Search This Blog

Thursday 4 September 2014

துலாம் - விருச்சிகம் - தனுசு இராசிகளுக்கான பலன்கள்

ஜோதிட வாசல் மாத இதழில் வெளியான செப்-2014 க்கான மாதபலன்கள்

துலாம் - விருச்சிகம் - தனுசு இராசிகளுக்கான பலன்கள்.

துலாம்

( சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)

( இராசி  அறியாதவர்கள் பலன் அறிய , ரி, ரு, ரே, ரோ, , தி, து, தே )

      துலாக்கோல் போல் சமமான நிலையுடையவரும், சமுதாயத்தை சீர்திருத்தப் பிறந்தவருமான துலாராசி வாசகர்களே !

    தங்கள் இராசிநாதன் இலாப பாவத்தில் அமர்ந்து  சுகத்தையும், தனலாபத்தையும், புதிய நண்பர்கள் மற்றும் சந்தோஷத்தையும் தருவார். இனிய பயணங்களால் இன்பம் சேரும். நல்ல செய்திகள் வந்து சேரும். செலவுகளை கட்டுக்குள் வைத்திருப்பது நல்லது. உறவுகளுக்கு உயர்வைத்தரும் புதன், பலரின் நட்பு மற்றும் உதவி இருந்தும் காரியத் தடைகளைத் தருவான். முற்பகுதியில் சூரியன், பலவழிகளிலும் பணவரவையும், அரசு மூலம் ஆதாயத்தையும், மகிழ்ச்சி, உயர்கின்ற அந்தஸ்து, பிறர் காட்டும் மரியாதை அனைத்தும் கூடும். பிற்பகுதியில் குடும்ப ஆரோக்கியத்தில் சிறு பாதிப்பை  ஏற்படுத்தலாம். சிலருக்குச் செவ்வாய் மனவருத்தத்தையும், சனி பிரிவையும், குரு இடமாற்றத்தையும் தந்தாலும், கேது வித்வத்துவத்தையும், வாக்கு வன்மையையும் தருவார். ஞான முயற்சியும், நற்சிந்தனையும் உயர்வைத்தரும். உங்கள் திறமைகளைக் காட்டும் சுயமுயற்சிகளை, தன்னம்பிக்கையைக் கூட்டி தைரியத்தையும் அளிப்பார். ஒருவர் நன்மை தந்தால் மற்றவர் தீமை செய்வதுதானே கிரகங்களின் இயல்பு, எனவே,  கவலை வேண்டாம். மொத்தத்தில் துலாராசி அன்பர்களுக்கு 55 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.

    குடும்பம் மற்றும் ஆரோக்கியம் ;- அன்பாலும், பாசத்தாலும் குடும்பத்தில் நிலவும் குழப்பங்கள் சீராகும். பொறுமையுடன் வாழ்ந்தால் பெருமை சேரும். எதிர்பார்ப்புக்கு அதிகமாகவே வீட்டுத் தேவைகளுக்குப் பணவரவு போதுமானதாக அமையும். எதிரிகள் அடங்குவர். கஷ்டங்களும், கவலைகளும் மறைந்து, தெளிவும், தெம்பும் அதிகரிக்கும்.

    தொழில் மற்றும் வியாபாரம் ;- புதிய தொழில் நுட்பங்களால் தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால்  தொழில் அபிவிருத்தியடையும். விவசாயிகளுக்குத்  தேவையான கடனுதவிகள் விரைந்து கிடைக்கும். விளைச்சல் பெருகி இலாபமும் அதிகரிக்கும். கடுகு, உளுந்து மற்றும் கோதுமை ஆகியவற்றின் விற்பனை அதிகரிக்கும். பிறருக்குக் கொடுக்கப்பட்ட, நெடுநாளையக் கடன்கள் வசூலாகும்.

    பெண்கள் ;- மேலதிகாரிகளின் மேன்மையான ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது மேன்மையைத் தரும். சிலரின் காதல் விவகாரங்களில் ஏமாற்றங்கள் தலை தூக்கலாம். விரும்பியபடி வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்பட்டு அதனால் ஆதாயம் பெருகும். வீட்டில் விருந்தினர் வருகையால் வீட்டுப் பெண்களுக்கு வேலைப்பளு கூடும்.

    மாணவர்கள் ;- காலம் பொன் போன்றது எனவே, மாணவர்கள் முகநூல் மற்றும் வலைத் தளங்களில் பொழுதைக் கழிக்காமல் படிப்பில் கவனம் செலுத்தி  அதிக மதிப்பெண்கள் பெற முயலவேண்டும். பெற்றோர்களின் கஷ்டங்களை உணர்ந்தாலன்றி வாழ்க்கையில் எந்தவித முன்னேற்றமும் அடையமுடியாது. விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்ப்பர் சிலர்.

    சந்திராஷ்டமம் ; ஜனன ஜாதகப்படி இராசிக்கு அட்டமத்தானத்தில் கோசாரச் சந்திரன் சஞ்சரிக்கும் காலமே சந்திராஷ்டம காலமாகும்இக் காலத்தில் சிக்கல்களும், சிரமங்களும் ஏற்படலாம். தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 14 – 09 - 2014 காலை 6 - 45 மணிமுதல் 16 – 09 - 2014 பகல் 2 – 23  மணி வரை ஆகும். இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.

    அதிர்ஷ்ட எண்கள்;- 1, 2, 4,  மற்றும் 7 ஆகும். சாதகமான எண் 8 ஆகும். அனுகூலமற்ற எண்கள் 5, 6, 3 மற்றும் 9 ஆகும்.

    அதிர்ஷ்ட நிறம்;- ஆரஞ்ச், வெள்ளை மற்றும் சிகப்பு ஆகும். தவிர்க்க வேண்டிய நிறங்கள் பச்சை மற்றும் மஞ்சள் ஆகும்.

    அதிர்ஷ்டக் கற்கள்;-   வைரத்தைதங்கத்தில் அல்லது பிளாட்டினத்தில் பதித்த மோதிரத்தைத் வெள்ளிக் கிழமையன்று, பூஜைக்குப் பிறகு வலது கை மூன்றாவது விரலில் அணிவது உத்தமம்.

    ஆகாதஇராசிகன்னி, மாதம்தை, கிழமைவியாழன், நட்சத்திரம் -- சதயம், திதிகள்சதுர்த்தி, நவமி மற்றும் சதுர்த்தசி அல்லது அமாவாசை ஆகும். யோகம் --  சுக்கிலம், கரணம் -- தைதுலம்  ஆகும்.

    பரிகாரம்;- தொடர்ந்து ஶ்ரீ இராமபிரானை வணங்கி,  நெய்த் தீபம் ஏற்றிவர, துன்பங்கள் தூர விலகும். சூரிய நமஸ்காரம் செய்தல், வெள்ளை வண்ண ஆடையணியவும்,  வெள்ளை மலர்களால் அர்ச்சித்தலும், வெள்ளிதானம் அல்லது மொச்சையைத் தானம் செய்வதும் தோஷநிவர்த்தி தரும்.

விருச்சிகம்

( விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )

( இராசி  அறியாதவர்கள் பலன் அறிய தோ, , நி, நு, நே, நோ, , , யு )

    உண்மையானநம்பத்தகுந்த,  விருச்சிகராசி வாசகர்களே !

    தங்கள் இராசிநாதன் செவ்வாய் பொருளாதார முன்னேற்றம் போன்ற நற்பலன்களை அளிக்கிறார். பூமிலாபம், ஆண்வாரிசு உருவாகுதல், இன்பம், சந்தோஷம், மணவாழ்வில் மகிழ்ச்சி, நவீன மற்றும் சுகபோகத்திற்கான சாதனங்கள் கிடைத்தல் ஆகிய நன்மைகளையும் தருகிறார். புதன் சிறு சங்கடங்களைந் தந்தாலும், சுக்கிரன் நண்பர்களின் மூலமாக உதவிகளையும், ஆதாயங்களையும், பதவிகளையும் அளிக்கிறார். அலைசல்கள் அதிகரிக்கும். சிலருக்குப் பயணத்தின்போது  விபத்துக்கள் ஏற்படலாம். பணியாட்களால் உதவி கிடைக்கும். சிலர் ரகசிய வேலைகளில் ஈடுபடுவர். மொத்தத்தில் விருச்சிகராசி அன்பர்களுக்கு 50 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.  

     குடும்பம் மற்றும் ஆரோக்கியம் ;- மணவாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும்பழைய பகைகள் நட்பாக மலரும். தந்தையுடன் கருத்துவேறுபாடுகள் ஏற்படலாம்.  சந்ததி விருத்தி ஏற்படும். செயல்திறன் கூடும். அதிகப் புகழும், மனை மூலம் இலாபமும் ஏற்படும். தெய்வபக்தி பெருகும். பல புண்ணியத்தல யாத்திரைகள் மேற்கொள்வர்.

    தொழில் மற்றும் வியாபாரம் ;-  தொழில் மற்றும் வியாபார சம்பந்தமாக தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். தொழிலில் திடீர் திருப்பங்கள் ஏற்படலாம்கூட்டாளிகளை நம்பி புதிய திட்டங்களில் முதலீடு செய்யாதிருப்பது நல்லது. கடன் கொடுத்தவர்கள் கெடுபிடி செய்வர். கரும்பு, உலோகங்கள் மற்றும் கம்பளிப் பொருட்கள் வியாபாரம் அதிக ஆதாயம் தரும்.

    பொருளாதாரத்தில் திருப்தியற்ற நிலை ஏற்படும்வங்கி மூலம் எதிர்பார்த்த வியாபாரத்திற்கான கடன்கள் தடை தாமதிற்குப் பிறகு கிடைக்கும். பங்குச்சந்தையில் யோசித்து முதலீடு செய்வது நல்லது. நிரந்தர சேமிப்புக்களில் முதலீடு செய்வது எதிர்காலத்தில் பயன் தரும். தேவையற்ற சாதனங்களை வாங்க சேமிப்புப் பணத்தை எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

    பெண்கள் ;- பணிபுரியும் பெண்கள்  முழுமனதோடு பணியில் ஈடுபட்ட முடியாதபடி இடைஞ்சல்கள் ஏற்படும். அதன் காரணமாக  எதிர்பார்த்த பதவி உயர்வுகள் மற்றும் முன்னேற்றங்களில் தடைகள் ஏற்படும். குழந்தைகளின் முன்னேற்றம் மனமகிழ்ச்சியை அளிக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் தங்கள்  பணியாளர்களிடம் சுமுகமாக இருப்பது உற்பத்திப் பெருக்கத்திற்கு வழிவகுக்கும்.  இலாபமும் அதிகரிக்கும்.

    மாணவர்கள் ;-  ஆராய்ச்சி அல்லது விளையாட்டு சம்பந்தமான சுற்றுலாப் பயணங்கள் பயனுள்ளதாக அமையும்மாணவர்கள் கவனமாகப் படித்து முன்னேறும் ஆர்வம் கூடும். போட்டி தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் சில தடைகளை எதிர்கொள்வர். காதல் விவகாரங்கள் ஆரம்பத்தில் சில சிக்கல்களைத் தந்தாலும், முடிவில் சாதகமாக அமையும்.

    சந்திராஷ்டமம்; ஜனன ஜாதகப்படி இராசிக்கு அட்டமத்தானத்தில் கோசாரச் சந்திரன் சஞ்சரிக்கும் காலமே சந்திராஷ்டம காலமாகும்இக் காலத்தில் சிக்கல்களும், சிரமங்களும் ஏற்படலாம். தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 16 – 09 - 2014 பகல்   6 - 24 மணிமுதல் 18 – 09 - 2014 இரவு 12 – 22  மணி வரை ஆகும். இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.

    அதிர்ஷ்ட எண்கள்;- 3, 9, 2, 4, 1 மற்றும் 7 ஆகும். அனுகூலமற்ற எண்கள் 5, 6,  மற்றும் 8 ஆகும்.

    அதிர்ஷ்ட நிறம்;- ஆரஞ்ச், மஞ்சள், க்ரீம் மற்றும் சிகப்பு ஆகும். தவிர்க்க வேண்டிய நிறங்கள் நீலம், வெள்ளை மற்றும் பச்சை ஆகும்.

    அதிர்ஷ்டக் கற்கள்;-   மஞ்சள் புஷ்பராகத்தை அல்லது செம்பவளத்தை  தங்கத்தில் அல்லது செம்பில் பதித்த மோதிரத்தை செவ்வாய்க் கிழமையன்று, பூஜைக்குப் பிறகு வலது கை நாலாவது விரலில் அணிவது உத்தமம்.

    ஆகாதஇராசிமிதுனம், மாதம் - அய்ப்பசி, கிழமைவெள்ளி, நட்சத்திரம் -- ரேவதி, திதிகள்பிரதமை, சஷ்டி மற்றும் ஏகாதசி  ஆகும். யோகம் --  வியாதீபாதம், கரணம் -- கரஜை  ஆகும்.

    பரிகாரம்;- தொடர்ந்து துர்க்கையை வணங்கி,  நெய்த் தீபம் ஏற்றிவர, துன்பங்கள் தூர விலகும். சூரிய நமஸ்காரம் செய்தல், சிவப்பு வண்ண ஆடையணியவும்,  வெள்ளை மலர்களால் அர்ச்சித்தலும், பவளம் அணியவும் அல்லது சிகப்புக் காளை தானம் செய்வதும் தோஷநிவர்த்தி ஆகும்.

தனுசு

( மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்ராடம் –1,2 பாதங்கள்)

( இராசி  அறியாதவர்கள் பலன் அறிய யே, யோ, , பீ, பூ, , , டா, பே )

    கடவுளுக்குப் பயந்தவரும், அதிகச் செலவாளியும், நேர்மையானவரும்தனுர் ராசி வாசகர்களே!

    தங்கள் இராசிநாதன் குரு, ஆயுள் பாவத்தில் அமர்ந்து அனுகூலமற்ற நிலைகளைத் தந்தாலும், இலாபத்தில் உள்ள செவ்வாய் மற்றும் சனியால் எல்லாமே சுப பலனாகவே நடக்கும் என நம்பலாம். பூமி, வீடு, பயிர் இவற்றால் அதிக தனலாபம் அடைவர். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் இனிய பயணங்களைத் தருவார். புத்திர பாக்கியம், திருமணம் மற்றும் செல்வ வளத்தைப் பெருக்குவார், மனைவி மூலம் பூர்ண சுகமும் கிடைக்கும்அதனால் வாழ்க்கையில் முன்னேற்றங்கள் ஏற்படும். புண்ணியத்தல யாத்திரைகள் செல்வீர்கள். புதிய பதவிகள், அந்தஸ்து உயர்வு, நல்லாரோக்கியம், அதிகாரிகளின் அங்கீகாரம், நல்லவர்களின் நட்பு, சிறப்பு கௌரவங்கள் அனைத்தும் ஏற்படும். சிலர் தவறான வழிகளில் ஈடுபடுவர். பாக்கிய பாவச் சுக்கிரன், விரும்பிய பொருட்களெல்லாம் கிடைக்கும். கல்வியும் புகழும் ஓங்கும்.முற்பகுதியில் தந்தையுடன் சுமுக உறவு இருக்காது. பிற்பகுதியில் சூரியன் உயர்தர வாகனங்களையும், புகழையும் தருவார். பொன், பொருள் சேரும். சிலருக்கு வழக்குகளில் வெற்றி இன்மை, ஈடுபடும் காரியங்களில் தோல்வி ஆகியவை ஏற்படலாம்..  மொத்தத்தில் தனுசு இராசி அன்பர்களுக்கு  75 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.

         குடும்பம் மற்றும் ஆரோக்கியம் ;- புதிய ஆபரணங்களை மனதுக்குப் பிடித்தபடி வாங்குவர். மனை, வீடு மற்றும் வாகன வசதிகள் கிடைக்கும். குழந்தைகள்  மூலமாக மகிழ்ச்சி பெருகும். மனைவியின் மீது பாசம் கூடும். தெய்வபக்தியும், தர்மசிந்தனையும் ஏற்படும். வேண்டுதல்களை நிறைவேற்றப் பல புண்ணியத்தல யாத்திரைகள் மேற்கோள்வர்.
    தொழில் மற்றும் வியாபாரம் ;- பொருளாதார உயர்வு காரணமாக சந்தோஷம்பெருகும். அனைத்து வளமும் பெருகி, தொழில் மற்றும் வியாபாரத்தில் புதுத் தெம்பும், உற்சாகமும் கூடும். அரசு அதிகாரிகள் தங்கள்  பதவி உயர்வுக்காகப் போராடும் நிலை ஏற்படும். நகரச் சந்தை நிலவரங்களை அறிந்து செய்யும் வியாபாரம் ஆதாயம் தரும். கடல்  வாணிபம் பெருகி இலாபம் கிடைக்கும். இசை மற்றும் சினிமாக் கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் மூலம் பொருளாதார உயர்வு அடைவர். சிலருக்கு அரசுப் பணிகள் கிடைக்கும்.

        பெண்கள் ;- பணிபுரியும் பெண்களுக்கு உயர் அதிகாரிகளின் அனுசரணையால் உற்சாகம் பொங்கி மனநிறைவுடன் பணிபுரிவர். திருமணமாகாத பெண்களுக்குத் திருமணமாகி மகிழ்ச்சிகரமான வாழ்க்கை அமையும். குடும்பப் பொறுப்பு காரணமாக வேலையை விடவேண்டிய சூழல் உருவாகும். நண்பர்கள் மூலம் பல உதவிகள் கிடைக்கும். சுயதொழில் புரிவோர் தங்கள் பணிகளைத் திறம்படச் செய்வர்.

    மாணவர்கள் ;- மாணவர்களின் கல்வித்தரம் உயர  ஆசிரியர்களின் வழிகாட்டுதல்கள் உதவிகரமாக இருக்கும். வீணாகப் பொழுதைக் கழிக்காமல் படிப்பில் முன்னேற ஆர்வம் காட்டவேண்டும். சில வீர, வீராங்கனைகள் தடகளப் போட்டிகளில்  பங்கு பெற்று தேசிய அளவில் பரிசுகளையும், பதக்கங்களையும் வெல்வர்.

    சந்திராஷ்டமம் ; ஜனன ஜாதகப்படி இராசிக்கு அட்டமத்தானத்தில் கோசாரச் சந்திரன் சஞ்சரிக்கும் காலமே சந்திராஷ்டம காலமாகும்இக் காலத்தில் சிக்கல்களும், சிரமங்களும் ஏற்படலாம். தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 18 – 09 - 2014 இரவு   12 - 23 மணிமுதல் 21 –19 - 2014 பகல் 11 – 52  மணி வரை ஆகும். இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.

    அதிர்ஷ்ட எண்கள்;- 6, 3, 5,  மற்றும் 8 ஆகும். சாதகமான எண்கள் 1 மற்றும் 4 ஆகும். அனுகூலமற்ற எண்கள் 2, 7,  மற்றும் 9 ஆகும்.

    அதிர்ஷ்ட நிறம்;- ஆரஞ்ச், பச்சை, க்ரீம், வெள்ளை மற்றும் வெளிர் நீலமாகும்.   தவிர்க்க வேண்டிய நிறங்கள் சிகப்பு  மற்றும் கருப்பு ஆகும்.

    அதிர்ஷ்டக் கற்கள்;- புஷ்பராகத்தை தங்கத்தில்  பதித்த மோதிரத்தை வியாழக் கிழமையன்று, பூஜைக்குப் பிறகு வலது கை முதலாவது விரலில் அணிவது உத்தமம்.

    ஆகாதஇராசிமீனம், மாதம் - ஆடி, கிழமைவெள்ளி, நட்சத்திரம் -- பரணி, திதிகள்திருதியை, அஷ்டமி மற்றும் திரயோதசி  ஆகும். யோகம் --  வஜ்ரம், கரணம் -- தைதுலை  ஆகும்.

    பரிகாரம்;- தொடர்ந்து ஶ்ரீ கிருஷ்ணரை வணங்கி,  நெய்த் தீபம் ஏற்றிவர, துன்பங்கள் தூர விலகும். சூரிய நமஸ்காரம் செய்தல், மஞ்சள் வண்ண ஆடையணியவும்,  மஞ்சள் மலர்களால் அர்ச்சித்தலும், புஷ்பராக்கல் அணியவும் அல்லது கொண்டைக்கடலை தானம் செய்வதும் தோஷநிவர்த்தி ஆகும்.

No comments:

Post a Comment