Search This Blog

Sunday 14 December 2014

அம்மாவின் எதிர்காலம் ?


        அம்மா என்று அனைவராலும் அழைக்கப்படும், மக்கள் முதல்வர் அம்மாவின் ஜாதகத்தை சென்ற பாராளுமன்றத் தேர்தல் நேரத்தில் அலசிய போது, அவருக்கு நடப்பு குரு திசை பலன்களைக் குறிப்பிட்டபோது, கீழ்கண்டபடி குறிப்பிட்டிருந்தேன்.

         அதிகாரத்தில் உள்ளவர்கள் தான் விரும்பியபடி, கனிகளைப் பறிப்பர். யாகங்கள், வேதத்தைப்பற்றிய அறிவு, கடவுள் பக்தி, சாத்திர அறிவு ஆகியவற்றைப் பெறுவார். நல்லவர், ஞானிகளின் நட்பு கிடைக்கும். மதிப்பு, மரியாதை உயரும். தலைமைப்பதவி தேடி வரும். கடந்த கால மற்றும் எதிர்காலம் பற்றிய அறிவு பெருகும். அரசாட்சி கைக்கு வந்து சேரும். அனைத்து வசதிகளும் பெருகும். மக்களால் போற்றி வணங்கப்படும் நிலை உருவாகும்.

          யாகங்கள், திருமண நிகழ்ச்சிகள் போன்ற அனுகூலமான நிகழ்ச்சிகள் மூலமாக சந்தோஷம் பெருகும். மக்கள் பணிபுரிபவர்களுக்குத் தலைமைப்பதவி ஏற்கும் நிலை உருவாகும். தர்க்கங்களிலும், போட்டிகளிலும் வெற்றிகிட்டும். உயர்பதவிகள் வந்து சேரும். உயர்பதவிகளுக்கான தேர்தல்களில் வெற்றி பெற்று உயர்பதவியைப் பிடிக்கும் நிலை உருவாகும்.

          குருபுத்தியில் கல்வித்துறை மூலமாகப் புகழ் மற்றும் உயர்நிலை ஏற்படும். அரசாள்பவரின் அனுகூலங்கள் கிடைக்கும். முன்னேற்றம், மதிப்பு, அதிர்ஷ்டம் யாவும் பெருகும். பல அரசர்களுக்கும் அரசராகத் திகழ்வார். சில இன்னல்களும் ஏற்படலாம். அதற்கு ருத்ர ஜபம் மற்றும் சிவ ஸகஸ்ரநாமம் ஆகிய பரிகாரங்கள் செய்வது நலம். இவ்வாறாகக் குறிப்பிட்டு எழுதியிருந்தேன். அந்தக் கட்டுரையைப் பாராட்டிக் கருத்துக்களைத் தெரிவித்த குருவருள் ஜோதிடம்மற்றும் திருவருள் சக்திமாத இதழ் வாசகப் பெருமக்களுக்கும், ஆசிரியர் சித்தர் அடிமை சி. இராஜூ அவர்களுக்கும் நன்றி கூறி --

          இனி, அம்மாவின் எதிர்காலம் என்ன ? – என்பது பற்றி தாஜிக முறைப்படி அவரது 66 - 67 மற்றும் 67-68 வயதுகளுக்கான (2014-15 மற்றும் 2015-16) வருட பலன் பற்றி பண்டைய முனிவர்களின் கூற்றுப்படி ஆராய்வோம்.

          இது ஜனன ஜாதகத்தில் உள்ள சூரியன் இருக்கும் இடத்திற்கு, அடுத்த வருடம் சூரியன் வரும் காலத்தைக் கொண்டு கணித்து பலன் காண்பது வருட ஜாதகமாகும். வடமொழியில் இதை வருஷ பல்” – என அழைப்பர்.

         24 பிப்ரவரியில் பிறந்த அம்மா அவர்களின் முடிந்த வயது 66 – நடப்பு வயது 67 க்கான வருட ஜாதகம் 24 – 2 – 2014 அன்று பகல் 12 – 59 – 58 மணிக்கு வரும் சூரியனின் நிலை கணக்கின்படி உருவான ஜாதகம் கீழே ;



லக்//
குரு ()


சந்
கேது
சனி
சூரி
66- 67 வயது
2014 – 15
24-2-2014 முதல்    23–2-2014 வரை.
இராசி

குரு()


நவாம்சம்

புதன்()

சூரி
புத()
லக்//
சந்
சுக்

செவ்
இராகு
சனி

சந்
சுக்
இராகு
செவ்


       பண்டைய நூலான, “நீலகண்ட தெய்வஞர்எழுதிய தாஜிக நீலகண்டீயம்என்னும் நூலின்படி வருட பலன்களைக் காண்போம்.

       இந்த வருட ஜாதகத்தில்  “வருசேஷாஅல்லது வருடாதிபதிபுதன் ஆவார். அதிக பலமற்ற, சுமாரான பலமுடைய புதன் தரும் பலன்கள் ஆவன.

       பணியில் சாதாரணமான அனுகூல பலன்கள், நெருங்கிய நண்பர்களிடம் இருந்து எதிர்பார்த்த சந்தோஷம் கிடைக்காது.

