Search This Blog

Sunday 12 October 2014

நற்பலன்களை அள்ளி வழங்கும் இராகு







நற்பலன்களை அள்ளி வழங்கும் இராகு


       இராகுவின் பெயரைக் கேட்டாலே அஞ்சி நடுங்கும் திருவாளர் பொதுஜனம், அவரின் அசுபத்தன்மைகளை மறுக்க முடியாவிட்டாலும் அவரது சுபத்துவத்தை ஒதுக்கிவிட முடியாது. பண்டைய முனிவர்களாலும், ஞானிகளாலும் கூறப்பட்ட சில சிறப்பு விதிகளின்படி, இராகு மிக அதிகமாக அனுகூலம் தரும் நிழல் கிரகமாகக் கருதப்படுகிறது மற்றும் தனது தசா / புத்திக் காலங்களில் மிகமிக நற்பலன்களை அள்ளி வழங்கக் கூடியதாகும்.
       இராகுவைப் பற்றிய அறிஞர்களின் கருத்துக்கள் கீழே ---
1.   ரிஷபம், மிதுனம், கன்னி, அல்லது கும்பம் ஆகிய இராசிகளில் இராகு இருக்க, தனது தசா / புத்தி காலங்களில் ஜாதகர் நண்பர்கள் மற்றும் அரசை ஆள்பவர்களின் உதவியுடன் வீடுகட்டுவார், புதிய வாகனங்கள் வாங்குவார், புத்திர பாக்கியம் ஏற்படும், வெளிநாட்டில் இருந்து பதவி பட்டங்கள் பெற்று கௌரவிக்கப்படுவார். என பிரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரா அத் -47 – ஸ்லோ – 35 & 36 இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
2.   இராகு, தான் இருக்கும் இடத்தின் பலன்களையும், அதன் அதிபதியின் பலன்களையும் அளிக்கவல்லவர்என லகுபராசரிபகுதி – 1 , ஸ்லோ – 13 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. இராகு தசா நடக்கும் போது, இலக்னத்தில் உள்ள இராகு செல்வத்தையும், பொறுப்பு மிக்க பதவியையும் தருகிறதுஎன பண்டிட் ஜிவ்நாத் ஜாதனது பாவ பிரகாஷ் எனும் நூலில் குறிப்பிடுகிறார்.            மேலும் மகரிஷிகள் கூறுவதென்ன ?
கர்க மகரிஷிஇலக்னத்திலுள்ள இராகு ( மேஷம், கடகம், சிம்மம் ) ஜாதகரை மிகப் பெரிய செல்வந்தர் ஆக்குகிறார்.
மகரிஷி வசிஷ்டர்மூன்றாம் வீட்டில் உள்ள இராகுஅரச கௌரவத்தையும், வெகுமதியையும் அளிக்கிறது.
வைத்தியநாத்மூன்றாம் வீட்டில் அமர்ந்த இராகு ஜாதகரை மிகப் பெரிய பணக்காரர் ஆக்கிவிடுகிறது.
பண்டிட் கோபேஷ் குமார் ஓஜாகேந்திரத்தில் உள்ள இராகு ( மேஷம், மிதுனம், கன்னி, கடகம், விருச்சிகம் அல்லது மகரம் ) ஜாதகர்க்கு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அளிக்கிறது.
பண்டிட் ராம் யத்தன் ஓஜாதிரிகோண வீடுகளாகிய 5 மற்றும் 9 ஆம் வீட்டில் அமர்ந்த இராகு, தனது புத்தியில் மற்றும் யோக காரகரின் தசையில் நல்ல முன்னேற்றத்தை அளிக்கிறது,
கர்க மகரிஷிஇலாப ஸ்தானமான 11 இல் உள்ள இராகு அனைத்துவகை சொத்துக்களையும் அள்ளித்தருகிறார்.
மகேஷ் – 11 இல் உள்ள இராகு அனைத்துவித சொத்துக்கள் மற்றும் அரசு, அரசு ஆள்பவர்களிடமிருந்து கௌரவம் மற்றும் அதிக மகிழ்ச்சியையும் அளிக்கிறது. ஜாதகரின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றி வைக்கிறது.
இராமானுஜ ஆச்சார்யா தனது பாவார்த்த ரத்னாகரா எனும் நூலில்மகர இலக்ன ஜாதகருக்கு இராகு யோக காரகராகிறார். அவர் 12 ஆம் இடத்தில் இடம்பெற்று, குரு இணைந்திருக்க, இராகு திசை மிக அதிக நற்பலன்களை அளிக்கிறார். ஆனால் குரு தசா மோசமான பலன்களைத் தருகிறது.
ஜாதகரின் 2 அல்லது 3 மகன்களின் தசாகாலம், இராகு தசாகாலமாக இருந்தால், இந்தக் காலத்தில் ஜாதகர் மிகவும் சாதாரண நிலையில் இருப்பார் மற்றும் மரணம் எய்துவார்என பகுதி 9 – ஸ்லோ – 18 இல் கூறப்பட்டுள்ளது.
இராகு கேந்திர திரிகோணங்களில் இருந்து திசை நடத்தினால், இராஜ யோகத்தையும், புகழையும் தருவார்.
       மேலும் பண்டைய முனிவர்களும், அறிஞர்களும் மேற்கண்ட விதிகளைக் குறித்த தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்கள். அவற்றை நாம் சிறிது மாறுபாடுகளுக்கு உட்படுத்திப் பயன்படுத்த வேண்டும்.
       ஜனன ஜாதகத்தில் இலக்னம் அல்லது சந்திரனுக்கு 3, 6, 11 ஆகிய இடங்களில் இராகு இருக்க அவர் யோக காரகர் ஆகச் செயல்படுகிறார்.
       இராகுகன்னி, விருச்சிகம் அல்லது மீனம் ஆகிய இராசிகள் கேந்திரமும் ஆகி, அதில் இருக்க, இடம் கொடுத்த கிரகத்திற்கு, மிக அனுகூலமான பலன்களை இராகு தன் தசா / புத்தி காலங்களில் தருவார்.
       இராகு  இலக்ன நட்சத்திராதிபதியாகி, கேந்திர, திரிக்கோணங்களில் தனது சுய சாரத்தில் இருக்கவும், அது ஒரு யோக காரகராகத் தரும் பலனைக் காட்டிலும் அதிக நற்பலன்களை அள்ளி வழங்குகிறது.
       திதி சூன்ய இராசிகளில் இராகு இடம் பெற்றால், தனது தசா / புத்தி காலங்களில் அனுகூலமான பலன்களைத் தருகிறது.
       எம். ஸி. ஜெயின்இராகு / கேதுவுக்கு இடம் கொடுத்த கிரகத்தைப் பற்றி குறிப்பிடுகையில், இடம் கொடுத்த கிரகம் இவர்களில் ஒருவருடன் இணையும் போது, அவை கர்மாக்களைக் கட்டுப்படுத்தும் கிரகங்களாகி மிக்க அனுகூலமான பலன்களைத் தருகின்றன என்கிறார்.
உதாரண ஜாதகம்
பிறந்த தேதி – 18 – 6 – 1975, பிறந்த நேரம் – 10 – 10 காலை, பிறந்த ஊர்ஜலந்தர்.
       சிம்ம இலக்னம்செவ்வாய் திசை இருப்பு 6 வருடம் 6 மாதம் 0 நாள். இத்துடன் இராகு திசா வருடம் 18 ஐக் கூட்ட 25 வயது வரை இத்திசையில் ஜாதகருக்கு யோக பலன்கள் ஏற்பட்டது.
செவ்
குரு

புத
கேது
சூரி
சனி



இராசி
சுக்

லக்///

இராகு

சந்

       இலக்னத்துக்கு 4 ஆம் இடத்திலும், சந்திரனுக்கு 3 ஆம் இடத்திலும் தசாநாதன் இராகு அமர்ந்துள்ளார். எனவே, மேற்சொன்ன விதிப்படி இராகு யோக காரகராகிறார். எனவே, இராகு தசாக் காலம் சிறப்பாக அமைந்தது.
       ஜாதகர் தனது பள்ளிக் கல்வியை 1991 வரை மிகச் சிறப்பாகச் செய்து, 1993 ஆம் வருடம் சி..டி தேர்வுக்கு எந்தவொரு பயிற்சி மையத்திலும் பயிற்சி எடுக்காமல், சிறப்பாக எழுதினார். மேலும், பல இன்ஜினியரிங் தேர்வுகள் எழுதி வெற்றி பெற்றார். இந்த நுழைவுத் தேர்வுகளை எழுதிய 6000 மாணவர்களில் 35 வதாக வந்து பஞ்சாப்பில் பிரபலமான சண்டகாரிலுள்ள பஞ்சாப் இன்ஜினியரிங் கல்லூரியல் பயின்று 1997 இல் தனது பி. டெக் கல்வியில் வெற்றிபெற்று, டி.சி. எஸ். கம்பெனியில் தனது திறமையால் வெளிநாடு சென்று அதிக சம்பளம் பெற்று சிறப்பாக வாழ்கிறார் என்றால் தசாநாதன் யோக காரகன் ஆனதினால் தானே ?
       மேலும், விருச்சிகத்தில் உள்ள இராகு, தனக்கு இடம் கொடுத்த செவ்வாய்க்குத் திரிகோணத்தில் உள்ளார். எனவே, அவரால் தனது தசாக் காலத்தில் ஜாதகருக்கு, நற்பலன்களை, இராஜயோகங்களைத் தர முடிந்தது. இதன் மூலமாக இராகு சுபத்துவமும் தரவல்லவர் என்பதை அறிந்தோமல்லவா ?   



 வல்லமை தாராயோ இந்த மானுடம் பயனுற வாழ்வதற்கே!

இராகு – ஒரு புதிய கண்ணோட்டம்.






இராகுஒரு புதிய கண்ணோட்டம்.

       நிழல் கிரகங்களான இராகு மற்றும் கேதுக்களுக்கு, பூமியிலுள்ள மனித விவகாரங்களின் மீதான அவற்றின் தாக்கங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது வேத ஜோதிடமாகும். இந்தநோட்ஸ்எனும் நிழல் கிரங்களை, மற்ற கிரகங்களைப் பலன் கூறும் முறைகளில் பயன்படுத்துவது போல் சில ஜோதிடர்கள் பயன்படுத்துவதில்லை. அப்படி பயன்படுத்தினாலும் அவைகளைப் புதிய கண்ணோட்டத்தோடு பார்க்க முற்படுவதில்லை. உதாரணமாக, முன்வினை அல்லது நமது முன்னோர்களைப் பற்றி அறியமுற்படும் போது இந்த நிழல் கிரகங்களே வேத ஜோதிடத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன. அதுவே மேலைநாட்டு ஜோதிடத்தில் முற்பிறவியில் செய்த நல்வினைகள் வடக்கு வெட்டுப் புள்ளி எனும் இராகுவாலும், தீவினைகள் தெற்கு வெட்டுப் புள்ளி எனும் கேதுவாலும் அறியப்படுகின்றன.
      நவீன கால வேத ஜோதிடர்களில் பெரும்பாலானோர்  ஜாதகத்தில் இராகு மற்றும் கேது இருவரையுமே அசுபக் கிரகமாகவே கருதுகின்றனர். இராகுவானவர், கேதுவைவிட அதிக அசுபத்தன்மை உடையவராகவும் கருதுகின்றனர். அதிலும் பண்டைய வேத ஜோதிடர்களால் இவர்களைப் பற்றிய பயங்கலந்த தாக்கமே பூதாகாரமாக வெளிக்கொணரப்பட்டது என்றால் மிகையாகாது.
      இதற்கு முக்கிய காரணம் என்னவெனில், இந்த இரு நிழல் கிரகங்களின் தாக்கம் சமூக மற்றும் பாரம்பரியத்துக்கு முரண்பட்டதாகக் கருதப்பட்டதே ஆகும். உதாரணமாக மிலேச்சர்களாகக் கருதப்பட்ட வெளிநாட்டு வாசிகளின், நமது கலாசாரத்தின் மீதான மற்றும் வாழ்க்கையின் மீதான தாக்கத்தைச் சொல்லலாம். அதுவே நமது கலாசாரத்தின் மீதான மிகப் பெரிய ஊழலாகக் கருதப்பட்டது.
      ஆனால் தற்காலத்தில் வெளிநாட்டுப் பயணம், வெளிநாட்டவர்கள் உறவு அல்லது தொடர்பு ஆகியவை நமது நாட்டவரால் சகஜமான ஒன்றாக எடுத்துக் கொள்ளப்பட்டு, அதன் காரணமாக நிழல் கிரகங்களின் மீதான நமது ஜோதிடர்களின் கண்ணோட்டமும் மாறிவிட்டது.
      சனி வக்த் இராகு = சனியைப்போன்ற குணமுடையவர் இராகு என்றும்  இயற்கை அசுபரான அவர் அமரும் இடத்தைப் பொறுத்து தற்காலிக சுபராகவும் செயல்படுவார்.  அது இணைந்த கிரகத்தின் சக்தியை தடைப்படுத்தவோ அல்லது சீரழிக்கவோ செய்யும். தசாமற்றும் புத்திக் காலங்கள் மற்றும் கோசார நிலைகளில் இராகு மிகவும் மோசமானதாகக் கருதப்படுகிறது.  
       குஜ வக்த் கேதுசெவ்வாயின் குணங்களைக் கொண்டவன் கேது, இயற்கை அசுபர் ஆவார். இவர் இராகுவைவிடக் குறைவான அசுபத்தன்மையும், அதிக பக்தித் தன்மையும் உடையவர். ஆனால், அவர் வெற்றி பெறுவதில் அதிகத் தடைகளை அளிப்பவர். ஆனால், இராகு எப்போதாவது வெற்றிகளைத் தரக்கூடியவர். இவர்கள் இருவரும், உடலில் கோளாறு, குணம் தர முடியாத நோய்கள், திடீரென ஏற்படும் இன்னல்கள், இருண்ட வாழ்க்கையின் மீதான கவர்ச்சி ஆகியவற்றைத் தரக்கூடியவர்கள்.
