Search This Blog

Sunday 28 April 2024

எமது புதிய வெளியீடுகள் - முத்தான மூன்று நூல்கள்.

 



 அதிக உதாரண ஜாதகங்களுடன், விரிவான விளக்கங்களுடன் கூடிய புத்தகங்களை வாங்கி பலன் கூறும் முறைகளில் புதிய தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்.




ஜோதிட பிரவீணா. எட்டயபுரம் . எஸ். விஜயநரசிம்மன்.


Sunday 7 April 2024

அண்ணாமலையும், அரசியலும்

 




அண்ணாமலையும் அரசியலும்

        

 

 



புத,ராகு

சுக்

 

 

சனி(வ)

செவ்(வ)

ராகு

 

சுக்

 

ராசி

4 ஜூன், 1984.

12-00 பகல்

கரூர்.

சந்

 

 

நவாம்சம்

சூரி

 

 

லக்//

புத

லக்//

 

குரு(வ)

கேது

மா,சனி

(வ), செவ்(வ)

 

சந்

 

கேது

குரு(வ)

 

 

 

          மேலே திரு. அண்ணாமலை அவர்களின் ஜாதகம் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுவான பலன்களாக சிம்ம லக்னத்தில் பிறந்த ஜாதகர் விசேஷ ராஜ குணங்களை உடையவராக இருப்பார். நல்லொழுக்கமும், மரியாதையும் உடையவராகவும் இருப்பார். தூய உள்ளமும், வெளிப்படையானவராகவும், இரக்க குணம் உடையவராகவும், பரந்த மனப்பான்மை உடையவராகவும் இருப்பார். சில நேரங்களில் குறுகிய மனம் கொண்டவராகவும் இருப்பார். தலைமைக்கான தகுதியும், எதையும் சிறப்பாகவும், பெரிதாகவும் ஏற்பாடுகள் செய்வதில் வல்லவர். எப்போதுமே தன்னைச் சுற்றி அனைவரும் இருப்பதும், அவர்களுக்கு மத்தியில் தான் நடுநாயகமாக வீற்றிருப்பதையே விரும்புவார். பிறரை மன்னிக்கும் தாயாள குணம் உடையவர். பயமற்றவர். மிகவும் தைரியசாலி. ஆளுமை மிக்கவர். அர்ப்பணிப்பு உணர்வு, அமைதியை விரும்புதல் ஆகிய குணங்களை உடையவர். ஒவ்வொரு தருணத்திலும் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதையே  விரும்புவார் முரட்டுத்தனமும், சுயதம்பட்டமும், தான் என்ற கர்வமும் உடையவர்.  எல்லோரையும் வசீகரிப்பதையே விரும்புவார்.  வாழ்க்கையின் முக்கிய குறிக்கோளாக முன்னேறிக் கொண்டே இருப்பதையே விரும்புவார். நியாயத்துக்காக போராடுவார்.

இவரது முக்கிய ஆசை – சமூக அந்தஸ்தை நிலைநாட்டிக் கொள்வதே ஆகும்.

கடக லக்னத்தில் பிறந்தவர்கள் தங்கள் பெற்றோர், ஆசிரியர், நற்குணமுள்ளோர் ஆகியோர் மீது பக்தியுள்ளவராக, விசுவாசமுள்ளவராக இருப்பார். திறமைமிக்க வேலையாள். அரசருக்கு மந்திரியாவார். புகழ் அடைவார். வெளிநாடு செல்வார். திறந்த மனமுடையவர், வெளிப்படையாக பேசக்கூடியவர் என்று காணப்பட்டாலும், பல விஷயங்களை மறைக்கக் கூடியவராகவே இருப்பார். உணர்ச்சி வசப்பட்டவர். கற்பனையாளர். பார்ப்பதற்கு கரடு முரடானவராக காணப்பட்டாலும், உள்ளூர மென்மையானவராக இருப்பார்.

         இவரது ஜாதகத்தில் சூரியன் பத்தாம் இடத்தில் இருப்பதால், திறமைசாலியாக இருப்பார். அரசால் அங்கீகரிக்கப்படுவார். கௌரவப் படுத்தப்படுவார். செல்வமுடையவர். இரக்கமுள்ளவர். அதிர்ஷ்டசாலி. நற்குணமுடையவர். மந்திரியாவார். புகழ் அடைவார். அரசு தொடர்பு, அரசுப்பணி, தலைமை பொறுப்பு, வாகன யோகம்,  அரசால் அனுகூலம் ஆகியவை உண்டு. கடின உழைப்பால் வெற்றி கொள்வார். தன்னை சார்ந்தவர்களையும் நற் செயல்கள் செய்யவே தூண்டுவார். ஞானம் மிக்க நல்லவர்களை போற்றுவார். உயர்பதவிகளை எய்துவார். பாராளுமன்றத்தில் இடம் பெறுவார். கவர்னர், பிரதம மந்திரி போன்ற மிகப் பெரிய பதவிகளையும் அடைவார்.

