Search This Blog

Saturday 21 April 2018








சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறும் சிவாஜிராவ் (ரஜினி)
         ஜோதிடம் ஓர் விஞ்ஞானம்.அதில் உள்ள உண்மைகளை மிகவும் பிரபலமானவர்களைக் கொண்டு ஆராய்ந்தால் மட்டுமேஉலகுக்கு அந்த விஞ்ஞான உண்மைகளை விளக்க முடியும்நம் முன்னோர்களும்முனிவர்களும்அயராது பாடுபட்டு வளர்த்தஜோதிடத்தின் உண்மைகளை அறிவோம்வியப்போம்!. நவதேஜி, லோமச சம்கிதா, யவன ஜாதகம், கர்க ஜாதகம் போன்ற நூல்களில் விளக்கப்பட்ட பலன்கள்படி சூப்பர் ஸ்டாரின் கட்டத்தை அலசுவோமா நண்பர்களே !
                     சிவாஜி ராவ் என்ற ரஜினிகாந்த் தமிழக மக்களின் இதயத் துடிப்புஇலட்சக்கணக்கான ரசிகர்களின் உன்னத தலைவன்.ரனோஜிராவ் மற்றும் ரமாபாய் இவர்களின் மகனாக 12-12-1950 அன்று பெங்களூரில் பிறந்தார்.
        எங்கும் எதிலும்  மந்திரம் போட்டதுபோல் மயங்குகின்ற மக்கள்பல வருட கடுமையான உழைப்பால் “சூப்பர் ஸ்டாராக”உயர்ந்தார்புகழ்பெற்றார்அவரின் ஜாதகத்தில் எங்ஙனம் கிரகங்கள் அவரின் உயர்வுக்கு உதவின என்பதைக் கண்போம்.
இராகு



குரு
12 – 12 – 1950
திருவோணம்-2
11 – 45 இரவு
இராசி

சந்,செவ்
லக்
புத,சுக்
சூரி

கேது,சனி

            சந்திரன் தசா இருப்பு:- 7வருடம் 0 மாதம் 18 நாள்
திதிசுக்ல சதுர்த்திநித்ய யோகம்:-வியாகதம்கரணம்-விஷ்டி
நடப்பு தசா:- 29- 01- 2018 முதல் 27- 6 -2020 வரை புதன் திசை, புதன் புத்தி.


