Search This Blog

Saturday 17 May 2014

அறுவை சிகிச்சைக்கான, அனுகூலமான முகூர்த்தம்.





அறுவை சிகிச்சைக்கான, அனுகூலமான முகூர்த்தம்.

      கடவுளின் புகழ் இந்த பிரபஞ்சத்தில், சூரியக் குடும்பத்தின் மூலமாகப் பிரதிபலிக்கப்படுகிறது. மனித வாழ்க்கை மீதான, சூரியன், அதன் உபக்கிரகங்கள், கிரகங்கள் மற்றும் நட்சத்திரக் கூட்டங்களின் கண்காணிப்பில், அவற்றின் அசைவுகள் மற்றும் தாக்கங்கள் மூலமாக, இறைவன் நடத்தும் நாடகமே மிக மாயா வினோதமானது.

      மனித குலத்தின் நன்மைக்காக, உலகத்தில் எவராலும் நம்பமுடியாத, தங்களின் ஞான திருஷ்டியால் உணர்ந்த பிரபஞ்ச சக்தியை, நமது முன்னோர்களாகிய, முனிவர்கள், ஜோதிடம் என்னும் பேரறிவின் மூலமாக உலகுக்கு அளித்தார்கள்.

      நாளடைவில், அவர்களால் அளிக்கப்பட்ட இப் பொக்கிஷங்கள், காலப்போக்கில் சிறிது சிறிதாகக் காணாமல் போயிருந்தாலும், பல துல்லியமான தகவல்கள்இந்த ஜோதிடக் கலையில் மிக்க ஆர்வம் உள்ளவர்களாலும் மற்றும் அதன் காரண காரிங்களை அலசி ஆராய முற்பட்டவர்களாலும் அதிர்ஷ்டவசமாக காப்பாற்றப்பட்டது என்றால் மிகையாகாது.

      இந்தக் கட்டுரையில் நாம், வெற்றிகரமாக அறுவை சிகிச்சைகள் முடிந்து, ஆரோக்கிய வாழ்க்கையை அடைவதற்கான, சரியான நல்ல நேரத்தை, சிறந்த முகூர்த்தத்தை அறியும் நுணுக்கங்களைப் பற்றிய, தகவல்களை அலசுவோம்.

      அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவதற்கான முகூர்த்தத்தைக் குறித்துத் தருவதோடு மட்டுமன்றி, அவர்கள் விரைந்து குணமாவதற்குத் தேவையான பரிகார முறைகளையும் கூறுவது ஜோதிடரின் கடைமையாகிறது.

      முதலில், நாம் ஒருவன் ஆரோக்கியத்தைப் பாதிக்கக் கூடிய, கிரக நிலைகள் என்ன ? அதற்கான காரணிகள் என்ன ?, அது அறுவை சிகிச்சை வரைக் கொண்டு செல்லுமா ? – என்பதை எல்லாம் ஆராய வேண்டும். ஒரு நோயாளியைக் குணப்படுத்த சாதாரணமாக வேறு வழியின்றிப் போகும் போது, கடைசியாக எடுக்கப்படுவதே அறுவை சிகிச்சைக்கான முடிவாகும்.

      ஒருவருக்கு வரக்கூடிய நோயின் தன்மை மற்றும் அதன் பாதிப்புகள் அனைத்தும், எந்த அளவுக்கு அவரின் ஜாதகத்தில் உள்ள குறிப்பிட்ட இராசி அல்லது இராசிகள் மற்றும் அதிலுள்ள கிரகங்கள் பாதிப்பு அடைந்துள்ளன என்பதைப் பொருத்தே அமைகிறது.
 
       “ பிரஹத் ஜாதகத்தில்ஒளிக்கிரகங்களான, சூரிய, சந்திரர்களில் இருந்து     7 ஆம் வீட்டை எப்போது, செவ்வாயும், சனியும் அலங்கரிக்கிறார்களோ அப்போது ஜாதகருக்கு நோயால் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த இரு அசுபக் கிரகங்களும், ஒளிக்கிரகங்கள் மீது தங்கள் தாக்கத்தை அதிகரிக்கும் போது, அத்தகைய ஜாதகருக்கு, இறப்பு விரைவிலேயே நிகழும்எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

        இலக்னத்தின் மீதான ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அசுபக் கிரகங்களின் ஒன்றிணைந்த, அவற்றின் இணைவு அல்லது பார்வைகள் மூலமான தாக்கம் காரணமாக, ஜாதகரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, நோயை உற்பத்தி செய்யக்கூடிய தன்மை அதிகரிக்கிறது.
        இலக்னத்தில் இருந்து ஆறாம் வீடு, முக்கியமாக ஜாதகரின் ஆரோக்கிய நிலையை குறிகாட்டுகிறது. கிரகங்களின் இயற்கைத் தன்மை மற்றும் இராசியிலும், நவாம்சத்திலும் அது இடம்பெற்றுள்ள நிலை, ஆகியவையே, ஜாதகரின் நோயின் வகை, அளவு மற்றும் அதைக் குணப்படுத்தக் கூடிய சாத்தியக் கூறுகள் பற்றிய தகவல்களைத் தெரிவிக்கின்றன. மேலும், துல்லியமாக அறிய, அவற்றின் தசா, புத்தி மற்றும் கோசார நிலைகளின் தொடர்பு ஆராயப்பட வேண்டும்.

        இத்தகைய விம்சோத்ரி தசா,புத்தி மற்றும் கோசார ஆய்வு, ஜாதகருக்கு, அறுவை சிகிச்சை தேவைப்படுமா ? அதன் பிறகு அவரின் ஆரோக்கியம் சீராகி, உடல்தேறி நல் வாழ்வு வாழ்வாரா ? – என்பதற்கான அறிகுறிகளைத் தெளிவுபடுத்தும்.

        இலக்னத்தோடு இணைந்த, பார்த்த மற்றும் தொடர்புடைய அசுபக் கிரகங்கள், ஜாதகருக்கு நோய் மட்டுமன்றி, விபத்து மற்றும் அதன் காரணமாக வாழ்க்கையில் ஏற்படும்  பின்னடைவுகள் தரும், தீவிர மன உளைச்சல் ஆகியவற்றையும் தருகிறது. இந்த மன உளைச்சல்கள் அனைந்தும் ஓன்றிணைந்து, அவரின் நோயை அதிகரிக்கச் செய்கிறது. ஏனெனில், மனமே நம் முழு உடலையும், கண்காணித்துக் கட்டுப்படுத்தும் கட்டுப்பாட்டு அறையாகும்.

       முக்கியமாக, அசுப இராசிகளில் இடம்பெற்றுள்ள அசுபக் கிரகங்களின், கெடுதல் செய்யும் தசாக் காலங்கள், ஜாதகருக்கு இன்னல்களை அளித்து, வைத்தியச் செலவுக்கான, பொருள் இழப்பையும் ஏற்படுத்துகிறது. செவ்வாய், சனி மற்றும் இராகு போன்ற தற்காலிக அசுபக் கிரகங்களே நோயை உருவாக்கும் மையங்களாகின்றன.  7½ சனி மற்றும் அஷ்டமச் சனி போன்ற காலங்களில் அறுவை சிகிச்சைக்கு வாய்ப்பு ஏற்படலாம் என்று பலன் காணலாம்.

       மேலே சொல்லப்பட்ட அசுபக்கிரகங்களின், ஒரு இராசியின் மீதான இணைந்த தாக்கங்கள் ட்யூமரை ஏற்படுத்துவதோடு, அது கடைசியில் தீவிரமாகும் போது புற்றுநோயாக மாறி, அந்தக் கட்டிகளை அகற்ற, அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலைக்குக் கொண்டு செல்கிறது.

       இராகு மற்றும் செவ்வாய் போன்ற அசுபக் கிரகங்களின் தசா அல்லது புத்தி நடைபெறும் காலங்களில், அறுவை சிகிச்சைக்கான வாய்ப்புக்கள் உருவாகின்றன. சந்திரன் மற்றும் சுக்கிரனின் தீவிர பாதிப்புக்கள், பெண்களுக்கு கற்ப சம்பந்தமான பிரச்சனைகள், ரத்தப் போக்கு போன்ற பிரச்சனை காரணமாக அறுவை சிகிச்சைக்கான நிலையை ஏற்படுத்தலாம்.

       இரண்டாம் வீடு பாதிப்பு அடையும் போது முகத் தோற்றத்தில் மாற்றம் ஏற்பட, ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து திருத்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம்.

       சில நேரங்களில் 12 மற்றும் 6 ஆம் பாவங்களில் அமர்ந்த கிரக தசா ஆரம்பமாகும் போது, ஏற்படும் மருத்துவச் செலவு போன்ற விரயச் செலவுகள் ஏற்படும் முன், ஜாதகரை வீடு வாங்குதல் அல்லது கட்டுதல் போன்ற செலவுகளை செய்யச் சொல்லி, ஆலோசனை அளித்து, ஜோதிடர்கள்  அவர்களைக் காக்கலாம்.

       செவ்வாய் மற்றும் சுக்கிரனின் ஈடுபாடு, சில நேரங்களில் விபத்தைத் தந்து அதன் காரணமாக பாதிக்கப் பட்டவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையை உருவாக்கலாம். இது போன்ற அவசர சூழ்நிலைகளில், அறுவை சிகிச்சைக்கான நல்ல நேரத்தைத் தீர்மானிக்க இயலாது. முன்னரே ஜாதகத்தைக் காட்டி ஆலோசனை கேட்டிருந்தால், விபத்து ஏற்படும் நிலையைக் கூறி எச்சரித்து இருக்க முடியும்.

        இராகு திசை அல்லது மாரக கிரக திசைகளில் கோசார இராகு, சனி மற்றும் செவ்வாய் ஆகிய இவற்றின், ஒன்றிணைந்த ஜனன ஜாதகப் பாதக நிலையில் இருந்து அவரைக் காப்பாற்ற அல்லது கஷ்டங்களைக் குறைக்க அறுவை சிகிச்சைக்கான சூழலை உருவாக்கி விடுகிறது
 
        மற்றபடி சாதாரண காலங்களில், அறுவை சிகைச்சை வெற்றி பெறுவதற்கான நல்ல முகூர்த்தத்தை மருத்துவரின் ஆலோசனைப் படியும் குறிப்பது நல்லது. சில மருத்துவர்கள், பாதிக்கப்பட்டவரையே அறுவை சிகைச்சைக்கான அனுகூலமான நேரத்தைக் குறித்து வரக் கேட்டுக் கொள்வதும் உண்டு. அப்படிக் கேட்கப்படும் போது நல்லநேரம் குறிக்கப் பார்க்க வேண்டிய, அடிப்படை விஷயங்களாவன ----

1.   ஜன்ம நட்சத்திரத்திற்கும், அன்றைய நட்சத்திரத்திற்கும் உரிய தாராபலம் பார்க்க வேண்டும்.
2.   சந்திர பலம் பார்க்க வேண்டும்.

3.   பஞ்சகம்பார்க்கப்பட வேண்டும்.

4.   அறுவை சிகிச்சைக்கு முக்கியமாக மிருத்தியு பஞ்சகம் மற்றும் ரோக பஞ்சகம் கூடாது. ஏனெனில் இந்த நேரங்கள் மரணத்தைத் தரவோ அல்லது சிகிச்சைக்குப் பிறகு சுகம் பெறக் காலதாமதத்தையும் ஏற்படுத்தலாம்.

5.   திதிபௌர்ணமி திதி கூடாது. ஏனெனில் அன்று இரத்த ஓட்டம் அதிகரிப்பதன் காரணமாக, இரத்த விரயம் அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது. ஆனால் மேலை நாட்டவர்கள் இந்த நாளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இந்துக்கள் அமாவாசை நாளை நல்ல நாளாகக் கருதுவது இல்லை.

6.   ஆயுதங்களையும், அறுவை சிகிச்சை நிபுணரையும் குறிக்கும் செவ்வாய் மற்றும் திறமையாக நோயைக் கண்டு கொள்ளும் திறன், தகவல் தொடர்பு ஆகியவற்றைக் குறிக்கும் புதன்இருவரும் வக்கிர நிலை அடையும் போது அறுவை சிகிச்சை செய்வதை தவிர்க்க வேண்டும்.

7.   பௌர்ணமிபிரதமை, அமாவாசைபிரதமை மற்றும் துவாதசிஏகாதசி ஆகிய திதிகளுக்கு இடையேயான இரண்டு விநாழிகைகள், அபாயத்தையும், மிகுந்த கெடுதலையும் தரும் காலம் ஆகும்.

8.   சிசேரியன் மூலமான பிரசவத்திற்கு, ஜோதிடரிடம் நேரம் குறித்துக் கேட்கும் போது அவர் எப்படிப்பட்ட பிரசவம் ஏற்படும் என்று முடிவு செய்து கொள்ள வேண்டும். “ஜாதக தத்துவாஎனும் நூலில், இலக்னத்தில் இருந்தோ அல்லது சந்திரா இலக்னத்தில் இருந்தோ 4 மற்றும் 7 ஆம் பாவங்களில், அசுபக் கிரகங்கள் இடம்பெற, ஜாதகிக்கு சுகமான பிரசவம் ஏற்படாதுஎனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.

9.   பிரசவத்தின் போது, 4 ஆம் வீட்டில் செவ்வாயின் அமர்வு பாதிப்பதால், இரு உயிர்களுக்கும் கண்டம் ஏற்படலாம். ஆனால் இலக்னத்துக்கும், சந்திரனுக்கும் சுபர் தொடர்பு இருந்தால் பிரச்சனை இல்லை.

10.  தாய்க்கு நீண்ட ஆயுள் இருந்தாலும், பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் பஞ்ச மகா புருஷ யோகங்களில் ஒன்று இருந்தாலும், இராகு 11 இல் இருந்தாலும் தாய்க்கும், குழந்தைக்கும் உயிர் பயம் நீங்கும்

        தாயின் ஜாதகத்தில் சர்ப்ப தோஷம் இருந்து, கரப்பம் தரிப்பதற்கு முன் அதற்கு பரிகாரம் செய்யாவிடில், குழந்தைக்கு மரண ஆபத்து ஏற்படலாம்.

        கணவன் அல்லது மனைவியின், இலக்னத்துக்கு அல்லது சந்திரனுக்கு   5 ஆம் வீட்டின் மீது, செவ்வாய், சனி மற்றும் இராகு ஆகியோரின் தாக்கம் இருக்க, பிரசவத்தின் போது தாய்க்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. மேலும் இக் கிரகங்களின் தசா புத்திகள் நடந்தால் கேட்கவே வேண்டாம்

        பிரசவ நேரத்தில், சந்திரன் மிருத்யு பாகைகளில் இருந்தால்  அது குழந்தையை பாதிக்கும். ( ஜாதக பாரிஜாதத்தின் படி மேஷத்திலிருந்துமீனம் வரையிலான மிருத்யு பாகைகள் முறையே 8° 25° 22° 22° 21° 1° 4° 23° 18° 20° 20° 20° ஆகும்ஆனால் சந்திரன் புஷ்கராம்சத்தில் இருக்க அந்த நேரத்தில் பிரசவத்தை வைத்துக் கொள்வது மிகுந்த அனுகூலமான நேரமாகக் கருதப்படுகிறது. ( புஷ்கராம்சப் பாகைகள் மேஷம்மீனம் முறையே 21° 14° 18° 8° 19° 9° 24° 11° 23° 14° 19° 9° ஆகும்.)
       “பிரஹத் ஜாதகத்” தின் படி, மேஷ இராசி முதல் மீன இராசி வரை காலபுருஷ தத்துவத்தின்படி ஒவ்வொரு இராசிக்கும், உடலின் ஒவ்வொரு பாகம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அவை முறையே தலை, முகம், மார்பு, இதயம், வயிறு, இடுப்பு, அடி வயிறு, ரகசிய உறுப்புக்கள், தொடைகள், முழங்கால், பட்டக்ஸ் மற்றும் பாதம் ஆகும்.

       உதாரணமாக, சந்திரன் மேஷத்தில் இருக்கும் போது மிக்க அவசியம் ஏற்பட்டாலன்றி, மூளை சம்பந்தமான அறுவை சிகிச்சை செய்யக் கூடாது. அதுவே கோசாரச் சந்திரன், ஜனனச் சந்திரனைச் சந்திக்கும் போது, அபாயத்தின் அளவு அதிகமானதாக இருக்கும். இதே போன்று அந்தந்த  பாகத்தை குறிக்கும் இராசிகளில் சந்திரன் இருக்க, அப் பாகத்தில் அறுவை சிகிச்சை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

உடலின்பாகம்
நட்சத்திரங்கள்
கிழமை
தலை
கார்த்திகை, விசாகம், அனுஷம்,பரணி.
சனிக்கிழமை
கண்கள்
ரோஹிணி, சுவாதி, கேட்டை, அஸ்வினி
வெள்ளிக்கிழமை
கழுத்து
மிருகசிரீடம், சித்திரை, மூலம், ரேவதி.
வியாழக்கிழமை
தோள்ப்பட்டை
திருவாதிரை, ஹஸ்தம், பூராடம், உத்திரட்டாதி
புதன் கிழமை
கைகள்
புனர்பூசம்,உத்திரம், உத்திராடம்,பூரட்டாதி,
செவ்வாய்கிழமை
வயிறு
பூசம், பூரம், அபிஜித், சதயம்.

திங்கள்க் கிழமை
பாதம்
ஆயில்யம், மகம், திருவோணம், அவிட்டம்
ஞாயிற்றுக்கிழமை

       மேற்கண்ட அட்டவணைப்படி உள்ள நட்சத்திரத்தன்று, ஜன்ம நட்சத்திரம் வந்தால் அந்த நாளில், அந்த உடல் பாகத்தில் ஆப்ரேஷன் செய்யக் கூடாது.

       அதே போன்று, உடலின் பாகத்திற்கு உரிய நட்சத்திரம், ஜாதகரின் ஜன்ம நட்சத்திரத்தைத் தொடும் அந்த நாளில் அறுவை சிகிச்சை செய்வது ஆபத்தைத் தரும். உதாரணமாக, ஜாதகரின் ஜன்ம நட்சத்திரம் பூசம் ஆனால், திங்கள்க் கிழமையன்று வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அன்று செய்யும் ஆப்ரேஷன் வெற்றிகரமாக முடியாது.

       இலக்னம் , இராசி மற்றும் நட்சத்திர சந்திகளில், அறுவை சிகிச்சை செய்யக் கூடிய இலக்ன நேரம் அமையக்கூடாது. ( கடகம், விருச்சிகம் மற்றும் மீனம் ஆகிய இராசி சந்திகள், ரிக்ஷசந்தி எனப்படும். ( ஆயில்யம், கேட்டை மற்றும் ரேவதி ஆகிய நட்சத்திரத்தின் 4 ஆம் பாதம் ரிக்ஷசந்தி ஆகும். ) இந்த நேரத்தில் பிறந்த குழந்தை உயிர் இழக்கும். ஆனால் இலக்னத்துக்கு சுபர் தொடர்பு இருக்கப் பிழைத்துக் கொள்ளும்.

     அடுத்து கண்டாந்த நேரத்திலும் பிரசவத்தை வைத்துக் கொள்ளக் கூடாது. ( நீர் இராசியின் கடைசியும், நெருப்பு இராசியின் முதல்யும் கண்டாந்தமாகும். கண்டாந்த காலத்தில் ஆப்ரேஷன் செய்வதும் ஆபத்தாகும்.

     இலக்ன சந்தி, இராசி சந்தி மற்றும் நட்சத்திர சந்தி ஆகிய காலங்களில் பிரசவத்தை வைத்துக் கொள்ளக் கூடாது. அதுவும் குரு நீசமாக அல்லது செவ்வாயின் இராசியில் அவர் இடம் பெற்றிருக்கக் கூடாதுஎன சர்வார்த்த சிந்தாமணி” குறிப்பிடுகிறது.

     சூரிய உதயத்துக்கு ஒரு மணி நேரம் முன்பும், அஸ்தமனத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பும் பிறக்கும் குழந்தையின் இலக்னத்துக்கு 8 இல் அசுபக் கிரக பாதிப்பு இருந்தால் குழந்தை மரணிக்கும்.


கிழமைகளில், வெற்றிகளைத் தரும் அனுகூலமான நட்சத்திரங்கள் --
கிழமை
வெற்றிக்கு அனுகூலமான நட்சத்திரங்கள்
ஞாயிறு
அஸ்வினி, பூசம், உத்திரம், ஹஸ்தம், மூலம், உத்ராடம், உத்திரட்டாதி.
திங்கள்
திருவோணம், பூசம், ரோஹிணி, மிருகசிரீடம்.
செவ்வாய்
அஸ்வினி, ஆயில்யம், கார்த்திகை, உத்திரட்டாதி
புதன்
ரோஹிணி, ஹஸ்தம், மிருகசிரீடம், கார்த்திகை, அனுஷம்.
வியாழன்
அஸ்வினி, பூசம், ரேவதி, புனர்பூசம், அனுஷம்.
வெள்ளி
அஸ்வினி, ரேவதி, புனர்பூசம், அனுஷம்.
சனி
திருவோணம், ரோஹிணி, சுவாதி.

“ஜாதக பாரிஜாதம்” சொல்வது என்ன ?
1.   சந்திரன் பாதிப்பு மற்றும் இலக்னத்துக்கு 8 இல் அசுபக் கிரகங்கள் இருக்க தாய், மகவு இருவருக்கும் மரணம்.

2.   இலக்னத்துக்கு சுபர் தொடர்பு மற்றும் இயற்கை சுபர்கள் கேந்திரங்களில் இடம்பெற அந்த நாள், நேரம் மிகவும் சிறப்பானது ஆகும்.

3.   ஜனன ஜாதகம் அவரின் உடல் (அக) நிலையையும், கோசார நிலையானது புற நிலையையும் குறிகாட்டுகின்றன. மெதுவாகச் செல்லும் கிரகங்களின் தாக்கத்தால்  அது குறிக்கும் உறுப்புக்கான ஆப்ரேஷன் மருத்துவர் இல்லாதது மற்றும் பல காரணங்களால், தள்ளிப் போகலாம், தாமதம் ஆகலாம்.

       முகூர்த்தங்களுக்கு உண்டான தோஷங்களுக்கு ஒரு முடிவில்லை. எந்த ஒரு குறையுமின்றி ஒரு நல்ல நேரத்தை தேர்ந்தெடுப்பது என்பது நடைமுறையில் சாத்தியமற்ற ஒன்றாகும். எனவே, இலக்னமானது இயற்கை சுபர்களான சுக்கிரன், குரு மற்றும் புதன் ஆகியோரின் தொடர்புடன் இருந்தால், பல இலட்சம் தோஷங்கள் மறைத்துவிடும் எனப் பழைய நூல்களில் சொல்லப் பட்டுள்ளது. சூரியனின் 11 ஆம் இட அமர்வு அனைத்து தோஷங்களையும் அகற்றிவிடுகிறது.
          
       --- ஜோதிடகலாநிதி.எஸ்.விஜயநரசிம்மன்.எம்.எஸ்ஸி









Monday 12 May 2014

தோஷ பரிகாரங்கள்


ஓம் ஶ்ரீ ராகவேந்திராய நமஹ.

அன்பு நண்பர்களே ! அது என் 200 வது பதிவு என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். உலகம் முழுவதும் அனைவரும் படிப்பது மகிழ்ச்சி அளித்தாலும், பின்னூட்டம் தானே ஒரு படைப்பாளிக்கு தெம்பு அளிக்கும் ஊக்க மருந்து. என் இடைவிடாத உழைப்பின் பயனை நான் அறிந்து கொள்ள, அதையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கிரகங்களால் ஏற்படும் இன்னல்கள்

(தோஷங்கள்)

கிரகங்கள்
நன்மை தரும் பாவங்கள்
தீமை செய்யும் பாவங்கள்
சூரியன்
3, 6, 10, 11
1, 2, 4, 5, 7, 8, 9, 12
சந்திரன்
1, 3, 6, 7, 10, 11
2, 4, 5, 8, 9,12
செவ்வாய்
3, 6, 11,
1, 2, 4, 5, 7, 8, 9, 10, 12
புதன்
2, 4, 5, 6, 8, 10, 11
1, 3, 6, 7, 9, 12
குரு
2, 5, 7, 9, 11
1, 3., 4, 6, 8, 10, 12
சுக்கிரன்
1, 2, 3, 4, 5, 8, 9, 11, 12
6, 7, 10
சனி
3, 6, 11
1, 2, 4, 5, 7, 8, 9, 10, 12


    சூரியன்இலக்னத்தில் சூரியன் + செவ்வாய் இருக்க ஏழ்மை நிலவும். பிதுர் காரனாகிய சூரியன் 9 ஆம் பாவத்தில் இருந்தால் தந்தைக்குக் கெடுதல். 5 இல் இராகு அல்லது கேதுவுடன் சூரியன் கூடியிருந்தால்  தந்தையுடன் கருத்துவேறுபாடு ஏற்படும். 5 இல் பலமிழந்த சூரியன் இருக்கத் தந்தைக்குத் தோஷம். 7 ஆம் வீட்டில் சூரியன்  இருக்கக் களத்திர தோஷம் மற்றும் தாமதத் திருமணம் ஏற்படும். மனைவிக்கு நோயும், பிற மாதர்  தொடர்பும் ஏற்படும்.. சூரியனுடன் பகை கிரக இணைவு அல்லது பார்வை பெற கணவன் மனைவி பிரிவு ஏற்படும்.. கும்பத்தில் சூரியன் இருக்க இருதயக் கோளாறு ஏற்படும். 12 இல் சூரியன் இருக்க வாழ்க்கைப் போராட்டமாக இருக்கும், வழக்குக்குகளைஞ் சந்தித்து, தண்டனையும் பெற நேரும்.. தந்தைப் பாசம் இராது.

நவக்கிரஹ அஷ்டோத்ர சத நாமாவளி
ஓம் பானவே நமஹ I ஓம் ஹம்சாய நமஹ I ஓம் பாஸ்கராய நமஹ I ஓம் சூர்யாய நமஹ I ஓம் சூராய நமஹ I ஓம் தாமோதராய நமஹ I ஓம் ரதிநே நமஹ I ஓம் விஶ்வப்ருதே நமஹ I ஓம் அவ்யாப்த்ரே நமஹ I ஓம் ஹரயே நமஹ I ஓம் வேதமயாய நமஹ I ஓம் விபவே  நமஹ I ஓம் ஶுத்தாம்ஶவே நமஹ I ஓம் ஶுப்ராம்ஶவே நமஹ I

    சந்திரன் – 6, 8 மற்றும் 12 இல் தீயபலன்கள் தரும். (கடகம், தனுசு, மீனம் தவிர) சந்திரனும், ராகுவும் இணைந்திருந்தால் மனோவியாதியைத் தரும். 5 இல் பலமிழந்த சந்திரன் இருக்க  தாய்க்குத் தோஷம். 7 இல் சந்திரன், சனி இணைவு இரண்டாவது திருமணம் தரும்.

ஓம் சந்த்ராய நமஹ, I ஓம் அத்ரி நேத்ர ஸமுத்பவாய நமஹ I ஓம் தாராதிபாய நமஹ I ஓம் ரோஹிணீஶாய நமஹ I ஓம் ஶம்புமூர்த்தி க்ருதாலயாய நமஹ I ஓம் ஓஷதீட்யாய நமஹ I ஓம் ஓஷதிபதயே நமஹ I ஓம் ஈஶ்வரதராய நமஹ I ஓம் ஸுதாநிதயே நமஹ I ஓம் ஸகலாஹ்லாத நகராய நமஹ I


    செவ்வாய் – 7 மற்றும் 8 இல் இருக்கத் தீயபலன் தருவார். சனியுடன் சேர்ந்தாலும், பார்த்தாலும் கண்டாதி தோஷங்கள் வரும். 4 ஆம் வீட்டில் செவ்வாய் இருக்க மனக்கவலையும், இன்பமற்ற வாழ்க்கையும் ஏற்படும். 5 இல் செவ்வாய் இருக்க வாழ்க்கையில் துன்பம், புத்திர பாக்கியத் தடை மற்றும் மாமனுக்குத் தோஷம் ஆகியவை ஏற்படும். 7 இல் செவ்வாய் இருக்க மகிழ்ச்சியற்ற மணவாழ்க்கையும், செவ்வாய், சனி, கேது இணைவு களத்திர தோஷத்தையும் தரும். 12 இல் செவ்வாய் இருக்க இன்ப வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படும். பலமற்ற செவ்வாயால் சரீர பலம் குறையும். ஆற்றல் குறையும். காயம் மற்றும் ஊனம் ஏற்படும். வீண்வழக்குகளையும் சந்திக்க நேரிடும்.

ஓம் பௌமாய நமஹ, I ஓம் பூமிஸுதாய நமஹ I ஓம் பூதமாநய்யாய நமஹ I ஓம் ஸமுத்பவாய நமஹ I ஓம் ஆர்யாய நமஹ I ஓம் அக்நி க்ருதே நமஹ I ஓம் ரோஹிதாங்காய நமஹ I ஓம் ரக்த வஸ்த்ராய நமஹ I ஓம் ஶுசயே நமஹ I ஓம் மங்களாய நமஹ I ஓம் அங்காரகாய நமஹ I ஓம் ரக்த மாலிநே நமஹ I ஓம் மாயா விஶாரதாய நமஹ I

    புதன் – 3, 6 மற்றும் 12 இல் நற்பலன் தரமாட்டார். .கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம் வீடுகளில் சுக பங்கம் தருவார். துக்கமும் ஏற்படும். 5 இல் புதன் பலமிழந்து இருக்கத் தாய்வர்க்கத்துக்குத் தோஷம் ஏற்படும். புதன் + சனி = கல்வி தடைப்படும்.

ஓம் புதாய நமஹ, I ஓம் தாராஸுதாய நமஹ I ஓம் ஸௌம்யாய நமஹ I ஓம் ரௌஹிணீகர்ப்பஸம் நமஹ I ஓம் சந்த்ராத்மஜாய நமஹ I ஓம் ஸோமவம்ஶகராய நமஹ I ஓம் ஶ்ருதி விஶாரதாய நமஹ I ஓம் சத்யசந்தாய நமஹ I ஓம் விதுஸுதாய நமஹ I ஓம் விபுதாய நமஹ I ஓம் விபவே நமஹ I


    குருமகர, கும்பத்தில் இருக்க நற்பலன் தரமாட்டார். 3 இல் இருக்க இன்பம் குறையும். 4 இல் இருக்க குழந்தைப் பிறப்பில் தாமதம் ஏற்படும். 5 இல் குருவானவர் பலமிழந்து இருக்கத் தந்தை வர்க்கத்துக்குத் தோஷம் ஏற்படும். 5 இல் குரு,   இராகுவுடன் அல்லது கேதுவுடன் கூடியிருக்க நாகதோஷத்தால் குழந்தை இழப்பு ஏற்படும்.

ஓம் வாக்ப்ருதே நமஹ, I ஓம் ப்ராஹ்மணாய நமஹ I ஓம் ப்ராஹ்மணே நமஹ I ஓம் தீக்ஷ்ணாய நமஹ I ஓம் ஶுபவேஷதராய நமஹ I ஓம் கீஷ்பதயே நமஹ I ஓம் குரவே நமஹ I ஓம் இந்ந்ர புரோஹிதாய நமஹ I ஓம் ஜீவய நமஹ I ஓம் நிர்ஜர பூஜிதாய நமஹ I ஓம் பீதாம்பராலங்க்ருதாய நமஹ I


    சுக்கிரன்கடகத்தில் நற்பலன் தரார். 6 மற்றும் 10 ஆம் வீட்டிலும் தீயபலனே தருவார். பெண் ஜாதகத்தில் 3 இல் சுக்கிரன் இருக்கத் துயரமும், வறுமையும் ஏற்படும். 6 இல் சுக்கிரன் இருக்க மனஅமைதி இராது, பெண்கள் விரோதம் ஏற்படும். பெண்ணாயிருந்தால் கொடியவளாயிருப்பாள். அவளைக் கணவனும், குழந்தைகளும் வெறுப்பார்.

ஓம் ப்ருகவே நமஹ, I ஓம் பார்கவ ஸம்பூதாய நமஹ I ஓம் நிஶாசர குரவே நமஹ I ஓம் கவயே நமஹ I ஓம் த்ருப்ய கேதஹராய நமஹ I ஓம் ப்ருகு ஸுதாய நமஹ I ஓம் வர்ஷ க்ருதே நமஹ I ஓம் தீநராஜ்யதாய நமஹ I ஓம் ஶுக்ராய நமஹ I ஓம் ஶுக்ர ஸ்வரூபாய நமஹ I ஓம் ராஜ்ய ராய நமஹ I ஓம் லயக்ருதாய நமஹ I


    சனி – 6, 8, 12 க்கு உடையவரானால்  ஏழரைச் சனி காலத்தில் சோதனைகள் வரும். 2 ஆம் வீட்டில் சனி இருக்க வருமானத் தடை, சொத்து தொடர்பான வழக்கு ஏற்படும். செவ்வாய் இருக்க இன்ப வாழ்வுக்குத் தடை. 2 இல் (ஆணுக்கு) இராகு இருக்க முன்னேற்றத் தடை, சச்சரவு. பிரிவு உண்டு. 7 ஆம் வீடு மகரமாக அதில் குரு இருந்து செவ்வாய் பார்க்க பலதாரம் ஏற்படும். 8 இல் சனி இருக்கத் தொழிலில் சிக்கல்கள் ஏற்படும். சுகமற்ற இல்லறமும், மக்கட்பேறுக்குத் தடையும் ஏற்படும். 12 இல் சனி இருக்கப் பொருளாதாரச் சீர்கேடும், எதிரிகளால் தொல்லையும் மற்றும் இழப்பும் ஏற்படும்.

ஓம் கோணாய நமஹ, I ஓம் ஶநைஶ்சராய நமஹ I ஓம் மாந்யாய நமஹ I ஓம் சாயா ஹ்ருதய நந்தநாய நமஹ I ஓம் மார்த்தாண்டஜாய நமஹ I ஓம் பங்கவே நமஹ I ஓம் பாநுதநூபவாய நமஹ I ஓம் யமாநுஜாய நமஹ I ஓம் அதிபயக்ருதே நமஹ I ஓம் நீலாய நமஹ I ஓம் ஸூர்யவம்ஶஜாய நமஹ I ஓம் நிர்மாம்ஸதேஹாய நமஹ I


    இராகு – 4, 7, 8 மற்றும் 12 இல் மோசமான பலன்களைத் தருவார். 4 இல் இராகு இருக்கப் படிப்பில் தடை ஏற்படும். தாய் நலம் கெடும். தாய் உறவுக்குப் பங்கம் ஏற்படும். 5 இல் இராகு இருக்கக்  குழந்தைகளால் தொல்லையும், பெண்ணாய் இருந்தால் குறைப்பிரசவம் ஏற்படும். காதல் தோல்வியடையலாம். 7 இல் இராகு இருக்கத் தாமதத் திருமணம் ஏற்படும். 8 இல் இராகு இருக்க மகிழ்ச்சியற்ற வாழ்க்கையும், பிரிவும் ஏற்படும். 12 ஆம் வீட்டில் இராகு இருக்கத் தீய செயல்களில் ஈடுபாடு, விரயச் செலவுகள், சிறைப்படல் ஆகியவை ஏற்படும்..

ஓம் ராஹவே நமஹ, I ஓம் ஸ்வர்பாநவே நமஹ I ஓம் ஆதித்ய சந்த்ர த்வேஷிணே நமஹ I ஓம் புஜங்கமாய நமஹ I ஓம் ஸிம்ஹிகேஶாய நமஹ I ஓம் குணவதே நமஹ I ஓம் ராத்ரிபதி பீடிதாய நமஹ I ஓம் அஹிராஜே நமஹ I ஓம் ஶிரோஹீநாய நமஹ I ஓம் விஷதராய நமஹ I ஓம் மஹாகாயாய நமஹ I ஓம் மஹாபூதாய நமஹ I ஓம் ப்ராஹ்மணாய நமஹ I ஓம் ப்ரஹ்மசம்பூதாய நமஹ I ஓம் ரவிக்ருதே நமஹ I ஓம் ராஹூரூபத்ருதே நமஹ I

    கேது இலக்னத்தில் இருந்தால்  நற்பலன்கள் இராது. அமைதியற்ற வாழ்க்கை அமையும். 4 இல் இருக்க  படிப்பில் தடை ஏற்படும். தாய்க்குக் கேடும், இளம் வயதில் பெற்றோர் பிரிவும் ஏற்படும். கேது இலக்னம் 5 மற்றும் 9 இல் இருக்க சர்ப்ப தோஷம் ஏற்படும். 5 இல் கேது புத்திரதோஷம் தரும். காதல் தோல்வி ஏற்படும்.     7 இல் கேது இருக்க  நோயுள்ள களத்திரம் அமையும். 8 இல் கேது இருக்க ஆரோக்கியக் குறைவு ஏற்படும். குடும்ப சுகம் இராது. 12 இல் கேது இருக்க வீண்செலவுகள் மற்றும்  கடன் தொல்லைகள் ஏற்படும்.

ஓம் கேதவே நமஹ, I ஓம் கேதுஸ்வரூபாய நமஹ I ஓம் கேசராய  நமஹ I ஓம்  நமஹ I ஓம் கச்ருதாலயாய நமஹ I ஓம் ப்ரஹ்மவிதே நமஹ I ஓம் ப்ரஹ்ம புத்ராய நமஹ I ஓம் குமாரகாய நமஹ I ஓம் ப்ராஹ்மண ப்ரீதாய நமஹ I

பாவாதிபதிகள் தரும் தோஷங்கள்

    இலக்னாதிபதி 4 இல் இருக்கத் தண்ணீரில் கண்டம் ஏற்படும். இலக்னாதிபதி 6, 8, 12 இல் தீய கிரகங்கள்  இணைவுடன் இருக்க வாழ்க்கையில் அடிக்கடி நோய் மற்றும் தொல்லைகள் வரும்இலக்னாதிபதி 8 இல் பாபக் கிரக இணைவு பெற மகிழ்ச்சியற்ற வாழ்வைத் தரும். இலக்னாதிபதி 12 இல் இருக்க  முன்னேற்றத் தடை, அமைதியற்ற நிலை, ஆரோக்கியக் குறைவு ஆகியவை ஏற்படும். இலக்னாதிபதிசூரியன் + 6 ஆம் அதிபதி இணைவு = காய்ச்சலால் கண்டம் ஏற்படும். இலக்னாதிபதிசந்திரன் + 6 ஆம் அதிபதி இணைவு = நீரில் கண்டம் ஏற்படும். இலக்னாதிபதிசெவ்வாய் + 6 ஆம் அதிபதி இணைவு = ஆயுத ரணத்தால் கண்டம் ஏற்படும். இலக்னாதிபதிசுக்கிரன் + 6 ஆம் அதிபதி இணைவு = பெண்களாலும், திருடர்களாலும் கண்டங்கள் ஏற்படும். இலக்னாதிபதிசனி + 6 ஆம் அதிபதி இணைவு = நீசர்களால் கண்டம் ஏற்படும். இலக்னாதிபதிஇராகு,கேது + 6 ஆம் அதிபதி இணைவு = விஷஜந்துக்களால் கண்டம் ஏற்படும்.

    இரண்டாம் வீட்டோன் 3, 6, 8, 11 ஆம் அதிபதிகள் தொடர்புற தீயபலன்கள் ஏற்படும். இரண்டாம் வீட்டோன்- 6, 8, 12 இல் ஒன்றில் இருக்க புதனும் இணைய பேச்சற்ற நிலையில் ஊமையாக இருப்பார்.

     மூன்றாம் வீட்டோன்  பலமிழந்து பாபக் கிரக சேர்க்கை பெற தொழிலில் முன்னேற்றத்தடை இருக்கும். தந்தையின் ஆரோக்கியம்கெடும். 6, 8, 12 ஆம் வீடுகளில் ஒன்றில் இருக்க சகோரபாக்கியம் இல்லாமல்போகலாம்..

    நான்காம் வீட்டோன் 12 இல் வெளிநாட்டுவாசம் ஏற்படும். நான்காம் வீட்டோன் 6, 8, 12 ஆம் வீடுகளில் ஒன்றில் இருக்க சந்திரன் + பாபக் கிரகத் தொடர்பு ஏற்படத்  தாய்க்கு ஆயுள் பங்கம் ஏற்படும். நான்காம் வீட்டோன் இலக்னாதிபதியுடன் கூடி 4 இல் இருந்து 10 ஆம் அதிபதியால் பார்க்கப்படத்  தண்ணீரில் கண்டம் ஏற்படும். ஜலராசியில் 4 ஆம் அதிபதி அல்லது வேறு ஜலராசி அதிபருடன் கூடியிருந்தாலும் ஜலகண்டம் ஏற்படும்.

    ஐந்தாம் வீட்டோன் நீசமாகி 5 இல் கேதுவும் இருக்கப் புத்திர தோஷம் உண்டு. ஐந்தாம் வீட்டோன் இலக்னத்திற்கு/ இராசிக்கு / 5 ஆம் வீட்டுக்கு 6, 8, 12 இல் இருக்கப் புத்திர தோஷம் உண்டு.

    ஆறாம் வீட்டோன் 5 இல் = மக்கள் நலம் கெடும்.

    ஏழாம் வீட்டோன் 12 இல் = கணவன் மனைவி பிரிவு, கருத்துவேற்றுமை, மனைவிக்கு ஆயுள் பங்கம் ஆகியவை ஏற்படும். ஏழாம் வீட்டோன் பகை, நீசம் பெற்று அசுபரால் பார்க்கப்பட இல்லறத்தில் துன்பம் ஏற்படும்.

    எட்டாம் வீட்டோன் இலக்னத்தில் இருக்கவிபத்தால் ஆபத்து, வழக்கு வியாஜ்ஜியம், சிக்கல்கள் ஆகியவை ஏற்படும். எட்டாம் வீட்டோன் 4 இல் இருக்கக்  கல்வியில் மற்றும் செல்வத்தில் தடை ஏற்படும். 5 இல் 8 ஆர் அதிபதி இருக்க மன நிம்மதியற்ற நிலையும், ஒழுக்கக் குறைபாடுகளும் ஏற்படும். 7 இல் 8 ஆம் அதிபதி இருக்க இல்லறத்தில் இடர்பாடுகளும், விவாகரத்தும் ஏற்படும். 9 இல் இருக்க தந்தையுடன் நல்லுறவு இருக்காது, அரச தண்டனையால் சொத்துக்கள் பறிமுதலாகும். 10 ஆம் வீட்டில் இருக்க வேலை மற்றும் உத்தியோகத்தில் பிரச்சனை. 8 ஆம் அதிபதி 11 இல் இருக்க உற்றார் உறவினருடன் நல்லுறவின்மை ஏற்படும்.

    ஒன்பதாம் வீட்டோன் 6, 8, 12 ஆம் வீடுகளில் ஒன்றில் இருந்து, பாபக்கிரக தொடர்புற தந்தைக்கு ஆயுள் பங்கம் ஏற்படும். ஒன்பதாம் வீட்டோனும் குருவும், நீசமாகவோ, அஸ்தங்கமாகவோ இருந்து 6, 8, 12 ஆம் வீடுகளில் ஒன்றில் இருக்க எல்லாவிதத்திலும் இழப்பு ஏற்படும். ஒன்பதாம் வீட்டோன் + சனி + சூரியன் இணைவு தந்தைக்கு அற்ப ஆயுளைத் தரும்.

    பத்தாம் வீட்டோன் 6 இல் அமர வாழ்க்கை மற்றும் தொழிலில் ஏற்ற இறக்கம் இருக்கும். 10ஆம் அதிபதி 8 இல் இருக்க தொழில் மாற்றங்கள் ஏற்படும்.    12 இல் இருந்தால் செல்வமும் , வசதிகளும் குறையும்.

    பதினோறாம் வீட்டோன் 6 ஆம் வீட்டில் இருக்க பகைவர்கள் தொல்லை, உற்றார், உறவினர் பகை ஆகியவற்றால் சங்கடம் ஏற்படும். 11 ஆம் அதிபதி 8 இல் இருக்க எண்ணியதை அடைய முடியாது மற்றும் மூத்த சகோதரரின் முன்னேற்றத்தில் தடையிருக்கும். 11 ஆம் அதிபதி, 12 இல்  இருக்க ஆசைகள் நிராசையாகும். கடன் தொல்லைகள் சூழும். மூத்த சகோதரருக்கு ஆயுள் பங்கம் ஏற்படும்.

    12 ஆம் வீட்டோன் இலக்னத்தில் இருக்க  ஆயுள் குறையும், மகிழ்ச்சியற்ற வாழ்வுதரும். 12 ஆம் வீட்டோன் 2 இல் இருக்கசெல்வம் இழப்பு, வறுமை, மகிழ்ச்சியற்ற இல்வாழ்க்கை அமையும். 3 இல் இருக்க ஆசைகள் நிராசையாகும். சகோதரர் நலம் கெடும். 4 ஆம் வீட்டில் இருக்கத் தாயின் ஆயுளுக்கு பங்கம் ஏற்படும். தாயின் மூலம் துன்பமும் வரும். 12 ஆம் அதிபதி, 5 இல் இருக்கப் புத்திர பாக்கியத்தில் குறைவு ஏற்படும். 7 இல் இருக்க மகிழ்ச்சியற்ற வாழ்க்கை, விவாகரத்து ஏற்படலாம். 12 ஆம் அதிபதி 9 இல் இருக்க அதிர்ஷடம் குறையும். தந்தைக்கு சுகக்குறைவு ஏற்படும். 10 இல் இருக்க உத்தியோகத்தில் அடிக்கடி பிரச்சனைகள் உருவாகும் மற்றும் அதிக மாற்றங்களும்  ஏற்படும். 12 ஆம் அதிபதி  11 இல் இருக்க ஆதாயமிருக்காது, ஆசைகள் நிராசையாகும். 12 ஆம் வீட்டோன்      2 இல் இருந்தும் மற்றும் 11 ஆம் வீட்டோன் 12 இல் இருந்தும் 2 ஆம் வீட்டோன் பலமும் இழந்தால், செல்வம் யாவும் இழக்க நேரிடும்.

    இவ்வாறு ஒவ்வொரு கிரகமும் பாவதிபதிகளாயும், பாவங்களில் நின்றும் மனிதனை  எங்ஙனம் ஆட்டிப்படைக்கின்றன ? - என்பதைக் கண்டோம். இதன் காரணமாக என்னென்ன தோஷங்கள் ஏற்படும்இத்தகைய இன்னல்களிலிருந்து, தோஷங்களிலிருந்து விடுபட எங்கே ? எப்படி ? என்ன ? - பரிகாரங்கள் செய்து அவற்றிலிருந்து ஓரளவு நிவாரணம் பெறமுடியும் என்பதைப்பற்றிய விவரங்களை நாம் அறிந்து கொள்வோம்

    புத்திர தோஷம் மானுடவாழ்வில்  மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கும் குழந்தைப் பாக்கியமானது நாம் செய்த கர்மவினைகளின் பலனாக நமக்கு ஏற்படும் பேரின்பமாகும். இப் பேரின்பமே துன்பமாகும் போது தோஷமாகிறது. புத்திர தோஷமென்பது குழந்தைப் பேற்றை மட்டுமின்றி, கர்பம் தரித்தவுடன் ஏற்படும் கருச்சிதைவு, கருக்கலைத்தல், குழந்தை பிறந்தவுடன் மரித்தல், பிறக்கும் போதே ஊனமாய்ப் பிறத்தல், குறைமாதப் பிரசவம் ஏற்படல், பிறந்தவுடன் தாய் அல்லது தந்தைக்கு மரணம் ஏற்படல் என இவை அனைத்துமே புத்திர தோஷமாகும்.
    ஐந்தாம் வீடு, 9 ஆம் வீடு, அதன் அதிபதிகள், புத்திர காரகன் குரு, இவர்கள் சென்று அமரும் இடம் இவை பாதிப்படையும் போது புத்திர தோஷம் ஏற்படுகிறது.   5 ஆம் அதிபதி 3 இல் அமர்ந்தாலும், 6, 8, மற்றும் 12 இல் அமர்ந்தாலும், 5 ஆம் அதிபதி மிதுனம், கன்னி இராசிகளில் தனியாக அமர்ந்தாலும், பாவக்கிரகங்களோடு இணைவு பெற்றாலும், 5 மற்றும் 7 ஆம் அதிபதிகள் பரிவர்தனை ஆனாலும், புத்திர பாவத்தில் தீய கிரகங்களான சூரியன், செவ்வாய், சனி, இராகு மற்றும் கேது அமர்ந்தாலும், காரகன் குரு அமர்ந்தாலும், சந்திரனுக்கு 7 இல் சூரியன் இருந்தாலும், சனிக்கு 7 இல் புதன் இருந்தாலும், சூரியன் இரட்டை இராசியில் இருக்கவும் அவரை செவ்வாய் பார்த்தாலும், சுபர் பார்வையின்றி 5 மற்றும் 8 ஆம் பாவாதிபதிகள் பரிவர்த்தனை பெற்றாலும், 5 ஆம் வீட்டின் மீது அசுப்பார்வை விழவும்,  7 ஆம் வீட்டுக்குக் கேந்திரத்தில் குரு அமர்ந்து, உச்சம் பெற்ற 6 ஆம் அதிபதி இணைவு பெறவும் ஒருவருக்குக் குழந்தைப் பாக்கியம் ஏற்படாது.

    புத்திர பாக்கியத்துக்குத் தடை ஏற்படுத்தும் அமைப்புகள் பாவிகள் மத்தியில் குரு அல்லது 5 ஆம் அதிபதி அமரவும், 5 ஆம் பாவமும்  பாவகர்த்தாரியில் இருக்கவும், குடும்ப ஸ்தானத்தில் தீயகிரகங்கள் இடம்பெறவும், குருவுடன் இராகு அல்லது சனி இணைய அல்லது பார்க்க குழந்தை பாக்கியத்துக்குத் தடை ஏற்படுத்தும்.

    இவை தவிர சர்பசாபம் ( 5 ஆம் அதிபதி இராகு இணைவு, இலக்னத்தில் இராகு, கேது, 9 இல் இராகு, கேது. ) ஏற்படுவதாலும் குழந்தைகள் பிறப்பது அரிது. முன்னோர் சாபம், தாயின் சாபம்  ஆகியவற்றாலும் குழந்தையின்மை ஏற்படும்.

பரிகாரங்கள்

    தம்பதிகள் இராமேஸ்வரம் சென்று அக்னி தீர்த்தத்தில் கை கோர்த்தபடி குளித்துப் பின்னர் கோவிலுக்குள் இருக்கும் தீர்த்தங்களிலும் நீராடி மனமுருகி ஸ்வாமி தரிசனம் செய்துவந்தால் தோஷ நிவர்த்தியாகும்.

    நாக தோஷம் உடையவர்கள் திருப்புலாணி சென்று நாகப்பிரதிஷ்டை செய்துவர தோஷம் நிவர்த்தியாகும். காளகஸ்தி, திருநாகேஸ்வரம் ஆகிய ஸ்தலங்களுக்குச் சென்றும் வழிபட்டுவரலாம். பாம்புப் புத்துக்குப் பால் வார்த்துவர சாப நிவர்த்தியாகும்.

மூலதோ ப்ரஹ்ம ரூபாயமத்யதோ விஷ்ணு ரூபிணேஅக்ரதோ சிவஸ் ரூபாய வ்ருஷ ராஜாய தே நமஹஎன்ற
ஸ்லோகத்தைச் சொல்லி அரசமரத்தைச் சுற்றி வந்து வணங்குவதும் நல்லது.

    கால சர்ப தோஷம் இராகு கேதுக்களுக்கிடையே அனைத்து கிரகங்களும் அமர ஏற்படுவதாகும். இந்த தோஷம் உள்ளவர்களுக்கு வாழ்க்கையில் 35 வயதுக்குப் பிறகே முன்னேற்றங்கள் ஏற்படும். திருமணமும் தாமதப்படும்.

    இத் தோஷத்திற்கு மிக சக்தி வாய்ந்த , பிரசித்தி பெற்ற பரிகாரத்தலம் திருக் காளத்தி எனப்படும் காளஹஸ்தி திருத்தலமாகும். இராகு கேதுக்களின் வெள்ளி பிரதமைகளுடன், பூஜா சாமான்களோடு, புரோகிதரை வைத்து பரிகாரம் சிரத்தையுடன் செய்து இராகு-கேது ப்ரதமைகளை மூன்றுமுறை தலையைச் சுற்றி உண்டியலில் இட்டு, ஸ்வாமியை மனமுருகி வேண்டி வர தோஷநிவர்த்தியாகும்.

    செவ்வாய் தோஷம் செவ்வாய் இலக்னம்/ சந்திரன் / சுக்கிரனிலிருந்து 1, 2, 4, 7, 8 மற்றும் 12 ஆகிய இடங்களில் அமர செவ்வாய் தோஷம் ஏற்படுகிறது. இதற்குப் பல விதிவிலக்குகளும் உண்டு. இது திருமண தாமதத்தைத் தருகிறது. திருமண வாழ்க்கையில் மகிழ்வின்மை, பிரிவினை ஆகியவற்றையும் தருகிறது.

    செவ்வாய்க் கிழமை விரதம் இருப்பது, கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப் பெருமானை வணங்குவது நல்லது. செவ்வாய், வெள்ளியன்று துர்க்கை வழிபாடும் பயனளிக்கும். சீர்காழி அருகிலுள்ள வைத்தீஸ்வரன் கோவில் மிகச் சிறந்த பரிகாரத் தலமாகும். இங்குள்ள சித்தாமிர்தக் குளத்தில் நீராட தோஷம் நீங்கும். பழநி முருகனையும் வழிபடலாம்.

    களத்திர தோஷம் --  களத்திர காரகன்  குரு/ சுக்கிரன் மற்றும் ஒவ்வொரு இலக்னத்துக்கும் ஆன களத்திர ஸ்தானாதிபதி பாதிப்படைய களத்திர தோஷம் ஏற்படுகிறது. காரகன் களத்திர ஸ்தானத்திலேயே இருக்கவும், 7 ஆம் அதிபதி 7 இல் இருக்கவும்,  7 ஆம் அதிபதி உச்சம் பெற்று 7 இல் இருந்தாலும், இலக்னத்தில் சனியும், 7 இல் செவ்வாயும் இருக்க, 7 இல் இருவரும் சேர்ந்து இருக்கவும், 7 ஆம் அதிபதி 6 இல், 8 இல் அல்லது 12 இல் இருக்கவும், 2 ஆம் பாவத்தில் சனி, செவ்வாய், இராகு மற்றும் கேது இருக்கவும், இவர்கள் 4, 7, 8 இல் இருக்கவும், 2 ஆம் அதிபதி 3 இல் இருக்கவும் மற்றும் 6, 8, 12 ஆகிய வீடுகளில் இருக்கவும்  களத்திர தோஷம் ஏற்படுகிறது. திருமண தாமதம், தடைகள் தரும். கலப்புத் திருமணம், இருதாரமணம், களத்திர மரணம் இவையாவுமே களத்திர தோஷமே.

    பரிகாரம் குலதெய்வ வழிபாடு, இஷ்டதெய்வ வழிபாடு, கிரக ரீதியான அதிதேவதைகளின் வழிபாடு ஆகியவற்றைச் செய்வது நல்லது. இராமாயணத்தில் சுந்தர காண்டத்தைப் படிப்பதும், மார்கழி மாதத்தில் திருப்பாவை, திருவெம்பாவை படித்தலும் தோஷபரிகாரமாகும். தாமதமின்றித் திருமணம் நடக்கப் பாராயணம் செய்ய வேண்டிய ஸ்லோகம்

   ஶ்ரீ சுயம்வரா பார்வதி ஸ்லோகம்.

    ஓம் ஹ்ரீம் யோகினி யோகினி
    யோகேஸ்வரி யோக பயங்கரி
    ஸகல ஸ்தாவர ஜங்கமஸ்ய
    முகஹ்ருதயம் மமவசமாகர்ஷய ஆகர்ஷய ஸ்வாஹா.

    மாங்கல்ய தோஷம் --  ஜாதகத்தில் 8 ஆம் இடத்தில் தீய கிரகங்கள் இடம்பெற, தொடர்புற  ஏற்படும் தோஷம் ஆகும். இதன் காரணமாகத் துணை மரணம், பிரிவு, விவாகரத்து, தாமதத் திருமணம், மறுமணம், கண்டங்கள் ஏற்படல் என இவை அனைத்துமே மாங்கல்ய தோஷத்தின் விளைவுகளாகும்எட்டாம் வீட்டுக்கு உரிய கிரக வழிபாடு, அம்பிகை வழிப்பாடு, குலதெய்வ, இஷ்டதெய்வ வழிபாடுகள் நல்ல பலன் தரும்.


சில நட்சத்திரங்களும் பரிகாரங்களும்

திருமணத் தடை ஏற்படுமானால் செய்ய வேண்டிய பரிகாரங்கள் ---

அசுவதி மகம்மூலம் விநாயகர் கவசம் படித்தல், கணபதி ஹோமம் செய்து மோதகம் படைத்து பூஜிக்க திருமணம் விரைவில் நடக்கும்.

பரணிபூரம்பூராடம் --  இந்திராட்சி ஸ்தோத்திரம் படிப்பதும், லட்சுமி நரசிம்மருக்கு அர்ச்சனை, அபிஷேகம் செய்வதும், ருக்மணி கல்யாணம் ப்ரவசனம் கேட்பதும், கிருஷ்ணருக்கு பாலில் குங்குமப்பூ போட்டுக் காய்ச்சி நெய்வேத்தியம் செய்வதும் பலனளிக்கும்.

திருவாதிரைசுவாதிசதயம் ஜாதகத்தில், இலக்னத்திலிருந்து 1, 3, 5, 7, 9 மற்றும் 11 இல் ராகு இருக்க ஏற்படும் திருமணத் தடை சரியாகி, மணவாழ்வு மகிழ்ச்சிகரமாக இருக்கவும் செய்ய வேண்டிய பரிகாரங்கள்

1.   ராஜராஜேஸ்வரி அல்லது புவனேஸ்வரிக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்யவும்.

2.   சிவப்புப் புடவை அணிவிப்பதும், பிச்சிப்பூவை சந்தனத்தில் தோய்த்து பூஜிக்கவும். செவ்வாய் மற்றும் வியாழனன்று விரதம் அனுஷ்டிப்பதும், கன்னிப்பெண்களுக்குக் கருப்பு நிற ஆடைகளை தானம் செய்தும், உளுந்தமாவினால் கோலமிட்டு, அம்பாளுக்கு கற்பூர ஆரத்தி செய்து பிரார்த்திக்க நற்பலன் ஏற்படும். பிற இடங்களில் ராகு இருக்கச் செய்யவேண்டிய பரிகாரங்கள்.

1.   துர்க்கைக்கு எலுமிச்சம் பழமாலை அணிவிக்கவும்.
2.   விநாயகருக்கு, வெள்ளெருக்குப் பூ மாலை ஞாயிறன்று அணிவிக்கவும்.
3.   சிவனுக்கு தாரை அபிஷேகம் செய்யவும்.
4.   முறைப்படி விளக்கு பூஜை மற்றும் பகவதி சேவை செய்யவும்.
5.   இராமாயணத்தில், அயோத்தியா காண்டம் மற்றும் சுந்தர காண்டம் ஆகியவற்றை பாராயணம் செய்ய கைமேல் பலன் கிடைக்கும்.

சிறப்பான தோஷ பரிகாரகங்கள்

    சூரியன்ஆண் ஜாதகத்தில் 4, 7 மற்றும் 12 ஆம் இடங்களில் இருக்குமானால் அல்லது சனியுடனோ, மாந்தியுடனோ ஓரே இராசியில் 5 பாகைக்குள் இருக்குமானால் அது கலீப ( ஆண்மைக்குறைவு ) தோஷத்தையும், மத்திய வயதில் இருதய நோயையும், வயது முதிர்ந்த காலத்தில் பக்கவாத நோயும் உண்டாகும். இதற்குப் பரிகாரம்புருஷ சூக்தம், சூரிய சாவித்திரி மந்திர ஜபம் செய்வித்து, உதக சாந்தியும் செய்யவேண்டும்.

    பெண்களின் ஜாதகத்தில் சூரியன் 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருக்குமானால் அதனால் ஜாதகிக்கு உடல் வலிமையின்மை, சோகை ஏற்படுவதுடன், கர்ப்பச்சிதைவும், கணவன் மனைவியிடையே பிரச்சனையும் ஏற்படும். இதற்குப் பரிகாரம்

1.   சத்யநாராயண பூஜை செய்தல்.
2.   நுனி வாழை இலைபோட்டு சர்க்கரைப் பொங்கலிட்டு, பழத்துடன் பசு மாட்டுக்குப் படைக்கவும்.
3.   அன்னதானம் செய்தல்.
4.   மாணவர்களுக்கு ஆடை, புத்தகங்கள் மற்றும் உதவிபுரிதல் தோஷநிவர்த்தியாகும்.

    எனவே அன்பர்களே! கிரகங்கள் எந்த இடங்களில் இருந்தால்  என்ன தோஷம் ? பரிகார ஸ்தலம் எது ? பரிகாரங்கள் செய்யும் முறைகள் என்ன ? – என்ற அனைத்து விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது, உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.

  -- ஜோதிட கலாநிதி. எஸ். விஜயநரசிம்மன். எம், எஸ்ஸி (அப்ளைடு அஸ்ட்ராலஜி).