Search This Blog

Wednesday, 6 May 2020

பிறப்பின் இரகசியம் -3

பிறப்பின் இரகசியம் - 3


கரு-ஜாதகத்தில், துவாதசாம்சத்தில் சந்திரன் உள்ள இராசிவரை எண்ணவும், அங்கிருந்து, அந்த எண்ணை, எண்ணி வரும் இராசியோ அல்லது மேஷ இராசியிலிருந்து எண்ண வரும், இராசியோ, பிறப்பு ஜாதக இராசியாக அமையும்.

49 – கரு. லக்னத்தின், நவாம்சம், மகரம் அல்லது கும்பமாகி, கரு லக்னத்தில் சனி இடம் பெற அந்த ஜாதகிக்கு, மூன்று வருடங்களுக்கு, எவ்வித குழந்தைப் பிறப்பும் நிகழாது.

     அதேபோன்று, கரு.இலக்னத்தின் நவாம்சம் கடகம் ஆகி, சந்திரன், கருஇலக்னத்துக்கு 7 ஆம் இடத்தில் இருக்க, 12 வருடங்களுக்கு குழந்தைப்பிறப்பு அவர்களுக்கு இருக்காது.

50 – 51 – கரு இலக்னம் பகல் இராசியில் இருந்தால், பிரசவம் பகலில் ஏற்படும். இரவு இராசியில் இருந்தால், பிரசவம் இரவு நேரத்தில் ஏற்படும். கரு இலக்னம் கடந்த பாகை அளவு, விநாழிகையைக் குறிகாட்டுகிறது.(விநாழிகை = 24 நி. ) இந்த பாகை கடந்த பின் பிறப்பு ஏற்படும்.(சூரிய உதயத்துக்கோ\அஸ்தமனத்துக்கோ) கரு இலக்னத்துக்கு எந்த இராசியில், சம்தாம்ச லக்னம் விழுகிறதோ, அந்த எண்ணிக்கையை. மேஷத்தில் இருந்து எண்ண வரும் இராசியே, பிறப்பு இலக்னமாக அமையும். எனவே, இவ்வாறாக கரு இலக்ன பாகையை வைத்தே, பிறப்பு நேரத்தைக் கணக்கிடலாம்.

52 – திறமை மிக்க ஒரு ஜோதிடன், முதலில் சரியான நேரத்தை அறிந்து ஜாதக கணிதம் செய்ய வேண்டும். அதாவது, கருத்தரித்த, மற்றும் குழந்தை பிறந்த சரியான நேரத்தை அறிந்திருக்க வேண்டும். அதன், பிறகே ஜாதக கணிதமும், பலன் உரைத்தலையும் மேற்கொள்ள வேண்டும்.

53 – 55 – கரு இலக்னம் சிம்மமாகி, அங்கு சூரியன், சந்திரன் இணைந்து இருந்து, செவ்வாய், சனியால் பார்க்கப்பட்டால், பிறக்கும் குழந்தை குருடாகப் பிறக்கும். சூரியனும், சந்திரனும் இலக்னத்தில் இருந்து, சம அளவு, சுப மற்றும் அசுப கிரகங்களால் பார்க்கப்பட்டால், குழந்தையின் கண்களில், பூ விழுந்திருக்கும். அதன் காரணமாக குழந்தை கண் தெரியாததாகப் பிறக்கும். பலமிழந்த சந்திரன் 12 ஆம் இடத்தில் இருந்து, அசுப கிரகத்தால் பார்க்கப்பட, ஜாதகர், இடதுகண்ணை இழந்தவர் என குறிகாட்டப்படுகிறது. இதே, நிலையில் சூரியன் இருக்க, வலது கண்ணை இழந்தவராவார். இதே, நிலையில் இக் கிரகங்கள் சுபரால் பார்க்கப்பட்டால், குறிப்பிடப்பட்ட கண்களில் பிரச்சனைகள் இருக்குமேயன்றி, குருட்டுத் தன்மை இருக்காது. .

56 – கண்டாந்த சந்தியில் ( கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய இராசிகளின் கடைசி 3 பாகையில்) அசுப கிரகங்கள் இருந்து, ரிஷபத்தில் சந்திரன் இருந்து, செவ்வாய், சனி, சூரியன் ஆகிய கிரகங்களால் பார்க்கப்பட்டால், ஜாதகர் ஊமையாகப் பிறப்பார். எனினும், சந்திரன் பலம் மிக்க சுபரால், பார்க்கப்பட்டால், ஜாதகருக்கு பேச்சுத் திறன் தாமதமாக ஏற்படலாம்.

57 – கடகம், விருச்சிகம் மற்றும் மீனத்தின் கடைசி நவாம்சத்தில் அசுபக்கிரகங்கள் இடம்பெற, சந்திரனுக்கு சுப பார்வை ஏற்படவில்லை எனில், ஜாதகர் வடிகட்டிய முட்டாளாக இருப்பார்.

         புதனின் நவாம்சத்தில், சனி அல்லது செவ்வாய் இருக்க, பிறக்கும் பொழுதே அக் குழந்தைக்கு பற்கள் இருக்கும்.

58 – 59 - வித்தியாசமான இரட்டையர் – கருத்தரிக்கும் நேரத்தில், புதன், 5 அல்லது 9 ஆம் இடத்தில் இருந்து, மற்ற கிரகங்கள் எல்லாம் பலம் இழந்து இருக்க, இருதலை, நான்கு கால்கள் மற்றும் நான்கு கைகளைக் கொண்ட விநோத பிறவி அவதாரம் எடுக்கும்.

குள்ளமான பிறவி – மகரம் – கரு லக்னமாகவும், கன்னி நவாம்ச இலக்னமாகவும் இருந்து, இலக்னம், சூரியன். சந்திரன் மற்றும் சனியால் பார்க்கப்பட, ஜாதகர் குள்ளமானவராக பிறப்பார்.

கூன் விழுத்த பிறப்பு – கடகம், இலக்னமாகி, சந்திரன் அதில் இடம் பெற்று, செவ்வாய், சனியால் பார்க்கப்பட்டால், அந்த ஜாதகர் கூன் விழுந்தவராகப் பிறப்பார்.

60 - முடமான கால்களை உடைய பிறப்பு – மீனம் கரு லக்னமாகி, சூரியன். சந்திரன் மற்றும் செவ்வாயால் பார்க்கப்பட, முடவன் பிறப்பான்.

61 – இலக்னத்தின் முதல் திரேகாணத்தில் செவ்வாய் எழுந்து, சூரியன்,சந்திரன் மற்றும் சனி பார்வை பெற்று, மற்ற கிரகங்கள் பலமற்று விளங்க, பிறக்கும் ஜாதகருக்கு, தலையில் பிரச்சனை இருக்கும் அல்லது முட்டாளாக இருப்பார். அதுவே 2 வது திரேகாணமாய் இருந்தால் கைகளில் பிரச்சனை இருக்கும், இதே யோகம் 3 வது திரேகாணம் ஆனால் கால் முடமாய் பிறக்கும்.

62 – மேற் சொல்லப்பட்ட யோகங்கள் அத்தனையுமே, கருத்தரிப்பு ஜாதகம், பிறப்பு ஜாதகம், பிரசன்ன ஜாதகம் ஆகியவற்றுக்கும் பலன் கூற பயன்படுத்தப்படலாம். 

 


Monday, 4 May 2020

பிறப்பின் இரகசியம் -2



பிறப்பின் இரகசியம் -2



14 – குழந்தையின் பாலினம் – 15 -  கருத்தரித்த இலக்னம் ( இனி, இதைக் கரு இலக்னம் எனவே அழைப்போம்.) சூரியன், சந்திரன் மற்றும் குரு ஆகியவை பலம் மிக்கதாக இருக்கவும், இவை, ஒற்றைப்படை இராசிகளில் அமர்ந்து, அவை தங்கள் சுய நவாம்சத்தில், ஒற்றைப்படை இராசிகளில் இருக்கவும், ஆண் மகவை எதிர்பார்க்கலாம். மேற்சொன்ன விஷயங்களில் பெரும்பாலனவை இரட்டைப்படையில் இருக்க பெண் குழந்தையை எதிர்பார்க்கலாம். சூரியன் மற்றும் குரு ஆகியோர் பலம் மிக்கவர்களாக இருந்து, ஒற்றைப்படை இராசியில் இருந்தால் ஆண் மகவும், சந்திரன் மற்றும் செவ்வாய் பலம் மிக்கவர்களாகவும் பெண் இராசிகளில் இருக்கவும் பெண் குழந்தைப் பிறப்பை எதிர்பார்க்கலாம்.
16 – இரட்டைக் குழந்தைகள் – சூரியன் மற்றும் குரு ஆகியோர், தனுசு அல்லது மிதுன இராசிகளில்  புதனின் பார்வையோடு இருக்க இரட்டை ஆண் குழந்தைகள் பிறக்கும். அதுவே, சந்திரன், செவ்வாய் மீனம் மற்றும் கன்னியில் இருந்து, புதனின் பார்வை பெற இரட்டைப் பெண் குழந்தைகள் பிறக்கும்.
17 – 20 இலக்னத்தைத் தவிர மற்ற ஒற்றைப்படை இராசிகளில் சனி இருக்க, ஆண் குழந்தை குறிகாட்டப்படுகிறது.
        கருத்தரிப்பு நேரத்தில், உள்ள கிரகங்களின் பலம், யோகங்கள் ஆகியவற்றைப் பொருத்தே, குழந்தைப் பிறப்பு, ஆணா ? பெண்ணா ? என்பதை நிர்ணயிக்க முடியும். ( கருத்தரிக்கும் இலக்னம் என்பது கருத்தரிக்கும் நேரத்தில் கணிக்கப்படுவதாகும். இதற்கு, உண்மையான பொருள் என்னவெனில், ஆணின் விந்து, பெண்ணின் கருமுட்டையுடன் இணையும் நேரமே, கருத்தரிக்கும் நேரம் எனக் கருதப்படுகிறது. எனவே, ஆண், பெண் புணரும் நேரத்தை, கருத்தரித்தல் நேரமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
        திருநங்கை (அலிப் பிறப்பு) பிறப்பு – சூரிய சந்திரர்களுக்கு இடையேயான நேர் பார்வை, அல்லது புதன், சனி ஆகியோர்க்கு இடையேயான நேரடிப் பார்வை ஏற்படின், அலிப் பிறப்பு குறிகாட்டப்படுகிறது.  
        சூரியன் இரட்டைப்படை இராசிகளில் அல்லது இலக்னம், சந்திரன் ஒற்றைப்படை இராசிகளில் இருந்து, செவ்வாயால் பார்க்கப்பட்டால் திருநங்கை பிறப்பு ஏற்படும். புதன் ஒற்றைப்படை இராசியில் இருந்து, சந்திரன் இரட்டைப்படை இராசியில் இருப்பதுவும், திருநங்கைப் பிறப்புக்குக் காரணமாகிறது.
        இலக்னம், சந்திரன், புதன் ஒற்றைப்படை இராசியில் நிற்க, அவர்களின் நவாம்சம் இரட்டைப்படையில் விழவும், சனி, சுக்கிரனின் பார்வை ஏற்படவும், அது திருநங்கைப் பிறப்பாகிறது. (இப்பேர்பட்ட, அலிப்பிறப்புக்குக் குறிப்பிடப்பட்ட, இணைவு யோகங்கள், மலட்டுத் தன்மைக்கும் காரணமாகிறது.
 21 – 22 – இரட்டையில், ஆண் ஒன்று, பெண் ஒன்றாகப் பிறப்பது. இலக்னமும், சந்திரனும், இரட்டைப்படை இராசிகளில் இருந்து, பலம்மிக்க ஆண் கிரகத்தால் பார்க்கப்படுவது, ஆண் ஒன்று, பெண் ஒன்றாக்க் கருத்தரித்தலைக் குறிகாட்டுகிறது. சந்திரன், சுக்கிரன் இரட்டைப்படை இராசிகளில் இருந்து, பலம் மிக்க, இலக்னம், புதன், மற்றும் குரு ஆகியோர் ஒற்றைப்படை இராசியில் இருக்க அல்லது உபய இராசிகளில் இருக்க, ஆண் ஒன்று, பெண் ஒன்று கருத்தரிப்பதைக் குறிகாட்டுகிறது.
