Search This Blog

Thursday 4 September 2014

ஜோதிட வாசல் மாத இதழில் வெளியான 2014 - செப்டம்பர் மாத்த்திற்கான பலன்கள்.


ஜோதிட வாசல் மாத இதழில் வெளியான 2014 - செப்டம்பர் மாத்த்திற்கான பலன்கள்.


மகரம் - கும்பம் - மீன இராசிக்கான பலன்கள்

மகரம்

( உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )

( இராசி  அறியாதவர்கள் பலன் அறிய போ, , ஜி, ஜூ, ஜே, ஜோ, கா, , கீ )

   தியாக குணம் பொருந்திய, பேரறிவு பெற்றமகரராசி வாசகர்களே !

    தங்கள் இராசிநாதன் கர்ம பாவத்தில் அமர்ந்து பயனற்ற வேலைகளில் ஈடுபடுத்துவான். வீண்செலவுக்கும் வித்திடுவான். இணைந்திருக்கும் செவ்வாய் காரியத்தடைகளையும், வெளிநாட்டுப் பயணங்களையும், கடின உழைப்பின் பேரில் முயற்சிகளில் வெற்றி தருவான். ஆயினும், களத்திர பாவத்தில் உள்ள குருவால் செல்வம் செழிக்கும். குடும்பத்தில் குதூகலமும், அனைத்துவகை இன்பமும், நல்லுணவும், நிம்மதியான தூக்கமும், வஸ்திர லாபமும் கிடைக்கும். பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள்.  நறுமணப் பொருட்களும், ஆடம்பர சாதனங்களும், திருமணமும், மணவாழ்க்கையில் மகிழ்ச்சியும், கல்வியிற் தேர்ச்சியும், புத்திர பாக்கியமும், புதிய பதவிகளும் மற்றும் கௌரவம் ஆகிய அனைத்தையும் தருவான் சுக்கிரன். சிலருக்குக் காயங்கள் ஏற்படலாம். சொத்துச் சேர்க்கையும், எல்லா நிலையிலும் முன்னேற்றங்களும், வியாபாரத்தில் வெற்றியும் ஏற்படும். சிலருக்கு மனக்குழப்பங்களும் ஏற்படலாம். மொத்தத்தில் மகரராசி அன்பர்களுக்கு 65 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.

    குடும்பம் மற்றும் ஆரோக்கியம் ;- குடும்ப நிகழ்வுகள் கணவன், மனைவிக்குள் மகிழ்ச்சி தருவனவாய் இருக்கும். மனைவி  சொல் கேட்டுக் கணவன் நடப்பான். குழந்தைகளின் சுகவாழ்வுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் குவிப்பீர்கள். சொல் வாக்கால், செல்வாக்குப் பெறுவீர்கள். பள்ளிக்கான செலவுகள் அதிகரிக்கும்.

    தொழில் மற்றும் வியாபாரம் ;-  வெளிநாட்டுப் பயணங்கள் வெற்றி தரும். தொழிலில் முன்னேற்றங்காண புதிய தொழில் நுட்பங்களைப் புகுத்தும் சூழ்நிலை உருவாகும். கார் போன்ற சொகுசு வகனங்கள் கிடைக்கும். சிலருக்குப் பணியில் அலைச்சல்கள் அதிகமாகும். பதவிப் பிரச்சனைகளும் ஏற்படலாம். ஓயாத உழைப்பு களைப்பை அதிகரிக்கும். பங்குச்சந்தை விவகாரங்களில் யோசித்து இறங்கினால்  பொருள் இழப்பைத் தவிர்க்கலாம்.

