Search This Blog

Saturday 8 September 2012

படிப்பதினால் மட்டும் அறிவு வருவதில்லை


படிப்பதினால் மட்டும் அறிவு வருவதில்லை

படிப்பதினால் அறிவு பெற்றோர் ஆயிரம்,
பாடம் படிக்காத மேதைகளும் ஆயிரம் உண்டு !..............

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை;
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை...!

பல மனிதர்கள் இயற்கையாகவே பள்ளீி கல்லூரி சென்று நன்கு படித்து, அறிவாளியாகி நன்கு முன்னேறிவிடுவர்.அவர்களுக்கு நல்ல தொழில்முறை திறமையும்,வாதத்திறமையும் ,அழகு,கலை,அறுசுவை ஆகியவற்றை கொள்கை பிடிப்போடு ரசிக்கும் தன்மையும் எல்லா திறமைகளூம் ஒருசேரப் பெற்றவராக இருந்தாலும்,ஏதேனும் ஒரு விஷயத்தில் சரியான முடிவெடுப்பதற்குள், தட்டுத்தடுமாறி,கடைசியாக தவறான முடிவிற்கே வருவார்கள். இத்தகைய படித்தமேதைகளுக்கு அடிப்படையிலேயே தேவையான பொதுஅறிவு இல்லாததே காரணமாகும்.இவ்வுலகில் இன்னும் சில மனிதர்கள் அவர்களின் மொத்த குடும்பத்தின் சுமைகளையும் சுமந்து கொண்டிருக்கும் சுமைதாங்கிகளாயும், மழைக்கு கூட பள்ளிக்குள் ஒதுங்காதவர்களாக வும் இருப்பர்.ஆயினும் அந்த படிக்காதமேதைகளால் கண்டிப்பாக, எந்த விஷயத்தையும் சீர்தூக்கி பார்த்து ,அதன் சாதகபாதகங்களையும் அலசி தந்திரமாக சமாளிக்கும் கலைகளை பிரயோகித்து, மிக துல்லியமாக,நிகழ்வுகளுக்கு சரியான முடிவுகளை எடுக்ககூடிய திறமை இருக்கும்.அந்த படிப்பறிவில்லாத பாமரனுக்கு படிப்பில்லையெனினும், பொதுஅறிவில் சிறந்தவராக இருப்பதால், இயற்கையாகவே அனுபவத்தால் அது சாத்யமாகிறது . மேலும்,எப்படிச்செய்தால்,எப்படி முடியும் என்று நன்கு அறிந்திருப்பார்.ஆனால், அதிமேதாவிகளுக்கோ,இத்திறமைகள் இருப்ப தில்லை.ஏனெனில் எப்போதுமே ஏட்டுச்சுரைக்காய்,கறிக்கு உதவுவதில்லை என்ற பழமொழி நாம் அறிந்த ஒன்றே. மேலே குறிப்பிடப்பட்ட பாடல்களும் இதையே விவரிக்கின்றன.

இப்போது,முடிவெடுக்கும் ,திறமைக்கான,தெளிவான அறிவுக்கான ஜோதிட காரணிகளைப் பார்ப்போம்.

நினைவுகளூம்,முடிவுகளும் மனதிலிருந்து எழுபவை.அந்த மனதுக்கு காரகன் சந்திரன் ஆவான்.அதேபோல்,எதையும் சீர்தூக்கிப் பார்த்து நல்லது கெட்டதை பகுத்தறிந்து உணரும் தெளிவைத் தருவது புத்தி. இந்த புத்திகூர்மைக்கு காரகன் புதன் ஆவான்.எனவே,100% சரியான,நல்ல முடிவெடுக்கும் திறமைக்கு புதனே காரணகர்த்தா. மேலும், முடிவெடுக்கும் திறமைக்கு தர்க்கம் செய்யும் திறமையும் அவசியமாகிறது. செவ்வாயே, தர்க்கதிறமைகளை தருபவன்.செவ்வாய், புதனுடனான நல்லுறவு...,முக்கியமாக அசுபகிரகங்களால் பாதிக்கபடாத தன்மையும்,நிழல் கிரகங்களான் ராகு-கேதுக்களின் தாக்கமும் இந்த தர்க்கதிறமையை கூட்டுகின்றன.ஸ்திரம் மற்றும் நெருப்பு ராசிகளில் ,இருபுறமும் சுபர்கள் புடைசூழ நிற்கும் புதன்,தீர்மானமான,அனுபவரீதியான முடிவெடுக்கும் சக்தியை அளிக்கிறான்.
தயை செய்யும் கிரகங்களின் தாக்கங்கள்சாதகமான அல்லது தயை புரியும் நிலைகள் யாதெனில், புதன் பலமுடன் திகழ்வதும்,சந்திரன் சுபர்களின் ,அதாவது குரு ,சுக்கிரனின் தயை தரும்தாக்கம் அல்லது தொடர்பு பெருவது நல்லது.மேலும் அதிக சுபர்களின் தயை பெறும் சந்திரன் இன்னிலைக்கு மிகவும் உதவுபவன் ஆவா ன். எனவே, சந்திரன் தனது சுயபலத்துடன் இருப்பது அவசியமாகிறது,வளர்பிறை சந்திரனாகவும் இருக்கவேண்டும்.