23 – 24 – ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் – கருத்தரிக்கும் நேரத்தில், இலக்னம், மற்றும் அனைத்து கிரகங்களும் உபய இராசியில் இடம் பெற்று, புதனால் பார்க்கப்பட்டு, நவாம்சத்தில் மிதுனத்தில் இடம்பெற, ஆண் குழந்தை 2, பெண் ஒன்றாக மூன்று குழந்தைகளுக்கான பிறப்பை எதிர்பார்க்கலாம். இந்த இணைவுகளோடு, புதனின் நவாம்சம், கன்னியில் விழ, ஆண் ஒன்று, பெண் இரண்டு என, மூன்று குழந்தைகள் பிறக்க வாய்ப்புண்டு எனலாம்.
         புதன், மிதுன நவாம்சம் பெற்று, மிதுனத்தில் உள்ள, இலக்னம் மற்றும் அனத்து கிரகங்களையும் பார்க்க அல்லது அவற்றின் நவாம்சம் மிதுனம் அல்லது, தனுசு ஆக, மூன்று ஆண் குழந்தைகள், ஒரே பிரசவத்தில் பிறக்க வாய்ப்புண்டு.
        புதன், கன்னி நவாம்சம் பெற்று, கன்னியில் உள்ள, இலக்னம் மற்றும் அனத்து கிரகங்களையும் பார்க்க அல்லது அவற்றின் நவாம்சம் கன்னி அல்லது, மீனம் ஆக, மூன்றுபெண் குழந்தைகள், ஒரே பிரசவத்தில் பிறக்க வாய்ப்புண்டு.
       குறிப்பு – சுலோகங்கள் 14 முதல் 26 வரையான கிரக நிலைகள் மற்றும் இலக்னம், கருத்தரிக்கும் நேரத்திற்கு உரிய கணிதம் ஆகும்.
27 – கருத்தரித்தல் பகலில் உண்டானது எனின், சுக்கிரன், சூரியன் முறையே தாய், தந்தையரைக் குறிக்கும். இரவில் எனில், சந்திரன், சனி ஆகியோர் முறையே தாய் தந்தையைக் குறிக்கும். அதே போல் பகலில் கருத்தரித்தால், சந்திரன், தாயின் சகோதரியை அதாவது சித்தியைக் குறிக்கும். சனியோ, தந்தைவழி மாமனையும், இரவில் எனில் சுக்கிரன், சித்தியையும், சூரியன், தந்தை வழி மாமனையும் குறிக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
28 . தந்தைக்கும், தந்தை வழி மாமனுக்கும் குறிகாட்டக் கூடிய கிரகங்கள், இலக்னத்துக்கு, ஒற்றைப்படை இராசியில் இருந்தால், அவர்கள் சிறப்பாக இருக்கிறார்கள் என்பதைக் குறிகாட்டும். அதுவே, இரட்டைப்படை எனில், தாய் மற்றும் தாயின் சகோதரியின் நன்நிலையைக் குறிகாட்டும்.
       இந்த நிலைகள் மாறி இருந்தால், குறிப்பிடப்பட்ட நபர்களுக்கு கஷ்ட நிலைகளைக் காட்டும். உதாரணமாக, பகலில் கருத்தரித்தல் ஏற்பட்டு, சூரியன் இரட்டைப்படையில் இருக்க நேர்ந்தால், அது தந்தைக்குக் கஷ்டங்களையே கொடுக்கும். இதைப் போலவே மற்ற நிலைகளுக்கும் பார்த்துக் கொள்க.  
கரு வளரும் நிலை –
29 – 30 – கருத்தரித்த நாளில் இருந்து முதல் மாதக் கடைசியில் கரு – ஓரளவு, சதைப் பிண்டமாகக் காட்சி அளிக்கும். இரண்டாவது மாதக் கடைசியில் ஓரளவு கடினமான மாமிச உருண்டை வடிவில் இருக்கும். மூன்றாவது மாத இறுதியில், பலவேறு உறுப்புகள் உரு எடுக்கும் நிலையில் இருக்கும். நான்காவது மாதக் கடைசியில், எலும்புகள் உருவாகும். ஐந்தாவது மாதக் கடைசியில், தோல் உருவாகும். ஆறாவது மாதக் கடைசியில் மயிர் வளரும். 7 வது மாதக் கடைசியில் உணர்வுக்கான உறுப்புகள் உருவாகும். 8 வது மாதக் கடைசியில், திரிதோஷம் எனப்படும், கபம், பித்தம், வாதம் மற்றும் பசி உருவாகும். 9 ஆம் மாதக் கடைசியில், முழுஉருவமாக உருவாகி, 10 வது மாதத் தொடக்கத்தில் பூமியில் பிறப்பெடுக்க, வெளியில் வரத் தயாராகும்.
        கருத்தரிப்புக்குப்பின் ஒவ்வொரு மாத்த்தையும் ஆட்சி செய்யும் கிரகங்கள் – 1. சுக்கிரன். 2. செவ்வாய், 3. குரு, 4.சூரியன், 5. சந்திரன், 6. சனி, 7.புதன். 8 கருத்தரித்த இலக்னாதிபதி. 9. சந்திரன், 10. சூரியன் ஆகும். இந்த 10 மாத அதிபதிகள் மூலமாக, கருவறையில், குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் மாற்றங்கள் ஆகியவற்றை நிச்சயிக்கலாம்.
30 – 33 – கருச்சிதைவு –
மேலே குறிப்பிடப்பட்டுள்ள, 10 மாதத்திற்கான கிரகங்கள், தங்களுக்கிடையே ஏற்பட்ட கிரக யுத்தத்தில் தோற்றாலோ, கிரக அஸ்தமனம் ஆனாலோ, நீச மற்றும் பகை வீட்டில் இருந்தாலோ அல்லது மிகையான அசுபத் தாக்கம் பெற்றாலோ, குறுப்பிட்ட கிரகத்தின் மாதத்தில், கருச்சிதைவு ஏற்படும். செவ்வாய் மற்றும் சனி கரு. இலக்னத்தில் நகரும் போதும் அல்லது கோசார சந்திரன் , கரு. இலக்னத்தில், நகர்ந்து, அதை சனி அல்லது செவ்வாய் பார்த்தாலும், கருச்சிதைவு ஏற்படும்.
34 - சுகப் பிரசவம் –
இராசியில் அல்லது கரு. இலக்னத்தில் சுபர் இருக்கவும் அல்லது பார்க்கவும் சுகப் பிரசவம் ஏற்படும். 2, 4, 5, 7, 9 மற்றும் 10 ஆகிய பாவங்களில் சுபர் அமர்ந்தாலும்,    அல்லது 3, 6, 11 ஆகிய பாவங்களில் அசுபர் அமர்ந்தாலும், அல்லது கரு. இலக்னம்\சந்திரன், சூரியனால் பார்க்கப்பட்டாலும் சுகப் பிரசவம் ஏற்படும்.
35 – 37 – கருவுற்ற பெண்ணின் மரணம் –
கருவுற்ற நேரத்தில் சூரிய சந்திரர்கள் வெவ்வேறு, இராசிகளில், பாவ கர்த்தாரியில் இருந்தாலும், அவர்களுக்கு சுபர் திருஷ்டி இல்லாமல் இருந்தாலும், சூரிய, சந்திரர்கள் இணைந்து ஒரே இராசியில் இருந்து, சுபர் பார்வையின்றி, அவர்கள் பாவகர்த்தாரியில் இருந்தாலும், கர்பணிப் பெண் பிரசவத்துக்கு முன்பே இறந்து விடுவாள்.
         இலக்னத்திலும், 7 ஆம் பாவத்திலும் சுபர்கள் பார்வை இன்றி அசுபர் அமர்ந்து இருந்தாலும், பலம் இழந்த சந்திரன் இல்லது சனி இலக்னத்தில் அமர்ந்து, செவ்வாயால் பார்க்கப்பட்டாலும், 12 இல் சூரியனும், 4 இல் செவ்வாயும், பலமிழந்த நிலையில் சந்திரனும், அல்லது சுக்கிரன், சுபர் பார்வை இன்றி பாவகர்த்தாரியில் இருந்தாலும், மேற்படி நிலையே ஏற்படும்.
38 – 40 – தாயும், சேயும் இறப்பு – கரு. இலக்னம் அல்லது சந்திரனுக்கு 4 ஆம் வீட்டில், அசுபர் இருக்கவும், 7 ஆம் வீட்டில் அல்லது இலக்னத்தில் செவ்வாய் அமர்ந்தாலும், தாய், சேய் இறப்பைக் குறிகாட்டும். செவ்வாய் 4 இல், சூரியன் 12 இல், பலமற்ற சந்திரன் இருந்து அசுபர் பார்வை பெறவும், இலக்னத்தில் சூரியன், பலமிழந்த சந்திரன் அல்லது செவ்வாய் இருந்து, 2 மற்றும் 12 ஆம் இடங்களில், சுபர் பார்வை பெறாத, அசுபர் இருந்தாலும், தாய், சேய் மரணம் நிகழும்.
41 – சூரியனும், செவ்வாயும்கிலக்னத்திலும், 7 ஆம் வீட்டிலும், எதிர் எதிரே இருக்க அல்லது இருவரும் இணைந்து இலக்னத்திலோ அல்லது 7 ஆம் வீட்டிலோ அமர, அந்த கர்பிணிப் பெண் ஆயுதத்தால், மரணிப்பாள். 
42- கரு. இலக்னமானது, பலம் மிக்க புதன், குரு, சுக்கிரன் அல்லது சூரியனால் பார்க்கப்பபட, சுக பிரசவம் உறுதியாகும். அந்தந்த மாதத்திற்கான அதிபதிகளின் பலத்தைப் பொறுத்து, குழந்தையின் ஆரோக்கியம், பொது வளர்ச்சி ஆகியவை இருக்கும்.
43 – கருவுற்று, 3 ஆம் மாத அதிபதியின் வர்க்க மேன்மைகளைப் பொறுத்தும், நற்கிரக பார்வைகளைப் பொறுத்தும், கரு. இலக்னத்திலுள்ள கிரகத்தின் பலத்தைப் பொருத்தும், கர்பிணிப் பெண் உண்ணும் உணவு, நொறுக்குத் தீனி, நீராகாரம் ஆகியவற்றின் ருசியானது மாறுபடும் அல்லது மேம்படும்.
44 – கரு. இலக்னம் அல்லது சூரியன் சர இராசியில் இடம்பெற, பிரசவம் 10 மாதத்திலும். ஸ்திர இராசியில் இடம்பெற, 11 ஆம் மாதத்திலும், உபய இராசி எனில் 12 ஆம் மாதத்திலும் பிரசவம் நிகழும் எனலாம். இதே, நிலையையே, இராசியை வைத்துப் பார்க்கும் போதும் நிகழும். 
45 – 47 கரு உருவானபோது கணக்கிடப்படும் இராசிக் கட்டத்தின், ஷட்வர்க்க கணிதத்தின் மூலமாக பிரசவ நேரத்தை அனுமானிக்கலாம். கருவுருவான நட்சத்திரத்தில் இருந்து 10 வது நட்சத்திரத்தில் குழந்தைப் பிறப்பை எதிர்பார்க்கலாம் என அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும் சில அறிஞர்கள், இராசிக்கோ, கரு. இலக்னத்திக்கோ, 7 ஆம் இடம், பிறக்கும் குழந்தையின் பிறப்பு இலக்னமாக அமையும் எனக் குறிப்பிடுகின்றனர். ஆயினும் கீழ்க்கண்ட விதிகளை அனைத்து அறிஞர்களுமே ஒத்துக் கொள்கின்றனர் எனலாம்.

பிறப்பின் இரகசியங்கள்







அதான அத்தியாயம்.
62 – ஸ்லோகங்கள்.
 1.        இப் பிரபஞ்சத்தில், மனித இனமும், மிருக சாம்ராஜ்யமும், உடலுறவு எனும் புனித உறவால், உருவாக்கப்பட்டது. எனவே, கருத்தரிக்கும் நேரத்தையும், கிரக நிலைகளையும், (கிரகணங்கள், கிரகயுத்தங்கள், உச்ச\நீச்ச நிலைகள், கிரக அஸ்தமனங்கள் ஆகியவையும்) கணித்து ஜாதக கணிதம் செய்வது கருத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. அதாவது, கருத்தரித்த காலம் முதல், உலகில் நாம் அவதரிக்கும், ஜனன கால இலக்னத்தைக் கணிக்கும் வரை, மேற்சொன்னவற்றை ஒரு ஜோதிடர் கருத்தில் கொள்ளவேண்டும். மனித, மிருகங்கள் ஆகியவற்றின் பிறப்பின் போது, துல்லியமாகக் கணக்கிடும் இராசியின் பலம், கிரக பலம், பாவ பலம் (இராசியின் பயன்கள், கிரக மற்றும் வீட்டின் பலன்கள்) ஆகியவற்றைப் பற்றிய கேள்வி எழுகிறது. கருத்தரிக்கும் நேரம் நாம் அறிய முடிவதில்லை. இதற்காக, நாம் பிரசன்ன ஜாதகம், அல்லது பிறப்பு ஜாதக இலக்னம் மூலமாக அறிய முயற்சிக்க வேண்டும் என பண்டைய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிறந்த நாளில் இருந்து 10 மாதங்கள் பின்னோக்கிச் சென்று, கணக்கிட கீழ்கண்ட ஸ்லோகங்கள் நமக்கு உதவிகரமாக இருக்கும்.
2-3 – பெண்களுக்கு, அவர்கள் பூப்பெய்தும் காலத்திற்குப் பின்னரே அவர்கள் கருத் தரித்தலுக்கு உரியவராகிறார்கள்.  இந்த நிகழ்வு அவர்களின் ஜனன ஜாதகத்தில், இலக்னத்தில் இருந்து 1, 2, 3, 5 ,7, 8, 9 மற்றும் 12 ஆம் இடங்களில் கோசார செவ்வாய் இருந்து, சந்திரன் அவனைப் பார்க்கும் போதே நிகழ்கிறது. சந்திரன், நீரையும், செவ்வாய், நெருப்பையும் குறிப்பதோடு, அதன் காரணமாக, இரத்தம் மற்றும் பித்த நீர்   உடலில், உருவாக்கப்படுகிறது. சந்திரன் மற்றும் செவ்வாயின் தொடர்பே பெண்ணின் பூப்பெய்தலுக்குக் காரணமாகிறது. செவ்வாய், மேஷத்திற்கு அதிபதியாகி, பிட்யூட்ரி கிளாண்ட்ஸையும், விருச்சிகம், கருமுட்டையையும் , குறிகாட்டுகின்றன. 
4-7 -   கருவுறுதலுக்கு கரு முட்டை காரணம் ஆகிறது. சந்திரன் உபஜெய ஸ்தானங்களில் (3, 6, 10, 11) இருக்கும் போது, கருமுட்டைக்கு, கருத்தரித்தலை உருவாக்கும் சக்தி இருப்பதில்லை. எனினும், உபஜெய ஸ்தானங்களில் சந்திரன் இருந்து, குருவால் பார்க்கப்பட்டாலோ அல்லது நட்பு வீட்டில், குறிப்பாக சுக்கிரன் வீட்டில் இருந்தாலும், ஒரு பெண், ஆணுடன் பாலியல் புணர்ச்சியில் ஈடுபடுவாள். இத்தகைய சந்திரனை, செவ்வாய் பார்த்தால், அவள் ஓர் ஒழுக்கம் கெட்டவனை, விபசாரம் செய்பவனை, பிறன் மனை நயப்பவனைப் புணர்வாள். சூரியனால் பார்க்கப்பட்டால் அரசனையும், சனியால் பார்க்கப்பட்டால் வேலைக்காரனையும் புணர்வாள். சுப கிரக பார்வையின்றி, அசுபர் மட்டும் பார்க்க என்னாகும் ? - என நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். சந்திரனின் மீது அநேக அசுபக் கிரகங்ளின் பார்வை ஏற்பட ஜாதகி விபசாரி ஆவாள்.
         இதில், இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. ஒரு சில அறிஞர்கள், சுலோகம் – 7 ,சிறப்பாக, பெண் முதல் முதலாக பூப்பெய்தும் காலத்திற்கே பொருந்தும் எனக் கருத்துக் கொண்டுள்ளனர். மேற் சொன்ன பார்வைகள், அவள் பிற்காலத்தில் எத்தகைய கணவனை அடைவாள் என்பதைக் குறிப்பதாகவும், குறிப்பிடுகின்றனர். ஒரு பெண் பூப்பெய்தும் நேரத்தில் கணக்கிடப்படும் ஜாதகம், இந்திய ஜோதிடத்தில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில், அது ஜாதகியின் பிற்கால வாழ்க்கை, முக்கியமாக பாலுணர்வு வாழ்க்கையை வெளிப்படுத்துவதாக அமையும் எனத் தெளிவு படுத்துகிறது. பூப்பெய்திய நேரத்திற்கு உரிய, நட்சத்திரம், திதி, மாதம், கிழமை ஆகியவையும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
8 – களத்திர பாவ நிலை, எவ்விதமான புணர்வு இன்பத்தை அனுபவிக்கிறார்கள் என்பதைக் குறிகாட்டும்.
9 – அந்த நேரத்தில் களத்திர பாவத்தில், அசுபர் தொடர்பு ஏற்பட தம்பதிகளிடையே, மகிழ்ச்சியற்ற மனநிலை உருவாகி, திருப்தியற்ற நிலை உருவாகும். இதுவே, 7 ஆம் இடத்துடன், சுபர்கள் தொடர்பு ஏற்பட, ஒத்த மன நிலையில், நகைச்சுவை, சிரிப்பு என, சந்தோஷமான நிலையில் புணர்சியில் ஈடுபட்டு மகிழ்வர்.
10. – கர்மா என்ற முன்வினையின், இன்ப துன்பங்களை ஒருவரின் ஆத்மா இப் பிறவியில், அனுபவிக்க, இந்த உடலுறவு மூலமாக, ஆணின் விந்தணு, பெண்ணின் கருப்பையை அடைந்து கருத்தரிக்கிறது.
11 – 12 – எப்போது கருத்தரித்தல் ஏற்படுகிறது ? புணரும் காலத்தில் –
அ). ஆணின் ஜாதகத்தில், சூரியன் மற்றும் சுக்கிரன், தங்களது சொந்த நவாம்ச வீட்டில் இருக்கவோ, மற்றும் லக்னத்தில் இருந்தோ அல்லது சந்திரா இலக்னத்தில் இருந்தோ, உப ஜெய ஸ்தானங்களில் இருக்க வேண்டும் ( சில அறிஞர்கள், சுக்கிரன், ஆண் நவாம்சமான துலா நவாம்சத்தில் இருக்க வேண்டும் எனக் கருத்துத் தெரிவிக்கின்றனர்.) அல்லது
ஆ). பெண்ணின் ஜாதகத்தில், சந்திரன் மற்றும் செவ்வாய், தங்களது சொந்த நவாம்ச வீட்டில் இருக்கவோ, மற்றும் லக்னத்தில் இருந்தோ அல்லது சந்திரா இலக்னத்தில் இருந்தோ, உப ஜெய ஸ்தானங்களில் இருக்க வேண்டும்.
இ). சூரியன், சந்திரன், செவ்வாய் மற்றும் சுக்கிரன் ஆகியவை தங்களது சொந்த நவாம்சத்தில் இருக்கவும் மற்றும் கருத்தரித்த போதைய இலக்னத்துக்கு உபஜெய ஸ்தானங்களில் இருக்கவும் அல்லது பலம் மிக்க குரு, கருத்தரிப்பு இலக்னத்திலோ, 5 அல்லது 9 ஆம் வீடுகளில் இருக்கவும் கருத்தரித்தல் நிகழ்கிறது.
13 – உடலுறவின் போது உள்ள, தம்பதிகளின், மகிழ்ச்சியான மன நிலை, நல்ல ஆரோக்கியம், ஆகியவை, பிறக்கப் போகும் குழந்தையின் தன்மையை நிர்ணயிக்கும் என்றால் மிகையாகாது. மேலும், புணரும் சமயத்தில் தம்பதிகளின் திரிதோஷங்களான – வாதம், பித்தம், கபம் ஆகிய நிலைகள், பிறக்கப் போகும், குழந்தையின் மீது பிரதிபலிக்கும்.

Wednesday, 8 April 2020

நான்காம் பாவம்






பாவங்களில் கிரகம் தரும் பலன்கள்.


நான்காம் பாவம்.
         நான்காம் பாவத்திலுள்ள கிரகங்கள்-
         சந்தோஷ சாம்ராஜ்யம் நான்காம் வீடாகும். சாத்திரங்கள் இதை சுகஸ்தானம் என விவரிக்கிறது. நாம் அனைவரும், வாழ்க்கையில் சந்தோஷத்தைத் தேடி அலைவதால், இந்த வீடு நமது நடவடிக்கைகளை, செயல்களை எது இயக்குகிறது என்பதை நமக்குக் காட்டுகிறது. இந்த வீடு கேந்திரமாக இருப்பதால், நமது செயல்களின் மீது பலமான தாக்கத்தை உடைத்தாய் இருக்கிறது, கேந்திரம் என்பது விஷ்ணு ஸ்தானம் என்றும், கோணம் என்பது லட்சுமி வீடு என்றும் நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதில் முதலாவது நமது செயல்களையும், இரண்டாவது, அதில் நமக்குக் கிடைக்கும் முடிவைக் காட்டும் வீடாகும்.
         இந்த வீட்டில் அசுபர் இடம் பெற்றால், அந்த நபர் தனது சொந்த வீட்டிலேயே சந்தோஷத்தை இழந்து, வெளிநாட்டுக்கு சென்று குடியிருந்து வாழ்க்கை நடத்தும்படி செய்து விடுகிறது. ஆயின், சுபர் அவரை தனது சொந்த வீட்டிலேயே வாழ வைத்து, சொந்த நாட்டிலேயே வாழவைத்து சந்தோஷத்தின் எல்லைக்கே அவரை இட்டுச் செல்கிறது.
         நான்காம் வீடு சந்தோஷத்தைத் தருவதோடு, அசையா சொத்துக்களான நிலம், வீடு ஆகியவற்றையும் அசையும் சொத்துக்களான வண்டி, வாகன வசதிகளையும் அளிக்கவல்லது. நான்காம் வீட்டில் கௌரவமாக இடம் பெறும் சுபக்கிரகங்களின் தாக்கத்தால், நமக்கு மேற்சொன்னவை நல்ல முறையில் சித்திக்கிறது. இத்தோடு அதிக ஆடம்பரமான வாழ்க்கையும் அளிக்கிறது.. ஆயினும் இந்த வீடு பாதிப்பு அடைந்தால், ஜாதகர் சந்தோஷங்களையும், சுகத்தையும் இழக்கிறார்.
         தாயின் சுகத்தை காண இந்த வீடு பார்க்கப்படுகிறது. தாய்க்கு நோய்களால் ஒரு கஷ்டமும் இல்லாமல், நல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமேயானால், இந்த வீடு சுபரின் தாக்கத்தைப் பெறவேண்டும். அவ்வாறு இல்லையெனில் தாயின் ஆரோக்கியக் கேட்டை அனுமானிக்கலாம்.
         இந்த வீடு இதயத்தை ஆள்கிறது. இதன் பாதிப்பு இதயத்தில் ஏற்படும் தொல்லைகளுக்குக் காரணமாகிறது.. எனினும், இதயத்தில் பிரச்சனை என தீர்மானிக்கும் முன், அதன் காரகன் சூரியனின் நிலையில் பாதிப்பு உள்ளதா ?- என்பதைப் பார்க்கவேண்டும்.
         ‘அர்க்கலா’ தோற்றப்படி, இந்த வீடு 3 ஆம் வீட்டுக்கு 2 ஆம் வீடு ‘தன அர்க்கலா’, 6 ஆம் வீடு ‘இலாப அர்க்கலா’ வாகி, ‘லக்னம் சுக அர்க்கலா’ ஆகிறது. எனவே, இந்த வீடுகளில் இருக்கும் கிரகங்களின் தாக்கமானது உடன் பிறப்புகளின் முன்னேற்றத்திலும் (3), சேவை மற்றும் எதிரிகள் (6) ஜாதகரின் ஆரோக்கியம் (1) ஆகியவற்றில் பாதிப்பை அல்லது முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறது.
சூரியன் –
அனுகூலமான பலன்கள் – நட்புறவு இருக்கும். மென்மையான இதயம் இருக்கும். குரலிசை, வாத்திய இசையில் ஆர்வம் இருக்கும்.

அனுகூலமற்ற பலன்கள் - சந்தோஷக் குறைவு, மனக் கஷ்டங்கள் ஏற்படும். ஓய்வின்மை, நண்பர்கள் அல்லது உறவினர் குறைபாடு, இவர்களால் ஏற்படும் தொல்லைகள். தந்தை வழி சொத்துகள் இழப்பு ஏற்படும். செல்வமில்லாத நிலை, வாகனம் இல்லாத நிலை ஆகியவை  ஏற்படுதல், வீட்டைவிட்டு வெளியேறி தூரமான இடத்தில் வாழ்தல். தாய்க்கும், இதயத்துக்கும் ஏற்படும் கஷ்டங்கள் ஆகியவை ஏற்படும்.
சந்திரன் –
அனுகூலமான பலன்கள் – சந்தோஷம், திருப்திகரம், ஆடம்பரத்தில் விருப்பம், காமம், பெண்களின் சவகாசத்தில் விருப்பம், தியாகம் ஆகியவை ஏற்படும். நல்ல நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இருப்பர். உயர்ந்த பதவி மற்றும் நிலைகளை அடைவார்கள்.  தனது சொந்த ஜனக் கூட்டத்திற்கு தலைவனாவார்கள். சிறந்த மதிப்பு, மரியாதை, எல்லா மக்களாலும் விரும்பப்பட்டு, நேசிக்கப்படுவர். சிறந்த வீடு அமையும். வண்டி வாகன வசதிகளை அனுபவிப்பர். நீர் சம்பந்தப்பட்ட வணிகம் செய்வர்.
அனுகூலமற்ற பலன்கள் – பாலாரிஷ்டம் மற்றும் தாயின் உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும்.
செவ்வாய் –
அனுகூல பலன்கள் – (சுபராகி, சுபரின் தாக்கம் ஏற்படும் பட்சத்தில்) நல் ஆரோக்கியம் ஏற்படும். சொந்த வாகனங்கள் மற்றும் நிலபுலன்களை உடையவராய் இருப்பர். தாய் நீண்ட ஆயுளை உடையவராய் இருப்பார். அரசர் \ ஆட்சியாளர் மூலமாக நிலம் மற்றும் ஆடை ஆபரணங்கள் அன்பளிப்பாகக் கிடைத்தல்.
அனுகூலமற்ற பலன்கள் – ஓய்வற்றவராய் இருப்பார். குடும்பத்தில் கஷ்ட நிலை ஏற்படும். இல்லறத்தில் குழப்பங்கள் மற்றும் தொல்லைகள் எழலாம் (செவ்வாய் தோஷம் ஏற்பட) செவ்வாய் மிகவும் பாதிக்கப்படும் நிலையில், தந்தை சீக்கிரம் மரணம் அடைவார். தாயின் ஆரோக்கியத்தில் பாதிப்புகள், மரணமடைதல் ஆகியவை நிகழும். நிலமற்றவராய் இருப்பார். பாழடைந்த வீட்டில் வசிக்க நேரும். ஏழ்மையில் வாடுவதோடு, நண்பர்கள், சொந்த பந்தங்களோடு பகை ஏற்படும். நண்பர்கள் இல்லாமை. சொந்த இடத்தில் இருந்து விலகிச் சென்று வாழ்தல். வாகனம் மற்றும் நிலபுலன்கள் இல்லாமை ஆகியவை ஏற்படும்.
புதன் –
அனுகூலமான பலன்கள் – இனிமையான பேச்சிருக்கும். எப்போதும் ஏதாவது வேலையை, சுறுசுறுப்பாக செய்து கொண்டிருப்பார். பொறுமை உள்ளவர். பெரிய கண்களை உடையவர். பெற்றோர்களால் சந்தோஷமடைவார். சந்தோஷமானவர். அனைத்தையும் கற்றறிந்தவர். முகஸ்துதி செய்பவராக இருப்பார். நிலபுலன்கள் மற்றும் வாகன வசதியுடன் செல்வந்தராகத் திகழ்வார். மிடுக்காக நல்ல ஆடைகளை அணிவார். புத்திசாலித்தனம் மிக்க இவர், நண்பர்களோடு மகிழ்ச்சியாக இருப்பார். பல கலைகளிலும் ஆர்வமுள்ளவராக இருப்பார்.
அனுகூலமற்ற பலன்கள் – (பாதிக்கப்பட்டால் மட்டுமே) நிலபுலன்கள், வண்டி, வாகனங்கள் இல்லாமலிருக்கும். உறவுகளுக்குள் கசப்பு நிலவும். கபடு நிறைந்தவராக இருப்பார். கேள்விக்குரித்தான செல்வ நிலை இருக்கும். வம்சாவழி சொத்துக்களில் இழப்பு ஏற்படும் அல்லது அதை அடையமுடியாதபடி ஏமாற்றப்படுவர்.
குரு –
அனுகூலமான பலன்கள் – சந்தோஷம், திருப்தி, புத்திசாலித்தனம், மிகுந்த அறிவு கூர்மை ஆகியவை இருக்கும். நன்னடத்தை, தூய உள்ளம் உடையவராக இருப்பார். நிலபுலன், நல்லவீடு மற்றும வாகன வசதி ஆகியவை அமையும். தாய் நல் ஆரோக்கியத்துடன் வாழ்வார். நல்ல நண்பர்கள் அமைவர். மனைவி, மக்கள் மூலமாக சந்தோஷமான நிலை உருவாகும். செல்வந்தராக இருப்பார். ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வார். எதிரிகளை வெல்வார். மத விழாக்களில் பங்கேற்பார். எதிலும் வெற்றி அடையவே ஆசைப்படுவார். அரசர் \ அரசாங்க அனுகூலம் உண்டு. கருணை உண்டு. ஜாதி, ஜனத்தால் மதிக்கப்படுவார்.
அனுகூலமற்ற பலன்கள் – திருப்தியற்ற மன நிலை இருக்கும். நிலபுலன் மற்றும் வாகன வசதி இருக்காது. தாயின் இழப்பு ஏற்படும். உறவினருக்குள் மனக் கசப்பு உருவாகும்.
சுக்கிரன் –
 அனுகூலமான பலன்கள் – அழகானவராய் இருப்பார். புத்திகூர்மை இருக்கும். சந்தோஷமாக காலத்தைக் கழிப்பார். சகோதரர்கள் மூலமாக மகிழ்ச்சியாக இருப்பார். நல்ல குணம், மன்னிக்கும் குணம் ஆகியவை இருக்கும். வாகன சுகத்தால் மகிழ்ச்சி நிரம்பி வழியும். தாய்க்கு நல் ஆரோக்கியம் இருக்கும். அவரை நன்றாக கவனித்துக் கொள்வர். நிலம், சொத்துகள், வீடுகள் ஆகியவற்றின் மூலமாக மிழ்ச்சி அடைவார்கள். நல்ல ஆபரணங்களும், ஆடைகளும் நிறைந்திருக்கும். குலத் தலைவராக இருப்பார். தொண்டர்களிடமிருந்து அதிக அன்பளிப்புகளைப் பெறுவார்.
அனுகூலமற்ற பலன்கள் – நிலம் மற்றும் வாகனம் இல்லாதிருப்பார். தாய்க்கு வெந்துயர் ஏற்படலாம். பிற பெண்களுடன் தாகாத உறவு இருக்கும்.
சனி –
அனுகூலமான பலன்கள் – (சுபர் தாக்கத்தில், பலம்மிக்க சனியாக இருந்தால் மட்டுமே) அன்னையின் மூலமாக ஆனந்தம் பெருகும். தனது ஜாதி மக்களால் போற்றப்படுவார். தலைமை பதவிகளை ஏற்றுக் கொள்வார்.
அனுகூலமற்ற பலன்கள் –
சோம்பேறியாய் இருப்பார். தந்தைவழி சொத்துகள் இல்லாதிருக்கும். மோசமான குணம் இருக்கும். மோசமான கூட்டளிகள் அமைவர். தாய்க்கு ஆரோக்கியமற்ற நிலை இருக்கும். தாயை இழக்க நேரிடலாம். தாய்க்கு சந்தோஷமற்ற நிலை மற்றும் இன்னல்கள் இருக்கும். கஷ்டமான காலங்களாய்  இருக்கும். பலாரிஷ்டம் ஏற்படும். வீடு, வாகனங்களால் சந்தோஷ மற்ற நிலை இருக்கும். குடும்ப கஷ்டங்கள் இருக்கும். காதலில் பிரிவு ஏற்படும்.
இதுவரை, நான்கு பாவகங்களுக்கான பலன்களைப் பார்த்தோம். ஐந்தாம் பாவத்திற்கான பலன்களை அடுத்த மாத இதழில் பார்ப்போமா நண்பர்களே ! நன்றி. வாழ்க வளமுடன்.

