Search This Blog

Tuesday 25 November 2014

தினபூமியில் -- இந்த வார நட்சத்திர பலன்

இந்த வார நட்சத்திர பலன்

23/11/2014 ------- 29/11/2014

சிம்மம்

( மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)
மகம்

       இந்த வாரம் உங்களுக்கு அனுகூலங்கள் மிக்க வாரம். மனைவி மற்றும் குழந்தைகளின்  அன்பால்  மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். பெரியோரின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். அதன் காரணமாக உங்கள் பலநாள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். தொழில் அபிவிருத்திக்காக புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். அதற்குத் தேவைப்படும் அரசு உதவிகள் மற்றும் வங்கிக்கடன்கள் அனைத்தும் கிடைக்க நல்ல வழி பிறக்கும்.  வீட்டுக்குத் தேவை என்று விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பீர்கள். புதிய ஆடை ஆபரண சேர்க்கை, புத்திர பாக்கியம் மற்றும் எதிர்பாராத பணவரவுகள் ஆகியவை ஏற்படும். புத்தகப் பதிப்பு மற்றும் வெளியீடு சம்பந்தமான தொழில்கள் எதிர்பார்த்தபடி ஆதாயம் அளிக்கும்மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை ஆகியவை ஏற்படும்.

பூரம்

       இந்த வாரம் உங்களுக்குத் திடீரென ஏற்படும். பயணங்களால் பணமுடை ஏற்படும்.அரசுப் பெண் பணியாளர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்தபடி இடமாறுதல்களும், தலைமைப் பதவிகளும் தேடி வரும். அன்பால் அனைவரையும் வெல்லலாம். ஆனால் வீண் கோபத்தால் விவேகத்தை இழக்காதீர்கள்.  தங்கள் சிறப்பான, கடமையுணர்வுடன் கூடிய திறமைமிக்க பணி, உயர்அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டு, பாராட்டும் பெறும்.  வாக்குவன்மையால் மேடைப் பேச்சாளர்கள் ஆற்றும் சிறப்பான, பொருள் பொதிந்த சொற்பொழிவுகள் அனைவரின் பாராட்டையும் பெற்று அதன் காரணமாக அவர்களின் புகழ் ஓங்கி, மதிப்பும், மரியாதையும் கூடும்மகான்களின் தரிசனத்தால் மனம் மகிழ்வதோடு, மனதில் அமைதியும் நிலவும். வியாபாரிகளுக்குப் புதிய முதலீடுகள் அதிகரித்து இலாபமும் அதிகரிக்கும்.

உத்திரம்- 1 பாதம்

       இந்த வாரம் உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும்புத்திர பாக்கியம் ஏற்படும். புதிய தொழில் வாய்ப்புகள் பிரகாசமாய் இருக்கும். உங்கள் எதிர்பார்ப்புக்கும் மேலான  தனவரவு ஏற்படும்.. உடன் பிறந்தவர்களோடு அனுசரித்துச் செல்வது நல்லது. மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி ஏற்படும். தெய்வ சிந்தனையாலும், தரும சிந்தனையாலும்  மனதில் அமைதி நிலவும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யும் வாய்ப்புக்கள் அரசின் அனுகூலத்தால் பெருகும். உடன் பணிபுரியும் பணியாளர்களின் பொறுப்பு மிக்க பணியால் உற்பத்தி பெருகி இலாபமும் பெருகும். பங்குச் சந்தை மூலமாகப் பணம் சம்பாதிப்பதில் ஆக்கமும், ஊக்கமும் ஏற்படும். சிலருக்கு பணமுடை ஏற்படுவதோடு, தேவையற்ற அலைச்சல்களும் ஏற்படும்.


கன்னி

( உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)

உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள்.

       இந்த வாரம் கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு ஏற்றமிகு வாரம். சிலருக்குப் பல புண்ணியத் தலங்களுக்கு பயணம் செய்யும் வாய்ப்புக் கிட்டும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். சிலர் பலவகையிலும் பிறரால் குற்றம் சாற்றப்பட்டு அவதிப்பட நேரலாம். எதிர்பாராத தனவரவால் மனம் மகிழும்போட்டி, பொறாமைகளை அகற்றி தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் முன்னேற்றங்கள் சுலபமாகும். சிலர் பழைய கடன்களை அடைத்துப் புதிய கடன்கள் வாங்க முயல்வீர்கள். உயர் அதிகாரிகளின் உந்துதலால் ஏற்படும். இடைவிடாத பணி காரணமாக நேரத்துக்கு உணவு உண்ண இயலாமல் போகும். புதிய வியாபாரத் திட்டங்கள்  வெற்றி பெறுவதோடு, நல்ல காலமும் கனிந்து வரும். அரசு அதிகாரிகளின் அன்பு மற்றும் ஆதரவால் பணி உயர்வு நினைத்தபடி கிடைக்கும்
ஹஸ்தம்

       இந்த வாரம் பொருளாதார நிலையைப் பொறுத்தவரை சிறப்பான காலம். அதன் காரணமாக வங்கி சேமிப்புக் கணக்குகளில் இருக்கும் கையிருப்புப் பணம் அதிகரிக்கும். பங்குச் சந்தை ஈடுபாடு இலாபம் தரும். பழைய பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் நல்ல வருமானத்தை அடைவார்கள். கல்வியில் தேர்ச்சி ஏற்பட கடின உழைப்புத் தேவை. புத்திர பாக்கியம், சுபகாரிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். புதிய விரிவாக்கத் திட்டங்களால்  தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். மேலதிகாரிகளின் உதவியால் உயர்பதவிகள் கிடைக்கும். மேல்மட்ட அதிகாரிகளின் ஆதரவும், புதிய தொடர்புகளால் நன்மையும் ஏற்படும்.

சித்திரை – 1,2 பாதங்கள்

       இந்த வாரம் எல்லா வசதிகளும் இன்பமும் ஏற்படும். கடமை உணர்வோடு செய்யும் காரியங்களில் வெற்றி கிட்டும். பெரிய மனிதர்களின் மற்றும் பண்பு மிக்கவர்களின் நட்பால் பெருமை சேரும். மற்றவர்களைக் கவரும் வண்ணம் சிறப்பான ஆடை அணிந்து மிடுக்காக உலாவருவீர்கள். உறவுகள் வருகையால் உள்ளம் மகிழும். தனவருமானம் அதிகரிப்பதால் அனைத்துக் காரியங்களும் அனுகூலமாய் இருக்கும். கேளிக்கை விருந்துகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். சிலருக்கு வீண்பேச்சு, வீண்அலைச்சல் மற்றும் வீண்செலவுகள் ஏற்படும். மிகப் பெரிய சாகசங்களைப் புரிவீர்கள். அதிகாரிகளுடன் வீண் சச்சரவுகளை விலக்கினால் பணியில் எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும்.  எந்தக் காரியத்தையும் திறம்படச் செய்யும் உங்கள் செயல்திறன் கூடும்.

துலாம்

( சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)

சித்திரை-3,4 பாதங்கள்

       இந்த வாரம் உங்களுக்கு எதிர்பாராத தனவரவுகள் ஏற்படும். தீவிரமான உழைப்பின் காரணமாகத் திட்டமிட்டபடி  உங்கள் பணியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எளிதில் அடைவீர்கள். அதன் காரணமாக உங்கள் சீரிய பணி மற்றவர்களின் பாராட்டைப் பெறும் என்றால் மிகையாகாது. சிலருக்கு மற்றவர்களை ஆணையிடும் விதத்தில் அதிகாரம் மிக்க அரசு உயர்பதவி கிடைக்கலாம். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு இனி நல்ல காலம் பிறக்கும்மாணவர்கள் தங்கள் உன்னத கிரகிப்புத் தன்மையாலும், நினைவாற்றலாலும் தங்கள் கல்வியின் தரத்தை உயர்த்திக் கொள்வர். விற்பனைப் பிரதிநிதிகள் தங்கள் வாக்கு வன்மையால் இலக்கை எட்டி, நிர்வாகத்தின் வருமானத்தைப் பெருக்கிப் பாரட்டுதல்களைப் பெறுவர். குடும்ப வாழ்க்கையில் சந்தோஷம் நிலைத்திருக்கும்.

சுவாதி

       இந்த வாரம் பணிபுரியும் பெண்களுக்குத் தங்கள் நிறுவனத்தில் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு ஏற்படும். பொருளாதார நிலைகள் திருப்திகரமாக இருக்கும். பழைய கடன்கள் விரைவில் வசூலாவதும் அதற்குக் காரணமாக அமையும். நீங்கள் எதிர்பாராத இடத்தில் இருந்து வந்த பணவரவால் உங்கள் மனம் மகிழும். உடன்பிறப்புக்களின் உபகாரமற்ற நடவடிக்கைகள் உங்களுக்கு எரிச்சல் ஏற்படுத்தும். ஏமாற்றம் அடைவதைத் தவிர்க்க கூட்டாளிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மனைவியுடன் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அவர்களுடன் சமாதானமாகப் போவது நல்லது. மாணவர்களுக்குப் போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த வெற்றி கிட்டும். பெண்களால் இலாபம் ஏற்படும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுதல் ஆகியவற்றால் வரும் இன்பம் நிலைத்திருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த இலக்கினை எட்டிவிடுவீர்கள்.

விசாகம்- 1,2,3 பாதங்கள்

       இந்த வாரம் உங்கள் சம்பாதிக்கும் திறன் மேம்பட்டு அதிக வருமானத்தை எதிர்பார்க்கலாம். மிகக் கடினமான வேலைகளையும் தன்னம்பிக்கை காரணமாக சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். அரசு வேலைக்கு மனுச் செய்தவர்களுக்கு அனுகூலமான பதில்கள் வரும். வேலையில் இருப்பவர்களுக்குப் பணி உயர்வுக்கான ஆணை தேடி வரலாம். வியாபாரிகளுக்கு வியாபாரம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்குமாதலால் எவ்வித விசனமும் இன்றி மகிழ்ச்சியுடன் காணப்படுவர். குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். பெண்களுக்குப் பணியிடத்தில் மற்றவர்களின் பூர்ண ஒத்துழைப்புக் கிடைக்கும்.

.விருச்சிகம்

( விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )

விசாகம்- 4 ஆம் பாதம்

       இந்த வாரம் செலவுகள் அதிகமாகும், ஆதலால் பணமுடையும் இருக்கும்வேலையில் அதிக சிரத்தையும், கடின உழைப்புமே எப்போதும் உங்கள் பையை பணத்தால் நிரப்பும். உறவுகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் மூலமான உதவிகள் தடைப்படாது. எடுத்த முயற்சிகள் யாவும் வெற்றி அடைய அதிக உழைப்பு தேவைப்படும். புதிய பெண்களிடம்  பேசும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் பேசவும். நன்கு ஆராய்ந்து பங்குச்சந்தை மற்றும் போட்டி பந்தயங்களில் ஈடுபடுவது, இழப்பைத் தவிர்க்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணத்துக்கான முயற்சிகள் இந்த வாரம் மேற்கொள்ளப்படும். அவசியமற்ற, அலைச்சல் தரும் பயணங்கள் மேற்கொள்ள நேரும். அரசு ஊழியர்களுக்குக் கட்டளைகளை இடும்படியான அதிகாரம் மிக்க உயர் பதவிகள் கிடைக்கும். பிள்ளைகளுக்கு நல்ல உயர்வான முன்னேற்றங்கள் ஏற்படும்.

அனுஷம்

       இந்த வாரம் சுக சௌகரியங்கள் சேரும்.  வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால்  எதிர்பார்த்தபடி தனலாபங்கள் அதிகரிக்கும். வீட்டில் அமைதியும், நிம்மதியும் நிலவும்.  புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும். வாகன வசதிகள் மேம்படும்சிலருக்கு உயர்அதிகாரப் பதவிகள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். தொலை தூரத்திலிருந்து நற்செய்திகள் வந்து சேரும். மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டிய நிலை ஏற்படும். செலவுகளைக் குறைத்து சேமித்து வைப்பது எதிர்காலத்துக்கு நல்லது. வியாபாரத்தில் ஏற்படும் போட்டிகளைச் சமாளிக்கக் கடினமாக உழைக்க வேண்டியது வரும். விவசாயிகளுக்கு அதிக மகசூல் ஏற்பட்டு, இலாபத்தால் வசதிகள் பெருகும். பெண்களின் வாழ்க்கையில் துன்பங்கள் மறைந்து, முன்னேற்றம் ஏற்படும்.

கேட்டை

       இந்த வாரம் பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். சுபகாரிய நிகழ்வுகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். பண விஷயத்தைப் பொருத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும்.  தங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்கள் வேலையில் கை கொடுப்பர். அதன் காரணமாக உற்பத்தி அதிகரித்து இலாபமும் அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தாரிடம்  பேசும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் பேசவது நல்லது. நன்கு ஆராய்ந்து பங்குச்சந்தை மற்றும் போட்டி பந்தயங்களில் ஈடுபடுவது, இழப்பைத் தவிர்க்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடைய அதிக உழைப்பு தேவைப்படும். பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள்.





No comments:

Post a Comment