Search This Blog

Thursday 4 September 2014

கடகம் - சிம்மம் - கன்னி இராசிகளுக்கான பலன்கள்.

ஜோதிட வாசல் மாத இதழில் வெளியான செப்-2014 க்கான மாதபலன்கள்

கடகம் - சிம்மம் - கன்னி இராசிகளுக்கான பலன்கள்.

கடகம்

(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)

( இராசி  அறியாதவர்கள் பலனறிய ஹி, ஹூ, ஹே, ஹோ, , டி, டு, டே, டோ )
    வல்லவரும். அடிக்கடி மாற்றங்களையும் பயணங்களையும் விரும்பக் கூடிய கடக இராசி வாசகர்களே!

    இம் மாதம் நல்ஆரோக்கியம், சந்தோஷம், தனலாபம், அனைத்திலும் வெற்றி, பலம், உயர்பதவிகள், அதிகாரங்கள், மதிப்பு மரியாதை மற்றும் குழந்தைகள் மூலமாக மகிழ்ச்சி என நற்பலன்கள் ஏற்படும் முற்பகுதியில் கோபம் அதிகரிக்கும். பிற்பகுதியில்  சொத்துக்கள் சேரும், தான தர்மத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். பிள்ளைகள் மூலமாக கஷ்டமும், சுகமும் மாறிமாறி வரும். சிலருக்கு எதிர்ப்புகள் அதிகரிக்கும். தைரியக் குறைவு ஏற்படும். கலைத் துறையில் உள்ளவர்களுக்குப் பரிசுகளும், பாராட்டுக்களும் குவியும். சிலருக்கு அரசாங்கக் கெடுபிடிகள் அதிகரிக்கும். நிம்மதி இன்மையால் தூக்கம் கெடும்.  புதுப்புதுப் பதவிகளும் அதனால் வருவாய்ப் பெருக்கமும் ஏற்படும். சகோதரர்களால்  ஆதாயங்கள் கிட்டும். புதிய செயல்கள் எதுவும் தொடங்காது இருப்பது நல்லது. இருப்பதைவிட்டுப் பறப்பதைப் பிடிக்காமல், இருப்பதைக் காப்பதே பயனளிக்கும். இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் பெண்களிடம் பழகும்போது எச்சரிக்கை அவசியம். சிலருக்கு மனைவியிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். மொத்தத்தில் கடகராசி அன்பர்களுக்கு 50 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.

     குடும்பம் மற்றும் ஆரோக்கியம் ; திறமை மிக்கவராக விளங்குவார். பயணங்களும் அதனால் லாபமும் ஏற்படும். குடும்பத்திற்கு அதிகப்படியான வருமானம், கடின உழைப்புக்குப் பின் கிடைக்கும்பக்தி மார்க்கத்தில் அதிக ஈடுபாடு ஏற்படும். சிலர் பிறரால் ஏமாற்றப்படலாம். கவனம் தேவை.

     தொழில் மற்றும் வியாபாரம்; அரசுப்பணி புரிபவர்களுக்கு எதிர்பாராதவிதமாக திடீரென இடமாற்றங்கள் மற்றும் பதவி உயர்வு கிடைக்கும். விவசாயிகள் விவசாயத்தில் புதிய முறைகளைக் கையாண்டு விளைச்சலைப் பெருக்க முனைவர். பஞ்சு, கம்பளி, துணிவகைகள், எண்ணவகைகள், அவரை, பார்லி ஆகிய பொருட்களின் விளைச்சல் ஆதாயம் தரும். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். புதிய தொழில்கள்  மூலமாக பணவரத்து அதிகரித்து உயர்வும் ஏற்படும்.

    பெண்கள்; பணியிடங்களில் அனுகூலமான சூழல் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும். குடும்பத்தார் ஒத்துழைப்பால் வீட்டில் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டொடும். கடின பிரயாசைக்குப் பிறகே அரசின் உதவிகள் கைக்குக் கிடைக்கும்  எதைச் செய்தாலும் சிரத்தையுடன் செய்தல் வேண்டும், இல்லையெனில் கவனக்குறைவால் காரியங்களில் தடைகள் ஏற்படும். அரசில் பணிபுரியும் பெண்கள் உயர் அதிகாரிகளை அனுசரித்து, ஆலோசனைகளைக் கேட்டு நடந்தால் நன்மைபயக்கும்.

    மாணவர்கள்; மாணவர்களுக்கு அறிவுத்திறனும், கல்வியிற் தேர்ச்சியும் அதிகரிக்க படிப்பில் அதிக கவனம் தேவை. வாகனங்களில் வேகத்தைக் குறைத்து விவேகமாகச் சென்றால் விபத்தைத் தவிர்க்கலாம். கவனம் தேவை. தேர்வுகள் நெருங்குவதால் மிகுந்த அக்கறையுடன் படித்தால் அதிக மதிப்பெண் பெறலாம். மாணவர்கள் தங்கள் நினைவாற்றல் பெருகவும், கல்வித்திறன் அதிகரிக்கவும்ஹைக்ரீவர் ஸ்லோகத்தை தினமும் சொல்லுதல் வேண்டும்.

     சந்திராஷ்டமம்;- ஜனன ஜாதகப்படி இராசிக்கு அட்டமத்தானத்தில் கோசாரச் சந்திரன் சஞ்சரிக்கும் காலமே சந்திராஷ்டம காலமாகும்இக் காலத்தில் சிக்கல்களும், சிரமங்களும் ஏற்படலாம். தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 07 – 9 - 2014 இரவு 7 – 35 மணிமுதல் 09 – 09 – 2014 இரவு 10 – 04  மணிவரையாகும். இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.

    அதிர்ஷ்ட எண்கள்;- 4 மற்றும் 6 ஆகும். கவரும் எண்கள் 8 மற்றும் 1 ஆகும். சாதகமான எண்கள் 2, 7 மற்றும் 9 ஆகும். அனுகூலமற்ற எண்கள் 3 மற்றும் 5 ஆகும்.

    அதிர்ஷ்ட நிறம்;- வெள்ளை, க்ரீம், சிகப்பு, மற்றும் மஞ்சள் ஆகும். தவிர்க்க வேண்டிய நிறங்கள் நீலம் மற்றும் பச்சை ஆகும்.

    அதிர்ஷ்டக் கற்கள்;- வெள்ளியில் பதிக்கப்பட்ட முத்து மோதிரத்தைத் தங்கத்தில் பதித்து திங்கள் கிழமையன்று, பூஜைக்குப் பிறகு வலது கை நான்காவது விரலில் அணிவது உத்தமம்.

    ஆகாதஇராசிசிம்மம், மாதம்மாசி, கிழமைபுதன், நட்சத்திரம் -- அனுஷம், திதிகள்துவிதியை, சப்தமி மற்றும் துவாதசி ஆகும். யோகம் -- வியாகதம், கரணம் -- நாகவம்  ஆகும்.

    பரிகாரம்;- தொடர்ந்து சிவபெருமானுக்கு  நெய்த் தீபம் ஏற்றிவர, துன்பங்கள் தூர விலகும். வெண்மையான ஆடையணியவும், வெண்மையான மலர்களை அர்ச்சித்தலும், சங்குதானம் அல்லது பச்சரிசி தானம் செய்வதும் தோஷநிவர்த்தி தரும்.  
                               
சிம்மம்

( மகம்-1,2,3,4 பாதங்கள், பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)

( இராசி  அறியாதவர்கள் பலன் அறிய , மி, மு, மெ, மோ, டி, டு, டே, டோ )

       திறமை மிக்கவரும் மற்றும் அறிவுத்திறன் மிக்கவருமான சிம்மராசி வாசகர்களே !   
       தங்கள் இராசிநாதன் சூரியன் முற்பகுதியில் தனு பாவத்தில் அமர்ந்து மகிழ்ச்சிக் குறைவைத் தந்தாலும் பிற்பகுதியில் செல்வச் சேர்க்கை, புத்திரபாக்கியம், வெற்றி, புகழ், பேச்சால் ஆதாயத்தையும், அனைவராலும் விரும்பப்படும் நிலையையும் தருவார். புதன், சிலருக்குக் குடும்பத்தில் குழப்பம், அவப்பெயர் ஆகியவற்றை ஏற்படுத்தலாம். விரய பாவ குருவால் சுபகாரியச் செலவுகள் ஏற்படும்.    சுக்கிரன். புதிய பதவிபுதிய பொறுப்பு, நவீன பொருட்களின் சேர்க்கை, வாழ்க்கையில் முன்னேற்றம் ஆகியவற்றைத் தருவார். சகோதர பாவச் செவ்வாய், திருமணம். பயிர், மனை, சகோதரரால் நன்மை ஆகியவற்றைத் தருவார். இனிய விழாக்களும்பதவிகளும், எடுத்த காரியங்கள் யாவினும் வெற்றியும் சனியால் கிடைக்கும்கல்வியில் முன்னேற்றமும், இளைய சகோதரர்களால் மற்றும்  சிறுபயணங்களால் ஆதாயமும் கிடைக்கும். எழுத்து மற்றும் பதிப்பித்தல் துறையில் முன்னேற்றமும் ஏற்படும். மொத்தத்தில் சிம்மராசி அன்பர்களுக்கு 70 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.

     குடும்பம் மற்றும் ஆரோக்கியம்; ஆரோக்கியமும், அனைத்துவிதமான வசதி வாய்ப்புகளும் பெருகும். நல்ல பணியாளர்கள் அமைவர். மனைவியின் ஒத்துழைப்பால் மன மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்திற்காகச் செல்லும் வெளிநாட்டுப் பயணங்களால் இலாபம் அதிகரிக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். நல்ல சந்ததிகள் உருவாகும்.

    தொழில் மற்றும் வியாபாரம்தொழிலில் இருந்தவந்த மந்த நிலைகள் மாறி தொழில் சூடுபிடிக்கும்.  வியாபாரத்தில் புதிய நுணுக்கங்களைப் புகுத்தி அதன் மூலமாக அதிக லாபமடையலாம். தாதுப் பொருட்கள், உதிரிப்பாகங்கள் அல்லது மென்பொருள் துறைகளில் விற்பனை சூடுபிடிக்கும். அதிக விளைச்சல் காரணமாக விவசாயிகளுக்கு இலாபம் அதிகரிக்கும். தேங்கிக்கிடந்த பொருட்கள் விற்பனையாகி இலாபம் பெருகும்.

        பெண்கள்பணிபுரியும் பெண்களுக்கு அதிகாரிகளால் நல்ல எதிர்காலம் அமையும்திட்டமிடப்படி புனிதப் பயணங்கள் மகிழ்ச்சிகரமாகவும், வெற்றிகரமாகவும்  அமையும். பொறுப்பற்ற பிள்ளைகளால் மனஅமைதி குறையும். சிலர் தங்கள் பணிகளில் ஏற்படும் பிரச்சனைகளைத் தங்கள் சாமர்த்தியத்தால் முறியடித்து முன்னேறுவர்.

    மாணவர்கள் ; மாணவர்கள் நன்கு படித்து தேர்வுகளில் வெற்றிபெற முடியும்கருத்துடன், கவனமாகப் படித்தல் அவசியம்எந்தக் ஒரு காரியத்தையும் நாளைக்கென்று ஒத்திப் போடாமல் இன்றே செய்து முன்னேற முயலவேண்டும். விளையாட்டுத் துறையில் ஆர்வமுள்ள மாணவர்கள் வெற்றிகளைக் குவிப்பர்.
 
     சந்திராஷ்டமம்;- ஜனன ஜாதகப்படி இராசிக்கு அட்டமத்தானத்தில் கோசாரச் சந்திரன் சஞ்சரிக்கும் காலமே சந்திராஷ்டம காலமாகும்இக் காலத்தில் சிக்கல்களும், சிரமங்களும் ஏற்படலாம். தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 09 – 09 - 2014 இரவு 10 – 05 மணிமுதல் 11 – 09 - 2014 இரவு 1 – 30  மணி வரை ஆகும். இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.

    அதிர்ஷ்டக் எண்கள்;- 1, 4, 5, 6 மற்றும் 9 ஆகும். சாதகமான எண் 3 ஆகும். அனுகூலமற்ற எண்கள் 2, 7 மற்றும் 8 ஆகும்.

    அதிர்ஷ்ட நிறம்;- ஆரஞ்சு, சிகப்பு மற்றும் பச்சை, க்ரீம், ஆகும். தவிர்க்க வேண்டிய நிறங்கள் நீலம், வெள்ளை மற்றும் கருப்பு ஆகும்.

    அதிர்ஷ்டக் கற்கள்;- தங்கத்தில்  பதிக்கப்பட்ட மாணிக்கம் அல்லது மரகத மோதிரத்தைத் தங்கத்தில் பதித்து ஞாயிற்றுக் கிழமையன்று, பூஜைக்குப் பிறகு வலது கை மூன்றாவது விரலில் அணிவது உத்தமம்.
    
ஆகாதஇராசிமீனம், மாதம்ஆடிகிழமைபுதன், நட்சத்திரம் -- மூலம், திதிகள்திருதியை, அஷ்டமி மற்றும் திரயோதசி ஆகும். யோகம் --  திருதி, கரணம் -- பவம்  ஆகும்.

    பரிகாரம்;- தொடர்ந்து அர்த்தநாரீஸ்வர்ரை  நெய்த் தீபம் ஏற்றிவர, துன்பங்கள் தூர விலகும். சூரிய நமஸ்காரம் செய்தல்,சிகப்பு ஆடையணியவும், சிகப்பு மலர்களால் அர்ச்சித்தலும், கோதுமைதானம் அல்லது சிகப்புப் பசு தானம் செய்வதும் தோஷநிவர்த்தி தரும்

கன்னி

( உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)

( இராசி  அறியாதவர்கள் பலன் அறிய டோ, , பி, பூ, , , , பே, போ )

     மாறக்கூடிய மனமுடையவரும்எதையும் ஒழுங்காகத் திட்டமிட்டுச் செய்பவருமான கன்னிராசி வாசகர்களே!

    தங்கள் இராசியதிபதி புதன் கல்வியில் தடையும், சகோதர விரோதமும் ஏற்படும். ஆயினும் இலாபத்தில் குரு இருப்பதால் செல்வம் சேரும், அரசியல் அதிகாரம் உண்டாகும். உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். பெரும் புள்ளிகளின் நட்பின் காரணமாக முன்னேற்றம் அடைவர். நல்ல சந்ததி ஏற்படும். பணம் பல வழியிலும் பணம் குவியும். வெளிநாட்டுப் பயணம் ஏற்படும். சிலருக்கு வீண் செலவுகளும், தந்தைக்கு உடல் பாதிப்பு ஏற்படும். சுக்கிரன், மணவாழ்க்கையில் மகிழ்ச்சியையும், செல்வாக்கையும், கௌரவத்தையும் தருவார்.  தங்களுக்கு உதவிகரமான நண்பர்களையும், நல்ல செயல்பாடுகளைச் செய்யும் நிலையையும், புகழையும் தருவார்.  எடுத்த காரியங்களில் வெற்றிகளையும் தருகிறான். செவ்வாய் சிலருக்கு மனநிம்மதியைக் குறைக்கலாம். கேதுவின் அமர்வு சிலருக்கு முறைமீறிய காதலைத் தந்து, கட்டாயத் திருமணத்தில் முடியலாம்.   வேண்டாத விவகாரங்களில் மூக்கை நுழைக்காமல் வாழ்க்கையில்  எச்சரிக்கையுடன் நடப்பது நல்லது. மொத்தத்தில் கன்னிராசி அன்பர்களுக்கு 60 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.

    குடும்பம் மற்றும் ஆரோக்கியம் ; குடும்பத்தில் சுகசௌகரியங்கள் பெருகும். பணவரவு அதிகரிக்கும், புதிய நண்பர்களால் சந்தோஷம் கூடும். இனிய பயணங்களால் இன்பம் சேரும். நல்ல செய்திகள் வந்து சேரும். செலவுகளை கட்டுக்குள் வைத்திருப்பது நல்லது.

    தொழில் மற்றும் வியாபாரம் ; கடன் தொல்லைகள் தலைதூக்கினாலும், பிற்பகுதியில் நிலைமை சீரடையும். அரசுப் பணியிலுள்ளவர்களுக்கு பதவிமாற்றம் அல்லது இடமாற்றம் ஏற்படலாம். வியாபாரத்தை அதிகரிக்கப் புதிய யுக்திகளைக் கையாள்தல் அவசியம்.

    பெண்கள் ;-  பணிபுரியும் பெண்களுக்குத் தங்கள் பணிகளில் முழுத் திருப்தி ஏற்படும். உயர் அதிகாரிகளின் உதவியால் மன உழைச்சல்கள் குறையும். தேவையற்ற செலவுகளைக் குறைத்தால், கடன்கள் கட்டுக்குள் இருக்கும்புதிய சொத்துக்கள் வாங்கும்போது எச்சரிக்கை அவசியம்அது தொடர்பான அனைத்து ஆவணங்களையும்  சரிபார்த்துப் பத்திரப் பதிவு செய்தால் ஏமாறும் வாய்ப்பு குறையும்.

    மாணவர்கள் ;- மாணவர்கள்  மிகுந்த அக்கறையுடன் ஆசிரியர்களின் வழிகாட்டுதல்படி நடந்தால் மட்டுமே அதிக மதிப்பெண்கள் பெறமுடியும். சுயமுயற்சியும், தன்நம்பிக்கையுமே மாணவர்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும். தங்களின் கடின உழைப்பால், விளையாட்டுத் துறையில் மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் இதுவரை எட்டியிராத உயரத்தினை எட்டுவர்.                                                                                                                                                   
    சந்திராஷட்டமம்; ஜனன ஜாதகப்படி இராசிக்கு அட்டமத்தானத்தில் கோசாரச் சந்திரன் சஞ்சரிக்கும் காலமே சந்திராஷ்டம காலமாகும்இக் காலத்தில் சிக்கல்களும், சிரமங்களும் ஏற்படலாம். தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 11 – 09 - 2014 இரவு 1 - 31 மணிமுதல் 14 – 09 - 2014 காலை 6 – 44  மணி வரை ஆகும். இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.

    அதிர்ஷ்ட எண்கள்;- 2, 3, 5, 6 மற்றும் 7 ஆகும். சாதகமான எண்கள் 4 மற்றும் 9 ஆகும். அனுகூலமற்ற எண்கள் 1 மற்றும் 8 ஆகும்.

    அதிர்ஷ்ட நிறம்;- மஞ்சள், வெள்ளை மற்றும் பச்சை ஆகும். தவிர்க்க வேண்டிய நிறங்கள் சிகப்பு, வெள்ளை மற்றும் கருப்பு ஆகும்.

    அதிர்ஷ்டக் கற்கள்;- புஷ்பராகம், முத்து, பச்சை, வைரம், மரகதம் இவற்றிலொன்றை தங்கத்தில்  பதித்த மோதிரத்தைத் புதன் கிழமையன்று, பூஜைக்குப் பிறகு வலது கை நான்காவது விரலில் அணிவது உத்தமம்.

    ஆகாதஇராசிசிம்மம், மாதம்புரட்டாசி, கிழமைசனி, நட்சத்திரம் -- திருவோணம், திதிகள்பஞ்சமி, தசமி மற்றும் பௌர்ணமி அல்லது அமாவாசை ஆகும். யோகம் --  சுக்கிலம், கரணம் -- கௌலவம்  ஆகும்.

    பரிகாரம்;- தொடர்ந்து ஶ்ரீ மஹாலட்சுமியை  நெய்த் தீபம் ஏற்றிவர, துன்பங்கள் தூர விலகும். சூரிய நமஸ்காரம் செய்தல், பச்சை வண்ண ஆடையணியவும்,  மலர்களால் அர்ச்சித்தலும், ஸ்வர்ணதானம் அல்லது துவரைதானம் செய்வதும் தோஷநிவர்த்தி தரும்.

No comments:

Post a Comment