Search This Blog

History Of Project

ஜோதிடத்தின் மீதான ஆர்வம் மேலோங்க ,நாம் கற்ற கலை பிறரையும் அடையவேண்டும் என்பதே இந்த வலைத்தளத்தை உருவாக்கியதன் நோக்கமாகும்.

எதற்கும் பணம், எதையும் கற்றுக்கொள்ள பணம் செலவழிக்க வேண்டிய இந்தக் காலத்தில், அதுவும் எதுவுமே நடத்தாமல், ஏமாற்றும் தற்காலத்தில், ஆர்வம் மட்டுமே மூலதனமாக கொண்டவரகளுக்காகவே, தொடங்கப்பட்டதாகும், ஜோதிடர்கள் கோள்களின் நகர்வு கொண்டு, இயன்றவரை பலன்களை முன்னரே கூறுகின்றனர்.

ஆயினும் நம்மைப் படைத்த பிரம்மனைத் தவிர வேறு எவராலும்,


இதுதான் நடக்கும் என திட்டவட்டமாக சொல்ல இயலாது என்பது உத்திர காலாமிருதத்தை எழுதிய கவி காளிதாசனின் கூற்று.

ஜோதிடமென்பது எவரும் கரைகாணத ஆழி.அந்த ஆழியை சிறிது சிறிதாகக் கடக்கப் பயன்படும் ஓடமே,இப் பாடம்..

நட்சத்திரங்களின் நடனம்,கோள்களின் கோலாட்டம்,பாவங்களின் பாவ முத்திரைகள் என ரசித்து நலம் பெறுவோம்.

வாழ்க வளமுடன்.

No comments:

Post a Comment