Search This Blog

Tuesday 25 November 2014

இந்தவார நட்சத்திர பலன் - 23- 29 / 11 / 2014 - தினபூமியில்


இந்தவார நட்சத்திர பலன் - 23- 29 / 11 / 2014



தனுசு

( மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)

மூலம்

          இந்த வாரம் மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டாகும்அரசுப் பதவியில் உள்ளவர்கள் அதிகாரிகளின் தயவால் அனுகூலமான பலன்களை அடைவர்.   தொழிலாளர்களுக்கு  உழைப்பு அதிகமாகி. அதற்கேற்ற இலாபமோ, பலனோ கிடைக்காது. சிலருக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம். முன்னெச்சரிக்கையாக மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்வது நல்லது. உங்களின் செயல்திறன் அதிகரிகரித்துச் செல்வாக்கும் பெருகும். புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும். வாகன வசதிகள் மேம்படும். அந்தஸ்து உயரும். சிலருக்கு அதிகாரமுள்ள உயர் பதவி கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். தொலை தூரத்திலிருந்து நற்செய்திகள் வந்து மகிழ்ச்சி அளிக்கும். உதவிகரமான புதிய நண்பர்கள் கிடைப்பர்எழுத்துத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

பூராடம்

       இந்த வாரம் நீண்ட கால உழைப்பின் காரணமாகச் சிலருக்குக் கௌரவப் பட்டங்கள் கிடைக்கும். பொன் ஆபரணங்கள் விதவிதமாகக் கிடைக்கும். நல்ல பண்பாளர்களின் நட்பும், அன்பும் கிடைக்கும். மனதில் தெய்வ பக்தி கூடும். நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். நல்ஆரோக்கியமும், புதுத் தெம்பும், புத்தொளியும் ஏற்படும். விபத்தைத் தவிர்க்க பயணங்களில் எச்சரிக்கை தேவை. தாயின்  ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. சிலருக்கு குடும்ப வாழ்க்கையில் குழப்பம் வரலாம். எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டி முன்னேற முயல்வீர்கள். உறவுகள் வருகையால் சந்தோஷம் பெருகுவது பொல், செலவுகளும் அதிகரிக்கும்.  சிறப்பான பொதுஜனத் தொடர்பு காரணமாக உபரி வருமானம் கிடைக்கும்.

உத்திராடம் –1 ஆம் பாதம்

              இந்த வாரம் எதிர்பார்த்தபடி பண வருவாய் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கும் தாங்கள் எதிர்பார்த்தபடி வங்கிக் கடன்கள் சிரமமின்றிக் கிடைக்கும்உறவுகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் ஆகியோரின் ஒத்துழைப்பால் அனைத்துச் செயல்களும் வெற்றி பெறும். ஆனால், தொழில் விஷயமாக எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடைய அதிகாரிகளின் தயவு தேவைப்படும். பணிபுரியும் பெண்களுக்கு தற்போது இருக்கும் வேலையைக் காட்டிலும் நல்ல வேலைக்குப் போகும் வாய்ப்புகள் அமையும்பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டாகும்.


மகரம்

( உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )

உத்திராடம்- 2,3,4- பாதங்கள் ---

       இந்த வாரம் பல வழிகளிலும் தனவருமானம் கூடுதலாக இருக்கும். மனைவியுடன் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் தங்கள் அனுசரணையால் சீர்படும்சிறந்த எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொழிலில் தீட்டப்படும் புதிய திட்டங்கள் அரசின் உதவியோடு சிறப்பாக முடிக்கப்படும். அன்பான உறவுகள் வருகையால் சந்தோஷம் பெருகுவது போல், அதிகச் செலவுகளும் ஏற்படும். அதன் காரணமாகப் புதிய கடன்களும் ஏற்படும்.  உங்களின் சிறப்பான பொதுஜனத் தொடர்பு காரணமாக உபரி வருமானம் கிடைக்கும். நண்பர்களிடம் வீணான வாக்குவாதம் செய்யாதிருப்பது நட்பை பலப்படுத்தும். பூமி அல்லது வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். அதுபோல் உங்கள் எதிரிகளிடம் இருந்து விலகியே இருப்பது நல்லது. உங்களது நற்குணங்கள் அனைவரின் பாராட்டையும் பெறும். மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டாகும்.

திருவோணம்-

       இந்த வாரம் உங்களுக்கு இனிய வாரம். பக்தி மிக்க புண்ணியத் தல யாத்திரைகள் ஏற்படும். வாழ்க்கையில், மேம்படும் பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். குடும்பத்தாரும் அவர்கள் ஆசைகள் நிறைவேறுவதால் மகிழ்ச்சியோடு இருப்பர். அனுபவ பூர்வமான அறிவுத்திறன் கூடுவதால், செயல் திறனும் கூடி, அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். பூமி, வீடு ஆகியவற்றின் மூலம் ஆதாயங்கள்  ஏற்படும்.  பணிபுரியும் பெண்களுக்கு தற்போது இருக்கும் வேலையைக் காட்டிலும் நல்ல வேலைக்குப் போகும் வாய்ப்புகள் அமையும். மனைவியின் பணிவிடை மகிழ்ச்சி தரும். மதிப்பு, கௌரவம் உயரும். சோம்பேறித்தனம் அதிகரிக்கும். பெண்களுக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடும், அதன் காரணமாகக் குடும்ப முன்னேற்றமும் ஏற்படும்.

அவிட்டம் 1,2 பாதங்கள்

       இந்த வாரம் உங்கள் மூலதனத்தைக் கொண்டு  புதிய முதலீட்டுத் திட்டங்களைச் செயல்படுத்த முற்படுவீர்கள். நீண்ட நாட்களாக வருவார்கள் என எதிர்பார்த்த நெருங்கிய  உறவுகளின்  வரவு  மகிழ்வைத் தரும். நெருங்கிய நண்பர்களின் உதவியால் கூட்டாளிகளிடையே ஏற்பட இருந்த குழப்பங்கள் சரியாகும். வீட்டு வாடகை வசூல் திருப்திகரமாக இருக்காது. பெண்கள் தாங்கள் பணிபுரியும் இடங்களில் தங்கள் திறமைகளை நிலைநாட்டிப் புகழ் பெறுவதோடு, அதிகாரிகளின் பாராட்டையும் பெறுவர். மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்குக் கடின உழைப்பு தேவைப்படும். வீட்டில் நவீன உபகரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்கள் இலாபம் தரும். இதுவரை கடினமாக இருந்த காரியங்கள் கூட எளிதில் கைகூடும்.

கும்பம்

( அவிட்டம் – 3,4 பாதங்கள்சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)

அவிட்டம் – 3,4 பாதங்கள்

       இந்த வாரம்  தாராளமான தனவரவு இருக்கும்இனிய தகவல்கள் இல்லம் தேடி வரும். உயர் அதிகாரிகளிடம் பணிவுடன்  நடப்பது பதவி உயர்வுக்கு உறுதுணையாக இருக்கும்வியாபாரிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவசப் பரிசுகள் கொடுத்து வியாபாரத்தை மேலும் பெருக்கிக் கொள்வர். நெடுநாளாகப் பிரிந்த தம்பதிகள் இணைந்து மகிழ்வர். பரம எதிரிகளின் திட்டங்களை, திறமையாக மற்றும் சமயோஜிதமாகச் செயல்பட்டு முறியடிப்பீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கும். புத்திரர்களால் ஜெயமுண்டு. நவீன காலத்துக்கு ஏற்றபடி புதுப்புதுத் தயாரிப்புக்களை அறிமுகப்படுத்தி வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்கள். அரசுப் பணியாளர்கள் அக்கறையுடன் பணிபுரிந்து, அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள்.

சதயம்-

       இந்த வாரம் உங்கள் பணவரவு அதிகரிக்கும். செல்வநிலை உயரும்புதிய முதலீட்டுத் திட்டங்களில் உங்கள் பணத்தை முதலீடு செய்து தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். நீண்ட நாட்களாக வராத விருந்தினர்கள்  வந்து விருந்தாடி  மகிழ்வைத் தருவர். நெருங்கிய நண்பர்களின் உதவியால் வீட்டில் நடக்கும் விசேஷங்கள் சிறப்பாக நடக்கும். சுற்றுலாப் பயணங்கள் இனிமை தரும். சினிமா, டிராமா எனப் பொழுதுபோக்குகளில் குடும்பத்தோடு ஈடுபட்டு மகிழ்வீர்கள். வீட்டு வாடகை வசூல் திருப்திகரமாக இருக்காது. மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்குக் கடின உழைப்பு தேவைப்படும். வீட்டில் நவீன உபகரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்கள் இலாபம் தரும். இதுவரை கடினமாக இருந்த காரியங்கள் கூட எளிதில் கைகூடும்.

பூரட்டாதி-1,2,3 பாதங்கள்

       இந்த வாரம் நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து எதிர்பார்த்தபடி பணவரவு ஏற்பட்டு மனம் மகிழும். அரசுப் பணி புரிபவர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு காரணமாக எண்ணியபடி பதவி உயர்வு மற்றும் இடமாற்றங்கள் கிடைக்கும் அனுகூலமான  வாரம். பணிபுரியும் பெண்கள் தங்கள். அனைத்து முயற்சிகளிலும்  வெற்றி பெறுவார்கள். சிலருக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய இல்லம் அமையும். புதிய பதவிகள் தேடிவரும். அந்தஸ்து உயரும்விவசாயிகளுக்கு ஆதாயம் கிட்டும். மாணவர்களுக்குத் தேர்வு முடிவுகள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். வியாபாரிகள் தங்கள் வாக்குவன்மையால் வாடிக்கையாளர்களிடம் வேடிக்கையாகப் பேசிக் கவர்வதின் மூலமாக, இலாபத்தைப் பெருக்குவார்கள். தொழில் புரிவோருக்கும் சாதகமான வாரம்.


மீனம்

( பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)

பூரட்டாதி – 4 ஆம் பாதம்

       இந்த வாரம் பணவரவு அதிகரிப்பதால் மனக்களிப்புக் கூடும் வாரம். உங்கள் புதிய முயற்சிகள்  அனைத்தும் வெற்றி பெறும். புனித பயணங்கள் மேற்கொள்வீர்கள். எல்லோருடனும் பழகும் உங்கள் சகஜமான பழக்கத்தால் விஐபி களின் நட்பு உருவாகும். அவர்கள் மூலமாக ஆதாயங்கள் பெறும் நிலையும் ஏற்படும். அதன் காரணமாக சந்தோஷங்கள் நிலவும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமண ஏற்பாடுகள் நடக்கும்வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை உருவாகி வெற்றியும் கிட்டும். அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு உயர்பதவிகளுக்கான வாய்ப்புகள் பெருகும். தோஷங்கள் நீங்கி நோய்கள் அகலும். தாய் வழியில் ஆதாயம் உண்டு. பால்வளம் பெருகும். மனதில்  நினைத்ததை நினைந்தபடியே நடத்தி முடிப்பீர்கள். அதிகாரம் பண்ணும் தலைப்பதவி கிடைக்கும்.

உத்திரட்டாதி-

       இந்த வாரம் குடும்பத்தில் தனவிருத்தி அதிகமாவதால் இதுவரை இருந்துவந்த இன்னல்கள் தீரும். ஓய்வெடுத்து, உல்லாசமாய்ப் பொழுது போக்கும் விதமாக, நமக்கு எல்லா நாட்களும் விடுமுறை நாளாக இருப்பதில்லையே. அதேபோல் இன்பமும் துன்பமும் கலந்தது தானே வாழ்க்கை. பலநாள் கனவுகள் நனவாகும்.  பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் ஆடம்பரச் செலவுகள் அதிகமாவதின் காரணமாகப் பணமுடை ஏற்படா வண்ணம் தேவையற்ற செலவுகளை ஒதுக்குவது நல்லது. தெய்வபலம் இருப்பதினால் நேர்மை மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றால், வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். இந்த வாரம்  உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் வெற்றியின் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள்.


ரேவதி-

       இந்த வாரம் பணவரவு அதிகரிப்பது போல், செலவுகளும் கூடும். கல்வி கேள்விகளில் தேர்ச்சி ஏற்படும். சுபச் செய்திகள் மன மகிழ்ச்சி தரும். வியாபாரிகள் புதிய வாடிக்கையாளர்களால் அதிக இலாபம் அடைவர். மாணவர்கள் தங்கள் பொன்னான நேரத்தை வீணாக்காமல், கருத்தோடு படித்தால் நல்ல மதிப்பெண்கள் பெறலாம். பெண்களால் சந்தோஷம் உருவாகும். வாகனங்களில் செல்லும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லவும். நல்ல நண்பர்களுடன் பழகுவதால் உங்கள் மனம் உயர்ந்த எண்ணங்களைக் கொண்டதாக அமையும். உறவுகள், உள்ளங்கவர் நண்பர்கள் மற்றும் மங்கையர்கள் ஆகியோர் உதவிக் கரம் நீட்டுவதால் உள்ளம் மகிழும். வியாபார விரிவாக்கம் பற்றிய தங்கள் கூட்டாளியின் ஆலோசனைகள் ஏற்றுக் கொள்ளத் தக்கதாகவும், சிறப்பானதாகவும் இருக்கும்.


n  ஜோதிட கலாநிதி எஸ். விஜயநரசிம்மன். எம். எஸ்ஸி. (அஸ்ட்ரோ)   







No comments:

Post a Comment