மேலும்,குருவு க்கோ அல்லது சுக்கிரனுக்கோ திரிகோணத்தில், புதன் இருக்க அல்லது சூரியனுடன் கூடிய புதன் ஆகிய நிலைகளும் நுண்ணறிவைதரும். இத்துடன்கூட ராகுவின் தாக்கத்திலிருந்து லக்னம் சுதந்திரம் பெற்று இருக்கவேண்டும். அதேபோல மிக குறைவான அளவில் கேதுவின் தாக்கமும் இருக்கவேண்டும்.லக்னம் அல்லது சந்திரனுக்கு தாக்கந்தரும் நிழல்கிரகங்கள்,அனுகூலமான நல்ல முடிவுகளை அளிக்கவல்லது என்றாலும், நினைப்புத்தான் போழப்பை கெடுக்கும் என்பது போல், ஒருவரின் நினைப்பையும், பகுத்தறிந்து பார்க்கும் சக்தியையும் நாசம் செய்து விடுகின்றன. அவை, ஒருவரிடம்,எதையும் மிகைப்படுத்தி கூறும் தன்மையை அதிகரித்தும், எதையும் ஆச்சர்யகரமாக பார்க்கும் தன்மையும் கொடுத்து அவர்களின் திறமைகளை முடக்கி ,அதன் காரணமாக் எதற்கும் சரியான் முடிவெடுக்க முடியாத நிலைக்கு அவரை தள்ளிவிடுகிறது. இதன் காரணமாக,அந்த நபர் எந்த முடிவும் எடுப்பதற்கும், தனது விருப்பு வெறுப்புகளே இறுதியானது என்று நம்பிக்கொண்டு, அந்த தவறான நம்பிக்கையிலேயே திருப்தியடைந்து, காரியத்தைக் கோட்டை விட்டுவிடுவார்கள் என்பதே உண்மை.

இனி பாவ நிலைகளைப் பற்றி பார்ப்போம்.

ஐந்தாம் பாவம் புத்திகூர்மையைக் குறிப்பதாகும்.ஒருவருக்கு விவேகமிக்க, அனுபவ பூர்வமான புத்தி அல்லது மனம் எப்போது வருமேனில்........................

1. சுபர் இடம் பெற்ற அல்லது சுபரால் பார்க்கபட்ட, சுபகிரகராசியாக ஐந்தாம் பாவம் அமைய.................

2. ஐந்தாம் அதிபதி சுபகர்த்தாரியில் இருக்க அல்லது உச்சம் பெற்றிருக்க........

3. கேந்திரத்திலோ அல்லது திரிகோணத்திலோ குரு இருக்க............

4. குருவின் அனுகூலமான தாக்கம் ஐந்தாம் பாவத்திற்கு அமைய.................

5. ஐந்தாம் அதிபதி பலம்பெற்று கேந்திரத்திலிருக்க மற்றும் புதன் ஐந்திலிருக்க

6. ஐந்தாம் அதிபதி சுபருடன்கூடி கேந்திரத்தில் இருக்க....................

7. ஐந்தாம் அதிபதி கோபுராம்சம் பெற அல்லது வேறு உயரிய அம்சம் பேற்......

8. இந்த அனைத்து நிலைகளிலும்,புதனும்,சந்திரனும் நல்ல நிலை பெறுவதே மிக முக்கியமானதாகும்.

எனவே, எந்த செயலுக்கும்,குழப்பங்களுக்கும் இறுதி முடிவளிக்கும் திறமையை மனிதனுக்கு அளிப்பது மனமும், புத்தியுமாகிய சந்திரனும், புதனும்தான் என்பது நிதர்சனமன்றோ !.



No comments:

Post a Comment