Search This Blog

Tuesday 24 December 2019

பத்தாம் பாவகம்

பத்தாம் பாவகம்
இது ஒரு முக்கியமான பாவமாகும். கேந்திர ஸ்தானம் ஜீவனஸ்தானம் மதிப்பு கௌரவம் குறிக்கும் பாவகம் தொழிலைக் குறிக்கும் பாவம் ஒருவரின் பொதுவாழ்வை குறைக்கும் பாவகமும் இதுதான் மதிப்பு மரியாதை உலகத்தில் உள்ள சுகங்கள் குறிக்கும் பாவம் பதவி உயர்வு. வியாபார விருத்தி சொல்லும்
10
இல் சனி இருந்து அந்த சனி சுபரால் பார்க்கப்பட்டால் வாழ்க்கை உயர்வாகவும் மெதுவாகவும் நிரந்தரமாகவும் இருக்கும்
சனி சுபர்களால் பார்க்கப்படாமல் இருந்தாலும்,  பலமற்று  இருந்தாலும் மிக சாதாரணமான பதவி இருக்கும் உயர்ந்த நிலைக்கு வருவது மிகவும் கஷ்டம்
நம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளும் பாவம் நாம் செய்யும் தொழிலை சொல்லித்தான் அறிமுகம் ஆகி கொள்கிறோம் 
ஒவ்வொரு ராசிக்குமே ஒவ்வொரு தொழிலைச் சொல்கிறது 
பத்தாம் பாவமாக மிதுன ராசி வந்தால் ஒரு டார்கெட் வைத்து தொழில் செய்வார்கள் 
பத்தாம் பாவமாக சிம்மராசி வந்தால் குல தொழில் செய்வார்கள் 
இவர்களுக்கு மரியாதை கொடுக்கவில்லை என்றால் வேலை செய்ய மாட்டார்கள் 
பெரிய மனிதர்களுக்கு இவர்கள் எடுபிடியாக செல்வார்கள் 
இவர்கள் வேலையாட்களை கௌரவமாக நடத்துவார்கள்
மகர ராசி பத்தாம் பாவமாக வந்தால் வேலையாட்களிடம் வேண்டாவெறுப்பாக பேசுவார்கள்
துலாம் ராசி பத்தாம் பாவமாக வந்தால் பூக்கடை பழக்கடை மொத்தமாக கொள்முதல் போட்டு சில்லரையாக விற்பது
மிதுனம் கன்னி மீனம் இவை பத்தாம் வீடாக வந்தால் டோர் டு டோர் தொழில் வரும்
விருச்சிகம் பத்தாம் பாதகமாக வந்தால் இன்சூரன்ஸ் தொழில் செய்யலாம். மருந்து, ஸ்கேன் லேப், இசிஜி பண்ணலாம்
விருச்சிகம் பத்தாம் வீடு அல்லது லக்னம் அல்லது ராசி அல்லது விருச்சிகத்தில் சனி அல்லது பத்தாம் அதிபதி இருந்தால் தொழில் செய்வதற்கு இந்த காரகத்துவ தொழில் செய்வது நல்லது 
மகரம் ராசி சதய நட்சத்திரம், அரசு வேலை மருத்துவர் தொழில் செய்யலாம் 
கும்ப ராசி ஒரு பயிற்சி தரும் ராசி கும்பம் அரசு தொடர்பு உடைய ராசி ஏனென்றால் இதற்கு நேர் ஏழாவது வீடு சிம்ம வீடு அது அரசாங்க வீடு
அதனால் கும்பம் மத்திய அரசு பணி, ரயில்வே,  மருத்துவப் பணி  செய்யலாம்
மீனம் என்றால் ஸ்கிராப் தொழில் செய்யலாம் பேங்கில் ஏலம் எடுப்பது ஏலம் எடுப்பது எதுவானாலும் செய்யலாம்
விருச்சிகம் வில்லங்க சொத்து வாங்கினால் நன்று
சர ராசி காரர்களுக்கு தொழில் உடனடியாக பிக்கப் ஆகும் டல்லாக இருந்தாலும் தொழிலை மூடிவிடுவார்கள்
பயணம் சார்ந்த தொழில் அலைந்து திரிந்த தொழில் வேலை செய்யும் தொழில் அமையும்
ஸ்திர ராசிக்காரர்களுக்கு ஒரு தொழில் செய்தால் அதன் பயன் பெறுவதற்கு கொஞ்சம் காலதாமதமாகும் ஆனால் நிலையாக இருக்கும் நீடித்து ஒரு இடத்தில் வேலை செய்வார்கள்
உபய ராசிக்காரர்களுக்கு ஒரு தொழில் செய்து விட்டு அதை நிறுத்திவிட்டு மீண்டும் அதே தொழிலுக்கு செல்வார்கள்
அலைந்தும் திரிந்தும் உட்கார்ந்தும் தொழில் செய்வார்கள் 
தொழிலில் ஒரு அவசர குணம் இருக்கும்
மேஷம் ஒரு பட்டறை ராசி. நெருப்பு ஊதுகுழல் குறிக்கும். சாணம் பிடிப்பது, தங்கத்தை காய்ச்சி உருக்குவது, புகைபோக்கி தொழில் செய்யலாம்
