Search This Blog

Sunday 12 May 2019

நாடியில் கோசார கிரகங்களின் கோலாட்டம் - 3










நாடியில் கோசார கிரகங்களின் கோலாட்டம் - 3




அத்தியாயம் - 3

அஸ்தமன கிரகங்களின் விளைவுகள்

         இந்துக்கள் முகூர்த்தம் வைப்பதற்கு முன் ஜோதிடரை அணுகி நல்ல நாள் பார்க்கச் சொல்கிறார்கள். சுக்கிரன் பெண்ணுக்கு ஜீவன் காரகன், ஆணுக்கு மனைவி காரகன் ஆவார். அவர் சூரியனுக்கு மிக அருகே வரும் போது ஜோதிடர்கள் திருமண நாளை ஒத்திப் போட்டு சுக்கிரனின் அஸ்தமனம் நீங்கி சூரியனை விட்டு சுக்கிரன் விலகிய பின்பே நாள் குறித்துத் தருவார். எனவே, சுக்கிரனின் நிலை, பெண் பார்க்கும் படலம் முதல் திருமணம் நடக்கும் வரை   திருமணம் சார்ந்த நிகழ்வுகளுக்கு முக்கியமானதாகிறது. ஜோதிடத்தில் சுக்கிரனும், சூரியனும் மிக அருகே நெருங்கி வரும்போது மற்றும் இரண்டும் ஒரு நட்சத்திரத்தின் ஒரே பாதத்தில் இருக்கும் போதும் சுக்கிரன் அஸ்தமனம் ஆவதாகக் குறிப்பிடப்படுகிறது. சுக்கிரன் அஸ்தமனம் ஆகும் போது ஆண் பெண் இருவருக்குமான இனப் பெருக்க சக்தி குறைகிறது. சூரியன், சுக்கிரன் இருவரும் ஒரே நட்சத்திர பாதத்தில் இருக்கும் போது ஜாதகருக்கு எந்தவித முன்னேற்றமும் இருக்காது. ஆகையால், ஒரு கிரகம் அஸ்தமனமாகி உள்ளதா ? இல்லையா என்பதை அறிதல் அவசியமாகிறது.

        சுக்கிரன் அஸ்தமனம் ஆனாலும் புதன், குரு ஆகிய கிரகங்களுடன் பரிவர்த்தனை பெறும் போது, சுக்கிரனுக்கு அஸ்தமன நிலையால் ஏற்படும் பலம் இழப்பு நீங்கி முழு பலத்தைப் பெற்றுவிடுகிறது.

        சூரியன் இராகுவோடு இணைந்து கிரகணமாகி, சுக்கிரனும் நெருங்கி அஸ்தமனம் ஆனால் சூரியனின் பலம் மட்டுமே குறையுமே அன்றி சுக்கிரனின் பலம் குறையாது. ஆகையால், பிற கிரகங்களின் சூரியனுடனான அஸ்தமன நிலை, அவை பரிவர்த்தனை பெற்றால் அந்த நிலைகளை தீர ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

        சூரியன், இராகு மற்றும் சுக்கிரனுடன் இணையும் போது, சுக்கிரன் அஸ்தமனம் ஆக அந்த ஜாதகர் ஆண் மகவினை இழந்து துன்பங்களை அனுபவிப்பார். ஆண் குழந்தை பெறும் முயற்சி தடைப்படும். ஆனால் பெண் குழந்தை பிறக்கும் வாய்ப்பு அதிகம் இருக்கும்.

         நாடி ஜோதிடத்தில் ஜாதகரின் ஜாதகத்தில் 12 இராசிகளில் உள்ள கிரக நிலைகளை மட்டுமே ஆராய்ந்து பலன் உரைக்க எடுத்துக் கொள்ளப்படுகிறது. அஷ்டவர்க்கம், வர்க்கக் கட்டங்கள், பிந்து சோதனை, தசா புத்தி பலன்கள் இன்ன பிற நிலைகள் பலன் உரைக்க எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. நாடியில் பலன் அறியும் முன் ஒருதிசை கிரகங்களின் நிலைகள் ஆராய்ந்தே ஒரு முடிவுக்கு வரவேண்டும்.


ஜாதகம் – 19

சூரி


புத
சுக்



உ. ஜா. 19
கேது
லக்//,
இராகு



சனி,
சந்
குரு
செவ்




         உதாரணமாக – இந்த ஜாதகர் (19) புகழ் பெற்ற ஆலய ஸ்தலத்தில்,நீர் நிலைக்கு அருகில் உள்ள பெரிய கோவில் அருகே பிறந்திருப்பார். இதை பாரம்பரிய முறையில் கண்டுபிடிப்பது எளிதல்ல. ஆனால், நாடி ஜோதிடத்தில் ஜீவன் காரகன் குரு ஆத்ம காரகன் சூரியன், விடுதலை, மோட்ச காரகன் கேது ஆகியோர் வட திசையைக் குறிக்கும் விருச்சிகம், மீனம் மற்றும் கடகம் ஆகிய இராசிகளில் உள்ளன. இதனால் குரு, சூரியன், கேது ஆகியோர் தொடர்பில் உள்ளனர். இந்த மூன்று கிரகங்களின் நிலைகளைக் கொண்டு இவர் புண்ணிய ஸ்தலத்தில், நீர்நிலை அருகே பிறந்ததை உறுதி செய்கிறோம். கடகம் மகாவிஷ்ணு ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்ட பார்க்கடலைக் குறிக்கிறது. இது அவர் பிறந்த ஊரின் புனிதத்தையும், மிகப் பெரிய கோவிலின் அருகாமையையும் குறிகாட்டுகிறது.


ஜாதகம் – 20

சந்,சனி



கேது
செவ்,சூரி
புதன்
குரு (வ)

உ. ஜா. 20
சுக்





இராகு





         இந்த ஜாதகத்தில் (20) கடக சுக்கிரன் அழிவற்ற அன்னையையும், விருச்சிகம், மீனம் மற்றும் கடகம் ஆகியவை வடதிசையையும், இராகு, சந்திரன், சனி மற்றும் சுக்கிரன் ஆகியோர் இந்த இராசிகளிலும் இருக்கின்றனர். ஜீவன் காரகன் கடகத்தில் உள்ளார். அவர் வக்ர குருவின் 7 ஆம் பார்வையாக சுக்கிரன் மகரத்தில் இருந்து பெறுகிறார். சுக்கிரன் + சந்திரன் +சனி + இராகு ஆகிய கிரக இணைவுகள் அழிவற்ற அன்னையை அல்லது இந்து கதைகளில் வரும் இறைவி தேவியைக் குறிக்கிறது. தெய்வீக கிரகம் வக்ர குருவின் பார்வை மனைவிக்கான காரகன் சுக்கிரன் மீது விழுகிறது. அதனால் இந்த ஜாதகரின் திருமணம் புனிதமான இடத்தில் அதாவது கோவிலில் நடந்தது என்பதைக் குறிகாட்டுகிறது. சமஸ்கிருதத்தில் “விவாகோ மங்களம் திவ்யம் தேவ சன்னிதி ந சந்தேகம்” – எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஜாதகரின் புனித திருமணச் சடங்குகள் சந்தேகமின்றி கடவுள் சன்னிதியில் நடத்தப்பட்டது என்பதே அதற்கான அர்த்தமாகும்.

         இந்த உதாரணங்களின் மூலமாக நாடி ஜோதிடத்தில் ஜாதக ஆராய்ச்சிக்கு இராசிகளின் திசைகள், ஒரு கிரகத்துக்கு 5 ஆம் பாவம் ஆகியவையும் கிரகங்களின் பலமும் முக்கியமாகக் கருதப்படுகின்றன.

ஜாதகம் – 21

சூரி


புத
சுக்



உ. ஜா. 21
கேது

இராகு


சனி, சந்
குரு
செவ்



இந்த ஜாதகத்தில் (21) திசைப்படி வரிசையாக உள்ள கிரக நிலைகள்.


கிழக்கு
புத,சனி
சந்திரன்


வடக்கு
சூரி,குரு
கேது

தெற்கு
சுக்கிரன்
இராகு

செவ்வாய்
மேற்கு



ஜாதகம் – 22

சந்,சனி



கேது
செவ்,சூரி
புதன்
குரு (வ)

உ. ஜா. 22
சுக்





இராகு




ஜாதகம் 21 ஐ போல் 22 ஐ யும் கிரகங்களை திசைப்படி வரிசையாக எழுதுவோம்.


கிழக்கு



வடக்கு
சனி,சந்
சுக்,
இராகு


தெற்கு
கேது



சூரி,புத
செவ்வாய்.
குரு
மேற்கு


         இவ்வாறாக, கிரகங்களை இராசிகளின் திசைப்படி வரிசைப்படுத்தி ஒவ்வொரு திசையிலுள்ள கிரகங்களின் படி பலன் எடுக்க வேண்டும் என “சப்தரிஷி பிரம்ம நாடி” யில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலும் அதே விதிகளே எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

        இந்த முறைப்படி, இந்த ஜாதகத்தில் (22) ஜாதகரின் மனைவி காக்காய் வலிப்பு நோய் உடையவள். வடக்கு திசையிலுள்ள கிரகங்கள் சுக்கிரன் + சந்திரன் + சனி + இராகு. இந்த இணைவுகளில் சுக்கிரன் பாதிப்பு அடைந்துள்ளதால் ஜாதகரின் தங்கையும் மகிழ்ச்சியாக வாழவில்லை, மனைவிக்கும் வலிப்பு நோய் உள்ளது என்பதே பலனாகும். சந்திரன் சளியையும், சனி வாய்வு மற்றும் சளி போன்ற நோய்களையும், சுக்கிரன் மனைவி மற்றும் தங்கையையும் குறிகாட்டுகின்றன.

        இவ்விதமாக நாம் ஒரேதிசை கிரகங்களையும், 5 ஆம் வீட்டில் உள்ள கிரகங்களையும் வைத்து பலன் உரைக்கவேண்டும். 5 ஆம் வீடு என்று சொல்லும்போது, ஒரு குறிப்பிட்ட கிரகத்திலிருந்து அதன் 5 ஆம் வீடு எனக் கொள்ளவேண்டும். இதுவரை ஜாதகங்களை கிரக பரிவர்த்தனை, வக்கிரநிலை, திசைப்படி கிரகங்கள் இடம்பெற்ற நிலை ஆகியவற்றின்படி ஆய்வு செய்தோம். இவை கோசார நிலையின்படி பலன் காண்பதற்கு முன் செய்யவேண்டிய நியதி ஆகும். முதலில் நாம் முன்னர் சொன்னபடி ஜாதகத்தின் அடிப்படை நிலைகளை புரிந்த கொண்ட பின்னரே ஜாதகத்தில் கோசார நிலையை வைத்துப் பலன் பார்க்க வேண்டும்.

         ஒரு பிறப்பு ஜாதகத்தில் எந்தவிதத்தில் அவ்வப்போது இடைவெளி விட்டு கோசார கிரக அடிப்படையில் பலன் காணும் முறைகள் - 

        முதலில் நாம் கிரகங்களின் காரகத்துவங்களை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஜனன ஜாதகத்துக்கும், கோசார நிலையிலும் கிரகங்களுக்கான காரகங்கள் சிறிது மாறுபடும். உதாரணமாக, ஒரு குழந்தைக்கு 6 அல்லது 7 வயதாகும் போது அது திருட்டு, திட்டுதல் என பல தவறுகளை, குற்றங்களை செய்தாலும் அது புரியாமல், அறியாமல் செய்த குற்றங்கள் ஆதலால் அதற்கு தண்டனை அளிக்க முடியாது. அதுவே 18 வயதில் அவனுக்கு அதன் பாதக நிலைகள் தெரியும் ஆதலால் அவன் நியாயத்துக்கும், தருமத்துக்கும், சட்டத்துக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறான்.

        அதேபோல் ஒரு பெண் குழந்தையாய், அழகாய் பார்க்கும் போதே கொஞ்ச வேண்டும் என்று இருக்கும் போது அதைக் கொஞ்சினால் எவரும் அதை தவறாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள். அதுவே, வளர்ந்து பெரியவளான பின் அவ்வாறு அத்தகைய சுதந்திரத்தை எடுத்துக் கொள்ள முடியாதல்லவா ? அதைப் போன்றே கிரகங்களும் கோசாரத்திற்கு வரும்போது மாறுபட்ட குணாதிசயங்களை ஜனன ஜாதக இராசிகளில் வெளிக்காட்டுகிறது.

         கோசாரத்தில் இந்த மாறுபாடுகள் முதல்முறை வரும்போது அதன் தாக்கங்கள் சாதாரணமானதாகவும், 2 வது முறை ஜாதகரின் இளமைக் காலத்தில் நகரும் போது அதன் தாக்கம் அதிகபட்சமானதாகவும், அதுவே மூன்றாவது முறையாக ஜாதகரின் முதுமைக் காலத்தில் கோசார கிரக தாக்கம் நடுத்தரமாகவும் இருக்கும். வருஷ கிரகங்களான குரு, சனி ஆகியவற்றின் கோசாரம் இந்த மூன்று வித வயதுகளில் முதலாவது குழந்தைப் பருவத்திலும், 2 வது இளமையிலும், 3 வது முதுமையிலும் ஆக பலன் மாறுபட்டுக் கொடுப்பதே இதற்குக் காரணமாகும்.

        இதை மனித குணத்தோடு ஒப்பிடும் போது ஒரு தம்பதிகளை எடுத்துக் கொண்டால் திருமணத்துக்கு முன் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் அறியாதவர்கள், எனவே பேசும் போது கூட எச்சரிக்கையுடன், பார்த்துப் பேச வேண்டும். திருமணத்துக்குப் பின் அவர்களுக்குள் நெருக்கம் அதிகமாகி எந்தவித தயக்கமும் இன்றி கண்ணே! மணியே! எனக் கொஞ்சத் தடையில்லை அல்லவா? அவர்களே முதுமை அடையும் காலத்தில் பொது இடத்தில் அதிக நெருக்கத்தைக் காட்டமுடியாத சூழ்நிலை எழும். ஒழுக்கத்தையும் பேணவேண்டும் அல்லவா ? இதுபோல் கோசார கிரகங்களும் வயதுக்கு தக்க தாக்கத்தை மாறுதலாகத் தரும். கோசார கிரகங்களின் தாக்கத்தால் மனித வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் இன்பமாகவோ, துன்பமாகவோ அமையும் என்பது நிச்சியம்.

        இந்து திருமணங்களில், குடும்பத்தினர், திருமணத்தை நடத்தி வைக்கும் ஆச்சாரியார், உறவுகள், நண்பர்கள், நலம் விரும்பிகள் அனைவரும் சுற்றி நிற்க மாவிலை, தோரணங்கள், மலர்களாலும் சிறப்பாக, அழகாக அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் மணமகனும், மணமகளும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி நடுவில் நின்றிருப்பர். தீர்மானிக்கப்பட்ட முகூர்த்த நேரத்தில் ஆச்சாரியார் (குரு) ஒரு வெள்ளைத் திரையை (கேது) மணமகன் (செவ்வாய்) மணமகள் (சுக்கிரன்) இருவருக்கும் நடுவில் பிடிப்பார். பின்னர் வேத மந்திரங்கள் முடிந்த பின்னர் திரையை விலக்குவார். மங்கல நாண் கட்டி மாலை மாற்றி தம்பதிகளாவர். இதைப் போலவே கிருத்துவர்கள் பங்குத்தந்தை முன் (குரு) விரலில் மோதிரம் (கேது) மாற்றிக் கொண்டும், உறுதி மொழி மேற்கொண்டும் கணவன் மனைவியாவர்.

       முகமதியர்கள் மௌல்வி (குரு) முன் அவர்கள் குல வழக்கப்படி புனித குரான்படியும் தம்பதிகளாக இணைவர்.  எனவே, திருமணத்தைப் பொறுத்தவரை குருவின் பார்வை, சேர்க்கை ஆகியவை எவ்வளவு முக்கியம் என்பதை அறிகிறோம். இதுவே, மனித வாழ்க்கை நிகழ்வுகளில் கிரக காரகத்துவங்கள் எவ்வளவு முக்கியமானவை என்பதை உணர்த்துகிறது.

         கிரகங்களுக்கான காரகத்துவங்கள் – சுருக்கமாக

சூரியன் – தந்தை, அரசாங்கம், மகன், ஒளிமிகுந்த, அரசியல்வாதி, அரசன்,

சந்திரன் – தாய், தண்ணீர், தோழி, அசைவு, வெள்ளை, பெண், வஞ்சகம், மோசம்,            பால், கலை, பெண்ணின் மாமியார்,

செவ்வாய் – சகோதரன், எதிரி, அம்பு, கூர்மையான ஆயுதம், தீ, ஆண், சிகப்பு,               படைவீரர், பிடிவாத குணம்.

புதன் – சகோதரி, சகோதரன், பெண், நண்பன், தாய் மாமன், விஷ்ணு, கல்வி,                புத்திசாலித்தனம், நிலம் சொத்து, பச்சை.

குரு – ஆசிரியர், குரு, கௌரவம், மதிப்பு மிக்க, வாழ்க்கை , ஜீவன், இரக்கம்,                அந்தஸ்தை அளிப்பவர், மதபோதகர்.

சுக்கிரன்- பெண் கிரகம், மனைவி, சகோதரி, பொருளாதாரம், வசிப்பிடம், அழகான           உருவம், இனிய குரல்,

சனி – தொழில், புரஃபஷன், மூத்த சகோதரன், கருப்பு,

சனி + இராகு – இறந்தவர்களுக்குச் செய்யும் இறுதிச் சடங்குகள்.

சனி – கேது – பட்டாபிஷேகம். பதவியேற்பு, கடமையாற்றும் போது விலகுதல்               பிரிதல்.

இராகு – வாய், முகமதியர், கோபுரம், முட்டை வடிவம், தனித்த அல்லது பாழான            பகுதி, அகன்ற பாதை, வட்டம், வட்ட வடிவம், தந்தை வழி பாட்டனார்,              படுக்கை, தலை, இருட்டு, மனத்தோற்றம், விஸ்தாரமான,                           காலபுருஷனின் வாய்.

கேது – ஜெனரேட்டிவ் ஆர்கன், மயிர், கிருத்துவர், சந்து, நூல், நரம்பு தளர்ச்சி, வக்கீல், தடைகள், வேர், வால், விடுதலை, கயிறு, ஜலதாரை, சாக்கடை, அழிந்த, பாழான, இடிந்த, வயதான, சிறிய, குளியலறை, செயின், நீதிமன்றம், வெப் அல்லது நெட்டில் சிக்குதல்.

         உதாரணம் – ஒரு ஜாதகத்தில் புதன் + கேது இணைவு ஜாதகர் இளமையில் காதலித்து இருப்பார் என்பதைக் குறிகாட்டுகிறது. அடுத்து ஜாதகரின் நண்பன் பிரச்சனையில் இருக்கிறான் என்பதையும் குறிகாட்டும். ஜாதகர் பூமி விஷயமான வழக்கு விவகாரங்களில் சிக்கி இருப்பதையும் குறிகாட்டுகிறது.

ஜனன ஜாதகத்தில் சூரியன் இருக்கும் இராசியை, கோசார கிரகங்கள் கடக்கும் போது ஏற்படும் தாக்கங்கள் –

         கோசார செவ்வாய், ஜனன சூரியனைக் கடக்கும் போது மனதில்        கோசார சந்திரன், ஜனன சூரியனைக் கடக்கும்போது ஜாதகரின் தந்தைக்கு ஏற்படும் பொருளாதார இலாபத்தையும், அவருக்குப் பயணம் ஏற்படும் என்பதையும் குறிகாட்டுகிறது.

படபடப்பு, பிடிவாதம், கோபத்தால் ஏற்படும் கஷ்டங்கள், தொழிலில் எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள்  ஆகியவை ஏற்படும். பெண் ஜாதகமானால் கடக்கும் போது அவள் கணவன் கர்வம் மிக்கவனாக நடந்து கொள்வான். ஆண் ஜாதகம் எனில் ஜனன சூரியனை கோசார செவ்வாய் கடக்கும் போது ஜாதகரின் மகனுக்கு கூர்மையான ஆயுதங்களால் காயம் ஏற்படும்.

         கோசார புதன் - ஜனன சூரியனைக் கடக்கும் போது நண்பனின் உதவி தந்தைக்குக் கிடைக்கும். அத்துடன் பூமி வகையிஅல் முன்னேற்றங்கள் இருக்கும்.

         கோசார குரு - ஜனன சூரியனைக் கடக்கும் போது மத குருமார்களை சந்திக்கும் வாய்ப்பு தந்தைக்கு ஏற்படும்.  மேலும் அவருக்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் மதிப்பு மிக்க மனிதர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

         கோசார சுக்கிரன் - ஜனன சூரியனைக் கடக்கும் போது தந்தைக்கு பொருளாதார வகையில் இலாபங்கள் கிடைக்கும். மேலும், நுண்ணிய, அழகிய  உருவமுடைய அழகுப் பொருட்களும் கிடைப்பதோடு, ஒரு பெண்ணின் சந்திப்பும் ஏற்படும்.

        கோசார சனி - ஜனன சூரியனைக் கடக்கும் போது ஜாதகரின் தந்தைக்கு மனவருத்தம், சஞ்சலம், அமைதியின்மை ஏற்படும். தொழில் இடத்தில் ஆபத்துக்கள் ஏற்படும். தந்தை மற்றும் மகனுக்கிடையே வழக்கு விவகாரங்கள் ஏற்படும் முன்னறிவிக்கிறது. மேலும், ஜாதகரின் தந்தைக்கு தொழில் இடத்தில் புதிதாக வந்தவர் மூலமாக ஏற்படும், ஆபத்துக்களை குறிகாட்டுகிறேன்.

           கோசார இராகு - ஜனன சூரியனைக் கடக்கும் போது ஜாதகரின் தந்தைக்கு                      சோம்பேறித்தனத்தைக் கொடுக்கிறது. மேலும், தந்தைக்கு கண் ஒளி மங்குவதோடு, தீயசெய்திகள் அவரின் காதில் விழும்.

         கோசார கேது - ஜனன சூரியனைக் கடக்கும் போது ஜாதகர் ஆன்மிக விஷயங்களைப் படிப்பதோடு, புனிதமான பெரிய மனிதர்களை சந்திப்பதைக் குறிகாட்டுவதோடு, ஜாதகரின் தந்தை தெய்வீகத் தன்மை கொண்ட சிந்தனைகளை மேற்கொள்வதோடு துறவு பூணவும் நினைப்பார்.

ஜனன ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இராசியை, கோசார கிரகங்கள் கடக்கும் போது ஏற்படும் தாக்கங்கள் –

         கோசார சூரியன் - ஜனன சந்திரனைக் கடக்கும் போது ஜாதகரின் தந்தை தேவையற்ற பழியைச் சுமப்பதோடு, பயணங்களையும் எதிர்பார்க்கலாம்.

         கோசார செவ்வாய் - ஜனன சந்திரனைக் கடக்கும் போது ஜாதகரின் தாய்க்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படும். சகோதரனுக்கு பயண வாய்ப்புகள் வரும். ஜாதகருக்கு மனக்கவலைகள் ஏற்படும். ஜாதகர் விரைவான மற்றும் அடிக்கடி மாறுகின்ற, சலனப்புத்தி உடையவராக இருப்பார்.

         கோசார புதன் - ஜனன சந்திரனைக் கடக்கும் போது ஜாதகர் குற்றம் சாட்டப்படுவார். அவருக்குப் பெண்களால், தோழிகளால்  மன அமைதியின்மை, வருத்தம் ஆகியவை ஏற்படும். சிறு பயணங்களும், கலைத்துறை மூலமான இலாபங்களும் ஏற்படும்.

         கோசார குரு - ஜனன சந்திரனைக் கடக்கும் போது இருப்பிட மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. மறைமுக எதிரிகளின் மூலமாக குற்றம் சாட்டப்படுவார். தெய்வீக தனமையுடைய சிந்தனைகள் ஜாதகரின் தாய்க்கு ஏற்படும். சளி, இருமல் காரணமாக ஆரோக்கியக் குறைவும் ஏற்படும்.

         கோசார சுக்கிரன் - ஜனன சந்திரனைக் கடக்கும் போது ஜாதகரின் மனைவிக்கோ, மகளுக்கோ ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம். குடும்பத்தில் பெண்களுக்கு இடையே சண்டை சச்சரவுகள், வழக்கு விவகாரங்கள் ஆகியவை ஏற்பட்டு அதன் காரணமாக மனமைதியும் குறையும். ஜாதகருக்கு தேவையற்ற செலவீனங்களும், பண இழப்புகளும் ஏற்படும்.

         கோசார சனி - ஜனன சந்திரனைக் கடக்கும் போது ஜாதகருக்கு தொழில், பணி மாற்றங்கள் ஏற்படும். மனதைப் புண்படுத்துகிற நிகழ்வுகளும் ஏற்படும்.

          கோசார இராகு - ஜனன சந்திரனைக் கடக்கும் போது தாய்க்கு ஆபத்துகள் ஏற்படும். ஜாதகருக்கு மன பிரமை மற்றும் பயம் ஏற்படுத்தும் அளவுக்கான நிகழ்வுகள் ஏற்படும்.

          கோசார கேது - ஜனன சந்திரனைக் கடக்கும் போது ஜாதகருக்கு தெய்வீக சிந்தனைகள் ஏற்படும். புனித நீராடல்கள் ஏற்படும். ஜாதகரின் தாய்க்கு உடலில் உபாதைகள், அசௌகரியங்கள் ஆகியவை ஏற்படும்.

ஜனன ஜாதகத்தில் செவ்வாய் இருக்கும் இராசியை, கோசார கிரகங்கள் கடக்கும் போது ஏற்படும் தாக்கங்கள் –

          கோசார சூரியன் - ஜனன செவ்வாயைக் கடக்கும் போது ஜாதகரின் தந்தையின் சகோதரர்கள் 6 பேருக்குத் தடைகள் ஏற்படும். ஜாதகருக்கு சிறித் இரத்த சம்பந்தமான கௌளாறுகள் ஏற்படும்.

         கோசார சந்திரன் - ஜனன செவ்வாயைக் கடக்கும் போது ஜாதகரின் தாய்க்கு சிறிது பிடிவாதகுணம் ஏற்படும். அத்துடன் மனவருத்தங்களும், மன அமைதியின்மையும் ஏற்படும். ஜாதகரின் சகோதரர்களுக்கு பயண வாய்ப்புகள் ஏற்படும். பெண்ணானால் ஜாதகியின் கணவனுக்குப் பயண வாய்ப்புகள் ஏற்படும்.

         கோசார புதன் - ஜனன செவ்வாயைக் கடக்கும் போது ஜாதகருக்கு நண்பர்களுடனோ அல்லது சகோதரர்களுடனோ வழக்கு விவகாரங்கள் ஏற்படும். ஜாதகரின் நெருங்கிய நண்பர்களே பகைவர்கள் ஆவர். ஜாதகருக்கு தோல் சம்பந்தமான வியாதிகள், எலும்புக் கோளாறிகள் ஏற்படலாம். மேலும், மாமனார் மற்றும் தாய் மாமன் ஆகியோருடன் வாக்குவாதம், சண்டை, தர்க்கம் ஆகியவை ஏற்படும். ஜாதகியானால் அவரின் கணவர் அவரது தோழி மற்றும் நண்பனை சந்திக்கும் நிலை ஏற்படும்.

         கோசார குரு - ஜனன செவ்வாயைக் கடக்கும் போது ஜாதகர் தனக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்துக் கொள்வார். அவசரமாக, வேகமாகச் செய்யும் குணம் மற்றும் பிடிவாதமான குணத்தால் நெருங்கியவர்களிடம் விரோதம் பண்ணிக் கொள்ளுவார். ஜாதகரின் சகோதரர்களில் ஒருவருக்கு சமூகத்தில் உயர்ந்த பதவி கிடைத்து மதிப்பு மரியாதையுடன் வாழ்வார். ஜாதகியானால், அந்த வாய்ப்பு அவள் கணவனுக்குக் கிடைக்கும். ஜாதகருக்கு இரத்த அழுத்தம் ஏற்படும்.

         கோசார சுக்கிரன் - ஜனன செவ்வாயைக் கடக்கும் போது ஜாதகரின் சகோதரருக்கு பொருளாதார இலாபங்கள் அதிகரிக்கும், ஆனால், ஜாதகருக்கு மத்தியஸ்தம் செய்பவர்கள் அல்லது நடுவில் உள்ளவர்களால் பொருளாதார விஷயங்களில் தடைகள் ஏற்படும். ஜாதகியானால், அவளுக்குக் கணவனிடம் இருந்து பூரண ஒத்துழைப்பு கிடைக்கும். கணவனுக்கும் பொருளாதார இலாபம், உயர்வு இருக்கும்.

        கோசார சனி - ஜனன செவ்வாயைக் கடக்கும் போது அல்லது செவ்வாய் இருக்கும் இடத்திற்கு 1, 5, 9 ஆம் இடங்களில் நகரும்போது, தொழில், வேலைகளில் அவரின் உயர் அதிகாரிகளின் தொந்திரவு தாங்காமல், ஓய்வற்ற நிலை ஏற்படும். உயர்அதிகாரிகளுடன், முதலாளியுடன் சண்டை சச்சரவுகள், வாக்குவாதங்கள் ஏற்படும். ஜாதகியானால், அவள் கணவருக்கு மேற் சொன்ன நிலைகள் ஏற்படும்.

        கோசார இராகு - ஜனன செவ்வாயைக் கடக்கும் போது ஜாதகருக்கு இரத்த சம்பந்தமான பிரச்சனைகள், சில ஆபத்துகள் ஏற்படும். அவரின் சகோதரர் வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவிப்பார். ஜாதகியானால், அவளின் கணவர் எதிரிகளால் தொல்லைகளை அனுபவிப்பார். அத்துடன் வாகனங்கள் தொடர்பான கஷ்டங்களை, சிக்கல்களை அனுபவிப்பார்.

         கோசார கேது - ஜனன செவ்வாயைக் கடக்கும் போது ஜாதகரின் சகோத்தரர் ஒருவர் கவலைகளும், கஷ்டங்களும் ஏற்பட்டி அல்லல் படுவார். ஜாதகருக்கு நரம்புத் தளர்ச்சியும், பொதுவாக உடல் பல மின்மையும் ஏற்படும். ஜாதகியானால், அவள் கணவருக்கு பணியிடத்தில் மோசமான, விவகாரமான நிலைகள் ஏற்பட்டு, மிகுந்த கஷ்டங்களை, தொல்லைகளை அனுபவிப்பார்.  

ஜனன ஜாதகத்தில் புதன் இருக்கும் இராசியை, கோசார கிரகங்கள் கடக்கும் போது ஏற்படும் தாக்கங்கள் –

         கோசார சூரியன் - ஜனன புதனை கடக்கும் போது ஜாதகரின் தந்தைக்கு பூமி இலாபமும், வர்த்தகத் துறையில் வெற்றிகளும் கிடைப்தோடு, நெருங்கிய இனியவர்களுடன் சந்திப்பும் நிகழும். ஜாதகியாகி, புதன் வக்ரநிலையில் இருந்தால் அவளுக்கு ஆண் நண்பருடன் சேர்க்கை ஏற்படும்.

        கோசார சந்திரன் - ஜனன புதனை கடக்கும் போது ஜாதகருக்கு வாணிபத்தில் பண நஷ்டம் ஏற்படும். கோள் சொல்பவர்களால் கஷ்டங்களை அனுபவிப்பார். உச்ச புதன் ஆகில் உயர்ந்த சமூகத்தில் உள்ள பெண்ணின் நட்பு  ஏற்பட்டு ஜாதகர் கஷ்டப்படுவார். புதன் விருச்சிகத்தில் இடம் பெற்றால் கீழான நபர்களின் கூட்டால் ஜாதகர் இன்னலுறுவார். மேலும், வஞ்சகம், சூதுகளால் நில விஷயத்திலோ அல்லது மனை ஆகியவற்றில் பிரச்சனைகளை சந்திப்பார், ஜாதகியானல் அவர் யூட்ரின் பிரச்சனையால் பாதிப்பு அடைவார்.

        கோசார செவ்வாய் - ஜனன புதனை கடக்கும் போது ஜாதகர் எதிரிகளால் தொல்லைகள் ஏற்பட்டு துன்புறுவார். அமைதியின்மை, இரத்த உறவுகளுடன் வாக்குவாதம், சண்டை ஆகியவை ஏற்படும். மன அமைதியின்மை, இரத்த உறவுகளுடன் சண்டை சச்சரவு, வாக்குவாதம் ஆகியவையும் ஏற்படும். அவரின் இனிய நண்பர்களே எதிரியாவர். ஜாதகியானால், அவளின் கணவன் தனது நெருங்கிய நண்பர்களை சந்திப்பார். ஜாதகத்தில் புதனுடன் சூரியன் இருந்தால் இந்த பலன்களில் சிறிது மாறுபாடுகள் இருக்கும்.

        கோசார குரு - ஜனன புதனை கடக்கும் போது ஜாதகர் புதுப்புது விஷயங்களைக் கற்றுக்கொள்வார். ஜாதகரின் வீட்டில் உள்ள இளைஞர்களுக்கு அனுகூலமான பலன்கள் ஏற்படும். கல்வி தொடர்பான நிலைகளில் கௌரவமும், புகழும் கூடும். அறிஞர்களின் மற்றும் அறிவார்ந்த ஆசிரியர்களின், குருவின் ஒத்துழைப்புகளும் கிடைக்கும். ஆன்மிகத் தலங்கள் ஆலயங்கள் ஆகியவற்றுக்கான புனித பயணங்கள் ஏற்படும்.

         கோசார சுக்கிரன் - ஜனன புதனை கடக்கும் போது ஜாதகருக்கு புதையல் கிடைக்கும். இனிய சுற்றுலாப் பயணங்கள் செல்வார். பூமி, வீடு ஆகியவற்றில் முன்னேற்றம் இருக்கும்.  இது போன்ற அனுகூலமான, சந்தோஷ நிகழ்வுகளும் நிகழ்வதோடு ஜாதகரின் மனைவிக்கு பூமி இலாபம், சொத்துக்கள் சேர்க்கை ஆகியவை ஏற்படும். 

         கோசார சனி - ஜனன புதனை கடக்கும் போது ஜாதகருக்கு பூமி இலாபம் ஏற்படும். புதிய வணிக நிறுவனத்தை ஆரம்பிப்பார். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தினரால் அனுகூலமான நிலை உருவாக்கப்படும். தொழில் விஷயத்தில் சுலபமான, எளிதான வழிகளில் செல்ல முடியும்.
   
         கோசார இராகு - ஜனன புதனை கடக்கும் போது ஜாதகருக்கு மனப்பிரமை மற்றும் மனோபயத்துடன் கூடிய கூடுதல் அறிவு உருவாகும்.  வீட்டில் உள்ள இளைஞர்களுக்கு சிறிதளவு உடல் ஆரோக்கியக் குறைவுகள் ஏற்படலாம். தோல் வியாதி ஏற்படும். சில காலத்துக்கு வீட்டை துக்க மேகங்கள் சூழும். ஜாதகருக்கு விலைமதிப்பு மிக்க கார் போன்ற வாகனங்கள் வாங்கும் நிலை ஏற்படும்.

         கோசார கேது - ஜனன புதனை கடக்கும் போது ஜாதகருக்கு எதையும் கிரகிக்கும் தன்மைகளில் சிறிது தடைகள் ஏற்படும். தன்னை உணருதல் மற்றும் சட்டபூர்வமான விஞ்ஞானம் போன்ற விஷயங்களில் புதிய அனுபவங்கள் ஏற்படும். ஜாதகரின் இளைய சகோதரி தனது உடலில் சிறிது ஆரோக்கியமற்ற நிலையை உணர்வார். இவரது நிலங்கள் வேலி போட்டு அடைக்கப்பட்டிருக்கும். இவர் எழுதிய புத்தகங்களும் வெளியிடாமல் தடைபட்டிருக்கும்.

ஜனன ஜாதகத்தில் குரு இருக்கும் இராசியை, கோசார கிரகங்கள் கடக்கும் போது ஏற்படும் தாக்கங்கள் –

         கோசார சூரியன் - ஜனன குருவை கடக்கும் போது ஜாதகருக்கு பிரபலமான, மதிப்பு மிக்க மனிதர்களுடன் தொடர்பு ஏற்படும். பண்பட்ட நபர்களின் உதவியும், ஒத்துழைப்பும் கிடைக்கும். சமூகத்தில் ஜாதகரின் அந்தஸ்து, மதிப்பு மரியாதையும் மேலும் உயரும்.

         கோசார சந்திரன் - ஜனன குருவை கடக்கும் போது ஜாதகருக்கு பெண்களுடன் தொடர்பு, தீடீர் பயணங்கள், இரவு உணவு பார்ட்டிகள் ஆகியவை ஏற்படும்.

         கோசார செவ்வாய் - ஜனன குருவை கடக்கும் போது ஜாதகருக்கு சிறிது இரத்த அழுத்தம் கூடும். இரத்த உறவுகளை சந்திப்பார். ஜாதகருக்கு பிடிவாத குணமும், வேகமான செயல்பாடுகளும் அதிகரிக்கும். தொழிலில் அஜாக்கிரதை உணர்வோடு திகழ்வார். சரியாக வேலை பார்க்கமாட்டர். இச்சமயம் இவரின் நண்பர்களின் பிடியில் உள்ள இவரின் எதிரிகள் இவருக்கு தொல்லை கொடுக்க சரியான நேரத்தை எதிர் நோக்கியிருப்பர். ஜாதகருக்கு உடலில் அதிகப்படியான உஷ்ணமா இருக்கும். அக்னி மூலமான ஆபத்துக்கள் ஏற்படலாம். ஜாதகியானால், அவளின் கணவர் வசிக்கும் இருப்பிடத்தை மாற்றுவார். புதிய வீடு அவருக்கு அனுகூலமானதாகவும், நன்மை தருவதாகவும் அமையும்.

         கோசார புதன் - ஜனன குருவை கடக்கும் போது ஜாதகரின் ஆன்மிக அறிவு அதிகரித்து ஒரு புதிய அனுபவத்தை பெறுவார். அவருள் ஒரு மேதாவித்தனம் உதிக்கும். வேதங்களைக் கற்றுத் தேர்வார். ஜாதகியானால், தன் கணவனைத் தவிர மற்றவர்கள் மிகச் சிறப்பானவர்கள் என்பதை உணரத் தொடங்குவதோடு, அவரை கணவனை விட அதிகமாக விரும்புவாள். அவள் தன் மனதைக் கவர்ந்த கௌரவம் மிக்க நண்பர்களுடனும் மற்றும் தன் நலம் விரும்பிகளுடனும் அதிக நேரத்தைச் செலவிடுவாள். குடும்பத்தில் உள்ள இளம் வயதினர் வேறு இடங்களில் சந்தோஷத்தை பெறுவர்.

         கோசார சுக்கிரன் - ஜனன குருவை கடக்கும் போது ஜாதகரின் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு எழும். ஜாதகரின் பொருளாதார நிலை மதிப்பு மிக்க நிலையில் உயரும். ஜாதகருக்கு அழகிய பொருட்கள் கிடைக்கும். ஜாதகரின் மனைவி புனிதமான பெரியவர்களை சந்தித்து மத சம்பந்தமான விழாக்களை நடந்த திட்டமிடுவாள்.

         கோசார சனி - ஜனன குருவை கடக்கும் போது ஜாதகருக்கு நன்மை அளிக்கும் வகையில் அவருக்கு பணியிட மாற்றம் ஏற்படும். அவருக்கு வேலையில் பதவி உயர்வு கிடைத்து, மதிப்பும் மரியாதையும் கூடும். பணியிடத்தில் உள்ள மிகப் பெரிய மதிப்புமிக்க மனிதர்களின் கூட்டு ஏற்பட நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். ஜாதகர் வயிற்றில் வாயுத் தொல்லையால் கஷ்டப்படுவார். 

         கோசார இராகு - ஜனன குருவை கடக்கும் போது ஜாதகர் மனப் பிரமையால் கஷ்டப்படுவார். மேலும், வாழ்க்கை ஆபத்தான நிலையில் உள்ளதென  பய உணர்வு ஏற்படும். அவர் கும்இருட்டில் குடியிருப்பது போன்ற உணர்வில் இருப்பார். அவர் மூட்டுவலியால் கஷ்டப்படுவார்.

         கோசார கேது - ஜனன குருவை கடக்கும் போது ஜாதகர் தெய்வீக சிந்தனைகளில் ஈடுபட்டு, சிறப்பான ஆன்மிக விழாக்களைக் கொண்டாட நினைப்பார். இந்த பூலோக வாழ்க்கை நிலையற்றது என்ற எண்ணத்திலே வாழ்வார். துறவரம் பூணும் எண்ணம் எழும். ஜாதகருக்கு நரம்புத் தளர்ச்சி ஏற்படும். தெய்வபக்தியுள்ள மனிதர்களை சந்திப்பார்.

ஜனன ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கும் இராசியை, கோசார கிரகங்கள் கடக்கும் போது ஏற்படும் தாக்கங்கள் –

         கோசார சூரியன் - ஜனன சுக்கிரனைக் கடக்கும் போது ஜாதகரின் மனைவி ஆரோக்கயக் குறைவால் கஷ்டப்படுவார்.  ஜாதகர் பொருளாதார விஷயங்களில் கஷ்டங்களை அனுபவிப்பார்.

         கோசார சந்திரன் - ஜனன சுக்கிரனைக் கடக்கும் போது ஜாதகர் பொருளாதார நிலை குறைவதாலும், கடன்களாலும் அவதிப்படுவார். பொருளாதார விஷயங்களால் ஜாதகர் சண்டை சச்சரவுகள், வழக்கு விவகாரங்களில் ஈடுபட நேரும். ஜாதகரின் மனைவிக்கு இடுப்பு எலும்பு பகுதியில் ஏற்படும் கோளாறு காரணமாக இன்னலுறுவார். அதன் காரணமாக அவருக்கு ஆரோக்கியக் குறைவு தொடர்ந்து இருக்கும். ஜாதருக்கு சூது நிறைந்த மனிதர்களுடன் தொடர்பு ஏற்படும்.

         கோசார செவ்வாய் - ஜனன சுக்கிரனைக் கடக்கும் போது ஜாதகியானால், அவரின் கணவனுக்கு பலவழிகளிலும் பொருளாதார முன்னேற்றம் இருக்கும். ஜாதகர் இரத்த பந்தங்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களின் சந்திப்பை எதிர்பார்க்கலாம். 

         கோசார புதன் - ஜனன சுக்கிரனைக் கடக்கும் போது ஜாதகருக்கு புதையல் கிடைக்கும். நில பரிவர்த்தனை மூலமான பணவரவுகள் இருக்கும். வீடு வாசல் சேரும். நெருங்கிய நண்பர்கள் சந்திப்பு, கேளிக்கை, இனிய விழாக்கள் போன்றவற்றால் சந்தோஷம் பெருகும்.

         கோசார சனி - ஜனன சுக்கிரனைக் கடக்கும் போது ஜாதகர் மனைவியை எதிர்பார்க்கலாம். ஒரு தோழியையும், செல்வ நிலையையும் எதிர்பார்க்கலாம். ஜாகரின் மனைவி தனது குடும்பக் கடமைகளை சீராக, அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்வார்.

         கோசார இராகு - ஜனன சுக்கிரனைக் கடக்கும் போது ஜாதகருக்கு பொருளாதார வரவுகள் தடைப்படும். வீடு போன்ற சொத்துக்களில் வழக்கு விவகாரங்கள் ஏற்படும். ஜாதகரின் மனைவிக்கு உடல் ஆரோக்கியம் குறையும். குடுப்பத்தாரிடையே சண்டை சச்சரவுகள் இருக்கும்.

         கோசார கேது - ஜனன சுக்கிரனைக் கடக்கும் போது ஜாதகருக்கு புதிய, அழகிய, நவீன நான்கு சக்கர (கார்) வாகனத்தை வாங்குவார். ஜாதகர் கபட நாடகமாடும் பெண்ணின் சதிவலைக்குள் மாட்டிக்கொள்ள நேரலாம்.


ஜனன ஜாதகத்தில் சனி இருக்கும் இராசியை, கோசார கிரகங்கள் கடக்கும் போது ஏற்படும் தாக்கங்கள் –

         கோசார சூரியன் - ஜனன ஜாதக சனியைக் கடக்கும் போது ஜாதகருக்கு தொழிலில், பணியில் அமைதியின்மை, சஞ்சலம், மனவருத்தம் ஆகியவை ஏற்படும். எவ்வளவு கடுமையாக உழைத்தாலும், முயற்சித்தாலும் செய்யும் தொழிலுக்கு பணிக்கு நியாயமான பங்கை அளிக்க முடியாது. அதன் காரணமாக ஜாதகர் தனது உயர் அதிகாரிகளால் குற்றம் சாட்டப்படுவார். பொருளாதாரக் கஷ்டங்களையும் அனுபவிக்க நேரிடும்.

        கோசார சந்திரன் - ஜனன ஜாதக சனியைக் கடக்கும் போது ஜாதகர் குற்றஞ்சாட்டப்படுவார். தேவையற்ற பணச் செலவுகள் ஏற்படும். மனதளவிலும் அமைதியற்ற நிலை நிலவும்.

         கோசார செவ்வாய் - ஜனன ஜாதக சனியைக் கடக்கும் போது ஜாதகருக்கு பணியிடத்தில் உடன் பணிபுரியும் நண்பர்கள் பிரச்சனைகளை ஏற்படுத்தி, தொல்லைகளைத் தருவர். வியாபாரத்திலும் எதிரிகளால் அதிக தடைகளை, தொல்லைகளை அனுபவித்து, பண இழப்புக்கும் ஆளாக நேரும். ஜாதகியானால், அவள் கணவருக்கு விரும்பத்தகாத நண்பர்களுடன் தொடர்பு ஏற்பட்டு அதன் காரணமாக மனதில் அமைதியின்மையும், வெட்டிச் செலவுகளும் ஏற்படும்.

         கோசார புதன் - ஜனன ஜாதக சனியைக் கடக்கும் போது ஜாதகர் வர்த்தக   பரிவர்த்தனைகளில் பல நன்மைகளைப் பெறுவார். ஓரளவு பூமி இலாபம் இருக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

         கோசார குரு - ஜனன ஜாதக சனியைக் கடக்கும் போது ஜாதகர் பணியில் பதவி உயர்வுகளைப் பெறுவார். தொழிலில் மதிப்பு மரியாதை, கௌரவம் உயரும். ஆனால், சனிக்கு 7 ஆம் இடத்தில் செவ்வாய் இருக்க கோசார குரு சனியைக் கடக்கும் போது எதிரிகளின் தலையீட்டால், தடைகளால் ஜாதகருக்குக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வில் தடைகள் ஏறபடும்.  

         சனி மற்றும் சந்திரன் இணைந்து ஒரே இராசியில் இருக்க, கோசார குரு ஜனன ஜாதக சனி, சந்திரனைக் கடக்கும் போது பணியிடத்தில் தன் பதவி உயர்வுக்காக பணச் செலவுகள் ஏற்படும். அப்படி பணம் செலவழிக்காமல் பதவி உயர்வு பெற்றால் வேறு இடத்திற்கு இட மாறுதலோடு கிடைக்கும்.

         ஜாதகியானால், அவள் ஜாதகத்தில் சனியும் செவ்வாயும் 180° யில் இருந்து ஜனன சனியை, கோசார குரு கடக்கும் போது அவள் கணவன் அவளின் காமத்திற்கு அடிமையாவான். சனி,புதன் இணைவு இருந்து அதற்கு 180° யில் புதன் இருந்து, சனி, புதன் ஜாதக இணைவை கோசார குரு கடக்கும் போது அவளை மக்கள் பலவழிகளிலும் தண்டிப்பர். அடிப்பர். பணி செய்யும் பெண்ணாயிருந்தால் அவள் வேலையில் முன்னேற்றங்கள் இருக்கும்.   கோசார குரு ஜனன சனி மீது வரும் போது பணியில் நல்ல முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். 
     
         கோசார சுக்கிரன் - ஜனன ஜாதக சனியைக் கடக்கும் போது ஜாதகர் பொருளாதார முன்னேற்றங்களை அடைவார். பொருளாதார வகையில் நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். வீட்டில் சுபகாரியங்கள், விழாக்கள் கொண்டாட்டங்கள் ஆகியவை ஏற்பட்டு சந்தோஷம் நிலவும். கடன் நிலவரங்களும் கட்டுக்குள் இருக்கும்.

         கோசார இராகு - ஜனன ஜாதக சனியைக் கடக்கும் போது ஜாதகர்  தனது பணிகளில் கடமையை செய்ய முடியாத அளவுக்கு தடைகளை எதிர் கொள்வார். புதிய வாகனங்களை வாங்கும் யோகம் ஏற்படும். புகைப்படக் கலை, ஸ்கிரீன் பிரிண்டிங் போன்றவற்றில் ஆர்வம் ஏற்பட்டு அதையே தனது பொழுதுபோக்காகக் கொள்வார். பூதம், பிசாசு, பேய் போன்ற அமானுஷ்ய முறைகளில் ஆவல் கொள்வார்.

                                                                                                                                                                                                                                                                                                                  
         கோசார கேது - ஜனன ஜாதக சனியைக் கடக்கும் போது ஜாதகர்  தொழிலில், வேலையில் பலவித இன்னல்களையும், காரணமில்லா தடைகளையும், அதிகாரிகளின் தொல்லைகளையும், வழக்கு விவகாரங்களையும்  எதிர் நோக்குவார். இதன் காரணமாக ஜாதகர் தன் வேலையை விட்டுவிடக் கூட எண்ணுவார். செவ்வாயும், கேதுவும் சனியின மீது வரும்போது, ஜனன ஜாதகத்தில்  குரு, புதன் மற்றும் சுக்கிரன் சனிக்கு 2 ஆம் வீட்டிலோ அல்லது 12 ஆம் வீட்டிலோ இருக்க ஜாதகர் நிச்சியமாக வேலையை இழந்துவிடுவார்.

         கோசார செவ்வாய், கேது மற்றும் சந்திரன் ஆகியோர் ஜனன ஜாதகத்தில் சனிக்கு 2 ஆம் இடத்தைக் கடக்கும்போது ஜாதகர் பார்த்துக் கொண்டிருக்கிற வேலையை இழப்பார்.

        அதுவே பெண்ணின் ஜாதகமானால் கோசார செவ்வாய், கேதுவின் ஜனன ஜாதக சனியின் மீதான நகர்வு ஜாதகிக்கு வீட்டுக்கு வெளியில் எதிரிகளின் தொந்திரவாலும், வீட்டுக்குள் கணவனின் தொந்திரவாலும் ஜாதகி கஷ்டங்களை அனுபவிப்பார். கோசார சந்திரன், செவ்வாய், கேது இருவருடனும் ஜனன ஜாதக சனியை கடக்கும் போது  அவள் பிறரால் பழி சுமத்தப்பட்டு, தூற்றப்பட்டு, குற்றமும் சாற்றப்படுவாள்.

        ஜோதிடத்தில் சனி கர்மகாரகன், தொழில் காரகன் என்ற புகழ்பெற்ற வாக்கியம் உண்டு. இந்த உலகமே கர்மாவை சுற்றியே அல்லது கடமையைச் சுற்றியே சுழல்கிறது. இந்த பூமியில் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனும் சில முக்கிய கர்மாக்களை அல்லது கடமைகளைச் செய்யவே படைக்கப்பட்டுள்ளான்.  ஆணோ பெண்ணோ அவரவர்க்கு விதிக்கப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்ட பிரத்தியேகக் கடமைகளைச் செய்வதில் இருந்து எவரும் தப்பிக்க இயலாது. கர்மாதிபதியான சனியின் தலைமைக்கு உட்பட்ட, அவனால் தீர்மானிக்கப்பட்ட மேற்சொன்ன கடமைகளை மற்ற கிரக இணைவுகள் தரும் உதவிகள் மற்றும் ஒத்துழைப்புகள், அது நல்லதோ, கெட்டதோ அனைத்துமே ஜாதகரின் ஜாதகத்தில் இடம்பெற்றுள்ள கிரக அமைப்புகளைப் பொறுத்தே அமையும்.

         துறவிகள், புனித மகான்கள் மற்றும் சுவாமிகள் ஆகியோர் இந்த இகலோகத்தில் இருந்து முற்றும் துறந்து மோட்சத்தை அடையும் விருப்பம் அவர்கள் உள்ளத்தில், எண்ணத்தில், மனதில் இருக்கும் வரை அவர்களும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தங்கள் இஷ்ட தெய்வங்களுக்கு செய்யப்படும் பூஜைகள், புனஸ்காரங்கள், விழாக்கள், தியானம், நோன்புகள், பிராயச்சித்தங்கள் இன்னபிற கர்மாக்களை அல்லது கடமைகளை கண்டிப்பாக, ஒழுங்கு முறையுடன் செய்யவேண்டிய நிலையில் இருப்பார்கள். இந்த கைங்கர்யங்களை செய்ய நீருக்கு உரிய சந்திரன், வாயு அல்லது காற்றுக்கு காரகன் சனி ஆகியோரின் அனுகூலம் அவர்களுக்கு வேண்டும். மனதை ஒருநிலையில் வைக்க உதவும் மனோகாரகன் சந்திரனின் ஒத்துழைப்பு அவர்களுக்கு வேண்டும். அவர்கள் கடைப்பிடிக்கும் நோன்புகளை நிகழ்த்த தூய, புனிதமான, சிறந்த இடங்கள் வேண்டும். அதற்கு பூமிக்கு உரிய இறைவியான பூதேவியின் அருள், கருணை, ஆசிகள் அவர்களுக்கு வேண்டும். சூரியனின் வெப்பம், வருணனின் மழை, வாயுவின் காற்று ஆகியவற்றில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ளும் அளவுக்கு நல்ல வசிப்பிடமும் அவர்களுக்கு அவசியமாகிறது. தன் தினசரி பூஜைகளை, நோன்புகளை தடையின்றி நிறைவேற்ற குறைந்த பட்சம் ஒரு குகையேனும் வேண்டும். எங்ஙனம் பணியாற்ற வேண்டும்? எப்படி பூஜா கைங்கரியங்களை செய்யவேண்டும்? கடைப்பிடிக்க வேண்டிய நியமங்கள் என்ன ? - இவை அனைத்துமே இந்து மத நூல்களில் அவர்கள் செய்ய வேண்டிய கடமைகளாக, கர்மாக்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட மேன்மையான, முக்கியத்துவம் மிக்க தத்துவங்களை புனிதர் பரம பூஜ்ய ஶ்ரீமதானந்த தீர்த்த ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ மத்வாச்சாரிய சுவாமிகள் தனது துவைத கிரந்தங்களில் விளக்கி அருளியுள்ளார்.

         இதன் காரணமாகவே பெரிய ஞானிகள் சன்யாசிகள், மத குருமார்கள் ஆகியோர், தங்களுக்கு உலக பந்தங்களைவிட்டு மோட்சம் கிடைக்க விதிக்கப்பட்டிருக்கிறாதா? – என்ற கேள்வியை சிறந்த ஜோதிடர்களிடம் கேட்கத் தவறுவதில்லை. இது எதைக் காட்டுகிறது என்றால், மெய்விளக்க கோட்பாடான, தெய்வீக ஜோதிடமானது முனிவர்களையும், ஞானிகளையும், புனிதர்களையும் தன் ஆதிக்க வரம்புக்குள் கொண்டுவந்துள்ளது.

         காரண காரியங்களுடன் கூடிய, அனுபவம் மிக்க, செயல்பாடுகளாலான பரந்த உலகில் சனி கிரகம் ஜாதகரின் ஆயுளையும், கர்மாவையும் தீர்மானிக்கிறது. இதில் எந்த அளவுக்கு சனியுடன் இணையும் பிற கிரகங்களின் ஒத்துழைப்பு ஜாதகரின் ஜாதக பலன்களை தீர்மானிக்கின்றன என்பதை ஜாதகத்தில் ஏற்படும் மூன்று கிரக இணைவுகளுக்கான பலன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment