Search This Blog

Sunday 12 May 2019

நாடியில் கோசார கிரகங்களின் கோலாட்டம். 2




நாடியில் கோசார கிரகங்களின் கோலாட்டம். 2


அத்தியாயம் - 2
நாடியில் பலன் உரைக்கும் பொது விதிகள்.
         பொதுவாக கிரகங்கள் தங்கள் நட்பு, ஆட்சி, உச்ச வீடுகளில் இருக்கும் போது பலம் மிக்கவர்களாகக் கருதப்படுகிறார்கள்.

1.   ஆனால், அவை நட்பு, ஆட்சி, உச்ச வீட்டில் இருக்க அதற்குப் பின்போ அல்லது அடுத்தோ பகை கிரகங்கள் இருக்க அந்த கிரகம் தனது முழு சுப பலனை வழங்க இயலாது.

2.   பகை கிரகங்கள் பின்பும், அடுத்தும் இருக்கும் போது இந்த நட்பு, ஆட்சி, உச்ச கிரகம் நடுநிலை அல்லது சமநிலையில் செயல்பட்டு அதன் காரணமாக அவற்றால் நல்ல அல்லது தீய பலன்களை செய்ய முடியாமல் போகிறது. 

3.   ஒரு சுப கிரகத்தின் இரு புறமும் பகை கிரகங்கள் இடம் பெற, சுபக் கிரகம் தரும் சுபலன்கள் தடைப்படுகின்றன.

4.   வக்கிர கிரகம் இருக்கும் இராசிக்கு  அடுத்த இராசியில் அதன்  பகை கிரகம் இருக்க முதல் இராசியில் உள்ள கிரகம் (வ) பாதிப்பு அடைந்து அசுப பலனே தருகிறது.

5.   ஒரு வீட்டினால் ஏற்படப் போகிற நிகழ்வுகள் முதலில் எதிர் பாவம் மூலமாகவும், அதன்பின் அந்த பாவத்திற்கு முன் பின் இராசிகள் மூலமாகவும் நமக்கத் தெரியவருகிறது.  அதே போல் முதலில் 7 ஆம் பார்வை சக்தி மிக்கதாகவும் பிறகு 2 மற்றும் 12 ஆம் பார்வையும் பலம் பெற்றதாகவும் கருதப்படுகிறது.

6.   ஒரு கிரகம் உச்சமாகி, தனது உச்ச ஸ்தானத்தில் இருந்தாலும் அதற்கு 7, 2, 12, 5 ஆகிய பாவங்களில் கிரகங்கள் இல்லையெனில் அந்த கிரகம் தனது முழுப் பலனை தராது குறைவான பலனையே தரவல்லது.

7.   கிரகம் உச்சம், ஆட்சி, நட்பு அல்லது எந்த நிலையில் இராசியில் இருந்தாலும் அதற்கு 2, 5, 7, 12 ஆகிய இடங்களில் ஒன்றில் ஒரு கிரகமேனும் இருக்க அந்த கிரகங்கள் பலன்களைத் தரும்.

8.   இரு குறிப்பிட்ட இராசியில் இருக்கும் கிரகத்துக்கு 2, 5, 7, 12 கிரகங்கள் இல்லை எனினும் அது மற்றுமொரு கிரகத்துடன் பரிவர்த்தனை பெற்றால் அது செய்யும் மாயங்கள் மிகவும் சிறப்பானதாக இருக்கும்.

9.   இரு கிரகங்களில் அஸ்தமனம் ஆன கிரகம் கூட பரிவர்த்தனை பெற வியக்கத்தக்க பலன்களை அள்ளி வழங்கும்.

10.   அஸ்தமனமான கிரகத்தொடு உள்ள கிரகம் நட்பு கிரகமானால் அஸ்தமனமான கிரகத்தின்  பாதிப்பு வெளித்தெரியாது.

11.  ஒரு கிரகம் உச்சமாகி வக்கிரமும் ஆனால் அதன் உச்ச நிலை நீங்கிவிடுகிறது. மேலும், உச்சமாகி, வக்கிரமான கிரகம் தனக்கு 12 இல் ஒரு பகை கிரகத்தைக் கொண்டிருந்தால் பயம் தரக்கூடிய உச்ச, வக்ல கிரகமாய் இருக்கும். அதே போல் உச்ச, வக்கிர கிரகம் தனக்குப் 2, 7, 12 இல் பகைக் கிரகத்தைப் பெற்று இருந்தால் உச்ச கிரகம் தனது உச்ச தன்மையில் முழுமை பெற்று இராது..

12.  12 பாவங்களில் எந்த ஒரு பாவத்தில் இருக்கும் கிரகத்துக்குப் 12 இல் அதன் பகை கிரகம் இருந்தால் இந்த இரு கிரகங்களுமே சுமாரான பலனையே தரும். ஆனால், இந்த 12 இல் இருக்கிற பகை கிரகம் வக்கிர கிரகம் ஆகி இருந்தால் அடுத்து உள்ள கிரகம் சுப பலன்களையே அளிக்கும்.

13.  இரு கிரகங்களில் அதிக பாகையில் நிற்கும்  கிரகம் பகை கிரகமாகி, வக்கிரமும் ஆனால், குறைந்த பாகை கொண்ட கிரகம் மிகச் சுமாரான பலன்களையே அளிக்கும்.

14.  பரிவர்த்தனை பெற்ற இரு கிரகங்களில் ஒன்று நீச கிரகமானால் பரிவர்த்தனை யோகத்தால் நீசம் பங்கமாகிறது.  அல்லது நீச கிரகத்துடன் நட்பு கிரகமோ, சுப கிரகமோ அமர்ந்தாலும் அல்லது அதற்கு 7 மற்றும் 5 ஆம் வீடுகளில்  கிரகம் இருக்கவும் அல்லது பார்வை செய்யவும் அந்த கிரகத்தின் நீசம் பங்கமாகும் என தெரிந்து கொள்ள வேண்டும்.
மேலே குறிப்பிட்ட விதிகளுக்கான விளக்கங்களைக் கீழே காணலாம். –

ஜாதகம் - 1


புத, சுக்
செவ்
சூரி,
இராகு



உ. ஜா. 1
குரு



சந்
சனி, கேது

  
       இந்த ஜாதகத்தில் (1) சூரியன் உச்சம் பெற்று இராகுவால் கிரகணமாகி உள்ளதால் தன் சக்திகளை இழந்து தேவையான பலனை தர முடியாதவர் ஆகிறார். (இதை சரிபார்க்க ஜாதகரின் கைரேகையைப் பார்த்தால் சூரிய மேட்டில் பாம்பு போன்று வளைந்த ரேகை தெரியும்)

       சூரியனுக்கு எதிர் பாவமான 7 ஆம் பாவத்தில் அவரின் பகைவன் அமர்ந்துள்ளதால் மேலும் வலுவிழந்தவர் ஆகிறார்.  சூரியன், இராகு இணைவால் ஜாதகரின் தந்தைக்கு கஷ்டங்களும் ஆபத்துக்களும் நிகழ்வதோடு, 5 ஆம் இடமும் இந்த இணைவால் கெடுவதால் புத்திர பாக்கியத்திலும் பிரச்சனை எழுகிறது. சுக்இரனும் சந்தேகத்துக்கு இடம்மின்றி உச்ச நிலையில் உள்ளார். கிரக பாகை வரிசைப்படி கீழ்க்கண்ட நிலைகளில் செவ்வாய், சுக்கிரன், புதன் ( நீசம் ) உள்ளனர். செவ்வாயும் புதனும் அதிக பகை உள்ள கிரகங்களாகி, சுக்கிரன் நடுவில் இடம் பெற்றுள்ளார். இதனால் சுக்கிரனின் உச்ச பலம் பாதியாகக் குறைகிறது. இதன் காரணமாக சகோதரர்களுக்குள் (செவ்வாய்) செல்வம், சொத்துக்கள் காரரணமாக (சுக்கிரன்) அடிக்கடி சண்டைகள் வெடித்து, குடும்பத்தில் வழக்குகளும், மனக் குழப்பங்களும் ஏற்படுகிறது. இரண்டு போராடும் கிரகங்களுக்கு இடையே (செவ்வாய், புதன் ) மாட்டிக்கொண்ட மனைவி, சகோதரிகளைக் குறிகாட்டும் சுக்கிரன் அவர்கள் முன்னேற்றத்தில் அதிக தடைகளைத் தருகிறார்.

         தொழிலைக் குறிக்கும் சனி உச்சம் ஆனால் அவர் பதவி ஏற்பு மற்றும் விடுதலையைக் குறிக்கும் சனிக்கும் பகைவனான கேதுவுடன் இணைந்து, எதிரி சூரியனால் பார்க்கப்படுவது சனியின் பலன் தரும் சக்தியை மிகவும் குறைத்துவிடுகிறது. சந்திரனும் நீசமாகி சனிக்கு இரண்டில் உள்ளதால் ஜாதகருக்கு மிக அருமையான வேலை கிடைத்த போதும், நீழ்த்தரமான, குறுகிய மனம் கொண்டவர்களால் ( நீச சந்திரன் ) அடிக்கடி தொல்லைகளுக்கு ஆளாகி, கெட்ட பெயர் எடுத்து, மனம் நொந்து  அதன் காரணமாக இரண்டு வேலைகளை விட்டுவிட்டார். இவருக்குத் தொழிலில் தொடர்ந்து தொல்லைகளும், அடிக்கடி மன அமைதி இன்மையையும் குறிகாட்டுகிறது.

         உச்ச குருவுக்கு 2, 12, அல்லது 7 இல் கிரகங்கள் இல்லாத காரணத்தால் ஜாதகருக்கு சமூக அந்தஸ்து, உடல் ஆரோக்கியம், ஒளிமயமான வாழ்க்கை ஆகியவற்றை தந்து அருள்பாலிக்கும் நிலையில் அவரும் இல்லை. குருவுக்கு 5 இல் நீச சந்திரன் ( கேதுவுக்கு மிக அருகே துலாத்தில் ) உள்ளார், இதன் காரணமாக குரு ஜாதகருக்கு எந்தவித நன்மையையும் தர முடியாத பலம் இழந்த நிலையில் உள்ளார்.

ஜாதகம் - 2

         செவ்வாய் உச்சம் அதற்கு 12 ஆம் வீட்டில் பகைவன் இராகு 2 இல்  மரண அடி மகாதேவர்களாக செவ்வாயின் இரண்டு எதிரிகள் சனியும்  புதனும் உள்ளனர்.  எனவே, ஜாதகருக்கு உதவமுடியாத வகையில் செவ்வாயின் கரங்கள் முழுவதுமாக கட்டப்படுள்ளன.


சூரி
சந், சுக்

கேது
புத, சனி
உ. ஜா. 2

செவ்

இராகு
குரு



         இதன் காரணமாக ஜாதகரின் சகோதரர் மிகப் பெரிய ஆபத்தில்,உயிருக்குப் போராடும் நிலைக்குத்தள்ளப்பட்டார்.  இது ஒரு ஜாதகியானால் அவளின் மற்றுமொரு சகோதரரும், கணவரும் இணைந்து இந்த மாதிரியான துயர நிலையில் இருந்து மீண்டு நல்வாழ்க்கை வாழவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது..

         ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் நீசமான போதும் அனுகூலமான,நல்ல நிலையில் கிரகங்கள் இருக்கும் போது நல்ல பலன்களையே அளிக்கின்றன.

ஜாதகம் - 3

         உதாரணமாக ஜாதகம் 3 இல் ஜீவன காரகன் குருநீசம். ஆனால், அவர் ஆத்ம காரகன் சூரியனுடன் இணைந்தள்ளார். எனவே, ஜாதகரின் வாழ்க்கை பிரபஞ்சத்தின் உயர்ந்த ஆத்மாவோடு இணைந்துவிட்டது. அதன் காரணமாக குரு நீசபங்கமாகிறார்.  சூரியனும், சனியும் பரிவர்த்தனை பெற்றுள்ளனர். இது சனி, சூரியன் மகரத்தில் இணைந்து உள்ளதற்கு சமம் ஆகும். (தொழிலும் + வாழ்க்கையும்). இதன் காரணமாக ஜாதகர் வேலையில் தன்னுடன் பணியாற்றும் நண்பரின் உதவியை, முழு ஒத்துழைப்பை பெறுவார். நண்பனால் தன் பணியிடத்தில் இராஜ மரியாதை, ஒத்துழைப்பைப் பெற்று உயர்கிறார். இதற்கு முழுமுதற் காரணமே சனியுடன் பரிவர்தனை பெற்ற சூரியனால் நீசபங்கமான குரு என்பதே உண்மை.  
     

இராகு





உ. ஜா. 3

குரு,
சூரி
சனி



கேது
சந்

ஜாதகம் - 4

          உதாரண ஜாதகம் - 4  - மகரத்தில் சந்திரன், புதனுடன் இணைந்த குருவும், கும்பத்தில் சுக்கிரன், சூரியன், செவ்வாய் ஆகியோர் உள்ளனர். இந்த 6 கிரகங்களையும் பாகைப்படி வரிசைப்படுத்தும் போது குரு+சந்+ புதன்+ சுக்+சூரி+செவ் எனவும் அதற்குப் பிறகு இராகுவையும் + சனி+ கேது என வரிசைப்படுத்த வேண்டும். இதில் சனி வக்கிரம் பெற்று இராஜகிரகமான சூரியனின் வீட்டில் அமர்ந்து இராகு கேதுக்களுக்கு இடையே மாட்டிக் கொண்டார். ஜீவன் காரகன் குரு வெளியில் உள்ளார்.  இதன் காரணமாக ஜாதகர் தனது வாழ்க்கைக்கான சம்பாத்தியத்தை வெளநாடு சென்றே ஈட்டுவார் எனத் தீர்மானம் ஆகிறது. இராகு – கேதுவுக்கு இடையே உள்ளது ஒரு நாடு என்றும் அதன் மற்றுமொரு பகுதி வெகு தூரமுள்ள வெறுவொரு நாடு எனவும் தீர்மானிக்க வேண்டும்.  வாழ்க்கையின் முதல் பகுதியில் ஜாதகர் வெளிநாடு சென்று சம்பாதிப்பார்.

         சிம்மத்திலுள்ள வக்ர சனி கும்பத்தில் உள்ள சூரியனுடன் பரிவர்த்தனை பெற்றுள்ளார். சூரியன் கௌரவம் மிக்க மனிதரைக் குறிகாட்டும். ஜாதகர் தனது சொந்த ஊருக்குத் திரும்பும் போது பெற்றோர்களின் உதவியும், மிகவும் கௌரவம் மிக்க நபரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். சனி சகோதரர்களையும் குறிக்கும். ஆதலால், அவரும் தூரதேசத்தில் உள்ளார் எனச் சொல்ல்லாம். சனி, சூரியன் கும்பத்தில் பரிவர்த்தனை ஏற்பட்டு, 12 ஆம் இடமான மகரத்தையும் பார்க்கிறது. நீச குரு ஜாதகரைக் குறிக்கும். அவருக்குக் கிடைக்கும் நண்பனின் ஒத்துழைப்பு, உதவிகளைக் குறிப்பது சனியாகும். இதனால் குருவின் மோசமான விழைவுகள் குறைந்தது. அதுபோல் மகரத்தில் உள்ள குரு கும்பத்திலுள்ள சனியைப் பார்ப்பதால் ஜாதகர் சமூகத்தில் மிகப் பெரிய கௌரவத்தை அடைவார்.



இராகு


செவ், சூரி
சுக்
உ. ஜா. 4

புத,சந்
குரு
சனி(வ)


கேது


எந்த ஒரு ஜாதகத்திலும் குருவும், சனியும் அருகருகே உள்ள இரு இராசிகளில் இருக்க ஜாதகர் கௌரவம் மிக்க தொழிலில்  இளமையிலேயே இறங்கிவிடுவார்..

         இந்த ஜாதகத்தில் பரிவர்த்தனை காரணமாக சூரியன் சிம்மத்தில், குழந்தையைக் குறிக்கும் சூரியன் இராகு கேதுவுக்கு இடையே இருக்கிறார். இதன் காரணமாக குழந்தைப் பிறப்பு ஏற்படுவதில் சிக்கல்கள் இருக்கும். பிறந்தாலும் உயிரோடு இருப்பது சந்தேகமே. ஜாதகருக்குப் பிறந்த மகனும் சில காலமே உயிரோடு இருந்தான்.

         சுக்கிரன், செவ்வாய், சூரியனுக்கு அடுத்து உள்ளான். இவர்கள் முறையே நெருப்புக்கும், புத்தி கூர்மைக்கும் உரியவர்கள் ஆவர். இரு கிரகங்களுமே நெருப்பை மூலகமாகக் கொண்டவர்கள். சுக்கிரன் மகள், தாயரைக் குறிகாட்டும். அவர்கள் சூரியன், செவ்வாயுடன் கூடும் போது அவர்கள் அடிக்கடி உடல் ஆரோக்கியம் கெடுவதையும் அதனால் ஏறபடும் கஷ்டங்களையும் குறிக்கிறது. சுக்கிரன் முதல் நட்சத்திர பாதத்தில் அமைந்த்தால் அவர்களுக்கு வாழ்க்கையில் அதிக கஷ்டங்கள் இருக்காது.

        இந்த ஜாதகத்தில் கோசார செவ்வாய் கடக இராசிக்கு வரும் போது அவர் , சந்திரன், குரு, புதன் ஆகியோரை பார்வை செய்வார். பரிவர்த்தனையில் உள்ள சனியையும் பார்ப்பார். சனி, செவ்வாய் பகைவர்கள்.  சனி கர்மகாரகன். எனவே ஜாதகர் தொழிலில் வழக்கு விவகாரங்கள், பகைவர்கள் தொல்லை, கீழே விழுவதனால் ஏற்படும் காயங்கள் என பல வழிகளிலும் தொல்லைகளை அனுபவித்தார்.

        கோசார சனி மகரத்தைத் தொடும் போது, அதிலுள்ள குரு, சந்திரன், புதன் ஆகியோரில் முதலில் குருவைக் கடக்கும் போது ஜாதகருக்கு சமூகத்தில் கௌரவம் மிக்க பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பும், உதவிகளும் கிடைக்கும். பிறகு சந்திரனைக் கடக்கும் போது பிறரை வஞ்சிக்கும் கலையை கற்கிறார். இறுதியாக புதனை கடக்கும் போது ஜாதகரை தொழிலில் ஆர்வத்தைக் கொடுக்கிறது.

        சுருக்கமாகக் கூறினால் கோசார சனி மகரத்தைக் கடக்கும் போது ஜாதகர் கௌரவமான மனிதர்களின் உதவி மற்றும் ஒத்துழைப்புடன், நிச்சியம் இல்லாத, நம்பிக்கையில்லாத, சந்தேக மனதுடன் வர்த்தகம் சம்பந்தமான பயணங்களை மேற்கொண்டார்.

        கோசார சனி கும்பத்தை கடக்கும் போது முதலில் செல்வத்துக்குக் குறிகாட்டியான சுக்கிரனைத் தொடுகிறார். இதன் காரணமாக அவரின் 43 முதல் 45 வயதுகளில் பிறரின் பணங்கள் இவர் கைக்கு வந்து சேர்கிறது.

ஜாதகம் – 5




சுக்
சூரி,புத

உ. ஜா. 5
செவ்



சந், குரு




         இந்த ஜாதகத்தில் (5) கடகத்தில் நீச செவ்வாய் உள்ளார். அவர் விருச்சிகத்திலுள் சந்திரனோடு பரிவர்த்தனை பெறுகிறார். எனவே, தனது சுய வீட்டில், தெய்வீக குருவுடன் இணைந்துள்ளார். இந்த புனித ஆசிரியர் குருவின் தொடர்பால் செவ்வாயும் முருகனின் தெய்வ காடாக்ஷம் பெற்று விருச்சிகத்தில்  “கார்த்திகேய குரு” ஆகிறார். இந்த வித்தியாசமான குரு, செவ்வாய் இணைவு பரிவர்த்தனையால் (சந்,செவ்) ஏற்பட்டதன் விழைவாக ஜாதகருக்கு நம்பத்தாகாத குணமுள்ள கீழ்த்தரமான மக்களின் ஒத்துழைப்போடு சமூகத்தில் மதிப்பு மிக்க, கொரவமான நிலையை அடைகிறார்.

    ஜாதகம் – 6



செவ்

சனி

உ. ஜா. 6
குரு, சூரி
இராகு
கேது
லக்//
புத,சுக்

சந்




         ஜாதகம் 6 – ஒரு மகர இலக்கின, பெண்ணின் ஜாதகம். பாகை வரிசையில் கிரகங்களை இலக்னத்தில் இருந்து கேது+ செவ்+ சனி+ குரு+ சூரி+ இராகு+ புத+ சுக்+ சந் என வரிசைப் படுத்தலாம். உச்ச குரு ஆத்மகாரகன் சூரியனுடன் இணைந்திருப்பது ஒரு விசேஷமான இணைவாகும். ஆனால் இங்கு உள்ள மறைமுக ஆபத்து இராகுவின் இணைவு ஆகும். இராகுவின் வக்கிர நகர்வால் முதலில் சூரியனும் பிறகு குருவும் அதன் பிடியில் வருகிறது. எனவே, இவ்விரு கிரகங்களும் அதன் பலத்தை இழக்கின்றன.  இந்த சூரியன், குரு இணைவு ஜாதகரின் தந்தை இறைவனை சிந்திக்க வைக்கும். இந்த இரு கிரகங்களின் இராகுவுடனான அருகாமை தந்தையின் ஆயுள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு, அவர் குறைந்த வயதிலேயே இறந்துவிட்டார். இது பெண்ணின் ஜாதகமாதலால் ஜீவன் காரகன் சுக்கிரன் ஆவான். எனவே, ஜாதகி தன் கணவனை (செவ்வாய்) சந்திப்பது மிகவும் கஷ்டமாகிவிடும்.

         இப்போது சுக்கிரன் + நீச சந்திரன் + மோட்ச காரகன் கேது ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். இங்கு மேஷத்தில் உள்ள செவ்வாய் கணவனைக் குறிகாட்டுபவர். இவருக்கு 2, 12, 7 இல் கிரகங்கள் இல்லை. எனவே அவள் ஒரு சன்யாச அல்லது துறவு வாழ்க்கை வாழ வேண்டியதாயிற்று. மேலும் சகோதர குறிகாட்டி செவ்வாய், இராகு-கேதுவால் அமைந்த அரை வட்டத்துக்கு வெளியே இருப்பதால் ஜாதகியுடைய சகோதரன் தூர தேசத்தில் இருக்கிறான். செவ்வாய்க்கு 5 இல் சுக்கிரன் இருக்கிறார். இந்த இடமே பூர்வ புண்ணியத்தால் பெற்ற தகுதியை, யோக்கியதையைக் குறிக்கும். இது ஒரு அனுகூலமான நிலையாகும். ஆனால், சுக்கிரன், செவ்வாய், புதன் என்கிற இரு தீவிர எதிரிகளோடு இருப்பதால் அவை மகிழ்ச்சியான மண வாழ்க்கைக்கு பங்கம் ஏற்படுத்தின. கணவன் காரகன் செவ்வாய் பலம் இழந்து காணப்படுவதால் ஜாதகிக்கு 50 வயது ஆகியும் திருமணம் நடக்கவில்லை.

         இங்கு வாழ்க்கையை குறிகாட்டும் கிரகங்கள் குருவும், சுக்கிரனும் ஆகும். குரு ஆண் ஜாதகருக்கு வாழ்க்கை குறிகாட்டி, ஆனால் பெண்ணுக்கு சுக்கிரன் வாழ்க்கை குறிகாட்டி ஆவான். இங்கு படைத்தவனால் படைக்கப்பட்ட ஆணுப் பெண்ணும் ஒன்றுதானே ? – என்ற கேள்வி எழலாம். பண்டைய இந்து புராணக் கதைகளின்படி ஒரே மாதிரியான தெய்வீகப் படைப்பின் மீது இருவேறு மாறுபட்ட பார்வைகள் உள்ளன. ஒன்றன் பெயர் இயற்கை எனும் பிரபஞ்ச பெண் மூலம் மற்றொன்று  புருஷன் எனும்  பிரபஞ்ச ஆண் மூலம் ஆகும். இந்த மூலகங்கள் இரண்டின் இணைவே இந்த மேதினியில் வாழ்க்கையின் நீடித்தலுக்கு பொறுப்பாகின்றன. பிரபஞ்சத்தில் காக்கும் கடவுளின் படைப்பில், பார்வையில் இரண்டுப் ஒன்றாகினும், இங்கு சுக்கிரன் பெண்ணின் வாழ்க்கையையும், குரு ஆணின் வாழ்க்கையையும் குறிகாட்டுகின்றன. இந்து கைரேகைக் கலையில் மூக்கால் சுவாசிக்கும் ஜீவன் காரகன் குரு. உடற்கூறில் மூக்கைக் குறிப்பவன் குரு ஆவான். இந்தியப் பெண்களின் மூக்கில் அணிகின்ற வைரமூக்குத்தியில் வைரத்தைக் குறிப்பவன் சுக்கிரன் ஆவான்.

ஜாதகம் - 7

   
சுக்(வ)
புத

சூரி,
செவ்
குரு
சந்


உ. ஜா. 7
கேது
இராகு
லக்//



சனி(வ)



        சுக்கிரன், சூரியன், சந்திரன், மற்றும் சனி ஆகிய 4 கிரகங்கள் உச்சம் பெற்ற மகர இலக்ன ஜாதகியின் ஜாதகம். ஆனால் இவரது வாழ்க்கை அமைதியற்ற, சந்தோஷமற்ற வாழ்க்கையானது. ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம், இரண்டு கணவன்மார்களின் இறப்பு, மூன்று திருமணங்கள், கடைசியில் அவளது வாழ்க்கையின் முடிவு என இலக்னத்தில் இருந்து கிரகங்களை பாகை முறையில் வரிசைப்படுத்தி பார்க்கலாம்.   இராகு+ புதன்+ சுக்கிரன்+ சூரியன்+ செவ்வாய்+ குரு+ சந்திரன்+ கேது+ சனி என்ற வரிசையில் வருகிறது. இங்கு சூரியன் உச்சம் பெற்றிருந்தாலும், பகை கிரகமான சனி 7 இல் உள்ளார். சனியின் பரம எதிரி செவ்வாய், சூரியனுடன் உள்ளார். இது ஜாதகியின் தந்தை உணர்ச்சி வசப்படுபவர். பகைவர்களால் அதிக தொல்லைகளை அனுபவிப்பவர்.

         ஜாதகியின் வாழ்க்கையைக் குறிகாட்டும் உச்ச, வக்ர, சுக்கிரன், தனது நெருங்கிய நண்பரான நீச புதனை பின் பார்வையால் நோக்குகிறார். ஏனெனில் வக்ர சுக்கிரன் மீனத்தில் புதனுக்கு அடுத்து இருப்பதே ஆகும். அவருடையே நண்பரே அவருக்குக் கணவரானார் என்பதை இது குறிகாட்டுகிறது. சுக்கிரனும் குருவும் பரிவர்த்தனை. பரிவர்தனையால் சுக்கிரன் ரிஷபத்துக்கும், குரு தனது சுய வீடான மீனத்துக்கு வருவதால் சுக்கிரனின் வக்ர பின் பார்வையால் செவ்வாய், சூரியன் பார்க்கப்படுகிறார்கள். இது அவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதை குறிகாட்டுகிறது.  ஆனால், சுக்கிரன் ரிஷபத்தில் இணைந்துள்ளது அதன் சக்தியைக் குறைக்கிறது. ஆகையால், கௌரவம் (உச்ச சூரியன்) மிக்க குடும்பத்தில் அழகிய இளமையான இளைஞனை மணந்து கொண்டாள். ஆனால் பலமிழந்த செவ்வாயால் (கணவன்) அந்த இளைஞன் இறந்தான்.

         மேஷத்துக்கு அடுத்த ரிஷப 2 ஆம் வீட்டில் சுக்கிரன். ஆணின் விந்து, பெண்ணின் சுரோனிதம் மிக அருகில் இருப்பது போல் உச்ச சூரியன், செவ்வாய் மேஷத்தில் இருக்கின்றனர். எனவே, இவள் மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொள்கிறாள், முடிவாக மரணம் எய்துகிறாள்.

         குருவிடம் சிஷ்யனின் கேள்வி- குருவே ! எங்ஙனம் இப் பெண் நீதிமன்றம் மூலமாக இரண்டு கணவர்களிடம் இருந்து தொடர்ந்து விவாகரத்து பெற்றாள். 
       
        குரு – மீன இராசி வடக்கு திசை, கடகமும் வடக்கு திசையே குறிக்கிறது. எனவே, கேது (வழக்கு விவகாரங்கள், சட்ட நுணுக்கங்கள்) சுக்கிரனுக்கும் புதனுக்கும் நடுவே சிக்கிக் கொண்டார். இதுவே முதல் விவாகரத்துக்குக்கான காரணம். பின்னர் குரு மீனத்துக்கு சுக்கிரனுடனான பரிவர்த்தனையில் வருகிறார். மேலே சொன்னபடி பிரிவினைக் கிரகமான கேது (வழக்கு விவகாரங்கள், சட்ட நுணுக்கங்கள்) சுக்கிரன், குருவுக்கு  நடுவே வந்ததால் இரண்டாவது முறையும் விவாகரத்து கிடைத்தது.

         மேலும், ஜாதகி தந்தைக்குப் பின் என்பதை குறிகாட்டும் மேஷத்திலுள்ள சூரியன், சுக்கிரன், புதன் மற்றும் கேது ஆகியவை அவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பெண் காதலைக் குறிகாட்டுகிறது. அவளது ஜாதகத்தில் உள்ள சுக்கிரன், புதன், கேது இணைவு அவளுக்கு, தந்தையுடனான நிலம் (புதன்) மற்றும் சொத்துப் (சுக்கிரன்) பிரச்சனைகளில் வழக்கு விவகாரங்கள் நடப்பதைக் குறிகாட்டுகிறது. மேலும் சுக்கிரன் தனது வக்கிர நிலையால் 2 ஆம் இடத்துக்கு தனது பரிவர்த்தனையால் வருகிறது. ( மேஷத்தில் சூரியனுக்கு 2 ஆம் இடத்தில் செவ்வாய் ) ரிஷபத்திலுள்ள குருவுடனான பரிவர்த்தனை (கோர்ட் மற்றும் நீதிபதியைக் குறிக்கிறது) அவளுடைய தந்தை (சூரியன்) மாமா (செவ்வாய்) ஒரு வீட்டையும், கொஞ்சம் பணத்தையும் வழக்கு மூலமாக அடைந்தனர்.

        இதன் மூலமாக அறிவது, முதலில் கிரகங்களின் உச்ச நிலையை கணக்கில் எடுத்துக் கொண்டு பின்னரே முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும்.

        முன்னர் கொடுக்கப்பட்ட விதிகளில் 2 மற்றும் 3 ஆம் விதிகளுக்கான உதாரணங்கள் - 

இராகு+சூரியன்+சனி = தந்தைக்கு மற்றும் மகனுக்கு ஏற்படும் கஷ்டங்கள் மற்றும்                       தடைகள்.

கேது+சனி+செவ்வாய் = தொழில்/வேலை தடுமாற்றம்/பாதியிலேயே தடைபடுதல்.

இராகு+சந்திரன்+செவ்வாய் = மன மயக்கம், மருட்சி மற்றும் குறுகிய                                   மனப்பான்மை.

சூரியன்+சுக்கிரன்+கேது = புத்திர பாக்கியம் அமைவதில் பிரச்சனை மற்றும்                                    பொருளாதார நஷ்டம்.

கேது+சனி+சந்திரன் =  பணியிடத்தில் கெட்ட பெயர் எடுத்தல்.

கேது+சந்திரன்+சனி =  பணியிடத்தில் மன அமைதியின்மை.

சூரியன்+சனி+செவ்வாய் = பணியிடத்தில் எதிரிகளால் துன்பம், தொல்லை,                                    கொடுமைகளுக்கு ஆளாதல்.

சுக்கிரன்+கேது+புதன் = சொத்துகள், பூமி, பணம், மனைவி மற்றும் காதல்                               ஆகிவற்றால் வழக்கு விவகாரங்கள்.

         இப்படியாக ஒரு கிரகத்துக்கு 12 அல்லது 2 இல் பகை கிரகம் இடம்பெற அல்லது ஒரு பகை கிரகம் இரு நட்பு கிரகங்களுக்கு இடையே இருக்க நற்பலன்கள் ரத்தாகும்/இல்லாமல் போகும்.

         4 ஆம் விதிக்கான விளக்கம் குருவும், வக்ர சுக்கிரனும் கிரக பரிவர்த்தனை பற்றிய விளக்கம் முந்தைய ஜாதகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஜாதகம் – 8

         இந்த ஜாதகத்தில் சூரியனும், சந்திரனும் இராகுவின் பிடியில் பரிவர்த்தனை பெற்றுள்ளன. இதன் காரணமாக ஜாதகரின் பெற்றோர் நீர் மற்றும் வாகன விபத்தை எதிர்கொண்டு மீண்டு வரவேண்டிய சூழ்நிலை ஏற்படும். மேலும், சுக்கிரன் வக்ரமாகி உள்ளதால், ஜாதகரின் சகோதரி, பெற்றோர்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் மற்றும் ஆபத்துக்களை பொறுத்துக்கொள்ள முடியாமல் தன் கடைசி (நீச சுக்கிரன்) மூச்சை இழுத்தாள்.  இந்த நீச சுக்கிரனால் ஜாதகர் தனக்கு சேர வேண்டிய பரம்பரை சொத்துக்கள் கிடைக்காமல் வஞ்சிக்கப்பட்டார். மேலும், இவரது மனைவி முறையற்ற காதல் விவகாரங்களில் ஈடுபட்டார்.

         முதலில், சனிக்கு 2 ஆம் இடத்தில் இருக்கும் செவ்வாய் மலை போன்ற துன்பங்களை மனிதருக்கு தந்தது. செவ்வாய் கும்பத்திற்கு சென்று திரும்ப வந்த போது மீண்டும் எதிரிகளின் தொந்திரவு ஆரம்பமானது.
        





செவ்(வ)
உ. ஜா. 8
சூரி
சனி
இராகு
சந்திரன்



சுக் (வ)


         இது நமக்கு வக்ர கிரக நிலையில் உள்ள கிரகங்களின் மீதான துல்லிய ஆராய்ச்சியின் மூலமாகவே ஜாதக நிலைகள் ஆராயப்படவேண்டும் என்பதை அருதியிட்டுக் கூறுகிறது.

சோதனை அடிப்படையில், உச்ச கிரகங்களால் ஏற்படும் விசேஷமான தாக்கங்கள்.

         பிரபஞ்ச காப்பாளர் மகாவிஷ்ணுவின் அவதார ஜாதகம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஜாதகத்தில், (9) ஜோதிடத்தில் நாடி விதிப்படி குரு இருக்கும் இடத்திற்கு 12 இல் குருவை வைத்தோமானால் இங்கு மிதுன இராசி ஜாதகரின் முந்தைய அவதாரத்தை குறிகாட்டும். புதனின் ஆட்சி வீடான மிதுனம், ஜீவன் காரகன் குரு விஷ்ணவின் அடையாளத்தைப் பெறுகிறார். ஏனெனில், புதன் விஷ்ணுவைக் குறிகாட்டுகிறது. இந்து பாரம்பரிய கதைகள் மூலமாக ஶ்ரீதேவி, பூதேவி சமேதராக இருக்கிறார். குருவை மிதுனத்தில் வைக்கும் போது மீனத்திலுள்ள புதனுடன் கிரக பரிவர்த்தனை பெறுகிறது. அங்கு சுக்கிரன் உச்சமாதலால் அங்கு மகாலட்சுமி வடிவில் ஶ்ரீ தேவியை அடைகிறார். புதன் பூமியைக் குறிகாட்டுவதால் பூதேவியை இணைகிறார்.


புத,சுக்

சூரி


கேது
உ. ஜா. 9
லக்// சந்
குரு
செவ்
இராகு



சனி



        ஶ்ரீதேவியைக் குறிப்பதாக சுக்கிரனை எங்ஙனம் கருதுவது ? கும்பத்திலுள்ள கேது கிரகங்களுக்கு உரிய வேராகக் கருதப்படுகிறது. மீனமும், கடகமும் வடக்கு திசையையும், கடக சந்திரன் நீரையும், மீன புதன் இலையையும், சுக்கிரன் தாமரையையும் குறிகாட்டுகின்றன. இந்த சின்னங்களை ஒருங்கிணைக்கும் போது கேது (வேர்கள்)+ சந்திரன்(நீர்)+ மீனம்(திருமகளின் இருப்பிடம் அல்லது தேவலோகம்)+ மீன புதன் (இலை) + சுக்கிரன் (மலரக் கூடிய தாமரை மொட்டு)  எனக் கொள்ளலாம்.

         மற்றுமொரு பூராண கதைப்படி மேஷம் காலபுருஷ தத்துவத்தின்- படைப்புக் கடவுளின் தலைப் பகுதி ஆகும். மீனம் பாதப் பகுதியாகும். மகாலட்சுமி விஷ்ணுவின் பாதத்தில் அமர்ந்து சேவை செய்வதை இது குறிகாட்டுகிறது. இலட்சுமியும் ஆசிர்வதிக்கப்பட்டவர் ஆகிறார். அதனாலேயே, மகாலட்சுமியை உச்ச சுக்கிரன் குறிகாட்டுகிறார். குரு ஜீவன் காரகர் ஆகிறார். கிழக்கே உதிக்கும் சூரியன்  தலைமையைக் குறிக்கிறார்.

          இராமா அவதாரத்தில் இராமன் மும்மூர்த்திகளின் ஸ்வருபமாக விளங்குகிறார். பிரம்மா, விஷ்ணு, சிவன் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய தொழில்களை செய்கின்றனர். பிரம்மாவை குரு, கேது மற்றும் சுக்கிரன் குறிகாட்டுகின்றனர். படைப்பவன் பிரம்மா வலது கரத்தில் வேதப் புத்தகத்துடன் தாமரை மலரில் வீற்று, தியான ஜெபமாலையுடனும், அழிவற்ற அமுத நீரூற்றுடனும் காட்சி அளிக்கிறார்.

         இதையே வேறுவிதமாக பார்க்கும் போது கடகம் மற்றும் மீனம் வடக்கு திசையயை ஆள்கின்றனர். மீனம் தேவலோகம் ஆகும். குரு மீன இராசியின் பார்வையை பெறுகிறார். அங்கே புதன் தியான அறிவுக்கான புத்தகத்தை குறிகாட்டுகிறார். அதற்கு 12 ஆம் பாவமான கும்பத்தில் கேது தியானத்தையும், வாழ்க்கையில் இருந்து விடுபடுதலையும் குறிகாட்டுகிறார். சுக்கிரன் தெய்வீக தாமரை மலரைக் குறிகாட்டி, பிரம்மாவை நினைவுறுத்துகிறார்.

          புதனுடன் இணைந்த ஜீவன் குரு வட திசை இராசிக்கு உரியவர் பூதேவியை குறிகாட்டுகிறார். இது பிரபஞ்ச காப்பாளர் மகாவிஷ்ணுவையும் குறிகாட்டுகிறது.

          கடகத்தில் உள்ள குரு சந்திரனுடன் இணைந்து பார்வதியை குறிகாட்டுகிறார். அதற்கு 7 ஆம் பாவமான மகரத்தில் உள்ள செவ்வாய் ருத்திரன் ஆகிய மகேஸ்வரனைக் குறிகாட்டுகிறார்.

         இராமாவதாரத்தில் இராகு ஆகிய அரக்கர்களின் தலைவன் மகா துவாராதிபதியை (தலைவாசல் காவலன்) குரு, செவ்வாயின் (ஈஸ்வரன்) உதவியுடன் அழித்தான்.  இங்கு, இராமரின் ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகள், அவர் தனது வாழ்க்கையின் குறிக்கோள்களை அடைய எவ்வளவு தூரம் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியதிருந்தது என்பதைக் காட்டுகின்றன.

         தொழிலுக்கான குறிகாட்டி சனி துலாத்தில் உச்சம் பெற்று, தந்தைக்கு காரகம் பெற்ற சூரியன் அதற்கு 7 ஆம் இடமான மேஷத்தில் உச்சம் பெற்று உள்ளார். சனிக்கு திரிகோணத்தில் கும்பத்தில் கேது ( மேற்கு திசை இராசிகள் துலாம் மற்றும் கும்பம்) இது வாழ்க்கையின் குறிக்கோளான பிறப்பிலிருந்து இறப்புவரையான வட்டத்தில் மனித விடுதலையைக் குறிகாட்டுகிறது. சனிக்கு அடுத்து உள்ள உச்ச செவ்வாய் உச்ச குருவால் பார்க்கப்படுகிறது. இங்கு செவ்வாய் பகவான் இராவணன், கும்பகர்ணன் போன்ற அரக்கர்களிடம் இருந்தும் சுக்ரீவன் போன்ற நல்லவர்களைக் காக்கவும் இராமனால் உபயோகப்படுத்தப்பட்ட ஆயுதங்களான வில்லும் அம்பையும் குறிகாட்டுகிறது. அடுத்து உச்ச சுக்கிரன் இராவணனிடம் இருந்து சீதாதேவியை விடுதலை செய்து காத்ததையும் குறிக்கிறது. முடிவில் உச்ச சூரியன் இராமனுக்கு அயோத்தி சக்ரவர்த்தியாக பட்டாபிஷேகம் செய்துவைத்ததை குறிகாட்டுகிறது.

         இராவணன் சீதாதேவியை இலங்கைக்குக் கடத்திச் சென்று, சிறை வைத்ததற்கு அவளையே குற்றம்சாட்ட வேண்டும் எனக் குறிப்பிடபட்டு உள்ளது. இராமாயணத்தில், இராவணன் சீதையை பலவந்தமாக கடத்தி சென்று இலங்கையில் சிறைவைத்தததாக விளக்கப்பட்டுள்ளது. ஆனால் சீதாதேவி, மகாலட்சுமியின் மனிதப்பிறப்பே ஆகும்.  இராவணன் பலவந்தமாகக் கடத்தியது மகாலட்சுமியின் மறு அவதாரமான மனிதப் பிறவி சீதாவையே கடவுள் மகாலட்சுமியை அல்ல  என்பது சில மிக புலமை வாய்ந்த நூல் ஆசிரியர்களின் கருத்து ஆகும்.
         இதற்கான விளக்கம் – சிம்ம இராசி அரசர்களின் மாளிகை ஆகும் இந்த மாளிகை வாசலின் வாயில் காப்போன் இராகு ஆவான். இந்த நிழல் கிரகம் அரக்கன் இராவணனையும் குறிகாட்டுகிறது. இடப் புறமாகச் சுற்றும் இராகுவுக்கு இரண்டாவது இராசி கடகம் ஆகும். இதன் அதிபதி சந்திரன் களங்கத்திற்கும், தோஷத்திற்கும், கெட்ட பெயர் எடுப்பதற்கும் காரகம் பெறுகிறது. முன்னரே குறிப்பிட்டபடி கடகமும், மீனமும் ஒரே வடதிசை இராசிகளாகும். எனவே, சந்திரன் ஒருதிசை கிரகங்களான மீனத்திலுள்ள சுக்கிரன், புதனுடன் தொடர்பு கொள்கிறது. இந்த சந்திரன், சுக்கிரன் தொடர்பே சீதா தேவிக்கு(சுக்கிரன்) ஏற்பட்ட களங்கத்திற்கு, கெட்ட பெயருக்கு (சந்திரன்) காரணமாகிறது.

         இராமனின் ஜாதகத்தில் உள்ள சுக்கிரன், புதன், சந்திரன் இணைவு இராகுவின் பாதிப்பு மற்றும் பார்வையால் இராமன் சந்தேகப்பட்டு சீதாவை குற்றம் சாட்டியதற்குக் காரணமானதோடு மட்டுமல்லாமல், அரக்கர்களால் சீதாவுக்கு ஏற்பட்ட தொல்லைகள், துயரங்களுக்கும் காரணமாயிற்று. குரு உச்சமாகி சந்திரனுடன் இணைந்து, பரிவர்த்தனை காரணமாக சுக்கிரன், புதன் தொடர்பால் மூன்று பெண் கிரகங்கள் குருவின் பலத்தைக் குறைத்துவிடுகின்றன. இராமனின் ஜாதகத்தை அலசினால் இன்னொரு இதிகாசம் எழுத வேண்டியதிருக்கும் ஆதலால் நாடியில் சில விதிகளுக்கு விளக்கத்தை மட்டுமே சொல்லியுள்ளோம்.

ஜாதகம் – 10

         இந்த ஜாதகத்தில் (10) குரு நீசம். ஆனாலும் சனியுடனான கிரக பரிவர்த்தனை காரணமாக குருவின் பாதிப்பு பாதியாகக் குறைவதோடு, நீசமும் பங்கமாகிறது. சூரியன் நீசம் பெற்றுள்ளான். சூரியனுக்கு சுக்கிரனுடனான கிரக பரிவர்த்தனை சூரியனின் பாதிப்பை குறைப்பதோடு, நீசமும் பங்கமாகிறது. இதே போன்று சந்திரன், செவ்வாய் பரிவர்த்தனை நீச சந்திரன், நீச செவ்வாய் ஆகிய இருவரின் பாதிப்பைக் குறைத்து, நீசமும் பங்கமாகிறது. இது ஒரு சிறப்பு நிலை. இங்கு இவ்விரு கிரகங்களுமே தங்கள் சுயவீடுகளிலேயே இருப்பதாகக் கொள்ளலாம்.







உ. ஜா. 10
செவ்
குரு
சுக்

சனி
சந்
சூரி
புத

ஜாதகம் - 11

புத





உ. ஜா. 11
இராகு
செவ்,சுக்
கேது




சனி



      இந்த ஜாதகத்தில் (11) நீச புதன் குருவின் பரிவர்த்தனையால் உச்ச பலனைப் பெறுகிறது. பரஸ்பர பரிவர்த்தனையால் நீச கிரகம் உச்ச நிலை பெறுவது ஒரு சிறப்பு நிலையாகும். சனி உச்சம் பெற்றுள்ளது. சுக்கிரனுடனனா பரிவர்த்தனை முன்னர் குறிப்பிட்ட பரிவர்த்தனையான கிரகங்களைப் போல் உச்சம் அடைவதில்லை. மாறாக ஆட்சி பலம் மட்டுமே அடைகிறது. ஏனெனில், சனி தனது தீவிர பகை கிரகங்களான செவ்வாய் மற்றும் இராகு உடன் இருப்பதே காரணமாகும். இதன் காரணமாக சனி பலம் இழக்கிறது. அதுவும் நீச நிலைக்கும் கீழாக பலம் இழக்கிறது. இந்த கிரக நிலைகளின் காரணமாக ஜாதகர் மதிப்புமிக்க வேலையில் சேர்ந்து, அங்கே தனது செல்வாக்கை பயன்படுத்தி நினைத்த போதெல்லாம் தனக்கு சாதகமான இடத்திற்கு பணிமாற்றம் பெற்றுக் கொள்வார். அதுவும் தன் இருப்பிடத்திற்கு மிக அருகிலுள்ள இடத்திற்கோ அல்லது மாமனார் வீட்டுக்கு அருகிலோ மாற்றல் வாங்கிக் கொள்வார். மாற்றல் காரணமாக தங்கள் உறவுகளுடன் மகிழலாம், சொத்துக்களுக்கு மிக அருகில் இருக்கலாம், குடும்பத்தார், நண்பர்கள் ஆகியோருடன் சந்தோஷமாக காலத்தைக் களிக்கலாம் என்று நினைத்துக்கொள்வர். ஆனால், பல நேரங்களில் மாற்றலாகி ஏன் வந்தோம் ? – என்று வருத்தப்படும் அளவுக்கு அங்கே கஷ்டப்பட வேண்டியதிருக்கும். கர்மகாரகன் சனியின் பலம் இழந்த நிலையே இதற்குக் காரணம்.  உச்ச சனி மதிப்பு மிக்க பணியைத் தந்தாலும் பரிவர்த்தனை பலன் தராத நிலை, பகை கிரக தொடர்பு என்ற நிலையால் வேலையில் அதிக கஷ்டங்களை அனுபவிப்பார். அவர் நினைத்தபடி சுகமாயிருக்கும் என நினைத்த இடமாற்றம் தொல்லையாகிவிடும். எனவே, உச்சம் பெற்ற கிரகம் பரிவர்த்தனை பெற்றாலும், அது தனது சொந்த வீட்டில் பகை கிரகங்களுடன் இணையும் போது பலன் மாறும் அசாதாரண நிலை ஏற்படுகிறது.

ஜாதகம் – 12

         இந்த ஜாதகத்தில் (12) சனி நீசம். சனியின் செவ்வாயுடனான பரிவர்த்தனையால் சனி தன் சொந்த வீட்டில் இருப்பதாகிறது. அங்கு குருவும் இணைந்துள்ளது.                                                                                                                                                                    


சனி
சந்

செவ்
குரு
உ. ஜா. 12
சுக்
இராகு

கேது








      இதனால் ஜாதகர் தன் பணியில் வேறு இடத்திற்கு மாற்றம் பெற்று அங்கே அவருக்கு சிறந்த வரவேற்பும், கௌரவமும், மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். ஆரம்ப காலத்தில் வரும் கஷ்டங்களை சமாளித்து சுமாரான வேலையை அடையும் இவர் பின்னர் வேறு இடத்திற்கு மாற்றம் பெறும் போது புதிய இடத்தில் அவர் போற்றப்படுவார். இதற்குக் காரணம் பரிவர்த்தனையே ஆகும். கர்மகாரகன் சனி கௌரவம், மதிப்பு மரியாதைக்கு உரிய கிரகமான குவுடன் தொடர்பு கொள்ளும் போது இது சாத்தியப்படுகிறது.

ரிஷபத்தில் உள்ள சந்திரன் உச்சம். அவர் சுக்கிரனுடன் பரிவர்த்தனை பெற்றுள்ளதால் அங்கு தனது பரம வைரியான இராகுவுடன் சந்திரனுக்கு தொடர்பு ஏற்படுகிறது. அதனால், இந்த ஜாதகருடைய தாய் பயத்தாலும், சளி மற்றும் மூட்டுவலியாலும் கஷ்டப்படுகிறார். ஜாதகரும் மனதில் ஒரு மாயத் தோற்றத்துடனும், பிரமையுடனும், ஏமாற்றத்துடனும் துன்பப்படுகிறார்.

         இதுவரை, உச்ச கிரகம் எங்ஙனம் தனது பலத்தை இழக்கிறது, நீச கிரகம் எப்படி பங்கம் அடைகிறது என்பதற்கான முழு விவரங்களையும் அறிந்தீர்கள் அல்லவா ?

         ஜாதகம் - 13




இராகு

சூரி,புத
செவ்,சந்
சுக்.

உ. ஜா. 13
குரு





கேது
சனி


இந்த ஜாதகத்தில் (13) குரு உச்சம் பெற்றிருந்தாலும், அதற்கு  2, 12 மற்றும் 7 ஆம் இடங்களில் ஒருகிரகமும் இல்லாததால் , உச்ச குருவால் ஜாதகருக்கு எந்த ஒரு நன்மையும் ஏற்படாது.

         சனி உச்சமாகி, அதற்கு அடுத்துள்ள 2 ஆம் வீட்டில் செவ்வாய்க்கு நண்பரும், சனிக்கு பரம வைரியுமான கேது உள்ளார். சனிக்கு 12 ஆம் வீட்டிலும், 7 ஆம் வீட்டிலும் கிரகங்கள் இல்லை. இதன் காரணமாக உச்ச சனியால் ஜாதகருக்கு எந்தவித பயனும் இல்லை. எனவே, ஜாதகருக்கு தொடர்ந்து வேலைகள் இன்றி விட்டு விட்டே வேலை பார்க்கும் நிலை ஏற்பட்டது. அத்துடன் உலக பந்தங்களில் இருந்து விடுபடும் எண்ணமே இருந்தது. அத்துடன் இராகு – கேதுக்களுக்கு ஒருபுறம் குருவும், சனியும் இருக்க, மறுபுறம் மற்ற கிரகங்கள் இருப்பதால் ஜாதகர் தான் இருக்கும் இடத்தைவிட்டு வெகுதூரத்தில் வேலை பார்க்கும் நிலை ஏற்பட்டது. அங்கு அவர் வேலையில் பல கஷ்டங்களையும், ஆபத்துக்களையும் சந்திக்க வேண்டியதாயிற்று.

ஜாதகம் - 14

சுக். சந்
சூரி




கேது

உ. ஜா. 14
குரு
சனி



இராகு




         இந்த ஜாதகத்தில் (14) குரு உச்சமாகி, அவருக்கு 12 ஆம் இடத்தில் கேது உள்ளார். 7 ஆம் இடத்தில் சனி உள்ளார். இராகு தனது கடிகார சுற்றுக்கு மறு சுற்றாக நகரும்போது முதலில் குருவை தொடுகிறார். ஆனால், கேது வெளியில் இருக்கிறது. இராகு முதலில் ஜீவன் காரகன் குருவைத் தொடுவதால் ஜாதகர் குழந்தைப் பருவத்திலேயே பாலாரிஷ்டம் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆனால், குரு, சந்திரனுடன் பரிவர்த்தனை பெற்றுள்ளதால் அங்கு ஆத்ம காரகன் சூரியனைத் தொடர்பு கொள்கிறார். இதன் காரணமாக மரணத்தின் பிடியிலிருந்து கடவுளின் அருளால் ( சூரியன் = தெய்வீகத் தன்மை ) விடுபட்டுவிடுகிறார். இந்த கிரக நிலைகளால் தீய பலன்கள் மாறி நன்மை ஏற்படுகிறது. இது பக்த மார்க்கண்டேயனின் ஜாதகமாகும்.

ஜாதகம் - 15


கேது
செவ்
குரு,சனி



உ. ஜா. 15
குரு
சந்

லக்//,சூரி




இராகு,சுக்
புத


         இந்த பெண்ணின் ஜாதகத்தில் (15) தந்தைக்கு குறிகாட்டியான சூரியன் தனது ஆட்சி வீட்டில் உள்ளார். அதற்கு 2 ஆம் வீட்டில் பரம எதிரிகளான இராகு மற்றும் நீச சுக்கிரன், உச்ச புதன் ஆகியோர் உள்ளனர். சூரியனுக்கு 7 ஆம் இடத்தில் கிரகங்கள் இல்லை. சூரியன் ( சூரியன் ஆண் மகவுக்கும் காரகம் பெறுவதால்) மிகவும் பாதிப்பு அடைவதால் ஜாதகிக்கு சகோதரன் இல்லை. 

ஜாதகம்-16

குரு

இராகு



உ. ஜா. 16



சூரி


சந்,கேது
செவ்


புத
        

         இந்த ஜாதகத்தில் (16) நீச சந்திரன், மோட்சத்திற்கு உரிய கேதுவுடன் இருப்பதால் நீசம் பங்கம் ஆகிறது. நீச சந்திரனால் (மனித மனம்) ஜாதகர் கீழ்தரமான மனதை உடையவர் ஆகிறார். எனவே, ஜாதகர் பல நேரங்களில் குறுகிய மனநிலையால் கஷ்டப்பட்டார். ஆனால், சந்திரன் கேதுவுடன் (இரக்ககுணம்) இணைந்து நீச பங்கம் ஆனதால் ஜாதகருக்கு பிறருக்கு உதவும் குணமும் இருந்தது. உச்ச புதன் + நீச சந்திரன்+ கேது + செவ்வாய் (புதனின் பரம எதிரி) அதன் காரணமாக புதன் பலம் இழந்து, ஜாதகரின் கல்வி நிலையில் தடைகளைத் தருகிறார். அத்துடன் கீழான நண்பர்களுடன் பழக்கத்தை ஏற்படுத்துகிறார். ஆனால், சுய வீட்டில் உள்ள புதனை பலம் மிக்க குரு 7 ஆம் வீட்டில் இருந்து பார்ப்பதால் ஜாதகர் மெல்ல மெல்ல முன்னேறி நன்கு படித்து சமூகத்தில் நல்ல கௌரவத்தையும் மதிப்பையும் பெற்று சிறக்கிறார்.

ஜாதகம் - 17






சனி

உ. ஜா. 17
சூரி
குரு



செவ்






         இந்த ஜாதகத்தில் (17) ஜீவன்- நீச குருவால் ஜாதகரின் ஆரோக்கியமும், ஆயுளும் கேள்விக்குறி ஆகிறது. ஆனால், குருவுக்கு 7 இல் ஆத்ம காரகன் சூரியன் இருப்பதால் குருவின் நீசம் பங்கமாகிறது. அத்துடன் குருவுக்கு இருபுறமும் சனி, செவ்வாய் என நட்பு, சம கிரகங்கள் உள்ளன. இதுவும் குருவுக்கு பலத்தை அளிக்கின்றன. எனவே, ஜாதகருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை.

ஜாதகம்-18

         இந்த ஜாதகத்தில் (18) சிம்மம் குருவுக்கு நன்மை தரும் இராசியாகும். அதற்கு 2, 12 மற்றும் 7 ஆம் இடங்களில் கிரகங்கள் இல்லை. எனவே, ஜாதகர் அங்கும் இங்கும் அலைந்து திரிந்து வெகுதூரம் சென்று யாருடைய உதவியும் கிடைக்காமல் வாழ்வார். சில நேரங்களில் வாழ்க்கை அபாயகரமானதாக இருக்கும். ஆயினும், சூரியன், குரு பரிவர்த்தனையால் ஒவ்வொரு கிரகமும் பிற கிரகங்களின் இராசிகளில் இடம் பெறுவதால் அவருக்கு ஏற்பட்ட இந்த அசுப பலன்கள் அனைத்தும் நீங்கி வாழ்க்கையில் முன்னேற்றங்களும், வெளி நாட்டில் குடியிருக்க வீடும் பெற்று மகிழ்ந்தார்.

சுக்,சூரி
புத


சனி,செவ்
இராகு


உ. ஜா. 18




குரு
கேது
சந்




No comments:

Post a Comment