Search This Blog

Sunday 30 November 2014

உங்களுடைய இராசிபலன் இன்று எப்படி ? 01/12/2014


உங்களுடைய இராசிபலன் இன்று  எப்படி ?
01/12/2014
மேஷம் -- 
உறவுகள் செயலால் வெறுப்பு ஏற்படும்கோபத்தால் வம்புகளை விலைக்கு வாங்காதிருப்பது நல்லதுகுறிக்கோளின்றி அலைய நேரும்.   வெற்றிக்குக்  கடின உழைப்பு தேவை.

ரிஷபம் -- 
தனலாபம் அதிகரிக்கும்கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.  பிரிந்த குடும்பத்தோடு இணைந்து மகிழ்வீர்கள்எல்லா வகையிலும் மகிழ்ச்சி மிக்க நாள்.

மிதுனம் --- 
புனிதப் பயணங்கள்கோவில்குளம் என பக்தி மிக்க நாளாக இருக்கும்உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்புகழ் ஓங்கும்.அரசு ஆதரவு உண்டு.

கடகம் ---
 இன்பம் மிகுந்த நாள்மனைவி கருத்தரித்தல் போன்ற மகிழ்ச்சியான தகவல்கள் வந்து சேரும்சுகம்சந்தோஷம் ஆகியவை அதிகரிக்கும்தனலாபம்ஏற்படும்.

சிம்மம்  
இஷ்டத்துக்கு மாறாக எண்ணிய காரியங்கள் நடக்கும்.வீண்வழக்குகளை ஒத்திப் போடுவது நல்லதுவாகன சுகம் குறையும்.உயர் அதிகாரிகளிடம் பணிவுடன் நடப்பது நல்லது.

கன்னி – 
பல வழிகளிலும் பணம் வரும். அரசாங்கத்தால் இலாபம் உண்டாகும்அந்தஸ்து உயரும்பேச்சால் காரியத்தைச் சாதித்துக் கொள்வீர்கள்கல்வியில் சாதனை புரிவீர்கள்.

துலாம் – 
வியாபாரத்தில் தனலாபம் அதிகரிக்கும்நண்பர்கள் உதவுவர்.  எல்லா வகையிலும் நன்மைகள் ஏற்படும் நாள்கல்வியில் வெற்றி உண்டுபிரிந்தவர் கூடி பேரின்பங்காண்பர்.

விருச்சிகம் – 
திறம்படச் செயல்பட்டாலும் அதிகாரிகளிடம் நற்பெயர் எடுக்க முடியாதுபயணத்தில் தடைகளும்தாமதமும் ஏற்படலாம்உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

தனுசு –  
தொழில்வியாபாரம் ஆகியவற்றில் எதிர்பார்த்த இலாபம் இருக்காதுஅதன் காரணமாகக் குடும்பத்திலும் நிம்மதி குறையும்தாயின் உடல் நிலையில் அக்கறை தேவை.

மகரம் – 
மனத்தெம்பும் மகிழ்ச்சியும் பெருகும் நாள்குழந்தைகள் மீது அளவற்ற பாசம் காட்டுவீர்கள்மனைவி காரியம் யாவினும் கைகொடுப்பாள்தன்னம்பிக்கை கூடும்.

கும்பம் – 
இன்று தனலாபம்குடும்பத்தில் நிம்மதி ஆகியவை………………குறையும்மனைவிமக்களின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.தொழிலில் முதலீடுகளை குறைப்பது நல்லது.

மீனம் – தங்கள் சம்பாத்திய நிலை உயரும்மிகவும்  கடினமான            செயல்களைக் கூட எளிதாகவெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள்உயர் அதிகாரிகளின் பாராட்டுதலைப் பெறுவீர்கள் 

Thursday 27 November 2014

28/11/2014 இந்த நாள் இனிய நாள்.

இந்த நாள் இனிய நாள்.


28/11/2014

இன்றைய இராசி பலன்

மேஷம் இன்று, அரசு ஆதரவு, முக்கியஸ்தர்களின் உதவி, புதிய வேலைவாய்ப்பு சாத்திரங்களிலும், மந்திர, தந்திரங்களிலும் தேர்ச்சி ஆகிய நற்பலன்கள் உண்டாகும்.புகழ் ஓங்கும்.