       பண்டைய முனிவர்களான பராசரர் மற்றும் ஜெய்மினி ஆகியோர் இந்த நிழல் கிரகங்களைப் பற்றி மிகவும் விளக்கமாக எழுதியுள்ளனர். மேலும், இவர்களைப் பற்றிய அனுகூலமான பலன்களையும் கூறியுள்ளனர். அவர்களின் கூற்றுப்படி இராகு அறிவையும், கேதுமோட்சம் எனும் விடுதலையையும் அளித்து, மனித வாழ்க்கையில் மிக்க தாக்கத்தையும் தருகிறது.
       வேத ஜோதிடத்தில் வெளிக் கிரகங்களான யுரேனஸ், நெப்டியூன் மற்றும் புளுட்டோ ஆகியவை பலன் காண எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. எனினும், இந்த யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கிரக காரகங்களான பொய்த் தோற்றம் அல்லது மாயை, கற்பனையான, பிரமை, மனத்தோற்றம். கலைத்துவிடல், பிரித்துவிடல், திடச் சித்தமின்மை, உருவாக்குதல், உடைத்துத் தூளாக்குதல், புரட்சிகரமான -- போன்றவை அனைத்தும் இராகுவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
       புளுட்டோவின் காரகங்களான  உடலமைப்பு, அடங்காத, பிடிவாதமுள்ள, விலக்குதல், ஊடுருவுதல், மாற்றியமைத்தல், பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய சக்தி ஆகியவை கேதுவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
       மேற்கத்திய ஜோதிடப்படி இராகு எப்போதும் நல்ல பையனாக இருப்பதில்லை. சிலநேரங்களில் மட்டும் அவர் குருவைப் போன்று நற்குணம் கொண்டவராகத் திகழ்கிறார் என வேத ஜோதிடம் கருதுகிறது. சில நேரங்களில் குரு, சுக்கிரன் போன்ற சுபர்களைக் காட்டிலும் மிகுந்த நற்பலன்களைத் தரவல்லவர். எனவே, தற்கால ஜோதிடர்களின் கருத்துப்படி இராகு ஒரு நிரந்தர போக்கிரிப் பையன் என்ற பிம்பமும் தவறானது.
       எனினும், இராகுவின், பிரச்சனைகளுக்கு மூலகாரணமான எதிர்மறையான குணங்களை வெளிக் கொணர்வது வேதஜோதிட முறையாகும். சாஞ்ஜா சாய்கிற பக்கமே சாய்கிற வெள்ளாடு போல் இருக்கின்ற மனித குணத்திற்கும், கூட்டாக வேலை செய்கிற தாக்கத்திற்கும் காரணமாவது இராகுவேயாம்.
       மேற்கத்திய ஜோதிடம், கேதுவை ஒப்பந்தம், உடன்படிக்கை, கட்டுப்படுத்துதல், வரம்புக்குள் வைத்தல் போன்ற குணமுடைய எதிர்மறையாளராகக் கருதினாலும், ஒருவரின் முழுத்திறமையையும் குறிகாட்டுபவர் என்பதையும், மற்ற அனைத்து கிரகங்களையும் விட பக்தி, ஞானம் மிக்கவர், மோட்சத்திற்கு வழிகாட்டி என்பதையும் மறந்துவிடக் கூடாது என்கிறது. அதுவே, வேதஜோதிடத்தில், ஒருவர் தனது மனதை ஒரு நிலைப்படுத்துவதற்கும், தத்துவார்த்தமான எண்ணங்களோடு, உள்ளுணர்வுடன் பிறர் மனதை ஊடுருவும் தன்மை போன்ற  கேதுவின் நேர்மறையான (+) குணங்கள்  உயர்வாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
       முற்பிறவியில் நாம் செய்த பாவங்களுக்கு உரிய தண்டனையாக நிழல் கிரகங்கள் கஷ்டங்களைத் தருகின்றன.
       வேதஜோதிடத்தின் இல்லமாகத் திகழும் இந்தியா ஏழை நாடாக  விளங்குவதால், எதிர்மறைக் (--) காரகங்களான ஏழ்மை, பசி, பட்டினி, தொற்றுநோய் மற்றும் கொள்ளை நோய் ஆகியவை ஐரோப்பா, அமெரிக்கா போன்ற மற்ற மேல் நாடுகளில் இருந்தாலும், இங்குமட்டுமே அதிகமாகப் பேசப்படுகின்றன. இதன் காரணமாகவே, மேலைநாட்டு ஜோதிடர்களை விட, நமது வேத ஜோதிடர்கள் நிழல் கிரகங்களின் எதிர்மறையான, அனுகூலமற்ற நிலைகளைப் பற்றியே பெரிதாகப் பேசுகிறார்கள். ஆனால் மேல் நாட்டு ஜோதிடர்கள் இது போன்ற எதிர்மறை காரகங்களைக் கூறாமல், இராகு தரும் வெற்றியைப் பற்றிய அனுகூல நிலையை மட்டுமே பெரிதாய் பேசுவர்.
       இராகு ஒரு ஜாதகரின் தோற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதால், அதன் தோற்ற அமைப்பைப் பற்றி பார்ப்போம். இராகு, பாம்பின் உடலும், மனிதத் தலையும் கொண்ட வடிவ அமைப்பை உடையவர். அதன் காரணமாக பயம் தரும் அமைப்பை உடையவராகிறார். வேதஜோதிடத்தில் இராகுவுக்குப் பல பெயர்கள் உண்டு. கொடூரன், பயங்கரமானவன், திகைப்புடன் கூடிய அச்சத்தை அளிப்பவன், நாகம், தலை, நீலம், கரும்பாம்பு, பாதி உடல் உடையவன், புகைமண்டலத் தலையுடையவன், ரத்தச் சிகப்புடைய கண்களை உடையவன், மரணத்தை அளிக்கும் கொடூரப் பார்வை உடையவன், கோரைப்பல் , விஷப்பல், நச்சுப்பல் உடைய மற்றும் கன்னம் முழுவதுமான பெரிய மீசை உடையவன் என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறது.
      இராகு கிரக மண்டலத்தின் இரண்டாவது மூத்த, மூப்புடைய கிரகமாய் இருந்தாலும், வயதான முகத் தோற்றம் மற்றும் நடவடிக்கைகளை உடையவரல்ல. உண்மையில் இளமை ததும்பும், மற்றவர்களை மயக்கிவிடும் வசீகர முகம் உடையவர். சாதாரண முகத் தோற்றம் உடையவராக இருந்தாலும் இராகுவின் முகத் தோற்றத்திற்கு ஈடு இணையில்லை. நவீன யுகத்தின் அழகிப் போட்டிகளில் பங்கு பெற்று, திடீரென பிரபஞ்ச அழகிகளாய் தேர்ந்தெடுக்கப்பட்டு உலகப் புகழ் பெறும் பல அழகுராணிகளின் ஜாதகத்தில் இராகுவின் இலக்னாதிபதி மற்றும் 2 ஆம் அதிபதியுடனான தொடர்பு அல்லது 2 ஆம் இட அமர்வு இருப்பதைக் காணலாம். அதன் காரணமாகவே அவர்கள் அழகு தேவதைகளாகத் தேர்ந்து எடுக்கப்படுகின்றனர்.
       இராகு மிக உயரமான மனிதர்களைக் குறிக்கும். இவரின் இலக்னத் தொடர்பு ஜாதகரின் உயரத்தைக் கூட்டும். வாயு தத்துவம் உடையவராதலால், ஜாதகர் மெலிந்த உடலுடையவராக இருப்பார்ஐந்துவித உணர்வுகளில், கேட்கும் செவி உணர்வைக் குறிப்பதால் துல்லியமான கேட்கும் திறன் உடையவர் அல்லது காது கேளாதவரைக் கொண்டு இவர் இராகுவின் தாக்கம் உடையவர் என்று எளிதில் அடையாளம் காண இயலும்.
       ஒரு கூற்றுப்படி இராகுவானவர் விகாரமான தோற்றமும், பரமஏழை போன்ற தோற்றத்துடன், அசிங்கமான, அசுத்தமான மற்றும் அறுவருக்கத்தக்க ஆடை அணிந்து காட்சியளிப்பார் எனவும், மற்றுமோர் கூற்று, மாசில்லாத, பளபளக்கும் பல வண்ண ஆடையுடன், கொடூரமான மாவீரன் போல் தோற்றமளிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.
      ஒரு வழியில், இந்த இருவகைத் தோற்றங்கள் இராகுவின் இருவித குணங்களைக் குறிகாட்டுகிறது. இதில் ஒன்று வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் கொடுப்பதாகவும், மற்றுமொன்று இடுக்கண்ணையும், கஷ்ட காலத்தையும் தரக்கூடியது ஆகும். துன்பம் வருங்காலங்களில் அதிக பக்திமார்க்க நன்மைகளைத் தருகிறது. அதற்காக முன்னேற்றம் தரும் காலங்களில் பக்தியில் வளர்ச்சி இருக்காது என்று சொல்ல வேண்டியதில்லை.
       இராகுவின் நிறங்கள்தீச்சுடரின் சிகப்பு நிறம், திக்கான மஞ்சள், கடல் பச்சை, ஆகாய நீலம், பர்பிள், வைலட், அரக்கு நிறம், சூரிய அஸ்தமன வண்ணம், எலக்ட்ரிக் புளு, மின் காந்த அலைகள் அல்லது நம் கண்களுக்குத் தெரியாத அல்ட்ரா வைலட் ஒளிக்கதிர்கள் ஆகியவை ஆகும்.
       இராகுவும், சனியைப் போன்று கீழான பார்வை உடையவர். இலக்னத் தொடர்புடைய இராகுவைக் கொண்டு பார்வை மூலமாக ஜாதகரின் மனநிலையை, ஆளுமைத்திறனை அறியலாம்.
       இராகுவின் உருவம் பல வழிகளில் உருவகப்படுத்தப்பட்டுள்ளன. அதில் ஒன்று, நான்கு கரங்களில் திரிசூலம், வாள் மற்றும் வட்டு ஆயுதம் ஏந்திக் காட்சி அளிக்கிறார். மீதம் இருக்கும் ஒரு கரத்தால் அருள்பாலிக்கிறார். இவரது தெற்குப் பார்த்த முகமும், அணிகலன் நிறைந்த சிகையும் உடையவர். சிங்கவாகனம் உடையவர். மற்றுமொரு வடிவம்இருகரங்களுடன் காணப்படுவதாகும். ஒரு கரத்தில் கம்பளியும், மற்றொன்றில் பனைவோலையும் உடையவராக உள்ளார். அவர் எட்டு குதிரைகள் பூட்டிய ரதத்தைச் செலுத்துகிறார். இன்னும் ஒரு உருவத்தில் கரங்களில் கோளத்தையும், வளைந்த பட்டாக்கத்தியையும் வைத்தபடி உள்ளார்.
       வேதஜோதிடத்தில் இராகுவுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பெயர்கள் --முதன்மையானவர், துர்தேவதைகளுக்கு ஆலோசகர், அவர்களுக்கு மந்திரி, கொடுரமானவன், கோபக்காரன், துன்புறுத்துபவன், இம்சை அரசன், ஒளிக் கிரகங்களின் மீது வெறுப்பு மிக்க எதிரி, மாயையின் கடவுள், ஆதவனை அச்சமுறச் செய்பவன், சந்திரனின் ஒளி மங்கச் செய்பவன், அமைதியை ஏற்படுத்துபவன், அமிர்தம் அருந்தி அழியா உயிர் பெற்றவன், முன்னேற்றத்தை அள்ளி வழங்குபவன், அழியாச் செல்வம் மற்றும் அதீத அறிவைத் தருபவன் ஆகியவை ஆகும்.
       எனவே நண்பர்களே! இராகுவைப் பற்றிய மேலதிக விவரங்களுக்கு அடுத்து வரும் கட்டுரைகளில் காண்போம்.
  

 வல்லமை தாராயோ பராசக்தி இந்த மானுடம் பயனுற வாழ்வதற்கே !

வல்லமை தாராயோ பராசக்தி- இந்த மானுடம் பயனுற வாழ்வதற்கே !





ஆட்டிப் படைக்கும் கிரகங்கள்.

       உலகில் மனிதனாகப் பிறந்தவர்களில் சிலருக்கு மணவாழ்க்கை என்பது மணம் வீசும் மலர் வனத்தில் பூத்துக் குலுங்கும் அழகிய மலர் போல் இனியதாக மகிழ்ச்சியுடன் கழிகிறது. ஆனால் மற்றும் சிலருக்கு ஏன் பிறந்தோம் ? -- என்று வேதனைப்படும் அளவுக்கு மண்ணில் மலர்ந்த நாள் முதல் கடைசியில் உதிரும் நாள் வரை துன்பமே வாழ்க்கையானால் எங்ஙனம் வாழ்வர்இதற்குக் காரணம் என்ன ? பூர்வ ஜன்மத்தில் செய்த பாவ புண்ணியங்களுக்கு தக்க நாம் அனுபவிக்க வேண்டிய கர்ம வினையன்றோஇவ்வாறு கஷ்டங்களையே அனுபவித்த ஒரு ஜாதகியின் ஜாதகத்தை ஆய்வு செய்வோமா ?
      
சந்
இராகு
மாந்தி






இராகு
சூரி



     இராசி




  நவாம்சம்
புத,சனி
புத,சுக்
செவ்,சூரி
லக்///
சனி
சுக்
லக்/// சந்
குரு

கேது

கேது
குரு
மாந்தி

செவ்

       இந்த ஜாதகத்தில் இலக்னத்தில் உச்ச செவ்வாயும், சூரியனும், அஸ்தமனம் அடைந்த வக்கிர புதனும், இராசி சந்தியில் சுக்கிரனும் இருக்கின்றன. சூரியனும், சனியும் பரிவர்த்தனையில் உள்ளனர். சனி 8 ஆம் வீட்டிலும், குரு விரய வீடான தனது சுயவீட்டில் அமர்ந்துள்ளார். குருவுக்குக் கேந்திரத்தில் 3 ஆம் வீட்டில் சந்திரனும், இலக்னத்துக்குச் சதுர்த்த கேந்திரத்தில் இராகு, மாந்தியுடன் அமர்வு.

       நவாம்சத்தில் இலக்னத்தில் சந்திரனும், கடகத்தில் புதன், சனி மிதுனத்தில் இராகுவும் சூரியனும், கன்னியில் செவ்வாயும், செவ்வாய் நவாம்சத்தில் குருவும், மாந்தியும் உள்ளனர்.

       பாவக மாற்றங்களாக, சுக்கிரன் 12 ஆம் வீட்டிலும், சந்திரன் 2 ஆம் வீட்டிலும், இராகு 4 ஆம் வீட்டிலும், கேது 9 ஆம் வீட்டிலுமாக உள்ளனர்.

       இந்த ஜாதகத்தில் இலக்னாதிபன்  பரிவர்த்தனை பெற்றாலும், இலக்னாதிபதி 8 ஆம் வீட்டிலும் 8 ஆம் அதிபதி இலக்னத்திலும் இருக்கின்றனர். பஞ்சமாதிபதி சுக்கிரன் இலக்ன பாவத்தில் பலமுடன் இருந்தாலும், புதன் அஸ்தமனமாகி உள்ளார். களத்திர பாவாதிபதி  இராசியில் சகோதர பாவத்தில் இருந்தாலும், பாவத்தில் குடும்ப பாவத்தில் இருப்பதால், சனியால் பார்க்கப்படுகிறார்ஒரு ஜாதகத்தில் யோககாரகனும், இலக்னாதிபதியும் பாதிப்படைந்தால் அந்த ஜாதகிக்கு மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையாது. அதேபோல், சந்திரனும், சனியும்சுக்கிரனும் சனியும்   6 / 8 ஆக அமைந்தால் அவளுக்கு நல்ல குடும்பம் அமையாது.

      மேலும் இலக்னத்தில் செவ்வாய் உச்சத்திலும், சுக்கிரன், புதன் மற்றும் நவாம்சத்தில் 12 ஆம் வீட்டில் சனியும் உள்ளதால் இவளுக்குப் புனர்பூ யோகமும், அனுசித விவாக யோகமும் அமைந்தது. நவாம்ச இலக்னத்துக்கு 2 ஆம் இடத்தில் செவ்வாய் இருப்பதாலும், 7 ஆம் அதிபதி சனி அந்த வீட்டுக்கு சஷ்டாஷ்டமத்தில் இருப்பதாலும் சூழ்நிலை காரணமாக இவள் அனுசித விவாகம் புரிவாள் என்பதைக் காட்டுகிறது. மேலும், பண்டைய நூல்களில் மகரத்தில் உள்ள கிரகங்களைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளதும் இந்த ஜாதகிக்குப் பொருந்தி வருவதைக் காணலாம்.

