Search This Blog

Thursday 4 September 2014

ஜோதிட வாசல்- மாத இதழ்- செப்-2014 மாதபலன்.

ஜோதிட வாசல்- மாத இதழ்- செப்-2014 மாதபலன்.

(மேஷம்-ரிஷபம்-மிதுன இராசிகளுக்கான பலன்)
ஓம் ஶ்ரீ ராகவேந்திராய நமக.
செப்டம்பர் -- 2014 மாத ராசிபலன்;;;;
கேது




1-செப்டம்பர்2014
ஆவணி-16
திங்கள்



குரு
சுக்

சூரி



சந்
செவ்
சனி ()
புத
இராகு
                      







    
கிரக மாற்றங்கள்
செவ்வாய்விருச்சிகம்  – 2 – 9 – 2014.
சூரியன் கன்னி – 17 – 9 – 2014.
சுக்கிரன்சிம்மம் – 1 – 9 – 2014 ( இரவு - 10 மணி ) மற்றும் கன்னி 26 – 9 - 2014
சனிவக்ர நிவர்த்தி – 9 – 9 - 2014
மேஷம்
(அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்பரணி-1, 2, 3, 4 பாதங்கள்கார்த்திகை-1,2,3,4 பாதங்கள்)
( இராசி  அறியாதவர்கள் பலன் அறிய - சு, சே, சொ, , லெ, லு, லே, லோ, )
         ஆசை, தைரியம், பிடிவாதம், சாமர்த்தியம் உடைய மேஷராசி வாசகர்களே!
      உங்கள் இராசிநாதன் செவ்வாய் நல்ஆரோக்கியத்தையும், மனமகிழ்ச்சியையும், பகைகளை வெல்லும் திறனையும்அளிக்க வல்லவன் அல்லன் அதுவே ருண பாவ புதனால். செல்வச் செழிப்பையும், முன்னேற்றங்களையும், சுகானுபவங்களையும் மற்றும் கௌரவத்தையும் தருகிறான். தாய் மாமனுக்கும் நன்மை ஏற்படும். சூரியனால் முற்பகுதியில், நண்பர்களால் தொல்லையும் பிற்பகுதியில் தன விருத்தியும் ஏற்படும். தொலைதூரப் பயணங்களால் நன்மை ஏற்படும். சிலருக்கு குருவால் மனநிம்மதி கெடலாம். சுக்கிரன் வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்களை அளிக்கும் நிலையில் இல்லை.   சனி பயணங்களைத் தருவார். அப்போது விபத்து பயம் ஏற்படும். எச்சரிக்கை தேவை. பல வகையிலும் செல்வத்தையும், வாழ்க்கையில் முன்னேற்றத்தையும், இராகு அளிக்கிறார், வியபாவ கேது, ஞான மார்க்கத்தில் ஆர்வத்தையும், ஆன்மிக சிந்தனைகளையும் அளிப்பார்.  பொதுவாக மேஷ இராசி அன்பர்களுக்கு 60 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.
       குடும்பம் மற்றும் ஆரோக்கியம் ; பொருளாதார நிலைகள் சீராகி வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை ஓங்கி ஒருவருக்கொருவர் உதவிகரமாக இருப்பர். குழந்தைகளின் முன்னேற்றங் கண்டு வாழ்க்கையில் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். தெய்வப் பிரார்த்தனைகளால் வேண்டியது நிறைவேறும். நண்பர்களின் உதவி கிடைக்கும்.
       தொழில் மற்றும் வியாபாரம் ; புதிய திட்டங்கள், புதிய நுணுக்கங்களைக் கைக் கொண்டு வியாபாரத்தில் ஆதாயம் காணலாம். சிலருக்கு வங்கி சம்பந்தமான கடன் விவகாரங்களில் அனுகூலம் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். அரசுப் பணியாளர்களுக்கு ஆதாயம் பெருகும். உண்மையான உழைப்பே உயர்வுதரும். விவசாய விளைபொருட்களால் நல்ல ஆதாயம் கிட்டும். வருமானம் பெருகி மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.  
       பெண்கள் ;- திருமணமாகாத பெண்களுக்குத் திருமணம் நடக்கும். பணிபுரியும் பெண்கள் சுறுசுறுப்பாகப் பணியாற்றிட  உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவர்செலவுகளை குறைத்து சேமிப்பை உயர்த்த ஓளிமயமான வாழ்வு அமையும். சுயதொழில் புரியும் பெண்கள் தங்கள் தொழிலில் புதிய பரிமாணங்களை சுலபமாக எட்டுவர்.
    மாணவர்கள்;- மாணவ, மாணவிகள் பள்ளியில் படிக்கும் பாடங்களை வீட்டில் திரும்பத் திரும்பப் படித்து மனதில் பதியவைத்து, விளையாட்டுத்தனமாக இருக்காமல் கவனமாகப் படித்தால் மட்டுமே தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற இயலும்விளையாட்டுத் துறையில் ஆர்வமுள்ள மாணவர்கள் போட்டிகளில் வெற்றி பெற்று, பள்ளிக்குப் பெருமை சேர்ப்பர்.
    சந்திராஷ்டமம்;- ஜனன ஜாதகப்படி இராசிக்கு அட்டமத்தானத்தில் கோசாரச் சந்திரன் சஞ்சரிக்கும் காலமே சந்திராஷ்டம காலமாகும்இக் காலத்தில் சிக்கல்களும், சிரமங்களும் ஏற்படலாம். தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 1 – 9 –2014 காலை 09 – 02 மணி முதல், 03 – 9 – 2014 பகல் 1 – 55 மற்றும் 28 – 9 – 2014 மாலை 4 – 39 மணி முதல் 30- 9 - 2014 மணிவரையாகும். இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.
    அதிர்ஷ்ட எண்கள்;- 1 மற்றும் 9 ஆகும். கவரும் எண்கள் 4 மற்றும் 8 ஆகும். சாதகமான எண்கள் 2, 3, 5 ஆகும். அனுகூலமற்ற எண்கள் 6 மற்றும் 7 ஆகும்.
    அதிர்ஷ்ட நிறம்;- சிகப்பு, மஞ்சள், செம்பு மற்றும் தங்க நிறமாகும் ஆகும். தவிர்க்க வேண்டிய நிறம் கருப்பு ஆகும்.
    அதிர்ஷ்டக் கற்கள்;- செம்பவழம் செம்பில் அல்லது வெள்ளியில் பதித்து வியாழக் கிழமையன்று, பூஜைக்குப் பிறகு வலது கை முதலாவது விரலில் அணிவது உத்தமம்.
    ஆகாதஇராசிவிருச்சிகம், மாதம்கார்த்திகை, கிழமைஞாயிறு, நட்சத்திரம் -- ஹஸ்தம், திதிகள்பிரதமை, சஷ்டி மற்றும் ஏகாதசி ஆகும். யோகம் -- விஷ்கம்பம், கரணம் -- பவம்  ஆகும்.
    பரிகாரம்;- தொடர்ந்து ஶ்ரீ ஆஞ்சனேயருக்கு சனிக்கிழமைகளில் நெய்த் தீபம் ஏற்றிவர, துன்பங்கள் தூர விலகும். வெள்ளை உடையும், வைரமும் அணியவும், வெள்ளி அல்லது மொச்சை தானம் செய்வது தோஷநிவர்த்தி தரும்.                                 
ரிஷபம்
( கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )
( இராசி  அறியாதவர்கள் பலன் அறிய , , , , , வி, வு, வே, வோ )
       உறுதியான செயலும், உயர்பதவிக்கான ஆளுமைத் தகுதிகளும் உடைய ரிஷபராசி வாசகர்களே !
       தங்கள் இராசிநாதன் தங்களை நற்செயல்களில் ஈடுபடுத்தி, மனமகிழ்ச்சியையும், அனைத்து வசதிகளையும் தந்து, நல்ல அறிவையும், நல்ல நண்பர்களையும் அளிப்பான்.  சூரியனால் சிந்தனா சக்தி மற்றும் நிர்ணயத் திறன்கள் குறையும். 6 இல் உள்ள செவ்வாய், மிக முக்கியமாக ஈடுபடும் செயல்பாடுகளில் வெற்றிகரமான நல்ல முடிவுகளை மற்றும் இலாபங்களை அளிக்கிறான். சந்தோஷம், நோயினின்று விடுதலை மற்றும் அதிகாரத்திலுள்ள நல்ல மனிதர்களின் தொடர்பையும் ஏற்படுத்துகிறான். சிலருக்குத் தேவையற்ற அலைச்சல்களைத் தருவான் புதன்,  குருவோ தன் பங்குக்குத் தடைகளையும், பணி மாற்றங்களையும் தரலாம். தனக்கென ஒரு தனி வீடு தருவான் சுக்கிரன். திருமணம், புத்திர பாக்கியம் ஆகியவற்றையும் அளிக்கிறான். எதிலும் வெற்றியையும், எல்லாவற்றிலும் முன்னேற்றத்தையும் தரும் சனி, தசா, புத்தி சாதகமானால், இராஜயோகத்தையும் அளிக்கிறான். பஞ்சம இராகு குழந்தைகளால் தொல்லைகளை ஏற்படுத்துவான். இலாப பாவக் கேதுவால் பயிர் விளைச்சல் அதிகரிக்கும், நீதித் துறையில் உள்ளவர்களுக்கு முன்னேற்றமான காலம். உத்தியோக உயர்வு மற்றும் வருமான உயர்வு உண்டு. மூத்த சகோதரருக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம்.  மொத்தத்தில் ரிஷபராசி அன்பர்களுக்கு 70 சதவிகித நற்பலன்கள் ஏற்பட, உங்கள் காட்டில் மழைதான்.
       குடும்பம் மற்றும் ஆரோக்கியம்இறைபக்தியும் தரும சிந்தனையும் உண்டாகும். கோவில் திருப்பணிகள் செய்வர். வாகனயோகம் ஏற்படும். பெரியோரின் ஆசிகள் கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சிகரமான சூழல்கள் நிலவும்.
       தொழில் மற்றும் வியாபாரம்; பணிபுரியும் இடத்தில் மற்றவர்களுக்கு கட்டளையிடும் தலைமைப் பதவி கிடைக்கும். விவசாயத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். சுயதொழில் புரிபவர்கள், பணியாட்களின் பூரண ஒத்துழைப்பால் உற்பத்தி பெருகி இலாபம் அதிகரிக்கும். பொருளாதாரம் மிக உயர்ந்த நிலையடையும். எதிரிகளின் செல்வம் வந்து சேரும்.
       பெண்கள்; உறவுகளிடையே நல்லுறவு அதிகரிக்கும். சுயதொழில் புரியும் பெண்களுக்குப் புதிய ஆர்டர்கள் மூலமாக ஆதாயம் பெருகும். பணிபுரியும் பெண்களுக்கு உயர் அதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும். உயர் பதவிகள், பாராட்டுக்கள் கிடைக்கும்.
       மாணவர்கள்; மாணவர்களுக்குக் கல்வியில் உயர்வும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிகிட்டும் வாய்ப்புகள் உருவாகும். வீணாகப் பொழுதைக் கழிக்காமல் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறலாம். பணிக்காக போட்டித்தேர்வு எழுதுபவர்கள், வெற்றி பெற்று முன்னேற்றமடைவர்.

       சந்திராஷ்டமம்;- ஜனன ஜாதகப்படி இராசிக்கு அட்டமத்தானத்தில் கோசாரச் சந்திரன் சஞ்சரிக்கும் காலமே சந்திராஷ்டம காலமாகும்இக் காலத்தில் சிக்கல்களும், சிரமங்களும் ஏற்படலாம். தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 03 – 9 – 2014 பகல் 1 - 56 மணி முதல், 05 – 9 – 2014 மாலை 05 – 09 மணிவரையாகும். இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.
       அதிர்ஷ்ட எண்கள்;- 2 மற்றும் 8 ஆகும். கவரும் எண்கள் 7 மற்றும் 9 ஆகும். சாதகமான எண்கள் 1, 3, 4 மற்றும் 6 ஆகும். அனுகூலமற்ற எண் 5 ஆகும்.
       அதிர்ஷ்ட நிறம்;- பிங்க், பச்சை, வெள்ளை ஆகும். தவிர்க்க வேண்டிய நிறம் சிகப்பு ஆகும்.
       அதிர்ஷ்டக் கற்கள்;- வைரத்தைத் தங்கத்தில் பதித்து வெள்ளிக் கிழமையன்று, பூஜைக்குப் பிறகு வலது கை மூன்றாவது விரலில் அணிவது உத்தமம்.
       ஆகாதஇராசிசிம்மம், மாதம்மார்கழி, கிழமைசனி, நட்சத்திரம் -- ஹஸ்தம், திதிகள்பஞ்சமி, தசமி மற்றும் பெளர்ணமி ஆகும். யோகம் -- சுக்கிலம், கரணம் -- சகுனி  ஆகும்.
       பரிகாரம்;- தொடர்ந்து ஶ்ரீ ஆஞ்சனேயருக்கு சனிக்கிழமைகளில் நெய்த் தீபம் ஏற்றிவர, துன்பங்கள் தூர விலகும். வெள்ளை உடையும், வைரமும் அணியவும், வெள்ளி அல்லது மொச்சை தானம் செய்வது தோஷநிவர்த்தி தரும்.                                 
மிதுனம்
(மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)
( இராசி  அறியாதவர்கள் பலன் அறிய கா, கி, கு, , , , கே, கோ, )
       வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும்மாற்றங்களை விரும்புவர்களுமான மிதுனராசி வாசகர்களே !
       அனுகூலமான நிலையில் அமர்ந்திருக்கும் இராசிநாதன் புதனால் புத்தி தெளிவு பெறும். கல்வியில் வெற்றி கிட்டும். கௌரவம், சாமர்த்தியம் ஆகியவை உயரும். தன பாவ குருவால் அழகிய மனைவி அமைவாள். செல்வம் சேரும். வெற்றிகளால் மகிழ்ச்சியும், புத்திர பாக்கியமும் ஏற்படும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். முற்பகுதியில் சுய சம்பாத்தியத்தால்  செல்வத்தைத் தருகிறான், சூரியன். பிற்பகுதியில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தலாம். அதிகாரம் செய்யும் முக்கிய பதவி, அந்தஸ்து, மரியாதை ஆகியவை சுக்கிரனின் தயவால் கூடும்.  நல்ல நண்பர்களையும் அளிக்கிறான்.   சனியோ, வீண் செலவுகளையும், குழப்பங்களையும் தருகிறான்இராகு, உறவுகளுக்கிடையே இடியாப்பச் சிக்கல்களை உருவாக்கிவிடுகிறான். புண்ணியத்தல யாத்திரைகள், மடாதிபதிகள் மற்றும் ஆன்மிகப் பெரியோர்களின் தரிசனம் ஆகியவற்றைக் கேது அளிப்பார்மொத்தத்தில் மிதுன இராசி அன்பர்களுக்கு 60 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.
       குடும்பம் மற்றும் ஆரோக்கியம்; ஆரோக்கியம் பெருகும்எவரும் சாதிக்க முடியாத சாதனைகளைச் செய்து முடிப்பர். திருக்கோவில் திருப்பணிகள் செய்வர். வீட்டில் மகிழ்ச்சிக் கொண்டாட்டங்கள் நிகழும். வெளிநாட்டுப் பயணங்கள் ஆதாயம் தரும். திருமணம் மற்றும் வம்ச விருத்தி ஏற்படும்.
       தொழில் மற்றும் வியாபாரம்; தொழில் மற்றும் வியாபார முதலீடுகளுக்கு  வங்கிக் கடன்களும், அரசு உதவிகளும் மிகுந்த சிரமத்துக்கிடையே கிடைக்கும். விவசாயப் பணிகள் சுமாராக நடந்து, ஓரளவு ஆதாயம் பெருகும். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கும். தீவிர பரிசீலனைக்குப் பிறகு பங்குச் சந்தையில் முதலீடுகள் செய்யலாம். பொருளாதாரத்தில் திருப்திகரமான நிலை உருவாகும். கலைத் துறையினருக்கு பல வழிகளிலும் முன்னேற்றம் ஏற்படும்.
      பெண்கள்; பணிபுரியும் பெண்களுக்குப் புதிய வாகனயோகம் ஏற்படும். அதிகாரிகளின் ஆதரவு பணி உயர்வுக்கு வழிவகுக்கும். சுயதொழில் புரியும் பெண்களுக்குப் பணியாளர்களின் ஒத்துழைப்புப் பெருகி, உற்பத்திப் பெருக்கத்தால், ஆதாயமும் பெருகும். கணவன் மற்றும் உறவுகளின் உதவிகளும் கிடைக்கும். கலைத் துறையினருக்கு பல வழிகளிலும் முன்னேற்றம் ஏற்படும்
      மாணவர்கள்; கல்வியில் உயர்வும், விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வமும் ஏற்பட்டு, வெற்றிகளும் குவியும். நல்ல முன்னேற்றங்கண்டு பெற்றோர்க்கும், ஆசிரியர்களுக்கும் மாணவர்கள் பெருமை தேடித்தருவர். தேர்வுகள்  மாணவர்கள் தேவையற்ற வேலைகளில் ஈடுபடாமல், படிப்பில் கவனம் செலுத்தினால் நல்ல மதிப்பெண்கள் பெறலாம்.  
      சந்திராஷ்டமம்;- ஜனன ஜாதகப்படி இராசிக்கு அட்டமத்தானத்தில் கோசாரச் சந்திரன் சஞ்சரிக்கும் காலமே சந்திராஷ்டம காலமாகும்இக் காலத்தில் சிக்கல்களும், சிரமங்களும் ஏற்படலாம். தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 05 – 9 – 2014 மாலை 05-10 மணி முதல், 07 – 9 – 2014 இரவு 07 – 34 மணிவரையாகும். இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.
     அதிர்ஷ்ட எண்கள்;- 7 மற்றும் 3 ஆகும். கவரும் எண்கள் 5 , 6 மற்றும் 9 ஆகும். சாதகமான எண்கள் 1 மற்றும் 2 ஆகும். அனுகூலமற்ற எண்கள் 4 மற்றும் 8 ஆகும்.
     அதிர்ஷ்ட நிறம்;- மஞ்சள், பர்ப்பிள், பச்சை, நீலம் மற்றும் பிங்க் ஆகும். தவிர்க்க வேண்டிய நிறங்கள் கருப்பு மற்றும் சிகப்பு ஆகும்.
     அதிர்ஷ்டக் கற்கள்;- மரகதம், மஞ்சள் புஷ்பராகம் 3, 5, 7 அல்லது 10 கிராம் தங்கத்தில் பதித்து புதன் கிழமையன்று, பூஜைக்குப் பிறகு வலது கை நான்காவது விரலில் அணிவது உத்தமம்.
     ஆகாதஇராசிமகரம், மாதம்ஆடி, கிழமைதிங்கள், நட்சத்திரம் -- ஸ்வாதி, திதிகள்பிரதமை, சப்தமி மற்றும் துவாதசி ஆகும். யோகம் -- பரிகம், கரணம் -- கெளலவம்  ஆகும்.
     பரிகாரம்;- தொடர்ந்து பெருமாளுக்கு சனிக்கிழமைகளில் நெய்த் தீபம் ஏற்றிவர, துன்பங்கள் தூர விலகும். பச்சைப் பட்டாடையும், மரகதமும் அணிந்தாலும், ஸ்வர்ணதானம் அல்லது பாசிப்பயிறு தானம் செய்வது தோஷநிவர்த்தி தரும்.                         

No comments:

Post a Comment