Search This Blog

Thursday 23 May 2019






நரேந்திர மோடியும் ..... நாற்காலியும் !

கிடைத்தது

   
         தற்போதைய சூடான விவாதத்திற்குரிய தலைப்பு வரும் பாராளுமன்ற தேர்தலில் யார் வென்று பிரதமர் ஆவார் ? - என்பதே யாகும். அதிலும் மக்களின் துருவ நட்சத்திரம் இளைஞர்களின் இணையற்ற தலைவன் திரு. நரேந்திர தாமோதர மோடி அவர்களின் ஜாதக நிலைப்படி எதிர்காலம் எப்படி உள்ளது என்பதை இக் கட்டுரையின் மூலம் அலசுவோம்.    
      பாராளுமன்றத் தேர்தலுக்கான முக்கிய வேட்பாளாராக, மக்களாலும் அரசியல்வாதிகளாலும் இருவரின் பெயர்கள அழுத்தமாக உச்சரிக்கப்படுகின்றன. பிரதம மந்திரிக்கான இந்த இசை நாற்காலியில் அமரப்பொவது யார் ? – என்ற கேள்வியே, இன்றைய சராசரி இந்தியனின் மனதிலும் தலையாய கேள்வியாக ஓடிக்கொண்டு இருக்கிறது. பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக மோடியே முன்னிலைப்படுத்தப்படுகிறார். காங்கிரஸ பக்கம் ராகுல் ஆவார்.
   

         உலகப் புகழ் பெற்றவர், வாழ்க்கையில் சாதாரண நிலையில் இருந்து, எவரும் எட்ட முடியாத உயரத்திற்கு உயர முடியும் என்பதற்கு நமக்கு முன்னுதாராணமாகத் திகழும் நரேந்திர தாமோதர் தாஸ் மோதீ 2014 மே, 26 ஆம் நாள் முதல் இந்தியாவின்  14 வது பிரதம மந்திரி ஆனார். அவர் சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் பிரதமர் ஆவார்.  வாரணாசி தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். திரு. மோடி அவர்கள் கடந்து வந்த பாதையை உற்று நோக்குவோம்.
       அவர் அப்போதைய பாம்பே மாநிலமும், தற்போதைய குஜராத் மாநிலத்தில் வாத்நகர் அருகிலுள்ள ஜீனாகர் – எனும் சிற்றூரில், 1950 ஆண்டு, செப்டம்பர் திங்கள் 17 ஆம் நாள், காலை 9-35 மணிக்கு, திரு தாமோதர தாஸ் மூல்சந்த் மற்றும் திருமதி ஹீராபென் தம்பதிகளுக்குப் பிறந்த 6 குழந்தைகளில் மூன்றாவது மகனாகப் பிறந்தார்.  மத்தியதர குடும்பத்தில் பிறந்த அவர், தனது ஆரம்பக் கல்வியை வாத்நகர் பள்ளியில் முடித்தார். பின்னர், தனது சகோதரருடன் தேநீர் கடையை நடத்திவந்தார். அதன் பிறகு முழுநேர ‘ராஷட்ரீய சுயம் சேவக் சங்’  எனும் ஆர். எஸ். எஸ் ஸின் முழுநேர பிரச்சார பீரங்கியாகும் வரை, குஜராத் மாநில போக்குவரத்துத் துறையின் சிற்றுண்டி விடுதியில் பணியாற்றினார். அரசியல் விஞ்ஞான பாடத்தில் உழர்கல்வி கற்றார். 
    
       தனது திறமையாலும், நேர்மையாலும், முழு முயற்சியாலும், கடின உழைப்பாலும், குஜராத் பாரதீய ஜனதா கட்சியின் பொறுப்பாளரானார். பின்னர் 1995 இல் ஹரியானா மற்றும் ஹிமாசலப்பிரதேசம் ஆகியவற்றின் பொறுப்பாளரானார். 1998 இல் பாஜக தேசிய செயலாளர் ஆகி, 2001 இல் குஜராத்தின் முதல்வராகவும் படிப்படியாக உயர்ந்தார். குஜராத்தையும் நாட்டின் முன்னோடி மாநிலமாக்கினார். அதன் காரணமாக நான்கு முறை குஜராத்தின் முதலமைச்சராக சிறப்பாக பணியாற்றியதற்கு மக்கள் தந்த பரிசே 2014 இல் பிரதம மந்திரி பதவி ஆகும். தற்போது நரேந்திர மோடியின் ஜாதகம் என்ன சொல்கிறது ?
    
   

இராகு
குரு(வ)
     இராசிp

17  09 -- 1950
கேது
லக்//



நவாம்சம்
செவ்
காலை 9 - 35
வாத்நகர்
குஜராத்.;.
சனி
சுக்
புத(வ)
சூரி
இராகு
சுக்
செவ்.
சந்;
லக்//;
புத(வ)சூரி
கேது
சனி
குரு(வ)
சந்;

    


       மக்களுக்குத் தேவையான கடமைகளைச் செய்யும். அவர்களின் துக்கங்களிலும், துன்பங்களிலும், வலிகளிலிலும் பங்கேற்று அவர்களுக்கு உண்ண உணவு, இருக்க இடம் என மக்களின் தேவையறிந்து செய்யும், மன்னன் போல் பணியாற்றி, அவர்களின் அன்பையும், ஆதரவையும், ஆசிர்வாதத்தையும் பெற்ற திரு. மோடி அவர்களின் ஜாதகம் இது. பெருவாரியான ஜோதிடர்களின் கருத்துப்படி துலா இலக்கினம், விருச்சிக இராசியில் பிறந்துள்ளார்.
;

        ஜன்ம இலக்னம் துலாம், விருச்சிக இராசி, அனுஷ நட்சத்திரம் ஆகும். பொதுவாக அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெற்றியாளர்கள். புகழ், மதிப்பு, மரியாதை அடையப் பிறந்தவர்கள். வெளிநாட்டுப் பயணங்களை மேற் கொள்ளுதல், உலகப் புகழ் பெறுதல், வெற்றியடைதல் இவையனைத்தும் அளிக்கவல்லது இந்த அனுஷ நட்சத்திரம். ஒரு பெரிய மக்கள் கூட்டத்தைக் கூட்டி, அவர்களுக்கு சிறந்த தலைமை ஏற்கும் தகுதியையும் அளிக்கவல்லது. அதேபோல், பாதுகாக்கப்பட்டவர், இரகசியங்கள் நிறைந்தவர், கலகம் அல்லது எதிர்ப்பு தெரிவிப்பவர், சுலபமாய் பாதிக்கப்படுகிற, இடமளிக்கிற, நுட்ப உணர்ச்சியுள்ள, உணர்ச்சிமிக்க நபராகவும், பிறரால் தவறான வழிகாட்டுதல்கள் ஆலோசனைகளைப் பெறுபவராகவும், மற்றவர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவராகவும் இருப்பார்.


         இலக்னாதிபதி சுக்கிரன், யோககாரகனான சனியுடன் இணைந்து இலாப பாவத்தில் இருப்பது, சந்தேகமின்றி ஓர் அனுகூல நிலையாகும். குருவின் பார்வை இலக்னத்தின் மீதும், சுக்கிரன் மற்றும் சனி மீதும் விழுகிறது. 12 இல் உள்ள உச்ச, அஸ்தமன, வக்ர புதன், கேது மற்றும், சூரியனுடன் இணைந்திருக்கிறார். புதன் அஸ்மனத்தால் பலமிழந்தவராக இருக்கிறார். இந்த இணைவுகள் அனைத்துமே அவரது வாழ்க்கையில் குழந்தைப் பருவம், வாலிபம் ஆகியவற்றில் பல கஷ்டங்களை அனுபவித்து  இன்றைய உயர்வான நிலைக்கு வர ஒத்துழைத்து உள்ளதென்றால் மிகையாகாது. இவர் இடைவிடாது ஊண் உறக்கம் இன்றி உழைக்கும் கடின உழைப்பாளியானார். சுக்கிரன், சனி இணைவு தாமதத் திருமணத்திற்கும், மகிழ்ச்சியற்ற மணவாழ்க்கைக்கும் காரணமானது. குருவின் பலம் மிக்க நிலையும், சனி, புதன் ஆகியோரின் பலம் குறைந்த நிலையும், பிறந்த போது நடந்த சனி திசையும் அவரை ஏழைக் குடும்பத்தில் பிறந்து பல இன்னல்களுக்குப் பிறகு நாட்டின் பிரதம மந்திரியாக அமர்த்தியுள்ளது.

              
       இது செவ்வாயின் ஆட்சி வீடு, சந்திரா இலக்ன கேந்திரத்தில் ஆட்சி பெறும் செவ்வாய் பஞ்ச மகா புருஷ யோகங்களில் ஒன்றான ருசக யோகத்தைத் தருகிறார். அத்ன் காரணமாக சந்திரனும் நீச பங்கம் பெறுகிறார். சந்திரனுடன் பரம நட்புடன் திகழ்கிறார். இதன் காரணமாக கடவுளின் கருணையும், சரித்திரத்தின் கருணையும், தாய் மற்றும் தாய் நாட்டின் கருணையும் கிடைத்தது. ஆம் அதிபதி சந்திர கேந்திரத்தில் இருப்பது முதல் இராஜ யோகத்தையும், இராஜ நீதிக்கு அதிபதிகளான 3 மற்றும் 6 க்கு உரிய வக்கிர குரு, திரிகோணத்தில் அமர்ந்து இலக்ன கேந்திரத்தைப் பார்க்கிறார். அரசியலில் வெற்றி பெற, 3 மற்றும் 6 ஆம் இடத்தின் பலம் மிகவும் முக்கியமானதாகும். அரசியலில், ஓர் அரசியல்வாதி பல எதிரிகளையும், எதிர்ப்புகளையும் வென்று முன்னுக்கு வர வேண்டியதிருக்கும்.
       திரு. மோதீயின் ஜாதகத்தில் 3 மற்றும் 6 ஆம் இடத்து அதிபதிகள் நல்ல நிலையில் அமர்ந்து, யோககாரகன் சனி மற்றும் இணைந்துள்ள இலக்னாதிபதி சுக்கிரனையும் நற்பார்வை புரிகிறார். இந்த நிலை எதிர்ப்புகளையும் மீறி அவருக்கு ஏற்றம் தந்தது.இலக்னாதிபதி சுக்கிரன் சுயசாரம் பெற்று வர்கோத்தமும் பெற்று, உபஜெய ஸ்தானத்தில் உள்ளார். இலக்னாதிபதி, மத்திய தரக் குடும்பத்தில் உதித்த திரு. மோடியை, மேலும் மேலும் மலையென உயர வைத்தது. சனியால் பார்க்கப்படுவது இரண்டாவது இராஜயோகமாகும். சனியும், குருவும் பரஸ்பர பார்வை புரிகின்றனர். இப் பார்வையால் தேசத்தின் குடும்பமான மக்களோடு மக்களாக இணைந்து, பிறந்த மண்ணுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் செயல்பட வைக்கிறது. 5 ஆம் இடம்  மக்களின் நம்பிக்கை, பிரியம் ஆகியவற்றைக் குறிக்கிறது. மேலும், இந்த நிலை ஜாதகரை சாமர்த்தியசாலி ஆக்கியது. இந்த இணைவுகளே அவரை அரசியலுக்கும் இழுத்து வந்தது.

   
    மங்களன் எனும் 2 மற்றும் 7 க்கு அதிபதியான செவ்வாயும், தனபாவத்தில் நீசமான கர்ம பாவாதிபதி சந்திரனும் இணைந்து சந்திர மங்கள யோகத்தைத் தருகிறார்கள். கிரக சாம்ராஜ்யத்தின் தளபதி செவ்வாய் வீரமான மற்றும் விவேகமான பேச்சுத் திறனையும், ஜலத்ததுவ சந்திரன் ஜலப் பிரவாகமாக, மடை திறந்த வெள்ளம் போன்ற பேச்சுத் திறனையும் அளிக்கின்றார். இரண்டு மற்றும் 7 ஆம் அதிபதியுமான செவ்வாய் தனபாவத்தில் நீசமான கர்ம பாவாதிபதி சந்திரனுடன் அமர்வு. இந்த செவ்வாயின் நிலை அவருக்கு தைரியத்தையும், எந்த ஒரு முடிவையும் தயங்காமல், துணிந்து எடுக்கும் ஆற்றலையும் வழங்குகிறது. அதற்குத் தேவையான புத்தி கூர்மை, பகுத்தறியும் தன்மை அளித்தாலும், மணவாழ்க்கையைப் பொறுத்தவரை அனுகூலமான நிலையல்ல.

        இலக்னாதிபதி மற்றும் 8 ஆம் அதிபதி சுக்கிரன், இலாப பாவத்தில் இடம் பெற்றுள்ளார். அவருடன் சுக மற்றும் பூர்வ புண்ணிய பாவாதிபதியும் யோக காரகருமான சனி (அஸ்தமனம்) தனது பகை வீட்டில், தனது நண்பரான சுக்கிரனோடு இணைந்து, இலாப பாவத்தில் உள்ளார். இந்த இணைவு ஜாதகருக்கு வாழ்க்கையில் ஒரு சுய கட்டுப்பாட்டை வழங்கியது. நேர்மையானவராகவும், எதையும் வெளிப்படையாகப் பேசுபவராகவும் ஆக்கியது ஆரம்ப காலத்தில் வெற்றிகளைத் தாமதமாகக் கொடுத்தாலும் பின்னர் வெற்றியாளர் ஆவார். இதனால் ஜாதகர் மிகவும் நம்பத் தகுந்தவர். இவரது பொறுப்புணர்வு, ஆழமான வேரைப் போன்று மனதில் பதிந்த்தாய் இருக்கும்.
       பாக்கிய மற்றும் விரயாதிபதி புதன் தன் சுய வீடான 12 ஆம் பாவத்தில் உள்ளார். உச்ச மடைந்து, அஸ்தமனமான, வக்கிரமான புதனோடு, சூரியனும், கேதுவும் இணைவு. உச்ச புதன் ஜாதகருக்கு புத்திசாலித்தனத்தைக் கொடுத்து, தகவல் தொடர்பில் வல்லவராகவும், சிறந்த மேடைப் பேச்சாளராகவும் ஆக்கியது.
         இவரின் ஜாதகத்தில் குடும்ப பாவத்தில் செவ்வாய் மற்றும் நீச சந்திரன் இணைவு. சந்திரன் 10 ஆம் அதிபதி. 10 ஆம் அதிபதி 2 இல் இருப்பது குடும்ப சுகத்தைக் குறைத்து, வேலையிலும் கஷ்டங்களைத் தந்தது.

         இராகு 6 ஆம் வீட்டில் உள்ளார். இது நல்ல நிலையாகும். இதன் காரணமாக எதிரிகளை வெற்றி கண்டார். 6 ஆம் இடத்து மீது புதன், சனியின் பார்வையும் விழுகிறது. இவையெல்லாம், மோதீ அவர்களுக்கு கை கொடுத்து, அரசியிலில், எதிரிகளை வென்று ஏற்றம் பெற்றார்.
         இராகு மற்றும் கேது 6 ஆம் இடத்திலும், 12 ஆம் இடத்திலும் உள்ளனர். 12 இல் கேது இருப்பது மோட்ச நிலையை மற்றும் சன்யாச நிலையை அளிக்கும். நாட்டுக்காக, நாட்டு மக்களுக்காக வாழ்பவரானார்.

        சுக்கிர திசை மற்றும் குரு புத்தியிலேயே திரு. மோடி அவர்களை தசா புத்தி நாதர்கள் உயர, உயர உச்சிக்கே கொண்டு சென்றார்கள். 2001 இல் சுக்கிர திசை காலத்தில்தான், குஜராத் மானிலத்தின் முதலமைச்சர் பதவியை அலங்கரித்தார். சிலருக்கு, பதவி பெருமை சேர்க்கும். ஆனால், இவர், பதவிக்கே பெருமை சேர்த்தார். அப்போது அவர் தோளில் ஏற்றி வைக்கப்பட்ட ஆட்சி எனும் ஒளி விளக்கு, தொடர்ந்து சூரிய திசையிலும், தற்போதைய சந்திர திசையிலும், மேலும் ஒளிவிட்டுப் பிரகாசிக்கிறது. மேலும் நீசமான சந்திரன் பலம் மிக்க நீசபங்க இராஜயோகத்தைத் தந்ததால், அவருக்கு மக்களின் மனம் எனும் எனும் பல லட்சம் மலர்ச் செண்டுகளைப் பரிசாக அளித்தது. மிகச் சிறந்ததாகக் கருதப்படும் யோகங்களான ருசக யோகம் மற்றும் கஜகேசரியோகம் ஆகியவற்றால் அரசு எனும் கரடு முரடானான பெரும் மலையில் அவரால் ஏற முடிந்தது. இதை நிரூபிக்கும் வகையில் பல இன்னிங்ஸ் ஆடிய பின்னும் முதல் மந்திரி பதவியெனும் கிரிக்கெட் விளையாட்டில் கடைசி வரை வெளிவராத ‘நாட் அவுட் பேட்ஸ்மேனாகத் திகழ்ந்தார் திரு மோடி.

      2014 இல் சூரிய திசை மேலும்,மேலும் உயர்வு தந்தது. மேலும், உயர்வு தருவது உறுதி. கிரகங்கள் இராஜா ஆகவேண்டியவரை ஆக்கியே தீரும்.  

    தற்போது நடக்கும் சந்திர திசையானது மேலும் சக்தி மிக்க இராஜ  யோகத்தை அளித்தது. மேலும் அளிக்கவல்லது. புதன் புத்தியானது 2020 ஏப்ரல் வரை உள்ளது. புதன் புத்தியில் மீண்டும் பிரதமர் ஆகும் வாய்ப்புண்டு. அரசால், மக்களால் அங்கீகரிக்கப்படுவார். 27-3-2019 முதல் 21-6-2019 அந்திரத்தில் அதிகார பதவியை, முக்கிய இடத்தை அடைவார். சந்திர திசையில் பதவியில் உள்ளவர்களால் பயம், தூர தேச பயணங்கள், பணிகளில் தோல்விகள், கோபம், பிரியமானவர்களின் இழப்பு, வெற்றி மேல் வெற்றி ஆகியவையும் ஏற்படும்.பணம் சேர்ந்தாலும், புகழ், கௌரவம் குறைய வாய்ப்பும் உண்டு.
   
        
       இதனிடையே, ஒன்று பட்ட மனமுடைய உதிரிக் கட்சிகளின் உத்வேகம் கொண்டு சந்தர்பவாதக் கூட்டணி சகட்டுமேனிக்கு அமைந்துள்ளது. அதன் காரணமாக மோடி ஜீக்கு வாய்ப்புகள் அதிகமாகவே காணப்படுகிறது. தேர்தல் நாளின் கோசார நிலை நிற்கப் போகும் வேட்பாளர்கள், மக்களின் மன நிலை, மற்றும் கிரக நிலைகளே முடிவுகளை தீர்மானிக்கும் என்பதால் அவற்றின் கைகளிலேயே பொறுப்பை ஒப்படைப்போமாக. வாழ்க பாரதம் ! வாழிய பாரத மணித்திருநாடு. வந்தே மாதரம் !

No comments:

Post a Comment