    பெண்கள் ;- அரசுப் பணிபுரியும் பெண்கள், தாங்கள் கேட்ட இடத்திற்க்கு இடமாற்றம் கிடைக்கும். வீட்டு மனைவிகள் தங்கள் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை கவனிப்பதால் ஓய்வின்றி இருப்பர். குழந்தைகளின் போக்கு கவலையளிக்கும். குடும்பத்துடன் பல புண்ணிய ஸ்தலங்களுக்குச் செலவீர்கள். மகளிர் குழுக்களில் உள்ள பெண்களுக்குப் புதிய கடன்கள் கிடைக்கும்.
    மாணவர்கள் ;- தங்கள் முழுத் திறமைகளையும் வெளிக்காட்டிப் படிக்க வேண்டிய மிக முக்கியமான  காலமாகும். கவனமாகப் படித்தால் மட்டுமே  அதிக மதிப்பெண்கள் பெறமுடியும். விளையாட்டு வீரர்கள் பல போட்டிகளில் பங்கு பெற்று பல பரிசுகளைப் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்ப்பர். நல்ல நண்பர்களோடு பழகுதல் நலம். இல்லையெனில் தீயவழிகளில் சென்று முன்னேற்றம் தடைப்பட நேரும்.

     சந்திராஷ்டமம் ; ஜனன ஜாதகப்படி இராசிக்கு அட்டமத்தானத்தில் கோசாரச் சந்திரன் சஞ்சரிக்கும் காலமே சந்திராஷ்டம காலமாகும்இக் காலத்தில் சிக்கல்களும், சிரமங்களும் ஏற்படலாம். தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 21 – 09 - 2014 பகல் 11 - 53   மணிமுதல் 23 – 09 - 2014 இரவு 11 – 20  மணி வரை ஆகும். இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.

    அதிர்ஷ்ட எண்கள்;- 6, 9 மற்றும் 8 ஆகும். அனுகூலமற்ற எண் 3 ஆகும். மற்ற எண்கள் அனுகூலமானவையாகும்.

    அதிர்ஷ்ட நிறம்;- நீலம், சிகப்பு, கருப்பு மற்றும் வெள்ளை ஆகும். தவிர்க்க வேண்டிய நிறங்கள் மஞ்சள்  மற்றும் க்ரீம் ஆகும்.

    அதிர்ஷ்டக் கற்கள்;- நீலக்கல்லை தங்கத்தில் அல்லது பஞ்சலோகத்தில் பதித்து மோதிரத்தை சனிக் கிழமையன்று, பூஜைக்குப் பிறகு வலது கை இரண்டாவது விரலில் அணிவது உத்தமம்.

    ஆகாதஇராசிசிம்மம், மாதம் - ஆவணி, கிழமைசெவ்வாய், நட்சத்திரம் -- ரோஹிணி, திதிகள்சதுர்த்தி, நவமி மற்றும் சதுர்த்தசி  ஆகும். யோகம் --  வைதிருதி, கரணம் -- சகுனி  ஆகும்.

   பரிகாரம்;- தொடர்ந்து ஶ்ரீ ஆஞ்சனேயரை வணங்கி,  நெய்த் தீபம் ஏற்றிவர, துன்பங்கள் தூர விலகும். சூரிய நமஸ்காரம் செய்தல், கரிய வண்ண ஆடையணியவும்,  நீல மலர்களால் அர்ச்சித்தலும், இந்திரநீலக்கல் அணியவும் கருப்புப் பசு அல்லது எள்ளுத்தானம் செய்வதும் தோஷநிவர்த்தி ஆகும்.

கும்பம்

( அவிட்டம் – 3,4 பாதங்கள்சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)

( இராசி  அறியாதவர்கள் பலன் அறிய கு, கூ, கோ, , ஸீ, ஸூ, ஸே,ஸோ, தா )

     எதையும் சரியென்று, நியாயம் என்று பட்டால் மட்டுமே செய்யக்கூடிய கும்பராசி வாசகர்களே!

     தங்கள் இராசிநாதன் சனியால் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் வெற்றி அடையும். கட்டளை இடும்படியான பெரிய பதவிகள் தேடிவரும். செல்வம் சேரும். நல்ல பணியாட்கள் அமைவர். இணைந்திருக்கும் செவ்வாய் திருமணம், மக்கட்பேறு, கால்நடைச் செல்வம் மற்றும் பால்வளம் ஆகியவற்றைத் தருவான். புதன் பிறரைக் கவரும் பொலிவும், அழகும் தருவார். அரசுப் பணி மற்றும் அரசு ஆதரவு கிடைக்கும். சூரியன், காரியத் தடைகளைத் தரலாம். சுக்கிரன், மனதிற்குப் பிடித்தபடி எல்லாம் நடக்க அருள்புரிவான். பலவீடுகளும், பணக்கார மனைவியும் அமைவாள். குருவால் பங்காளிகள் கை ஓங்கும். அட்டம இராகு சிலருக்கு இனம்புரியாத பயத்தைத் தரலாம்.   பயணங்களையும் அதனால் செலவுகளையும் ஏற்படுத்துவார். சிலருக்குக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படலாம். மேற்படிப்புக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும்கோவில், குளம் என புனித யாத்திரைகள் மேற்கொள்வர். மதசம்பந்தமான மற்றும் தத்துவ விஷயங்களைப் பற்றிப் பேசுவர். நல்ல நண்பர்கள் கிடைப்பர். அரசால் அனுகூலங்கள் கிடைக்கும். அறிவு விருத்தியாகும். உயர்பதவிகளில் உள்ளவர்களின் உதவிகள் கிடைக்கும்.  மொத்தத்தில் கும்பராசி அன்பர்களுக்கு 65 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்,   

     குடும்பம் மற்றும் ஆரோக்கியம் ;-   குடும்பத்தில் உடன்பிறப்புக்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்பேச்சில் கவனம் தேவை. கணவன் மனைவி உறவு நல்ல விதமாக அமையும். நீண்ட காலமாக வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். சொன்ன சொல் கேட்காத பிள்ளைகளால் சோர்வு ஏற்படும்.

    தொழில் மற்றும் ஆரோக்கியம் ;-  தொழில் மூலம் கைநிறையச் சம்பாதிக்கும் பெண்கள் புதிய பொன்நகைகள் வாங்குவார்கள். தங்கள் மீது நல்லெண்ணம் கொண்ட கூட்டாளிகளால் ஏற்பட்ட பிரச்சனைகள், நண்பர்களால் சுமுகமாகத் தீர்த்து வைக்கப்படும்வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்க கடுமையாக உழைக்க வேண்டிய நிலை ஏற்படும்.

    பெண்கள் ;- நன்றாக உழைத்துத் தங்கள் பணிகளில் வெற்றி மேல்  வெற்றியடைவர்பணியிடங்களில் பிரச்சனை எழாமல் இருக்க தேவையற்ற பேச்சுக்களைக் குறைப்பது நல்லது. வெளிநாடுகளில் வேலை கிடைக்க வாய்ப்புண்டு. சிலர் தனிக்குடித்தனம் செல்ல முற்படுவர். பெரியவர்களை அனுசரித்து நடந்தால் பெருமை சேரும்.

    மாணவர்கள் ;- மாணவ, மாணவிகளின் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்தேவையற்ற காதல் விவகாரங்களில் ஈடுபடாமல் சிரத்தையுடன் படித்தால் தேர்வுகளில் வெற்றி நிச்சியம். வாகனங்களில் செல்லும்போது கவனமாகச் செல்லுவதால் விபத்தைத் தவிர்க்கலாம். விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்று வெற்றிகளைக் குவித்து பள்ளிக்குப் பெருமை சேர்ப்பர்.

   சந்திராஷ்டமம் ; ஜனன ஜாதகப்படி இராசிக்கு அட்டமத்தானத்தில் கோசாரச் சந்திரன் சஞ்சரிக்கும் காலமே சந்திராஷ்டம காலமாகும்இக் காலத்தில் சிக்கல்களும், சிரமங்களும் ஏற்படலாம். தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 23 – 09 - 2014 இரவு 11 - 20  மணிமுதல் 26 – 09 - 2014 காலை 09 – 12  மணி வரை ஆகும். இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.

   அதிர்ஷ்ட எண்கள்;- 3, 9, 2 மற்றும் 7 ஆகும். அனுகூலமற்ற எண்கள் 1, 4, 5, மற்றும் 8 ஆகும்அனுகூலமான எண் 6 ஆகும்.

    அதிர்ஷ்ட நிறம்;- மஞ்சள், சிகப்பு, வெள்ளை மற்றும் க்ரீம்  ஆகும். தவிர்க்க வேண்டிய நிறங்கள் பச்சை  மற்றும் நீலம் ஆகும்.

    அதிர்ஷ்டக் கற்கள்;- நீலக்கல்லை தங்கத்தில் அல்லது பஞ்சலோகத்தில் பதித்து மோதிரத்தை சனிக் கிழமையன்று, பூஜைக்குப் பிறகு வலது கை இரண்டாவது விரலில் அணிவது உத்தமம்.

   ஆகாதஇராசிமகரம், மாதம் - வைகாசி, கிழமைவியாழன், நட்சத்திரம் -- திருவாதிரை, திதிகள்திருதியை, அஷ்டமி மற்றும் திரோயதசி  ஆகும். யோகம் --  கண்ட, கரணம் -- கிம்ஸ்துக்னம்  ஆகும்.

    பரிகாரம்;- தொடர்ந்து ஶ்ரீ சாஸ்தாவை வணங்கி,  நெய்த் தீபம் ஏற்றிவர, துன்பங்கள் தூர விலகும். சூரிய நமஸ்காரம் செய்தல், கரிய வண்ண ஆடையணியவும்,  நீல மலர்களால் அர்ச்சித்தலும், இந்திரநீலக்கல் அணியவும் கருப்புப் பசு அல்லது எள்ளுத்தானம் செய்வதும் தோஷநிவர்த்தி ஆகும்.

மீனம்

( பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)

( இராசி  அறியாதவர்கள் பலன் அறியதீ, து, , , ஶ்ரீ, தே,தோ, ச்ச, சீ )

     ஓய்வு அற்றவரும், மனிதாபிமானம் உடையவரும், பிறருக்கு உதவுபவருமான மீன இராசி வாசகர்களே !

    தங்கள் இராசிநாதன் குரு மனதில் சந்தோஷத்தையும், நல்ல நண்பர்களின் அருகாமையையும், புத்திர பாக்கியத்தையும், பகை வெல்லுதலையும், அரசு அனுகூலங்களையும், அதிக சொத்து சேர்க்கையையும், அறிவு விருத்தியையும், அதிக இலாபங்களையும், எதிலும் வெற்றியையும், உயர் அதிகாரிகளின் உதவிகளையும் அள்ளித் தருவார். ருண பாவத்தில் உள்ள சுக்கிரன் வயிற்றுவலி போன்ற உபாதைகளைத் தருவார். முற்பகுதியில் சூரியன் தன விருத்தி தருவார். வங்கிக் கணக்கில் ரொக்க இருப்பு கூடும். நெடுந்தூரப் பயணங்கள் இலாபம் தரும். பயிர் விளைச்சல்கள் கூடும். இல்லறத்திலும் மகிழ்ச்சியையும், தனலாபத்தையும், அதிக வருமானத்தையும் அள்ளி வழங்குகிறார்பிற்பகுதியில் வீண் பயணங்களும், வீண் அலைச்சல்களும் ஏற்படும். அட்டமச் சனி கடின உழைப்பைத் தரும். ஞானம் அல்லது பக்தி மார்க்கத்தில் மனம் செல்லும். மொத்தத்தில் மீனராசி அன்பர்களுக்கு 65 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.
    குடும்பம் மற்றும் ஆரோக்கியம் ;- சிலருக்கு குடும்பச் சொத்து கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும், மனைவியின் ஒத்துழைப்பின்மை மன அமைதியைக் குறைக்கும் . எனினும் குழந்தைகளால் மனமகிழ்ச்சி ஏற்படும். உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். கோவில் திருப்பணி செய்யும் பாக்கியம் கிடைக்கும்.

   தொழில் மற்றும் வியாபாரம் ;- தொழிலில் புதிய யுக்திகளால்  இலாபம் அதிகரிக்கும். தொழிற்சாலையில் புதிய விரிவாக்கத் திட்டங்களை நடைமுறைப் படுத்தலாம். தீயணைக்கும் கருவிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவை நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்து கொள்வது நல்லது. அரசுப் பணியாளர்களுக்குத் தங்கள் உயர் அதிகாரிகளின் நெருக்கத்தால் பதவி உயர்வும், இடமாற்றமும் சுலபமாகக் கிடைக்கும்.

    பெண்கள் ;- பணிபுரியும் பெண்கள் தங்கள் உயர் அதிகாரிகளின் சகாயத்தால் துறை ரீதியாகத் தங்களுக்கு வேண்டியதைச் சாதித்துக் கொள்வர். தகுந்த முடிவுகள் எடுத்தால் மட்டுமே புதிய திட்டங்களை நிறைவேற்ற முடியும்கணவனைப் புரிந்துகொண்டு அவன் போக்கில் விட்டுப்பிடிப்பது நல்லது.

    மாணவர்கள் ;- உயர்கல்வி மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தவேண்டும். இதுவே   நல்ல மதிப்பெண் பெற சரியான வழியாகும். முகநூல் மற்றும் ட்வீட்டர் போன்ற  பொழுதுபோக்குகள் மற்றும் தேவையற்ற இன்பப் பயணங்கள் சிலரின் வாழ்க்கைப் பயணத்தையே மாற்றி விடக் கூடும். எனவே, வெற்றிகளைக் குவிக்க விழிப்புடன் செயல்பட்டால் இலக்குகளை எளிதில் எட்டலாம்
                                                                                        சந்திராஷ்டமம் ; ஜனன ஜாதகப்படி இராசிக்கு அட்டமத்தானத்தில் கோசாரச் சந்திரன் சஞ்சரிக்கும் காலமே சந்திராஷ்டம காலமாகும்இக் காலத்தில் சிக்கல்களும், சிரமங்களும் ஏற்படலாம். தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 26 – 09 - 2014 காலை   9  - 13 மணிமுதல் 28 – 09 - 2014 மாலை 04 – 38  மணி வரை ஆகும். இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.

    அதிர்ஷ்ட எண்கள்;- 1, 4, 3 மற்றும் 9 ஆகும். அனுகூலமற்ற எண் 8 ஆகும்அனுகூலமான எண்கள் 2, 5, 6 ஆகும்.

   அதிர்ஷ்ட நிறம்;- மஞ்சள், சிகப்பு, ரோஸ் மற்றும் ஆரஞ்ச்  ஆகும். தவிர்க்க வேண்டிய நிறம் நீலம் ஆகும்.

    அதிர்ஷ்டக் கற்கள்;- புஷ்பராகக்கல்லை தங்கத்தில்  பதித்து மோதிரத்தை வியாழக்கிழமையன்று, பூஜைக்குப் பிறகு வலது கை முதலாவது விரலில் அணிவது உத்தமம்.

    ஆகாதஇராசிகும்பம், மாதம் - பங்குனி, கிழமைவெள்ளி, நட்சத்திரம் -- ஆயில்யம், திதிகள்பஞ்சமி, தசமி, அம்மாவசை மற்றும் பௌர்ணமி  ஆகும். யோகம் --  வஜ்ரம், கரணம் -- சதுஷ்பாதம் ஆகும்.

    பரிகாரம்;- தொடர்ந்து ஶ்ரீ லட்சுமி நரசிம்மரை வணங்கி,  நெய்த் தீபம் ஏற்றிவர, துன்பங்கள் தூர விலகும். சூரிய நமஸ்காரம் செய்தல், மஞ்சள் வண்ண ஆடையணியவும்,  மஞ்சள் மலர்களால் அர்ச்சித்தலும், புஷ்பராகக்கல் அணியவும் கொண்டைக் கடலைதானம் செய்வதும் தோஷநிவர்த்தி ஆகும்.

ஜோதிட ப்ரவீணா. எட்டயபுரம். எஸ். விஜயநரசிம்மன்.
எம். எஸ்ஸி. (அப்ளைடு அஸ்ட்ராலஜி)



  

No comments:

Post a Comment