Search This Blog

Friday 21 December 2018

இராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019 - 2021


இராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019 - 2021


கடகம்


(புனர்பூசம்- 4 ஆம் பாதம்பூசம்-1,2,3,4 பாதங்கள்ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)
       தாய்காரகனான சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடகராசி அன்பர்களேதங்கள் இராசிக்கு திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 09 - 03 - 2019  மாசி மாதம் 25 ஆம் தேதி சனிக்கிழமை  இரவு சுமார் 08 – 09 மணி அளவில்– சாய கிரகங்களான இராகு கடக இராசியில் இருந்து மிதுனத்துக்கும், கேது        மகர இராசியில் இருந்து தனுசுக்குமாக பெயர்ச்சி ஆகிறார்கள். அதனால் ஏற்படும் பலன்களைப் பார்ப்போம்.

          கடந்த ஒன்றரை வருட காலமாக இராகு பகவான் உங்கள் ஜென்ம இராசியிலும்  கேது – களத்திர ஸ்தானத்திலுமாக சஞ்சாரம் செய்து சுமாரான பலன்களை வழங்கி வந்தனர். விளம்பி வருடம் மாசி மாதம் 25 ஆம் தேதி  முதல் மிதுன இராசியான விரய பாவத்துக்கு  இராகுவும், தனுசு இராசியான 6 ஆம் இடத்துக்குக் கேதுவும் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு சஞ்சரிக்க உள்ளனர். இந்தப் பெயர்ச்சியானது இராகுவால் விரயங்களையும் கேதுவால் நற்பலன்களையும் தர வல்லது.

       இதன் காரணமாக விரய பாவத்தில் அமர்ந்த இராகுவால் தேடிய செல்வங்கள் மறையும். வரவுக்கு மிஞ்சிய செலவுகளும், அவை தகுதிக்கும், சக்திக்கு மீறிய செலவுகளாகவும் அமையும். வீட்டிலும், வெளியிலும் பலவித சமாளிக்க முடியாத இன்னல்கள் ஏற்படும். பணம் கொடுக்கல் – வாங்கலில் மிகுந்த எச்சரிக்கை தேவை. மனையாளுக்கு அரிஷ்டம் ஏற்படும். அதனால் சயன சுகம் கெடும். பூமி, மனை, சொத்து ஆகியவற்றுக்கு பங்கம் விளையும். மருத்துவ உலகிற்கே புதிராகும் வகையில் சிக்கலான புதிய நோய்கள் ஏதாவது உண்டாகும். உடன்பிறப்புக்கள் ஒத்துழைப்புத் தராமல் பகை உணர்ச்சியுடன் செயல்படுவர். சிலருக்குக் கால் இடறுதல், விழுதல் ஆகியவற்றால் காயம் அல்லது முறிவு ஏற்படலாம். தைரியமும் தெம்பும் குறையும். ஆரம்பித்த வேலைகள் விரும்பியபடி, குறிப்பிட்ட காலத்தில் முடிக்க முடியாதபடி தடங்கல்கள் வந்து சேரும். தொழில், வியாபாரத்தில் போட்டி, பொறாமைகளால் சருக்கல்கள் ஏற்படலாம். பிறர் பணிகளில் தேவையற்ற தலையீடுகளை விலக்கி, ஒதுங்கியிருப்பதே நல்லது. உங்கள் வேலைகளில் மட்டும் கவனத்தைச் செலுத்துங்கள். அடிக்கடி பிரயாணங்களும்அலைச்சலும் அதிகம் ஏற்படும்குடும்பத்தில் நீண்ட நாட்களாகத் தடைப்பட்டிருந்த சுபகாரியம் நடைபெறும்போட்டிபிரச்சனைகள் உதுவாகினும் வெற்றி உங்களுடையதாகவே இருக்கும்.

       கேது 6 ஆம் இடத்தில் நன்மைகளே செய்கிறார். அதன் காரணமாக எல்லாவகையிலும் இலாபமும், சத்ரு ஜெயமும் உண்டாகும். தாய் மாமன் வகையில் அரிஷ்டம் உண்டாகும்.  வித்வத்துவமும், வாக்கு வன்மையும் ஏற்பட்டு அதன் மூலமாக நன்மைகள் ஏற்படும். அதிக சுகமும், புகழும் ஏற்படும். கீர்த்தி பெருகும். பிறர் பேச்சுகளை கவனமாகக் கேட்கவும், கேட்கவில்லை என்றால் தவறாகப் புரிந்து கொண்டு சங்கடப்பட நேரலாம். வயிற்றில் வலிகள் வந்து நீங்கும். இவர்களிடம் பெண்கள் மயங்கி, வசமானாலும் இவர்களுக்கு அவர்கள் மேல் தீவிர இச்சை ஏற்படாது. நெடுநாளையக் கடன்கள் தீரும். குடும்பத்தில் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் பெருகி மருத்துவச் செலவுகள் குறையும். பகைவர்கள் விலகி ஓடுவர். ஞானமுயற்சியும், நற்சிந்தனைகளில் நாட்டமும், பெரியோர்கள், சித்தர்கள் ஆசியும் கிடைக்கும். புதிய திட்டங்கள் செயல் வடிவம் பெறும்தொழிலில் வரும் இலாபத்தை நல்ல முறையில் தானதர்மம் என செலவளிப்பீர்கள்உபரியாக அடுத்து ஒரு புதிய தொழில் ஆரம்பிப்பீர்கள்உத்தியோகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும்விரும்பிய இடத்திற்கு இடமாற்ற உத்திரவு கிடைக்கும்புதிய கட்டிடம்மனை வாகனம் ஆகியவையும் வாங்குவீர்கள். பொதுவாக, ஜாதகத்தில் நல்ல தசா - புத்திகள் நடந்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும் கை கொடுத்தால் கேட்கவே வேண்டாம்.

       குடும்பம் மற்றும் பொருளாதாரம் ;- தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். வீட்டில் சுபச் செலவுகள் ஏற்படும்சிலருக்குச் சுகம்தனலாபம்புதிய நண்பர்கள் மற்றும் சந்தோஷம் ஆகியவை ஏற்படும்துன்பத்தில் கைகொடுக்கும் துணைவி இருந்தாலும் கணவன் மனைவிக்குள் ஒற்றுமை குறைவதால் வாக்கு வாதங்கள் அதிகரிக்கும்தான தர்மமென கைப் பணம் கரையும்

       தொழில் மற்றும் வியாபாரம் ;- தங்கள் முதலீடுகளை வேறு புதிய திட்டங்களில் முதலீடு செய்ய முனைவீர்கள்வியாபாரத்தில் இருந்த வந்த மந்த நிலைகள் தொடரும்விவசாயிகள் விவசாயத்தில் நவீன முறைகளைக் கையாண்டு இலாபம் ஈட்டமுனைவர். தொழில் வளர்ச்சிக்காகச் செய்த முதலீடுகள் ஆதாயம் தரும். தொழில் துறையில் சிக்கல்களைத் தரலாம்அதிக உழைப்பும், பிரறால் ஏமாற்றமும் ஏற்படும். புதிய கூட்டாளிகள் சேருவர்போட்டிகள்மறைமுக எதிர்ப்புகள் யாவும் சற்று குறையும்.

       உத்தியோகஸ்தர்களுக்கு – பணியில் உள்ளவர்களுக்குப் பதவி உயர்வு தடைதாமதங்களின்றி உடனடியாக் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் சதிச் செயல்கள் தொல்லை தந்தாலும்உடன் பணிபுரிபவர்களின்உதவியாலும்ஒத்துழைப்பாலும் தப்பித்துக் கொள்வீர்கள்வெளியூர் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் தாமத்த்திற்குப் பிறகே நிறைவேறும்வேலப்பளு அதிகரித்து ஓய்வின்றி உழைக்க வேண்டிய நிலை உருவாகும்.

       பெண்களுக்கு ;- பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வுகளைத் தடைகளுக்குப் பிறகு எதிர்பார்க்கலாம் உயர் அதிகாரிகளின் கெடுபிடியால் மன உளைச்சல்கள் ஏற்படும்கடின உழைப்பின் காரணமாக ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம்பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும்ஆயினும் மகிழ்ச்சிக்காகப் பணச் செலவுகளைப்பற்றி கவலை கொள்ளமாட்டீர்கள்கணவர் உங்கள் சொல்லுக்குக் கட்டுப்படுவார்அதுபோல் உங்களுக்கு வேண்டியதை மறுக்காமல் வாங்கித் தருவார்.
       மாணவர்களுக்கு ;- நேர்காணல்களில் ஏற்படும் தடை தாமதங்களையும் மீறி அவற்றில் வெற்றி பெறுவர்வெளிநாடு சென்று பணிபுரியும் வாய்ப்புக்கள் அமையும்மிகுந்த அக்கறையுடன் படித்தால் மட்டுமே அதிக மதிப்பெண் பெற இயலும்கல்வியில் விருத்தி ஏற்பட்டு ஆசிரியரிடமும் நல்ல பெயர் எடுப்பீர்கள்.
       அரசியல்வாதிகளுக்கு – ஓரளவுக்கு உங்களுக்கு நல்ல காலம்தான்பட்டங்களும்பதவிகளும் தேடிவரும்அதற்கு நீங்கள் காலம் தவறிய சாப்பாடுதூக்கமில்லாத இரவுகள் எனக் கடுமையான உழைப்பைக் கொடுக்க வேண்டியதிருக்கும்புகழையும்தொண்டர்களையும் நிலை நிறுத்திக் கொள்ள கை பணத்தைக் கரைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்மேலும்மக்களின் ஆதரவுகளைப் பெற கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவது நல்லது.
       கலைஞர்களுக்கு – புகழையும்மார்கொட்டையும் தக்கவைத்துக் கொள்ள கிடைக்கும் நல்ல வாய்ப்புகளை தவறாது பயன்படுத்திக் கொள்வது நல்லதுஅதுவே புத்திசாலித்தனமும் கூடபொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும்ஆடம்பர வாழ்க்கையில் சற்றே குறைபாடுகள் ஏற்படும்வெளியூரில் அவுட் டோர் ஷூட்டிங்கில் ரசிகர்களின் தொல்லை எழலாம்சிலருக்கு வெளிநாட்டுப் படப்பிடிப்பு வாய்ப்புகள் கதவைத் தட்டும்.
       பரிகாரங்கள் – சங்கடசதுர்த்தி அன்று விநாயகருக்கு விரதம் இருந்து வழிபாடு செய்வது சிறப்பு. திருப்பதி அருகிலுள்ள காளஹஸ்தி, கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஆகிய ஸ்தலங்களுக்கு ஒருமுறை சென்று வழிபடுவது நல்லது. கேதுவுக்கு கீழ்பெரும்பள்ளம் சென்று வழிபாடு செய்யுங்கள். சங்கரன்கோவில் சென்று புற்றுக்கு பால், பழம், வைத்து வழிபட்டுவிட்டு சங்கரநயினார் கோமதியம்பாளை தரிசிப்பது சிறப்பு.



சிம்மம்


மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)
               தந்தை காரகனான சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்மராசி அன்பர்களேதங்கள் இராசிக்கு திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 09 - 03 - 2019  மாசி மாதம் 25 ஆம் தேதி சனிக்கிழமை  இரவு சுமார் 08 – 09 மணி அளவில்– சாய கிரகங்களான இராகு கடக இராசியில் இருந்து மிதுனத்துக்கும், கேது        மகர இராசியில் இருந்து தனுசுக்குமாக பெயர்ச்சி ஆகிறார்கள். அதனால் ஏற்படும் பலன்களைப் பார்ப்போம்.
   
        கடந்த ஒன்றரை வருட காலமாக இராகு பகவான் உங்கள் விரய பாவத்திலும் கேது – ருணரோகசத்ரு ஸ்தானத்திலுமாக சஞ்சாரம் செய்து சுமாரான பலன்களை வழங்கி வந்தனர். விளம்பி வருடம் மாசி மாதம் 25 ஆம் தேதி  முதல் மிதுன இராசியான இலாப பாவத்துக்கு  இராகுவும், தனுசு இராசியான 5 ஆம் இடத்துக்குக் கேதுவும் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு சஞ்சரிக்க உள்ளனர். இந்தப் பெயர்ச்சி மூலமாக இராகுவால் ஆதாயங்களைப் பெறுவீர்கள். கேதுவால் சுமாரான பலன்களையே எதிர்பார்க்கலாம்.