ரிஷபம் தெய்வ நம்பிக்கை கூடும் நாள். சுகம், சந்தோஷம், இனிய சுற்றுலாப் பயணங்கள் எல்லாம் ஏற்படும். ஆரோக்கியம் மேம்பாடு அடையும், தனலாபம் எதிர்பார்த்தபடி இருக்கும்.

மிதுனம் கோபத்தைத் தவிருங்கள், குழப்பங்கள் குறையும். நேர்மைக்கு மாறாக நடந்தால் நிம்மதி குறையும். உயர் அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் அனுகூலமான ஆதாயங்கள் கிடைக்கும்.

கடகம் -- இன்று, பலவகைகளிலும் பணவருமானம் வந்து குவியும். திருமண ஏற்பாடுகள் நடக்கலாம். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டு. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர்.

சிம்மம்இன்று, விரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும். ஆணையிடும் அதிகாரபதவி கிடைக்கலாம்தொழில் விரிவாக்கத்தால் வருமான உயர்வுகளை எதிர்பார்க்கலாம்.

கன்னி -- இன்று, சோகம் என்றால் என்ன என அறிந்து கொள்வீர்கள். பண இழப்புகளைத் தவிர்க்க எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள். தேவையற்ற அவமானங்கள் ஏற்படும்.

துலாம்இன்று சுமாரான நாள். தாயின் உடல் நலத்தில் அக்கறை கொள்ளுங்கள். ஒருவித பய உணர்வும், தூக்கம் இன்மையும் ஏற்படும். பொருள்களைக் காப்பது அவசியம்.

விருச்சிகம் உற்சாகம் மிகுந்த உன்னத நாள். குழந்தைகளின் வசதிகள், கல்வி ஆகியவை பற்றிய அக்கறை எடுத்துப் பாசத்தைப் பொழிவீர்கள். தன்னம்பிக்கையால் வெற்றி கிட்டும்.

தனுசு எங்கே தேடுவேன் ? எனப் பணத்தைத் தேடுவீர்கள். எங்கே நிம்மதி ? என பாடக்கூடிய நிலை ஏற்படலாம்வீண்வாக்குவாதங்களைத் தவிர்த்தால் வளம் பெருகும்.

மகரம் --  இன்று பௌர்ணமி நிலவு போல் உங்கள் முகம் பிரகாசிக்கும். புத்தி சாதுர்யமும், வாக்குவன்மையும் மேலிடும். வியாபாரிகள் மற்றவர்களைக் கவரும் வண்ணம் பேசி ஆதாயம் பெறுவர்.

கும்பம் கடின உழைப்பின் காரணமாக காலத்திற்கு  உணவருந்த முடியாத நிலை ஏற்படும். பிறர் மேல் வெறுப்பு, பொறாமை ஆகியவற்றை அகற்றிக் கொள்வது நல்லது. முன் கோபத்தை அடக்க முன்னேற்றம் ஏற்படும்.

மீனம்எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி கிட்டும். பல வழிகளிலும் அதிக தனலாபம் கிடைக்கும்வியாபாரம், தொழிலில் வரவு அதிகமாக மனத்தெம்பும், மகிழ்ச்சியும் நிலவும். 

வல்லமை தாராயோ பராசக்தி இந்த மானுடம் பயனுற வாழ்வதற்கே.

நோய் நீங்கும் காலம். ---

நோய் நீங்கும் காலம். ---



ஒருவருக்கு நோய் ஏற்பட்ட நாளின் நட்சத்திரப்படி நோய்எத்தனை நாட்களுக்குள் தீரும் ? அல்லது தீராமல் மரணம்நேரும்.

நட்சத்திரம்
குணமாகும் நாட்கள்
அஸ்வினி
9 நாளில் குணமாகும்
பரணி
நாளில் குணமாகும்
கார்த்திகை
நாளில் குணமாகும்
ரோகிணி
21 நாளில் குணமாகும்
மிருகசிரீடம்
அல்லது 9 நாளில் குணமாகும்
திருவாதிரை
5 நாட்களிலோ அல்லது 3 பட்சத்திலோ குணமாகும்.
புனர்பூசம்
நாளில் குணமாகும்
பூசம்
நாளில் குணமாகும்
ஆயில்யம்
8 நாட்களுக்குள் மரணம் அல்லதுவெகுநாட்களுக்குப் பின் மரணம்
மகம்
10 நாட்களுக்குள் மரணம் அல்லது அடுத்தமகத்துக்குள் மரணம்
பூரம்
21 நாளில் குணமாகும்
உத்திரம்
நாளில் குணமாகும்


ஹஸ்தம்
நாளில் குணமாகும்
சித்திரை
8 நாட்களுக்குள் அல்லது அடுத்தசித்திரைக்குள் குணமாகும்
சுவாதி
10 தினங்களுக்குள் அல்லது 3பட்சத்துக்குள் குணமாகும்
விசாகம்
25 நாளில் குணமாகும்
அனுஷம்
10 நாளில் குணமாகும்
கேட்டை
12 நாளில் குணமாகும்
மூலம்
10 நாளில் குணமாகும்
பூராடம்
நாளில் குணமாகும்
உத்திராடம்
1 மாதத்துக்குள் குணமாகும்
திருவோணம்
8 நாளில் குணமாகும்
அவிட்டம்
10 நாளில் குணமாகும்
சதயம்
நாட்களுக்குள் வியாதி அதிகமாகும்.
பூரட்டாதி
12 நாட்களுக்குள் வியாதி அதிகமாகும்.
உத்திரட்டாதி
1 பட்சத்தில் குணமாகும்.
ரேவதி
நாளில் குணமாகும்

திருமணப் பிரசன்னம்.


திருமணப் பிரசன்னம்.

       பிரசன்ன இலக்னத்திற்கு 3, 5, 7, 10, 11 இல் இருக்கும் சந்திரனைகுரு பார்க்க அந்த மணமக்களாகப் போகிறவர்களுக்குத் திருமணம் நடக்கும்.
       திருமணத்திற்குப் பெண் கிடைக்குமா ?
       இதற்கான பிரசன்ன நேரத்தில் – ரிஷபம்கடகம்துலாம் இவைகள் இலக்னமாகிஅதில் சுக்கிரனும்சந்திரனும் இருந்தாலும் அல்லது பார்த்தாலும் பெண் கிடைக்கும்.
       கிருஷ்ணபட்சத்தில் பிரசன்னம் பார்க்கும் போது – இலக்னத்துக்கு இரட்டையான இராசியில் சந்திரன் இருந்தாலும் அல்லது 8 இல் சந்திரன் இருக்கவும்அதை அசுபர் பார்க்கவும் திருமணம் நடக்காது.
       திருமணப் பிரசன்னத்தின் போதுஇலக்னத்திற்கு 5, 6, 8 ஆகிய இடங்களில் சந்திரன் இருந்து விவாகம் நடந்தால்திருமணம் நடந்த 8 வருடத்திற்குள் துணைக்கு (கணவன்/மனைவிமரணம் நிகழும் எனக் கூற வேண்டும்.
       பிரசன்ன இலக்னத்தில் செவ்வாயும், 7 ஆம் இடத்தில் சுபக்கிரகமும் இருந்து திருமணம் நடக்குமானால்அந்தப் பெண் கெட்ட நடத்தையொடு கூடுவாள் அல்லது அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் இறந்து போகும்கணவனும் எட்டு வருஷத்தில் இறந்து போவான்.
       பிரசன்ன இலக்னத்தில் சந்திரனும், 7 அம் இடத்தில் செவ்வாயும் இருக்க 8 வருடத்திற்குப் பிறகு கணவன் இறப்பான்.
பிரசன்ன இலக்னத்திற்கு 5 ஆம் இடத்தில் அசுபர் நீசமாகிபகைக்கிரகங்கள் பார்க்கஅப் பெண்ணுக்குப் பிறக்கிற குழந்தைகள் இறக்கும் அல்லது அவள் நடத்தை கேள்விக்கு உரியதாய் இருக்கும்.

 வல்லமை தாராயோ பராசக்தி இந்த மானுடம்  பயனுற வாழ்வதற்கே.