         சந்திரன் விரய பாவத்தில் அமர்ந்துள்ளதால், இனிமையாக பேசுவார். ஹோமம், மத விழாக்கள் போன்ற நற்காரியங்களுக்காக, தர்ம காரியங்களுக்காக பணம் செலவழிப்பார். வெற்றியாளர். மகிழ்ச்சியானவர்.

         தைரிய பாவத்தில் செவ்வாய் இருப்பதால், வீரம் மிக்கவர். சந்தோஷத்தை விரும்புபவர், புத்திசாலி, புகழ், தைரியம், பொறுமை, திறமை மிக்கவர். தனது சுய பலத்தினால் சக்தி மிக்கவர். இவர் இல்லத்தில் திருமகள் எப்போதும் நிரந்தரமாக, வாசம் செய்வார். அரசனால் விரும்பப்படுபவர். நோயற்ற வாழ்வு வாழ்வார். நாகரீகம் மிக்கவர். போர்களத்தில் சிறந்த வீரராக இருப்பார். அரசரால் கௌரவிக்கப் படுவார். வெல்ல முடியாதவர். மந்திரியாவார். நண்பர்களால் நன்மையடைவார்.

         ஒரு ஜாதகத்தில் புதன் கர்ம பாவத்தில் இருப்பது மிகச் சிறந்த நிலையாகும். ஜாதகர் சட்டம் அறிந்தவர். நியாயமானவர். உண்மையானவர். புத்திசாலி. பாயிண்டாக பேசுவதில் வல்லவர். நினைவாற்றல் மிக்கவர். பெற்றோர்களின் ஆசிகளை உடையவர். பரம்பரை சொத்துக்கள் கிடைக்கும்.  அரசு அதிகாரம் காரணமாக தக்க முடிவுகளை எடுக்கக் கூடியவர். உலகமே ஜாதகரைக் கொண்டாடும். இவர் தொட்டதெல்லாம் துலங்கும்.

          குரு 5 இல் இருப்பவர்கள், அகன்ற கண்களுடன் கவர்ச்சிகரமானவராக இருப்பர். மத ஆர்வம் மிக்கவர். கருணை உள்ளம் கொண்டவர். பெரிய அன்பர்களால் வணங்கப்படக் கூடியவர். வாதிடுவதில் வல்லவர். சிறந்த சொற்பழிவாளர். தர்க்கவாதி, குறுக்கு விசாரணை செய்வதில் வல்லவர். நியாயத்துக்காக போராடுவார். எழுத்தாளர். சகலகலா வல்லவர். அழகிய குழந்தைகளை உடையவர். அரசருக்கு ஆலோசகராக, மந்திரியாக திகழ்வார்.      

        கர்ம பாவத்தில் உள்ள சுக்கிரன் இவரை அமைதியானவராகவும், நட்பு மிகுகவராகவும், ஜோதிடக் கலையை அறிந்தவராகவும், கூர்மதி உடையவராகவும், உலகளாவிய புகழ் உடையவராகவும், ஆக்கிவிடுகிறது.  மக்கள் மத்தியில் மிகவும் மதிக்கப்படுபவராகவும் இருப்பார். விவசாயம் மூலம் நல்ல வருமானங்களை பெறுவார். அதிகாரம் மிக்க அரசு பதவிகளை பெறுவார். மனைவி செல்வம் மிக்கவராக இருப்பார். திருமணத்திற்குப் பிறகே அதிர்ஷ்டம் ஏற்படும்.காட்டில் இருந்தால் கூட ராஜ வசதி மிக்க வாழ்க்கை வாழ்வார்.  தூரதேசத்தில் அல்லது வெளி இடங்களில் வாழ்வார்.

       சனி தைரிய பாவத்தில் இருப்பதால், ஜாதகர் நியாயவானாகவும், விவேகமுள்ளவராகவும், திடமான, உறுதியான, அசைக்க முடியாதவராகவும் இருப்பார். இலவச ஆலோசனைகளை வாரி வழங்குபவராகவும் இருப்பார். ஜோதிட ஆர்வலர். ஆழ்ந்த விஞ்ஞான அறிவும் உண்டு. தைரியமான, வீரமுள்ள, துணிவானவராக இருப்பார். எதிரிகளை துவம்சம் செய்வார். சுறுசுறுப்பாக பணி செய்வார். அதிகம் பேசமாட்டார். வெற்றியாளர். வெல்ல முடியாத திறமைகளை உடையவர். தனிமையை விரும்புவார். (ஞானி போல்). யாருக்கும் தீங்கிழைக்காமல் ஆதரவு தருவார். எட்டு திக்கும் இவர் புகழ் பரவும்.

       கர்ம பாவத்தில் உள்ள ராகுவால் எதற்கும் அஞ்சாதவராக இருப்பார். நற்குணம் உடையவர். சக்தி மிக்கவர்களின் தயவு இவருக்கு எப்போதும் உண்டு. கவிதைகளில் ஆர்வமுண்டு. உயர் பதவி, அமைச்சர், போன்ற பதவிகள் தேடிவரும். வழக்கு விவகாரங்களில் வெற்றி அடைவார். இளமையில் கஷ்டங்களை அனுபவித்தாலும் 21 வயதுக்குப் பிறகு அதிர்ஷ்டம் ஆரம்பமாகும். 36 வயதில் முழுமையான முன்னேற்றங்களை அடைவார். 42 வயதில் பொது வாழ்க்கையில் நல்ல கௌரவங்களை அடைவார். ராஜ நிலையும் அடைவார்.

        சுக பாவ கேது தைரியம், உண்மை, மென்மையான பேச்சு, செல்வ நிலை, முன்னேற்றம் ஆகியவற்றை குறிகாட்டுகிறது. நண்பர்கள் இவரை சந்தோஷமாக வைத்திருப்பர். உயர் பதவிகளை அலங்கரிப்பார். உயர் வாகன வசதிகள் ஏற்படும்.

பாவாதிபதிகள் மாறி நின்ற பலன்கள் –

        இலக்னாதிபதி கர்ம பாவத்தில் இடம் பெற்றுள்ளதால் அழகானவராகவும், திறமைசாலியாகவும், நற்காரியங்களை செய்பவராகவும் இருப்பார். ராயல் லைஃப் உண்டு. பெரியவர்களை, குருவை மதித்து நடப்பார். அரசரின் நண்பராக திகழ்வார். உயர் பதவிகளை அடைந்து, அனைவராலும் அறியப்பட்டவராகவும் இருப்பார். அரசியலில் சுறுசுறுப்பாக செயல்படுவார். தந்தையை காட்டிலும் நல்ல முன்னேற்றங்களை அடைவார்.

        தனாதிபதி கர்ம பாவத்தில் இருப்பதால், நன்கு படித்த மனைவி அமைவார். அனைத்து வசதிகளையும் பெறுவார். அரசராலும் மதிக்கப்படுவார். அரசால் கௌரவிக்கப்படுவார். அரசருக்கு சமமானவராக திகழ்வார். அரசுப் பணிகளில் திறமைசாலியாக திகழ்வார்.

        மூன்றாம் பாவாதிபதி கர்ம பாவத்தில் இருப்பதால், எப்போதும் மகிழ்ச்சியானவராக இருப்பார். தந்தை மற்றும் அரசர் மூலம் ஆதாயங்களை அடைவார். அரசால் கௌரவிக்கப்படுவார். அரசவையில் உயர்பதவிகளை பெறுவார்.

        சுகாதிபதி தைரிய பாவத்தில் இடம் பெற்றுள்ளதால் சுயமாக சம்பாதித்து வாழ்க்கையில் முன்னேறுவார். அநேக நண்பர்களை உடையவராக இருப்பார்.

        பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி அங்கேயே இருப்பதால், தூய மனமுடையவராக இருப்பார். புத்திசாலிதனமாக பேசுவார். மற்றவர்களை சிறப்பானவராகி புகழ் பெறுவார். அனைவரின் நன்மதிப்பையும், மரியாதையையும் பெறுவார்.

        ஆறாம் அதிபதி தைரிய பாவத்தில் இடம் பெற்றுள்ளதால் இவரின் கண்கள் கோபம் வந்தால் சிவக்கும். அதிகமாக உழைப்பவர் ஆவார். சகோதர ஒற்றுமை இருக்காது.

         களத்திர பாவாதிபதி தைரிய பாவத்தில் உள்ளதால் பலம் மிக்கவர். உறவினர்களால் மிகவும் விரும்பப்படுவார்.

         அட்டமாதிபதி ஐந்தாம் இடத்தில் உள்ளதால், நிலையான முன்னேற்றம் இருக்காது. கையில் காசு தங்காது. அதிகமான சொத்துகளை சேர்ப்பதில் ஆர்வங்கொள்வார். அட்டமாதிபதி புத்திர காரகன் குருவாக இருப்பதால், குழந்தைகளாலும், செல்வத்தாலும் ஆசிர்வதிக்கப்பட்டவராகவும் இருப்பார்.

        பாக்கியாதிபதி தைரிய பாவத்தில் இருப்பதால் இவர் செய்யும் நற்காரியங்கள் இவரை மக்களிடையே புகழ் பெற வைக்கும்.

        கர்மாதிபதி அதே பாவத்தில் இடம் பெற்றுள்ளதால் ஜாதகர் உண்மைக்குமாறாக நடக்கமாட்டார். அன்பும், பாசமும் மிக்கவர். தாயின் சந்தோஷத்தை அதிகரிப்பார்.  நற்காரியங்களில் ஈடுபடுவார். புத்திசாலி, திறமை மிக்கவர். அரசனிடமிருந்து செல்வமும், கௌரவமும் பெறுவார். மக்கள் மத்தியில் இவர் புகழ் நிலைத்திருக்கும்.

        இலாபாதிபதி, கர்ம பாவத்தில் இருப்பதால், புத்திசாலியாகவும், உண்மையானவராகவும் இருப்பார். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றங்களை அடைவார். விரயாதிபதி விரயத்தில் இருப்பதால் நாற்கால் பிராணிகளிடம் அன்புள்ளவராக இருப்பார்.

         நடப்பு சுக்கிர தசையில் முன்னேற்றங்கள் இருக்கும். புகழும், வசதி வாய்ப்புகளும் கூடும். புத்தகம் வெளியிடுவார். அரசு தலைமை பதவிக்கான வேலைகள் முன்னேற்றகரமாய் இருக்கும். வாகன சுகம் உண்டு.

        புதன் புத்தியில் அரசர்களுடன் நட்பு உருவாகும். கௌரவம் கூடும். புதன் புத்தி ஆரம்பத்தில் சிறப்பாகவும், மத்திம காலத்தில் சுமாரானதாகவும், முடிவில் சில ஆரோக்கிய குறைவுகளும் இருக்கும். விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்பது சிறப்பு.

        சுக்கிர திசை, புதன் புத்தி, குரு அந்தரத்தில் (ஜூலை 2024 முதல் டிசம்பர் 2024 வரை) சக்திமிக்க பதவிகள் வந்து சேரும்.

இராஜ யோகங்கள்-

       அசுபர்கள் உச்சமடைந்தால் பராக்கிரம சாலியாக இருப்பாரேயன்றி, அரசர் ஆகமாட்டார் என்று ஜீவ ஷர்மா குறிப்பிடுகிறார். கல்யாணவர்மா – ஒரு பகுதிக்கு தலைவராகவோ அல்லது சிற்றரசராகவோ ஆவர், என குறிப்பிடுகிறார்.

       வெல்ல முடியாத அரசராவார்.

     இலக்கினத்தை அசுபர் பார்த்தால், ஜாதகர் அரசர் ஆவார். சுப கிரகங்கள் கேந்திரங்களில் இருந்தால் ராஜயோகம் ஏற்படும்.

     ஆத்ம காரகன் சூரியன் நவாம்சத்தில் கடகத்தில் உள்ளார். அதுவே, காரகாம்சம் ஆகும். ஆத்ம காரகன் நவாம்சத்தில் சுபர் வீட்டில் உள்ளதால் ஜாதகர் செல்வந்தர் ஆவார்.

      தனாதிபதி சுபருடன் கூடி கேந்திரத்தில் இருக்க யுக்தி சமன்வித வாகினி யோகம் ஏற்படுகிறது என சர்வார்த்த சிந்தாமணியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், ஜாதகர் சிறந்த பேச்சாளராகவும், திறமை மிக்கவராகவும் இருப்பார்.

      பர்வத யோகம் – கேந்திரத்தில் சுபர் இருந்து 6, 8 ஆம் இடங்களில் கிரகங்கள் இல்லை எனில் இந்த யோகம் ஏற்படும். இதனால் ஜாதகர் அதிர்ஷ்டசாலி, செல்வந்தர், சொற்பொழிவாளர், தர்மவான், கற்றவர் மற்றும் நகரத்தின் தலைவர் ஆவார்.

      விபரீத விமல ராஜயோகம் – விரயாதிபதி, விரயத்தில் இருக்க ஏற்படுவதாகும். இதனால் ஜாதகர் வெற்றியாளராக இருப்பார். நற்குணம் இருக்கும். சுதந்திரமானவர், மதிப்பிற்குரிய உயர் பதவியில் இருப்பார்.

      மாளவிய பஞ்ச மகா புருஷ யோகம் – சுக்கிரன் ஆட்சி பெற்று தசம கேந்திரத்தில் உள்ளதால் இந்த யோகம் ஏற்படுகிறது. இதனால் ஜாதகர் 100 ஆண்டுகள் வாழ்வார். சகல சௌபாக்கியங்களும் ஏற்படும்.