       இலாபத்தில் இருக்கும் இராகுவின் காலத்தில் செல்வம் சேரும். அழகிய மனைவி அமைவாள். குழந்தை பாக்கியம் ஏற்படும். சுபகாரியச் செலவுகள் ஏற்படும்வாக்குவன்மை ஓங்கும். தனதான்ய விருத்தி உண்டாகும். உங்கள் வார்த்தைகள் பிறரால் வேதவாக்காக ஏற்றுக் கொள்ளப்படும். ஐஸ்வரியம் பெருகும்.  தொழில் முன்னேற்றங்கள் திருப்தி தரும்.   அரசியல் அதிகாரம்அரசு மரியாதை ஆகியவை கிடைக்கும்பெரும்புள்ளிகள் சிலர் அறிமுகமாகி அதனாலும் முன்னேற்றமடைவர். அந்தஸ்தும், கௌரவமும் கூடும். வேளா வேளைக்கு இனிப்புடன் கூடிய உயர்ரக இராஜ உணவைச் சுவைக்கும் யோகம் ஏற்படும்.  எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றி பெறும்பொதுச்சேவைகளில் அவமானத்தைத் தரலாம்எனவேபுகழ் கௌரவத்துக்குப் பங்கம் வராமல் பார்த்து நடப்பது நலம் தரும்அதிகாரிகளிடம் பணிவுடன் நடப்பது முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்உபரி வருமானங்கள் அதிகம் கிடைக்கும்.
       புத்திர பாவமேறிய கேது நல்லது செய்வான் என நம்ப முடியுமா ? ஆயினும் ஞானகாரகனான கேது 5 இல் புத்தி தெளிவையும்செயல் திறனையும் அதிகமாக்குவதால் வரும் கஷ்டங்களையும்நஷ்டங்களையும் சமாளித்துக் கொள்வதுதானே அறிவுடமைசிலருக்கு கர்ப்பை கோளாறுகள் அல்லது கருச்சிதைவு ஏற்படலாம்கீழ்வயிற்றுப் பகுதியில் அல்சர் போன்ற பிரச்சனைகள் எழலாம்புத்திரரால் தொல்லைகள்சோகம் ஆகியவை ஏற்படலாம்பிள்ளைகள் வழியில் மன சஞ்சலங்கள் ஏற்படலாம்அசையாச் சொத்துக்கள் வாங்கும் யோகங்கள் ஏற்படும்பூர்வீகச் சொத்துக்களால் விரயங்கள் ஏற்படலாம்உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும்பெரியோர்களின் முழு ஆதரவு இருக்கும்மகான்களின் தரிசனத்தால் ஞானவழியில் உங்கள் மனம் சென்று அமைதி எற்படும்சொத்துக்கள் மீதான வழக்கு விவகாரங்களால்  செலவுகள் அதிகரிக்கும்லாட்டரிஸ்பெகுலேஷன் போன்ற துறைகளில் எதிர்பாராத அளவுக்கு திடீர் வெற்றிகள் கிடைக்கும்சிலருக்குப் பணப்பற்றாக்குறையால் காரியங்களில் தாமதங்களும்தடைகளும் ஏற்படும்பொதுவாக, ஜாதகத்தில் நல்ல தசா - புத்திகள் நடந்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும் கை கொடுத்தால் கேட்கவே வேண்டாம்.


       குடும்பம் மற்றும் பொருளாதாரம் – கணவன் மனைவி இடையே இருந்துவந்த மனஸ்தாபங்கள் மறையும்வித்தைகளில் தேர்ச்சியும்அறிவுத்திறனும் கூடும்தலைப்பதவிவசதியான வீடு ஆகியவை அமையும்அஷ்டலட்சுமியின் அருளுக்குப் பாத்திர மாவீர்கள்உடன்பிறப்புக்களுக்கு ஏற்படும் அதிர்ஷ்டத்தால் நல்ல முன்னேற்றத்தைக் காண்பர்உயர் ரக கார் போன்ற வாகனங்கள் அமையும்பலவழிகளிலும் பணவரவு பெருகும்பிறர் மேல் இரக்கம் ஏற்பட்டுத்  தான தருமங்கள் செய்வார்அரசாங்கத்தால் அனுகூலம் உண்டுஉறவினர் இல்ல விழாக்களில் கலந்து கொண்டு களிப்படைவீர்கள்.
       தொழில் மற்றும் வியாபாரம் - வாடிக்கையாளர்களிடம் உண்மையாக நடந்துகொண்டால் வியாபாரம் பெருகும்நினைத்தபடி வாடகை வருமானங்கள் வசூலாவதால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.  புதிய வாகனங்கள் வாங்கும் எண்ணம் ஈடேறும்கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலை ஏற்படும்தொழிலில் பெரிய தொகைகளை முதலீடு செய்வதற்கு முன்அதனால் ஏற்படப்போகும் சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்து இறங்குவதால் இழப்புகளைத் தவிர்க்கலாம்கூட்டாளிகளின் ஒதுதுழைப்பு உங்களுக்கு சாதகமான பலன்களையே தரும்வெளிழூர்வெளிநாட்டுத் தொடர்புகள் உண்டாகிஇலாபம் அதிகரிக்கும்அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள்உதவிகள் தாமதப்படும்
       உத்தியோகஸ்தர்களுக்கு – அரசுப் பணியாளர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வுகள் தடைதாமதம் இன்றிக் கிடைக்கும்பணிகளில் ஏற்பட்ட நிலுவைத் தொகைகள் கைக்கு வந்து சேரும்பணி சம்பந்தமான வெளியூர்ப் பயணங்கள்வெளிநாட்டுப் பயணங்களால் குடும்பத்தைவிட்டுப் பிரிய நேர்ந்தாலும்அதில் கிடைக்கும் ஆதாயங்களால் மனம் மகிழும்.

       பெண்களுக்குதெய்வப் பிரார்த்தனையால் பெண்களின் வேண்டுதல்கள் நிறைவேறும்சுபகாரியச் செலவுகள் ஏற்படும்பணிபுரியும் பெண்கள் அதிகாரிகளின் ஆதரவால் சுலபமாகக் காரியங்களைச் சாதித்துக் கொள்வர்சிலருக்கு வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படலாம்அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றிகளைக் குவிப்பீர்கள்பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத்தின் தேவைகள்குடும்பத்திலுள்ளோரின் விருப்பங்கள்யாவும் நிறைவேறும்அதிகாரிகளின் ஒத்துழைப்பால் அகம் மகிழும்.
       மாணவர்களுக்கு;- மாணவமாணவிகள் தங்கள்  தேர்வுகளில் ஆசிரியரின் ஒத்துழைப்பால்சுலபமாக வெற்றிபெற முடியும்வாழ்க்கை முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும்சிலருக்குக் கல்வியில் தடைகள் ஏற்படலாம்அதையும் தாண்டி முழு முயற்சியால் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைப் பெற முடியும்உடல் ஆரோக்கிய பாதிப்புகளால் அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்எனவேஉடல் ஆரோக்கியத்தில் மெத்தனமாக இராமல் அதிக அக்கறை கொள்ளவேண்டியது அவசியமாகிறது.
       அரசியல்வாதிகளுக்கு – வீண் வார்த்தைகளை ஒதுக்கிமேடைப் பேச்சுகளில் சற்று கவனமுடன் செயல்பட்டால் மக்களிடையேயும்கட்சி நிர்வாகிகளிடமும் நல்ல பெயர் எடுத்துமதிப்பும்மரியாதையும் கூடும்விவசாயிகளின் கஷ்டங்களில் பங்கு எடுத்துக் கொள்வது நல்லதுஅது அவர்களிடையே செல்வாக்குகையும்மதிப்பு மரியாதையையும் அதிகரிக்கும்கட்சிப் பணிகளுக்காக  அதிகம் செலவுகள் செய்ய நேர்ந்தாலும்பொருளாதார நிலை மேம்படும்.
       கலைஞர்களுக்கு – எதிர்பார்த்துக் காத்திருந்த நல்ல வாய்ப்புகள் தேடிவரும்கலைத்துறையில் நல்ல பெயரும் புகழும் கிட்டும்தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரித்து உடல் நிலையில் சோர்வு உண்டாகும்கிசுகிசுக்களை தவிர்க்க உடன் பழகுபவர்களிடம் சற்று நிதானத்துடன் பேசிப் பழகுவது  நல்லதுஆடம்பர வாழ்க்கைக்கான மதிப்பு மிக்கப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்புதிய பட ஒப்பந்தங்கள் கைக்கு வந்து சேரும்.

       பரிகாரங்கள் – சங்கடசதுர்த்தி அன்று விநாயகருக்கு விரதம் இருந்து வழிபாடு செய்வது சிறப்பு. திருப்பதி அருகிலுள்ள காளஹஸ்தி, கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஆகிய ஸ்தலங்களுக்கு ஒருமுறை சென்று வழிபடுவது நல்லது. கேதுவுக்கு கீழ்பெரும்பள்ளம் சென்று வழிபாடு செய்யுங்கள். சங்கரன்கோவில் சென்று புற்றுக்கு பால், பழம், வைத்து வழிபட்டுவிட்டு சங்கரநயினார் கோமதியம்பாளை தரிசிப்பது சிறப்பு.



கன்னி


உத்திரம் – 2, 3, 4-பாதங்கள்ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள்சித்திரை – 1,2 பாதங்கள்)
       புத்தி காரகனான புதனை அதிபதியாகக் கொண்ட கன்னிராசி அன்பர்களேதங்கள் இராசிக்கு திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 09 - 03 - 2019  மாசி மாதம் 25 ஆம் தேதி சனிக்கிழமை  இரவு சுமார் 08 – 09 மணி அளவில்– சாய கிரகங்களான இராகு கடக இராசியில் இருந்து மிதுனத்துக்கும், கேது        மகர இராசியில் இருந்து தனுசுக்குமாக பெயர்ச்சி ஆகிறார்கள். அதனால் ஏற்படும் பலன்களைப் பார்ப்போம்.
       கடந்த ஒன்றரை வருட காலமாக இராகு பகவான் உங்கள் இலாப பாவத்திலும் கேது – புத்திர ஸ்தானத்திலுமாக சஞ்சாரம் செய்து ஓரளவு           நல்ல பலன்களை வழங்கி வந்தனர். விளம்பி வருடம் மாசி மாதம் 25 ஆம் தேதி  முதல் மிதுன இராசியான கர்ம பாவத்துக்கு  இராகுவும், தனுசு இராசிசுக பாவமான 4 ஆம் இடத்துக்குக் கேதுவும் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு சஞ்சரிக்க உள்ளனர். இந்தப் பெயர்ச்சி மூலமாக இராகுவால் சுப பலன்களையும்கேதுவால் சுமாரான பலன்களையும் எதிர்பார்க்கலாம்.
       .
.
       பொதுவாக 10 இல் இராகு அசுப பலன் தருவதாகவே கூறப்படுகிறதுஆனால், "பத்தில் ஒரு பாம்பேனும் இருக்க வேண்டும்", - என்ற பழமொழிப்படி இங்கு ஏறக்குறைய சுப பலனே ஏற்படும் என நம்பலாம்பல வழிகளிலும் புகழ்சுகம் ஆகியவை ஏற்படும்ஆனால் தமிழ் நூல்களின் கொள்கைப்படி சொத்துக்கள் கை தவறலாம்அரசாங்க ஆதரவு இன்றிபதவி உத்தியோகத்தில் பிரச்சனைகள் எழலாம். இட மாற்றங்கள்பணி மாற்றங்கள் ஆகியவையும் ஏற்படலாம்செய்வினைபில்லிசூன்யம் போன்றவற்றால் அச்சம் ஏற்படலாம்மாரக தசை நடந்தல் பெற்றோருக்குக் கர்மர் செய்ய நேரலாம்கஷடங்களைகவலைகளை மறந்து காசி யாத்திரை செல்ல்லாம்போஜன சுகம் குறைவதோடுமனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்படுவதின் காரணமாக குழப்பங்கள் வரலாம்சிறுசிறு உபாதைகள் எழலாம். உயர்குலப் பெண்ணால் அவப் பெயர் ஏற்படலாம். தான தருமம் செய்வதால் கைப் பணம் கரையும். வெளிநாட்டுப் பயண வாய்ப்புகள் ஏற்படும். அனைத்திலும் இலாபமும்,  மகிழ்ச்சியும் குறையும். தேவையற்ற, ஆதாயமற்ற பயணங்கள் ஏற்படும். புகழ் மங்கும்பிறர் வழங்கும் மதிப்புமரியாதை எனத் துவங்கிய வாழ்வு இந்த வருடம் முன்னேற்றகரமாகவே இருக்கும்படிப்பை முடித்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புக்கள் தாமதமாகவே கிடைக்கும்நிம்மதியான தூக்கம் இராதுகவன சக்தி குறைந்துமனத் தெளிவும் மறைந்து குழப்ப நிலை தொடரும்எனவேமுதலில் சுப பலனும்பிற்ப்பகுதியில் அசுப பலனுமாக்க் கலந்து நடக்கும் எனக் கொள்ள வேண்டும்.