மேஷராசிக்காரர்கள் ஒரு தொழிலை பிரம்மாண்டமாக செய்யக்கூடாது
பத்தாம் பாவகத்தின் காரகத்துவங்கள்
தொழில். ஜீவனம். நிர்வாகத்திறமை.
கர்மம்.தலைமை தாங்குதல். மாமியார். சமுதாய சங்கங்கள், கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு வங்கி கூட்டுறவு வங்கியில் இரண்டு கை இணைந்த மாதிரி சின்னம் இருக்கும். கூட்டுறவு சின்னத்தை குறிப்பதால் பத்துவிரல் இணைந்துள்ளது.அதனால் இது கூட்டுறவு வங்கி பத்தாம் அதிபதி 2 10 11ம் பாவத்தில் இருந்தால் கூட்டுறவு வங்கியில் வங்கி கணக்கு இருக்கும். .பால் வளத்துறை பெரிய ஆதிக்கம். அரசுப் பணி மேஷம் கடகம் சிம்மம் விருச்சிகம் மகரம் இவையெல்லாம் அரசாங்க வீடுகள். மந்திர சக்தி, ஹோமங்கள் ஐந்து பத்து தொடர்பு 9 10 தொடர்பு இருந்தால் பெரிய அளவில் ஹோமங்கள் நடக்கும்.
அன்னதானம். சன்யாசம் வாங்குவது 5 7 9 10 12 இந்த பாவங்கள் சன்னியாச பாவகம் 10,12 பாவங்கள் 5 7 9 க்கு தொடர்பு ஏற்படக் கூடாது கேது சேர்ந்துவிட்டால் ஜாதகருக்கு திருமணமே நடக்காது. முன்னேற்றத்தை சொல்லும். முதலாளியை சொல்லும். தத்துப்பிள்ளை சொல்லும். தத்துப் பிள்ளை என்றால் ஐந்து எட்டு பத்து தொடர்பு இருந்தால்தான் தத்துப் பிள்ளை வரும். ஐந்து பிள்ளை 8 தத்து 10 தத்துப் பிள்ளை. சமூக அந்தஸ்து ஒருவரை அடையாளம் காட்டும் பாவம்.
பத்தில் சூரியன் தொடர்பு இருந்தால் மருத்துவர், தொழில் அதிபர் வருவது போல இருக்கும் 5 9 ம் பாவத்திற்கு கௌரவம் உண்டு பத்தாமிடம் வலுத்தால் 50%.கண்டிப்பாக கௌரவம் உண்டு. தர்மசிந்தனை. சன்னியாசத்தையும் வளர்ச்சி அடைய செய்யும். குதிரையில் பயணம். மருத்துவ குணம். திருமண சுகம். மூன்று, நான்கு, ஏழாமிடம் தாம்பத்திய சுகத்தை சொல்லும்.
வியாபாரம். செல்வந்தராக இருத்தல். யோசித்தல். குடை.
டிப்ஸ்
பத்தில் கிரகம் இருந்து பதினொன்றில் கிரகம் இருந்தால் தொழிலில் வருமானம் வந்துகொண்டே இருக்கும்.
10 11
இல்லாமல் பத்துக்கு இரண்டாம் பாவகம் 11 இல் மட்டுமே கிரகம் இருந்தால் 50% பலன் இருக்கும்.
பத்தாமிடம் பலம் குறைந்து பத்தாமிடம் காலியாக இருந்தது
11-
ஆம் இடத்தில் சனியோ கேதுவோ இருந்தால் முதல் தொழில் விருத்தி இல்லை.
12
க்கு அடுத்து சுபர் இருந்தால் இரண்டாவது தொழில் வளர்ச்சி அடையும்
லக்னாதிபதி 1, 5, 7, 9, 10, 12 இந்த பாவகத்தில ஏதோ ஒரு பாவகத்தில் இருந்து இத்துடன் கேது இருந்தால் அவர்களுக்கு ஆன்மிகம் பலப்படும்.
இரண்டும் சேர்ந்து இருந்தால் சன்யாசி யோகம்.
இவர்களுக்கு குடும்பம் உறவு பந்தபாசம் இவையெல்லாம் இருக்காது, போய்விடும்.
பத்தாம் அதிபதி சுபக் கிரக வீட்டில் அல்லது சுப கிரகத்தின் பார்வையில் இருந்தால் ஜாதகருக்கு ஜீவனம் குறைவு இல்லை
ஏனென்றால் 3 6 10 11 இவையெல்லாம் உப ஜெய ஸ்தானம்.
அஷ்டமாதிபதியும் சனியும் மூத்த ஸ்தான அதிபதியும் பனிரெண்டாம் பாவகம் பத்தாம் அதிபதிக்கு தொடர்பு கொள்ளும்போது பத்தாம் பாவகம் கர்மமாக வேலை செய்யும்.
5 9-
க்குடைய அவர்களோடு பத்துக் உடையவர் தொடர்பு பூஜை அன்னதானம் இந்த மாதிரி அவருடைய தர்மத்தை வலுவடைய வைக்கும்.

No comments:

Post a Comment