       அரசு சம்பந்தமான விவகாரங்களில் மிகுந்த பிரயத்தனத்துக்குப் பிறகே வெற்றி கிடைக்கும்.

       தோல் மற்றும் தசை நார்களில் ஏற்படும் பிரச்சனைகள் வேதனை தரும்.

       அடுத்து இந்த வருடத்திற்கான முந்தாவின் நிலை. “முந்தாஎன்பது வருட ஜாதகத்தின் முக்கியப் புள்ளியாகக் கருதப்படுகிறது.

        ஒருவர் பிறந்த காலத்தில், ஜனன ஜாதகத்தில் இலக்னத்தில் இருக்கும் முந்தா ஒவ்வொரு வயதுக்கும் ஒரு இராசியாக முன்னேறும். ( இரண்டாவது வயதில் இரண்டாம் இராசிக்கட்டம் என ). இந்த 67 வது வயது ஜாதகத்தில் முந்தாவின் நிலையைப் பார்ப்போம்.

       இந்த வருட ஜாதகத்தில் முந்தா 8 ஆம் பாவத்தில் அமைகிறது.

இந்த வருட வருடாதிபதி (வருசேஷா) மற்றும் முந்தாவின் நிலைகள்.

வருசேஷா
புதன்
முந்தா இருக்கும் இராசி
தனுசு – 17 6 28
முந்தா இருக்கும் வீடு
8
முந்தேஷ் எனும் முந்தாதிபதி
குரு
துந்தாதிபதி இருக்கும் வீடு.
2

 எட்டாம் பாவத்தில் உள்ள முந்தாதரும் பலன்கள் ;

தாஜிக நீலகண்டீயம்கூறும் பலன்.

       எட்டாம் பாவத்து முந்தாவானது எதிரிகளின் மூலமாக பயத்தையும், கஷ்டங்களையும்பணிப் பாதுகாப்பற்ற நிலை மற்றும் சொத்து இழப்பு போன்ற அனுகூலமற்ற நிலைகளைத் தரும். ஆரோக்கியக்குறைவு, குறிக்கோளற்ற பயணங்கள் அல்லது கஷ்டமான தூரப் பயணங்கள் ஏற்படும். தேவையற்ற பிரச்சனைகளால் சொத்து இழப்பு ஏற்படும் என்கிறது.

ஹயான் பாஸ்கர் என்ற அறிஞரின் கூற்று என்ன ?

       “முந்தா” 8 இல் இருக்க திருடர்கள் மற்றும் பகைவர்களிடமிருந்து பயம் அளிக்கிறது. தவறான செயல்களில் ஈடுபட வைக்கிறது. கஷ்டங்கள் மற்றும் நோயைத் தருகிறது. பலம் இழப்பு மற்றும் இருக்கும் இடத்தைவிட்டு வெகுதூரத்திலுள்ள விரும்பத் தகாத இடத்திற்கு மாற்றத்தை அளிக்கிறது.

       8 ஆம் பாவத்தில் உள்ள முந்தா”  உடலளவிலும், மனதளவிலும் மற்றும் பொருளாதார நிலையிலும் அனுகூலமற்ற நிலைகளையே தருகிறது.

       பணியில் பாதுகாப்பற்ற நிலை, நோய் அதிகரிப்பு, தேவையற்ற விரயச் செலவுகள், பணமிழப்பு, விரும்பத்தகாத இடத்திற்கு இட மாற்றம் ஆகியவற்றைத் தருகிறது.

முந்தாஉள்ள இராசி தரும் பலன்

       இந்த வருட ஜாதகத்தில் முந்தாகுருவின் ஆதிபத்தியம் பெற்ற தனுர் இராசியில்  இடம் பெற்றுள்ளது.

       இதன் காரணமாக இந்த வருடம் அனுகூலமான பலன்களும் நடக்கும். ஞானிகளின் சந்திப்பு கிடைக்கும். அறிவு விருத்தி ஏற்படும். மத சம்பந்தமான சடங்குகளில் ஆர்வம் ஏற்படும். அரசுப் பணியில் முன்னேற்றங்கள் ஏற்படும். போட்டியில் எதிர் பார்த்த அளவுக்கு மேல் வெற்றிகிட்டும். (தேர்தல் வெற்றி கிடைத்தது). சகாக்களின் முழு ஒத்துழைப்புக் கிடைக்கும்.

       “தாஜிக நீலகண்டியில் – “முந்தாமீதான குருவின் பார்வை அல்லது குருவின் இராசியில் முந்தாஇடம்பெற  ஜாதகி அரசியலில் சக்தி மிக்க பதவிக்கு வருவார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்து, முந்தேஷ்முந்தாதிபதி குரு தரும் பலன்கள்.-

       பொருளாதர முன்னேற்றம், சந்தோஷம், அனைத்துப் பணிகளிலும் வெற்றி, திருப்தி கரமான வாழ்க்கை. வாகன சுகம் மற்றும் புதிய வாகனங்கள் ஆகியவற்றைத் தரும்.

       இனி, 24 – 2 – 2015 ஆம் நாள் 67 ஆம் வயது முடிவு மற்றும் நடப்பு 68 ஆம் வயதுக்கான (23-2-2016 வரை – 2015-16) பலன்களைப் பார்ப்போம்.

       24-2-2015 – அன்று இரவு 19-04-51 மணிக்கு சூரியனைத் தொடும் நேரத்து வருட ஜாதகம். இதற்கு முன்னேற்றக்கட்டம் என்ற பெயரும் உண்டு. (ப்ராக்ரஷன் சார்ட்)
68 வயதுக்கான வருடாதிபதி சனி ஆவார்.


வருடாதிபதி மிகவும் சக்தி வாய்ந்த சனி தரும் பலன்கள்

       சொத்து இலாபம், நல் ஆரோக்கியம், தோட்ட சம்பந்தமான செலவுகள், வழக்குகளில் வெற்றி, மக்களும் பயன் பெறுவர். குடும்ப கௌரவம் காப்பாற்றப்படும். சொத்துக்கள் அதிகரிக்கும்.



செவ்,சுக்
கேது
சந்





புத
இராகு

சூரி
67- 68 வயது
2015 – 16
24-2-2015 முதல்    23–2-2016 வரை.
இராசி
குரு()



நவாம்சம்

புத
லக்//
குரு()
சூரி




இராகு
சந்
கேது
லக்//,சுக்
சனி
செவ்
 

இந்த வருட வருடாதிபதி (வருசேஷா) மற்றும் முந்தாவின் நிலைகள்

வருசேஷா
சனி
முந்தா இருக்கும் இராசி
மகரம் – 17 6 28
முந்தா இருக்கும் வீடு
6
முந்தேஷ் எனும் முந்தாதிபதி
சனி
துந்தாதிபதி இருக்கும் வீடு.
4

முந்தாதரும் பலன்கள் – “தாஜக நீலகண்டியின் கூற்று --

       ஆறாம் பாவத்து முந்தா”  உடல் நலக்குறைவு, எதிரிகள் அதிகரிப்பு, அரசியல் அச்சுறுத்தல்கள், பணிகள் மற்றும் சொத்துக்கள் நாசம், செய்த பணிக்கு வருத்தம் தெரிவித்தல் ஆகியவை ஏற்படும்.


ஹயான் பாஸ்கரின் கூற்று

       “முந்தாஆறில் இருக்கஉடல் வலிமை குறைதல், பகைவரால் அதிகத் தொல்லை, இழப்புக்கள், பாண்டித்யம் பெறுதல் ஆகியவை ஏற்படும்.

 ஆறாம் இடத்து முந்தாஅனுகூலமற்றதாகக் கருதப்படுகிறது..

       நிலையற்ற மனம், உணர்ச்சி வசப்பட்ட மனநிலை, எரிச்சலூட்டும் தொடர்புகள், கால் தூசுக்குப் பெறாத எதிரிகளின் எதிர்ப்பு மற்றும் பயமுறுத்தல்கள், பணியில் அஜாக்கிரதை நிலை மற்றும் மன இறுக்கம் ஆகியவை ஏற்படும்.

       பலம் மிக்க சனியின் மகர இராசியில் உள்ள முந்தா தரும் பலன்

       தடைகள் மற்றும் ஆசைகள் நிறைவேறாத நிலை, ஆரோக்கியக் குறைவு, இடமாற்றம் மற்றும் தேவையற்ற பயணங்கள் ஆகியவை ஏற்படும். வழக்குகளில் வெற்றியின்மை. முந்தா - சனியின் இராசியில் இருக்க அல்லது சனியால் பார்க்கப்பட அவமானங்கள மற்றும் சொத்து இழப்பு ஏற்படும். குரு பார்க்க நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.

       முந்தேஷ் தரும் பலன்கள் – 4 ஆம் பாவத்தில் இடம்பெற்றுள்ள முந்தா தரும் பலன்கள்கஷ்டங்கள், அரசு அச்சுறுத்தல், இழப்பு, இடமாற்றங்கள் ஆகியவை ஏற்படும். கடினமான பயணங்கள் ஏற்படும்.

       இவ்வாறாக இரண்டு வருடங்களும் சாதகமற்ற நிலையில் இருப்பதால் 69 வயது நடக்கும் போது, (24-2-2016) செவ்வாய் வருடாதிபதியாக வரும் போது மிக்க அனுகூலமான பலன்கள் ஏற்படும் என எதிர் பார்க்கலாம். அதிகாரிகளின் ஆதரவு, அதிகாரம் மற்றும் பொறுப்பு மிக்க பதவி கிடைக்கும் பதவி உயர்வு தவிர்க்க முடியாததுவெற்றிகள் மற்றும் போட்டிகளால் பணவரவு, வழக்குகளில் வெற்றிகள், மதிப்பு, மரியாதை, புகழ், பலம், பணியிடத்தில் தலைமைப் பொறுப்பு ஏற்றல் என அனைத்தும் வெற்றிகரமாக முடியும் என எதிர்பார்க்கலாம்.


1 comment: