Search This Blog

Thursday 30 August 2012

என்ன பொருத்தம்.....2


என்ன பொருத்தம்..நமக்குள் இந்தப் பொருத்தம்

                         

கடகம்


அன்பு  செலுத்துவதில்     மிக   விசுவாசமுள்ள, கபடற்ற,உண்மையுள்ள,மிக்க பிரியமுள்ள, கடகத்தார்,  மாறுதலற்ற, ஊக்கமளிக்காத,சுவையற்ற, வெறுப்பளிக்கும், சோர்வுண்டாக்கும், காதலுணர்வு        மேம்படாத      வாழ்க்கையுடையவர்கள். அவர்கள்,தங்கள் துணையிடம், தங்கள்       மனதிலுள்ள    விசுவாசத்தை,       உண்மையை,    பிரியத்தை   வெளிப்படையாக உணர்த்தும்     திறமை குறைந்தவர்கள். இவர்கள் நேர்மையானவர்கள்.  உண்மையானவர்கள். பிடிவாதமானவர்கள் , கடின நெஞ்சமுடையவர்கள். எதையும் தெளிந்து செயல்படுத்தக் கூடியவர்கள். ஆயினும், சலனப் புத்தியுள்ள, அடிக்கடி    மாறக்கூடிய, மனதுடையவர்கள். இவர்கள் தன் குடும்பம்,   தன்   வீடு   என   சந்தோஷமான   வாழ்க்கை வாழ, பாச மழை பொழிந்து,   நிரந்தர   இன்பமுடன்      வாழ்பவர்கள்..   பொதுவாக இவர்கள் சிறந்த வீட்டுப் பறவைகள். ஆனால், காமமும் சிருங்காரமும் ஒருங்கே   அமைந்த குணமுடையவர்கள். தன் தேவைகளை தியாகம் செய்து, தன் மக்களுக்கு      நற்கல்வி   தந்து,   அனைத்துசுகங்  களையும்  அளிக்க    வல்லவர்கள்.  இவரின் குழந்தைகளும்   இவருக்கு நன்றியுள்ள வர்க ளாக,கீழ்ப்படிதலுள்ளவர்களாகவும்,கடமையுணர்வகளாகவும்    இருப்பர். மேலும்,உண்மை யுள்ளவர்கள். ஆயினும்,இவர்கள் மற்றவர்கள் தங்களை அடக்கியாள்வதை விரும்பமாட்டார்கள் ,பொறுத்துக்கொள்ளவும் மாட்டார்கள்.    ஆனால்,       அமைதியான, குளிர்ச்சியான மனதையும்   உடையவர்கள், கூர்மதி  உடையவர்களாகவும்         கதாநாயகர்களாகவும் விளங்குவர்.

கணவர்கள்:-   கடகத்துக் கணவர்கள் , தங்கள் மனைவியை   தேவதையாகவும், தெய்வமாகவும் போற்றுபவர்கள். இவர்கள் குடும்பப்பாங்கான   பெண்களையே விரும்புபவர். எல்லா வழிகளிலும், தன்    மனைவியை   மனமகிழ்ச்சியுடன்   வைத்திருப்பர். அன்பைப் பொழிவர்.ஆயினும், இவர்கள் தவிர்க்க     வேண்டிய     தீய பழக்கங்கள் என்னவெனில், திருப்தியற்ற மனநிலையில்,   ஏதாவது ஒரு வழியில்   மனைவியை  விமர்சிப்பதும், குறைகூறுவதும், தேவையற்ற முறையில் அன்றாட வீட்டு   விவகாரங்களில் தலையிட்டு, சந்தோஷமற்ற சூழ்நிலைகளை உருவாக்குவதும் ஆகும்.


மனைவிகள் :-    கடக மனைவிகள் தங்கள்  கணவனைப்   பூஜிப்பவர்கள். விசுவாசமிக்கவர் கள்,  பாசமிக்கவர்கள்,   கடமையுணர்வு            உள்ளவர்கள்,   நோய்வாய்பட்டவர்கள், இன்முக ம்   உடை யவர்கள், மற்றும்    கருணையுள்ளம் கொண்டவர்கள்..   தன் மக்களுக்கு பாசமிக்க தாயாக விளங்குவர். குடும்ப    சூழலை, தக்கபடி அமைத்துக்கொள்ளும் இவர்கள்   சில நேரங்களில் தங்கள் மனநிலைக்கு  ஏற்றபடி    மாற்றிக் கொள்வார்கள். தன்னை நன்கு கவனித்துக் கொள் ளும் தன் கணவரின்  செயல்பாடுகளில் திருப்தி அடைவார்கள். அவருக்கு பக்தி மார்க்கத் திலும் உதவிகரமாக   இருப்பர்..இவர்கள் ஒதுக்கப்படும் போதும், அலட்சியப்படுத்தப் படும் போதும், எதையும்    இவர்களை   கலக்காமல்     முடிவெடுக்கும்     போதும் மனமுடைந்து  போவார்கள்.  இதன் காரணமாக அவர்கள் திடமான மனதுடன், தீர்மானமாக ஒத்துழைப்பு அளிக்கமாட்டார்கள்.    அதிலிருந்து மாறக்கூடிய மனதுடையவர்கள் யென்றாலும், இவர் களின் கணவர், இவர்கள் தாங்க முடியாத அளவிற்கு வன்மையாக   செயல்பட்டால் மாற மாட்டா ர்கள். இவர்கள் பார்ப்பதற்குத்  திறந்த மனதுடையவர்கள் போல், உண்மையானவர் கள் போல் தோற்றமளித்தாலும் உண்மையில், அனைத்து உண்மைகளையும் வெளியிடா மல்  மறைத்து விடக் கூடிய குணமுடையவர்கள். இவர்கள் உணர்ச்சி ததும்பும், கவரும்  காந்தம் போன்றவர்கள். மென்மையானவர்கள்,  சுவாதீனமான ஓய்வை விரும்புபவர்கள், காம உணர்வும், கற்பனை வளமும் மிக்கவர்கள்.சுலபமாக பிறரை வசீகரிக்கக் கூடியவர் கள்.நேரத்துக்குத் தக்க வளைந்து கொடுத்து நடப்பவர்கள். இருக்கும்   இடத்திற்கு ஏற்ப உருவம் மாறுபடும்,தணணீரைப் போன்றவர்கள்.

சீர்மிகு பொருத்தம் :-     கடகத்தார்- கடகம், விருச்சிகம் அல்லது மீனத்தாரை மணந்து மகிழ்வது உசிதமாகும்

சிம்மம்
;
      சிம்மத்தார் சீர்மிகு   காதலர்கள் ஆவர். காமத்தில் நெருப்பு, ஆனால் உண்மையும், விசுவாசமிக்க   காதலர் ஆனாலும் காதலை கடைவிரிக்க விரும்பமாட்டார்கள். கமுக்க மாகக் காதலிப்பர்.ஏனெனில்,பொது இடங்களில் அவ்வாறு செய்வது   கௌரவ குறைவு என்று எண்ணுபவர்கள். எதிர்பாலினத்தின் மீது மிகவும் பாசமிக்கவர்கள்.  பெண்கள் கூட் டத்தின் மத்தியிலேயே இருப்பதை விரும்புபவர். எனவே,  இவரை மணக்கும் பெண்கள் பொறாமை கொள்ளக்கூடாது. இவரை சரியாகப் புரிந்து கொண்டு,   ஒருவருக்கொருவர் சந்தேகங்கொள்ளக் கூடாது. ஏழாமிடம் பலமற்று இருந்தால்,இருவருக்கிடையேயும் பிரி வினை நிகழ்வது உறுதி..இவர்கள் தங்கள் குழந்தைகள் மீது மிகவும் அன்பு செலுத்துவர். அவர்களைப் பற்றி மிகவும் பெருமை கொள்வர்.இவர்களின் குழந்தைகள்,சுதந்திரநோக்கு டையவர்கள்,வெறுப்புடையவர்கள்,கட்டுப்பாடு   விதிக்கப்படுபவர்கள், இதன் காரணமாக கலவரப்படக்கூடியவனாகவும்,   ஓய்வற்றவனாகவும்   ஆகிவிட வாய்ப்புண்டு. எனவே, சிம்மப்  பெற்றோர்கள்  தங்கள் குழந்தைகளை    சார்ந்து வாழாவிட்டால் குழந்தைகள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள்.  அவர்களின் குழந்தைகளும் சிம்மத்தில் பிறந்திருந்தால் சிறந்த அமைப்பாளர்களாகவும்,    கர்வம் உள்ளவர்களாகவும், நற்குணம் உள்ளவர்களாகவும், பிறர்க்கு உதவுபவராகவும்,   பிறரிடம்    அன்புடையவராகவும், தைரியசாலிகளாகவும்,
நம்பிக்கை மிக்கவர்களாகவும்,புகழ் பெற்றவர்களாகவும் விளங்குவார்கள் .இங்கு,   இந்த இராசியில் பிறந்தால்  மட்டுமே   இக்   குணங்கள்   இருக்கும் என அர்த்தம் கொள்ளக்கூடாது, மற்ற இராசிகளில் பிறந்தவர்கள் அந்த இராசிக்குரிய  குணங்களோடு   இருப்பார் கள்.


    கணவர்கள் :-      சிம்மக்கணவர்கள் உணர்ச்சி வசப்பட்ட மனநிலை உடையவர்கள்.. தங்கள் மனைவிமேல் உச்ச காதலை உடையவர்கள். ஆனால், மற்ற பெண்களுக்கு நடுவே, கவர்ச்சி மையமாகவும் திகழ்வார்கள். .சிம்மக் கணவர்களை, அவர்களது மனைவிமார்கள், நன்றாகப் புரிந்து கொண்டு,  அனுசரித்து    வாழ்ந்தால்,    கணவனால்     மிகவும்    விரும்பப்படு
பவளாகவும்,           அன்பு     செலுத்தப்படுபவளாகவும்,     அவனால்     மெச்சப் படுபவளாகவும்   இருப் பாள். மேலும்,  அம்மனைவி   வியக்கத் தக்க வகையில் குடும்ப   சூழலுக்கு     ஒத்தவளாக,     ஜாடிக்கேத்த    மூடி போல்     அமைவாள். அத்தகைய மனைவியையோ   ,தன்  குடும்பத்தா ரையோ,பிறர் பழிப்பதையோ, அவமதிப்பதையோ  ஒரு    போதும்   சிம்மக்    கணவன் அனுமதிக் கமாட்டான், பொறுக்கமாட்டான். ஏனெனில், கண்ணியக்குறைவான   செயல்களை,  இவர் களால்     பொறுத்துக்   கொள்ள     முடியாது.     தீரமான   சிம்மக்  கணவர்கள் எப்போதும்   தங்கள் சமூக பொறுப்பையும் உணர்ந்தவர்களாகவே இருப்பர். இவர்கள்   காமம்     மிக்க வர்கள்,       காதல் வயப்பட்டவர்கள் ஆனால் மூர்க்க சுபாவமும் உடையவர்கள்.     எனவே, சிம்மத்தில் பிறந்தவர்கள்  ஒருவருக் கொருவர்   புரிந்து      கொண்டு      தனது        இல்லத்தில்       மகிழ்ச்சிகரமான ,அதிரிஷ்டகரமான வாழ்க்கையை ஏற்படுத்திக்கொள்ள,   அவர்களுக்கு, ஆலோசனை வழங்கப்படுகிறது.

மனைவிகள் :- சிம்மப்பெண்கள் பேராவலுடைய,லட்சியவாதிகள் ஆவர். சீரியமுறையில் தன் வீட்டை  பேணுபவர்கள். வெற்றிகரமான சமூக சேவகிகள். மொத்ததில்  அனைவரி டத்திலும் தங்கள் தனி முத்திரையை,   தனக்கு   அனுகூலமாக   பதித்துவிடுபவர்கள். எப்போதும் நிலைத்திருக்கும் அன்புள்ளம் கொண்டவர்களாதலால்,  மிகவும் பிரபலமான நிலைக்கு உயர்ந்து,சமூகத்தில்,கட்டளையிடும்  அளவுக்கு,    தலைமைப்பொறுப்பு ஏற்க வல்லவர்கள். சிம்மப்  பெண்  ,தன்சிம்மத்தில் பிறந்த  கணவன் எதிர்பாலினர் மத்தியில் புகழ் பெறுவதைப்பற்றியும்,   பொது  நலவாதியாக   இருப்பதைப்பற்றியும், தான் செய்த உதவிகளுக்கு,பிரதிபலனை எதிர்பார்காதவராக இருப்பதைப்பற்றியும் சந்தேகங்கொள்வது தேவையற்ற   ஒன்றாகும்.   சிம்மப்பெண்கள்,   இனிய,முன்னேற்றமிக்க, அமைதியான வாழ்க்கைவாழ, தங்கள்  கணவனின்  நற்குணத்தையும்   ,பாசத்தையும், கருணையையும் உண்மைக்  காதலையும்   மெச்சுவதோடு,   தங்களையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வது அவசியமாகிறது..   இவர்கள்,   அன்பால் அடக்கியாண்டு,தன்னை கட்டுக்குள் வைத்திருக்கும் முரட்டு    கணவனையே   விரும்புவர். காமம் மிக்க இப்பெண்களுக்கு, சுயகட்டுப்பாடு தேவை.  அப்படி    இல்லையெனில்,வரம்புக்கு  மீறி செயல்படுவர். தன் கருத்தே பெரிது என நினைக்கும்  இவர்கள் இறுமாப்புடையவர்கள்.   தன்வீட்டில், தான் வைத்ததே சட்டம், தன் வார்த்தைகளே  பெரிது   என  அனைவரும் தன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பவர்கள்.

       பொதுவாக,  சிம்மக்கணவன்,       சிம்மப் பெண்களை மணப்பது சிக்கலை ஏற்படுத்தும். ஏனெனில், உடை விஷயத்திலும்,  ஆபரணங்கள் விஷயத்திலும் இவர்களை  ஒருபோதும் திருப்திப்படுத்த முடியாது. அதன் காரணமாக இவர்கள் வாழ்க்கை  நரகமாகலாம். அவள் திருப்தி அடைந்தால் மட்டுமே,வீடு சொர்க்கமாகும். ஒருவருக்கொருவர்  விட்டுக்கொடுத்து,    ஒற்றுமையாய்  இருப்பதின் மூலமே ,இவர்கள் வாழ்க்கை வளம்பெறும். 


             சீர்மிகு பொருத்தம் :- சிம்மம் ஓர் நெருப்பு இராசி,எனவே,நெருப்பு இராசிக ளான மேஷம், தனுசு, இராசிகள் சீர்மிகு பொருத்தமுடையவை ஆகும். காற்று இராசிகளான மிதுனம்,   துலாம்   மற்றும்   கும்பமும்  அதிகமாக ஒத்துப்போகக் கூடியவை ஆகும். மேஷம், தனுசு ஆகிய இராசிகள் கண்டிப்பாக முழு சந்தோஷத்தையும்,  இருவரிடையே இசைந்த வாழ்க்கையையும் தரக்கூடியவையாகும் கும்பத்தில்பிறந்தவர்கள்,சிம்மத்தாரை தெய்வமாக மதிப்பவர்கள், அவர்களுக்காக அனைத்தையும்   அர்ப்பணிப்பவர்கள் ஆவர்.  துலாத்தில் பிறந்தவர்கள்,   தோழமையுணர்வு  உடையவர்கள் ,கஷ்டங்களைத் தவிர்ப்ப வர்கள்,எந்த விலை கொடுத்தேனும் அமைதியை வாங்கி விடுபவர்கள் ஆவர். மிதுனத்தில் பிறந்தவர்கள், இணைபிரியாதவர்கள்  ,உண்மையானவர்கள்,   அன்பைப் பொழிபவர்கள்,
சாதுர்யம் மிக்கவர்கள்.இவர்கள் எப்போதுமே தன் துணையை மகிழ்ச்சிகரமாக வைத்துக்கொள்பவர்கள்

                       மேஷக்கணவனால் மட்டுமே இவர்களை அடக்கியாளமுடியும். அதன் காரணமாக, இப்பெணகள் தங்கள் எல்லையுணர்ந்து நடப்பர்.இவர்களால் தன் அதிகாரத்தை கணவன் மேல் செலுத்த முடியாது. மேலும்,தங்கள் இஷ்டத்திற்கு  செலவு செய்யமுடியாத வர்களாகி    அதன் காரணமாக குடும்ப ஒற்றுமை மற்றும்    முன்னேற்றம் உயர்ந்து, நல் வாழ்க்கையும் அமைந்துவிடுவதால்,   மேஷக்     கணவனை மணக்கும், சிம்மப் பெண்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று சொல்லலாம்.


கன்னி
           கன்னியில் பிறந்தவர்கள்  அதிபுத்திசாலிகள். தன்   துணையைத்   தேடிக்கொள்  வதில்,மிகவும் கஷ்டப்படுவார்கள்.ஏனெனில், இவர்கள் மகிழ்ச்சியை  எதிர்பார்ப்பதைவிட, அறிவு   பூர்வமான   துணையை     எதிர்நோக்குவதேயாகும். இவர்கள் சந்தோஷத்தையும், காமத்தையும் விட அறிவுக்கு முக்கியத்துவமளிக்கும் அறிவு ஜீவிகள் ஆவர். சில நேரங் களில்,  இவர்களது    எதிர்பார்ப்புகள்    ஏமாற்றத்தை   அளிக்கக்கூடும். மிகவும் கூச்சசு பாவ முள்ள இவர்கள்,காதலைக் கையாள்வதில் வல்லவர்கள் அல்ல. பொறுமையுள்ள இவர்க ளுக்கு     தங்கள் துணைமீது குற்றம் கண்டுபிடிக்கும் குணம் இயற்கையாகவே அமைந்து விடுகிறது.எனவெ,பிறரோடு சம்பாஷிக்கும் போது  அவர்களை சாந்தப்படுத்தும் விதத்தில், தாஜா   செய்ய  முற்படக்கூடாது.மென்மையான உணர்ச்சிகளோடும் இவரகள் இருக்கக்கூ டாது.    இவர்களால் காதலிக்கப்படுபவர்கள், அழகில்லாதவர்களாக இருந்தாலும், அறிவில் லாதவர்களாக    இருந்தாலும்,   எல்லாம்   இருப்பதாக பாராட்டப்பட வேணடும், மெச்சப்பட வேண்டும்.அப்படி செய்தாலே,    இவர்களும்      பாரட்டப்படுவர்     என்பதை தங்கள் மனதிற் கொள்ளவேண்டும்.


           கணவர்கள் :- கன்னி இராசிக்காரர்கள், திருமண பந்தத்தை, ஒரு சமூகத்    திட்ட மாகவும்,  பார்ட்னர் ஷிப் ஒப்பந்தமாகவும் கருதுவதால், வெகு காலத்திற்கு பிரம்மச்சாரிகளாக காலம் தள்ள வேண்டிய    சூழ்நிலை ஏற்பட்டுவிடுகிறது.  ஆயினும்,    இவர்களின் துணையின் உதவியோடு இவர்களின் மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக       அமைந்து  விடுகிறது. மிகவும் சிக்கனத்தை       கடைப்பிடிப்பதால்,   இவர்களின்      குடும்பவாழ்க்கை பாதிக்கப்படலாம். எனவே,சிக்கனப் பழக்கத்தை இவர்கள் கைவிட்டால்  நல்லது.


           மனைவிகள் :- 2, 7 மற்றும் 11 ஆம் அதிபதிகள், முறையே சுக்கிரன், குரு,  சந்திரன் ஆகியோர் சுபர்கள் ஆவர். இவர்கள் குறிகாட்டுவது, புத்திகூர்மை,  மேதாவித்தன ம் உடைய அனுசரித்துச் செல்லும்,  காரியத்தில்    கை   கொடுக்கும்   அன்புக் கணவன்  இவர்களுக்கு அமையும் என்பதையே ஆகும்.    இவர்களை    நன்கு  புரிந்து கொண்டு வாழும் துணையே அமையும். எனவே,   இனபகரமான,   இனிய   வாழ்க்கை     இவர்களுக்கு அமைவது உறுதி. இவர்கள்   சிக்கனம்   பார்ப்பவராக    இருக்கலாம்,    ஆனால்  கஞ்சத்தனம் செய்பவர்களாக இருக்கக்கூடாது.    இவர்கள் தன் கணவனுக்கு பக்தி மார்க்கத்தில் ஒத்துழைக்கவோ, அவ னுக்கு    இனிய   துணையாகவோ இருக்கமாட்டார்கள். ஆயினும், இவர்களது வாழ்க்கைச் சக்கரம் சீராகவே ஓடும்.   இப்  பெண்கள் காமத்தைப் பொருத்தவரை, மிகவும் தொல்லை தரக்கூடிய  நிகழ்வாகவும், மோசமான நடவடிக்கையாகவும் கருதுவர். இந்த விஷயத்தில், இவர்களை, இவர்களாகவே மாற்றிக் கொண்டால்தான் உண்டு. இதன் காரணமாக, இவர்களுக்குக் குறைவான எண்ணிக்கையிலேயே குழந்தைகள் இருக்கும். இவர்களின் குழந்தைகளுக்குத்  தேவையான   வசதிகளை   எந்த  விதத்திலாவது, கட்டாயம் செய்து கொடுத்துவிடுவார்கள்.  எனவே,   இவர்களின்  குழந்தைகளுக்கு   ஒளிமயமான எதிர்காலம் உண்டு. ஆரோக்கியமான,மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வர் எனலாம். ஆனால்  இவர்கள் குழந்தை களிடம் தங்கள் பாசத்தை வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள்.


           சீர்மிகு பொருத்தம் :- ரிஷபம்,மகரம் ஆகிய பூமி ராசிகளும்,  நீர் இராசிகளான கடகம், விருச்சிகம் ஆகியவையும் மிகமிக பொருத்தமு உள்ளவையாகும்.  திங்கட்கிழமைகளில் பிறந்தவர்களையும்,   சந்திரனின்  நட்சந்திரங்களான ரோகிணி, ஹஸ்தம்  மற்றும் திருவோண நட்சத்திரங்களில் பிறந்தவர்களையும் மணந்து கொண்டால்   முன்னேற்றகர மான, சந்தோஷகரமான வாழ்க்கை இந்த இராசிக்காரர்களுக்கு அமையும்.


                                            







No comments:

Post a Comment