Search This Blog

Thursday 25 April 2019

விகாரி வருட பலன்கள் - மேஷம், ரிஷபம், மிதுனம்.



விகாரி வருட பலன்கள் - மேஷம், ரிஷபம், மிதுனம்.



மேஷம்
65%
(அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்பரணி-1, 2, 3, 4 பாதங்கள்கார்த்திகை-1,2,3,4 பாதங்கள்)
    தைரிய காரகனான செவ்வாயை அதிபதியாகக் கொண்ட மேஷராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு விஹாரி வருட கிரக நிலைகள் தரும் பலன்கள் என்ன ? –என்பதைப் பார்ப்போம்.



         சூரியன்ஆனி மாதத்தில் தைரிய, வீரிய பாவத்தில் இருக்கும் மந்தன் மகனால் சுக சௌக்கியம் ஏற்படும். தங்களுக்கு இதுவரை இருந்து வந்த காரியத்தடைகள் நீங்கி வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்.  குழந்தையற்றவர் கருத்தரிப்பர். விருப்பமான மனைவி அல்லது பெண்ணின் உறவு ஏற்படும். பிறருக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். மக்களுடன் பகையும், சகோதர பீடையும் ஏற்படலாம்.  பொருளாதார நிலைகள் மேம்படும். பல வழிகளிலும்  உருண்டோடிடும் பணம் காசு எனும் உருவமான பொருள் சேரும். ஒளிர்கின்ற சூரியன் போல் பலவிதத்திலும், உலகமெங்கும் உங்கள்  புகழ் ஒளி பரவும்.
   
         புரட்டாசி மாதத்தில் ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் இருக்கும் சனியில் புதல்வனால் பழைய கடன்கள் வசூலாகும். ஞானம் மேலிடும். அரசுத் துறையால் ஆதாயம் அல்லது புதிய வேலை கிடைக்கும்.  வியாபாரத்திற்கான வங்கிக் கடன்கள், அரசு தொழில் துறை மூலமாக எளிதாகக் கிடைக்கும். இதுநாள் வரை இருந்து வந்த நோய்கள் நீங்கி, இருந்த இடம் தெரியாமல் போகும். கடன்களும் கட்டுக்குள் இருக்கும். சிலருக்கு உடனடியாக அரசில் புதிய வேலை கிடைக்கும். பயிர் விளைச்சல்கள் கூடும். வீட்டில் அத்தியாவசியப் பொருட்கள் நிரம்பி வழியும். நேணுந்தூரப் பயணங்களால் ஆதாயம் உண்டு.

         தை மாதத்தில் கர்ம பாவத்தில் இருக்கும் கர்மகாரகன் சனியின் மகனால் பணம் காசு எனும் மழை கொட்டோ கொட்டென்று கொட்டும்.  பலவிதத்திலும் கல்வியில் தேச்ச்சி உண்டாகும். பிரஹலாதனைப் போல் தெய்வ பக்தியும், கர்ணனைப் போல் தர்ம சிந்தனையும் பெருகும். இதுவரை எவராலும் சாதிக்க முடியாத காரியங்களைச் சாதித்து முடிப்பீர்கள். தந்தையுடனான உறவு பலப்படும். கோயில் குளம் போன்ற பல திருப்பணிகளும் செய்ய முற்படுவீர்கள். மனிதர்களாலும், கால்நடைகளாலும் இலாபம் அடைவீர்கள். குடும்ப சுகம் பெருகும். ஆடை ஆபரணங்கள் சேரும். அரசாங்க முக்கியஸ்தர்களின் ஆதரவு கிட்டும்.

         மாசி மாதத்தில் இலாப பாவத்தில் சஞ்சரிக்கும் மந்தன் மைந்தனால் தொழிலில் இதுவரை எவராலும் அடைய முடியாத உயரத்தை அடைய முற்படுவீர்கள். சம்பாதியத்திலும் புதிய சாதனைகளைப் படைத்து அரசின் கௌரவம் பெறுவீர்கள். தானிய விருத்தியும் உண்டாகும். பாக்கியம் கூடும். புதிய பதவிகளால் மதிப்பு கௌரவம் கூடும். வீட்டில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் சுப காரியங்கள் நடக்கும். அரசாங்கத்தால் இலாபம் ஏற்படும். வாக்கு வன்மையால் இலாபம் கூடும். வாகன யோகம் ஏற்படும். பிற மாதங்களில் சுமாரான பலன்களும், இன்னல்களும் ஏற்படலாம். சூரியனார் கோவில் சென்றுவர துன்பங்கள் குறையும்.


    செவ்வாய்ஆனி மாதத்தில் அங்காரகனின் தைரிய, வீரிய பாவ அமர்வால் புதிய ஆடைகள் மற்றும் ஆபரண சேர்க்கையும் ஏற்படும். வீடு, மனை வாங்கலாம். அதற்குப் பின் வரும் காலங்களில் வாழ்க்கையில் புதிய பல முன்னேற்றங்கள் உருவாகும். மகிழ்ச்சியும், கோலாகலமும் பல்கிப் பெருகும். அனைத்துக் காரியங்களிலும் வெற்றி கிட்டும். உடன்பிறப்புக்கு இடையே ஒற்றுமை உண்டாகும். புதிய சொத்துக்கள் வாங்கலாம். தனலாபம் அதிகரிக்கும். புரட்டாசி மாதத்தில் தன தான்ய விருத்தி, பொன் நகை, புதிய ஆடை முதலியவை சேர்தல் போன்றவை ஏற்படும். எல்லாக் காரியங்களும் வெற்றி அடையும். எல்லாத் துறைகளிலும் இலாபம் ஏற்படும். ஆனந்தம் பொங்கும். சுபகாரியங்கள் நடக்கும். பொருளாதாரம் ஓங்கும். கல்யாண மாகாதவர்களுக்குத் திருமணம் கைகூடும். புத்திர பாக்கியம் உண்டாகும். பூமி பயிர் விளைச்சல் இவற்றால் இலாபமும் பெருகும். மாசி மாதத்தில் வாழ்க்கையில் புதிய முன்னேற்றம் பலவும் ஏற்படும். காரியங்களும் வெற்றி அடையும். தன் குண மேன்மை, செயல் திறன் இவற்றால் கடினமான காரியங்களையும் சுலபமாக செய்து முடிப்பர்.  தான் ஆட்சி செய்யும், அல்லது கட்டளையிடும் பதவிகள் ஜாதகருக்குக் கிடைக்கும். கட்டுப்பாடற்ற சுதந்திர சுக வாழ்க்கையும் நடக்கும். புத்தொளியும் பொலிவும் உண்டாகும்.

