Search This Blog

Thursday 30 August 2012

என்ன பொருத்தம்.....3











என்ன பொருத்தம்....நமக்குள் இந்தப் பொருத்தம்...
                                
துலாம்.

            காதல் விவகாரங்களில் வல்லவர்கள்.எனவே, இவர்கள்  காம  வாழ்க்கைக் காக பிறரால் காதலிக்கப்படுபவர்கள்,   விரும்பப்படுபவர்களாவர்.    காதலில் இவர்கள் உண்மை யானவர்கள்,  மிகவும்  பிரியமுடன்   கூடியவர்கள். இவர்களது வசீகர முகம், நேர்த்தியாக உடையணியும்விதம்  ஆகியவை  எதிர்பாலரை   இவர்கள் வசம் சுண்டியி ழுத்து  வசப்படுத்தும்   கவர்ச்சியுடன்  கூடியது  ஆகும்.இவரது காம உணர்ச்சி உயிர்த் தெழுந்து விரைவில் மறையக்கூடிய தன்மையுடைத்து. துலாத்தவர்கள், எதிர்பாலருடன் இணைந்திருக்கும்போது, மிகவும்  அனுபவித்து,  மகிழ்ச்சியில்  திழைப்பவர்கள்.மிகவும் கடமையுணர்வு  உடையவர்கள். இவர்கள் வாழ்க்கையில் விரைவில் திருமணம் செய்து கொள்பவர்கள். இவர்கள் சல்லாப வாழ்க்கையிலும், சமூக, உல்லாச கேளிக்கைகளிலும் ஈடுபாடும்,நல்ஆர்வமும் உடையவர்கள்.இல்லத்தில் எப்போதும் இன்பமாகயிருப்பவர்கள்.
வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலையிலான வாழ்க்கையையே வாழவிரும்புபவர்கள்.சில நேரங்களில், இவர்களுக்கு   ஈடுகொடுக்க முடியாத,திருப்தியளிக்கமுடியாத,வாழ்க்கைத் துணையே அமையக்கூடும்.

            துலாக் கணவர்கள் :-     மகிழ்ச்சி மிக்கவர்கள், காமம் மிக்கவர்கள், காதல் சாகசம் புரிபவர்கள், துணையை அனுசரித்துச் செல்பவர்கள் ஆவர். இவர்கள் தங்களால்
முடிந்தவரை, தனது  துணையை  நல்ல  உயர்நிலையில் வாழவைக்க முயற்சி செய்ப வர்கள். தனது குடும்பத்தார்க்கு   ஆடம்பர வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து சாத னங்களையும்,     விலையுயர்ந்த  பொருட்களையும்  அளித்து, அவர்களை  எப்போதும்
மகிழ்ச்சிகரமாக வைத்திருப்பவர்கள். அதன்  மூலமாகத் தன் அன்பை உணர்த்த,வெளியி டத் தயங்கமாட்டார்கள். இவ்வளவு   வசதிகள் செய்து கொடுத்தும், தன் துணை தனக்கு ஆதரவாக  நடந்து  கொள்ளவில்லையெனில், ஏமாற்றமடைவார்கள். ஆனால் அதற்காக கோபங்கொண்டு  விவாகரத்து  வரை  செல்லமாட்டார்கள்.   அவர்களோடு இணைந்து, அனுசரித்துச் செல்வதையே விரும்புவார்கள்.

           துலா மனைவிகள் :-  அறிவுக்கூர்மையுடையவர்கள்புத்திசாலிகள்,சாமர்த்திய
சாலிகள் ஆவர்.  இவர்கள்  அமைதியை  நிலைநிறுத்த விரும்புவார்களேயன்றி,தர்க்கம்
செய்வதை விரும்பமாட்டார்கள்.  இயற்கையாகவே  காமம்  மிக்கவர்கள்,காமக்கவர்ச்சி மிக்கவர்கள். இவர்கள்  பொதுவாக, ஆடம்பர  வாழ்க்கையில்  ஆனந்தித்திருக்க ஆர்வம்
உடையவர்கள்.  தன்  துணையை அன்பால்,காதலால் ஆராதித்து மகிழ்பவர்கள். நவநாக ரீக ஆடைகள், இசை, நடனம், களியாட்டக் கூடங்கள், உணவுவிடுதிகள் என வாழ்க்கை யின்  அனைத்து  சுகங்களையும்  அனுபவித்து  மகிழும் ஆர்வமிக்க மனங்கொண்டவர் கள்.  அமைதியானவர்கள். தார்மீக  குணமுடையவர்கள்,  சிறந்த  ராஜதந்திரி, எதையும் இவர்கள்  மீது திணிக்க  முடியாது.  இவர்களை  ஏமாற்றவும் முடியாது. இவர்கள் மன ஏழுச்சியும்,  மனக்கிளர்ச்சியும்,  உணர்ச்சியும் மிக்கவர்கள். எவராலும் நேசிக்கத் தகுந்த வர்கள்.  எதையும்  மறந்து,  மன்னித்து  ஏற்றுக் கொள்ளக்கூடியவர்கள்.. ஊதாரித்தனம் உடையவர்கள்.

           இவர்களின் துணையை குறிக்கும் ஸ்தானங்களில் 2,7,மற்றும் 11 அவற்றின்
அதிபதிகள் செவ்வாய், சூரியன் ஆவர். எனவே, விரைவில் உணர்ச்சி வசப்படக்
கூடிய, கோபம்மிக்க, மூர்க்கமான,  சுதந்திர  எண்ணங்கொண்ட   துணையே அமையும்.
எனவெ துலாத்தார்  தங்கள்  ராஜதந்திரத்தாலும்,  சாதுர்யத்தாலும்,இத்தகைய இயற்கை யாகவே, நெருப்பு குணமிக்க துணையின் குணத்தை நல்வழியில் மாற்றி வீட்டில் அமை தியை நிலைநாட்ட வேணடிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

         என்ன பொருத்தம் இப் பொருத்தம்:-     துலாத்தார்,காற்றுராசிகளான மிதுனம்
மற்றும் கும்பத்தாருடன் சீர்மிகு பொருத்தமுடையவர்கள். இவர்களுடன் ஒத்துப்போகாத
ராசிகள்  கடகம்,மகரம் மற்றும் மீன ராசி ஜாதகர்களே யாவர்.மற்ற ராசிக்காரர்கள் இவர் களை அனுசரித்துச் செல்வார்கள்.

                            விருச்சிகம்

         காமமும்-கல்யாணமும் :-   விருச்சிகத்தார்  காதலில், காமத்தில் விருப்பமுள் ளவர்கள், சுறுசுறுப்பானவர்கள், சக்திமிக்கவர்கள்.  ஆனால் சிக்கலான, மாறுபட்ட மனது டையவர்கள்.  இவர்கள்  இரக்கமில்லாதவர்களாய் இல்லாத பட்சத்திலும், நன்கு  புரிந்து கொள்ளும் தன்மையற்றபோதும்,நிரந்தரமாகப் பாசத்தைக் காட்டாத போதும். இவர்களை திருத்தி நற்பழக்கங்களைக் கொண்டுவராவிட்டால்,இவர்களால் எதிர்பாலருடன் ஒருமிரு துவான   மற்றும் சந்தோஷமான  வாழ்க்கை  வாழமுடியாது.  இவர்கள் மேல் குற்றங் குறை   காண்பதையும்,  இவர்களைப்  பற்றி  விமர்சிப்பதையும்   விரும்பமாட்டார்கள்.
ஆனால், தனது துணைக்கு முழுவதுமான வசதிவாய்ப்புகள் செய்து தருவதில் இவரைக் குறை சொல்லமுடியாது. விருச்சிக   மனைவி  நேர்மையானவளாகவும், உண்மையான வளாகவும்,  பொதுவாக  அதிர்ஷ்டசாலியாகவும்  இருப்பாள்.. ஆனால்,  2,7,11 ல் தீயகிர கங்கள் இடம்பெற, இவர்களது இல்லத்தில் இன்னல்களே அதிகம் இருக்கும் எனலாம்.
  
         விருச்சிகக் கணவர்கள் :- தன் மனைவியின் நற்குணங்களை பாராட்டுபவர்கள்.
மனைவியை  மிகவும்  காதலிப்பவர்கள்.  குடும்ப  மரியாதையையும்,கௌரவத்தையும் பேணிக்காப்பதில்  அக்கறையுள்ளவர்கள்.  மாற்றிக் கொள்ளக்கூடிய மூர்க்க குணமுடை யவர்கள்.. விருச்சிகராசிக்  கணவர்கள் , விருச்சிகத்தில் பிறந்து, லக்னத்தில்  செவ்வாய் இருக்க,அதை தீயகிரகங்கள் பார்க்ககூடிய நிலையுடைய பெண்ணை ஒரு போதும்மணக் கக்கூடாது. ஆனால்,லக்னம் நல்ல கிரக பார்வை பெற்றால், விருச்சிகப்  பெண்ணைவிட அவருக்கு நல்ல மனைவி கிடைக்கமாட்டாள்.

        விருச்சிகப் பெண்கள் :-   தங்கள்  கணவர், தன்னைப்போல்,  ஆழமான  அன்பு காட்டினாலும்,பாசமிகபொழிந்தாலும், மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை அனுபவிப்பார்கள்.
இவர்கள் தங்கள்  கணவரை  எங்ஙனம் மகிழ்விப்பது எனறு அறிந்தவர்களாகவும்,தாஜா
செய்து சரிக்கட்டுவதிலும்  வல்லவர்கள்.  இப்பெண்கள்,கடின உழைப்பாளிகள் உண்மை
யானவர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால்,லக்னம் பாதிக்கப்பட்டிருச்தால் திடீரென உணர்ச்சிவசப்பட்டு, தன்நிலை  மறந்து தன்  கணவன்  எவ்வளவு  உயர்ந்த நிலையிலி ருந்தாலும்,அவனைக் கர்ஜனையோடு பாய்ந்து கத்தி,  கடித்துக் கொதறி எடுத்துவிடுவார் கள்.மேலும், இவர்கள் காமம் மிக்கவர்கள் ஆவர்.
          
         சீர்மிகுபொருத்தம் :- விருச்சிகத்தார் மீனம் அல்லது கடகம் ஆகிய ராசிகளுக்கு பொருத்த மிக்கவர்கள்.  மேலும்  கன்னி,  மகரம்  மற்றும் ரிஷபம் ஆகிய ராசிக் காரர்க ளுக்கும் பொருத்தமுடையவர்கள் ஆவர்.
                        
தனுசு

             தனுசு ராசிக்காரர்களின் மணவாழ்க்கை பொதுவாகமகிழ்ச்சிகரமானதாகவே இருப்பதோடு,  முன்னேற்றகரமானதாகவும் இருக்கும். இவர்களின்,இனிய சிரிப்பினாலும்
நகைச்சுவையுணர்வாலும்,   எல்லோரிடமும்   சுலபமாக   நட்பு கொண்டுவிடுவார்கள்.
இவர்கள் மனைவியாலும்,நண்பர்களாலும் மிகவும் விரும்பப்படுவார்கள்.இவர்கள்  வீட்டி லிருப்பதை விரும்பமாட்டார்கள்.ஆனால் வெளிவட்டாரத்தில் சுற்றித்திரிவதை   மிகவும் விரும்புபவர்கள். இவர்கள்  நல்லமனைவி  அமைய ஆசீரவதிக்கப்பட்டவர்கள். வயதாக வயதாக, தன் குழைந்தகள்பால் அன்பு செலுத்தி,நன்கு கவனித்துக்கொள்வதில்  ஆர்வங் காட்டுவார்கள்.  இவர்களின்  சுதந்திரத்தை  தடைசெய்யக்  கூடாது. அப்படிச் செய்தால் இவர்களின்  பிடிவாதகுணம்   அதிகமாகும். அதன் காரணமாக கடின மனங்கொண்டவர் களாக மாறிவிடுவர். ,தங்கள் குழந்தைகளைக் கையாள்வதில் தங்கள் சாமர்த்தியத்தைக் காட்டி வளர்க்க வேண்டும்.

             தனுசுக் கணவர்கள் :-   திடீரென ஆத்திரங்கொள்ளும் தனுசுக் கணவர்கள்
வெகு சீக்கிரமே ஆத்திரத்தை அடக்கிக்கொள்வார்கள்.விளையாட்டிலும், கேளிக்கை விடு திகளிலும் ஆர்வங்கொண்டவர்கள். குடும்ப   வாழ்க்கையைவிட இதுபோன்ற குதூகலங் களில் ஈடுபடுவதை  அதிகம்   விரும்புவபர்கள். இதற்குமட்டுமே முக்கியத்துவம் அளிப் பார்கள்.  நல்லொழுக்கமும்,  கௌரவமும்   உடையவர்கள்.  நேர்மை  தவறாதவர்கள்,
ஆனால்,  வயதானபின்னரே  இவர்களுக்கு அறிவு முதிர்ச்சி ஏற்படும். எல்லோரிடத்தும்
ஒற்றுமையை   நிலைநாட்டுவார்கள்.தனுசுப் பெண்ணை மணந்தால் அதிரஷ்டசாலிகள்.
ஏனெனில் தனுசுப்  பெண்ணிடம்  கருணையுள்ளமும்,   அடக்கமும்   மிகுந்திருக்கும்
என்பதேயாம்.
             தனுசுப் பெண்கள் :-   கணவனின் நடவடிக்கைகளில் தலையிடவிரும்பாத
பெண்கள் இவர்கள். வீட்டை நன்றாக பேணிப் பராமரிப்பதில் வல்லவர்கள்.தன் கணவன் விரும்பிக்கேட்டாலன்றி,அவனுக்கு எவ்வித ஆலோசனையையும்   தாங்களாகவே முன் வந்து  வழங்கமாட்டார்கள். கணவனுக்கு  உதவக்கூடிய, அவனை அனுசரித்து செல்லக் கூடிய நற் குணங்கொண்டவர்கள்.  தனுசுப் பெண் புத்திசாலி,  திறமைமிக்கவள் மற்றும் மரியாதை மிக்கவள் ஆவாள். தன் கணவன் தவறு செய்தால் அவனுக்கு பத்தி சொல்லி திருத்தக்கூடியவள்.  நம்பிக்கையுடையவள்,   கடமையுணர்வுள்ளவள்,  பணிவுள்ளவளு மாவாள். 2 மற்றும் 11ம் மிடங்கள் செவ்வாயால் பாதிக்கப்பட்டிருந்தால் இவள் கணவன் மற்ற பெண்களோடு தொடர்பு வைத்திருக்கலாம்.

             சீர்மிகு பொருத்தம் :-    தனுசுக்கு, தனுசு சிறந்த பொருத்தமாகும். மிதுன மும் மிக நல்ல பொருத்தமாகும். மேலும், சிம்மமும் பொருந்தும். இவர்களுக்கு, துலாம் மற்றும் கும்பம் ஆகிய ராசிகளோடு,நன்கு புரிந்து கொண்டு வாழும் தன்மை ஏற்படும்.

                                  மகரம்
          
            காதல் மற்றும் காமம் : - மெதுவாக,மிகவும் எச்சரிக்கையுடன் எதிர்பாலரை அணுகுவார்களே  யன்றி எதற்கும் உணரச்சி வசப்படமாட்டார்கள்.இவர்கள், மூர்க்கத்தன
மாகவோ, தைரியத்துடனோஎதிர்பாலரைஅணுகும்திறமையற்றவர்களாதலால்,இவர்களை விரும்புபவர்கள் மிகவும் வருத்தமுறுவர். இதற்கு,இவர்களின் தயக்கமும், தாழ்வு மனப் பான்மையுமே காரணமாகும்.  துணையைத்  தேர்ந்தெடுப்பதில்  அதிக  காலம் எடுத்துக் கொள்வார்கள். பாசமிக்கவர்களாய் இருந்தாலும், காமவிவகாரங்களில் விவரமானவர்கள் அல்ல.நடனம் மற்றும் கேளிக்கைகளில் ஆர்வமற்றவர்கள்..


          மகரக் கணவர்கள்:-  இவர்கள்  குறைவான காம உணர்ச்சியுடையவர்களானா
லும், தங்கள் துணைக்குத் தேவையான  அனைத்து சுகங்களையும்,நிதானமாகவும்,சீராக
வும் வழங்குவதில் வல்லவர்கள்.தன் துணையைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருக்கும் இவர்கள், யாரையும் முழு நம்பிக்கையோடு ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் பல மகரத்தாருக்கு, முகமறிந்த  நண்பர்கள்  இருந்தாலும்,   அவர்கள் வாழ்நாள் முழுவதும் மதிக்கக்கூடிய,உண்மையான நண்பர்கள் குறைவாகவே இருப்பார்கள்.இவர்கள் கூட்டுறவு சங்கங்களிலும், கேளிக்கை விடுதிகளிலும் முக்கிய உறுப்பினராக இருப்பர்.காம விவகா ரங்களில்,  மந்தத்தன்மையும்,   பயங்கலந்த   தன்மையும் உடைய இவர்கள்,மறுப்பற்ற, நிச்சியமான  வழி கிடைக்காமல்  அல்லது  சம்பந்தப்பட்டவர்களின்  சம்மதமில்லாமல் எந்தவொரு விஷயத்திலும் இறங்கமாட்டார்கள்.

          மகரப் பெண்கள் :-  சனி பலம் பெற்றிருக்க,சுயநலமிக்கவர்களாகவும்,சிக்கனம்
மிக்கவர்களாகவும்  இருப்பர்.   குடும்ப   பாரம்பரியத்தைக் கட்டிக்காப்பதிலும்,கடினமாக
உழைப்பதிலும் சிறந்தவர்களாக  இருப்பார்கள். 7 ம் அதிபதி சந்திரன் பலமாகயிருந்தால்
பயந்த   சுபாவமுடையவர்களாகவும்,  தேக  ஆரோக்கியம் குறைந்தவராகவும் இருப்பர்.
தனது  கணவர்  மற்றும்  குடும்பத்தார்  மிகவும் பாசமாக  நடந்தகொண்டாலும்,இவரது
இருப்பிடம் மாறிக்  கொண்டேயிருக்கும், நிரந்தரமானதாக இருக்காது.  இவர்  கருணை
உள்ளவர், பொறுமையானவர், அற்பணிப்பு  குணமுள்ளவர்  மற்றும் நல்ல அனுசரணை
குணமும்  உடையவர்.   எப்போதும்  கணவரின்  உதவியை  நாடுவார். கணவனுக்கும்
உதவிக்கரம் நீட்டுவார்.
           பதினோராமதிபதி  செவ்வாய்,சந்திரன், சனியைவிட  பலம்மிக்கவராக இருந் தால்இப் பெண் நவநாகரிகமாகவும்,சதைப்பிடிப்புள்ளவளாகவும்,  திறமைமிக்கவளாகவும், உண்மையான மனைவியாகவும்,  கடின உழைப்பாளியாகவும்,தன் குடும்பத்தை பேணிக் காப்பவராகவும், சமையற்கலையில்மிகச் சிறந்த வல்லுனராகவும், விருந்தினரை மனமு வந்து உபசரிப்பவராகவும்   விளங்குவார்.  ஆனால் தன் கணவனைமட்டும் சுதந்திரமாக இருக்கவிடாமல், அடக்கியாள்வாள்.  இந்நிலை, சீக்கிரமே,இளமையிலேயே திருமணமா வதைக் குறிகாட்டுகிறது.


                                                                            கும்பம்
                     
              கும்பத்தார் அதிபுத்திசாலிகள்,எனவே நன்கு படித்த ,அவர்களின் படிப்புக்கு சமமான, புத்திகூர்மையுள்ள   துணையையே விரும்புவார்கள்.தனக்கு சமமான விவேக முள்ள, படிப்பில்  அக்கறையுள்ள   அனைவருடனும்   சுதந்திரமாக பழகுவர். இவர்கள் விருந்து, கேளிக்கைகளில்  ஆர்வமுள்ளவர்கள். இவர்கள்   பலம்  மிக்க மற்றும் நிரந்த ரமான  தொடர்புகளையே  விரும்புவர்.  கர்வமில்லாதவர்கள்   .அடக்கமானவர்கள்.தன் துணையை அடக்கியாள விரும்பாதவர்கள். ஒருவர் இவர்களின் தரத்திற்கு இணையான வர்கள்  இல்லையெனத்   தெரியவந்தால்,   எந்தவித காரணத்தையும் கூறாமல், தான்
காதலிப்பவர்களையோ, நண்பர்களையோ,ஒதுக்கி மெல்ல மெல்ல தொடர்பை அறுத்துக் கொள்வார்கள்.தன்காதலை வெளிக்காட்டமாட்டார்கள்.எனவே,இவர்களின் துணைவர்கள் காமம்மிக்கவராக  இருப்பின்  இவர்களின்  செயல்களில்   திருப்தியடையமாட்டார்கள்.. இவர்களின்துணைவர்கள்சட்டத்தைமதித்துநடப்பவர்களாகவும்,   உண்மையானவர்களாக வும்,நேர்மையானவர்களாகவும்,   கடமையுணர்வுள்ளவர்களாகவும்,பிரபுத்துவம் மிக்கவர் களாகவும்,  தயாளகுணம்   உடையவர்களாகவும்   இருப்பர்..இவர்கள் அமைதியையும், எப்போதும் சந்தோஷத்தையும்  மற்றும் ஒற்றுமையையே விரும்புபவர்கள்.
             கும்பத்தாரை மணப்பவர்கள்,இவர்கள் இரக்ககுணமுள்ளவர்கள்,மனிதாபிமா
பிமானமுள்ளவர்கள்,  தயாளகுணமுள்ளவர்கள, மற்றவர்களுக்கு   உதவி   செய்வதை விரும்புபவர்கள் என்பதை உணருவார்கள்.
              கும்பக். கணவர்கள் :-      இவர்கள் அதிபுத்திசாலிகள் எப்போதும் சிந்தித் துக்கொண்டே இருப்பவர்கள். சிந்தித்து, சிந்தித்து ஆராய்ச்சியில் ஈடுபடுவார்கள். மேலும் விஞ்ஞான ஆராய்ச்சியிலும் ஈடுபடுவார்கள்.எனவே இவர்கள் அதிக நேரத்தைத்  தங்கள்
குடும்பத்தைப்  பராமரிக்கவோ,  குடும்பத்தாரோடு குதுகலிக்கவோ ஒதுக்க முடியாதவர் களாகிறார்கள்.அதுவும் இவர்களின்  சுயநலமிக்க மனைவிகள் இதை இவர்களின் குறை என்றும் தங்கள்  மீது   அக்கறை  எடுத்துக் கொள்ளாதவர்கள் எனவும் எண்ணுவார்கள். மற்றப்படி, இவர்கள் மிக்க இரக்ககுணமும்,மனிதாபிமானமும்,பிறர்க்குஉதவும் குணமும், மேதையாகவும்   இருப்பார்கள்.   சந்தோஷமான   வாழ்க்கைக்கு  நல்  ஒத்துழைப்புத் தருவார்கள்.
              இவர்கள் ஒரு கண்டிப்பான ஆசிரியரைப் போன்றவர்கள்.தங்கள் குழந்தை
களை, அறிவுள்ளவர்களாகவும், பெரியவர்களிடம் மரியாதை உடையவர்களாகவும்,பாசம்
மிக்கவர்களாகவும், நன் நடத்தையடையுவர்களாகவும்,  நல்ல பழக்க வழக்கங்கங்களை
உடையவர்களாகவும் கவனித்து  வளர்ப்பார்கள். தன் மக்கள் கல்வியிற் சிறந்தவர்களாக வும்,  தைரியசாலிகளாகவும்,  எதையும் தெளிவாக விளக்குபவர்களாகவும் இருக்க ஊக் குவிப்பவர்கள். அவர்கள் புத்திசாலிகளாகவும், சுறுசுறுப்புள்ளவர்களாகவும், திறமையுள்ள வர்களாகவும்   இருக்க  விரும்பினாலும்,   தங்களை அவர்கள் மிகவும் மதித்து நடக்க வேண்டு மென்றும்,மரியாதை தர வேண்டுமென்றும் எதிர்பார்ப்பார்கள்.
              கும்பப் பெணகள் :-     கும்பத்துப் பெண்கள் சம்பிரதாயங்களை மதியாத வர்கள்.  தங்கள்  துணைவர்  தனக்கு இணையில்லாதவர் என்று தெரிந்து கொண்டால், தங்கள் திருப்திக்காக,  வேறொரு  துணையைத் தேடிக்கொள்ளவும் தயங்கமாட்டார்கள். மாறாக, திருப்தியளிக்கக்  கூடிய  வகையில் நடந்துகொள்வார்களானால் அவர்களுடன் விரும்பி ஒத்துழைத்து தங்கள்  கணவருடன் ஒற்றுமையாகவும்,பொறுப்புகளை கடமை களை தங்களுக்குள் பகிர்ந்து கொண்டும் வாழ்வார்கள்.

              சீர்மிகு பொருத்தம் :- மிதுனம் மற்றும் துலா ராசிக்காரர்கள் மிக்கபொருத் தமுடையவர்கள்.

                                     மீனம்

              அறிவுக் கூர்மையுள்ள மீனத்தார் மிக்க அழகுள்ள பெண்ணையேமனைவி யாக்க விரும்புவர். இவர்கள்  காம விவகாரங்களில்  ஆர்வமுடையவர்கள். இவர்களின் துணைமீதான  வீண்  சந்தேகத்தால், இவர்களின்   காதலும்,அன்பும் மறையும், மடியும். முகஸ்துதியை   விரும்பக்  கூடிய இவர்கள் அனைவரிடமும் சகஜமாகப் பழகக்கூடிய துணையை தேர்ந்தெடுக்கக்கூடாது.  உபய ராசியாதலால் சில நேரங்களில் பிரியமுள்ள வர்களாகவும்,  சில   நேரங்களில் பாசமில்லாதவர்கள் போலும் நடந்துகொள்வர். நல்ல சந்தோஷமான வாழக்கையைப் பெறுவர். இவர்கள்  இரக்ககுணமும் கருணையுள்ளமும் மற்றும் விசுவாசமுள்ளவர்களாகவும் விளங்குவர்.
நல்லவர்களாகவும்,   நேரத்துக்குதக்க மனம் மாறுபவர்களாகவும் இருப்பர். தைரியமான வர்கள்,  வீரமிக்கவர்கள்   மற்றும்  சுதந்திர யெண்ணங்கொண்டவர்களாகவும் இருப்பர். இவர்கள்  தங்களைப்  போலவே  வெற்றிகரமாகவும், பாசமிக்கவர்களாகவும் வாழ்வில் வெற்றிபெறும், தன் குழந்தைகள்பால் அன்பைப்பொழிவர்.

             மீனக் கணவர்கள்:-   மீனக்  கணவர்கள்  பாசமிக்கவர்கள்,   இரக்கமுடை யவர்கள் முழுஅன்பையும், காதலையும்  பொழிபவர்கள்.  ஆனால்  சந்தேக குணமுடை யவர்கள். இவர்களின்  சந்தோஷகரமான, முன்னேற்றகராமான   வாழ்க்கைக்கு தங்கள் துணையை  சந்தேகக்  கண்கொண்டு  பார்ப்பதைத்  தவிர்த்திடல் வேண்டும். வாழ்க்கை முழுவதும்  காமத்தின்   மீது கவர்ச்சியடையவர்களாகவே இருப்பர். இவர்கள் உண்மை யானவர்கள்,உதவிகரமானவர்கள் குடும்பவொற்றுமையை நிலை நாட்டுபவர்கள்

             மீனப் பெண்கள் :- அழகிய பெரிய கண்களையடைய,அழகு மிக்கபெண்கள் இவர்கள். காமம் மிக்கவர்கள். அதிக சுதந்திர மனப்பான்மையுடையவர்கள்.  இவர்களின் கட்டுப்பாடற்ற தன்மை காரணமாகவும், எல்லையற்ற சுதந்திரமுடையவர்களாக இருப்ப தாலும், சில நேரங்களில் சமூகவிரோதிகாளிடம் மாட்டிக்கொண்டு வாழ்கையை இழக்க நேரிடலாம்.  எனவே  இவ்  விஷயத்தில் தாராள மனப்பான்மையோடு நடந்து கொள்வ தைத் தவிர்க்கவேண்டும்.  இவர்கள் இனிமையை விரும்புபவர்கள்சமூக அக்கறையுடன் நடந்துகொள்பவர்கள், இளகிய மனமுடையவர்கள்,நவநாகரீக நாரிமணிகள், புதிய யுக்தி களாலும்,நாகரீகத்தாலும் சுலபமாகக் கவரப்படுவர்.மொத்தத்தில் குடும்ப வாழ்க்கை மீது அதிக பற்றுடையவர்கள்,காதலுடையவர்கள்.

            சீர்மிகு பொருத்தம் :-கன்னி,கடக ராசிக்காரர்கள் மிக்க பொருத்தமானவர்கள்.




                        @#@#@##@@##@@##@@##@@##@@##@@









No comments:

Post a Comment