Search This Blog

Thursday 25 April 2019


விகாரி வருட பலன்கள்-கடகம், சிம்ம்ம், கன்னி.

கடகம்
75%
(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)
                 தாய் காரகனான சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடகராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு விஹாரி வருட கிரக நிலைகள் தரும் பலன்கள் என்ன ? –என்பதைப் பார்ப்போம்.
        சூரியன்புரட்டாசி மாதத்தில் ஆரோக்கியம் மேம்படும். விரும்பிய இடத்திற்கு வேலை மாற்றம் கிடைக்கும். வியாபாரத்திற்கான வங்கிக் கடன்கள், அரசு தொழில் துறை மூலமாக எளிதாகக் கிடைக்கும். இதுநாள் வரை இருந்து வந்த நோய்கள் நீங்கி, இருந்த இடம் தெரியாமல் போகும். கடன்களும் கட்டுக்குள் இருக்கும். அரசுத் துறையால் ஆதாயம் உண்டு. சிலருக்கு உடனடியாக அரசில் புதிய வேலை கிடைக்கும்.
        மார்கழி மாதத்தில் ஞானம் மேலிடும். கல்வியில் வெற்றி, அரசுத் துறையில் இலாபம் ஏற்படும். நீண்ட கால நிலுவைக் கடன்கள் வசூலாகும். எதிர்பார்க்கும் புதிய வங்கிக் கடன்கள் சுலபமாகக் கிடைக்கும். பகைவர்களின் சதிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். பங்களிப் பிரச்சனைகள் தீரும். தீராத வியாதிகளும் தீர்ந்து சுகமடைவீர்கள். விரயச் செலவுகள் குறைந்து கையில் நாலு காசு தங்கும். பொதுச் சேவையில் புகழும், புதிய பொறுப்புகளும் ஏற்படும்.

         சித்திரை மாதத்தில் தொழில் முன்னேற்றம், உத்தியோக உயர்வு, வருமானம் அதிகரித்தல், புதிய தொழில் முயற்சிகள், காரிய வெற்றி, வழக்குகளில் வெற்றி ஆகியவை ஏற்படும். வெளியூர் பயணங்கள் நன்மை அளிக்கும். தெய்வ வழிபாடுகள் மூலம் வேண்டிய காரியங்கள் அனைத்தும் தெய்வ அருளால் நிறைவேறும். இல்லத்தில் இனிய சுப காரிய நிகழ்ச்சிகள் நடக்கும். தொழிலில் இதுவரை எவராலும் அடைய முடியாத இலாபங்களை சம்பாதித்து, புதிய புதிய சாதனைகளைப் படைத்து அரசின் கௌரவம் பெறுவீர்கள்.

         வைகாசியில் பிறர் மேல் இரக்கம் கொள்வார். வாகன யோகம் உண்டாகும். சுபகாரியங்கள் எண்ணியாங்கு ஈடேறும். தங்களுக்கு இதுவரை தடைக்கல்லாக விழங்கி வந்த காரியங்கள், முன்னேற்றத்துக்கான படிக்கட்டுகளாக மாறி வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலைகள் மேம்படும். பல வழிகளிலும்  உருண்டோடிடும் பணம் காசு எனும் உருவமான பொருள் சேரும். ஒளிர்கின்ற சூரியன் போல் பலவிதத்திலும், உலகமெங்கும் உங்கள்  புகழ் ஒளி பரவும்.
         செவ்வாய் --  புரட்டாசி, மார்கழி, சித்திரை ஆகிய மாதங்களில் தங்கள் இராசிக்கு பல நற்பலன்களை அள்ளி வழங்குவார். புதிய ஆடைகள் மற்றும் ஆபரண சேர்க்கை ஏற்படும். உடன்பிறப்புக்கு இடையே ஒற்றுமை உண்டாகும். வீடு, மனை போன்ற புதிய சொத்துக்கள் வாங்கலாம். அதற்குப் பின் வரும் காலங்களில் வாழ்க்கையில் புதிய பல முன்னேற்றங்கள் உருவாகும். மகிழ்ச்சியும், கோலாகலமும் பல்கிப் பெருகும். தனலாபம் அதிகரிக்கும். பயிர், மனை இவற்றால் இலாபம் ஏற்படும். வேதம் கல்வி இவற்றில் தேர்ச்சி ஏற்படும். சிலருக்கு பந்துஜன விரோதமும், வீட்டில் கலகமும் உண்டாகலாம். கோபத்தால் காரியமெல்லாம் கெடும். புதிய ஆடை சேர்க்கை, தானியவிருத்திகடன்களும் நோய்களும் குறைந்து ஆனந்தமும் பெருகும். பின்னர் வரும் காலத்தில் சிலருக்கு நல்லெண்ணங்கள் மறையும், தவறான நடவடிக்கைகளால் அவமானமும், உடல் நலக் கேடும் ஏற்படலாம். சொல் வன்மையால் அதிக சம்பாத்தியம் ஏற்படும். மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும். செய் தொழிலில் நல்ல இலாபம் கிடைக்கும். அரசுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். 
         புதன்மார்கழி, மாசி, சித்திரை, வைகாசி ஆகிய மாதங்களில் தங்களுக்கு சிறப்பான பலன்களை அள்ளி வழங்குவார். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். எதிரிகளை வென்று ஏற்றமடைவீர்கள். நெடு நாளாக வராத கடன்கள் வசூலாகிவிடும். பல வழிகளிலும் பணம் வந்து சேரும். அதன் காரணமாகப் பொருளாதார நிலை திருப்திகரமாகஇருக்கும். கணக்காளர் தொழில் செய்பவர்களுக்கு தனலாபம் பெருகும்.    கல்வியில் தேர்ச்சி ஏற்படும். சந்ததி விருத்தி ஏற்படும். வேடிக்கை விநோதங்களில் ஈடுபட்டு மனம் நிம்மதி அடையும். செய் தொழிலில் இலாபங்கள் அதிகரிக்கும். வீடு, நிலம், வாகனம் வாங்குதல், கால்நடைகள் வாங்குதல் ஆகியவை ஏற்படும். பதவி உயர்வு, அதிகாரிகளிடம் நற்பெயர் பெறுதல், மதிப்பு, மரியாதை, கௌரவம் ஆகியவை தேடிவருதல் போன்ற நல்ல பலன்கள் ஏற்படும். பொதுச் சேவை ஈடுபாடுகளால் மனத்திருப்தியும் ஏற்படும்.   பிற மாதங்களில் பிறருக்குப் பிணையாக நிற்கப் போய் அவர்கள் கடனுக்குப் பொறுப்பேற்க நேரலாம். எச்சரிக்கை தேவை. மாணவர்களுக்குக் கல்வியில் தடைகள் ஏற்படலாம்செயல் திறன் ஓங்கும். பயணங்களால் இலாபம் ஏற்படும். புகழும், பெயரும் மிகுதியாகும்.
                                                                                                 
    சுக்கிரன் மார்கழி, தை, சித்திரை ஆகிய மாதங்களைத் தவிர மற்ற 9 மாதங்களில் சிறப்பான பலன்களை கடக இராசி நண்பர்களுக்கு அளிக்கிறார். வாக்கு சாதுர்யத்தால் நன்மைகள் ஏற்படும். மிக்க தைரியத்துடன் இறங்கி எக்காரியத்திலும் வெற்றி கிடைக்கும். புதிய இடமாற்றம், வீடு, நிலம், வாகன சேர்க்கை, பெண்களால் ஆதாயம் ஆகியவை ஏற்படும். புத்திர வகையில் சுபச் செலவுகள் ஏற்படும். தீர்த்த யாத்திரை, புண்ணிய ஸ்தல தரிசனங்கள் ஆகியவையும் சிறப்பான முறையில் நடந்தேறும். தெய்வ அருள் கிட்டும். எல்லா வசதிகளும் இன்பமும் உண்டாகும். உயர்ந்த செல்வ நிலையும் அடைவர்அன்னதானம் செய்வர். சிலருக்கு மனக் கஷ்டங்களும், வெளிநாட்டுப் பயணங்களும் ஏற்படும். பின் வரும் மாதங்களில்  மனைவியிடம் அன்புடையவராக இருப்பர். மந்திரி போன்ற உயர் பதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சியும், கணிதத்தில் திறமையும் ஏற்படும். அரசுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். வருடக் கடைசியில் கூட்டு வியாபாரத்தில் உள்ள வியாபாரிகளுக்கு மோசடி காரணமாக நஷ்டங்கள் ஏற்படலாம்.
    குருகுரு – 26 – 4 - 2019 முதல் 4 – 11 – 2019 வரை விருச்சிகத்திலும் பின்னர் தனுசுவிலும் 29 – 3 – 2020 முதல் மகர இராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். எனவே, தங்கள் இராசிக்கு புத்திர, ருண பாவ பலன்களை முறையே ஆறு ஆறு மாதங்களுக்குத் தருவார். மனைவி மக்களுடன் வாழ்க்கை மகிழ்ச்சியாகக் கழியும். புத்தி சாதுர்யமும், அறிவும் விருத்தியாகும். அரசு மூலம் வெகுமதிகள் கிடைக்கும்சிலர் இராஜ தந்திரத்தால் அரசியலில் உயர் பதவிகளை அடைவர். தெய்வீக அருளும், திருமகள் கடைக்கண் பார்வையும் ஏற்பட்டு நல்ல காலம் பிறக்கும். இன்னல்களை நீக்கி இன்பம் தருவார். செல்வம் சேரும். அழகும் பொலிவும் கூடும், வாக்குவன்மை அதிகரிக்கும். புத்தி தெளிவும், அறிவுக் கூர்மையும் ஏற்படும். பெயரும் புகழும் ஓங்கும். ஜனன ஜாதகப்படி யோகமான திசைகள் நடக்குமானால் வெற்றி மேல் வெற்றிகள் குவியும். வேலை இல்லாது இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ருண பாவத்தில் அமரும்போது சமூகத்தில் செல்வாக்கும், சொல்வாக்கும் இழக்க நேரிடலாம். பகைவர்களின் பலம் கூடும். அதனால் உங்கள் முகம் வாடும். மனைவியால் ஆதாயம் ஏற்படும். மக்களால் விரயங்கள் ஏற்படும். அவர்களின் கல்வி செலவுக்காக்க் கடன் வாங்க நேரும். இனிய நண்பர்கள் கூட வலிய எதிரிகளாக மாறுவர். ஆரோக்கியக் குறைவினால் தொழில் துறையில் உள்ளவர்களுக்குச் சிக்கல்கள் ஏற்படலாம்.
    சனி6 ஆம் வீட்டில் சஞ்சரிக்கப் போகும் இக் காலத்தில் சனி பகவான்  சாதகமான நிலைக்கு வந்துள்ளார். இதனால் எல்லா வகையிலும் பொன்னும் பொருளும் சேரும். நிறைய பணமும், வாகன வகைகளும் கிடைக்கும். அதன் காரணமாக உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் செயல் படுவீர்கள். மதிப்புமிக்க மனிதர்களின் நட்பு கிடைக்கும். கூட்டுத் தொழிலில் எச்சரிக்கை தேவை. வங்கிக் கடன் முயற்சிகள் வெற்றி பெறும். தொழிலில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். தொழிலாளர்களை தட்டிக் கொடுத்து வேலைவாங்கினால் முன்னேற்றம் இருக்கும். அரசு ஊழியர்களுக்கு, மற்றவர்களுக்கு கட்டளையிடும் தலைமைப் பதவி கிடைக்கும்.  தாய், தந்தையர் மற்றும் குடும்பத்தார் ஒத்துழைப்பு, உதவிகள் கிடைக்கும். புது வீடு கட்டுவீர்கள். அந்தஸ்து, பதவி, கௌரவம், உத்தியோகம், அல்லது அதில் உயர்வு எல்லாமே தேடிவரும். பேச்சில் தெளிவு ஏற்படும். வெட்டு ஒன்று துண்டு ரெண்டாகப் பேசாமல், இடம், பொருள் ஏவல் அறிந்து தன்மையாகப் பேசி உங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். உறவுகளிடம் இதுவரை இருந்து வந்த மனக் கசப்புகள் தீர்ந்து, மனம் மகிழும். சுற்றமும், நட்பும் தேடிவந்து அன்பு பாராட்டுவார்கள். தொழிலில் முன்னேற்றமும், அதிக இலாபமும் கிடைக்கும். சிலருக்குப் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். தொலைதூரச் செய்திகள் மகிழ்ச்சி தருவனவாக இருக்கும். கணவன் மனைவியிடையே அன்பும் பாசமும் பெருகும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் மறைந்து களிப்பு உண்டாகும். புத்தி சாதுர்யத்தால் வாழ்க்கையில் பொருளாதார நிலை சீராக இருக்கும். குழந்தைகள் வகையில் சுபச்செலவுகள் ஏற்படும். மணவாழ்க்கையும் மகிழ்ச்சி நிறைந்ததாக அமையும். வியாபார நிலவரங்களுக்கு ஏற்ப புதிய நுணுக்கங்களைப் புகுத்தி வியாபாரத்தில் ஆதாயம் காணலாம். உதிரிப் பாகங்கள் அல்லது மென்பொருள் சாதனங்களின் விற்பனை சூடுபிடிக்கும்

      இராகு -  விரய பாவத்தில் அமர்ந்த இராகுவால் தேடிய செல்வங்கள் மறையும். வரவுக்கு மிஞ்சிய செலவுகளும், அவை தகுதிக்கும், சக்திக்கு மீறிய செலவுகளாகவும் அமையும். வீட்டிலும், வெளியிலும் பலவித சமாளிக்க முடியாத இன்னல்கள் ஏற்படும். பணம் கொடுக்கல் – வாங்கலில் மிகுந்த எச்சரிக்கை தேவை. மனையாளுக்கு அரிஷ்டம் ஏற்படும். அதனால் சயன சுகம் கெடும். பூமி, மனை, சொத்து ஆகியவற்றுக்கு பங்கம் விளையும். மருத்துவ உலகிற்கே புதிராகும் வகையில் சிக்கலான புதிய நோய்கள் ஏதாவது உண்டாகும். உடன்பிறப்புக்கள் ஒத்துழைப்புத் தராமல் பகை உணர்ச்சியுடன் செயல்படுவர். சிலருக்குக் கால் இடறுதல், விழுதல் ஆகியவற்றால் காயம் அல்லது முறிவு ஏற்படலாம். தைரியமும் தெம்பும் குறையும். ஆரம்பித்த வேலைகள் விரும்பியபடி, குறிப்பிட்ட காலத்தில் முடிக்க முடியாதபடி தடங்கல்கள் வந்து சேரும். தொழில், வியாபாரத்தில் போட்டி, பொறாமைகளால் சருக்கல்கள் ஏற்படலாம். பிறர் பணிகளில் தேவையற்ற தலையீடுகளை விலக்கி, ஒதுங்கியிருப்பதே நல்லது. உங்கள் வேலைகளில் மட்டும் கவனத்தைச் செலுத்துங்கள். அடிக்கடி பிரயாணங்களும், அலைச்சலும் அதிகம் ஏற்படும். குடும்பத்தில் நீண்ட நாட்களாகத் தடைப்பட்டிருந்த சுபகாரியம் நடைபெறும். போட்டி, பிரச்சனைகள் உதுவாகினும் வெற்றி உங்களுடையதாகவே இருக்கும்.

       கேது 6 ஆம் இடத்தில் நன்மைகளே செய்கிறார். அதன் காரணமாக எல்லாவகையிலும் இலாபமும், சத்ரு ஜெயமும் உண்டாகும். தாய் மாமன் வகையில் அரிஷ்டம் உண்டாகும்.  வித்வத்துவமும், வாக்கு வன்மையும் ஏற்பட்டு அதன் மூலமாக நன்மைகள் ஏற்படும். அதிக சுகமும், புகழும் ஏற்படும். கீர்த்தி பெருகும். பிறர் பேச்சுகளை கவனமாகக் கேட்கவும், கேட்கவில்லை என்றால் தவறாகப் புரிந்து கொண்டு சங்கடப்பட நேரலாம். வயிற்றில் வலிகள் வந்து நீங்கும். இவர்களிடம் பெண்கள் மயங்கி, வசமானாலும் இவர்களுக்கு அவர்கள் மேல் தீவிர இச்சை ஏற்படாது. நெடுநாளையக் கடன்கள் தீரும். குடும்பத்தில் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் பெருகி மருத்துவச் செலவுகள் குறையும். பகைவர்கள் விலகி ஓடுவர். ஞானமுயற்சியும், நற்சிந்தனைகளில் நாட்டமும், பெரியோர்கள், சித்தர்கள் ஆசியும் கிடைக்கும். புதிய திட்டங்கள் செயல் வடிவம் பெறும். தொழிலில் வரும் இலாபத்தை நல்ல முறையில் தானதர்மம் என செலவளிப்பீர்கள். உபரியாக அடுத்து ஒரு புதிய தொழில் ஆரம்பிப்பீர்கள். உத்தியோகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். விரும்பிய இடத்திற்கு இடமாற்ற உத்திரவு கிடைக்கும். புதிய கட்டிடம், மனை வாகனம் ஆகியவையும் வாங்குவீர்கள். பொதுவாக, ஜாதகத்தில் நல்ல தசா - புத்திகள் நடந்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும் கை கொடுத்தால் கேட்கவே வேண்டாம்.
பரிகாரம் – குரு வாரத்தன்று குரு மகான் ஶ்ரீராகவேந்திரரை கல்கண்டு நெய்வேத்தியம் செய்து அவரின் ஸ்தோத்திரங்களைச் சொல்லி வழிபட்டு வர துன்பங்கள் அனைத்தும் தூர விலகும். இராகு ஸ்தலமான திருநாகேஸ்வரம் சென்று பால் அபிக்ஷேகம் செய்து வழிபட்டு வர தோஷங்கள் அகலும்.

சிம்மம்
70%
( மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)
                  தந்தை காரகனான சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்மராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு விஹாரி வருட கிரக நிலைகள் தரும் பலன்கள் என்ன ? –என்பதைப் பார்ப்போம்.
       சூரியன்ஐப்பசி மாதம், முதலில் மனைவியுடன் பூசலோ, பிரிவோ உண்டானாலும், பின் சுமுகமாக முடியும். பணம் காசு சேரும். காரிய வெற்றிகள் ஏற்படும். தைரியத்துடன் புதிய முயற்சிகளில் இறங்குவீர்கள். ஆபரண சேர்க்கை, விருந்துக்குச் செல்லுதல், வியாதிகள் குறைந்து நலமடைதல், கூடுதலான தனவரவு, செய்தொழிலில் பிரகாசம், புதிய தொழில் முயற்சிகள் தொடங்குதல் போன்ற நற்பலன்கள் ஏற்படும்.

       தை மாத நற்பலன்கள் ஆவன -  கெட்ட கனவுகள் தோன்றலாம். உதவி கேட்டுப் போகும் போது யார்  உண்மையான நண்பர்கள்? என்பது தெரியவரும். தனவிருத்தி ஏற்படும். நெடுந் தூரப் பயணங்களால்  இலாபம் ஏற்படும். நீண்ட காலமாக வராக் கடன்கள் அனைத்தும் வசூலாகிவிடும். பொருளாதார நிலை சீரடையும். எதிரிகள் தெரித்து ஓடுவர். அவர்களைச் சுலபமாக வென்று விடுவீர்கள். அனைத்துக் காரியங்களிலும் வெற்றி நிச்சியம். பங்காளி பிரச்சனை தீரும். விரயச் செலவுகள் குறைந்து கையில் ஓரளவு பணம் தங்கும். பொதுச் சேவையில் புகழும், புதிய பொறுப்புகளும் ஏற்படும்.

         வைகாசி மாதத்தில் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கோவில் மற்றும் குளங்களுக்குத் திருப்பணி செய்வர். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்தபடி உத்தியோக உயர்வு கிடைக்கும். தொழில் முன்னேற்றம், புதிய தொழில் முயற்சிகள், காரிய வெற்றி, வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலைகள், நன்மை தருகின்ற வெளியூர் பயணங்கள், தெய்வ வழிபாடுகள் மூலம் மனநிம்மதி, மன நிறைவு ஆகியவை ஏற்படும்.
         ஆனி மாதத்தில் புதிய முதலீடுகளில் இலாபம் ஏற்படும். பகுதி மக்களிடம்  மதிப்பு மரியாதை, கௌரவம் ஆகியவை கூடும். புகழும் கூடும். வீடு வாகனம், நிலம் போன்றவற்றில் முதலீடு செய்தல் அல்லது அவற்றை சீர்திருத்தி அபிவிருத்தி செய்தல், நோய்கள் குணமாகுதல் ஆகியவை ஏற்படும். பிறர் மேல் இரக்கம் ஏற்படும். அரசாங்கத்தால் இலாபம் ஏற்படும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் ஏற்படும். வாகன யோகம் மற்றும் வாக்கு வன்மையால் இலாபம் ஏற்படும். பாக்கியம் ஏற்படும். அதிர்ஷ்ட திருப்பங்கள் ஏற்படும்.
      செவ்வாய்ஐப்பசி, தை, ஆனி ஆகிய மாதங்களில் சிறப்பான பலன்கள் ஏற்படும். விவாகம், சந்ததி விருத்தி ஆகியவை ஏற்படும்.  கல்வியில் தடைகள் ஏற்படலாம்சகோதரரால் நன்மை ஏற்படும். எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் ஏற்படும். வெற்றியும், சந்தோஷமும் உண்டாகும். பின் வரும் காலத்தில் கடன்களும், நீங்கும். ஆரோக்கியம் பெருகும். திருமணமாகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். பணவரவு அதிகரித்து வாழ்க்கையில் பல முன்னேற்றங்கள் ஏற்படும். வேலை நிமித்தம் வெளிநாடு செல்ல வேண்டியதிருக்கும். பதவி உயர்வு, ஆபரண சேர்க்கை, புதிய வேலையாட்கள் சேர்க்கை, நிலம், வீடு வாங்குதல் அல்லது அபிவிருத்தி செய்தல். எல்லாவிதத்திலும் நன்மை உண்டாகிறது. உடலில் ஒளியும் பொலிவும் அழகும் பெருகும்.
    புதன்தை, பங்குனி, வைகாசி, ஆனி ஆகிய மாதங்களில் சிறப்பு பலன்களையும் பிற மாதங்களில் எதிர்மறையான பலன்களே தருவார். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். நிலுவைக் கடன்கள் வசூலாதல். புதிய கடன் முயற்சிகள் பலிதமாதல், நோய் தொல்லைகள் குறைதல் போன்ற சுப பலன்கள் ஏற்படும். புதிய உயர் பதவிகள் கிடைக்கும். உங்களால் உதவி அடைந்தவர்கள் உங்களுக்கே குழிபறிப்பர். புகழ் மரியாதைகள் கூடும். வாகனாதிகள் வந்து சேரும். எல்லாவிதமான முன்னேற்றங்களும் உண்டாகும், அதற்குப் பிறகு  மனைவிக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம். குடும்பத்திற்கு அதிகப்படியான வருமானம் வரும்அரசு வேலை கிடைக்கும். தாய் மாமனுக்கு நன்மைகள் ஏற்படும். எதை நினைத்தாலும் நடக்கும். விரும்பியது கிடைக்கும். தொழில் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.  அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். திருப்திகரமான பணவரவு உண்டு. செல்வாக்கு, புகழ், மதிப்பு, மரியாதை கூடும். பொதுச் சேவையில் மனதிருப்தி ஏற்படும்.
    சுக்கிரன் – தை, மாசி, வைகாசி ஆகிய மாதங்களைத் தவிர மற்ற 9 மாதங்களில் சிறப்பான பலன்களை அளிப்பார். வாக்கு சாதுர்யத்தினால் பல நன்மைகள் ஏற்படும். நல்ல பண வரவு, குடும்பத்தில் சுப காரியங்களுக்கான நற்செலவுகள் ஏற்படும். போகப் பொருட்கள், பொழுதுபோக்கு உபகரணங்கள் யாவும் கிடைக்கும். தெய்வ பக்தி அதிகரிக்கும். சிலருக்கு தொழிலில் சரிவுகள் ஏற்படலாம். வீரம், பிரதாபம் மற்றும் பூர்ண சயன சுகம் ஏற்படும், பின்னர் மனைவியின் பணிவிடைகள் மகிழ்ச்சியைத் தரும். சொற்பொழிவுத் திறன் கூடும். அதனாலும் பணவரவு கூடும். தனக்கென அழகிய தனி வீடு கட்டுவார். புத்திர வகையில் சுபச் செலவுகள் ஏற்படும்.லாட்டரி, பங்குச்சந்தை போன்றவற்றில் ஆதாயங்கள் ஏற்படும். வீட்டில், நெருங்கிய உறவில் திருமண சுபகாரியங்கள் நடைபெறும். தீர்த்த யாத்திரை செய்து புண்ணிய ஸ்தலங்கள் தரிசனம் செய்தல் ஆகியவையும் ஏற்படும். செய்தொழிலில் நல்ல இலாபம் கிடைக்கும். ஆடம்பரமான பொருட்கள் வாங்குவீர்கள். பெண்கள் தொடர்பால் விரயங்கள் ஏற்படும்.
    குரு –  குரு – 26 – 4 - 2019 முதல் 4 – 11 – 2019 வரை விருச்சிகத்திலும் பின்னர் தனுசுவிலும் 29 – 3 – 2020 முதல் மகர இராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். எனவே, தங்கள் இராசிக்கு சுக மற்றும் புத்திர, பாவ பலன்களை முறையே ஆறு ஆறு மாதங்களுக்குத் தருவார். புத்திர பாவத்தில் இருக்கும் காலத்தில் மிக நல்ல பலன்கள் நடைபெறும்பதவி உயர்வு, விரும்பிய இடத்திற்கு மாற்றம் ஆகியவை கிடைக்கும். செய்யும் தொழிலில் இலாபம் அதிகரிக்கும். சுபகாரியச் செலவுகள் ஏற்படும். இன்றைய நிலையில் வீண் சூதாட்டம், போட்டி பந்தயங்கள் ஆகியவற்றில் ஈடுபட்டு இழப்புக்களை சந்திக்க நேரலாம். இதன் காரணமாக மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம். பண இழப்புகளைத் தவிர்க்க இவற்றில் ஈடுபடாதிருப்பது நல்லது. பண இழப்பு ஏற்பட்டால் மனக்கவலை அதிகமாகும்தானே, குடும்பத்தில் நிம்மதி குறையும் தானே ? கவனமாக இருங்கள். 4 ஆம் வீடு என்பது 3 க்கு இரண்டாம் வீடாவதால் இளைய சகோதரர் மூலமாக தன வருமானங்கள் இருக்கும். 5 க்கு விரயம் ஆதலால் சந்தோஷம் குறையும், குழந்தைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படும். எல்லாவற்றிலும் அச்சவுணர்வும், தயக்கமும் ஏற்படும். தேவையென்று வரும்போது கையிலிருக்கும் பணம் கூட உதவாமல் போகும். தான தர்மமென கைப் பணம் கரையும்.
    சனி அனைத்து கிரகங்களுக்கும அரசனாக உள்ள ஆதித்யனை ஆட்சிவீடாகக் கொண்ட சிம்மத்திற்கு 5 ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறார். நீங்கள் கவனமாக இருப்பது நன்மை தரும். மனக் குழப்பம், பொதுச் சேவையில் கௌரவக் குறைவு, அவமானப்படல், புத்திரர்களால் செலவுகள் கருத்து வேறுபாட்டால் மனக் கசப்பு ஏற்படலாம். குணம் கெட்ட பெண்களின் தொடர்பு குடும்பத்தில் குழப்பங்களை ஏற்படுத்தலாம். சிலருக்கு முறை மீறிய காதல் ஏற்பட்டு கட்டாயத் திருமணத்தில் கொண்டு விடலாம். சோம்பேறித்தனம் அதிகமாகி, எந்த செயலிலும் மனம் ஈடுபடாத நிலை ஏற்படலாம். கணவன் – மனைவி உறவில் விரிசல் வராமல் தடுக்க, கருத்து வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையுடன் இருத்தல் அவசியம் ஆகும். புதிய விஷயங்களை ஆர்வமுடன் கற்பீர்கள். தைரியமும் தெம்பும் குறையும். ஆரம்பித்த வேலைகள் விரும்பியபடி, குறிப்பிட்ட காலத்தில் முடிக்க முடியாதபடி தடங்கல்கள் வந்து சேரும். தொழில், வியாபாரத்தில் போட்டி, பொறாமைகளால் சருக்கல்கள் ஏற்படலாம். பிறர் பணிகளில் தேவையற்ற தலையீடுகளை விலக்கி, ஒதுங்கியிருப்பதே நல்லது. உங்கள் வேலைகளில் மட்டும் கவனத்தைச் செலுத்துங்கள். அடிக்கடி பிரயாணங்களும், அலைச்சலும் அதிகம் ஏற்படும். பிறர் பேச்சுகளை கவனமாகக் கேட்கவும், கேட்கவில்லை என்றால் தவறாகப் புரிந்து கொண்டு சங்கடப்பட நேரலாம். இவர்களிடம் பெண்கள் மயங்கி, வசமானாலும் இவர்களுக்கு அவர்கள் மேல் தீவிர இச்சை ஏற்படாது. நெடுநாளையக் கடன்கள் தீரும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். உத்தியோகம் பதவி உயர்வு ஏற்படும். தலைப்பதவிகள் தேடிவரும். இருக்க வசதியான வீடு அமையும். தேடிய செல்வங்கள் மறையும். வரவுக்கு மிஞ்சிய செலவுகளும், அவை தகுதிக்கும், சக்திக்கு மீறிய செலவுகளாகவும் அமையும். வீட்டிலும், வெளியிலும் பலவித சமாளிக்க முடியாத இன்னல்கள் ஏற்படும். எனவே, விடாமுயற்சியைக் கடைப்பிடிப்பது நல்லது. தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். சனி தரும் சிரமங்கள் குறைய விநாயகரையும், ஆஞ்சநேயரையும் மனதார வேண்டினால் இன்னல்கள் மறையும்..

         இராகு - இலாபத்தில் இருக்கும் இராகுவின் காலத்தில் செல்வம் சேரும். அழகிய மனைவி அமைவாள். குழந்தை பாக்கியம் ஏற்படும். சுபகாரியச் செலவுகள் ஏற்படும். வாக்குவன்மை ஓங்கும். தனதான்ய விருத்தி உண்டாகும். உங்கள் வார்த்தைகள் பிறரால் வேதவாக்காக ஏற்றுக் கொள்ளப்படும். ஐஸ்வரியம் பெருகும்.  தொழில் முன்னேற்றங்கள் திருப்தி தரும்.   அரசியல் அதிகாரம், அரசு மரியாதை ஆகியவை கிடைக்கும். பெரும்புள்ளிகள் சிலர் அறிமுகமாகி அதனாலும் முன்னேற்றமடைவர். அந்தஸ்தும், கௌரவமும் கூடும். வேளா வேளைக்கு இனிப்புடன் கூடிய உயர்ரக இராஜ உணவைச் சுவைக்கும் யோகம் ஏற்படும்எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். பொதுச்சேவைகளில் அவமானத்தைத் தரலாம். எனவே, புகழ் கௌரவத்துக்குப் பங்கம் வராமல் பார்த்து நடப்பது நலம் தரும். அதிகாரிகளிடம் பணிவுடன் நடப்பது முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். உபரி வருமானங்கள் அதிகம் கிடைக்கும்.
       புத்திர பாவமேறிய கேது நல்லது செய்வான் என நம்ப முடியுமா ? ஆயினும் ஞானகாரகனான கேது 5 இல் புத்தி தெளிவையும், செயல் திறனையும் அதிகமாக்குவதால் வரும் கஷ்டங்களையும், நஷ்டங்களையும் சமாளித்துக் கொள்வதுதானே அறிவுடமை. சிலருக்கு கர்ப்பை கோளாறுகள் அல்லது கருச்சிதைவு ஏற்படலாம். கீழ்வயிற்றுப் பகுதியில் அல்சர் போன்ற பிரச்சனைகள் எழலாம். புத்திரரால் தொல்லைகள், சோகம் ஆகியவை ஏற்படலாம். பிள்ளைகள் வழியில் மன சஞ்சலங்கள் ஏற்படலாம். அசையாச் சொத்துக்கள் வாங்கும் யோகங்கள் ஏற்படும். பூர்வீகச் சொத்துக்களால் விரயங்கள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். பெரியோர்களின் முழு ஆதரவு இருக்கும். மகான்களின் தரிசனத்தால் ஞானவழியில் உங்கள் மனம் சென்று அமைதி எற்படும். சொத்துக்கள் மீதான வழக்கு விவகாரங்களால்  செலவுகள் அதிகரிக்கும். லாட்டரி, ஸ்பெகுலேஷன் போன்ற துறைகளில் எதிர்பாராத அளவுக்கு திடீர் வெற்றிகள் கிடைக்கும். சிலருக்குப் பணப்பற்றாக்குறையால் காரியங்களில் தாமதங்களும், தடைகளும் ஏற்படும். பொதுவாக, ஜாதகத்தில் நல்ல தசா - புத்திகள் நடந்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும் கை கொடுத்தால் கேட்கவே வேண்டாம்.

பரிகாரம் - சனி தரும் சிரமங்கள் குறைய விநாயகரையும், ஆஞ்சநேயரையும் மனதார வேண்டினால் இன்னல்கள் மறையும். திருநள்ளாறும் சென்று வரலாம். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை இராகு காலத்தில் கருமாரி அம்மன், துர்க்கை வழிபாடு, புத்துக்கு பால் ஊற்றுதல் போன்ற பரிகாரங்களும் நலம்பயக்கும்.

கன்னி
65%
( உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)
       புத்தி காரகனான புதனை அதிபதியாகக் கொண்ட கன்னிராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு விஹாரி வருட கிரக நிலைகள் தரும் பலன்கள் என்ன ? –என்பதைப் பார்ப்போம்.

       சூரியன்ஆனி மாதத்தில் தைரிய, வீரிய பாவத்தில் இருக்கும் மந்தன் மகனால் சுக சௌக்கியம் ஏற்படும். தங்களுக்கு இதுவரை இருந்து வந்த காரியத்தடைகள் நீங்கி வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்.  குழந்தையற்றவர் கருத்தரிப்பர். விருப்பமான மனைவி அல்லது பெண்ணின் உறவு ஏற்படும். பிறருக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். மக்களுடன் பகையும், சகோதர பீடையும் ஏற்படலாம்.  பொருளாதார நிலைகள் மேம்படும். பல வழிகளிலும்  உருண்டோடிடும் பணம் காசு எனும் உருவமான பொருள் சேரும். ஒளிர்கின்ற சூரியன் போல் பலவிதத்திலும், உலகமெங்கும் உங்கள்  புகழ் ஒளி பரவும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும். சாதனைகள் புரிவார்.

       ஆடியில் ஆரோக்கியம் பெருகும். எதிரிகள் மறைவர். வங்கிக் கணக்கில் ரொக்க இருப்புக் கூடும், ஞானம் மேலிடும். வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகிவிடும். எதிர்பார்க்கும் புதிய கடன் வசதிகள் கிடைக்கும். எதிரிகள் பிரச்சனை குறையும். பங்காளிப் பிரச்சனைகள் தீரும். விரையச் செலவுகள் குறைந்து கையில் பணம் நிற்கும். முடியாது என்று கைவிடப்பட்ட கடினமான முயற்சிகளும் எளிதில் நிறைவேறும். பொதுச் சேவையில் புகழும், புதிய பொறுப்புகளும் ஏற்படும்.
புதிய பதவிகள் கிடைத்து அந்தஸ்து, மரியாதையும் கூடும்.

         கார்த்திகையில் குடும்ப சுகம் பெருகும். கல்வியில் தேர்ச்சி உண்டாகும். கோவில் திருப்பணிகள் செய்வர். தெய்வ பக்தியும், தரும சிந்தனையும் கூடும். பொன், வெள்ளி மற்றும் பணம் பெருகும். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். மனிதர்களாலும், கால் நடையாலும் இலாபம் ஏற்படும். அரசாங்க முக்கியஸ்தர்களின் ஆதரவு கிட்டும். எண்ணிய காரியங்கள் எல்லாம் ஈடேறும்.தனக்கு மிகவும் விருப்பமானவர்களின் அன்பு அதிகமாகும். புத்திரபாக்கியம் ஏற்படும்.

         மாசி மாதத்தில் பிறர் மேல் இரக்கம் கொள்வார். வாகன யோகம் உண்டாகும். சுபகாரியங்கள் எண்ணியாங்கு ஈடேறும். தங்களுக்கு இதுவரை தடைக்கல்லாக விழங்கி வந்த காரியங்கள், முன்னேற்றத்துக்கான படிக்கட்டுகளாக மாறி வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலைகள் மேம்படும். பல வழிகளிலும்  உருண்டோடிடும் பணம் காசு எனும் உருவமான பொருள் சேரும். ஒளிர்கின்ற சூரியன் போல் பலவிதத்திலும், உலகமெங்கும் உங்கள்  புகழ் ஒளி பரவும். உங்களுக்கு இதுவரை வராக் கடன்கள் சுலபமாக வசூலாகும். நீண்ட தூரப் பயணங்கள் இலாபம் தரும்.
          செவ்வாய் – கார்த்திகை, தை, ஆனி ஆகிய மாதங்களில் அங்காரகனின் அனுகூலமான பலன்கள் ஏற்படும். விவாகம் நடக்கும். சந்ததி விருத்தியாகும். ஆடை, ஆபரணங்கள் சேரும். .காரிய வெற்றியும், மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களும் ஏற்படும்
அரசுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு ஏற்படும். புதிய முயற்சிகளில் தைரியமாக ஈடுபடுவீர்கள். எதிரிகளை வெற்றி கொள்வீர்கள். சுற்றுப்புறங்களில், தொழில் செய்யும் இடத்தில் நல்ல பெயர் எடுத்து புகழ் பெறுவீர்கள். புதிய தொழில் முயற்சிகள் வெற்றி அடையும். வேதம் கல்வி இவற்றில் தேர்ச்சி ஏற்படும். வீரம் பெருகும். சகோதரரால் நன்மை ஏற்படும். எல்லாத் துறைகளிலும் இலாபம் ஏற்படும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக முடியும். பொருளாதாரம் சீராக இருக்கும். ஆனந்தம் பொங்கும். பின் வரும் மாதங்களில் பற்றாக்குறைகள் அதிகமாகும். ஆரோக்கியக்குறைவு ஏற்படலாம். காரியங்களில் தடை, தாமதங்கள் ஏற்படலாம். சிலருக்குக் கண்நோய் ஏற்படலாம். கல்வியில் தடை ஏற்படலாம்.   
       புதன் –   மாசி, சித்திரை, ஆனி, ஆடி ஆகிய மாதங்களில் புதன் தங்களுக்குச் சிறப்பான பலன்களைத் தருவார். மார்கழியிலும் நல்ல பலன்கள் ஏற்படும். மற்ற மாதங்களில் பயனற்ற முயற்சிகளில் ஈடுபடாதிருப்பது நல்லது. இந்த மாதங்களில்  உயர்பதவிகள் கிடைக்கும். செயல் திறன் கூடும்யாத்திரையும் , வெளிநாட்டுப் பயணங்களும் ஏற்படும். பின்னர் சுப மற்றும் அசுப விரயங்கள் ஏற்படும். சகோதரர் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். குடும்ப அமைதி குறையும். ஆக்கபூர்வமான யோசனைகளால் நிம்மதியும் சுகமும் பெருகும். வருடக் கடைசியில் சிலருக்கு அரசு வேலை கிடைக்கலாம். எழுத்துத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.புத்தி தெளிவு பெறும். ஆக்கபூர்வமான யோசனைகள் தோன்றும். கல்வியில் தேர்ச்சி ஏற்படும். அரசனைப் போல் இவருக்கு நிறையப் பணியாட்கள் அமைவர். ஆபரண வகைகள் சேரும். பொதுமக்களிடையே இவருக்கு மதிப்பு உயரும். எங்கும் இவருக்கு ஆதரவு பெருகும். தொழிலில் தனலாபம் பெருகும். அளவற்ற பணம் பல வழிகளிலும் குவியும். தன் சொல்வன்மையால் அதிக சம்பாத்தியம் ஏற்படும்.
    சுக்கிரன் – மாசி, சித்திரை, ஆடி ஆகிய மற்ற 9 மாதங்களும் நற்பலன்களுக்குக் குறைவிருக்காது. ஆரோக்கியம் பெருகும். வீடு வாங்குவார். நல்ல உறவுகள் மற்றும் நண்பர்கள் அமைவர். வார்த்தை தவறமாட்டார். கல்வியும் புகழும் ஓங்கும். சிலருக்கு இசையால் சம்பாத்தியம் பெருகும். கார் போன்ற உயர்ரக வாகனங்கள் வாங்குவர். ஐம்புலனுக்குரிய அனைத்து இன்பங்களும் கிடைக்கும். வித்தையில் தேர்ச்சியும், அறிவுத் திறனும் கூடும். போஜன சுகம் பூர்ணமாகக் கிடைக்கும். உயர்மட்ட அரசு அதிகாரிகளின் நட்பும் ஆதரவும் கிட்டும். பொன் பொருள் சேரும். கணித்த்தில் திறமை அதிகரிக்கும். சுகந்த பரிமள வாசனாதி திரவியங்கள் கிடைக்கும். இராஜயோகம ஏற்படும். அன்னதானம் செய்க்கூடிய வளமை இவருக்கு உண்டாகும். அதிகாரம் பண்ணும் தலைமைப் பதவிகள் கிடைக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். 
     குரு – 26 – 4 - 2019 முதல் 4 – 11 – 2019 வரை விருச்சிகத்திலும் பின்னர் தனுசுவிலும் 29 – 3 – 2020 முதல் மகர இராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். எனவே, தங்கள் இராசிக்கு தைரிய மற்றும் சுக பாவ பலன்களை முறையே ஆறு ஆறு மாதங்களுக்குத் தருவார். தைரிய பாவத்தில் இருக்கும் காலத்தில் எதையும் முன்பு இருந்த ஒரு துணிவோடு செய்ய முடியாத நிலை உருவாகும். பிறருக்கு நல்லதே செய்தாலும் தீமையாகவே முடியும். எனவே, எதையும் ஆராய்ந்து அறிந்து செய்வதே சிறப்புத் தரும். சகோதர, சகோதரிகளினால் குடும்ப ஒற்றுமை குறையும். நண்பர்களின் நயவஞ்சகத்தனத்தால் ஏமாற்றப்படுவீர்கள். அவர்களிடம் எச்சரிக்கையாகவே இருப்பது நல்லது. புதிது புதிதாக தேவையற்ற செலவுகள் வந்து கைப்பணம் கரையும். தொழில் வளர்ச்சிக்காகச் கூடுதலான முதலீடுகள் செய்ய வேண்டிய சூழ்நிலை எழும். முதலீடுகளை தவிர்ப்பது பொருளாதார நெருக்கடிகளைக் குறைக்கும். பணியில் உள்ளவர்களுக்குப் பதவி உயர்வு தடை, தாமதங்களுக்குப் பிறகே சாத்தியமாகும். எவரையும் நம்பி பிணைக் கையெழுத்து போடுவது சிக்கலைத் தரும். எனவே, எச்சரிக்கை அவசியம். மிக நல்ல பலன்கள் நடைபெறும். சுக பாவத்திற்கு மாறும் போது வீண் சூதாட்டம், போட்டி பந்தயங்கள் ஆகியவற்றில் ஈடுபட்டு இழப்புக்களை சந்திக்க நேரலாம். இதன் காரணமாக மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம். பண இழப்புகளைத் தவிர்க்க இவற்றில் ஈடுபடாதிருப்பது நல்லது. பண இழப்பு ஏற்பட்டால் மனக்கவலை அதிகமாகும்தானே, குடும்பத்தில் நிம்மதி குறையும் தானே ? கவனமாக இருங்கள். 4 ஆம் வீடு என்பது 3 க்கு இரண்டாம் வீடாவதால் இளைய சகோதரர் மூலமாக தன வருமானங்கள் இருக்கும். 5 க்கு விரயம் ஆதலால் சந்தோஷம் குறையும், குழந்தைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படும். சுற்றங்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

  
சுகபாவ சனி தரும் பலன்கள்
         இராசி மண்டலத்தின் 6 வது இராசியான கன்னி இராசிக்கு 4 இல் பிரவேசிக்கும் சனீஸ்வரன் அர்த்தாஷ்டம சனியாகி சின்னச் சின்ன பணிகளைக் கூட அலைந்து திரிந்து முடிக்க வேண்டிய நிலை ஏற்படும். சிலருக்கு உழைப்புக்கு உரிய ஊதியம் கிடைக்காது. உங்கள் வார்த்தைகள் பிறரால் ஏற்றுக் கொள்ளப்படாது.. தொழில் முன்னேற்றங்கள் திருப்தி தருவதாக இருக்காது.  எந்த ஒரு வேலையையும் பிறரை நம்பி ஒப்படைக்காமல் தன் கையை தனக்கு உதவி எனத் தானாகச் செய்வதே சிறப்புத் தரும். அன்னையின் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள். விவசாயத் தொழில்கள் நினைத்தபடி  இருக்காது. மானம், மரியாதை, கௌரவம் அனைத்தும் பாழாகும். அரசியல்வாதிகளுக்கு பொது மக்களின் எதிர்ப்பு வலுக்கும். உறவுகளும் ஒதுங்கிச் செல்வர். வீடு வாங்குவது, கட்டுவது கொஞ்சம் இழுபறியாக முடியும். அதிக வட்டிக்கு கடன் வாங்குவதைத் தவிர்ப்பதால் சிக்கல்களில் இருந்து மீளலாம். வேலையில் அடிக்கடி விடுமுறை எடுப்பதைத் தவிருங்கள். உண்மையாக, நேர்மையாக உழைக்காவிட்டால் இடைஞ்சல்கள் ஏற்படும். சிலருக்குத் தொழிலில் நிச்சியமற்ற தன்மை ஏற்படும். கவனமாக இருந்தால் மட்டுமே நிர்வாகத்தில் நல்ல பெயர் எடுக்க முடியும்.  சிலருக்கு வேலை மாற்றம் ஏற்படுமாதலால் நல்ல வேலை ரெடி பண்ணிக்கொண்டு இருக்கும் வேலையை விடுவது புத்திசாலித்தனம் ஆகும்.

         இராகு - பொதுவாக 10 இல் இராகு அசுப பலன் தருவதாகவே கூறப்படுகிறது. ஆனால், "பத்தில் ஒரு பாம்பேனும் இருக்க வேண்டும்", - என்ற பழமொழிப்படி இங்கு ஏறக்குறைய சுப பலனே ஏற்படும் என நம்பலாம். பல வழிகளிலும் புகழ், சுகம் ஆகியவை ஏற்படும். ஆனால் தமிழ் நூல்களின் கொள்கைப்படி சொத்துக்கள் கை தவறலாம். அரசாங்க ஆதரவு இன்றி, பதவி உத்தியோகத்தில் பிரச்சனைகள் எழலாம். இட மாற்றங்கள், பணி மாற்றங்கள் ஆகியவையும் ஏற்படலாம். செய்வினை, பில்லி, சூன்யம் போன்றவற்றால் அச்சம் ஏற்படலாம். மாரக தசை நடந்தல் பெற்றோருக்குக் கர்மர் செய்ய நேரலாம். கஷடங்களை, கவலைகளை மறந்து காசி யாத்திரை செல்ல்லாம். போஜன சுகம் குறைவதோடு, மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்படுவதின் காரணமாக குழப்பங்கள் வரலாம். சிறுசிறு உபாதைகள் எழலாம். உயர்குலப் பெண்ணால் அவப் பெயர் ஏற்படலாம். தான தருமம் செய்வதால் கைப் பணம் கரையும். வெளிநாட்டுப் பயண வாய்ப்புகள் ஏற்படும். அனைத்திலும் இலாபமும்,  மகிழ்ச்சியும் குறையும். தேவையற்ற, ஆதாயமற்ற பயணங்கள் ஏற்படும். புகழ் மங்கும், பிறர் வழங்கும் மதிப்பு, மரியாதை எனத் துவங்கிய வாழ்வு இந்த வருடம் முன்னேற்றகரமாகவே இருக்கும். படிப்பை முடித்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புக்கள் தாமதமாகவே கிடைக்கும். நிம்மதியான தூக்கம் இராது. கவன சக்தி குறைந்து, மனத் தெளிவும் மறைந்து குழப்ப நிலை தொடரும். எனவே, முதலில் சுப பலனும், பிற்ப்பகுதியில் அசுப பலனுமாக்க் கலந்து நடக்கும் எனக் கொள்ள வேண்டும்.

       ஜென்மத்திற்கு 4 இல் கேது வரும் போது காரணமின்றி எல்லாவற்றிலும், வீண் பயமும், சந்தேகமும் ஏற்படும். சூதாட்டாம், சூதாட்ட பேரம் போன்றவற்றில் பெரும் பொருள் இழப்பு ஏற்பட வாய்ப்பு ஏற்படும். எச்சரிக்கை தேவை. பூமி, மனை, சொத்துக்கள் கை தவறலாம். தீ விபத்துக்கள், வாகன விபத்துக்கள் ஏற்படலாம். எறவே, சமயலறையிலும், வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கை அவசியம். வயிறு, இதயம் ஆகிய உறுப்புகளில் நோய் ஏற்படலாம். சிலருக்கு அவரகளின் உருவமே மாறி வெறுப்பு ஏற்பட, அந்த வெறுப்பாலேயே துறவறம் பூணும் வாய்ப்பு ஏற்படலாம். பெற்றோர் உடல் நிலை பாதிப்புக் காரணமாக மருத்துவச் செலவுகள் கூடும். செய்தொழிலில் எதிர்பாராத தடங்கல்கள், கடன் பிரச்சனைகள், பொருளாதாரப் பற்றாக்குறை, வீண் அலைச்சல் போன்றவையும் ஏற்படும். கால் நடைகள், கோழி வளர்ப்பு போன்ற வகையில் இழப்புகள் அதிகம் இருக்கும். உடலில் விஷக்கடியினால் அலர்ஜி, அரிப்பு, வலியினால் வேதனை, நாய் கடி அல்லது வீட்டுக்குள் விஷ ஜந்துக்களான பாம்பு, தேள், பூரான் பொன்றவை விஜயம் செய்தல் ஆகியவை நிகழும். ஆனாலும் அதிக பயம் ஏற்படாது. கணவன் மனைவி உறவு சுகமாகவே இருக்கும். பொதுவாக, ஜாதகத்தில் நல்ல தசா - புத்திகள் நடந்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும் கை கொடுத்தால் கேட்கவே வேண்டாம்.

பரிகாரம் - சனி பகவானின் சன்னதிக்குச் சென்று எள் தீபம் ஏற்றி வழிபடுதலும், ஒருமுறை திருநள்ளாறு சென்று வருதலும் நலம் பயக்கும். ஆதிசேஷனின் அவதாரமான இராமானுஜரை ஞாயிற்றுக் கிழமைகளில் ஶ்ரீபெரும்புதூர் சென்று நெய் தீபம் ஏற்றி வழிபட்டுவர துன்பங்கள் தீர்ந்து இன்பமெ பெருகும்.



No comments:

Post a Comment