    புதன்புரட்டாசி, கார்த்திகை, தை, மாசி ஆகிய மாதங்களில் சிறப்பான பலன்களை தரவல்லவர். இதன் காரணமாக  தனவரவுகள் அதிகரிக்கும். உயர் கல்வி பயன் தரும். சுப காரியங்கள் நடக்கும். பலவகையான யோகங்கள் ஏற்படுகின்றன. ஆடை ஆபரண வகைகள் சேரும். கௌரவம், புகழ் கூடும்.புதிய பதவிகள் கிடைக்கும். தெய்வப் பிரார்த்தனையால் வேண்டிய வேண்டுதல்கள் நிறைவேறும். மேற்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். வாக்கு வன்மையால் புகழ் ஏற்படும். வீட்டில் சுப காரியங்கள் நடந்து மகிழ்ச்சியும், செலவும் அதிகரிக்கும். மக்கள் மத்தியில் கௌரவம், புகழ் கூடும். தொழில் விருத்தி, வழக்குகளில் வெற்றி ஆகியவைகளும் ஏற்படும். நல்ல பணியாட்கள் அமைவர். யாத்திரையும் வெளிநாட்டுப் பயணங்களும் ஏற்படும். கால்நடைச் செல்வமும் பெருகும். வேடிக்கை விநோதங்களில் ஈடுபட்டு மனம் சந்தோஷமும், நிம்மதியும் அடையும்.
  
    சுக்கிரன்புரட்டாசி, ஐப்பசி, தை ஆகிய மாதங்களைத் தவிர மற்ற 9 மாதங்களும் சிறப்பான பலன்களைத் தருவார். பெண்களால் நன்மைகள் உண்டாகும். ஆடம்பர சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர்ப் பயணங்கள் வெற்றிகரமாக அமையும். நெருங்கிய உறவினர் வகையில் சுபகாரியங்கள் நடக்கும். தர்ம காரியங்கள் தாராளமாகச் செய்வீர்கள். செய்தொழிலில் இலாபம் அதிகரிக்கும். வெளிநாட்டுப் பயணங்கள் நன்மை தரும். மனைவிமேல் பாசம் கூடி மகிழ்ச்சியும் கூடும். தாய், காதலி, மனைவி, சகோதரி போன்ற நெருங்கிய பெண் உறவுகளால் நன்மைகள் உண்டாகும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர சாதனங்கள் அனைத்தையும் வாங்கி மகிழ்வீர்கள். சுற்றுலா, புனித யாத்திரைகள் போன்ற வெளியூர்ப் பயணங்கள் வெற்றிகரமாகவும், மகிழ்ச்சிகரமாகவும் அமையும்.   நெருங்கிய உறவினர் வகையில் சுபகாரியங்கள் நடக்கும். தர்ம காரியங்கள் தாராளமாகச் செய்வீர்கள். வியாபாரம் மற்றும் செய்தொழிலில் இலாபம் அதிகரிக்கும்.

            குரு – 26 – 4 - 2019 முதல் 4 – 11 – 2019 வரை விருச்சிகத்திலும் பின்னர் தனுசுவிலும் 29 – 3 – 2020 முதல் மகர இராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். எனவே, தங்கள் இராசிக்கு அட்டம, பாக்கிய பாவ பலன்களை முறையே ஆறு ஆறு மாதங்களுக்குத் தருவார் முதலில் பணமுடை இருக்கும். கைப் பணம் விரயமாகும். பயணங்களின் போது எச்சரிக்கை தேவை. கீழ் நிலையில் உள்ளவர்களின் சிநேகத்தால் அவப்பெயர் ஏற்படும் பின்னர் வரும் 6 மாதங்களுக்கு நற்பலன்கள் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும். அரசு வேலை கிடைக்கும் வாய்ப்பு வரலாம். வீடு, மனை ஆகியவற்றை உடனடியாகக் கிரையம் செய்யலாம். புது வாகனம் வாங்கும் யோகம் மற்றும்  புத்திர பாக்கியம் ஏற்படும். நல்ல யோகமான காலமாதலால் அரசாங்க அனுகூலங்கள், எதிரிகளை வெல்லுதல், அதிகரிக்கும் சொத்துக்கள் என எல்லாம் நன்மையாகவே நடக்கும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும். இராஜ தந்திரத்தால் அரசியலில் நல்ல பதவிகள் வந்து சேரும் இராஜயோகம் உண்டாகும். அரசாங்கத்தின் மூலமாக எதிர்பார்த்த அனுகூலங்கள் அனைத்தும் தாமதம் இன்றிக் கிடைக்கும். புண்ணிய காரிய ஈடுபாட்டினால் தானதருமங்கள் செய்து மங்காத புகழ் எய்துவீர்கள். தவத்திலும், பூஜை புனஸ்காரங்களிலும், தெய்வீக வாழ்க்கையிலும் பற்று ஏற்படும். பொதுமக்களுக்குக் காப்பாளராக இருப்பார். இவர் இடும் கட்டளைகளை பிறர் ஏற்று நடக்கும் வண்ணம் இவருடைய அந்தஸ்து உயரும். வளம் கொளிக்கும் வயல்களால் வசதி வாய்ப்புகள் பெருகும். சமூகத்தில் இவருக்கென ஒரு தனியிடம், அதுவும் முதலிடம் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தையும் வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரிகளுக்கு இதுவரை வசூலாகாத கடன்கள் அனைத்தும் வசூலாகிவிடும். மாணவர்களுக்கு நினைவாற்றல் பெருகி கல்வியில் மேன்மை அடைவர். புதிய தொழில்களில் முதலீடுகள் செய்வதால் தொழில் முன்னேற்றங்கள் சிறப்பாக இருக்கும். அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு அவர்களின் சிறந்த பணிக்காக விருதுகள் கிடைக்கும். அரசு வெகுமதி மற்றும் புகழ் தேடி வரும்.

    சனி –  பண்டைய தமிழ் நூல்களின்படி சனி பாக்கிய பாவத்தில் நல்ல பலன்களே அளிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, சிலருக்கு இராஜயோகம் ஏற்படும். எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். புதிய முன்னேற்றத்துக்கான பாதைகள் வகுக்கப்படும். தொழிலில் இலாபமும், உத்தியோகத்தில் உயர்வும் ஏற்படும். சிலருக்கு முக்கிய பொறுப்புகள் தேடி வரும். போஜன சுகம் கை கூடும். செல்வம் சேரும். ஆளடிமைகள், நல்ல வேலையாட்கள் அமைவர். சிலருக்கு, பணம் வீணாகச் செலவாகும். தரும காரியங்கள் செய்யும் போது தடைகள் ஏற்படும். பணம் வரும் வழிகள் தடைப்படும். புதிய பெண்களின் தொடர்புகள் ஏற்படும். ஊரில் முக்கிய நபர் என்று பெயர் எடுப்பார். பலவகையான உயர்ரக வாகனங்கள் அமையும். பிறருக்குக் கட்டளையிடும்படியான பெரிய பதவிகள் தேடிவரும். உயர் கல்வி பயில்பவர்கள் வெற்றி பெறுவர். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். புனித யாத்திரைகள் சிறப்பைத் தரும் வீடு, நிலம், வாகனம் போன்றவற்றை வாங்கும் யோகம் ஏற்படும். 
         இராகு – இராகு தங்கள் இராசிக்கு தைரிய பாவத்தில் இருப்பதால்  எல்லா நல்லபலனும் உண்டாகும். பல வழிகளிலும் சௌக்கியமும் உண்டாகும். மனோதைரியம் ஓங்கும். பல முகாந்திரங்களிலும் தனவரவும் குறைவின்றி கிடைக்கும். ஆண்மை சக்தி அதிகரிக்கும்.  சகோதர உதவிகள் கிடைக்கும். புதுப் பதவிகளும் அதனால் வருவாய்ப் பெருக்கமும் ஏற்படும்.

         கேது -  கேதுவின் பாக்கிய பாவ அமர்வு நன்மை தராது, பிறர் சூழ்ச்சிக்கு ஆளாக நேரும். பிறரால் அவமானம் ஏற்படும். பல வழக்குகள் ஏற்படும். ஆளால் அவைகளில் இவர் வெற்றி பெறுவார். சூதாட்டம் போன்றவற்றில் பொருள் இழப்பு ஏற்படும். மாமனாருக்குப் பீடை உண்டாகும்.  சிலர்,ஊரை ஏமாற்றும் கபட சந்நியாசியாக மாறி மக்களை ஏமாற்றிப் பிழைப்பர். ஞானத்திலும் தவத்திலும் நாட்டமும், நல்ல குரு வாய்க்கப் பெற்று, ஆன்மிக வழியில் அறிவுத் தெளிவும் ஏற்படும்.

பரிகாரம் - கணபதி, ஆஞ்சனேயர் ஆகியோரை வணங்கி, சனிக்கிழமை தோறும் சனீஸ்வரனுக்கு எள் விளக்குப் போட இன்னல்கள் குறையும். திருநள்ளாறு சென்றுவரவும் தீமைகள் குறையும்.இராகு கேதுக்கள் தரும் துன்பங்களில் இருந்து விடுபட திருநாகேஸ்வரம், கீழ்பெரும்பள்ளம் ஆகிய தலங்களுக்கு சென்று வழிபாடு செய்வது சிறப்பு.                                                          
ரிஷபம்
60%
( கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )
   களத்திரகாரகனான சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷபராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு விஹாரி வருட கிரக நிலைகள் தரும் பலன்கள் என்ன ? –என்பதைப் பார்ப்போம்.

    சூரியன் --  ஆடி மாதத்தில் எண்ணங்கள் எண்ணிய எண்ணியாங்கு ஈடேறும். பிறருக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். புத்திர பாக்கியம் ஏற்படும். விழாக்களுக்கு மற்றும் விருந்துகளுக்கு சென்று மகிழும் நிலை ஏற்படும். எல்லாக் காரியங்களிலும் வெற்றிகள் குவியும். எதற்கும் அஞ்சாமல் தைரியமாக எந்த முயற்சியிலும் இறங்கி விடுவீர்கள். ஆபரண சேர்க்கை, விருந்துக்கு செல்லுதல், வியாதிகள் குறைந்து நலமடைதல் ஆகியவை ஏற்படும். கூடுதலான தனவரவு உண்டாகும். இதுவரை தடைக்கல்லாக விழங்கி வந்த காரியங்கள், முன்னேற்றத்துக்கான படிக்கட்டுகளாக மாறி வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலைகள் மேம்படும். பல வழிகளிலும் பணம் காசு சேரும். ஒளிர்கின்ற சூரியன் போல் பலவிதத்திலும், உலகமெங்கும் உங்கள்  புகழ் ஒளி பரவும்.

         ஐப்பசி மாதத்தில் ஆரோக்கியம் பெருகும். எதிரிகள் மறைவர். வங்கிக் கணக்கில் ரொக்க இருப்புக் கூடும், ஞானம் மேலிடும். வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகிவிடும். எதிர்பார்க்கும் புதிய கடன் வசதிகள் கிடைக்கும். எதிரிகள் பிரச்சனை குறையும். பங்காளிப் பிரச்சனைகள் தீரும். விரையச் செலவுகள் குறைந்து கையில் பணம் நிற்கும். முடியாது என்று கைவிடப்பட்ட கடினமான முயற்சிகளும் எளிதில் நிறைவேறும். பொதுச் சேவையில் புகழும், புதிய பொறுப்புகளும் ஏற்படும்.

         மாசி மாதத்தில் தொழிலில் விரிவாக்கம், உத்யோகத்தில் பதவி உயர்வுகள் ஏற்படும். கார், ஸ்கூட்டர் போன்ற உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். புதிய தொழில் முயற்சிகள் ஈடேறும். வழக்குகளில் வெற்றி கிட்டும். வெளியூர் பயணங்கள் மிகுந்த நன்மை அளிக்கும். தெய்வ வழிபாடுகளால் மனநிறைவும், மன நிம்மதியும் ஏற்படும். சுபகாரிய முயற்சிகள் கோலாகலமாய் நடக்கும். தொழிலில் இதுவரை எவராலும் அடைய முடியாத இலாபங்களை சம்பாதித்து, புதிய புதிய சாதனைகளைப் படைத்து அரசின் கௌரவம் பெறுவீர்கள்.

          பங்குனி மாதத்தில் செய் தொழிலில் நல்ல இலாபம் கிடைக்கும். ஊர் மெச்சும் அளவுக்கு நல்ல பெயரும் புகழும் கிடைக்கும். பல வழிகளிலும் பணவரத்துப் பெருகும். அரசியல் பிரபலங்களின் ஆதரவுகிட்டும். பொதுச்சேவைகளில் ஈடுபாட்டால் மதிப்பு மரியாதை கூடும். வியாபாரத்திற்கான வங்கிக் கடன்கள், அரசு தொழில் துறை மூலமாக எளிதாகக் கிடைக்கும். இதுநாள் வரை இருந்து வந்த நோய்கள் நீங்கி, இருந்த இடம் தெரியாமல் போகும். கடன்களும் கட்டுக்குள் இருக்கும். அரசுத் துறையால் ஆதாயம் உண்டு. சிலருக்கு உடனடியாக அரசில் புதிய வேலை கிடைக்கும்.

    செவ்வாய்ஆடி, ஐப்பசி, மாசி, பங்குனி ஆகிய மாதங்களில் நற்பலன்களைத் தருவார். பிற மாதங்களில் சுமாரான பலன்களைத் தருவார். அரசுத் துறையால் இலாபம் ஏற்படும். வீட்டில் முக்கியமாகத் தேவைப்படும் சாதனங்கள் நிரம்பி வழியும். அதற்குப் பிறகு வருடம் முழுவதும் பணம் சம்பாதிக்கும் திறமை அதிகமாகும். பொன், வெள்ளி மற்றும் ஆடை அணிகலன்கள் சேரும். குடும்ப சுகம் பூர்ணமாகக் கிடைக்கும். அனைத்துக் காரியங்களிலும் வெற்றி கிட்டும். உடன்பிறப்புக்கு இடையே ஒற்றுமை உண்டாகும். வீடு, மனை போன்ற புதிய சொத்துக்கள் வாங்கலாம். அதற்குப் பின் வரும் காலங்களில் வாழ்க்கையில் புதிய பல முன்னேற்றங்கள் உருவாகும். மகிழ்ச்சியும், கோலாகலமும் பல்கிப் பெருகும். தனலாபம் அதிகரிக்கும்.

    புதன் --  ஐப்பசி, மார்கழி, மாசி, பங்குனி ஆகிய மாதங்களில் மட்டும் வியத்தகு நற்பலன்களை வாரி வழங்குவார். பிற மாதங்களில் வீண்பழியும் கவலைகளும் அதிகரிக்கும். ஆனால் தனச் சேர்க்கை மட்டும் இருக்கும். சகோதரர்களுடன் கருத்துவேற்றுமை ஏற்படும். அதற்குப் பிறகு  நிம்மதியும் சுகமும் உண்டாகும். கல்வியில் தேர்ச்சி அடைவர். பயணங்களால் இலாபம் ஏற்படும். தாய்மாமனுக்கு நன்மை ஏற்படும். அரசுப்பணி கிடைக்க வாய்ப்பு ஏற்படும். கௌரவப் பட்டங்கள் கிடைக்கும். மனைவியின் பேச்சைக்கேட்டு நடக்கவேண்டியதிருக்கும். சந்ததி விருத்தி ஏற்படும். மன்னர் மன்னாகும் இராஜயோகம் உண்டாகும். யாத்திரையும். வெளிநாட்டுப் பயணங்களும் இலாபம் தரும். பலவகையிலும் தனவரவுகள் அதிகரிக்கும். மேற்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும்.  வீட்டில் சுப காரியங்கள் நடந்து மகிழ்ச்சியும், செலவும் அதிகரிக்கும். மக்கள் மத்தியில் கௌரவம், புகழ் கூடும். தொழில் விருத்தி, வழக்குகளில் வெற்றி ஆகியவைகளும் ஏற்படும்.
    சுக்கிரன்ஐப்பசி, கார்த்திகை, மாசி ஆகிய மாதங்களைத் தவிர பிற மாதங்களில் தங்களுக்கு சூப்பரான பலன்களைத் தரவல்லவர். எனவே, பொன்பொருள் சேரும். ஆடை, அலங்காரப்பொருட்கள் மற்றும் சுகந்த பரிமள வாசனாதி திரவியங்கள் ஆகிய எல்லாமே ஒரு சேரக் கிடைக்கும். அன்னதானம் செய்யும் வளமை உண்டாகும்படிப்பில் தேர்ச்சியும் வெற்றியும் ஏற்படும். இடைஇடையே வீண் அலைச்சல்கள் ஏற்படும். கூட்டு வியாபாரத்தில் நஷ்டமும், வெளிநாட்டுப் பயணமும் ஏற்படும். சிலருக்கு மனைவியைப் பிரிந்து துயரம் அனுபவிக்க வேண்டியது வரும். பொதுவாக, புகழ் ஓங்கும். மந்திரி போன்ற உயர் பதவிகள் கிடைக்கும். தாய், காதலி, மனைவி, சகோதரி போன்ற நெருங்கிய பெண் உறவுகளால் நன்மைகள் உண்டாகும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர சாதனங்கள் அனைத்தையும் வாங்கி மகிழ்வீர்கள். சுற்றுலா, புனித யாத்திரைகள் போன்ற வெளியூர்ப் பயணங்கள் வெற்றிகரமாகவும், மகிழ்ச்சிகரமாகவும் அமையும்.   நெருங்கிய உறவினர் வகையில் சுபகாரியங்கள் நடக்கும். தர்ம காரியங்கள் தாராளமாகச் செய்வீர்கள். வியாபாரம் மற்றும் செய்தொழிலில் இலாபம் அதிகரிக்கும்.
    குரு – 26 – 4 - 2019 முதல் 4 – 11 – 2019 வரை விருச்சிகத்திலும் பின்னர் தனுசுவிலும் 29 – 3 – 2020 முதல் மகர இராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். எனவே, தங்கள் இராசிக்கு களத்திர, அட்டம பாவ பலன்களை முறையே ஆறு ஆறு மாதங்களுக்குத் தருவார்.  குடும்ப ஒற்றுமை ஓங்கும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். மங்கள காரியங்கள் நடக்கும், பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். கிராம அதிகாரம், அரசு பதவிகள் கிடைக்கும். சிலருக்குக் குறிக்கோளற்ற அலைச்சல்களால் உடல் அசதி அதிகரிக்கும். பிறருக்குக் கட்டளையிடும் அரசு உயர் பதவி கிடைக்கும். நல்ல சந்ததிகள் உருவாகும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும். அரசு வேலை கிடைக்கும் வாய்ப்பு வரலாம். வீடு, மனை ஆகியவற்றை உடனடியாகக் கிரையம் செய்யலாம். ஆனால், அட்டம பாவ குருவோ, பணியாளர்களால் தொல்லை, வீண் அலைச்சல், தேவையற்ற செலவுகள், ஆரோக்கியக் குறைவு ஆகிவையும் ஏற்படலாம். சிலருக்கு தேவையற்ற அவமானங்களும் ஏற்படலாம். இக் காலத்தில் பதவி, உத்தியோகம், கௌரவம் ஆகியவற்றில் இறக்கம், மாற்றம் அல்லது இழப்பு இவற்றில் ஏதேனும் ஒன்று நிகழலாம். .வியாபாரத்தில்  எதிர்பார்த்த இலாபங்கள் கிட்டாது, கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். கீழ்நிலையில் உள்ளவர்களின் சிநேகத்தால் அவப்பெயர் ஏற்படும். பயணங்களின் போது விபத்துக்களைச் சந்திக்க நேரும். எனவே, பயணங்களின் போது அதிக கவனத்துடன் இருங்கள். கோர்ட், வழக்கு போன்ற தண்டச் செலவுகளால் கைப்பணம் கரையும்.
    சனி --   சனி  தங்கள் இராசிக்கு 3, 6 மற்றும் 11 ஆம் இடங்களிலிருந்து சனி பகவான் நன்மை தரவில்லை. இதற்கு முன் ருண, ரோக, சத்ரு பாவத்தில் இருந்த போது தங்களுக்கு புது வீடு கட்டுதல் போன்ற எல்லாமே நல்ல பலன்களாகவே நடந்தது.. அந்தஸ்து, பதவி, கௌரவம், நல்ல வேலை என அனைத்துமே உயர்வாக இருந்திருக்கலாம். இக் காலம் இராஜயோக காலமாக இருந்தது. ஆனால்,. வாழ்க்கை என்றால் ஏற்ற இறக்கம் மற்றும் இன்ப துன்பம் என மாறித்தானே வரும்எனவே, இதற்குப் பிறகு வரும் அட்டமச் சனி காலங்கள் சுமாரான மற்றும் தீயபலன்களையே எதிர்பார்க்கலாம். வெளி நாட்டு வாசமும், குறிக்கோளற்ற அலைச்சல்கள் ஏற்படும். ஆரோக்கியக் குறைவு ஏற்படும். பயணங்களின் போது எச்சரிக்கை தேவை.

“  கண்டங்கள் நாலேழ் ளெட்டில், பத்தில் கருதியே
   சனி சேய் நிற்க தண்டங்கள் மிகவுண்டாகும்
   திரவியமும் நாசமாகும், கொண்டதோர் குடும்பம் வேறாம்
   குறிந்திடும் செட்டும் நஷ்டம் பண்டுள நாடு விட்டு பரதேசம் போவானென்ன ”
-    ஜோதிடக் களஞ்சியம்
இதன்படி 4, 7, 8, 10 ஆகிய இடங்களில் சனியின் சஞ்சாரம் தீய பலன் தரும் என்பது உறுதியாகிறது. எனவே, இக் காலத்தில் வம்பு வழக்கு, கட்டுக்கடங்காத செலவினங்கள், கோர்ட், கச்சேரி என அலைச்சல்கள், உடல் நலக்குறைவு, அறுவை சிகிச்சை, காயம் ஏற்படல், விபத்து போன்ற பலன்கள் ஏற்படலாம். இதன் தாக்கங்கள் இறை அனுகூலத்தால் கட்டுப்படுத்தப் படலாம். அச்சப்பட வேண்டாம்.

         இராகு தரும் பலன்கள் – தங்கள் இராசிக்கு தன, குடும்ப பாவத்தில் சஞ்சரிக்கும் இக் காலத்தில் நற்பலன்களை எங்ஙனம் எதிர்பார்க்க முடியும் ? தன பாவமாய் இருப்பதால் பணத்தட்டுப்பாடு இருக்கத்தானே செய்யும். வாக்குத் தவறுவது சகஜமாய்விடும். குடும்ப பாவமாய் இருப்பதால் குடும்பத்தில் லடாய், கல்வியில் தடைகள், விரையச் செலவுகள், அக்கம் பக்கத்தாரிடம் மனஸ்தாபம் போன்ற எதிர்மறையான பலன்களையே எதிர்பார்க்கலாம்.

         கேது தரும் பலன்கள் – ஜென்மத்தில் உள்ள கேதுவால் வீண்கவலைகள் உண்டாகும். கஷ்ட, நஷடங்கள் தவிர்க்க முடியாததாகும். வெப்ப நோய்களின் தாக்கம் இருக்கும். சகோரர்களுடனான கருத்து ஒற்றுமை கேள்விக் குறியாகும். அவர்களுக்கு சொத்து நாசம், பீடை ஆகியவை ஏற்படும். நிறம் மாறி அழகு கெடும் வாய்ப்பு உள்ளதால் பெண்கள் சமையல் வேலைகளின் போது செல்லை நோண்டாமல், காரியத்தில் கண்ணாயிருக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கேது ஞானகாரகனாதலால் ஞானம் அல்லது பக்தி மார்க்கத்தில் நாட்டம் செல்லம் என்பதே தங்களுக்கு நல்ல பலன் ஆகும். இன்னல்கள் குறைய கிழ்பெரும்பள்ளம் சென்று ஞானகாரகனை வேண்டி வருதல் நலம்.  

பரிகாரம் - அட்டமச் சனி காலமாக இருப்பதால் கணபதி, ஆஞ்சனேயர் ஆகியோரை வணங்கி, சனிக்கிழமை தோறும் சனீஸ்வரனுக்கு எள் விளக்குப் போட இன்னல்கள் குறையும். திருநள்ளாறு சென்று வரவும் தீமைகள் குறையும்.
காளகஸ்தி சென்று இராகுவை வேண்டி வர அவரின் தாக்கங்கள் குறையும் கவலை வேண்டாம்.


மிதுனம்
70%
(மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)
    கல்விக்காரகனான புதனை அதிபதியாகக் கொண்ட மிதுனராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு விஹாரி வருட கிரக நிலைகள் தரும் பலன்கள் என்ன ? –என்பதைப் பார்ப்போம்.
      சூரியன்ஆவணி மாதத்தில் அனைத்துச் செயல்களும் வெற்றி தரும். எந்த முயற்சியிலும் துணிந்து இறங்கலாம். ஆரோக்கியம் மேம்படும். பணம் காசும் சேரும். தான தர்மங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். விருப்பமான மனைவி அல்லது பெண்களின் சினேகம் ஏற்படும். வழக்கு விவகாரங்களில் பிறருக்காக வாதாடி வெற்றி பெறுவார். இக்காலத்தில் அதி புத்தி சாலி ஆவீர்கள். பதவி உயர்வுகள் ஏற்பட்டு கௌரவமும், மரியாதையும் கூடும்.
       கார்த்திகை மாதத்தில் கல்வியில் வெற்றி ஏற்படும். நீண்ட தூரப் பயணங்களால் நன்மையும் இலாபமும் ஏற்படும். தனவிருத்தி, பகை வெற்றி ஆகியவை ஏற்படும். ஞானம் மேலிடும். காம சுகத்தில் பூர்ண மன நிறைவு ஏற்படும்.வயல்களில் பயிர் விளைச்சல்கள் அதிகரிக்கும். நெடுந்தூரப் பணங்களால் இலாபம் ஏற்படும். முடியாது என்று கைவிடப்பட்ட கடினமான முயற்சிகளும் எளிதில் கை கூடும்.
       பங்குனி மாதத்தில் குடும்ப சுகம் பெருகும். கல்வியில் தேர்ச்சி உண்டாகும். கோவில் திருப்பணிகள் செய்வர். தெய்வ பக்தியும், தரும சிந்தனையும் கூடும். பொன், வெள்ளி மற்றும் பணம் பெருகும். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். மனிதர்களாலும், கால் நடையாலும் இலாபம் ஏற்படும். அரசாங்க முக்கியஸ்தர்களின் ஆதரவு கிட்டும். எண்ணிய காரியங்கள் எல்லாம் ஈடேறும்.  
       சித்திரை மாதத்தில் எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் ஏற்படும். வீட்டில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும். பல முகாந்திரங்களிலும் பணவரத்துப் பெருகும். பிறர் மேல் இரக்கம் ஏற்படும். அரசாங்கத்தால் இலாபம் ஏற்படும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் ஏற்படும். பாக்கியம் கூடும். அதிர்ஷ்டத் திருப்பம் ஏற்படும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். வீட்டில் மகிழ்ச்சியான சுபகாரிய கொண்டாட்டங்கள் நடக்கும்.
    செவ்வாய் –  ஆவணி, தை, பங்குனி ஆகிய காலங்களில் நல்ல பலன்களைத் தருவான் செவ்வாய். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். சந்ததி விருத்தி ஏற்படும். வேதம் கல்வி ஆகியவற்றில் தேர்ச்சி ஏற்படும். சிலருக்கு சிறு விபத்துக்கள் ஏற்படலாம். சின்ன விஷயங்களுக்கும் அதிகக் கோபம்வரும். ஆறுவது சினம்பின்னர் பொன்பொருள் சேரும். பொருளாதார நிலை உயரும். பூமி, பயிர் விளைச்சல் இவற்றால் இலாபம் அதிகரிக்கும். அந்தஸ்து, புகழ் ஆகியவை ஓங்கும். இடைஇடையே கணவன், மனைவியிடையே கருத்து வேற்றுமை ஏற்படும். ஆரோக்கியக் குறைவு ஏற்படும். அதிக உழைப்பின் பேரில்  முக்கிய முயற்சிகள் வெற்றி பெறும். அரசுப் பணியாளர்களுக்கு அதிகாரப் பதவிகள் கிடைக்கும்.
    புதன்புதனால் ஆரம்பத்தில் மனச்சுமையும், காரியத்தடைகளும் ஏற்படும். யாரும் மதிக்கமாட்டார்கள். கார்த்திகை, மார்கழி, பங்குனி, சித்திரை ஆகிய மாதங்களில் ஆக்கபூர்வமான யோசனைகள் தோன்றும். சாமர்த்தியசாலியாகவும், சுய காரியப் புலியாகவும் இருப்பர். அரசனைப் போல் இவருக்கு நிறையப் பணியாட்கள் அமைவர். அரசு வேலை கிடைக்கலாம். பின்னர் சந்ததி விருத்தியும் ஏற்படும்வாகனவசதிகள் அதிகரிக்கும். யாத்திரையும், வெளிநாட்டுப் பயணங்களும் ஏற்படும். பணம் பல வழிகளிலும் வந்து குவியும். நல்ல மனைவி வாய்ப்பாள். கௌரவமும், மரியாதையும் கூடும். கௌரவ டாக்டர் பட்டங்கள் கிடைக்கும். ஆடை ஆபரண வகைகள் சேரும். யாத்திரைகள், புண்ணிய திருத்தலப் பயணங்கள் ஆகியவை ஏற்படும். கணிதத் தொழிலில் வல்லவராகி, வங்கி, இன்ஷியூரன்ஸ் போன்ற பொருளாதார தொடர்பான பணிகளில் ஈடுபடுவர். தன் சொல்வன்மையால் அதிக சம்பாத்தியம் ஏற்படும்.
    சுக்கிரன் --  கார்த்திகை, மார்கழி, பங்குனி ஆகிய மாதங்களைத் தவிர மற்ற 9 மாதங்கள் நல்ல பலன்களையே அள்ளி வழங்குவார். உயர்ந்த செல்வந்தர்களின் நட்புக் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்குப் பெரிய இடத்துப் பெண்ணுடன் திருமணம் நடக்கும். நல்ல குரு அமைவார். அவரால் வாழ்வில் ஒளியும் முன்னேற்றமும் பெருகும். சிலருக்கு அவமரியாதை ஏற்படும். சிலருக்கு அள்ள அள்ளக் குறையாத பொன்பொருள் சேரும். மனைவியை மகிழ்விப்பதில் வல்லமை ஏற்படும். பின்னர் கல்வி மற்றும் கணிதத்தில் திறமையும், இராஜயோகமும் ஏற்படும்அரசு ஆதரவு கிடைக்கும். தேவையான எல்லாவிதமான ஆடம்பரப் பொருட்களும் வீட்டில் குறைவின்றி மண்டிக் கிடக்கும். தன்னை விதவிதமாக அலங்கரித்துக் கொள்வர். நண்பர்கள் மூலம் வாழ்க்கையில் புதிய வசதிகள் கிடைக்கும். தனக்கு நெருக்கமானவர்களுடன் உல்லாசமாக இருப்பர். இவர் மனைவி வயதானவளாக இருந்தாலும், அழகு குறையாதவளாக இருப்பாள். சிலருக்கு மேற்சொன்ன மாதங்களில் வீண் அலைச்சலும், பங்காளிகள் தொல்லையும் ஏற்படலாம்.
        குரு – 26 – 4 - 2019 முதல் 4 – 11 – 2019 வரை விருச்சிகத்திலும் பின்னர் தனுசுவிலும் 29 – 3 – 2020 முதல் மகர இராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். எனவே, தங்கள் இராசிக்கு ருண, களத்திர பாவ பலன்களை முறையே ஆறு ஆறு மாதங்களுக்குத் தருவார். ருண, ரோக, சத்ரு பாவத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் ஆரோக்கியக் குறைவினை ஏற்படுத்தலாம். எதிரிகளின் தொல்லைகளால் இடர் பட நேரும். தேவையற்ற கடன்கள், அதன் காரணமாக கடன் கொடுத்தவர்களின் தொல்லைகள் ஏற்படலாம். சமூகத்தில் செல்வாக்கும், சொல்வாக்கும் இழக்க நேரிடலாம். பகைவர்களின் பலம் கூடும். அதனால் உங்கள் முகம் வாடும். மனைவியால் ஆதாயம் ஏற்படும். மக்களால் விரயங்கள் ஏற்படும். அவர்களின் கல்வி செலவுக்காக்க் கடன் வாங்க நேரும். இனிய நண்பர்கள் கூட வலிய எதிரிகளாக மாறுவர். ஆரோக்கியக் குறைவினால் தொழில் துறையில் உள்ளவர்களுக்குச் சிக்கல்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் எதிர்பாராத நஷ்டங்கள் ஏற்படலாம். களத்திர பவத்தில் இருக்கும் போது, மனைவியின் உடல் நலம் சிறப்படையும். உங்கள் மனைவி சந்தோஷப்படும்படியான சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும். உயர்ரக வாகன வசதிகள் கிடைக்கும். அரசு வேலை கிடைக்கும் வாய்ப்பு வரலாம். வீடு, மனை ஆகியவற்றை உடனடியாகக் கிரையம் செய்யலாம். ஆடை ஆபரணங்கள் சேரும். மாணவ மாணவிகளின் கனவுகள் நனவாகும். வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணம் ஏற்படும்.  அதன் காரணமாக தன வரவு அதிகரிக்கும். கூட்டுத் தொழில் சிறக்கும். அழகும் பொலிவும் கூடும், வாக்குவன்மை அதிகரிக்கும். புத்தி தெளிவும், அறிவுக் கூர்மையும் ஏற்படும். பெயரும் புகழும் ஓங்கும். வேலை இல்லாது இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு ஆண் சந்ததி ஏற்படலாம். பதவி, அந்தஸ்து உயரும்
   சனி --  தங்கள் இராசிக்கு 3, 6 மற்றும் 11 ஆம் இடங்களிலிருந்து சனி பகவான் நன்மை தரவில்லை. அஷ்டமச் சனியாகி  அந்தஸ்து, பதவி, கௌரவம் ஆகியவைக்கு பங்கம் ஏற்படலாம். வேலையற்றவர்கள் நல்ல வேலை  தேடி அலைய வேண்டிய நிலை ஏற்படும். வாழ்க்கை என்றால் ஏற்ற இறக்கம் மற்றும் இன்ப துன்பம் என மாறித்தானே வரும். சிலருக்கு வெளி நாட்டு வாசமும், குறிக்கோளற்ற அலைச்சல்கள் ஏற்படும். முக்கியமான திட்டங்கள் சிரமங்களுக்கு இடையே நிறைவேறும். குழந்தைகளுக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம். பின்னர்  இக்கட்டான நிலைகள் இருந்த இடம் தெரியாமல் போய் பொன்னும் பொருளும் சேரும். புதுவீடு கட்டுவீர்கள். குடும்பத்தினரின் ஒத்துழைப்புக் கிட்டும். உயர்பதவிஅந்தஸ்து எல்லாமே தேடிவரும். உயர்தரமான உணவு வகைகளை உண்டு மகிழ்வீர்கள். பயணங்களின் போது எச்சரிக்கை தேவை. தொழில் துறையில் இருப்பவர்களுக்குச் சிக்கல்கள் எழலாம். அட்டமச் சனியாக இருப்பதால் கணபதி, ஆஞ்சனேயர் ஆகியோரை வணங்கி, சனிக் கிழமை தோறும் சனீஸ்வரனுக்கு எள் விளக்குப் போட இன்னல்கள் குறையும். திருநள்ளாறு சென்று வரவும் தீமைகள் குறையும்.
         இராகு - ஜென்மத்தில் அமர்ந்த இராகுவால் கஷ்டங்களும், நஷ்டங்களும் சகஜமாகிவிடும். சோம்பலும், சலிப்பும் ஏற்படும். தாய் தந்தையருக்கு ஏற்படும் நோய்களை அலட்சியப்படுத்தாமால், மிகவும் கண்ணும் கருத்துமாய் பார்க்க வேண்டும். சிலருக்கு வரும் நோய்க்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு புதுவிதமான நோய்கள் ஏற்படலாம். டாக்டர்களுக்கும் சவாலாக அமையலாம். ஏவல், பில்லி சூனியத்தால் குடும்பத்தில் நிம்மதி குறையலாம். ஆயினும், பேச்சில் தெளிவு ஏற்படும். வெட்டு ஒன்று துண்டு ரெண்டாகப் பேசாமல், இடம், பொருள் ஏவல் அறிந்து தன்மையாகப் பேசி உங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். உறவுகளிடம் இதுவரை இருந்து வந்த மனக்கசப்புகள் தீர்ந்து, மனம் மகிழும். சுற்றமும், நட்பும் தேடிவந்து அன்பு பாராட்டுவார்கள். சிலருக்குக் கூடா நட்பு கேடாய் முடியும். தொழிலில் பெரிய அளவில் இலாபம் இராது என்பதால், இருப்பதை விட்டு பறப்பதை பிடிக்க நினைக்காமல், கையில் உள்ளதை வைத்துக்கொண்டு முன்னேற முயல்வது அறவுடமையாகும். மற்றவர்களுக்காக மறந்தும் கூட ஜாமீன் கையெழுத்து இடவேண்டாம். வேலையாட்கள் மூலம் சிறுசிறு பிரச்சனைகள் எழலாம். அரசு வகையில் அனுகூலம் கிடைப்பது கடினமே. எனவே, விடாமுயற்சியைக் கடைப்பிடிப்பது நல்லது.

        களத்திர பாவத்தில் அமர்ந்த கேதுவால் பல ஊர்களுக்கும் போய்வரும் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும்.  மனையாளுக்கு கரு தங்காமல் போவதின் காரணமாக சிறிதளவு துன்பமும் சோகமும் ஏற்படலாம். அதன் காரணமாக இல்லாளோடு காலத்தை இனிமையாக்க் களிக்கமுடியாத நிலை உருவாகலாம். குணம் கெட்ட பெண்களின் தொடர்பு குடும்பத்தில் குழப்பங்களை ஏற்படத்தலாம். சிலருக்கு முறைமீறிய காதல் ஏற்பட்டு கட்டாயத் திருமணத்தில் கொண்டு விடலாம். நீர்நிலைகளில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலகட்டமாகும். சோம்பேறித்தனம் அதிகமாகி, எந்த செயலிலும் மனம் ஈடுபடாத நிலை ஏற்படலாம். கணவன் – மனைவி உறவில் விரிசல் வராமல் தடுக்க, கருத்து வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையுடன் இருத்தல் அவசியம் ஆகும். மனைவியுடன் விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். பணி காரணமாகவும் சிலர் குடும்பத்தை விட்டுப் பிரிய நேரலாம். தொழில் மந்தம், தொழிலாளர்களின் ஒத்துழைப்புக் குறைவு, உத்யோகத்தில் சருக்கல்கள், சக ஊழியர்களின் ஆதரவு இன்மை ஆகியவை பிரச்சனைகளைத் தரலாம். நண்பர்களே பகைவர்கள் ஆவர். உங்களால் பயன் அடைந்தவர்களே தக்க சமயத்தில் உங்கள் காலைவாரிவிடுவர். முகம் தெரியாத நபர்களிடம், உங்கள் இரகசியங்களைக் கூறாமல் இருப்பது நல்லது, பொதுவாக, ஜாதகத்தில் நல்ல தசா - புத்திகள் நடந்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும் கை கொடுத்தால் கேட்கவே வேண்டாம்.
பரிகாரம் – விஷ்ணு பகவானுக்கு  உகந்த நாளான புதன்கிழமை அன்று பெருமாள் கோவிலில் தேங்காய், வெற்றிலை, பாக்கு, புஷ்பம் ஆகியவற்றோடு அர்ச்சனை செய்து வழிபட தலைக்கு வந்த துன்பங்கள் தலைப்பாகையோடு மறைந்துவிடும். இராகுவுக்குப் பரிகாரமாக செவ்வாய் கிழமை மாலை மணி 3 – 4 ½ இராகுகாலத்தில் துர்க்கைக்கு எலுமிச்சை விளக்கேற்றி வழிபடுதல் சகல தோஷங்களையும் தீர்த்துவிடும். சுபம்.


No comments:

Post a Comment