 

Tuesday 25 November 2014

இந்தவார நட்சத்திர பலன் - 23- 29 / 11 / 2014 - தினபூமியில்


இந்தவார நட்சத்திர பலன் - 23- 29 / 11 / 2014



தனுசு

( மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)

மூலம்

          இந்த வாரம் மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டாகும்அரசுப் பதவியில் உள்ளவர்கள் அதிகாரிகளின் தயவால் அனுகூலமான பலன்களை அடைவர்.   தொழிலாளர்களுக்கு  உழைப்பு அதிகமாகி. அதற்கேற்ற இலாபமோ, பலனோ கிடைக்காது. சிலருக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம். முன்னெச்சரிக்கையாக மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்வது நல்லது. உங்களின் செயல்திறன் அதிகரிகரித்துச் செல்வாக்கும் பெருகும். புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும். வாகன வசதிகள் மேம்படும். அந்தஸ்து உயரும். சிலருக்கு அதிகாரமுள்ள உயர் பதவி கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். தொலை தூரத்திலிருந்து நற்செய்திகள் வந்து மகிழ்ச்சி அளிக்கும். உதவிகரமான புதிய நண்பர்கள் கிடைப்பர்எழுத்துத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

பூராடம்

       இந்த வாரம் நீண்ட கால உழைப்பின் காரணமாகச் சிலருக்குக் கௌரவப் பட்டங்கள் கிடைக்கும். பொன் ஆபரணங்கள் விதவிதமாகக் கிடைக்கும். நல்ல பண்பாளர்களின் நட்பும், அன்பும் கிடைக்கும். மனதில் தெய்வ பக்தி கூடும். நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். நல்ஆரோக்கியமும், புதுத் தெம்பும், புத்தொளியும் ஏற்படும். விபத்தைத் தவிர்க்க பயணங்களில் எச்சரிக்கை தேவை. தாயின்  ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. சிலருக்கு குடும்ப வாழ்க்கையில் குழப்பம் வரலாம். எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டி முன்னேற முயல்வீர்கள். உறவுகள் வருகையால் சந்தோஷம் பெருகுவது பொல், செலவுகளும் அதிகரிக்கும்.  சிறப்பான பொதுஜனத் தொடர்பு காரணமாக உபரி வருமானம் கிடைக்கும்.

உத்திராடம் –1 ஆம் பாதம்

              இந்த வாரம் எதிர்பார்த்தபடி பண வருவாய் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கும் தாங்கள் எதிர்பார்த்தபடி வங்கிக் கடன்கள் சிரமமின்றிக் கிடைக்கும்உறவுகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் ஆகியோரின் ஒத்துழைப்பால் அனைத்துச் செயல்களும் வெற்றி பெறும். ஆனால், தொழில் விஷயமாக எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடைய அதிகாரிகளின் தயவு தேவைப்படும். பணிபுரியும் பெண்களுக்கு தற்போது இருக்கும் வேலையைக் காட்டிலும் நல்ல வேலைக்குப் போகும் வாய்ப்புகள் அமையும்பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டாகும்.


மகரம்

( உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )

உத்திராடம்- 2,3,4- பாதங்கள் ---

       இந்த வாரம் பல வழிகளிலும் தனவருமானம் கூடுதலாக இருக்கும். மனைவியுடன் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் தங்கள் அனுசரணையால் சீர்படும்சிறந்த எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொழிலில் தீட்டப்படும் புதிய திட்டங்கள் அரசின் உதவியோடு சிறப்பாக முடிக்கப்படும். அன்பான உறவுகள் வருகையால் சந்தோஷம் பெருகுவது போல், அதிகச் செலவுகளும் ஏற்படும். அதன் காரணமாகப் புதிய கடன்களும் ஏற்படும்.  உங்களின் சிறப்பான பொதுஜனத் தொடர்பு காரணமாக உபரி வருமானம் கிடைக்கும். நண்பர்களிடம் வீணான வாக்குவாதம் செய்யாதிருப்பது நட்பை பலப்படுத்தும். பூமி அல்லது வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். அதுபோல் உங்கள் எதிரிகளிடம் இருந்து விலகியே இருப்பது நல்லது. உங்களது நற்குணங்கள் அனைவரின் பாராட்டையும் பெறும். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டாகும்.

திருவோணம்-

       இந்த வாரம் உங்களுக்கு இனிய வாரம். பக்தி மிக்க புண்ணியத் தல யாத்திரைகள் ஏற்படும். வாழ்க்கையில், மேம்படும் பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். குடும்பத்தாரும் அவர்கள் ஆசைகள் நிறைவேறுவதால் மகிழ்ச்சியோடு இருப்பர். அனுபவ பூர்வமான அறிவுத்திறன் கூடுவதால், செயல் திறனும் கூடி, அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். பூமி, வீடு ஆகியவற்றின் மூலம் ஆதாயங்கள்  ஏற்படும்.  பணிபுரியும் பெண்களுக்கு தற்போது இருக்கும் வேலையைக் காட்டிலும் நல்ல வேலைக்குப் போகும் வாய்ப்புகள் அமையும். மனைவியின் பணிவிடை மகிழ்ச்சி தரும். மதிப்பு, கௌரவம் உயரும். சோம்பேறித்தனம் அதிகரிக்கும். பெண்களுக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடும், அதன் காரணமாகக் குடும்ப முன்னேற்றமும் ஏற்படும்.

அவிட்டம் 1,2 பாதங்கள்

       இந்த வாரம் உங்கள் மூலதனத்தைக் கொண்டு  புதிய முதலீட்டுத் திட்டங்களைச் செயல்படுத்த முற்படுவீர்கள். நீண்ட நாட்களாக வருவார்கள் என எதிர்பார்த்த நெருங்கிய  உறவுகளின்  வரவு  மகிழ்வைத் தரும். நெருங்கிய நண்பர்களின் உதவியால் கூட்டாளிகளிடையே ஏற்பட இருந்த குழப்பங்கள் சரியாகும். வீட்டு வாடகை வசூல் திருப்திகரமாக இருக்காது. பெண்கள் தாங்கள் பணிபுரியும் இடங்களில் தங்கள் திறமைகளை நிலைநாட்டிப் புகழ் பெறுவதோடு, அதிகாரிகளின் பாராட்டையும் பெறுவர். மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்குக் கடின உழைப்பு தேவைப்படும். வீட்டில் நவீன உபகரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்கள் இலாபம் தரும். இதுவரை கடினமாக இருந்த காரியங்கள் கூட எளிதில் கைகூடும்.

கும்பம்

( அவிட்டம் – 3,4 பாதங்கள்சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)

அவிட்டம் – 3,4 பாதங்கள்

       இந்த வாரம்  தாராளமான தனவரவு இருக்கும்இனிய தகவல்கள் இல்லம் தேடி வரும். உயர் அதிகாரிகளிடம் பணிவுடன்  நடப்பது பதவி உயர்வுக்கு உறுதுணையாக இருக்கும்வியாபாரிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவசப் பரிசுகள் கொடுத்து வியாபாரத்தை மேலும் பெருக்கிக் கொள்வர். நெடுநாளாகப் பிரிந்த தம்பதிகள் இணைந்து மகிழ்வர். பரம எதிரிகளின் திட்டங்களை, திறமையாக மற்றும் சமயோஜிதமாகச் செயல்பட்டு முறியடிப்பீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கும். புத்திரர்களால் ஜெயமுண்டு. நவீன காலத்துக்கு ஏற்றபடி புதுப்புதுத் தயாரிப்புக்களை அறிமுகப்படுத்தி வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்கள். அரசுப் பணியாளர்கள் அக்கறையுடன் பணிபுரிந்து, அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள்.

சதயம்-

       இந்த வாரம் உங்கள் பணவரவு அதிகரிக்கும். செல்வநிலை உயரும்புதிய முதலீட்டுத் திட்டங்களில் உங்கள் பணத்தை முதலீடு செய்து தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். நீண்ட நாட்களாக வராத விருந்தினர்கள்  வந்து விருந்தாடி  மகிழ்வைத் தருவர். நெருங்கிய நண்பர்களின் உதவியால் வீட்டில் நடக்கும் விசேஷங்கள் சிறப்பாக நடக்கும். சுற்றுலாப் பயணங்கள் இனிமை தரும். சினிமா, டிராமா எனப் பொழுதுபோக்குகளில் குடும்பத்தோடு ஈடுபட்டு மகிழ்வீர்கள். வீட்டு வாடகை வசூல் திருப்திகரமாக இருக்காது. மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்குக் கடின உழைப்பு தேவைப்படும். வீட்டில் நவீன உபகரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்கள் இலாபம் தரும். இதுவரை கடினமாக இருந்த காரியங்கள் கூட எளிதில் கைகூடும்.

