Search This Blog

Sunday 29 July 2012

ஜோதிட வளர்ச்சி

ஜோதிடவியலின் வளர்ச்சி

               ஜோதிடவியலின் பதினெட்டு மூலகர்த்தாக்களான,முனிவர்கள் அதன் வளர்ச்சிக்கும் பாடுபட்டவர்கள் ஆவர். அவர்கள் சூரிய, பிதாமக, வியாஸ, வசிஷ்ட, அத்ரி, பராசர, கஸ்யப, நாரத, கர்க, மரீசி, மனு, ஆங்கிரஸ, லோமச,  பௌலிச, ஸ்யவன,  யவன, பிருகு மற்றும் சௌனக ஆகிய ஒவ்வொருவரும் ஒவ்வொரு சித்தாந்ததை எழுதியுள்ளனர்.

இவர்களுக்குப்பின் பிருகு முனிவர், பிருகஸ்பதி,  பத்தராயணர், கபிலர், கஷ்யபர்,  மனு, மகரிஷி பராசரா, சதயாச்சார்யா, வராகிமிஹிரா, படோத்பவா,  வராஹிமிகிரரின் புதல்வர் பிருத்யுயசா, வைத்தியநாத தீட்சிதர், உத்திரகாலாமிர்தம்  எழுதிய  காளிதாசர்,  ஜாதகதத்வா   எழுதிய மகாதேவா, இன்னும் எத்தனையோ மகாமுனிகள், அறிஞர்கள், இந்திய ஜோதிட முன்னேற்றத்துக்குத் தங்கள் சேவையையும், பங்களிப்பையும் வாரி வழங்கியவர்கள் ஆவர்.

                மகரிஷி பராசரர் : இந்திய ஜோதிடத்தின் தந்தை எனப் பலராலும் புகழப்பட்டவர்.இவர் படைத்த மிகப் பெரிய ஜோதிடநூல்”பிருஹத் பராசர ஹோரா சாஸ்த்ரா” ஆகும்.

                மகரிஷி ஜெய்மினி : இவர் “வியாச மகரிஷி”யின் பிரதான சீடர்.இவர் தனது குரு வியாசரை “பத்ராயணர்” என குறிப்பிடுகிறார்.

இவரது சூத்திரங்களில்,ருத்ராம்சம், சஸ்த்தாம்சம்,சப்தாம்சம் மட்டுமின்றி இலக்னம் மற்றும் யோகங்கள் இணைக்கப்பட்டுள்ளன..

                ஆர்யபட்டா : வானியல் சாஸ்த்திரத்திலும்,கணிதத்திலும் சிறந்து விளங்கியவர்.பாடலிபுத்திரம் அருகே அஷ்மாக் என்ற கிராமத்தில் பிறந்தவர்.தனது பள்ளிப்படிப்பை குஷ்மபுராவில் முடித்தார்.

ஆர்யபட்டீயம்,ஆர்யபட்டா சித்தாந்தம் ஆகியவை இவரின் மிகச்சிறந்த படைப்புகளாகும்.

                வராஹிமிகிரர் :இவர் இந்திய வானியல்வலலுனர் ,கணிதமேதை மற்றும் ஜோதிடமேதையும் ஆவார்.

இவர் உஜ்ஜெய்னியில் பிறந்தவர்.ஐந்து வானியல் கணிதம் சம்பந்தமான நூல்களான சூர்யசித்தாந்தம்,ரோமகசித்தாந்தம்,பௌலிசசித்தாந்தம்,வசிஷ்டசித்தாந்தம், மற்றும் பிதாமகசித்தாந்தம் ஆகியவற்றின் சாரமே இவரின் பஞ்சசித்தாந்திகா சிறந்த நூலாகும்.

கலைக்களஞ்சியம் என பெயர பெற்றது இவரது பிருகத் சம்கிதா வாகும். இவரது புதல்வர் பிருத்யுயசாவின் ஜோதிடஉலகுக்கான பங்களிப்புத்தான் ஹோரா சாரா. தனது தந்தையின் நூல்களுக்கு மிகச் சிறந்த விளக்கங்களை அளித்துள்ளார்.வராகிமிகிரர்,கோள்கள் நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றிவருவதையும்,சூரியனுக்கு மிக அருகிலுள்ள கிரகங்கள் மிக வேகமாகச் சுற்றுவதையும், தூரத்திலிருக்கும் கிரகங்கள் மெதுவாகச் செல்வதையும் கேப்லருக்கு முன்னரே அறிந்திருந்தார் என சொல்லப்படுகிறது.

                இவர்களைத் தவிரவும்,முதலாவது பாஸ்கரா,இரண்டாவது பாஸ்கரா,லல்லா,வடேஸ்வரா,வீரசேனா,ஜெயதேவா, ஆரியபட்டா ஒனறு/இரண்டு ,ஸ்ரீ பதிஎன  வானியல்,கணிதம்,ஜோதிடத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்கள் ஏராளம் இவ்வாறாக ஜோதிட வரலாற்றை எழுதிக் கொண்டே போகலாம். விரிவஞ்சி இத்துடன் முடித்துக் கொள்ளலாம்..

No comments:

Post a Comment