Search This Blog

Thursday 30 March 2017

துலாம், விருச்சிகம்- தமிழ் புத்தாண்டு பலன்கள்.


ஹேவிளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்


துலாம்



(சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)

       அசுர குருவான சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு ஹேவிளம்பி வருட கிரக நிலைகள் தரும் பலன்களைப் பார்ப்போம்.

       சூரியன்ஆடி மாத்த்தில்  தங்களுக்கு வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றி கிட்டும். தங்கள் கல்வித் தகுதி, திறமைக்கு ஏற்ப நல்ல சம்பளத்துடன் நல்ல  வேலை கிடைக்கும். வாழ்க்கையில் சந்தோஷம், செல்வம் ஆகியவை ஏற்படுகின்றன. ஆவணியில்  புதிய பதவிகளின் சொகுசை, மகிழ்ச்சியை அனுபவிக்கும் காலம். தனலாபம், மரியாதை மற்றும் முனேற்றங்களைத் தருகின்ற மாதம் ஆகும்வாழ்க்கையில் சிறப்பு மிக்க மரியாதைகளும், நல்ல மனிதர்களின் நட்பும் கிடைக்கும். பங்குனியில் மனஅமைதி, இலாபம் மற்றும் உயர்பதவிகள் குறிகாட்டப்படுகின்றன.

        செவ்வாய்புதிய வியாபார முதலீடுகள் மூலமாக அதிக இலாபங்களை ஈட்டுவீர்கள். தங்கள் பணியிடங்களில், தீ அணைக்கும் கருவிகளின் பணித்திறனை சோதித்து அறிவது, விபத்தைத் தடுக்க உதவும். மனவியுடன் மனஸ்தாபம் தவிர்க்கத் தாஜா செய்வது பலன் அளிக்கும். வழக்குகளில் வெற்றியும், உயர்அதிகாரிகளின் ஆதரவும் இருக்கும். அதன் பிறகு பூமிலாபம் மற்றும் புத்திர பாக்கியம் ஏற்படும். ஆடம்பரப் பொருட்களின் வரவு வீட்டிலுள்ளவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

       புதன்வருட துவக்கத்தில் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் சிறப்பாக நடக்கும். வாக்கால் வருமானம் பெருகும்கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகளும் ஏற்படும். தொடர்ந்து வரும் மாதங்களில், அலைச்சல் தரும் பயணங்களும், மரியாதையையும், புகழையும் தரும். திருமணம் நடக்கும். பின் வரும் மாதங்களில் நம்பிக்கையான நட்புறவு, நல்லுணவு ஆகியவை கிடைக்கும். உறவுகளுக்கு முன்னேற்றம் ஏற்படும்.

       சுக்கிரன்வருடத் துவக்கத்தில் வீட்டில்  பெண்கள் மகிழ்ச்சி அடையும்படியான நிகழ்ச்சிகள் நடைபெறும். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மூலமான மகிழ்ச்சியும், நல்ல காரியங்கள் செய்வதின் காரணமாகப் புகழும் பெருகும்தொழிலில் வெற்றி, பணஆதாயம், முன்னேற்றம் ஆகியவை ஏற்பட்டு, மனமகிழ்ச்சியும் அதிகரிக்கும். .

       குருவருடத் துவக்கத்தில் விரய பாவத்திலும், பின்னர் ஜன்மத்திலும் சஞ்சரிக்கிறார். அதனால் துவக்கத்தில் பதவி உத்தியோகத்தில் பிரச்சனைகள் எழலாம். சுபகாரியச்செலவுகள் ஏற்படும். உயர்குலப் பெண்ணால் அவப் பெயர் ஏற்படலாம். ஆவணி 27 க்குப் பிறகு இடமாற்றம், பதவி மாற்றம் ஆகியவை நிகழலாம். அனைத்திலும் இலாபமும்,  மகிழ்ச்சியும் குறையும். பிறர் வழங்கும் மதிப்பு, மரியாதை எனத் துவங்கிய வாழ்வு இந்த வருடம் முன்னேற்றகரமாகவே இருக்கும்.

       சனிதைரிய பாவத்தில் சஞ்சரிக்கும் சனி, இதுநாள்வரை தனபாவத்தில் இருந்து தந்த துன்பங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் நற்பலன்களைத் தருவார். சீரான உடல் ஆரோக்கியத்தையும், வாழ்க்கையில் படிப்படியான முன்னேற்றங்களையும், தைரியம், தன்னம்பிக்கை ஆகியவற்றையும் தருகிறார்செய்தொழில், வியாபாரம் எதுவாகினும் ஜீவன அபிவிருத்திக்கு திருப்திகரமான சூழலை உருவாக்கும். மொத்தத்தில் இவ்வருடம் 70 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.

விருச்சிகம்

( விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )

       தைரிய காரகனான செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக இராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு ஹேவிளம்பி வருட கிரக நிலைகள் தரும் பலன்களைப் பார்ப்போம்.

       சூரியன்சித்திரை மாதத்தில்  எதிரிகளை வென்று, வெற்றி மேல் வெற்றி அடைவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். ஆவணி மாதத்தில் நல்ல நண்பர்களின் நட்பால் மகிழ்ச்சி உருவாகும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் பரிபூர்ண ஆதரவு கிடைக்கும். புரட்டாசி மாதத்தில் எதிர்பார்த்தைவிட தனவரவு ஏற்பட்டு, குடும்பத்தில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.  தை மாதத்தில் மலையென அந்தஸ்து உயரும். இரக்க குணம் அதிகரித்து தான தர்மம் செய்வார்.

       செவ்வாய்கடன்கள் கட்டுக்குள் இருக்கும். சுற்றுவட்டாரத்தில் மதிப்பு, மரியாதைகள் கூடும். கூடுதலான தன வருமானத்தால் பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும்திருமணம், மக்கட்பேறு என வாழ்வின் மகிழ்ச்சிகரமான தருணங்களாக அமையும்அடுத்து வரும் மாதங்களில் சிறு விபத்துக்கள், காயங்கள் ஏற்படலாம்பின் வரும் மாதங்களில் கோபத்தால் காரியங்கள் கெடலாம். சிலருக்கு எல்லாத் துறைகளிலும் இலாபம் ஏற்படும்.

       புதன்புதிய தொழில், வணிக முயற்சிகள் வெற்றி பெற புத்துணர்வோடு செயல்படுவது நல்லது. சிலருக்கு உயர் கல்வியில் தேர்ச்சியும், அரசு உத்தியோகமும் கிடைக்கலாம். எழுத்துத் தொழில் ஏற்றம் தரும். பல பரிசுகளும், கௌரவமும் கிடைக்கும். மனைவியின் பேச்சைக் கேட்டு நடப்பர். பின் வரும் காலங்களில் சாதுர்யமும், சாமர்த்தியமும் பெருகும். பங்கு மார்க்கெட் வகையில் அதிக லாபம் அடைவர்.

       சுக்கிரன்குழந்தைகளின் வகையில் சுபச்செலவுகள் இருக்கும்.   மகிழ்ச்சிகரமான வெளியூர்ப் பயணங்கள் ஏற்படும். கடின உழைப்பால், விவசாயம் மற்றும் தொழில் மூலமான ஆதாயங்கள் பெருகும். பின்னர் வரும் காலத்தில் நல்ல குணமுள்ள நண்பர்களுடன் மட்டுமான சவகாசம் மட்டுமே உயர்வைத் தரும்.  சிலருக்குக் கடன்கள், அதிகமாகும். பெண்களால் நஷ்டம் ஏற்படும். சொத்துக்கள் சேரும்விருப்பமானவர்கள் தங்கள் காதலைத் தெரிவிக்க அன்பளிப்புகள் மற்றும் பரிசுகள் தருவர்.

       குருதற்போது இலாப பாவத்தில் சஞ்சரிக்கும் குரு ஆவணி 27 க்குப் பிறகு விரய பாவத்தில் இடம் பெறுகிறார். அதன் காரணமாக பிற்பகுதியில் அரசு விரோதம், சுப அசுப விரயங்கள் ஆகியவை ஏற்படும். முற்பகுதியில் இலாப குரு செல்வ நிலையை உயர்த்துவார். பாக்கியம் பெருகும். பணி உயர்வு கிடைக்கும். மனை, வயல் ஆகியவை சொந்தமாகக் கிடைக்கும். வீடு, நிலம் ஆகியவற்றை உடனடியாக்க் கிரையம் செய்வது நல்லது. நல்ல வேலையைத் தேடிக்கொண்டு, இருக்கும் வேலையை விட முயற்சிப்பதே அறிவுடமையாகும்.

       சனி –  தன பாவத்தில் அமர்ந்து குடும்பத்தில்  மனக்கவலைகளை  அளித்து வந்த சனி தன் 3, 7, 10 ஆகிய இடங்களின் மீதான பார்வையால் முயற்சிகளை வெற்றி பெற செய்வார். பதறிய காரியம் சிதறும் ஆதலால், நிதானமாகப் பொறுமையுடன் காரியங்களில் ஈடுபட்டால் சிறப்பாக அமையும். புதிய திட்டங்களை தொடங்குவதற்கு முன் ஒருமுறைக்குப் பல முறை சிந்தித்துச் செயல் படுவது சிக்கல்களையும், சிரமத்தையும் குறைக்கும். சிக்கல்கள் குறைய திருநள்ளாறு சென்று சனி ஓரையில் நீராடி, எள் தீபம் ஏற்றி, கருப்பு வஸ்திரம் சாத்தி, மனதார வேண்டி வணங்க, கதிரவனைக் கண்ட பனிபோல் கஷ்டங்களும் மறையும். மொத்தத்தில் இவ்வருடம் 65 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.

No comments:

Post a Comment