பூரட்டாதி-1,2,3 பாதங்கள்

       இந்த வாரம் நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து எதிர்பார்த்தபடி பணவரவு ஏற்பட்டு மனம் மகிழும். அரசுப் பணி புரிபவர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு காரணமாக எண்ணியபடி பதவி உயர்வு மற்றும் இடமாற்றங்கள் கிடைக்கும் அனுகூலமான  வாரம். பணிபுரியும் பெண்கள் தங்கள். அனைத்து முயற்சிகளிலும்  வெற்றி பெறுவார்கள். சிலருக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய இல்லம் அமையும். புதிய பதவிகள் தேடிவரும். அந்தஸ்து உயரும்விவசாயிகளுக்கு ஆதாயம் கிட்டும். மாணவர்களுக்குத் தேர்வு முடிவுகள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். வியாபாரிகள் தங்கள் வாக்குவன்மையால் வாடிக்கையாளர்களிடம் வேடிக்கையாகப் பேசிக் கவர்வதின் மூலமாக, இலாபத்தைப் பெருக்குவார்கள். தொழில் புரிவோருக்கும் சாதகமான வாரம்.


மீனம்

( பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)

பூரட்டாதி – 4 ஆம் பாதம்

       இந்த வாரம் பணவரவு அதிகரிப்பதால் மனக்களிப்புக் கூடும் வாரம். உங்கள் புதிய முயற்சிகள்  அனைத்தும் வெற்றி பெறும். புனித பயணங்கள் மேற்கொள்வீர்கள். எல்லோருடனும் பழகும் உங்கள் சகஜமான பழக்கத்தால் விஐபி களின் நட்பு உருவாகும். அவர்கள் மூலமாக ஆதாயங்கள் பெறும் நிலையும் ஏற்படும். அதன் காரணமாக சந்தோஷங்கள் நிலவும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமண ஏற்பாடுகள் நடக்கும்வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை உருவாகி வெற்றியும் கிட்டும். அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு உயர்பதவிகளுக்கான வாய்ப்புகள் பெருகும். தோஷங்கள் நீங்கி நோய்கள் அகலும். தாய் வழியில் ஆதாயம் உண்டு. பால்வளம் பெருகும். மனதில்  நினைத்ததை நினைந்தபடியே நடத்தி முடிப்பீர்கள். அதிகாரம் பண்ணும் தலைப்பதவி கிடைக்கும்.

உத்திரட்டாதி-

       இந்த வாரம் குடும்பத்தில் தனவிருத்தி அதிகமாவதால் இதுவரை இருந்துவந்த இன்னல்கள் தீரும். ஓய்வெடுத்து, உல்லாசமாய்ப் பொழுது போக்கும் விதமாக, நமக்கு எல்லா நாட்களும் விடுமுறை நாளாக இருப்பதில்லையே. அதேபோல் இன்பமும் துன்பமும் கலந்தது தானே வாழ்க்கை. பலநாள் கனவுகள் நனவாகும்.  பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் ஆடம்பரச் செலவுகள் அதிகமாவதின் காரணமாகப் பணமுடை ஏற்படா வண்ணம் தேவையற்ற செலவுகளை ஒதுக்குவது நல்லது. தெய்வபலம் இருப்பதினால் நேர்மை மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றால், வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். இந்த வாரம்  உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் வெற்றியின் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள்.


ரேவதி-

       இந்த வாரம் பணவரவு அதிகரிப்பது போல், செலவுகளும் கூடும். கல்வி கேள்விகளில் தேர்ச்சி ஏற்படும். சுபச் செய்திகள் மன மகிழ்ச்சி தரும். வியாபாரிகள் புதிய வாடிக்கையாளர்களால் அதிக இலாபம் அடைவர். மாணவர்கள் தங்கள் பொன்னான நேரத்தை வீணாக்காமல், கருத்தோடு படித்தால் நல்ல மதிப்பெண்கள் பெறலாம். பெண்களால் சந்தோஷம் உருவாகும். வாகனங்களில் செல்லும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லவும். நல்ல நண்பர்களுடன் பழகுவதால் உங்கள் மனம் உயர்ந்த எண்ணங்களைக் கொண்டதாக அமையும். உறவுகள், உள்ளங்கவர் நண்பர்கள் மற்றும் மங்கையர்கள் ஆகியோர் உதவிக் கரம் நீட்டுவதால் உள்ளம் மகிழும். வியாபார விரிவாக்கம் பற்றிய தங்கள் கூட்டாளியின் ஆலோசனைகள் ஏற்றுக் கொள்ளத் தக்கதாகவும், சிறப்பானதாகவும் இருக்கும்.


n  ஜோதிட கலாநிதி எஸ். விஜயநரசிம்மன். எம். எஸ்ஸி. (அஸ்ட்ரோ)