Search This Blog

Thursday 30 August 2012

என்ன பொருத்தம்.........1


என்ன பொருத்தம் நமக்குள்........இந்தப் பொருத்தம்........!

                            
              
 உனக்கு நான்,எனக்கு நீ பொருத்தமான ஜோடி!.நாங்க புதுசா கட்டிக்கிட்ட  ஜோடிதானுங்க. என்ன பொருத்தம் நமக்குள் இந்த பொருத்தம்.  என்று திருமணத் திற்கு நல்ல பொருத்தமுள்ளதா ? எந்த  ராசிக்கு, எந்த   ராசி ஜாதகர் பொருத்தமாகஇருப்பார். ஒரு ராசிக்காரரின் நடவடிக்கை எப்படிப்பட்டது ,? காதலில், காமத்தில் எப்படிப்பட்டவர் ? இருவருக்கும் சீர்மிகு (ஐடியல் மேச்) பொருத்தமுள்ளதா ?என ஒவ்வொரு ராசிவாரியாக அலசி ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும். இருவர் இயல்புகளையும் சீர்தூக்கி இணைப்பது,இனிய இல்லறத்திற்கு வழி வகுக்கும்அல்லவா ?


                மேஷ லக்ன ஜாதகர் காதலில் தீவிரமானவர்,மிகவும் நேர்மையானவர். உண்மையானவர் மற்றும் எதிர்பாலரை மிகவும் கவர்ந்துவிடும் பாசமிக்கவர், சுதந்திரமா னவர்,  காதலில்  சாகசங்கள்  புரிவதே  இவர்களின்   அடிப்படை குணமாகும்.இவர்கள் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்க வேண்டுமெனில்   பிறரை அடக்கியாள நினைக்கும் குணத்தைக்   குறைத்துக்கொள்ள  வேண்டும். பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும்.. இவர்கள் தங்கள் காதலை மாற்றாமல் பழைய  காதலைத்  தொடர்வதே  இவர்களுக்கு நல்லது.

               கணவர்கள் :- மேஷக் கணவர்கள், மிகவும் விரும்பத்தக்க துணைவர்கள். பொதுவாக இவர்கள் அழகிய, அறிவுள்ள நல்ல துணைவரையே நாடுவர், தேர்ந்தெடுப்பர். இவர்கள் தயாள குணமும்,நல்ல செலவாளியாகவும் இருப்பர்.

               மனைவிகள் - மேஷ மனைவிகள் புத்திசாலித்தனம், நகைச்சுவை உணர்வு உடையவர்கள்.   சுதந்திரமானவர்கள். கர்வம் மிக்கவர்கள். எப்போதும் தங்கள் தோற்றத் தைப்பற்றியும்,குடும்பத்தைப்பற்றியும் பெருமையடித்துக் கொள்பவர்கள். ஆனால்  விருந்  தோம்பலில் சிறந்தவர்கள். தங்கள் கணவன்மார்கள் தங்களை நன்கு கவனித்துக்கொள்ள வேண்டும் என  எதிர்பார்ப்பவர்கள்.  தற்பெருமை  மிக்கவர்கள். மற்றவர்களை நேருக்கு நேராக புகழ விரும்பமாட்டார்கள். பொதுவாக, மேஷப்  பெண்கள்,   தங்கள் கணவனை அடக்கியாள்வதிலும், ஆட்டிப்படைப்பதிலும் வல்லவர்கள். போராட்ட குணமுடையவர்கள். சிருங்கார ரசமும் அதிகமுள்ளவர்கள். .இவர்களைப்  பொறுமையாக  தாஜா  செய்வதின் மூலமாகவே அடக்கியாள முடியும். சுருக்கமாக, நெருப்புத் தன்மையுடையவர்கள் இந்த மேஷப் பெண்கள்.

