Search This Blog

Thursday 10 August 2017

குரு பெயர்ச்சி பலன்கள் - 2017 மேஷம்-ரிஷபம்-மிதுனம்



குரு பெயர்ச்சி பலன்கள் - 2017
மேஷம்-ரிஷபம்-மிதுனம்



மேஷம்

(அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்பரணி-1, 2, 3, 4 பாதங்கள்கார்த்திகை-1,2,3,4 பாதங்கள்)
       தைரிய காரகனான செவ்வாயை அதிபதியாகக் கொண்டு தைரியமும், துணிவும், சுறுசறுப்பு மிக்க மேஷராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குருப் பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம். பொதுப் பலன்கள், பார்வை பலன்கள், மூர்த்தி நிர்ணயப்படி சிறப்பு பலன்கள் என அனைத்து இராசி நண்பர்களுக்கும் சீரான சிறப்பான பலன்களே அமையும்.

      தங்கள் இராசிக்கு பாக்ய, விரய பாவாதிபதியான குரு இதுவரை ருண ரோக சத்ரு பாவமான  6 ஆம் இடத்தில் சஞ்சரித்து ஆரோக்கியக் குறைவு, பகைவர்களால் தொல்லை, தேவையற்ற கடன்களால் பிரச்சனைகள் என அல்லல் தந்தவர், ஆவணி 27 இல் களத்திர பாவமாகிய 7 ஆம் இடத்திற்கு மாறுகிறார். குருவால் சிறப்பு பலன்கள் ஏற்படும். பார்வை பலத்தால் சிறப்பான பலன்கள் உண்டாகும். வீட்டில் சுபகாரியங்கள் திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். மனைவியின் உடல் நலம் சிறப்படையும். உங்கள் மனைவி சந்தோஷப்படும்படியான சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும். உயர்ரக வாகன வசதிகள் கிடைக்கும். அரசு வேலை கிடைக்கும் வாய்ப்பு வரலாம். வீடு, மனை ஆகியவற்றை உடனடியாகக் கிரையம் செய்யலாம். ஆடை ஆபரணங்கள் சேரும். மாணவ மாணவிகளின் கனவுகள் நனவாகும். வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணம் ஏற்படும்.  அதன் காரணமாக தன வரவு அதிகரிக்கும். கூட்டுத் தொழில் சிறக்கும். உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு ஏற்ப புதிய முதலீடுகள் செய்யலாம். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கதவைத்தட்டும். உறவினர்களிடையே ஒற்றுமை ஓங்கும். குடும்பத்தில் கணவன் மனைவி உறவுகள் மேன்மையடையும். புண்ணியத்தல யாத்திரைகள் ஏற்படும். பொதுவாழ்வில் புகழ், கௌரவம், அந்தஸ்து ஆகியவை உயரும். தெய்வீக வழிபாடுகள், பூஜை புனஸ்காரங்களில் ஆர்வம் ஏற்பட்டு நன்மை அடைவீர்கள். ஆன்மீகம் டிரஸ்ட், சேவா டிரஸட், கல்வி நிறுவனங்கள் நடத்துபவர்கள் நல்வுயர்வை அடைவார்கள். குழந்தைகளினால் வீட்டில் எப்போதும் குதூகலம் திகழும். பெண்களாலும் நண்பர்களாலும் அதிக நன்மைகள் ஏற்படும்.

       கல்வி, கலைத் துறையினர், விவசாயிகள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், வங்கிப் பணியாளர்கள், சட்டத் துறை வ்ல்லுனர்கள், நீதியரசர்கள் ஆகியோர் பணிகள் சிறக்கும். கட்டுமானத் தொழில்கள் முன்னேற்றம் காணும்.
  
       குரு 11 ஆம் இடத்தைப் பார்ப்பதால் மனைவி மக்களுடன் மகிழ்ச்சியான சூழ்நிலை அமையும். மூத்த சகோதரர் மேன்மையடைவார். உங்களின் தொழில் முயற்சிகள் யாவும் வெற்றி அடையும். வெளிநாட்டு பயணங்கள் ஆதாயம் தரும். பணியாளர்களுக்குப் பதவி உயர்வும், பணப் பயன்களும் கிடைக்கும். விரும்பிய இடத்திற்கு இடம் மாற்றம் கிடைக்கும். இராசியைப் பார்ப்பதால் உங்களின் மதிப்பு மரியாதை கூடும். தன்னம்பிக்கையும் தைரியமும் உயரும். சமூகத்தில் உயர்வான இடத்தை அடைந்து, மதிப்பு, மரியாதையும் கூடும்உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உயர்பதவிகள் தேடி வரும். நண்பர்கள் மூலம் இலாபம் உண்டு. அடுத்து மூன்றாம் இடத்தை பார்ப்பதால் தைரியம் அதிகரிக்கும். நல்ல தகவல்கள் வந்து சேரும். இளைய உடன்பிறப்புக்கு வாழ்க்கையில் எதிர்பாராத முன்னேற்றங்கள் ஏற்படும். கூட்டாளிகள் மூலமாக புதிய தொழில் ஒப்பந்தங்கள் ஏற்படும். எந்தக் காரியமும் தடைபடாது சிறப்புற நடக்கும். முயற்சிகள் யாவும் வெற்றி அடையும்.

       மேஷ இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி ரஜத மூர்த்தியாக இரண்டாம் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு வெள்ளி ஆபரணங்கள், பாத்திரங்கள் ஆகிய சேர்க்கை உண்டாகி நன்மை அளிக்கும்.
                      மேஷம் - ரஜத மூர்த்தியாவதால் அவர் அளிக்கும் நன்மை ஓரளவு குறைகிறது. (7) 90%

          ஒவ்வொரு வியாழக்கிழமையும், குரு ஹோரையில், தொடர்ந்து 12 வாரங்கள் குரு ஸ்தோத்திரத்தை 108 முறை பாராயணம் செய்து, மஞ்சள் வர்ண மலர்களால் அர்ச்சித்து வழிபாடு செய்ய நற்பலன்கள் சித்திக்கும்.



ரிஷபம்

( கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )
    களத்திரகாரகனான சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட மென்மையான, பிறரைக் கவர்ந்து நினைத்த காரியங்களை நினைத்தபடி முடித்துக் கொள்ளும் ரிஷபராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குருப் பெயர்ச்சி தரும் பலன்களைப்  பார்ப்போம். பொதுப் பலன்கள், பார்வை பலன்கள், மூர்த்தி நிர்ணயப்படி சிறப்பு பலன்கள் என அனைத்து இராசி நண்பர்களுக்கும் சீரான சிறப்பான பலன்களே அமையும்.

       தங்கள் இராசிக்கு ஆயுள் மற்றும் இலாப பாவாதிபதியான குரு இதுநாள்வரை தங்களின் புத்திர, பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்துஆவணி 27 இல் ருண, ரோக, சத்ரு பாவத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் ஆரோக்கியக் குறைவினை ஏற்படுத்தலாம். எதிரிகளின் தொல்லைகளால் இடர் பட நேரும். தேவையற்ற கடன்கள், அதன் காரணமாக கடன் கொடுத்தவர்களின் தொல்லைகள் ஏற்படலாம். சமூகத்தில் செல்வாக்கும், சொல்வாக்கும் இழக்க நேரிடலாம். பகைவர்களின் பலம் கூடும். அதனால் உங்கள் முகம் வாடும். மனைவியால் ஆதாயம் ஏற்படும். மக்களால் விரயங்கள் ஏற்படும். அவர்களின் கல்வி செலவுக்காக்க் கடன் வாங்க நேரும். இனிய நண்பர்கள் கூட வலிய எதிரிகளாக மாறுவர். ஆரோக்கியக் குறைவினால் தொழில் துறையில் உள்ளவர்களுக்குச் சிக்கல்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் எதிர்பாராத நஷ்டங்கள் ஏற்படலாம். எனவே, எந்தவொரு புதிய முயற்சிகளிலும் ஈடுபடாதிருப்பது நல்லது. உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு பிறர் பொறாமை கொள்ள நேரலாம். எனவே, அடக்கி வாசிப்பது நல்லது. வேலை இல்லாதவர்கள் ஏதேனும் சிறுதொழில் செய்வது முன்னேற்றம் தரும். சிலருக்குக் குறிக்கோளற்ற அலைச்சல்களால் உடல் அசதி அதிகரிக்கும். உடன் பணிபுரிபவர்களின் சூழ்ச்சிகளால் அதிகாரிகளுக்கு நெருக்கடிகள் உண்டாகும். பிறருக்குக் கட்டளையிடும் அரசு உயர் பதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆரோக்கியக் குறைவு காரணமாக மாணவ, மாணவியருக்குக் கவனக்குறைவு ஏற்பட்டு கல்வி, விளையாட்டுப் போட்டிகளில் பின்னடைவு ஏற்படலாம். பகைவர்களின் சூழ்ச்சியால் அரசியலில் வஞ்சனைகளும், துரோகங்களும், தொல்விகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையுடன் செயல் படுவது ஏமாற்றங்களைத் தவிர்க்கும். உதாசினப்படுத்தும் உறவுகளின் செயல்பாடுகள் மனவருத்தம் அளிக்கும். வீண் பழிகளால் வேதனைப்பட நேரும். அப் பழியால் சிலர் மாமியார் வீட்டுக்குக் கூடப் போக நேரலாம்.

       குரு தனது 5 ஆம் பார்வையாக 10 ஆம் பாவமான கர்மஸ்தானத்தைப் பார்வையிடுவதால் புதிய தொழில் துவங்கும் வாய்ப்புகள் ஏற்படும். தொழில் விரிவாக்கங்கள் சாத்தியப்படும். குடும்பத்தில் சந்தோஷ சூழ்நிலைகள் உருவாகும். சுபகாரியங்களுக்குக் குறைவிருக்காது. மனைவியின் செயல்படுகள் சிறந்து, காரியம் யாவினும் கை கொடுப்பார். இனிமை மிக்க இனிய செய்திகள் இல்லம் வந்து சேரும். தந்தை வழியில் தனவரவு உண்டு. மூத்த சகோதர்ர்கள் இல்ல விழாக்கள் மூலமாக இன்பம் ஏற்பட்டாலும்  பொருட்செலவுகளும் ஏற்படும். நண்பர்கள் தங்கள் பகை மறந்து உதவிக் கரத்தை நீட்டுவர்.
       தனது 7 ஆம் பார்வையால் விரய பாவத்தை பார்வை இடுவதால் மூத்த சகோதரர்களால் ஆதாயம் உண்டு. வெளிநாட்டு வாய்ப்புகள்  கதவைத் தட்டும். வீட்டில் புத்தாடைகளுக்கான செலவுகள் செய்து மகிழ்வீர்கள். மனைவியின் சிறப்பான, ஆரோக்கியமான உடல் நிலை காரணமாக உறவுகளில் முன்னேற்ற நிலை ஏற்படும். மகிழ்ச்சியும் நிலவும். பெற்றோர்களின் நிலை சிறப்பாக இருக்கும். அவர்கள் புனித யாத்திரைகள் செல்லும் வாய்ப்புகள் ஏற்படும்.
       தனது 9 ஆம் பார்வையாக தன பாவத்தைப் பார்வையிடுவதால் ஏதாவது ஒரு வழியில் குடும்பத்தினர் மூலமாக பணவரவுகள் வந்து கொண்டே இருக்கும். வீட்டில் சுபகாரியங்கள் சிறப்பாக நடக்கும். மணம் ஆகாதவர்களுக்கு திருமணம் இனிதே நடக்கும். மணம் ஆனவர்களுக்கு தம்பதிகளிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து களிப்பு எய்துவர். பெற்றோர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பீர்கள். கொடுத்த வாக்குகளை தவறாமல் காப்பாற்றிவிடுவீர்கள்.
       ரிஷப இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி சுவர்ண மூர்த்தியாக முதல் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு சொர்ண ஆபரணங்கள், அணிகலன்கள் சேர்க்கை உண்டாகி நன்மை அளிக்கும்.
      ரிஷபத்திற்கு   சுவர்ண மூர்த்தியாக இருப்பதால், அசுப பலன் அனைத்தும் குறைந்து நற்பலன் தரும். (6). 70%

      ஒவ்வொரு வியாழக் கிழமையும், குரு ஹோரையில், தொடர்ந்து 12 வாரங்கள் குரு ஸ்தோத்திரத்தை 108 முறை பாராயணம் செய்து, மஞ்சள் வர்ண மலர்களால் அர்ச்சித்து வழிபாடு செய்ய நற்பலன்கள் சித்திக்கும்.

மிதுனம்

(மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)

        கல்விக் காரகனான புதனை அதிபதியாகக் கொண்ட புத்திகூர்மையுடைய, இரசிப்புத் தன்மையும், சகிப்புத் தன்மையும் மிக்க மிதுனராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குருப் பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம். பொதுப் பலன்கள், பார்வை பலன்கள், மூர்த்தி நிர்ணயப்படி சிறப்பு பலன்கள் என அனைத்து இராசி நண்பர்களுக்கும் சீரான சிறப்பான பலன்களே அமையும்.

          தங்கள் இராசிக்கு இராசி மற்றும் சுக பாவத்துக்கு அதிபதியான  குரு  ஆவணி 27 இல் புத்திர, பூர்வ புண்ணிய பாவமான துலாத்துக்கு  மாறுகிறார். தேவகுரு இதுநாள் வரை சுக பாவம் அமர்ந்து நிம்மதி, சுகத்தைக் கெடுத்தாலும் புத்திர பாவமேறி, வனவாசமாய் இருந்த வாழ்க்கையை தனவாசம் மிக்கதாக மாற்றி விடுவார். தெய்வீக அருளும், திருமகள் கடைக்கண் பார்வையும் ஏற்பட்டு நல்ல காலம் பிறக்கும். இன்னல்களை நீக்கி இன்பம் தருவார். செல்வம் சேரும். அழகும் பொலிவும் கூடும், வாக்குவன்மை அதிகரிக்கும். புத்தி தெளிவும், அறிவுக் கூர்மையும் ஏற்படும். பெயரும் புகழும் ஓங்கும். ஜனன ஜாதகப்படி யோகமான திசைகள் நடக்குமானால் வெற்றி மேல் வெற்றிகள் குவியும். வேலை இல்லாது இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு நிச்சியம் கிடைக்கும். சிலருக்கு ஆண் சந்ததி ஏற்படலாம். பதவி, அந்தஸ்து உயரும்மனைவி மக்களுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். வீட்டில் மங்கள காரியங்கள் சிறப்புற நடக்க்கும். கால்நடைச் செல்வங்கள் பெருகும். அரசபதவி கிடைக்கும். முதிப்பும் மரியாதையும் கூடும். தொழில், வியாபாரம் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஏற்றமான காலமாதலால், நல்ல முன்னேற்றங்களைக் காண்பீர்கள். மாணக்கர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். சேவை மனப்பான்மையுடன் இருப்பவர்களுக்கு வம்மு வழக்குகள் குறையும். இந்த சாதகமான காலகட்டத்தை நன்றாக பயன்படுத்தி எதிர்காலத்துக்கான திட்டங்களை தீட்டுபவர்களே புத்திசாலிகள். அதேபோல், உத்தியோகம், தொழில் துறையில் உள்ளவர்களும் காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வது நல்லது. கல்விச் சாலைகள் வைத்திருப்பவர்கள் மற்றும் ஆன்மீக, பொதுச் சேவை ஸ்தாபனங்கள் வைத்து நடத்திவருபவர்கள் மிகப் பெரிய வளர்ச்சிகளைக் காண்பர். எதிர்ப்புகள் குறைந்து, வழக்கு விவகாரங்களில் நீங்கள் எதிர்பாராத வெற்றிகள் கிடைக்கும். மாணவ, மாணவிகளின் கல்வித்தரம் உயர்ந்து முதல் தரமான மதிப்பெண்களைப் பெறுவர். பெண்களுக்குப் பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகள், பதவி உயர்வுகள் ஆகியவை கிடைக்கலாம்.

      குரு தனது 5 ஆம் பார்வையால் பாக்கிய பாவத்தைப் பார்ப்பதால் அதிகாரம் மிக்க பதவிகள் கிடைத்து, அதற்கேற்ப மதிப்பு மரியாதைகள் கூடும். தந்தையின் ஆதரவு கிடைப்பதோடு, அவர் மூலமாகப் பொருளாதார நிலையும் உயரும். தொழிலில் இருப்பவர்களுக்கு தேவையற்ற வகையில் பொருளாதார விரயங்கள் ஏற்படலாம்.  தாயாருக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு குறைபாடுகள் ஏற்படலாம். உயர் படிப்புகள் படிப்பவர்களுக்கு வெற்றிகள் குவியும். வரவுக்கு ஏற்ப செலவுகள் அமையும். பிறர் மூலமான வருமானங்கள், காப்பீடு, சேமிப்பு நிறுவனங்கள் மூலமாக வருமானங்களை எதிர்பார்க்கலாம்.
      குரு தனது 7 ஆம் பார்வையால் இலாப பாவத்தைப் பார்வை செய்வதால்  தொழிலில் தங்கள் எதிர்பார்பை விட அதிகமான இலாபங்கள் கிடைக்கும். குடும்பத்தில் மனைவி மக்களுடன் மகிழ்ச்சியான விதத்தில் காலம் கழியும். அரசு மூலமான வருமானங்கள் அதிகரிக்கும். அரசு மூலமான பணிகள் செய்பவர்களுக்கு ஆதாயங்கள் பெருகும். மூத்த சகோதரரின் பொருளாதாரம் மற்றும் பொது முன்னேற்றங்கள்  சிறப்படையும். குடும்பத்தில் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். தொழில், வியாபாரம் தொடர்பான வெளிநாட்டுப் பயணங்கள் ஆதாயம் தரும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.
      குரு தனது 9 ஆம் பார்வையாக ஜன்ம இராசியை பார்வையிடுவதின் மூலம் சமூகத்தில் தங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். தேவையட்ட அலைச்சல்கள் தீரும். கருத்து வேற்றுமைகள் மறைந்து பரஸ்பர ஒற்றுமை ஓங்கி, தம்பதியர் இடையே மகிழ்ச்சி நிலவும். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் தாமதம் இன்றி கிடைக்கும். சமுதாய நற்பணிகள், ஜனசேவை செய்பவர்கள் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். தர்ம ஸ்தாபனங்கள், கோவில் டிரஸ்டிகள் ஆகியோருக்கு  தலைப் பதவிகள் தானே வந்து சேரும். பரம்பரைத் தொழில்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு இலாபங்கள் அதிகரிக்கும்.         
       மிதுன இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி உலோக மூர்த்தியாக நான்காம் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு இரும்பினாலான விவசாய, பொறியியல் உபகரண சேர்க்கை உண்டாகி குறைந்த அளவு நன்மை அளிக்கும். இரும்பினாலான்ன உபகரணங்கள், பொருட்களை உழவாரப் பணிக்கு, ஆலயங்களுக்குக் காணிக்கையாக செலுத்துவது நல்லது.
       மிதுனம் - உலோக மூர்த்தியாவதால் அவர் அளிக்கும் நன்மை ஓரளவு குறைகிறது. (5) 90%



       ஒவ்வொரு வியாழக் கிழமையும், குரு ஹோரையில், தொடர்ந்து 12 வாரங்கள் குரு ஸ்தோத்திரத்தை 108 முறை பாராயணம் செய்து, மஞ்சள் வர்ண மலர்களால் அர்ச்சித்து வழிபாடு செய்ய நற்பலன்கள் சித்திக்கும்.

No comments:

Post a Comment