Saturday, 4 April 2020



கிரக இணைவுகளும், இயற்கைப் பேரிடர்களும்



1347 – 1351 ஐரோப்பாவில் பிளேக் நோயால் இறப்பு = 200 எம். 1எம் = 10 லட்சம்.
மார்ச்-15, 1347 (Mar 15 1347)-குரு+புளுட்டோ.-மேஷம் 13 பாகையில்.
ஏப்ரல் – 12, 1350 (Apr 12 1350) –சனி+புளுட்டோ – மேஷம் 1 பாகையில்

1520 இல் (~ 56M Deaths) – சின்னம்மை நோயால் மெக்ஸிகோவில் இறப்பு 56 எம்.
Pluto In Capricorn Decan 1 மகரத்தில் புளுட்டோ.
Saturn in Capricorn Decan 3 மகரத்தில் சனி.

மார்ச்-19, ஜூன் – 11 – டிசம்பர் – 17, 1520 -  (Mar 19, Jun 11Rx, Dec 17 1520) கும்பம் 2 பாகையில் சனி
 ரிஷபத்தில் யுரேனஸ்

1918-1919 ஆம் வருடத்தில் ~( 50M Deaths)  -  ஸ்பேனிஷில் ப்ஃளுவால் 50 எம் - இறப்பு
-கடகம் 6 பாகையில், குரு+புளுட்டோ.

கி.மு. 541-542 ~ வருடத்தில் (40M(?) Deaths) ப்ளேக்-ஜஸ்டினின்
Pluto in Capricorn Decan 2  மகரத்தில் புளுட்டோ
10 பாகையில் குருவுக்கு எதிராக சனி.ரிஷபம்\விருச்சிகம்.

1981 ஆம் வருடம் முதல் அதுநாள்வரை, எயிட்ஸ் காரணமாக 30 எம் மரணம்.
 24 ஜூலை 1981 இல் துலாத்தில் 4 பாகையில் குரு+சனி.
 துலாம் 24 பாகையில் குரு + புளுட்டோ.

-துலாம் 24 பாகையில் 1982 நவ 7 இல்.சனி + புளுட்டோ.

COVID-19 Dec 2019 to present ~ (?) Deaths டிசம்பர் 2019 இறப்புகள் ?
ஜனவரி – 12, 2020 - சனி + புளுட்டோ இணைவு - 22 பாகை மகரம் - 
குரு+புளுட்டோ 4-4-2020, 30 ஜூன் 2020 மற்றும் 12-11-2020.



 (Dec 20 2020)=?+?+?+?=?... குரு + சனி 20 - 12 – 2020 - ??????????.






மாறியது உலகம், மரணக் கிணறாக !



எதிர்பாராதவிதமாக, ஓர் உலகில் துயின்று,
மற்றோர் உலகில் விழித்தெழுகிறோம்.
டிஸ்னி லாண்டில் ஒரு மேஜிக்கும் இல்லை,
பாரீஸ் இனியோர் காதல் தேசமும் இல்லை,
திடீரேன, நியூயார்க்கில் பலரும் தூங்குகின்றனர்.
சீனாவின் பெருஞ்சுவர் இனியொருபோதும் நினைவுக் கோட்டையல்ல,
திடீரென, அணைப்பும், முத்தங்களும் ஆயுதங்களாக மாறிவிட்டன,
காதலியைக் கைப்பிடித்து, பூங்காவில் நடப்பதும், சட்டவிரோதமானது,
திடீரென, வயதான பெற்றோர்களைப் பார்ப்பதும்,
தாத்தா பாட்டிகளைப் பேணுவதும், நடிப்பானது,
திடீரென, நமது நாட்டில் துப்பாக்கிகளும், குண்டுகளும்,
அணு ஆயுதங்களும், பீரங்கிகளும் தூசுதட்டும்படியானது,
ஊரடங்கு அனைவரையும் வீட்டுச்சிறையில் வைத்தது,
உயிர் முன், பணமும் வெறும் காகிதமானது,
அது கொண்டு, காதருந்த ஊசியும் வாங்க இயலாது,
எவருக்கு, எவரால், எப்போது மரணம் என்பது,
கொரோனா எனும் கொடிய நோய் தந்த பரிசானது,
அவன் மட்டுமே அனைத்து சக்திகளையும் உடையவன்,
எல்லாம் அவன் செயல் என்பதை, உணரவைத்தானே, இறைவன்.
அவன் ஒருவன் மட்டுமே, அனைத்தும் அறிந்தவன்.
அவனருளாலே, அனைத்து இன்னல்களும், மின்னல் போல் மறைவதாக.


Saturday, 4 January 2020

Sani peyarchi palan 2020 to 2023 Meenam | சனி பெயர்ச்சி மீன ராசி பலன் 2020

Sani peyarchi palan 2020 to 2023 kumbam | சனி பெயர்ச்சி கும்பம் ராசி பல...

Sani peyarchi palan 2020 to 2023 Kanni | சனி பெயர்ச்சி கன்னி ராசி பலன் ...

Sani peyarchi palan 2020 to 2023 Magaram | சனி பெயர்ச்சி மகர ராசி பலன் ...

Sani peyarchi palan 2020 to 2023 danusu | சனி பெயர்ச்சி தனுசு ராசி பலன்...

Sani peyarchi palan 2020 to 2023 Viruchigam | சனி பெயர்ச்சி விருச்சிகம்...

Sani peyarchi palan 2020 to 2023 thulam | சனி பெயர்ச்சி துலாம் ராசி பலன...

Sani peyarchi palan 2020 to 2023 simmam | சனி பெயர்ச்சி சிம்ம ராசி பலன்...

Sani peyarchi palan 2020 to 2023 Kadagam | சனி பெயர்ச்சி கடக ராசி பலன் ...

Sani peyarchi palan 2020 to 2023 Mithunam | சனி பெயர்ச்சி மிதுன ராசி பல...

Sani peyarchi palan 2020 to 2023 rishabam | சனி பெயர்ச்சி ரிஷப ராசி பலன...