      மகர ராசியில் சூரியன் இருக்கப் பிறந்தவர்கள் குடும்பத்தில் குழப்பங்கள் இருந்து கோண்டே இருக்கும். எந்தக் காரியத்திலும் அவர்களுக்குப் அதிக உற்சாகம் இருக்காது. எதிலும், எது கிடைத்தாலும் திருப்தி இருக்காது. குடும்பப் பற்று அதிகம் இருக்காது. பெயரும், புகழும் உண்டாகாது.

      மகரம் இலக்னமாகிப் பிறந்தவர்கள் கிடைத்ததைக் கொண்டு சந்தோஷப்படுபவனாகவும், கெட்டிக்காரத்தனம் உடையவனாகவும், பயந்த குணம் உடையவனாகவும், எப்போதும் துணிந்து பல பாவ காரியங்களைச் செய்பவனாகவும், வாதம், கபம் இவற்றால் அடிக்கடி பாதிக்கப்படுபவனாகவும் இருப்பான்.

      மகரத்தில் செவ்வாய் இருக்கப் பிறந்தவர்கள், எப்போதும் தன் இஷ்டப்படி நடக்கக் கூடியவர்களாக இருப்பர். உறவுகளின் மீது அன்பில்லாதவர்களாகவும், உறவுகளால் அவமதிக்கப்படுபவர்களாகவும் இருப்பர். வழக்குகளில் எதிர்பாராத வெற்றியை அடைபவர்களாகவும், பயந்த சுபாவம் உடையவர்களாகவும், எல்லாவித சுகங்களையும், எந்த விதத்திலாவது அனுபவிப்பவர்களாகவும். பிறரால் எளிதில் ஏமாற்றப்படுபவராகவும் இருப்பார்கள்.

      மகரத்தில் புதன் இருக்கப் பிறந்தவர்கள் கெட்ட பழக்கங்கள் உடையவர்களாகவும், எப்போதும் மனதில் துக்கம், சந்தேகம்அவநம்பிக்கை உள்ளவர்களாகவும், குசும்பான மற்றும் எதிர்மறையான புத்தி உள்ளவர்களாகவும், எதிரிகளிடம் இருந்து அதிக இன்னல்களை அனுபவிப்பவர்களாகவும் இருப்பார்கள்.

       மகரத்தில் சுக்கிரன் இருக்கப் பிறந்தவர்கள் வயதான பெண்மணிகளை மணக்க விரும்ப மாட்டார்கள். கெட்ட வாழ்க்கை வாழ விரும்புவார்கள், வீணாகப் பணத்தைச் செலவு செய்வார்கள், அதிகக் கடன் வாங்குவார்கள். கவிதை, காவியங்களில் ஆர்வமுடையவர்கள். உடல் நலம் அடிக்கடி பாதிக்கப்படும்

      இந்த கிரக நிலைகள் காரணமாக வாழ்க்கையில் இவள் பட்ட கஷ்டங்களைக் காண்போமா ?

      இவளது பெற்றோர் கலப்புத் திருமணம் செய்தவர்கள். தந்தை இந்து, தாய் கிருத்துவர் ஆவர். வளமான குடும்பத்தில் பிறந்த இந்த வனிதை, ஒரு பேரழகி. நன்கு படித்துப் பட்டம் பெற்றாள். கல்லூரியில் இவள் அழகில் மயங்கிய மாணவன், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தினான். அவள் சம்மதிக்காது போகவே சுற்றுலா சென்ற இடத்தில், இவள் அறைக்கு வந்தவன் பலாத்காரம் செய்தான். மான் புலியின் கையில் மாட்டி சீரழிந்தது. கற்பமானதால் வேறுவழியின்றி அவனையே மணந்தாள். ஒர் ஆண் மகவும் பிறந்தது. கணவனின் கொடுமை தாங்காது தற்கொலைக்கு முயன்று தப்பித்தாள்.

     பின்னர் ஹரே கிருஷணா இயக்கத்தில் மனஅமைதிக்காக சேர்ந்த பொது, அந்த இயக்கத்தில் இருந்த வயது குறைவான இளைஞன் மீது மையல் கொண்டு, கணவன் மறுத்தாலும், அவனையே திருமணம் செய்து கொள்ள நினைத்தாள். இதை அறிந்த கணவன் வீட்டைவிட்டு அவளை வெளியேற்றினான். அவளும் தான் பெற்ற மகனையும் விட்டுவிட்டு அந்த ஆடவனுடன் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தாள்.

     ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரோ கண்ணா ? கிரகங்களால் ஆட்டிப் படைக்கப்படும் மனிதர்களின் ஜாதகத்தில், கிரகங்கள் நடத்தும் விளையாட்டை இந்த ஜாதகத்தின் மூலமாக அறிந்தோமல்லவா ?