ற நூலே உலகின் மிகச்சிறந்த நூலாகக் கருதப்படுகிறது.

அரேபியர்கள் மிகச்சிறந்த நூல் இதுதான் எனக் கூறியுள்ளனர்.இந்த நூலில், பூமியின் அமைப்பு, கிரகணம்பற்றிய விவரங்கள், நட்சத்திர ஒளி மண்டலம் பற்றிய தகவல்களும் இடம்பெற்றிருந்தன

No comments:

Post a Comment