       ஜென்மத்திற்கு 4 இல் கேது வரும் போது காரணமின்றி எல்லாவற்றிலும்வீண் பயமும்சந்தேகமும் ஏற்படும்சூதாட்டாம்சூதாட்ட பேரம் போன்றவற்றில் பெரும் பொருள் இழப்பு ஏற்பட வாய்ப்பு ஏற்படும்எச்சரிக்கை தேவைபூமிமனைசொத்துக்கள் கை தவறலாம்தீ விபத்துக்கள்வாகன விபத்துக்கள் ஏற்படலாம்எறவேசமயலறையிலும்வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கை அவசியம்வயிறுஇதயம் ஆகிய உறுப்புகளில் நோய் ஏற்படலாம்சிலருக்கு அவரகளின் உருவமே மாறி வெறுப்பு ஏற்படஅந்த வெறுப்பாலேயே துறவறம் பூணும் வாய்ப்பு ஏற்படலாம்பெற்றோர் உடல் நிலை பாதிப்புக் காரணமாக மருத்துவச் செலவுகள் கூடும்செய்தொழிலில் எதிர்பாராத தடங்கல்கள்கடன் பிரச்சனைகள்பொருளாதாரப் பற்றாக்குறைவீண் அலைச்சல் போன்றவையும் ஏற்படும்கால் நடைகள்கோழி வளர்ப்பு போன்ற வகையில் இழப்புகள் அதிகம் இருக்கும்உடலில் விஷக்கடியினால் அலர்ஜிஅரிப்புவலியினால் வேதனைநாய் கடி அல்லது வீட்டுக்குள் விஷ ஜந்துக்களான பாம்புதேள்பூரான் பொன்றவை விஜயம் செய்தல் ஆகியவை நிகழும்ஆனாலும் அதிக பயம் ஏற்படாதுகணவன் மனைவி உறவு சுகமாகவே இருக்கும்பொதுவாக, ஜாதகத்தில் நல்ல தசா - புத்திகள் நடந்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும் கை கொடுத்தால் கேட்கவே வேண்டாம்.

      குடும்பம் மற்றும் பொருளாதாரம் - ; பூமி வீடு மூலம் இலாபம் குறைவாகவே ஏற்படும்சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்படலாம்தந்தையுடன் சுமுக உறவு இராதுநல்லுறவுகளின் அனுசரணையாலும் அன்பாலும்குடும்பத்தில் நிலவிய குழப்ப நிலைகள் சீராகும்சோம்பல்கள் விலகி சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள்புதிய பொறுப்புகள் வந்து சேரும்கணவன் – மனைவி உறவில் குழப்ப நிலையே நிலவும்செல்வம் சேரும்திருமணம் ஆகாதவர்களுக்கு அழகிய மனைவி அமைவாள்தாமதப்படலாம்பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும்மனைவியின் பக்திமார்க்கம் உங்களின் மத உணர்வைத் தூண்டும்.
       தொழில் மற்றும் வியாபாரம் ;. சீரான பொருளாதார நிலைக்கு அனுகூலமான மாதமாகும்.  கோதுமைகொள்ளுபீன்ஸ் ஆகியவை ஆதாயம் தரும்அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு பதவி மாற்றம் அல்லது இடமாற்றம் ஏற்படலாம். எதிர்கால தொழில் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு விரிவாக்கத் திட்டங்களில் முதலீடுகள் செய்வது ஏற்றம் தரும்கூட்டாளிகளின் ஒத்துழைப்பு இருப்பினும்அவர்களை முழுமையாக நம்பிவிடாதீர்கள்.
      உத்தியோகஸ்தர்களுக்கு - அரசு ஊழியர்களுக்குமற்றவர்களுக்கு கட்டளையிடும் தலைமைப் பதவி கிடைக்கத் தாமதாகும்கீழே பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும்மேலதிகாரிகளின் அனுசரிப்பும் இருக்கும் எனச் சொல்வதற்கில்லைமற்றவர்கள் உங்களைக் கண்டு பொறாமைப் படுவதோடு உங்கள் முன்னேற்றத்துக்கும் தடங்கல்களை ஏற்படுத்துவர்ஆரோக்கியக் குறைவு காரணமாக அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலை எழும்பணி காரணமாக வெளியூர்ப் பயணங்களும் ஏற்படும்.
       பெண்களுக்கு ;- ஆன்மிகத்தில் ஈடுபாடும்அதன் காரணமாகக் குடும்ப முன்னேற்றமும் ஏற்படும்பணிபுரியும் பெண்கள் வீட்டிலும்பணியிலும் குழப்பமின்றி ஈடுபட்டு வெற்றிகளைக் குவிக்க முற்பட்டாலும் தடைகள் தவிர்க்க முடியாத்தாகும்வாகனங்களில் செல்கையில் வேகத்தைக் குறைத்து விவேகமாக ஓட்டினால் விபத்துக்களை தவிர்க்கலாம்கவனமுடன் செல்லுதல் அவசியம்சிலருக்கு அரசு உதவிகள் தாமதமாகும் உயர் அதிகாரிகளின் ஆதரவால் பணி உயர்வுக்கான பரிந்துரைகள் செய்யப்படலாம்.

      மாணவர்களுக்கு  ;-  முகநூல் மற்றும் வலைத் தளங்களில் பொழுதைக் கழிக்காமல் படிப்பில் கவனம் செலுத்தினால் மட்டுமே அதிக மதிப்பெண்கள் பெற இயலும்எனவே கவனமாகப் படிக்கவும்காலம் பொன் போன்றது. புதிய மாணவர்களுக்கு நேர்காணலில் வெற்றி கிடைத்தாலும்பணி நியமனம் தாமதமாகலாம். பல நேர்காணல்களை சந்திக்க  நீண்ட பயணங்களை மேற்கொள்ள நேரும்காதல் விவகாரங்களில் பல திருப்பங்கள் ஏற்படலாம்.  கல்வியில் உயர்வும்,  போட்டிகளில் வெற்றிகளும் குவியும் எனச் சொல்வதற்கில்லை.
       அரசியல்வாதிகளுக்கு – பல தடைகளுக்குப் பிறகு தனவரவுகள் சிறப்பாக இருக்கும்சிலருக்கு மக்கள் செல்வாக்கு திடீரெனச் சரியலாம்புகழும்கௌரவமும் மங்கும்தொண்டர்களின் உற்சாகம் தோள் கொடுக்கும்அவர்களுக்கும்மதிப்பு மரியாதையைக் காத்துக் கொள்ளவும் கை பணம் கரையும்தன் தகுதியை நிலைநாட்டிக் கொள்ள தேவையற்ற அலைச்சல்களும்திடீர் பயணங்களும் ஏற்பட்டும்தலைவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
       கலைஞர்களுக்கு – எதிர்பார்ப்புக்கு மேலாக நல்ல பட வாய்ப்புகள் தேடிவருவது போல் இருந்தாலும்சிறிது இடைவெளிக்குப் பிறகே ஒப்பந்தமாகும்வெளியூர்வெளிநாட்டுப் படப்பிடிப்புகளில்பயணங்களின் போது தடைகளும்தாமதங்களும் ஏற்படும்உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கேள்விக்குரியதாகும்பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும்அரசு வகைத் தொல்லைகளை சமாளித்துவிடுவீர்கள்.  
       பரிகாரங்கள் – ஞாயிறு தோறும் இராகு காலத்தில் அம்பாளக்கு திருவிளக்கேற்றி பூஜிப்பது நல்லதி. சங்கடசதுர்த்தி அன்று விநாயகருக்கு விரதம் இருந்து வழிபாடு செய்வது சிறப்பு. திருப்பதி அருகிலுள்ள காளஹஸ்தி, கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஆகிய ஸ்தலங்களுக்கு ஒருமுறை சென்று வழிபடுவது நல்லது. கேதுவுக்கு கீழ்பெரும்பள்ளம் சென்று வழிபாடு செய்யுங்கள். சங்கரன்கோவில் சென்று புற்றுக்கு பால், பழம், வைத்து வழிபட்டுவிட்டு சங்கரநயினார் கோமதியம்பாளை தரிசிப்பது சிறப்பு.



துலாம்


(சித்திரை-3,4 பாதங்கள்சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)

       அசுர குருவான சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாராசி அன்பர்களேதங்கள் இராசிக்கு திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 09 - 03 - 2019  மாசி மாதம் 25 ஆம் தேதி சனிக்கிழமை  இரவு சுமார் 08 – 09 மணி அளவில்– சாய கிரகங்களான இராகு கடக இராசியில் இருந்து மிதுனத்துக்கும், கேது        மகர இராசியில் இருந்து தனுசுக்குமாக பெயர்ச்சி ஆகிறார்கள். அதனால் ஏற்படும் பலன்களைப் பார்ப்போம்.

       கடந்த ஒன்றரை வருட காலமாக இராகு பகவான் உங்கள் கர்ம பாவத்திலும் கேது – சுக ஸ்தானத்திலுமாக சஞ்சாரம் செய்து சுமாரான பலன்களை வழங்கி வந்தனர். இனி விளம்பி வருடம் மாசி மாதம் 25 ஆம் தேதி  முதல் மிதுன இராசியான பாக்கிய பாவத்துக்கு  இராகுவும், தனுசு இராசியான 3 ஆம் இடத்துக்குக் கேதுவும் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு சஞ்சரிக்க உள்ளனர். இந்தப் பெயர்ச்சியின் போது இராகுவால் சுமாரான ஆதாயங்களைப் பெறுவீர்கள். கேதுவால் நல்ல பலன்களையே எதிர்பார்க்கலாம். 

       இதன் காரணமாக இராகுவின் கோசார நிலை தன விரயம் தரும். நீங்கள் எடுக்கும் எந்த முயற்சியும், எவ்வளவு முயன்றாலும் ஈடேறாது. நெருங்கிய உறவுகள், பிடித்தமான நண்பர்கள் எவரையேனும் பிரிய நேரும். அதனால் கஷ்டங்களும், மனக் கவலைகளும் ஏற்படும். சிலருக்குக் கூடா நட்பால் கேடாய் முடியும். நல்லதை நினைக்காமல் பாவ காரியங்கள் செய்யவே சிந்தை செல்லும். சிலர் பிற மத ஒழுக்கத்தை பின்பற்ற நேரலாம். தரும புண்ணிய காரியங்களில் நாட்டம் இராது. சகோதரர் அல்லது தாய், தந்தை ஆகியோருக்குப் பீடை ஏற்படும். ப்ளாக் மேஜிக் எனப்படுகிற மாந்திரீகம், பில்லி, சூன்யம் போன்ற வித்தைகளில் ஈடுபாடு ஏற்படும். அரசு விரோதம், சுப அசுப விரயங்கள் ஏற்படும். பிறர் வாங்கிய கடனுக்கு பிணை ஏற்கக் கூடாது. சுலபமான காரியத்தையும் கடின உழைப்புக்குப் பிறகே  முடிக்க முடியும். சிலருக்கு பாக்கியம் பெருகும். புகழ் ஓங்கும். பணி உயர்வு கிடைக்கும். மனை, வயல் ஆகியவை சொந்தமாக்க் கிடைக்கும். வெளிநாட்டுப் பயணமும் அதனால் ஆதாயமும் கிடைக்கும் என சொல்வதற்கில்லை. குழந்தைகள் கல்வியில் தடங்கல்களுக்குப் பிறகு சிறந்து விளங்குவர். வீடுநிலம் ஆகியவற்றை உடனடியாக்க் கிரையம் செய்வது அரிது. நல்ல வேலையைத் தேடிக்கொண்டுஇருக்கும் வேலையை விட முயற்சிப்பதே அறிவுடமையாகும். பெற்றோர்களின் உடல் நிலையில் பாதிப்பு ஏற்படலாம். அதன் காரணமாக மருத்துவச் செலவுகள் கூடும். நண்பர், உறவினர்களுக்காக நீங்கள் தாராளமாகச் செலவழிப்பீர்கள். ஆனால், எவரையும் நம்பி ஜாமீன் கையெழுத்துப் போட்டு மாட்டிக் கொள்ளாதீர்கள். வம்பு வழக்குகளில் சிக்கிக் கொள்ள நேரலாம். எச்சரிக்கை தேவை. தொழிலில் மந்த நிலையே காணப்படும்.

       கேதுவால் பிறருடன் ஏற்படும் மோதல்களிலும், பூசல்களிலும் வெற்றி மேல் வெற்றி காண்பீர்கள். எதிரிகள் மறைவர் எதிர்ப்புகள் விலகும். எல்லாவகையிலும், எல்லா வழிகளிலும் பணவரவு மேலும் மேலும் உயரும். பல வகைகளிலும் பெரும் புகழும் ஓங்கும். எவர்க்கும் எவ்விதமான வாக்குறுதி கொடுத்தாலும், சொன்னது, சொன்னபடி மறக்காமல் நிறைவேற்றி விடுவீர்கள். மகாராஜன் போல் வாழ்வர். மனோதைரியம் கூடும்.  உற்சாகம் பொங்கும். எதையும் சமாளிக்க்க் கூடிய செயல் திறன் அதிகரிக்கும். இளைய சகோதர உறவு மேம்படும். அவரால் ஆதாயமும், உதவிகளும் கிடைக்கும். நல்ல உணவு, தூக்கம், தாம்பத்திய சுகம் என அனைத்து பாக்கியங்களும் திருப்திகரமாக இருக்கும். அவனுக்கு என்னடா ? இராஜா என உங்களைக் கண்டு மூக்கின் மேல் விரலை வைப்பர். குடும்பத்தில் திருமணம் போன்ற நற்காரியங்கள் ஏற்பட்டு சுகசெலவுகள் கூடும். கடன்கள் தீரும். வருமானம் பெருகும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மற்றும் ஆதரவால் நன்மை அடைவீர்கள். தீர்த்த யாத்திரைகள் சென்று திரும்புவீர்கள். சிலருக்கு மேக நோய்கள் ஏற்படலாம். எச்சரிக்கை தேவை. பொதுவாக, ஜாதகத்தில் நல்ல தசா - புத்திகள் நடந்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும் கை கொடுத்தால் கேட்கவே வேண்டாம்.

       குடும்பம் மற்றும் பொருளாதாரம் ; குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருப்பது போல் தோன்றும். செல்வம் சேரும்திருமணம் ஆகாதவர்களுக்கு அழகிய மனைவி அமைவாள்தாமதப்படலாம்மகிழ்ச்சியான மணவாழ்க்கை அமைந்தாலும், சில பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியது இருக்கும்.  பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும்மனைவியின் பக்திமார்க்கம் உங்களின் மத உணர்வைத் தூண்டும்சகோதர நன்மைவெற்றி மற்றும் சந்தோஷமும் உண்டாகும்சிலருக்குப் பிரிவும்வீண் செலவுகளும் ஏற்படலாம்உழைப்பு அதிகமாகி அதற்கேற்ற ஆதாயம் இராதுசாமர்த்திய சாலியாக விளங்குவார்.
      தொழில் மற்றும் வியாபாரம் ; எதிர்கால தொழில் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு விரிவாக்கத் திட்டங்களில் முதலீடுகள் செய்வதற்கு முன் ஆலோசித்துச் செய்தால் ஏற்றம் தரும்அரசு ஊழியர்களுக்குமற்றவர்களுக்கு கட்டளையிடும் தலைமைப் பதவி கிடைக்கும். ஆனால் தாமதமாகும். தொழில் மற்றும் வியாபார முதலீடுகளுக்கு வங்கிக் கடன்கள்  மிகுந்த பிரயாசைக்குப் பிறகே கிடைக்கும்அரசின் உதவிகள் தாமதமானாலும், கைகொடுக்கும்.  எதைச் செய்தாலும் சிரத்தையுடன் செய்தால் வெற்றி உண்டுவிவசாயப் பணிகள் சிறப்புற நடந்து ஆதாயம் பெருகும்
       உத்தியோகஸ்தர்களுக்கு – எவ்வளவு வேலை பார்த்தாலும் உங்கள் பணியில், மேலதிகாரிகளிடம் திருப்தி இருக்காது. அதன் கார்ரணமாக பணி இடமாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதுவே குடும்பத்தைப் பிரிந்திருக்கக் காரணமாகலாம். சிலருக்குப் பணிவிஷயமாக அடிக்கடி வெளியூர் பயணங்கள் ஏற்படலாம். எதிர்பார்த்திருந்த சம்பள உயர்வுகள் தடை, தாமதிற்குப் பிறகே கிடைக்கும். சிலருக்கு வாகன யோகங்கள் ஏற்பட்டாலும், அதில் எச்சரிக்கையுடன் பயணித்தால் விபத்துக்களைத் தவிர்க்கலாம். 
      பெண்களுக்குபணிபுரியும் பெண்கள் வாகனங்களில் செல்கையில் வேகத்தைக் குறைத்து கவனமுடன் செல்லுதல் அவசியம்சிலருக்கு அரசு உதவிகள் தாமதமாகும் உயர் அதிகாரிகளின் ஆதரவால் பணி உயர்வுக்கான பரிந்துரைகள் செய்யப்படலாம்யாத்திரையும்வெளிநாட்டுப் பயணங்களும் ஏற்படும்தொலைதூரச் செய்திகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும்சிலருக்குத் தாங்கள் விரும்பாத இடத்திற்கு மாற்றம் ஏற்படலாம். குழந்தைகளின் தேர்ச்சி மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும்.
      மாணவர்களுக்கு -- வேலைக்கான நேர்காணலில் தாமத்த்திற்குப் பிறகே வெற்றி கிட்டும்அதன் காரணமாக நீண்ட, கடினமான பயணங்களை மேற்கொள்ள நேரும்காதல் விவகாரங்களில் பல திருப்பங்கள் ஏற்படலாம்.  கல்வியில் உயர்வும்,  போட்டிகளில் வெற்றிகளும் தடங்கல்களுக்குப் பிறகு வந்து குவியும். மாணவர்கள் அதிக அக்கறையுடன் படிக்கவேண்டும்கிரிக்கெட் ஆட்டங்களைக் கண்டால்கல்வியும் ஆட்டங்காணும்அவர்களின் கவனம் இன்ப நுகர்விலும்விளையாட்டுத் தனங்களிலும் ஈடுபட்டால் அறிவுத்திறனும்கல்வியில் தேர்ச்சியும் குறையும்
       அரசியல்வாதிகளுக்கு – தலைவர்கள் உங்களைப் புறக்கணித்தாலும், அடிமட்டத் தொண்டர்கள் உங்கள் மீது அன்பைப் பொழிவர். கௌரவத்துக்காகப் பிடிக்காத பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பீர்கள். ஆனால், அதன் மூலம் நல்ல பெயரும், புகழும், அதிக வருமானமும் வரும் என்பதால், நீங்கள் கவலையின்றி இருப்பீர்கள். உங்கள் துறை சம்பந்தமான பணிகள் சிறப்பாக நடந்தாலும், தடைகளும், தாமதங்களுக்கும் இல்லாமல் இருக்காது.
       கலைஞர்களுக்கு – நல்ல கதாபத்திரங்கள் கிடைக்கப் பெற்று, சிறப்பாக நடித்தாலும் நல்ல பெயர் எடுக்க முடியாது. பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும், அரசால் அதிக தொந்திரவுகள் இருக்கலாம். புதிய சொத்துக்கள் வாங்கும் முன் மூலப்பத்திரங்கள், வில்லங்க விவகாரங்களை அலசி ஆராய்ந்து பத்திரப் பதிவு செய்வது நல்லது. படப்பிடிப்பிற்காக வெளியூர், வெளிநாடு செல்கையில் தனி கவனத்துடன் செல்வது குழப்பங்களைக் குறைக்கும்.    
       பரிகாரங்கள் – காஞ்சிபுரம் அருகே அருள் பாலிக்கும் சித்திர குப்தரை வழிபடுவது சிறப்பு. சங்கடசதுர்த்தி அன்று விநாயகருக்கு விரதம் இருந்து வழிபாடு செய்வது சிறப்பு. திருப்பதி அருகிலுள்ள காளஹஸ்தி, கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஆகிய ஸ்தலங்களுக்கு ஒருமுறை சென்று வழிபடுவது நல்லது. கேதுவுக்கு கீழ்பெரும்பள்ளம் சென்று வழிபாடு செய்யுங்கள். சங்கரன்கோவில் சென்று புற்றுக்கு பால், பழம், வைத்து வழிபட்டுவிட்டு சங்கரநயினார் கோமதியம்பாளை தரிசிப்பது சிறப்பு.



விருச்சிகம்


விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )
       தைரிய காரகனான செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக இராசி அன்பர்களேதங்கள் இராசிக்கு திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 09 - 03 - 2019  மாசி மாதம் 25 ஆம் தேதி சனிக்கிழமை  இரவு சுமார் 08 – 09 மணி அளவில்– சாய கிரகங்களான இராகு கடக இராசியில் இருந்து மிதுனத்துக்கும், கேது    மகர இராசியில் இருந்து தனுசுக்குமாக பெயர்ச்சி ஆகிறார்கள். அதனால் ஏற்படும் பலன்களைப் பார்ப்போம்.
       கடந்த ஒன்றரை வருட காலமாக இராகு பகவான் உங்கள் பாக்கிய பாவத்திலும் கேது – தைரிய ஸ்தானத்திலுமாக சஞ்சாரம் செய்து மத்திமமான பலன்களை வழங்கி வந்தனர். விளம்பி வருடம் மாசி மாதம் 25 ஆம் தேதி  முதல் மிதுன இராசியான ஆயுள் பாவத்துக்கு  இராகுவும், தனுசு இராசியான 2 ஆம் இடத்துக்குக் கேதுவும் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு சஞ்சரிக்க உள்ளனர். இந்தப் பெயர்ச்சி மூலமாக இராகுவால் சுமாரான பலன்களைப் பெறுவீர்கள். கேதுவால் மத்திமமான பலன்களையே எதிர்பார்க்கலாம்.

       இதன் காரணமாக இராகுவால் பரம்பரை சொத்துக்கள் மூலமாக ஆதாயங்கள் ஏற்படும். மந்திர ஜாலங்களை பற்றிய அனுபவங்களை பெறுவீர்கள். பிறருடைய பணம், சொத்துக்கள் கிடைக்கும் வாய்ப்புகள் ஏற்படலாம். மனைவியிடம் பூர்ண படுக்கை சுகம் கிடைக்கும். மிகவும் நேசிப்புக்கு உரியவர்களின் பிரிவு அல்லது நோய் கண்டங்கள் ஏற்படலாம். வாழ்க்கையில் எல்லா வகையிலும் ஏதேனும் தொல்லைகள் எழலாம். பலவிதமான நோய்கள் காரணமாக கண்டங்கள் ஏற்படலாம். வாழ்க்கையில் ஓர் இனம் புரியாத பீதி இருந்து கொண்டே இருக்கும். கோர்ட் கேஸ் வகைகளில் பிறர் சூழ்ச்சியால் தோல்வியும் அதன் காரணமாக இழப்புகளும் ஏற்படலாம். எந்த்த் தொழிலிலும் ஈடுபடாதிருப்பதே நல்லது. ஏனெனில், ஈடுபடும் எதுவுமே ஒத்துவராது. மருத்துவர்களாலும் கண்ணுபிடிக்க முடியாத நோய்கள் ஏற்படலாம். காரியத்தடைகளும், வீட்டில் களவு போகுதல் ஆகியவையும் ஏற்படலாம். அரசியல் அதிகாரம் ஆகியவற்றைத் தருவார், கார் போன்ற நவீன வாகனங்கள் கிடைக்கும், பணம் பல வழிகளிலும் குவியும் என எதிர்பார்க்க முடியாது. ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வதன் மூலமாகப் பொருளாதார நிலையை விருத்தி செய்யலாம். பணம் கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வர். தொழில், வியாபாரத்தில் முழுமையான ஈடுபாடு இருந்தால் மட்டுமே, போட்டிகளைச் சமாளித்து வெற்றிபெற முடியும்.

        கேதுவின் தனபாவ அமர்வு பணி இட மாற்றஙுகளைக் குறிகாட்டுகிறது. பொருளாதாரப் பின்னடைவுகள் மற்றும் கஷ்டங்கள் ஏற்படலாம். அன்றாட         வாழ்க்கையில் நடக்க வேண்டிய அன்றாடப் பணிகளில் தாமதங்களும், ஏமாற்றங்களும், கவலைகளை அதிகரிக்கும். கடன்களை திரும்ப அளித்தல், செலவினங்களை சரிக்கட்டுதல், தொழில் முனைதல் போன்றவைகளும் பாதிக்கப்படும்.    பலருடன் பகை உண்டாகும். சிலருக்கு அன்றாட உணவுக்கே கூட சிக்கலாகலாம். கிடைத்தாலும் தரங்கெட்ட உணவாகவே இருக்கும். நாக்கின் அடிப்பாகத்தில் புண்கள் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி என்ன விலை என்று கேட்கக் கூடிய நிலை ஏற்படலாம். தொழில் வளர்ச்சி  நல்ல முன்னேற்றத்துடன் இருக்காது.  தொழில்வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்காது. அரசு மூலம் வெகுமதிகள் மற்றும் பரிசுகள் கிடைக்கும். வெளிநாட்டு பயண வாய்ப்புகள் ஏற்பட்டு மகிழ்ச்சியை விட துன்பத்தையே அளிக்கும். மனைவி மக்கள் ஆரோக்கியம் பெருக மருத்துவ சோதனைகள் தேவைப்படலாம்பிறருடன் சுமுகமாக நடந்தால் பிரச்சனைகள் விலகும்மனைவியின் நடவடிக்கைகள் மகிழ்ச்சி தருவனவாய் இருக்கும்தேய்பிறை போல் நாளுக்கு நாள் சந்தோஷமும்செல்வமும் குறையும்வியாபாரத்தில்  உற்சாகம் குறைந்து தொய்வு நிலை காணும். அரசு அதிகாரிகளுக்கு  கட்டளையிடும் பெரும் பதவி கிடைத்தாலும்தொல்லைகளும் இருக்கும். பொதுவாக, ஜாதகத்தில் நல்ல தசா - புத்திகள் நடந்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும் கை கொடுத்தால் கேட்கவே வேண்டாம்.

    குடும்பம் மற்றும் பொருளாதாரம்  ;- ஆதாயமும் பெருகும்பணவரவு மற்றும் உத்தியோக லாபம் ஏற்படும் என்று சொல்வதற்கில்லை. பெண்களால் தங்கள் முன்னேற்றம் தடைப்படும். குழந்தைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சி தரும்காரியங்கள் அனைத்தும் தாமத்த்திற்குப் பிறகே வெற்றி பெரும்கணவன் மனைவியடையே அன்பும் பாசமும் பெருகும்குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் மறைந்து களிப்பு உண்டாகும்புத்தி சாதுர்யத்தால் வாழ்க்கையில் பொருளாதார நிலை சீராக இருக்கும்குழந்தைகள் வகையில் சுபச்செலவுகள்   ஏற்படும்.
       தொழில் மற்றும் வியாபாரம் ;- வியாபாரிகள் புதிய முதலீடுகளை எடுத்தோம் கவிழ்த்தோம் என்றில்லாமல் ஆராய்ந்து செய்வது நலம் பயக்கும்சுகமான பயணங்களால் இன்பம் பெருகும். ஞானம் பெருகும்பணியில் உள்ளவர்களுக்கு நிலுவைத் தொகைகள் வந்து சேரும். வியாபார நிலவரங்களுக்கு ஏற்ப புதிய நுணுக்கங்களைப் புகுத்தி வியாபாரத்தில் ஆதாயம் காணலாம்உதிரிப் பாகங்கள் அல்லது மென்பொருள் சாதனங்களின் விற்பனை சூடுபிடிக்கும்.  மதிப்புமிக்க மனிதர்களின் நட்பு கிடைக்கும்.
       உத்தியோகஸ்தர்களுக்கு – அலுவலக நண்பர்கள் அன்போடு கைகொடுத்தால் அனைத்திலும் வெற்றிவாகை சூடுவீர்கள். ஆயினும், பணிகளுக்கிடையே சிறுசிறு நெருக்கடிகள், கஷ்டங்கள் இருக்கத்தான் செய்யும். உயர் அதிகாரிகளை அனுசரிந்து நடந்து கொண்டால் இன்னல்கள் ஓரளவு குறையும். புதிதாக வேலைதேடுபவர்கள் விருப்பப்பட்ட வேலை கிடைக்கவில்லை எனில் கிடைக்கும் வேலையில் சேர்ந்து கொண்டு அனுபவம் பெறுவது எதிர்காலத்துக்கு உபயோககரமாக இருக்கும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.
       பெண்களுக்கு ;- பதவியில் உள்ளவர்களின் தயவால் பயன் தாமதமாகவே ஏற்படும்பணிபுரியும் பெண்களுக்குப் பணியிடங்களில்தங்கள் விருப்பம் போல் இடமாற்றம் மிகுந்த பிரயாசைக்குப் பிறகு கிடைக்கும்வீட்டு மனைவிகள் போராடி தங்கள் கணவன்மார்களின் பரிபூர்ண அன்பைப் பெறுவர். பணிபுரியும் பெண்களுக்கு  மேலதிகாரிகளின் ஆதரவு மிகுந்த சிரமத்திற்குப் பிறகே கிடைக்கும்சுயதொழில் புரியும் பெண்களுக்கு எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும்அரசுப்  பணிபுரியம் பெண்களுக்குப் பெண் உயர் அதிகாரிகளால் நெருக்கடி ஏற்படலாம்.   
       மாணவர்களுக்கு ;- மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி அதிகரிக்கும்சுயமுன்னேற்றத்துக்கான திட்டங்கள் தீட்டவேண்டிய காலமாகும்மாணவர்கள் தங்கள் முழுத் திறமைகளையும் வெளிக்காட்டுவர்.  மாணவர்களுக்கு அறிவுத் திறன் பெருகும். சிலருக்குகல்வியில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும்உலகக் கோப்பை கிரிக்கெட்முகநூல்வலைத்தளங்களில் பொழுதைக் கழிக்காமல் படிப்பின் மீது கவனம் செலுத்தினால் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறலாம்.
       அரசியல்வாதிகளுக்கு – மக்களின் தேவைகளை அறிந்து, சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டாலே அவர்களின் முழுமையான ஆதரவு கிட்டும். தொண்டர்கள், நண்பர்கள், தலைவர்கள் என அனைவர் வகையிலும் செலவு செய்ய வேண்டியது தவிர்க்க முடியாததாகும். ஆயினும், இதன் காரணமாக ஏற்படும் பொருளாதார நெருக்கடிகளைச் சமாளித்துவிடுவீர்கள். கட்சிக் கொள்கைகளைப் பரப்பும் விதமாக அடிக்கடி வெளியூர் சென்று சொற்பொழிவு ஆற்ற ஏற்படும் பயணங்களால் அலைச்சல்களும், அசதியும் ஏற்படும்.
       கலைஞர்களுக்கு – மக்களின் ரசனைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்வது உங்கள் திறமையையும், புகழையும் அதிகரிக்கும். இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்படாமல், முதலில் வரும் ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவது உசிதம். அப்போதுதான் பொருளாதார நிலையை சீர் செய்த் கொள்ளமுடியும். சக நடிகைகளிடம் இருந்து விலகியே இருப்பது நல்லது. ஏனெனில், பின்னர் கிசுகிசுக்களால் மனவருத்தமும், மன அழுத்தமும் ஏற்பட வாய்ப்பு உண்டு.

       பரிகாரங்கள் – பிரதி செவ்வாய் கிழமை இராகு காலத்தில்  துர்கை அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட்டால் வளம் பெருகும். துயர் அகலும். சங்கடசதுர்த்தி அன்று விநாயகருக்கு விரதம் இருந்து வழிபாடு செய்வது சிறப்பு. திருப்பதி அருகிலுள்ள காளஹஸ்தி, கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம்  ஆகிய ஸ்தலங்களுக்கு ஒருமுறை சென்று வழிபடுவது நல்லது. கேதுவுக்கு கீழ்பெரும்பள்ளம் சென்று வழிபாடு செய்யுங்கள். சங்கரன்கோவில் சென்று புற்றுக்கு பால், பழம், வைத்து வழிபட்டுவிட்டு சங்கரநயினார் கோமதியம்பாளை தரிசிப்பது சிறப்பு.



தனுசு


 ( மூலம்-1,2,3,4 பாதங்கள்பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்ராடம் –1,2 பாதங்கள்)
    தேவகுருவான குருவை அதிபதியாகக் கொண்ட தனுர்ராசி அன்பர்களேதங்கள் இராசிக்கு திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 09 - 03 - 2019  மாசி மாதம் 25 ஆம் தேதி சனிக்கிழமை  இரவு சுமார் 08 – 09 மணி அளவில்– சாய கிரகங்களான இராகு கடக இராசியில் இருந்து மிதுனத்துக்கும், கேது        மகர இராசியில் இருந்து தனுசுக்குமாக பெயர்ச்சி ஆகிறார்கள். அதனால் ஏற்படும் பலன்களைப் பார்ப்போம்.
       கடந்த ஒன்றரை வருட காலமாக இராகு பகவான் உங்கள் ஆயுள் பாவத்திலும் கேது – தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்திலுமாக சஞ்சாரம் செய்து சுமாரான பலன்களை வழங்கி வந்தனர். விளம்பி வருடம் மாசி மாதம் 25 ஆம் தேதி  முதல் மிதுன இராசியான களத்திர பாவத்துக்கு  இராகுவும், தனுசு இராசியான 1 ஆம் இடத்துக்குக் கேதுவும் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு சஞ்சரிக்க உள்ளனர். இந்தப் பெயர்ச்சியின் போது இராகு, கேதுவால் சுமாரான பலன்களையே எதிர்பார்க்கலாம்.

       இராகுவின் களத்திர பாவ அமர்வு, வியாபார, தொழில் கூட்டாளிகளின் மூலமான இலாபத்தைக் குறிகாட்டுவதுடன், பொதுவாழ்வில் ஆதாயம், மகிழ்ச்சி மிக்க மண வாழ்க்கை, அனைத்து விதத்திலும் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு ஆகியவற்றையும் குறிகாட்டுகின்றது. தெய்வ காரிய ஈடுபாடுகளால் எதிலும் திருப்திகரமான வாழ்க்கை அமைய வாய்பு உண்டு. அரசு மூலம் வெளிநாட்டு பயண வாய்ப்புகள் தாமதமாக்க் கிடைத்தாலும், மகிழ்ச்சி அளிக்கும். சிலருக்கு வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் வெறுப்பாய் இருக்கும்வீண் விவாதங்களால் பிறருடன் மனஸ்தாபம் ஏற்படும்மனைவியுடன் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது அழகு. கையிலுள்ள பணமெல்லாம் விரயத்தால் கரையும்உழைப்பு அதிகமாகி ஊதியம் குறையும். எதிர்ப்புகள் குறையும். எதிரிகள் மறைவர். திருமணம் ஆகாதவர்களுக்கு  மகிழ்ச்சிகரமான மணவாழ்க்கையில் ஈடுபடும் காலம் கனியும். உங்களுக்குள் ஒளிந்து இருக்கும் வெளிக் கொணரும் காலம் இது. இதுநாள்வரை இருந்துவந்த மனழுத்தங்கள், உளைச்சல்கள நீங்கி, சீரான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். உற்சாகத்துடன் எல்லா வேலைகளையும் சிரமேற்கொண்டு சீராகச் செய்து முடித்து நல்ல பெயர் வாங்கி விடுவீர்கள். எந்தவொரு காரியத்தையும், எவருடைய தயவுமின்றி, எவருடைய ஆலோசனையும் கேட்காமல், சுயமாக சிந்தித்து செயல்படுவதே பாதுகாப்பானதும், சிறப்பானதும் ஆகும். 

       இராசியில் இடம் பெற்ற கேதுவால் ஜாதகர் கவலைகளுக்கு உள்ளாக நேரும். வாழ்க்கையில் பல கஷ்டங்களை சந்திக்க நேரும். விரும்பாவிட்டாலும் வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள், ஏற்ற இறக்கங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதிலிருந்து விடுபட, பணிகளை திட்டமிட்டு சீராகத் திறம்பட செய்தல், தைரியம் மற்றும் தன்னம்பிக்கையுடன் கூடிய செயல்பாடுகளே முக்கியம் ஆகும்.   எவருக்கேனும் இரக்கப்பட்டு ஜாமீன் கையொப்பம் இட்டால், சிவபெருமானின் தலையில் அரக்கன் கைவைத்த கதை போல் ஆகிவிடும். எனவே, சும்மா இருக்கும் சங்கை ஊதிக் கெடுத்துவிடாதீர்கள். தொழில் மந்த நிலைகள் உருவாக் கூடுமாதலால், தேவைக்கு அதிகமாகக் கடன் வாங்குவதைத் தவிருங்கள். குடும்ப உறுப்பினர்களுக்கு நோய் முன்னெச்சரிக்கையாக முழு உடல் பரிசோதனைகளைச் செய்து கொள்வது நல்லது. நண்பர்கள், உறவுகளிடம் பகைமை நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளதால், நாவை அடக்கி, நிதானமாகச் செயல்பட அறிவுறுத்தப் படுகிறீர்கள். சிலருக்கு எதிலும் சலிப்பு, டென்ஷன், தலைசுற்றல், காய்ச்சல், தூக்கமின்மை வந்து போகும்.  சமயோஜித புத்தியுடன் செயல்படுவது சங்கடங்களைத் தீர்க்கும். இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்களின் கடின உழைப்பே, அவர்களைக் கல்விக் கடலின் இனிய கரை சேர்க்கும். பொதுவாக, ஜாதகத்தில் நல்ல தசா - புத்திகள் நடந்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும் கை கொடுத்தால் கேட்கவே வேண்டாம்.

       குடும்பம் மற்றும் பொருளாதாரம்தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். சிலருக்குச் சுகம்தனலாபம்புதிய நண்பர்கள் மற்றும் சந்தோஷம் ஆகியவை ஏற்படும்துன்பத்தில் கைகொடுக்கும் துணையின் உதவியால் மனதில் அமைதி நிலவும்.புதிய சாதனைகள் புரிவர்உடற்பொலிவும் ஒளியும் கூடும்மனதுக்குப் பிடித்தபடி மனைவீடு மற்றும் வாகன வசதிகள் கிடைக்கும்மனைவியுடன் சிறுசிறு ஊடல்கள் ஏற்படும்.
       தொழில் மற்றும் வியாபாரம்  ;- தொழிலிலும்சமூக வாழ்விலும் முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். வியாபாரத்தில் ஈடுபாடும் அதிகரிக்கும்அதன் காரணமாகப் பண இலாபங்களும் அதிகரிக்கும்.  புதிய திட்டங்களில் முதலீடு செய்யாதிருப்பது நல்லது. தங்கள் முதலீடுகளை வேறு புதிய திட்டங்களில் முதலீடு செய்ய முனைவீர்கள்வியாபாரத்தில் இருந்த வந்த மந்த நிலைகள் தொடரும்விவசாயிகள் விவசாயத்தில் நவீன முறைகளைக் கையாண்டு இலாபம் ஈட்டமுனைவர்.
       உத்தியோகஸ்தர்களுக்கு – வெளியிடத்தில் சென்று பணிபுரிய விரும்புவர்களுக்கு நல்ல வாய்ப்புகள்   அமையும்.  உங்கள் பணியில் அதிகாரிகளின் அதிகமான தலையீடுகள் இருக்கும். ஆதலால், அதிகாரிகளை அனுசரித்துச் செல்லுங்கள். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு தாமதம் ஆனாலும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உயர்பதவிக்காகக் காத்திருப்பவர்கள் உடனடியாகக் கிடைக்காவிட்டாலும்   தாமதம், தடைகளுக்குப் பிறகு கட்டாநம் கிடைக்கும்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        
       பெண்களுக்கு ;- குழந்தைகள் பராமரிப்பில் அதிக அக்கறைகொண்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள்திருமணமாகாத பெண்களுக்குத் திருமணமாகி மகிழ்ச்சிகரமான வாழ்க்கை அமையும்.  பெண்கள் அவப்பெயர் ஏற்படா வண்ணம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வுகளைத் தடைகளுக்குப் பிறகு எதிர்பார்க்கலாம் உயர் அதிகாரிகளின் கெடுபிடியால் மன உளைச்சல்கள் ஏற்படும்கடின உழைப்பின் காரணமாக ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம்.
       மாணவர்களுக்கு ;- மாணவர்களின் கல்வித்தரம் உயரும்சில மாணவர்களுக்கு ஆசிரியர்களின் வழிகாட்டுதல் இருந்தாலும்வீணாகப் பொழுதைக் கழிப்பதால் பின்தங்கிய நிலையில் இருப்பர்தடகளப் போட்டிகளில்  பங்கு பெற்று தேசிய அளவில் பரிசுகளை வெல்வர் நேர்காணல்களில் ஏற்படும் தடை தாமதங்களையும் மீறி அவற்றில் வெற்றி பெறுவர்வெளிநாடு சென்று பணிபுரியும் வாய்ப்புக்கள் அமையும்மிகுந்த அக்கறையுடன் படித்தால் மட்டுமே அதிக மதிப்பெண் பெற இயலும்.
      அரசியல்வாதிகளுக்கு – கட்சி மாற்றம், தலைமை மாற்றம் ஆகியவற்றில் ஈடுபட நேரும். சிலருக்கு மந்திரி போன்ற உயர்பதவிகள் பெற போராட வேண்டியிருக்கும். தேவையற்ற போராட்டங்களில் ஈடுபட்டு சிலர் சிறை செல்ல நேரலாம். மக்கள் மத்தியில் புகழ் உயர்ந்து மதிப்பும் மரியாதையும் கூடும். தொண்டர்கள் வகையில் அதிக செலவினங்களை எதிர்பார்க்கலாம். மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குகளை நிறைவேற்ற மிகுந்த பிரயாசை எடுக்க வேண்டியதிருக்கும்.
       கலைஞர்களுக்கு – வெளிவட்டாரப் பழக்கங்களும், பிற இனத்தவர் தொடர்பும் அதிக பட வாய்ப்புகளை ஏற்படும். வெளியூரில் புகழ் அதிகரித்து, உள்ளூரில் இருக்கும் மதிப்புக் குறைய வாய்ப்பு ஏற்படும். நடித்துக் கொடுத்த படங்களுக்கு வரவேண்டிய சம்பள பாக்கிகளை வசூலிப்பதே பெரிய வேலை ஆகிவிடும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு இன்மையால் சில பிரச்சனைகளை எழலாம். சுகவாழ்வு, சொகுசான நிலைக்கு பஞ்சம் இருக்காது.
       பரிகாரங்கள் – வெள்ளிக் கிழமை தோறும் பாம்புப் புற்றுள்ள இடத்தில் பால், பழம், முட்டை படைத்து வழிபடுதல் தோஷங்களை நீக்கும். சங்கடசதுர்த்தி அன்று விநாயகருக்கு விரதம் இருந்து வழிபாடு செய்வது சிறப்பு. திருப்பதி அருகிலுள்ள காளஹஸ்தி, கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஆகிய ஸ்தலங்களுக்கு ஒருமுறை சென்று வழிபடுவது நல்லது. கேதுவுக்கு கீழ்பெரும்பள்ளம் சென்று வழிபாடு செய்யுங்கள். சங்கரன்கோவில் சென்று புற்றுக்கு பால், பழம், வைத்து வழிபட்டுவிட்டு சங்கரநயினார் கோமதியம்பாளை தரிசிப்பது சிறப்பு.


மகரம்



உத்திராடம்- 2,3,4- பாதங்கள்திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )
                 கர்மகாரகனான சனியை அதிபதியாகக் கொண்ட மகரராசி அன்பர்களேதங்கள் இராசிக்கு திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 09 - 03 - 2019  மாசி மாதம் 25 ஆம் தேதி சனிக்கிழமை  இரவு சுமார் 08 – 09 மணி அளவில்– சாய கிரகங்களான இராகு கடக இராசியில் இருந்து மிதுனத்துக்கும், கேது        மகர இராசியில் இருந்து தனுசுக்குமாக பெயர்ச்சி ஆகிறார்கள். அதனால் ஏற்படும் பலன்களைப் பார்ப்போம்.

       கடந்த ஒன்றரை வருட காலமாக இராகு பகவான் உங்கள் களத்திர பாவத்திலும் கேது – ஜென்ம இராசியிலுமாக சஞ்சாரம் செய்து சுமாரான பலன்களை வழங்கி வந்தனர். விளம்பி வருடம் மாசி மாதம் 25 ஆம் தேதி  முதல் மிதுன இராசியான ருண, ரோக, சத்ரு பாவத்துக்கு  இராகுவும், தனுசு இராசியான விரயபாவமான 12 ஆம் இடத்துக்குக் கேதுவும் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு சஞ்சரிக்க உள்ளனர். இந்தப் பெயர்ச்சி மூலமாக இராகுவால் ஆதாயங்களைப் பெறுவீர்கள். கேதுவால் சுமாரான பலன்களையே எதிர்பார்க்கலாம்.

      சத்ரு பாவத்துக்கு மாறும் இராகுவால் சேவைப் பணிகள் மூலமான ஆதாயங்கள், உதவியாளர்கள் மற்றும் உடன் இருப்பவர்களின் மூலமான ஆதாயங்களும் குறிகாட்டப்படுகின்றன. உடல் ஆரோக்கியத்தை மிகுந்த எச்சரிக்கையுடன் பேணிக் காக்கவும். அதற்கு, எந்தவொரு விஷயத்துக்கும் டென்ஷன் ஆகாமல், அதிக்க் கடினமான பணிகளைச் செய்யாமல் இருப்பது நல்லது. கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்றில்லாமல் அனுபவபூர்வமாக உணர்ந்து செயல்படுவதே சிறப்பாகும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் விரைவில் நடக்கும்புது வாகனம் வாங்கும் யோகம் மற்றும்  புத்திர பாக்கியம் ஏற்படும். நல்ல யோகமான காலமாதலால் அரசாங்க அனுகூலங்கள்எதிரிகளை வெல்லுதல்அதிகரிக்கும் சொத்துக்கள் என எல்லாம் நன்மையாகவே நடக்கும். சிலருக்கு நோய்கள் விலகும். வீட்டில் உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்புக் கூடும். எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அசையும், அசையாச் சொத்துக்கள் வாங்கும் போது கவனம் தேவை. தந்தையுடன் இதுவரை இருந்த மனக் கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி பிறக்கும்மாணவர்களுக்கு இதுவரை இருந்த மந்த நிலை நீங்கி படிப்பில் முன்னேறுவார்கள்குலதெய்வம் ஆசி கிட்டும்சுற்றுலாவின் மூலம் பல புண்ணியத்தலங்களுக்குச் சென்று மகிழ்வீர்கள்அரசியலில் அனுகூலம் ஏற்படும்.

       விரய பாவம் வரும் கேதுவால்  ஆன்மீக விஷயங்களிலும், தியானம் ஆகியவற்றிலும் ஆர்வம் ஏற்படும். இரகசிய திட்டங்கள், தியாக உணர்வு, தன்னம்பிக்கை இன்மை, சந்தேக குணம், புரட்சிகரமான எண்ணங்கள் ஆகியவை ஜாதகரின் மனத்தில் கிளர்த்து எழும். இந்தக் காலம் ஒருவர் தனது குற்றங்குறைகளை உணர்ந்து, தனது அனுபவத்தையே பாடமாகக் கொண்டு வருங்கால முன்னேற்றத்துக்குப் படியாக அமைத்துக் கொள்ளும் காலம் ஆகும்.    குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள்தடுமாற்றங்கள் அனைத்தும் உங்கள் சமயோசித புத்தியால் சரியாகிவிடும்.  சிறு உடல் உபாதைகள் ஏற்படலாம்ஏமாற்றங்கள்மனமகிழ்ச்சியற்ற மணவாழ்க்கைகணவன் மனைவிக்கிடையேயான ஊடல்கள் ஆகியவை தவிர்க்கமுடியாத நிகழ்வுகளாகும். தெய்வ தரிசனங்களுக்காக அடிக்கடி புண்ணிய ஸ்தலங்களுக்குப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். அதன் காரணமாக சிறுசிறு வீண்விரயங்கள் எதிர்கொள்ள நேரும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொண்டால் கடனகளின்றி நிம்மதியாக வாழலாம். பணம் கொடுக்கல் வாங்கலிலும், கொடுத்த கடன்களைத் திரும்பப் பெறுவதிலும் தடைகள் உண்டாகும். கூட்டாளிகளிடமும், தொழிலாளர்களிடமும் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அரசுப் பணியாளர்கள் சற்று நெருக்கடிகளைச் சந்தித்தாலும் உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். பொதுவாக, ஜாதகத்தில் நல்ல தசா - புத்திகள் நடந்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும் கை கொடுத்தால் கேட்கவே வேண்டாம்.
      
       குடும்பம் மற்றும் பொருளாதாரம்  ;- வீட்டில் மங்கள சுப காரியங்கள் நடக்கும்உயர்ந்த மனிதர்களின் நட்பு ஏற்படும் வாய்ப்பு ஏற்படும். செல்வம் சேரும்திருமணம் ஆகாதவர்களுக்கு அழகிய மனைவி அமைவாள்ஆனல், தாமதப்படலாம்மகிழ்ச்சியான மணவாழ்க்கை அமையும்.  பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும்மனைவியின் பக்திமார்க்கம் உங்களின் மத உணர்வைத் தூண்டும்கீர்த்தி பெருகும்புனித காரியங்களில் ஈடுபாடுவார்சிலருக்கு குடும்பச் சொத்து கிடைக்கும்

      தொழில் மற்றும் வியாபாரம் ;- சிலருக்கு எதிர்பாராத விதமாக வேலை கிடைக்கும்தங்கள் மீது நல்லெண்ணம் கொண்ட நண்பர்களின் உதவியால்கூட்டாளிகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் சுமுகமாகத் தீரும்வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்களால் நன்மை  ஏற்படும்தொழில் மற்றும் வியாபார முதலீடுகளுக்கு வங்கிக் கடன்கள்  சுலபமாகக் கிடைக்கும்அரசின் உதவிகள் கைகொடுக்கும்.  எதைச் செய்தாலும் சிரத்தையுடன் செய்தால் வெற்றி உண்டுவிவசாயப்பணிகள் சிறப்புற நடந்து ஆதாயம் பெருகும்
      உத்தியோகஸ்தர்களுக்கு – வெகுநாட்களாக முயற்சித்து வந்த இடமாற்ற விருப்பம் இனிதே நிறைவேறும்பணி நிமித்தமாகப் பல பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்அதன் காரணமாக குடும்பத்தைப் பிரிய வேண்டிய சூழலும் உருவாகும்.  உதவி என்று போனால் உடன் பணிபுரிபவர்கள் ஓடோடி வந்து உதவி புரிவர்உயர் அதிகாரிகளின் ஆதரவு பணியில் ஒரு தெம்பைத் தரும்.  புதியதாக வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கஅலுவலக்க் கடன் உடனடியாக்க் கிடைக்கும்.                                                                                                                                                                                                      
       பெண்களுக்கு ;- பணிபுரியும் பெண்கள் தற்போது பார்க்கின்ற வேலையை விட்டுவிட்டு வேறு நல்ல வேலை தேடுவார்கள்உயர் அதிகாரிகளின் சகாயத்தால் பணிகளில் இருந்து வந்த கெடுபிடிகள் குறையும்குடும்பத்தில் பெண்கள் அடங்கிப்போவது நல்லது. கணவன்மார்களின் உதவியால் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.  பொன்நகைபுதிய ஆடை சேர்க்கை உண்டுசிலருக்கு வீண்பழிபகை ஏற்படலாம். பணிபுரியும் பெண்கள்  உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவர்.
        மாணவர்களுக்கு ;- உயர்கல்வி பயிலும் மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டும்வேடிக்கை விளையாட்டுக்கள்வெட்டிப் பொழுது போக்குகளைத் தவிர்க்கவும். அப்போதுதான் அறிவுத்திறனும்கல்வியில் தேர்ச்சியும் ஏற்படும்.   மிகுந்த அக்கறையுடன் பாடங்களைப்  படித்தால் மட்டுமே தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற இயலும். அதிக மதிப்பெண்கள் பெற அயராது பாடுபடவேண்டும்தேர்வுகள் முடியும் வரை கிரிக்கெட் பார்ப்பதை ஒத்திப் போடுவது நல்லது
       அரசியல்வாதிகளுக்கு – அரசியலில் நிரந்தர நட்போ பகையோ கிடையாதுஇன்றைய தோழன்நாளைய பகைவன் ஆவான்கட்சி மேலிடம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டிய சூழ்நிலை எழும்உங்கள் மேல் பொறாமை குணம் உள்ளவர்களால்உங்கள் முன்னேற்றம் பாதிக்கப்படும்தொண்டர்களின் ஆதரவு சமயத்தில் கை கொடுக்கும்பதவியைக் கைகொள்ள பணத்தையும்உழைப்பையும் அதிகமாகவே செலவழிக்க வேண்டிய நிலை உருவாகும்.
       கலைஞர்களுக்கு – புதிய ஒப்பந்தங்களால் மன மகிழ்ச்சி ஏற்பட்டாலும்பொருளாதார நிலை சீராக இருக்காதுகூட இருப்பவர்களே குழி பறிப்பர்முக்கியமான பணிகளை பிறரை நம்பி கொடுக்காமல் நீங்களே செய்வது நல்லதுவெளியூர்வெளிநாட்டுப் படப்பிடிப்பு காரணமாக குடும்பத்தைவிட்டு நீண்ட நாட்கள் பிரிய வேண்டிய நிலை ஏற்படும்பயணங்கள் இனிதாகும்அரசு கௌரவங்கள்பட்டம் பதவிகள் சிலரைத் தேடிவரும்உனட் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வதுமுன்னேற்த்துக்கு வழி வகுக்கும்.
       பரிகாரங்கள் – பௌர்ணமியன்று அம்பாளுக்கு சிகப்பு வஸ்திரம் சாத்தி, நெய் விளக்கேற்றி வழிபடுவது சிறப்பு. சங்கடசதுர்த்தி அன்று விநாயகருக்கு விரதம் இருந்து வழிபாடு செய்வது சிறப்பு. திருப்பதி அருகிலுள்ள காளஹஸ்தி, கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஆகிய ஸ்தலங்களுக்கு ஒருமுறை சென்று வழிபடுவது நல்லது. கேதுவுக்கு கீழ்பெரும்பள்ளம் சென்று வழிபாடு செய்யுங்கள். சங்கரன்கோவில் சென்று புற்றுக்கு பால், பழம், வைத்து வழிபட்டுவிட்டு சங்கரநயினார் கோமதியம்பாளை தரிசிப்பது சிறப்பு.






கும்பம்



அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)
                ஆயுள் காரகனான சனியை அதிபதியாகக் கொண்ட கும்பராசி அன்பர்களேதங்கள் இராசிக்கு திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 09 - 03 - 2019  மாசி மாதம் 25 ஆம் தேதி சனிக்கிழமை  இரவு சுமார் 08 – 09 மணி அளவில்– சாய கிரகங்களான இராகு கடக இராசியில் இருந்து மிதுனத்துக்கும், கேது        மகர இராசியில் இருந்து தனுசுக்குமாக பெயர்ச்சி ஆகிறார்கள். அதனால் ஏற்படும் பலன்களைப் பார்ப்போம்.
         கடந்த ஒன்றரை வருட காலமாக இராகு பகவான் உங்கள் ருணரோகசத்ரு பாவத்திலும் கேது – விரய ஸ்தானத்திலுமாக சஞ்சாரம் செய்து சுமாரான பலன்களை வழங்கி வந்தனர். விளம்பி வருடம் மாசி மாதம் 25 ஆம் தேதி  முதல்  மிதுன இராசியான புத்திர பாவத்துக்கு  இராகுவும், தனுசு இராசியான 11 ஆம் இடத்துக்குக் கேதுவும் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு சஞ்சரிக்க உள்ளனர். இந்தப் பெயர்ச்சியின் காரணமாக இராகுவால் சுமாரான ஆதாயங்களைப் பெறுவீர்கள். கேதுவால் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.

       புத்திர பாவத்துக்கு மாறும் இராகுவால் காதல்குழந்தைகள் மூலமான சந்தோஷம் மற்றும் இலாபம் குறிகாட்டப்படுகிறதுசாதகமானசந்தோஷமான காதல் நிலைகள் உருவாகும்பங்குச் சந்தை விவகாரங்களில் அதிக இலாபம் கிடைக்கும்கற்ற கல்வி மூலமாக ஏற்பட்ட திறனால் உருவாக்கப்பட்ட புதிய பொருள்களை விற்பனை செய்வதின் மூலமாக சம்பாதித்து செல்வம் சேர்ப்பர். சிலருக்கு வியாபாரத்தில்  எதிர்பார்த்த இலாபங்கள் கிட்டாதுவீண் விரயங்கள் ஏற்பட்டு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்பொருளாதாரம் சீராக இருக்காது. சிலர் அன்றாடச் செலவுக்குக் கூட பணம் இல்லாமல் அவதிப்பட நேரும்சிலருக்கு புத்திர தோஷம் அதாவது புத்திரர்களால் தொல்லை ஏற்படும்அவர்கள் நீங்கள் சொன்ன பேச்சைக் காது கொடுத்துக் கேட்கமாட்டார்கள்கட்டுப்படவும் மாட்டார்கள்புத்தி கலக்கம் ஏற்படலாம்.   எல்லாக் காரியங்களையும்முறையாகச் செய்யா  மல் , தலைகீழகாச் செய்வார்கள்.  தாய்தந்தையரின் உடல் ஆரோக்கியத்தை பேணிக் காப்பது உங்கள் கடமையாகும்சிலருக்கு விபத்து ஏற்பட்டு அங்ககீனம் ஆகலாம்எனவே வாகனங்கள் ஓட்டும் போது எச்சரிக்கை தேவைஒழுக்கம் கெட்ட பெண்களிடம் இருந்து விலகியே இருப்பது நல்லது.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   

       இலாப பாவத்துக்கு மாறும் கேதுவால் எல்லாவழிகளிலும் இலாபம் உண்டாகும்பயிர் விளைச்சல்கள் அதிகரிக்கும்சொன்ன சொல் தவறாதவராக விளங்குவார்எல்லாக் காரியங்களிலும் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்வீட்டில் குடும்பத்தார் அனைவருக்கும் தேவையான அனைத்துப் பொருட்களும் நிரம்பி வழியும்சுகபோக வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் இருப்பதால் ஜாதகர் எப்போதும் மகாராஜன் போல் வாழ்ந்துமகாராஜன் என்று பெயர் எடுப்பார்பல வகையான தொழில்களில் முதலீடு செய்து வருமானத்தைப் பெருக்கி வாழ்வாங்கு வாழ்வீர்கள்சிலர் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தைப் பெறுக்குவீர்கள்நீதிபதிவக்கீல் என நீதித்துறை பணிகளில் ஈடுபடும் யோகம் ஏற்படும்உத்தியோகம் உயரும்அரசாங்கத்தால் வரும் வருமானம் பெருகும்.  உறவுகளிடைய பகைமை நிலவும்ஆனால் அவர்களை உங்கள் சமயோஜித புத்தியால் வெற்றி கொள்வீர்கள்அவர்களை உங்கள் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவந்து விடுவீர்கள்மூத்த சகோதரத்திற்கு அரிஷ்டம் உண்டாகலாம்ஆனாலும் எல்லாவகையிலும் நன்மையே அடைவீர்கள்இதுவரை திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் சிறப்பாக நடக்கும்பிள்ளைகளால் பெற்றவர்களுக்கு பெருமை சேரும்தொழில் துறையில் நல்ல வளர்ச்சி ஏற்படும்.  மனைவி மக்களுடன் வாழ்க்கை சந்தோஷமாகக் கழியும்.  வீட்டில் மங்கள சுபகாரியங்கள் இனிதே நடந்து மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.  பொதுவாக, ஜாதகத்தில் நல்ல தசா - புத்திகள் நடந்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும் கை கொடுத்தால் கேட்கவே வேண்டாம்.

    குடும்பம் மற்றும் பொருளாதாரம் ;- பொருளாதார நிலைகள் சீராகி வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் புதிய நுணுக்கங்களைக் கைக்கொண்டு வியாபாரத்தில் ஆதாயம் காணலாம்ஆரோக்கியம் மேம்படும்அதிக உழைப்பின் பேரில் முயற்சிகளில் ழுழு வெற்றி கிடைக்கும்இறை பக்தியும் தரும சிந்தனையும் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி நிலவும்சாமர்த்திய சாலியாகவும்சுயகாரியப் புலியாகவும் திகழ்வர்உறவுகள் கை கொடுக்கும்வெளிநாட்டுப் பயணங்கள் ஆதாயம் தரும்.
       தொழில் மற்றும் வியாபாரம் ; வணிக சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்படலாம்.  மதிப்புமிக்க மனிதர்களின் நட்பு கிடைக்கும்பழைய கடன்களைத் தீர்க்கப் புதிய கடன்கள் வாங்க நேரும்.  புதிய முதலீடுகளால் ஆதாயம் அதிகரிக்கும்தொழில் விரிவாக்கத் திட்டங்களுக்கு அரசு  உதவிகள் கிடைக்கும்தொழில் மற்றும் வியாபார முதலீடுகளுக்கு வங்கிக் கடன்கள் சுலபமாகக் கிடைக்கும்விவசாயப்பணிகள் சிறப்புற நடந்து ஆதாயம் பெருகும்அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கும்
        உத்தியோகஸ்தர்களுக்கு – விருப்பம் இல்லாத ஊருக்கு வரும் திடீர் இடமாற்ற உத்திரவுகளால் நிதி நிலைமை தள்ளாட்டம் காணலாம்குடும்பம்பிள்ளை குட்டிகளை விட்டு பிரியும் சூழ்நிலை எழலாம்மேலதிகாரிகள் நல்ல முறையில் உங்களுக்கு ஆதரவு அளித்தாலும்அவர்கள் உதாசீனப்படுத்துவது போல் ஓர் உணர்வு ஏற்படும்உடன் பணிபுரிபவர்கள் தாங்கள் சொல்லும் ஆலோசனைகளைஅவர்கள் சொல்வது போல் அதிகாரிகளிடம் கூறி பாராட்டைப் பெறுவார்கள்எனவேநண்பரகளாய் இருந்தாலும் ஓரளவுக்கு விலக்கியே வைத்திருப்பது நல்லது.
       பெண்களுக்கு ;-  வீட்டிற்கு ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வர்பணிபுரியும் பெண்கள் கடமை உணர்வுடன் செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவர்கணவன் மனைவிக்குள்,  கருத்து வேறுபாடுகள் மறைந்து நல்லுறவு அதிகரிக்கும்பணிபுரியம் பெண்களுக்குப் பெண் உயர் அதிகாரிகளால் நெருக்கடி ஏற்படலாம்வாகனங்களில் செல்கையில் கவனமுடன் செல்லுதல் அவசியம்உயர் அதிகாரிகளின் ஆதரவால் பணி உயர்வுக்கான பரிந்துரைகள் செய்வதில் அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவர். குழந்தைகளின் அபரிமிதமான வளர்ச்சி கண்டு மனம் மகிழ்வீர்கள்.  
        மாணவர்களுக்கு -- படிப்பில் தேர்ச்சி ஏற்பட்டுஅறிவுச் சுடரொளி வீசும். மாணவமாணவிகளின் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்சிலர் தேவையற்ற காதல் விவகாரங்களில் ஈடுபடுவதால் சிக்கல்கள் ஏற்படலாம். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டும்அக்கறையுடன் படித்து அதிக மதிப்பெண்கள் பெற அயராது பாடுபடவேண்டும்வேடிக்கை விளையாட்டுக்கள்வெட்டிப் பொழுதுபோக்குகளைத் தவிர்க்கவும்.
       அரசியல்வாதிகளுக்கு – மக்கள் சேவைகளை திறம்படச் செய்யும் உங்களின் மதிப்பும், மரியாதையும் கூடும். கௌரவம் மிக்க பதவிகள் தேடி வரும் என்றாலும், போட்டி, பொறாமைகளால் தடைகள், தாமதத்திற்குப் பிறகே கிடைக்கும். பொருளாதர நிலை சிறப்பாக இருக்குமாதலால் தொண்டர்களின் தேவைகளுக்கு தாராளமாகச் செலவு செய்தால் அவர்களின் ஆதரவு நிலைத்து நிற்கும். முடக்கப்பட்ட கட்சி சின்னங்கள் திரும்பப் பெரும் நடவடிக்கைகளை எடுக்கலாம். அரசியலில் நிலைத்து நிற்க கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது நல்லது.
       கலைஞர்களுக்கு – உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான அரிய வாய்ப்புகள் கதவைத் தட்டும். அதன் காரணமாக நல்ல நல்ல வாயப்புகள் தேடி வரக்கூடிய யோகம் உண்டாகும். தங்கள் சிறப்பான நடிப்புக்கான அரசாங்க, தனியார விருதுகள் கிடைத்து உங்கள் புகழ் எட்டுத் திக்கும் பரவும். வெளியூர், வெளிநாட்டுப் பயணங்களின் போது போக்குவரத்து இடையூறுகள் ஏற்படலாம். புதிய விலை உயர்ந்த அதி நவீன மகிழ் ஊர்திகளை வாங்கும் யோகம் ஏற்படும். ஆயினும், வாகனப் பயணங்களின் போது எச்சரிக்கையுடன் வாகனத்தை ஓட்டுதல் அவசியம்.
       பரிகாரங்கள் – தேய்பிறை அஷ்டமி தோறும் காலபைரவரை வணங்கி, வழிபாடு செய்வது நல்லது. சங்கடசதுர்த்தி அன்று விநாயகருக்கு விரதம் இருந்து வழிபாடு செய்வது சிறப்பு. திருப்பதி அருகிலுள்ள காளஹஸ்தி, கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஆகிய ஸ்தலங்களுக்கு ஒருமுறை சென்று வழிபடுவது நல்லது. கேதுவுக்கு கீழ்பெரும்பள்ளம் சென்று வழிபாடு செய்யுங்கள். சங்கரன்கோவில் சென்று புற்றுக்கு பால், பழம், வைத்து வழிபட்டுவிட்டு சங்கரநயினார் கோமதியம்பாளை தரிசிப்பது சிறப்பு.



மீனம்



பூரட்டாதி – 4 ஆம் பாதம்உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)
       தேவகுருவான குருவை அதிபதியாகக் கொண்ட மீனராசி அன்பர்களேதங்கள் இராசிக்கு திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 09 - 03 - 2019  மாசி மாதம் 25 ஆம் தேதி சனிக்கிழமை  இரவு சுமார் 08 – 09 மணி அளவில்– சாய கிரகங்களான இராகு கடக இராசியில் இருந்து மிதுனத்துக்கும், கேது        மகர இராசியில் இருந்து தனுசுக்குமாக பெயர்ச்சி ஆகிறார்கள். அதனால் ஏற்படும் பலன்களைப் பார்ப்போம்.
         கடந்த ஒன்றரை வருட காலமாக இராகு பகவான் உங்கள் இராசிக்கு பஞ்சம ஸ்தானத்திலும்  கேது – இலாப ஸ்தானத்திலுமாக சஞ்சாரம் செய்து சுமாரான பலன்களை  வழங்கி வந்தார். தொழிலில் முன்னேற்றமும், அதிக இலாபங்களையும் வழங்கினாலும், தடங்கல்களையும், தொழிலில் போட்டி பொறாமைகளையும் ஏற்படுத்தி வந்தனர். பூர்வீக சொத்துக்களில் பிரச்சனைகளையும், பொது வாழ்வில் அவமானங்களையும் கொடுத்துவந்தார். தற்சமயம் விளம்பி வருடம் மாசி மாதம் 25 ஆம் தேதி  முதல் மிதுன இராசியான 4 ஆம் இடத்துக்கு இராகுவும், தனுசு இராசியான 10 ஆம் இடத்துக்குக் கேதுவும் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு சஞ்சரிக்க உள்ளனர்.

       இவை சாதகாமான அமைப்பு அல்ல. இதன் காரணமாக சுக பாவ இராகுவால் மனைவி வழியிலும், சகோதர வழியிலும் வெட்டிச் செலவுகளும், தாயாரின் உடல் நிலை  பாதிப்பு, வாகன விபத்துகள் அல்லது வாகனத்தில் ஏற்படும் பழுதுகளைச் சீர் செய்ய வேண்டிய  வகையில் பராமரிப்புச் செலவுகள், கால்நடைகளுக்குச் சேதாரங்கள் ஆகியவைகளும் ஏற்படலாம். வீண் அலைச்சல்களைத் தவிர்க்கவும். சொத்து பரிவர்த்தனைகளின் போது எச்சரிக்கையுடன் இருக்கவும். உயர்கல்வி பயில்பவர்கள் வேண்டாத விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் எச்சரிக்கையாக இருந்தால் தேறலாம். மருத்துவரின் கவனக் குறைவால் வேண்டாத பிரச்சனைகள் எழலாம். நண்பர்களும் பகைவராவர். யாத்திரையின் போது எச்சரிக்கை தேவை. இத்தகைய பிரச்சனைகளால் தூக்கம் குறையும் கவலைகள் அதிகரிக்கும். வீடு, நிலம், வாகனம் போன்றவற்றை வாங்கும் முன் தரகர்களை நம்பாமல் அவற்றின் தஸ்தாவேஜூகளை அலசி, ஆராய்ந்து முடித்துக் கொள்வது நல்லது.
       கர்ம பாவக்  கேதுவால் நற்பலன்கள் உண்டாகும். பணவரவும், இலாபமும் அதிகம் இருந்த போதும், சூதாட்டம் போன்ற முறையற்ற வழிகளில் ஈடுபடுவதனால் அவற்றை இழக்க நேரும். இதுவரை இழுபறியாய் இருந்த காரியங்கள் வெற்றி அடையும். புதிய முன்னேற்றத்துக்கான பாதைகள் வகுக்கப்படும். தொழிலில் இலாபமும், உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவால் உத்தியோக உயர்வும் ஏற்படும். சிலர் போலித் துறவியாகும் சூழ்நிலை உருவாகலாம். இராகுவை விட கேது இவ்விடத்தில் அசுப பலனைக் குறைவாகவே தருவார் என்பதே ஓர் ஆறுதல். வேள்வி, யாகாதி காரியங்கள், புண்ணயத்தல யாத்திரைகள் ஆகியவை ஏற்படும். சிலருக்கு மடாதிபதிகள், மதத் தலைமை ஏற்று நடத்துதல் போன்ற முக்கிய பொறுப்புகள் தேடி வரும். பொதுவாக, ஜாதகத்தில் நல்ல தசா - புத்திகள் நடந்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும் கை கொடுத்தால் கேட்கவே வேண்டாம்.

       குடும்பம் மற்றும் பொருளாதாரம் – கணவன் மனைவிடையே ஒற்றுமை பலப்படும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு திருமணம் கைகூடும். பொன், பொருள் சேரும். அசையும், அசையாச் சொத்துக்களால் வீண்செலவுகள் ஏற்படும். தேவைக்கேற்ற பணவரவுகள் தேடி வரும். உற்றார் உறவினர்களின் ஆதரவு உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கும். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடை, தாமதங்களுக்குப் பிறகு வெற்றி ஏற்படும். கொடுக்கல் – வாங்கலில் சரளமானநிலை ஏற்பட்டாலும், பெரிய தொகைகளைக் கையாளும் போது எச்சரிக்கை தேவை.

       தொழில் மற்றும் வியாபாரம் – தொழில், வியாபாரம் செய்பவர்களுக்குச் சிறப்பான காலம். இலாபம் அதிகரிக்கும். போட்டி, பொறாமைகாரணமாக, எதிராளிகள் தரும் இன்னல்களை எப்பாடுபட்டாவது சமாளித்து விடுவீர்கள். வங்கிக் கடன்கள் எளிதாகக் கிடைத்து தொழில் முதலீடுகள் அதிகரிக்கும் நிலை ஏற்படும். அலைச்சல்களைத் தவிர்க்க பயணங்களைத் தள்ளிப் போடுவது நல்லது.

       உத்தியோகஸ்தர்களுக்கு – அரசுப் பணியாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட இலக்கினை, உதவியாளர்களின் உதவியோடு சிறப்பாக செய்து முடித்து உயர் அதிகாரிகளிடம் நற்பெயர் எடுப்பர். திறமைக்கு ஏற்ப பாரட்டுக்களும் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு, குடும்பத்தினரைப் பிரிய நேரலாம்.

       பெண்களுக்கு – அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புப்புடன் செயல்பட்டாலும், சிறுசிறு பிரச்சனைகள் எழலாம். புதிய முயற்சிகள் மிகுந்த பிரயாசைக்குப் பிறகே கூடிவரும். மணமாகாதவர்களுக்கு அவர்கள் எண்ணப்படி நல்ல இடத்தில் திருமண ஏற்பாடுகள் நடக்கும். நினைத்தபடி நினைத்த காரியங்கள் நடக்கும். பணிபுரியும் பெண்களுக்கு வேலைப்பளு காரணமாக போதுமான அளவு ஓய்வு எடுக்க முடியாத நிலை ஏற்படலாம்.

      அரசியல்வாதிகளுக்கு – பொருளாதார நிலை சீராக இருக்கும். இதுநாள்வரை இருந்துவந்த சிக்கல்கள், குழப்பங்கள், பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி சுமுக நிலை உருவாகும். தொண்டர்களின் ஆதரவு பெருகினாலும், கட்சிப் பணிக்கான செலவுகள் எகிறும். பொதுமக்களின் ஆதரவு குறையும். பொதுமக்களுக்கு அரசு மானியங்கள், உதவிகள் தடையின்றிக் கிடைக்கும்.

       மாணவர்களுக்கு – கல்வியில் இடர்பாடுகளைக் களைய மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்ளாவிடில் பின்னர் வருத்தப்பட நேரும். எனவே, பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற தகவல் தொழில் நுட்ப அமைப்புகளில் நேரத்தை வீண்டிக்காது இருப்பது நல்லது. நல்ல நண்பர்களின் நெருக்கம் மகிழ்ச்சி அளிக்கும். கல்விச் சுற்றுலாக்களின் மூலமாக அறிவு விருத்திக்கான சூழல் மாணவர்களுக்கு ஏற்படும். விளையாட்டு வீரர்களுக்கு போட்டிகளில் வெற்றிக்கான பதக்கங்களும், பட்டயங்களும் கிடைத்துப் பள்ளிக்குப் பெருமை சேர்ப்பர்.

       கலைஞர்களுக்கு – புதிய தொடர்புகள் மகிழ்ச்சி அளிக்கும். நல்லமுறையில் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கை கொடுக்கும். தேவைக்கு அதிகமான வருமானம் வருவதால் மகிழ்ச்சி பொங்கும். ஆயினும், வருமானவரித்துறையின் கெடுபிடிகள் தொல்லை தரலாம். முதன்மை நிலைக்கான போட்டிகளால் கலைத்துறை சூடு பிடிக்கும். புகழ் மிக்கவர்களின் பெயர் கெடும் வகையில் கிசு கிசுகள் மீடியாக்களில் வைரலாகும். 

       பரிகாரங்கள் – சண்டிகேஸ்வர்ரை திங்கள் தோறும் வழிபடுங்கள். எந்த காரியத்தையும் ஆரம்பிக்கும் முன்னும், விக்ன விநாயகரை வணங்குதல் நலம். சங்கடஹரசதுர்த்தி அன்று விரதம் இருப்பது நல்லது. ஒருமுறை கீழப் பெரும்பள்ளம் சென்று வழிபடுதல் சிறப்பு.


     



No comments:

Post a Comment