               சீர்மிகு பொருத்தம் :- மேஷ ராசி ஜாதகர்கள்,திருமணம் செய்து கொள்ள
மிகவும் பொருத்தமானவர்கள்- சிம்மத்தார்,துலா மற்றும் விருச்சிகத்தார் ஆவர். ஆனால், இவர்கள் ஆடம்பர மற்றும்  வீண்  செலவுகளைக் குறைத்துக் கொண்டு, சேமிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.


                                     ரிஷபம் :-
               மோகம் மற்றும் திருமண வாழ்க்கை :- அசுரகுரு சுக்கிரன் அதிபதியாவ தால்,காதல் விவகாரங்கள், இசை மற்றும் கலையார்வம்,சினிமா,நாடக ஆர்வம் அதிகம் இருக்கும்..எவ்வளவு எதிர்ப்புகளும்,தடங்கல்களும் வந்தாலும் தங்கள் காதலை விட்டுக்கொடுக்கமாட்டார்கள். காதலில் நேர்மையைக் கடைப்பிடிப்பவர்கள். காம உணர்வு மிக்க வர்கள்.  இவர்களுக்கு சுயகட்டுப்பாடு அவசியம். இவர்கள் உணர்ச்சிவசப்பட்டு காதலிக்க மாட்டார்கள்.


             வாழ்க்கையில் தன் துணையை தேர்நதெடுக்க, நீண்ட நெடுங்காலம் எடுத் துக்  கொள்வார்கள்..காதலில் உண்மையானவர்கள்,ஆழ்ந்த மன உணர்ச்சியுடையவர்கள்.
காதலில் பிணக்குகளை விரும்பாதவர்கள். குழப்பங்களை வெறுப்பவர்கள். இனிய  உபச ரிப்பை   விரும்பி ஏற்பர்.ஆடம்பரத்தை அதிகம் விரும்புவர்.எப்போதும் தங்களின் சமூக, பொருளாதார கடமைகளை மறவாதவர்கள். இவர்கள்,   தன் காதல் மனைவிக்கு / கண வனுக்கு விசுவாசமானவர்களாக நடந்துகொண்டால் மட்டுமே,இவர்களது மணவாழ்க்கை சிறப்பானதாக இருக்கும்..   இவர்களுக்கிடையே   விவாகரத்து என்பது அரிதானதாகும்.  இவர்கள் ஈருடல்  ஓருயிராக,  எவ்வித   துன்பங்கள்  எதிர்வரினும், தாங்கிக் கொண்டு இணைபிரியாமல் இன்ப  வாழ்வு  வாழ்வர்.   தன் துணைக்கு நல் இருப்பிடம் அளித்து, நன்றாக கவனித்து,  எந்த  சூழ்நிலையிலும்   கைவிடாமல் பாதுகாத்துக் கொள்வார்கள். விருந்தினரை  உபசரிப்பதில்  வல்லவர்கள். மிக உயர்ந்த, தரமான,சுவையான விருந்து கொடுப்பதில் ஆர்வமுள்ளவர்கள்.  அதேபோல்   மற்றவர்களும் தங்களை சிறப்புற கவ னிக்க வேண்டும் என்று எதிர்பார்பார்கள்

             கணவர்கள் :- மனைவியை தெய்வமாக நினைத்துத் தொழுபவர்கள், போற்றுபவர்கள். இவர்கள்  நம்பகத்தன்மை  உடையவர்கள்,    உண்மையானவர்கள், மற்றும் தாராள குணமுடையவர்கள். எப்போதும் தங்கள் மனைவிக்கும்,குடும்பத்திற்கும் தேவை யானவற்றையும்   தவறாது அளித்து மகிழ்ப்பவர்கள். தன் மனைவி நேர்த்தியாக உடை யணிவதையும், கவர்ச்சிகரமாகவும்,மலர்ந்த முகத்துடனும்  இருப்பதையே விரும்புவார் கள். தங்கள் துணையுடன் விசாலமான காதலுடனும், பாசத்துடனும் வாழ்வார்கள். மண வாழ்க்கையில்  தங்கள்  துணைக்கு முழு ஒத்துழைப்பையும் நல்கும் நல்ல கணவர்கள் இவர்கள் என்றால் மிகையாகாது.

             மனைவிகள் :-  இவர்கள்  நல்ல மனைவிகள். நல்ல தாயுள்ளம் கொண்ட
தாய்மார்கள்..தனிமை விரும்பிகள் மற்றும் அமைதியானவர்கள். தங்கள்  கணவர்   தன்மேற்கொண்டுள்ள   அன்பையும்,  காதலையும்   சந்தேகக் கண்கொண்டு பார்ப்பவர்கள்.தங்கள் காதலை ரகசியமாக வைத்திருக்கமாட்டார்கள். மிகவும் வெளிப்படையானவர்கள்.
மகிழ்ச்சிகரமான   மணவாழ்க்கையையே  வாழ விரும்புபவர்கள். தன் வீட்டை நன்றாக பராமரிப்பதில்  ஆர்வமுள்ளவர்கள். தன் குழந்தைகளுக்கு, நல்ல தாயாக வாழ நினைப்ப வர்கள். கடமையுணர்வு உள்ளவர்கள். தங்கள் குழந்தைகளின் நல்லுயர்வுக்காக,  இனிய எதிர்காலத்துக்காக, கண்டிப்பும்,  கொடுமையும் உடையவர்களாக நடந்து கொள்பவர்கள். அமைதியை விரும்பும்,   தூய  உள்ளமுடைய ரிஷபப் பெண்கள், வாழ்க்கைக்கு உகந்த துணையாக தங்களைமாற்றிக் கொள்வர். காதல் மிக்கவர்கள்,ஆனாலும், அவர்களுடைய  உணர்வுகள்    சுலபமாக   காயமடைவதில்லை. எனவே,  அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கமாட்டார்கள்.   நல்லவிதமாக   வளர்க்கப்பட்ட, புத்திசாலித்தனம் மிக்க குழந்தை களால்,மகிழ்ச்சி,ஆதாயம், மதிப்பு, மரியாதை ஆகியவை   இவர்களுக்கு வந்து சேருவது உறுதி.

             சீர்மிகு பொருத்தம் :-  கன்னி, மகரம்,கடகம்,விருச்சிகம் மற்றும் மீனத்தில் பிறந்தவர்கள்,  இந்த  ராசிக்காரர்களுக்கு சீர்மிகு பொருத்தம் உடையவர்கள் ஆவார்கள்..இவர்களுக்கு இடையேயான பொருத்தம்,நல்ல துணையாக,ஒத்தகருத்துடையவர்களாக, சிறப்பான,  அமைதியான, மகிழ்ச்சியான மணவாழ்க்கை அமைந்து, இருவருக்கும் என்ன பொருத்தம்,இப்பொருத்தம் என அமைந்துவிடுகிறது.

                              
மிதுனம்

             மிதுனம் ஓர் உபயராசி.எனவே இவர் மாறுபட்ட,பலவகைப்பட்ட  சுவாரஸ் யமான சுவையை உடைய வாழ்கையையே விரும்புவர். வெகுவிரைவில்  மற்றவர்களி டம் நட்பாகி, அடிக்கடி  நண்பர்களிடம்   குற்றம்   கண்டுபிடித்து, நல்ல நட்பை இழந்து விடுவார். எனவே,எப்போதும்,எந்த நிலையிலும் எவ்வளவு முயன்றாலும்  அவர்களுக்கு திருப்தியளிக்கக் கூடிய  நட்பை  இவர்கள்   பெறுவது அரிதாகும். இவர்களைப் புரிந்து கொள்வது மிகவும் கடினமாகும். இவர்களுடைய அதிக சந்தோஷத்திற்கு, மூலாதாரமே இவர்கள் காதலில்  அதிக  சாகசங்கள்  செய்வதில்தான்   இருக்கிறது..இவர்கள் அன்பு, காதல் அனைத்திலும் உணர்ச்சிகளைக்   கட்டுப்படுத்துவதைவிட  மனதைக்கட்டுப்படுத்      துவதே சாலச்சிறந்தது. இவர்கள்   கணக்குப்பார்த்துக் காதலிக்கும் சிடுமூஞ்சிகள் ஆவர். ஆவர்.இவர்கள் காதலிப்பதுபோல் நடிப்பதில் வல்லவர்கள்.
             இவர்களின் புத்திசாலித் தனத்திற்கு சமமான துணையமைந்தால்,  இவர்க ளின் மணவாழ்க்கை மிக மகிழ்ச்சிகரமானதாக அமையும் இல்லையெனில்   வாழ்க்கையில் பிரிவினை தொடரலாம். வாழ்க்கைப் பயணம் ஒரு சிறுபயணமாகவே,இவர்களுக்கு அமைந்துவிடுகிறது.

            கணவர்கள் :- ஆமாம் சாமி போடக்கூடிய மனைவியையே விரும்புவார்கள். இவர்களின் துணைவியர்,  வீட்டில் அமைதியும், இசைவும், மகிழ்ச்சியும் நீடித்து நிலைக்க வேண்டுமெனில், இவர்களின் காதல் நடிப்பை பெரிதுபடுத்தக்கூடாது. இவர்கள் மனைவி யோடு காதல் செய்யும்போது அதிக செலவும், நஷ்டமும் ஏற்படுமாயின்    அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவார்கள். சிலருக்கு அடங்காபிடாரி மனைவியமைந்து, அவள்தரும் நிரந்தர தொல்லைகளை சமாளிக்கமுடியாமல்,வீட்டைவிட்டு ஓடிக்கூட விடுவார்கள்..

            மனைவிகள் :- மிதுனப் பெண்கள் மிகவும் புத்திசாலிகள்..இவர்கள் மனதள வில் ஒத்துப்போகிற துணையையே    விரும்புவார்களேயன்றி, வீட்டைப் பாதுகாப்பவர் களை,விரும்பமாட்டார்கள். திருமணத்திற்குப் பிறகும், இவர்கள் தங்கள்   வெளிவட்டார தொடர்புகளை, நிகழ்வுகளை விட்டுவிடமாட்டார்கள். இவர்களின் விருப்பத்திற்குமாறாக, இவர்களின்   கணவர்   நடப்பதையோ,    கேள்வி கேட்பதையோ பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்,விரும்பவும்மாட்டார்கள். சந்தோஷமான வாழ்க்கையை அமைத்துக்  கொள்     வதற்கு, இவர்கள் சாதுர்யமாக நடந்துகொள்ள வேண்டும். இவர்களை எளிதில்  ஏமாற்றி விட முடியாது.   இவர்கள் சேவை மனப்பான்மையுடையவர்கள்,அதன் காரணமாக தன் கணவனை உதாசீனப்படுத்துவர்  அல்லது வேலைக்கு செல்லாமல்,வீட்டிலேயே இருக்க விரும்பும் இவர்கள்,தாங்கள் பார்த்துக்    கொணடிருந்த வேலையை விட்டுவிட்டு வீட்டி லேயே இருப்பர். மிகவும் சுத்தத்தை   விரும்பும் இவர்கள் தங்கள் வீட்டைசுத்தமாகவும், அழகாகவும் பாராமரிப்பார்கள்.

            சீர்மிகு பொருத்தம் :- மிதுனத்தாருக்கு மிக்க பொருத்தமுடையர்கள்-  துலா, கும்ப, மேஷ மற்றும் சிம்மத்தார் ஆவார்கள். இவ் விணைவுகள் சிறந்த  பொருத்தமாகி, தம்பதியர் அனுகூலமான, மகிழ்ச்சிகரமான மணவாழ்க்கையைப் பெறுவர்.

           

2 comments: