Search This Blog

Tuesday 25 November 2014

உங்கள் நட்சத்திர பலன்கள். 23 – 11 – 2014 முதல் 29 -11 – 2014 வரை


ஓம் ஶ்ரீ ராகவேந்திராய நமக.
உங்கள் நட்சத்திர பலன்கள்.
23 – 11 – 2014 முதல் 29 -11 – 2014 வரை
: ஜோதிட ப்ரவீணா
எட்டயபுரம். எஸ். விஐயநரசிம்மன்.

மேஷம்

 (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்பரணி-1, 2, 3, 4 பாதங்கள்கார்த்திகை-1, பாதம்)

அஸ்வினி --

       இந்த வாரம் தெய்வீக வழிபாடுகளில் ஈடுபாடு அதிகரிக்கும். கற்பனை வளம் பெருகும். பிரயாணத்தில் மகிழ்ச்சி நிலவும். தாயார் மூலமான ஆதாயங்கள் பெருகும்நல்ல தகவல்கள் வந்து சந்தோஷம் தரும். மேலதிகாரிகள் உங்கள் சிறந்த பணி கண்டு மகிழ்வதோடு பாராட்டும் அளிப்பர்சிலர் பக்தி சொற்பொழிவு கேட்டு ஞானத்தன்மை பெறுவர். எதிர்பாராத தனவரவு கிடைக்கும். காரியத் தடைகளும், சுறுசுறுப்பு இல்லாத நிலை உருவாகும்வாழ்க்கையில் எதிர்பாராத முன்னேற்றங்கள் ஏற்படும். நல்ல நண்பர்கள் மற்றும் உறவினர் அனுசரணை இருக்கும். அரசு வகையில் ஆதாயங்களை எதிர்பார்க்கலாம். வீட்டு உபயோகப் பொருட்கள் சம்பந்தமான வியாபாரம் சூடுபிடிக்கும்.

பரணி  --

       இந்த வாரம் உறவுகளின் உதவியால் உயர்வு ஏற்படும். புதிய தொழில் விரிவாக்கத் திட்டங்களை செயலாக்க உகந்த வாரமாக அமையும். அதன் காரணமாக ஏற்படும் இலாபத்தால் வருமானம் கூடும். வாக்கு வன்மை காரணமாக, மேடைப் பேச்சு, சாஸ்திர சர்ச்சை போன்றவற்றால் ஏற்படும் வருமானத்தோடு, தங்கள் புகழும் அதிகரிக்கும். எந்த ஒரு போட்டி பந்தயங்களில் நீங்கள்  கலந்து கொண்டாலும் வெற்றி உங்களுக்கே. புத்தகப் பதிப்பு, வெளியீடு ஆகிய தொழில்கள் அமோகமான இலாபத்தோடு இயங்கும். பெண்களால் அனுகூலமான உதவிகள் கிடைக்கும். சிலருக்கு தேவையற்ற வீண் அலைச்சல்கள் ஏற்படுவதோடு, தொழிலில் பண முடக்கங்களும் ஏற்படலாம்

கார்த்திகை  1 ஆம் பாதம்.—

       இந்த வாரம் தொலைதூரச் சுபச் செய்திகள் கேட்டு மனம் மகிழும். வீட்டுக்கு வரும் விருந்தினர்களுடன், கேளிக்கை மற்றும் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டு மகிழ்ச்சியின் உச்சத்திற்குச் செல்வீர்கள். பலரும் வியக்கும் வண்ணம் பல சாதனைகளைப் புரிந்து பாராட்டுப் பெறுவீர்கள். கூட்டாளிகள் மற்றும் பெரிய நிறுவனங்களுடனான  புதிய வியாபார தொடர்புகள் ஏற்பட்டு முன்னேற்றத்துக்கான வழி பிறப்பதோடு, அது சம்பந்தமான பயணங்களும் வெற்றிகரமாக அமைந்து மகிழ்ச்சி தரும்.  தான தருமங்கள் மற்றும் தெய்வ வழிபாடு ஆகியவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். மேலதிகாரிகளுடன் வீண் விவாதங்களைத் தவிர்த்து முன்னேற்றம் அடைய முற்படுவது நல்லது. மனைவியை மனதாரப் பாராட்டி, அமைதியாக இருந்தால் ஆனந்தம் பெருகும்.

ரிஷபம்

( கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )

கார்த்திகை 2,3,4 பாதங்கள்

       இந்த வாரம் பெண்களுக்கு அழகிய ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். சிலருக்கு வீடு, தொழில் அல்லது இடமாற்றம் ஏற்படலாம். வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் ஆதரவு பெற்று எதிர்பார்ப்புக்கு மேலான விற்பனையால் இலாபத்தை அள்ளுவார்கள். வீட்டில் உள்ளவர்களின் முழு ஒத்துழைப்புடன் சுப காரியங்கள் அனைத்தும்  சிறப்புற நடக்கும். தொழிலில் நவீன உபகரணங்கள் நிறுவுவது போன்ற விஸ்தரிப்பு நடவடிக்கைகள் மூலமாக வருமான வாய்ப்புகள் பெருகும். சிலருக்கு சோம்பல் கூடி, மனோபயமும் அதிகரிப்பதால் தங்கள் பணிகளைச் சரிவரச் செய்யாமல் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாவர். பெண்களுக்கு ஏற்படும் அழகிய ஆடை ஆபரண சேர்க்கை காரணமாக அகமகிழ்வர்.

ரோகிணி  –

       இந்த வாரம் ஆரம்ப நாளில் தீயோர் சேர்க்கை ஏற்படலாம். பழைய கடன்களை அடைக்கப் புதிய கடன்கள் வாங்க நேரும். பின்வரும் நாட்களில் பல முகாந்திரங்களிலும் எதிர்பாராத தனவரவு உண்டு.ஞானிகள் மற்றும்  பெரியோர்களின் சந்திப்பு மற்றும் ஆசியால் மனஅமைதியும், சந்தோஷமும் பெருகும். மகிழ்ச்சி ஆரவாரத்துடன் சினிமா, டிராமா என கேளிக்கைகளில், நண்பர்கள் மற்றும் உறவுகளுடன் ஈடுபட்டு மகிழ்வீர்கள். தொழிலாளர்களின் கடமையுணர்வு மிக்கக் கடினமான பணி ஒத்துழைப்பால் புதிய தயாரிப்புக்களின் அளவு அதிகரித்து இலாபங்களும் அதிகரிக்கும். சிலருக்கு எடுத்த முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். உங்கள் கோபத்தைக் குறைத்தால் குடும்பத்தில் குழப்பங்களும் குறையும்.

மிருகசிரீஷம் – 1 , 2 பாதங்கள்

             இந்த வாரம் தந்தைவழி உறவுகளால் தேவையற்ற செலவுகள் அதிகரிக்கலாம். சிலருக்கு வீடு மாற்றம், தொழில் மாற்றம் அல்லது நினைத்த இடத்திற்கு  இடமாற்றம் ஆகியவை ஏற்படலாம். தொழில் ஆர்வம் கூடுவதால் புதிய உத்வேகத்துடன் செயல்பட்டு நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளுக்கு மேல் உற்பத்தியைப் பெருக்கி இலாபத்தையும் பெருக்குவர்.  பெற்றோருக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம்அனைத்துக் காரியங்களிலும் பிறரின் உதவியை நாடவேண்டிய சூழ்நிலை எழலாம்.   வியாபாரத்தில் புதிய முயற்சிகள் எடுப்பதை ஓரு சில நாட்களுக்குத் தள்ளிப் போடுவது நல்லது. திடீர் தனலாபங்களை எதிர்பார்க்கலாம். சிலர், தூய ஆடைகள் அணிந்து மிடுக்காக, நற்காரியங்கள் செய்து நல்லவர் என அனைவரின் பாராட்டுதல்களையும் பெறுவர்.

மிதுனம்

(மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)

மிருகசிரீஷம் – 3 , 4 பாதங்கள். –

       இந்த வாரம் சிலர் வீண் வார்த்தைகள் பேசுவதன் மூலமாக வேண்டாத பகையை தேடிக் கொள்வர். அனைத்து விஷயங்களிலும் அரசு மூலமாக எதிர்பார்த்த ஆதாயங்கள் அதிகாரிகளின் ஒத்துழைப்பால் எளிதாகக் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் கடமையுணர்வுடன் கூடிய செயல்பாட்டால் மேலதிகாரிகளின் ஆதரவோடு பதவி உயர்வு பெற முற்படுவீர்கள். அந்த முயற்சியும் வெற்றிகரமாக நிறைவேறும்நண்பர்கள் உங்கள் நன்மை கருதி எதையும் செய்யத் துணிவர். மாணவர்களின் கடின உழைப்பின் காரணமாகப் படிப்பில் ஏற்படும் ஆர்வம் காரணமாக நல்ல மதிப்பெண்கள் பெற்று ஆசிரியரின் பாராட்டுதல்களைப் பெறுவர் தொழிலில் உங்கள் அசாத்தியத் திறமைகளை வெளிக்காட்டுவதின் மூலமாக ஆதாயங்கள் பல அடைவீர்கள்.  நல்ல சேதிகள் நாடிவரும்.

திருவாதிரை ---

             இந்த வாரம்  நீங்கள் மிகவும் எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாராளமாக இருக்கும். அரசாங்கத்திடம் இருந்து அனுகூலமான  தகவல்கள் வந்து சேரும். வாரத்தின், முதல்நாள் பயணத்தில் துன்பமும், பின்னர் வரும் நாட்களில் கடன் கொடுத்தவர்களின் கெடுபிடிஅரசு வகைத் தொல்லைஆகியவை ஏற்படலாம். எனவே இன்பம் வரும் போது மகிழ்ச்சியில் பொங்குவதும், துன்பம் வரும் போது துவண்டுவிடாமல் மீண்டு எழுந்தால்  துன்பமும் இன்பமாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பணம் சம்பாதிப்பதில் ஆர்வம் அதிகரிக்கும். அதன் காரணமாக அதிகம் உழைப்பீர்கள். அரசியலில் உள்ளவர்களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு ஓங்கும். அறிவுத்திறனும் கூடும். பணவிஷயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது



புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள்

      இந்த வாரம் புதிய நண்பர்களின் உதவியால் நல்லதே நடக்கும். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டு. சிலருக்குப்  பிரிவும், பகையும் ஏற்படலாம்.  தொலைதூரத்தில் இருந்து வரும் செய்திகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும். சிலருக்குப் பணியில் புதுப்புதுப் பதவிகளும் அதனால் வருவாய்ப் பெருக்கமும் ஏற்படும். புதிய வாகனயோகம் ஏற்படலாம். வியாபார நிமித்தமாக ஏற்படும் வெளிநாட்டுப் பயணங்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். தந்தையால் நன்மைகள் பல ஏற்படும். மகான்களின் தரிசனம் கிட்டும். தொழில் விரிவாக்கத் திட்டங்களுக்கான புதிய முயற்சிகள் மேற்கொள்ளும் போது அரசின் மூலமாக அனுகூலமும், ஆதாயம் பெறுவீர்கள். அதன் காரணமாக தங்கள் செல்வ நிலையும் உயரும். அரசுப் பணியாளர்களுக்கு புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும்.

கடகம்

(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)

புனர்பூசம் – 4 ஆம் பாதம்.

       இந்த வாரம் திருமணம் ஆகாத பெண்களுக்குத் நல்ல இடத்தில் திருமண ஏற்பாடுகள் நடக்கும். மாணவர்களுக்கு வாகன வசதியும், நற்கல்வியும் கிடைக்கும். சிலருக்குக் கடமையுணர்வுடன் அவர்கள் செய்த சீரிய பணிக்காக அரசாங்க விருதுகள் கிடைக்கும்வியாபாரம் மற்றும் தொழிலில் வாக்கு வன்மையால் வருமானம் பெருகும்.    சிலருக்கு வீடு, மனை ஆகியவை கிடைக்கும்.  பூரண சயன சுகம் ஏற்படும்பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும்தொழில் விஷயமாகத் தீட்டிய முக்கியத் திட்டங்கள் நிறைவேற எடுத்த நடவடிக்கைகள் வெற்றி பெறும்.  குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் பெறுவதில் எவ்விதச் சிக்கல்களும் ஏற்படாது. விவசாயத்தில், விளைச்சல்கள் அதிகரித்து எதிர்பார்த்ததை விட இலாபம் காணலாம்.

பூசம் --   
 
       இந்த வாரம்  மிகச் சிறப்பானதாக அமையும். எதிர்பாராத இனிய விருந்துகள், மகிழ்ச்சிக் கொண்டாட்டங்கள் ஏற்படும். நீங்கள் எதிர்பார்த்தபடி தனவரவுகள் கைக்கு வந்து சேரும். பிறருக்கு உதவுவதற்கும், தரும காரியங்களுக்கும் முழு மனதோடு தாராளமாகச் செலவு செய்து மகிழ்வீர்கள். அரசுப் பணியாளர்கள்  அரசாங்கத்திடம் பணி சம்பந்தமாக வைத்த  கோரிக்கைகள் அனைத்தும் தடங்கலின்றி நிறைவேறும். நல்லோர் சேர்க்கையால் நல்லதே நடக்கும்மாணவர்களுக்குக் கல்வியில் நல்ல  தேர்ச்சி ஏற்படும். சிலருக்கு உழைப்புக் குறைவானாலும்  ஆதாயம் அதிகரிக்கும். மேலதிகாரிகளின் ஆதரவால் சிலர் மேன்மை அடைவீர்கள். எப்போதாவது வரும் கோபத்தை அடக்குவது நல்லது. சிலருக்குத் தொழிலில் புதிய வாடிக்கையாளர்கள் மூலமாக அதிகமான வருவாய்ப் பெருக்கம் ஏற்படும்.

ஆயில்யம்
       இந்த வாரம் உங்களுக்கு நினைத்தது நினைத்தபடி நடக்கும்  அனுகூலமான வாரமாக அமையும்வீட்டில் திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான சுபச் செலவுகள் ஏற்பட்டு அதன் காரணமாக வீட்டில் மகிழ்ச்சி நிறைந்த நிலை உருவாகும்புதுப்புது தொழில் முயற்சிகளில் இலாபம் ஏற்பட்டு செல்வ நிலை உயரும். வியாபாரிகள் வாடிக்கையாளரிடம் மிகுந்த நட்புப் பாராட்டித் தங்கள் வாக்குவன்மையால் அதிக இலாபம் சம்பாதிப்பர்அழகிய, புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி அணிந்து மகிழ்வீர்கள். பெண்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவால் ஆதாயம் ஏற்படும். துணிவுடன்  எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும்சிலருக்கு அவ்வப்போது சிறு காரியத்தடைகள் ஏற்படலாம். தூக்கமின்மையால், சுறுசுறுப்பற்ற நிலை ஏற்படும். 

No comments:

Post a Comment