Search This Blog

Thursday 30 March 2017

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்-தனுசு, மகரம்.




ஹேவிளம்பி- தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்



தனுசு

 ( மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்ராடம் –1,2 பாதங்கள்)

    தேவகுருவான குருவை அதிபதியாகக் கொண்ட தனுர்ராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு ஹேவிளம்பி வருட கிரக நிலைகள் தரும் பலன்களைப்  பார்ப்போம்.

    சூரியன்வைகாசி மாதத்தில் வராத கடன்கள் அனைத்தும் வசூலாகும். எதிரிகளின் தொல்லை ஓரளவு குறையும்புரட்டாசி மாதத்தில் அரசின் உதவியால் செய்தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். அதிகாரிகளின் அனுசரணையால் அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். ஐப்பசி மாதத்தில்  புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். வாகனம் போன்றவற்றில் முதலீடு செய்யலாம். மாசி மாதத்தில் ஆரோக்கியம் சீராகும். சகோதரரால் நன்மை உண்டு.

      செவ்வாய்வருட ஆரம்பத்தில் சந்தோஷமும், சௌகரியங்களும் பல்கிப் பெருகும். தடைக் கற்கள் எல்லாம் படிக் கற்களாக மாறும். எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் வெற்றிப் படியாக இருக்கும். அதைத் தொடர்ந்து வரும் காலங்களில் வெளிநாட்டுப் பயணங்களால் இலாபம் கிடைக்கும். பெண்களுக்கு அடுப்படி வேலைகளின் போது கத்தியால் அல்லது தீயால் சிறுகாயம் ஏற்படலாம். பொருளாதார நிலை உயரும். புகழும் ஓங்கும்.

      புதன்வருட ஆரம்பத்தில் நிம்மதியும் சுகமும் ஏற்படும். புத்தி தெளிவுற்று, அறிவுத் திறன் கூடி, உயர்கல்வியில் முன்னேற்றமிருக்கும். ஓரு அரசனைப்போல் இவர்களுக்கு பணியாட்கள் அதிகம் இருப்பர். அடுத்து வரும் மாதங்களில் செய்யாத குற்றத்திற்காக பழிச் சொல்லுக்கு ஆளாக நேரிடலாம். பேச்சாளர்களுக்கு வாக்குவன்மையால் வருமானமும், புகழும் உயரும். பின்வரும் மாதங்களில் பலவகை யோகமும், சந்ததி விருத்தியும் ஏற்படும்.

      சுக்கிரன்குழந்தைகள் வகையில் சுபச் செலவுகள் ஏற்படும். பதிய ஆடைகள், பொன் ஆபரணங்கள் விதவிதமாகக் கிடைக்கும். சொற்பொழிவுத் திறன் அதிகமாகி அதன் மூலமாகவும் வருமானம் வரும்மனைவி வயதானவளாக இருந்தாலும் அழகு குறையாத ஆரணங்காக இருப்பாள். பின் வரும் காலங்களில் அரசுப் பணியிலுள்ளவர்களுக்கு தலைமைப் பதவி தேடிவரும். நெருக்கமானவர்களுடன் இனிமையாகப் பொழுதைக் கழித்து மகிழ்வீர்கள்.

       குருதனுசுக்கு அதிபதியான  தேவகுரு, ஆவணி 27 இல் கர்ம ஸ்தானம் விட்டு, இலாப பாவ மேறி கிராம அதிகாரம், அரசியல் அதிகாரம் ஆகியவற்றைத் தருவார். கார் போன்ற நவீன வாகனங்கள் கிடைக்கும். பணம் பல வழிகளிலும் குவியும். தொழில் வளர்ச்சி சிறப்பாக, நல்ல முன்னேற்றத்துடன் இருக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிட்டும். அரசு மூலம் வெகுமதிகள் மற்றும் பரிசுகள் கிடைக்கும். ஆடை ஆபரணாதிகள் சேரும்.

       சனி –   ஜன்மச் சனியின் நுழைவு வாயிலாக அமையும் இராசியில் அமர்ந்து சக்திக்கு மீறிய செலவுகளையும், வெகு தூரப்பயணங்களையும் ஏற்படுத்துகிறார். வேலை இல்லாமை அதன் காரணமாக வருமானமில்லாமை என அனைத்துத் துயரங்களையும் ஒரு சேரத் தரும். காளஹஸ்தி சென்று சனீஸ்வரனை மனமுருகி வேண்டிவர வேதனைகள் குறையும். காசியாத்திரை செல்லலாம். மொத்தத்தில் இவ்வருடம் 50 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.

மகரம்

( உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )

    கர்மகாரகனான சனியை அதிபதியாகக் கொண்ட மகரராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு ஹேவிளம்பி வருட கிரக நிலைகள் தரும் பலன்களைப் பார்ப்போம்.

