Search This Blog

Sunday 2 September 2012

4 ல் சந்திரன்


4 ல் சந்திரன் 



வாகனம் --

நான்கில் சந்திரன் இருக்க,நான்காம் அதிபதியுடன் குரு இணைய,சுக்கிரன் பாரக் கவும் நல்ல வாகனம் அமையும்.
நான்காம் அதிபதி உச்சம்பெற, புதன்,    சுக்கிரன் இணைய,சுபரால் பார்க்கப்படவும்
வாகனம் அமையும்.
இலக்னாதிபதி இலக்னத்தில்  இருக்க, சந்திரன்,புதன்,குரு மற்றும் சுக்கிரன் நான் கில் இருக்கவும் வாகனம் அமையும்.

நிலக்கிழார்

இலக்னாதிபதியும்,   நான்காம் அதிபதியும் சுய வீட்டில் இருக்கவும்,ஜாதகர் நிலக் கிழாராக இருப்பார்.
செவ்வாய் உச்சம்  அல்லது  ஆட்சியாகி நான்கில்  இருக்கவும்,அவருக்கு இடங்
கொடுத்தவன் சுபவீட்டில் இருந்து,குருவால் பார்க்கப்பட, ஜாதகர் நிலக்கிழாராக இருப்பார்.
சுக்கிரன் நான்கிலும்,செவ்வாய்  பத்திலும் இருக்க, ஜாதகர் நிலக்கிழாராக இருப் பார்.

ஆயகலைகள்

நான்காம் அதிபதியும், குருவும்,சுக்கிரனால் பார்க்கப்பட,ஜாதகர் சாஸ்திரங்களில் தேர்ந்தவராகவும்,கவிஞராகவும் இருப்பார்.
நான்காம்  அதிபதி சனியாகி, ஒரு அனுகூலமான வீட்டில்,சுக்கிரனும் கேதுவும் இணைந்திருக்க  ஜாதகர்  ஆயகலைகள்  அறுபத்து   நான்கிலும் தேர்ந்தவராக இருப்பார்.
சனி,புதன்,உச்சமாகி,,நான்காம் அதிபதி சந்திரனோடு கடகத்தில் இருக்க ஜாதகர், எல்லா விஞ்ஞானமும் அறிந்தவராக இருப்பார்.




ஆண்மகவு

இலக்னாதிபதி,  ஐந்தாம்  அதிபதி  இருவரும் பரிவர்த்தனையாக  ஜாதகருக்கு
நல்ல மகன்கள் பிறப்பார்.
இலக்னாதிபதி உச்சமாக,  ஐந்தாம்   அதிபதி குருவோடு இணைய, ஜாதகருக்கு நல்ல மகன்கள் பிறப்பார்.
ஐந்தாம் அதிபதி  குருவோடு  கேந்திர  கோணங்களில்  இணைய, ஜாதகருக்கு நல்ல மகன்கள் பிறப்பார்.

சன்யாசி

செவ்வாய், சனி பத்தில் இருக்க,   ஜாதகர்  அனைவரின் கவனத்தைக் கவரும் வண்ணம்,வேலைகளை அழகாகச் செய்வார்.
குரு,சனி,புதன் இவர்களோடு பத்தாம் அதிபதியும் இணைந்து,கேந்திரம் அல்லது கோணங்களில் இருந்து,அந்த தசா காலத்தில் ஜாதகர் சன்யாசி ஆவார்.
பத்தில் சந்திரன்,சனி இருக்க,ஜாதகர் பெரிய குடிகாரனாக இருப்பார்.
இவை இரண்டும், அசுப ஸ்தானங்களில்  இணைந்திருக்க  பிறர்மேல் தவறான குற்றச் சாட்டுக்களைச்  சுமத்துபவனாகவும்,  பிறர்   சொத்தை பொய் சொல்லி அபகரிப்பவனாகவும் இருப்பான்.

செல்வ சேர்க்கை

பலம் மிக்க சூரியன் பதினொன்றில் இருக்க,உடற் கூறுவல்லுனராகவும், நவரத் தினங்கள் மூலமாகவும்,அதிகம் சம்பாதிப்பான்.
பதினொன்றில்  முழுநிலவிருக்க,விவசாயம் மூலமாகவும்,மூலிகைகள் மற்றும் வாசனைத் திரவியங்கள் மூலமாகவும் செல்வஞ் சேர்ப்பான்.
பலம்வாய்ந்த செவ்வாய்,பதினொன்றில் இருக்க,ஜாதகர் கணிதவல்லுனராகவும், கிராம தலைவராகவும், சகோதரர்களுடன் சண்டையிடுபவராகவும் திருடுபவரா கவும்,மற்றவர்களை  ஏமாற்றி அவர்களின்,செல்வம்,நிலங்களை அபகரிப்பவரா கவும் இருப்பார்.
பதினொன்றில் பலம் மிக்க புதன்  இருக்க ஜாதகர் புரோகிதனாகி ,வைசியர்கள் மூலமாக சம்பாதிப்பார்.
பதினொன்றில் பலம்  மிக்க குரு  இருக்க,சூரியன் பார்க்க, ஜாதகர் நவரத்தினங் கள் மூலமாகவும், செம்பு மூலமாகவும், அதிகம் சம்பாதிப்பான்.
பதினொன்றில் பலம் மிக்க சுக்கிரன் இருக்க,பெண்கள் மூலமாகவும்,அரசன்மூல மாகவும் சம்பாதிப்பான்.
பதினொன்றில் பலம் மிக்க,சனி மற்றும் இராகு இருக்க,விவசாயம் மற்றும் பல ஜாதிக்காரர்கள் மூலமாக வருமானமடைவார்.

நரகம்

பன்னிரெண்டாம்  அதிபதி வர்க்கக் கட்டங்களில் பலம் மிக்கவராகி,சுயவீட்டில் அல்லது உச்ச  வீட்டில் இருக்க, தன் சொத்துபத்துக்கள் அனைத்தையும் கடவு
ளின்,பொற்பாத  கமலங்களில்  சமர்ப்பிப்பான்.  அனைத்திலும் வெற்றி வாகை
சூடுவான்.
பன்னிரெண்டாம் அதிபதி,  குரு, சுக்கிரன் பலம் மிக்கவராகவும் அல்லது பன்னி ரெண்டாம் அதிபதியுடன் சுபர்கள் இணைய,ஜாதகர் அடிமைத் தனத்திலிருந்து
விடுபடுவார்.
பன்னிரெண்டாம் வீட்டில் சூரியன் இருக்க,ஜாதகர்,நூறு ஆண்டுகள் நரகத்தில் இருப்பான்.
பன்னிரெண்டாம் வீட்டில் சனி, இராகு அல்லது செவ்வாய் இருக்க ஜாதகர், நீண்டகாலத்திற்கு,நரகத்தில் எல்லாவித தொல்லைகளையும் அனுபவிப்பார்.
சுபர் சம்பந்தம்பெற,மறுபிறவி எடுத்து, மீண்டும் பூமியில் பிறப்பான்.


                                        




No comments:

Post a Comment