Search This Blog

Monday 7 January 2013

சக்திமிக்க தனயோகங்கள்

சக்திமிக்க தனயோகங்கள்
      இவ்   யோகங்கள்   ஜாதகரை,    எவரும்   எட்டமுடியாத உச்சத்திற்குக்    கொண்டு   செல்லும்.    அவர்   ஏழைக் குடும்பத்தில் பிறந்தவராக இருந்தாலும்,அவரை செல்வநிலையில் உயர்த்தியும் புகழின் உச்சிக்கும் இட்டுச்செல்லும்.



          மிகச்சிறந்த தன யோகமானது, 5 மிடம் மற்றும் 9 மிடம்  தொடர்புகாரணமாக அமைவதேயாம்.மேலும், 2 ம் அதிபதியை 9 ம்             அதிபதி பார்க்கும் போதும் அல்லது  9 ம் அதிபதி,          அல்லது  5 அல்லது  9 ல் இருந்தாலும் 5 மற்றும்   9 ம் அதிபதிகள்  இருவரும் நவாம்சத்தில் உச்சமடைந்திருந்தாலும் மேற் சொன்ன தனயோகம் ஏற்படுகிறது. இப்பாவங்கள் லக்னத்திலிருந்தோ,சந்திரராசியிலிருந் தோ கணக்கிடப்பட வேண்டும்.

          அடுத்ததாக,6  ம் அதிபதி மற்றும் பத்தாம் அதிபதிகளின்                                எவ்விதத்திலான   இணைவும் 9 ம் அதிபதியின் 2 ம் அதிபதியின் மீதான  பார்வையும்  மற்றும் 6, 9,  2  அதிபதிகளின், பாவங்களின் தொடர்பும், அவர்களின்  சேவை  மற்றும் உத்தியோகத்தின் மூல மான, முன்னேற்றங்களின்   காரணமாக   செல்வச் சேர்க்கையும் ஏற்படுகிறது. இந்த யொகத்தின் காரணமாக, ஜாதகருக்கு மதிப்பும்,
       


மரியாதையும்,புகழையும், அதிக செல்வத்தையும், நீண்ட ஆயுளை யும்,கரும்புள்ளிகளற்ற நற்குணத்தையும், புத்திசாலித்தனத்தையும், அனைவரிடமும் நன்கு பழகும் தன்மையையும் அதன காரணமாக மக்கள்  தலைவராகும் தகுதியையும், கலைகளிலும், விஞ்ஞானத் திலும் தேர்ச்சியையும், ஆடம்பரம்  மிக்கப் பெரிய வாகனங்களை யும்,அரண்மணை போன்ற அழகிய வசிப்பிடத்தையும்,அரச மரியா தையையும், வெகுமதியையும், அதிகாரத்தையும்  அள்ளி வழங்கு கிறது. உபஜெய ஸ்தானங்களான 3,6,10,11 ல், 9 ம்அதிபதி இருந்து, சுபரால்  பார்க்கப்பட்டு,  அல்லது    9  ம் அதிபதி 9 ம் இடத்துக்குத் திரிகோணத்தில்  இடம்பெற்று,  2, 9, 11  ம் அதிபதிகள் இணைந்து,                                                                     அனுகூலமான வீட்டிலிருக்க, ஜாதகர், செல்வந்தராகிறார். ஜாதகத் தில் இயற்கை சுபர்கள்,திரிகோணத்தில் இருந்து, அதாவது சுபகிரக மொன்று 9 மிடத்தில் இருந்து அஸ்தமனமாகாத, பாதிப்படையாத நட்பு கிரகத்தால் பார்க்கப்பட்டால், எல்லாவிதத்திலும் அதிர்ஷ்டசா லியாக,எல்லா வளங்களும் பெற்று,நல்வாழ்க்கை வாழ்கிறார்.

          ஒருவர் ஜாதகத்தில் அசுபகிரகங்கள்,கேந்திரத்திலிருக்க,
அவரை,  ல்  இருக்கும், அஸ்தமனமாகத, பாதிப்படையாத,சக்தி
மிக்க,சுபரான நட்புகிரகம் பார்க்க மிகப் பெரிய செல்வந்தராகிறார்.
மீன  லக்கினமாகி, 11 ம் அதிபதி சனி 11 ல் இடம்பெற்று சுபக்கிரக
பார்வை பெற,தடையில்லாது,சனி திசையில் செல்வம் கொட்டோ
கொட்டென்று கொட்டுகிறது.   அதெபோல்,   2, 9, 11 ம் இடங்களில் சுபர்  இருக்க  அல்லது  ஒரு  உச்ச  கிரகம்,மேற்படி இடங்களிலி ருந்து, நட்புமிக்க  சுபரால்,காரகாம்ச லக்னத்திலிருந்து பார்க்கப்பட
அளவற்ற செல்வம் பெற்ற அதிர்ஷ்டசாலியாகிறார்,ஜாதகர்.

          இராசியில் அதிக  பாகையைக்    கொண்டுள்ள கிரகமே ஆத்மகாரகராவார்.இந்த ஆத்மகாரக கிரகத்தின் நவாம்ச நிலையே காரகாம்ச லக்னமாகும்.

          காரகாம்சத்திலிருந்து.சுக்கிரன் 4 ம் அதிபதியோடு   4 ல் இருக்க,அவர்களை  நட்பு கிரகம் பார்க்க  ஆடம்பர வாகனங்களும், அதிக செல்வங்களை யுடையவராகவும்  இருப்பார். ஆரூடலக்னத் தில் 2,9,11 ம்அதிபதிகள் இருக்க,ஒருவர் மிகப்பெரிய செல்வந்தராக
ஆகிவிடுவார்.

                                    --- இளசை விஜயன்


ஜோதிட ப்ரவீணா. எஸ் விஜயநரசிம்மன்.
ஆதித்யா ஜோதிட ஆய்வு மையம்,
எம் 4 / 118 – த.வீ.வ.வா.குடியிருப்பு,
பகுதி 6, கூடல்புதூர்,
மதுரை -- 625 017
அலைபேசி எண் 9789101742.









ஆணா? பெண்ணா ? திருநங்கையா ?


         இலக்னம்,   சூரியன்,   குரு    மற்றும்    சந்திரன் ஆகியவை ஒற்றைப்படை    இராசியிலிலும்,       நவாம்சத்திலும் ஒற்றைப்படை இராசியிலும்    இருக்க,     அது    ஆண்    மகவைக் குறிக்கும். இவை யனைத்தும்,    இராசியிலும்,     நவாம்சத்திலும்         இரட்டைப்படை இராசிகளில் இடம்பெற,அது பெண் குழந்தையைக் குறிக்கும்.

அலி பிறப்புக்கான, ஆறு கிரக நிலைகள் :-

1. சூரிய,சந்திர பரஸ்பரபார்வை புரியவும்,
2. சனி,செவ்வாய் எதிர் எதிர் இராசியிலிருக்கவும்,
3. இரட்டைப்படை இராசியில் சூரியன் இருக்க,எதிர் இராசியில்
  செவ்வாய் அல்லது சூரியன்,இரட்டைப்படை இராசியில் இருந்து,
  எந்த இராசியிலிருந்தேனும்,செவ்வாய் பார்க்கவும்.
4 சந்திரனும்,இலக்னமும் ஒற்றைபடை இராசியிலிருக்க, செவ்
  வாய் பார்க்கவும்.
5. சந்திரன்,இரட்டைப்படையிலும்,புதன் ஒற்றைப்படை இராசியிலி 
  ருந்து, இரண்டையும்,செவ்வாய் பார்க்கவும்.
6. நவாம்சத்தில்,சுக்கிரன்,சந்திரன் மற்றும் இலக்கினம் ஆகியவை  
  ஒற்றைப்படை இராசியிலிருக்கவும்.

இந்த  யோகங்கள்,கருத்தரிக்கும் காலத்தில் இருக்க,ஆண் அல்லது
பெண்    குழந்தையைத் தரக்கூடிய நிலைமை எழாமல் போகலாம்.
இந்த    இணைவுகள்  ஒரு குழந்தையின் ஜாதகத்தில் காணப்பட்
டால்,  அந்த  தாய்க்கு, அதற்குப் பிறகு குழந்தை பிறக்க வாய்ப்பு
இருக்காதெனலாம்.

இரட்டைப் பிறவிக்கான இணைவுகள் :-
சந்திரன் மற்றும் சூரியன் ஏழுக் கேழாய் இருக்கவும்.
அதே நிலையில் சந்திரன்,சனி இருக்கவும் இரட்டைப் பிறவி என
லாம்.

         மிதுனம்,கன்னி இலக்னமாகி,புதனும், ஆறாம் அதிபதியும் பரிவர்த்தனை  பெற,அது பெண் தன்மையுள்ள அலிப் பிறப்பாகும்.
சனி  ஆறிலிருக்க,  மேற்  சொன்ன   நிலைகளிலிருந்தால்,ஆண் தன்மையுள்ள அலிப் பிறப்பாகும்..

சனி கேது,
புத
சூரி





சந்

 இராகு





குரு
 சுக்
சுக்
 
   இராசி

 செவ்

நவாம்சம்
 சூரி

  குரு







 லக்//






செவ்
இராகு

சனி

சந்
லக்//
புத
கேது
பிறந்த தேதி:- 15 / 16 – 3 – 1997,  பிறந்த நேரம்    02 – 15   ஏ.எம்.
10N22 – 16E14 - செவ்வாய் தசாயிருப்பு     2 வருடம்    9   மாதம்   4 நாள்.


          இந்த ஜாதகத்தில் பத்து கிரகங்களில்,ஏழு உபய இராசிக ளில் உள்ளன.இதுவே ஆணுமில்லை,பெண்ணுமில்லை என்பதைக்
கூறிவிடுமன்றோ ? சூரியன்,சந்திரன்,சனி,செவ்வாய் மற்றும் புதன்
ஆகியவை உபயத்தில் உள்ளன.புதன் பெண் இராசியில் உள்ளார்.

          தனுசு இலக்னம்,ஆண் இராசி ஆனாலும்,செவ்வாய்,சனி ஆகியோர் பார்வையால் பாதிப்படைந்துள்ளது. இலக்னாதிபதி குரு,
சனியின்   இராசியில் இருப்பதும்,இந்நிலை மேலும்,இரு குணங்க
ளுடைய,  பிறப்பாகப்   பிறக்கவைத்தது. 8 ம் அதிபதி  சந்திரன் 7 ல்         7 ம் அதிபதி   புதன் மீனத்தில்,சனி,சூரியன் மற்றும் கேது இணை
வால்    பாதிக்கப்பட்டது.    செவ்வாயின் பார்வையால் ஏற்பட்ட பாதிப்பு, கருத்தரிக்கவும்,  குழந்தை   பெற்றெடுக்கவும், முடியாத நிலை  ஏற்படுத்தியது.  இந்த  சக்திமிக்க பாதிப்புகள்,முக்கியமாக அசுபர்கள்  கேந்திரத்தில்  இருப்பதுவும், சந்திரன் 7 ல் இருப்பதும் சக்தி வாய்ந்த,  பாலாரிஷ்ட  யோகத்தைத் தந்தது. செவ்வாயைத் தொடர்ந்து, இராகுதசா நடக்குமென்பதால்.ஆப்ரேஷன் செய்தாலும்
சரியாகாத நிலையைக் காட்டுகிறது.


                               --- எட்டயபுரம் விஜயநரசிம்மன்

No comments:

Post a Comment