       சூரியன்ஆனி மாதத்தில் நல்ஆரோக்கியம், சந்தோஷம், மனஅமைதி, இலாபம் ஆகியவை ஏற்படும். ஐப்பசி மாதத்தில் எதிர்பாராத வெற்றிகள் கிடைத்து உள்ளம் மகிழும்.  கார்த்திகை மாதத்தில் மேற்கொள்ளும் புதிய தொழில் முயற்சிகள் எதிர்பார்ப்புக்கு மேலான வெற்றிகளைத் தரும்.. பொதுச்சேவை செய்பவர்களுக்குச் சுற்று வட்டாரத்தில் புகழ் பரவும். பங்குனி மாதத்தில் அரசுப் பணிகளில் புதிய பதவி உயர்வு மற்றும் அந்தஸ்து கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

    செவ்வாய்வருட ஆரம்பத்தில் பொருளாதார இலாபம் ஏற்படும். அரசுப் பணியாளர்களுக்குத் தங்கள் தகுதிக்கு ஏற்ப பதவி உயர்வுகள் கிடைக்கும். பூமிலாபம், மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை மற்றும் நவநாகரீக, நவீன சுக சாதனங்களோடு வீடு நிறைந்திருக்கும். பின்னர் உணர்ச்சி மிகுதல், பெண்களால் தொல்லை, அதிக வெப்பத்தால் வரும் வியாதிகள் ஆகியவை ஏற்பட்டு சிறிது இன்னல் தரும்.

       புதன்வருட ஆரம்பத்தில் நிதானமாகப் பொழியும் மழை போலப் பொருளாதார நிலை சீராக இருக்கும். மேலாளர் போன்ற உயர் அதிகாரிகளிடம், உங்கள் சிறந்த உழைப்புக்கான பாராட்டு மழையில் நனைவீர்கள். சிலருக்கு அவப்பெயர் உண்டாகலாம். பின் வரும் காலத்தில் கௌரவம் ஓங்கும். அழகிய மனைவி அமைவாள். பலவகை யோகமும், சந்ததி விருத்தியும் ஏற்படும்.

       சுக்கிரன்வருட ஆரம்பத்தில் பொதுச் சேவையால் மதிப்பும், மரியாதையும் கூடி ஏழைப் பங்காளன் என்று பெயர் எடுப்பீர்கள். செல்வம் கொழிக்கும், தானியவகைகள் குவியும். அரசு ஆதரவு கிடைக்கும். அரசாங்க விருதுகள் கிடைக்கும். பின்னர் வரும் காலத்தில் மனம் நிலை கொள்ளாமல் தவிக்க நேரும்.  வேண்டாத  அலைச்சல்கள் ஏற்படும். வெளிநாட்டுப் பயண வாய்ப்புகளால் ஆதாயம் ஏற்படும். இந்திரன், ருத்திரன் போன்று உயர்ந்த வாழ்க்கைத் தரம் அமையும்.

       குருஆவணி 27 க்கு  பத்தில் அமரும்  குரு அதற்கு முன் உள்ள நாட்களில் இராசியைப் பார்ப்பதால் தெய்வ காரிய ஈடுபாடுகளால் எதிலும் திருப்திகரமான வாழ்க்கை அமைந்திருக்கும். அரசு மூலம் வெகுமதிகள் மற்றும் பரிசுகள் கிடைக்கும். வெளிநாட்டு பயண வாய்ப்புகள் ஏற்பட்டு மகிழ்ச்சி அளிக்கும். பின்னர் வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் வெறுப்பாய் இருக்கும். வீண் விவாதங்களால் பிறருடன் மனஸ்தாபம் ஏற்படும். உழைப்பு அதிகமாகி ஊதியம் குறையும்.

       சனி விரயத்தில் அமரும் சனியால் பயன்ற்ற அலைச்சல். வெகுதூரப் பயணங்கள் ஆகியவை ஏற்படும். சக்திக்கு மீறிய செலவுகள் ஏற்படும். சனியின்  பார்வை 2, 6, 9 ஆம் இடங்களில் விழுவதால் இதுநாள் வரை குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள், குறைபாடுகள், வேண்டாத வெறுப்புகள், தடைகள் அனைத்தும் விலகி முன்னேற்றம் வரும் காலம் ஆகும். இனி கலகலப்புக்குக் குறைவிருக்காது. சாமர்த்தியமும், சாதுர்யமும் கூடிய செயல்பாடுகளால் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்களை எதிர்கொள்வீர்கள்.   பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டு  உள்ளம் மகிழ்வீர்கள்அரசாங்கத்திதமிருந்து பரிசுகள் கிடைக்கும் வாய்ப்பும் ஏற்படும். மொத்தத்தில் இவ்வருடம் 70 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.

No comments:

Post a Comment