சூரி, சனி

சந்,சுக்

செவ்

நவாம்சம்
இராகு
கேது

குரு


லக்,புத

              
சிம்ம இலக்னாதிபதி சூரியன், இராஜகிரகம் ஆதலால், இதில் பிறந்தவர்கள் அரசருக்கு உரிய விசேஷ குணங்களை உடையவராய் இருப்பர். மிகப் பெரிய அளவற்ற நிலையைக் கொண்ட சூரியன் போல் நல்லொழுக்கமும், சீலமும், மரியாதைக்கு உரியவராகவும் இருப்பர். எதையும் மிகப்பெரிய அளவிலேயே செய்ய நினைப்பர். நேர்மையானவராகவும், உண்மையானவராகவும், தூய உள்ளம் உடையவராகும், தயாள குணம் உடையவராக இருப்பர். ஆயினும், சில நேரங்களில் குறுகிய மனப்பான்மை உடையவரவும் இருப்பர். எதையும் முன்னின்று ஏற்பாடு செய்வதிலும், தலைமைப் பொறுப்பை ஏற்கக்கூடிய தகுதியும், பண்பும் உடையவர். பேராவலும், உயர்வினை அடையும் விருப்பமும் உடையவர். முன்னேற்றத்திற்கான முக்கிய குறிக்கோள்களை உடையவர்.
         இவரது வாழ்க்கைமுறை நவீனமானதாகவும், உயர்குடிப் பிறந்தவர்களின் தன்மையுடனும் இருக்கும். சூரியனைப் போல் எப்போதும், நடுநாயகமாக அனைவரையும் கவரும்படியாக இருக்க விரும்புவர். சுதந்திரமாக இருக்க விரும்புவர். அவமானங்களை, அவமதிப்புக்களை விரும்பார். எவ்வளவு கோபப்படுத்தினாலும் அந்த நிகழ்வுகளை மறந்து, மன்னிக்கக் கூடியவர். பயமற்றவர், தைரியமானவர், முரட்டுத்தனமும் உடையவர். நியாயத்திற்காகப் போராடக் கூடியவர்கள். பிறருடைய தயவையோ, உதவியையோ பெற விரும்பமாட்டார்கள். தன்னம்பிக்கையுடனும், மிகுந்த விசுவாச முடனும் செய்யும் காரியங்களை திறம்படச் செய்து முடிப்பர். எனினும், சிலசமயங்களில் சோம்பேரித் தனம் காரணமாக முழுவதுமாகக் காரியங்களை கைவிடுவர்.
        அமைதியை விரும்புபவர். எப்போதும் மகிழ்ச்சியாய் வாழ்வதையே விரும்புவர். இரக்கமுள்ளவர், தர்ம குணம் உள்ளவர், சக்தி மிக்கவர், சுயமரியாதை உடையவராக இருப்பினும், முரட்டுத்தனம், தற்புகழ்ச்சி, சுய தம்பட்டம், இல்லாததை இருப்பது போல் காட்டிக் கொள்ளும் குணம் ஆகிய குறைகளும் இருக்கும்.
        சிம்மலக்னத்தில் பிறந்தவர்கள் அஞ்சா நெஞ்சமும்அசாத்ய வீரமும் உடைய ஹீரோக்களாக இருப்பர்தனது வெற்றியில்நம்பிக்கை மிக்கவாரகவும்  , பெரியவர்களின் அன்பும் ஆதரவும் பெற்றவராகவும் இருப்பர்எதிலும்தனக்கென தனிமுத்திரை பதிப்பவர்கள்.மற்றவர்களைசிதறாமல் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதிலும்மற்றவர்களுக்கு தைரியமூட்டுவதிலும் வல்லவராக இருப்பர்.வரும் விருந்தினரை மனமுவந்து வரவேற்பதில் விருப்பமுடையவர்நல்லவர்களின் ஆதரவு இவர்களுக்கு என்றும் உண்டு.அனைவராலும் போற்றப்படுவர்நல்வாழ்க்கை அமையும்பணம் செலவழிப்பதில் கட்டுப்பாடற்றவர்பொதுவாகசிங்கம் யாருடனும்கூட்டுவைக்காதல்லவாசிம்மத்தில் பிறந்தவர்கள் காடு மலைகளில் அலைவதில் ஆர்வமுள்ளவர்கள்ஜனவசியன்சகலகலாவல்லவன்,கம்பீர பேச்சுவுடையவன்நன்கு உண்பவர்செவ்வாய் யோககாரகர்அவர் உச்சம் பெற்றுள்ளார்.

        மகர ராசியில் பிறந்தவர்கள் திறமை மிக்கவர்கள். சேவை மனப்பான்மை உடையவர்கள். தொழில் ஆர்வமும், ஆசை அதிகமும் உள்ளவர்கள். இவரது சேவையால் மக்களின் மதிப்பைப் பெற்று, சமூகத்தில் பெருமையுடன் வாழ்வர். தத்துவவாதி, செயல்வீரர், பொறுமையுடையவர், அர்பணிப்பு உணர்வுடன் கூடிய கடின உழைப்பை உடையவர். சுயமுயற்சியால் முன்னேறுபவர். ஒரு செயலைத் தொடங்கும் முன்னர் பலவித தீவிர சிந்தனைக்குப் பிறகே துவங்குவர். அதையும், சரியான வழிமுறையோடு சிறப்பாக செய்து முடிப்பர். நம்பாமை மற்றும் துறவு நிலை என்ற இருவேறு தொடர்பில்லாத குணங்களை உடையவராக இருப்பர். எந்த நேரத்திலும், சுயமாக, சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை, தன்குணங்களை மாற்றிக்கொள்பவர்கள். இவர் மனதில் என்ன நினைக்கிறார், இவரது திட்டம் என்ன ? – என்பதை எவராலும் உணர்ந்து அறிய முடியாது. ஆனாலும், திடீர், திடீர் எனத் தன் முடிவுகளை எடுத்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திவிடுவார். ஆசாரமானவராகவும்தெய்வபக்தி உடையவராகவும் இருப்பர்.வாசனைத் திரவியங்களில் பிரியமும்ஆடை ஆபரணங்களில் ஆசை உடையவராகவும் இருப்பர்தன் இஷ்டம் போல் காரியங்களைசெய்து வெற்றி பெறுபவராகவும் இருப்பர்குழந்தைகளுக்கு குறைவிருக்காதுகுடும்பம்செல்வம்கீர்த்தி அனைத்தும் நிறைந்திருக்கும்.மனைவியிடம் மிகவும் பிரியமுள்ளவராகவும்அவர் விருப்பபடியே நடப்பவராகவும் இருப்பவர்மகர ராசியில் பிறந்தவர்கள்சுறுசுறுப்புமிக்கவராகவும்பிறந்த இடத்தைவிட்டு வெளியிடத்தில் வாழ்க்கையை அமைத்துக் கொள்பவர்களாகவும் இருப்பர்.


        சுய ஒழுக்கம் உடையவர். சிக்கனமாகச் செலவு செய்வார். அர்பணிப்பு உணர்வு, பெரிய மனிதத் தன்மை, பொறுப்புணர்வு, ஆத்திரப்படாத நிதானம், அமைதி, எச்சரிக்கை குணம், உணர்ச்சி வசப்படாத குணம் ஆகியவற்றை உடையவர். ஆயினும், சோர்வு மனப் பாங்கு, எல்லாமே கெட்டது என்ற எண்ணம், நம்பிக்கையின்மை, படபடப்பு, வளவள என்று பேசுதல் ஆகிய குணங்களும் இருக்கும். ஆரோக்கியமானவர். அகன்ற தோள்கள், அழகிய உணர்வு பூர்வமான கண்களும், அகன்ற முகமும் உடையவர். வளைந்த புருவமும், சிங்கத்தைப் போன்று அகன்ற நெற்றியும், கம்பீர நடையும் உடையவர். சிங்கம் போன்ற ஸ்டெரெங்க்த் எனக்கு என வலுவான எலும்புகளை உடையவர்.
              ரஜினிகாந்த் அவர்கள்இளம் வயதில் மிகவும் கடினமாக உழைத்துஉழைப்பால் உயர்ந்தவர்சுயசம்பாத்தியத்தில் உயர்ந்தார்பெருமாளின் திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கஷ்டப்பட்டே உயர்வார்கள்மேலும் , இவர்களின் மனைவி இவரை நன்றாகஉணர்ந்தவராக இருப்பார்அதிர்ஷ்டகாரராகவும் இருப்பர்மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்கு ஏராளமான பணத்தை செலவழிப்பவர்களாகஇருப்பர் என ரிஷிகள் குறிப்பிட்டு உள்ளனர்மேலும்உண்மையானவராகவும்இறைவனிடம் நம்பிக்கையுடையவராகவும்நகைச்சுவை உணர்வு, உயர்ந்தமனம் உடையவராகவும்பெருந்தன்மை உடையவராகவும் இருப்பர்அவரின் செயல்களில் ஒழுக்கம் உடையவராகவும்,கட்டுப்பாடு மிக்கவராகவும் இருப்பர்பிறரது சந்தோஷத்தில்தான் மன மகிழ்ச்சியடைவர்பிறருக்கு மனப்பூர்வமாக உதவி செய்வர்.உயர்விலும்தாழ்விலும் உண்மையை மட்டுமே கடைப்பிடிப்பர். மத தொடர்பான பணிகளில் ஆர்வம் உடையவர், என்றும்சொல்லப்பட்டுள்ளது.  இந்த குணங்கள் அனைத்தும் சூப்பர் ஸ்டாரிடம் உள்ளதல்லவா ? திருவோண நட்சத்திரத்திற்குமிருகம் குரங்குஆகும்எனவே பல படங்களில் அவருக்கு குரங்கு உதவுவதை பார்த்திருப்பீர்கள்.

       ரஜினி அவர்கள் சுக்கல சதுர்த்தியில் பிறந்தவர்இதில் பிறந்தவர்கள் நியாயத்திற்காக எவரையும் எதிர்ப்பதிலும்எதிர்வாதம்செய்வதிலும்சுய  உயர்வுக்காக சூழ்நிலைக்கு ஏற்றவாறு ,தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளும் திறமை உடையவராகவும் இருப்பர்.


       இவர் வியாகதம் நித்யயோகத்தில் பிறந்ததால்எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவராகவும்வெகுண்டெழும்சினமுடையவராகவும் இருப்பர்தன் நிலையிலிருந்தும்எடுத்த முடிவுகளிலிருந்தும் திடீரென பின் வாங்கிவிடுவார்இவரின் மூட் பார்த்தேயாரும் இவரிடம் நெருங்க முடியும்.

       
       இதுவரை பொதுவாக பார்த்தோம்இனி ஜாதகத்துள் சென்று பார்ப்போம்ஒளிமயமானகவர்சியானகம்பீரமான கிரக ராஜ்ஜியத்தின்அரசனான சூரியனே லக்னாதிபதியாவார்அவர் சதுர்த்த கேந்திர மேறி ஜாதகருக்கு கம்பீரத்தையும்அழகையும்பெருமைகளையும்அளித்தார்மேலும்பெற்றோர் மீது பாசத்தையும்மிகத் தெளிவான குறிக்கோளையும்கடின உழைப்பால் வாழ்க்கையில்முன்னேற்றத்தையும் கொடுத்தார்இவர் தலைமைப் பதவிக்குத் தகுதியானவர். சூரியன் புதன் சாரம் பெற்று கேந்திரத்தில்நட்பு வீட்டில்இருக்கவீடு கொடுத்த செவ்வாய் உச்சமானதால் சம்பாத்தியத்தில் அரிய சாதனைகளை தந்தார்அரசில் முக்கிய பதவிகளை அடைவார்.
        இவருக்கு ஜனரஞ்சகமும், புகழும் அதிகரிக்கும். சங்கீதம், இசையில் நாட்டம் உடையவர்.போர்படையில் தளபதியாக மிளிரக்கூடியவர். செல்வம் மிக்கவர். மனைவி மக்களுடன் மனம் நிறைந்த, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வார். நடுவயதில் வண்டி வாகனம் என அனைத்து வசதிகளையும் அடைவார். பின்னாளில் மிகுந்த பிரபலம் அடைவார்.
        சந்திரன் 6 ஆம் பாவத்தில் இருப்பதால் பொதுமக்களுக்கு நன்மை செய்யவும், நியாயத்திற்குப் போராடும் போராட்ட குணமும் உடையவர். சமூகத்தில் கௌரவமும், மரியாதையும் பெறுவார். வலுமிக்க எதிரிகளையும் வென்று முன்னேற்றம் காண்பார். சேவைப் பணிகளிலும் வெற்றி அடைவார்.


       இரண்டாம் அதிபதி கிரக ராஜ்ஜிய இளவரசன் புதன்திரிகோண ஸ்தானமான 5 ஆம் இடத்தில் நின்றதால்தலைமுறைகளுக்கும்சொத்து சேர்க்கும் திறமையையும்புதிய முறைகளில் (ரஜினி ஸ்டைல்வருமானத்தை பெருக்கும் திறனையும்அரசுமூலம் பரிசுகள்பெறும் வாய்ப்பும் கிடைத்தனஇனிய பேச்சும் கூர்மதியும், தனது பண்பால் மக்களை தன் சுட்டுவிரல் அசைவுக்குக் கட்டுப்படுத்தும் வல்லமையையும் தந்தது. அரசவையில் கௌரவிக்கப்படுவார். 2-11 க்கு உரிய தனலாபாதிபதி புதன் செல்வச் செழிப்பையும் அள்ளித்தந்தார். குருவின் தனுசுவில்சுக்கிரன்புதன் இணைவும்நவாம்சத்தில் சுக்கிரன் உச்சமடைந்து உள்ளதும்  இவரைகலைத்துறையின் உச்சத்திற்கே கொண்டு சென்றதுமெலும்கேந்திரத்தில் அமர்ந்த சூரியன்தசம கேந்திரமான சுக்கிரனின் வீடான,தொழில் ஸ்தானத்தை பார்வை செய்ய நல்ல குரல் வளத்தையும், நடிப்பையும் தந்து சினிமா தொழிலில் உயர வைத்தது,

       பொதுவாக 4 ஆம் அதிபதி செவ்வாய் 6 இல் அமர்ந்ததால் கோபமுடையவராகவும்ஊர் சுற்றி பார்க்க ஆவலுள்ளவராகவும்சிலசமயங்களில் பிறரால் விரும்பப்படாத பழக்க வழக்கங்களை உடையவராகவும் இருப்பர்மெலும், 4 ஆம் அதிபதியும்கிரக ராஜ்ஜியசேனாதிபதியுமான செவ்வாய் ஜாதகரை போர் வீரனுக்கு உரிய மன உறுதியையும்சமயோசித புத்தியையும் தந்ததுபடிப்பைவிடநடைமுறை அனுபவத்தால் உயர்வையும்தெய்வ பக்தியையும் தந்ததுஇவருக்கு இளமையில் 6 இல் இருந்து திசை நடத்தியதால்கல்வியில் தடை தந்தது.சந்திரனோடு இணைந்த செவ்வாய் தனது தசாவில் , தாயாருக்கு மரணத்தையும் தந்ததுமேலும், சத்ரு பாவ செவ்வாய் இவரை நல்ல குடுப்பத்தில் இருந்து வந்த சக்தி மிக்க மனிதராகவும், சிந்தனையாளராகவும், சந்தோஷம் மிக்கவராகவும் ஆக்கியது. இதனால் அரசியலில் இவரது தாக்கமும், புகழும் நிரந்தரமாக இருக்கும். செல்வம் அழிந்து மீண்டும் கைக்கு வந்து சேரும். குடும்பத்தின் ஒளி விளக்காய்த் திகழ்வார். குடும்ப உறுப்பினர்களின் முன்னேற்றங்களுக்கு இவரே காரணமாவார். நல்லவர்கள் துணையிருக்கும். கௌரவம், புகழோடு வெற்றி பெறும் வேந்தராகத் திகழ்வார். உழைப்பதற்கான உத்வேகமும், அதற்கான முழு சக்தியும் மிக்கவர். உயர்ந்த பண்புகளை உடையவர்களுடனே பழகுவார். ஒரு பெரிய குழுவுக்குத் தலைவராக இருப்பார். உயர்ரக வாகனங்களை உடையவராக இருப்பார். கவர்ச்சிகரமான, கம்பீரமான உடலமைப்பை உடையவர். உடலளவில் முரடராய் காணப்பட்டாலும், மனதளவில் மென்மையானவர். மேன்மையானவர்.

       நான்கில் சூரியன் இருப்பதால்தேவையற்றவர்களுக்காக கவலைப்பட்டுதன்னை சார்ந்தவர்களின் மகிழ்ச்சியை கெடுப்பார்.வெதாந்த தத்துவங்களில் ஆர்வமும்இயற்கையிலேயே மனித உறவுகள்மனோதத்துவம் பற்றிய ஆழ்ந்த அறிவும் உடையவராகஇருப்பார்மானிட சமுதாயத்திற்காக உழைப்பதில் மகிழ்ச்சியடைவார்.        கல்யாணவர்மரின் சராவளியில் இந்த ஜாதகருக்கு என்னசொல்லப்பட்டிருகிறது என்று பார்ப்போம்லக்னாதிபதி நான்கில் இருக்க ..... எப்போதும் மகிழ்ச்சியானவராகவும் ,மாசற்றகாமமுடையவராகவும் ,உடன் பிறப்பு உள்ளவராகவும் இருப்பார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


                9 
ஆம் அதிபதி செவ்வாய் உச்சம்குரு ஏழில் இருந்து இவருக்கு புகழையும்செல்வாக்கையும் தந்துநல் பாக்கியத்தையும் தந்தது.

       ஏழாம் அதிபதி 2 இல் இருப்பதால் மனைவி அதிர்ஷ்டசாலியாவார்திருமணத்திற்குப் பின் இனிமையான குடும்ப வாழ்க்கையும்,நல்ல எதிர்காலமும் ஏற்பட்டது. 7 ஆம் அதிபதி பாபகர்த்தாரியில் இருப்பதால் சிறு வயது முதலே கடின உழைப்பை தந்துவெகுவேகமாக,அசாதாரண வழி முறைகளை கடைபிடித்து செல்வம் சேர்க்கவைத்தார்பிற்காலாத்தில் சமுதாய சீர்திருத்தத்திலும் ஏழைகளின்முன்னேற்றத்திலும் ஈடுபட்டு நற்புகழையும் தருவார்இன்னிலை தாமத திருமணத்தையும் தந்தது.


                5 
மற்றும் 8 ம் அதிபதி குரு ஏழில் நின்று லக்னத்தையும் பார்த்ததால் காதல் மற்றும் கலப்புத் திருமணத்துக்கு வழி வகுத்ததுகுருஏழில் இருப்பது நிலைமையை சீராக்கியதுமேலும், 7 இல் உள்ள குருவால், இவரை சந்திக்க மக்கள் ஆர்வம் கொள்வர். தேன் போன்ற குரலை உடையவர். மாபெரும் சபைகளில் அனைவரையும் கவர்ந்திழுக்கும் சொற்பொழிவுத் திறன் உடையவர். கவிதை, கலை, ஜோதிடம், சாத்திரங்களில் ஆர்வமுடையவர். திறமையானவர். அதிர்ஷ்டசாலி, நன்றி மறவாதவர். தந்தையைவிட திறமைசாலியாக இருப்பார். திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மிகப்பெரிய பதவிகளை அடைவார். 34 வயதுக்குப் பிறகு புகழின் உச்சியை அடைவார்.


                4, 9 
க்கு உடைய உச்ச செவ்வாய் 12 ஆம் அதிபதி சந்திரனுடன் சேர்ந்துஅதன் அதிபதி சனி 2 ஆம் இடத்தோடு சம்பந்தம் பெற்றதால்வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புக்களை தந்ததுசனியோடு 2 இல் கேது நிற்க பாபாஇமயமலை என ஞானமார்க்கத்துக்கும்ஆன்மீகத் தேடலுக்கும் வழிவகுத்தது. 8 ஆம் அதிபதி குருஇதற்காக மெய்வருத்தி கஷ்டமும் தந்தது. 8 இல் நின்று திசை நடத்தியபோது ராகுஇவருக்கு வாழ்க்கையில் கஷ்டங்களையே அதிகம் தந்ததுமேலும் எரிகிற கொள்ளியில் எண்ணையை ஊற்றியது போல் ராகு திசையில்,கோசார சனியின் அஷ்ட்டம சனியின் காலமும் வந்ததுஅதன் வேலையைக் காட்டியதுஆயினும் 8 இல் ராகு இருக்க தொழில் வழிவருமானம் உயர்ந்தது.


                    9 
ஆம் அதிபதி 6 இல் அமர்ந்து நண்பர்களின் உதவி மற்றும் உபாதைகளையும் தந்ததுசகோதரவழி உதவிகளும் பெற்று உயர்ந்தார்.புதன் 5 இல் இருக்க ஆச்சர்யங்களையும்போழுதுபோக்கு மற்றும் ஜால வித்தையும் தந்தது.
                    சுக்கிரன் 5 இல் இருக்க பிறர் மகிழ்ச்சி அளித்த அளவுக்கு வெறுப்பேற்றும் தன்மையும் தந்ததுஇதனால் இவர் நிலையற்ற மனது உடையவர் என்ற பெயர் வரக் காரணமானதுமேலும், மத உணர்வுகளையும், கடமை உணர்வையும், தர்ம காரியங்களில் ஆர்வத்தையும், பேச்சு வன்மையையும், கலையறிவையும் தந்தது. வாழ்க்கையில் அதிக வெற்றிகளைக் கண்டாலும், அவ்வப்போது தோல்விகளையும் சந்திப்பார். இவரது குழந்தைகளுக்கும் நுண்கலை ஆர்வம் இருக்கும். திடீரென அதிக சொத்துக்கள் சேரும். சுகவாசியாக இருப்பார். அரசியலிலும் மிளிர்வார். பதவிகள் தேடிவரும். நம்பிக்கையான நண்பர்களை உடையவர். கல்வி முழுமை பெற்றிருக்காவிட்டாலும் அறிவாளியாகத் திகழ்வார். கலைஞராகப் புகழ் பெறுவார். 36 வயது வரை நிரந்தரமற்ற தன்மை நிலவும்.

        சனி 2 இல் இருக்க முன்யோசனை அற்றவராகவும்சில நேரங்களில் ஏமாளியாகவும் இருப்பார்கேது இருக்க நாவன்மைக்குபங்கம் தந்ததுவிரும்பிய வண்ணம் படிக்க இயலாத நிலையை தந்தது.  மேலும், நியாய மானவராகவும், நீண்ட பயணங்களை மேற்கொள்பவராகவும், அனைத்து வசதிகளையும் பெறும் அதிர்ஷ்ட சாலியாகவும், பிறந்த இடத்தைவிட்டு வேறிடத்தில் வாழும் யோகம் உடையவராகவும் ஆக்கியது. அரசு மரியாதைகளைப் பெறுவார். தொழில், சேமிப்பு, பெரிய வியாபார முன்னேற்றம் போன்ற எதிர்காலத் திட்டங்களைக் கருத்தில் கொள்பவராக இருப்பார். குடும்ப வாழ்க்கையில் சில குழப்பங்களையும் தருவார், சனி. ஆலய தர்மகர்த்தா போன்ற பதவிகளை வைப்பார். உள்நாட்டு ஆதரவைவிட வெளிநாட்டு ஆதரவு அதிகம் இருக்கும். இளமைக் காலம் இன்னல் மிகுந்த காலமாக இருக்கும். வீட்டில் வெளியாள் போல் நடக்க நேரும். குடும்பத்தாரிடமும் அந்நியப்பட்டே வாழ்வார். மக்கள் சேவையில், தேசிய சேவையில் ஈடுபாடு கொள்வார். கொள்கைப் பிடிப்பு உடையவர். உணவு, உடை பற்றி எப்போதும் கவலைப் படமாட்டார்.
         இராகு 8 இல் இருக்க பலம் மிக்க, ஆரோக்கியம் மிக்க உடலை உடையவர். அரசராலும், அறிவாளிகளாலும் போற்றப் படுவார். கௌரவமும் அடைவார். அரசு மூலமான வருமானங்கள் கிடைக்கும். சில நேரங்களில் சொத்து இழப்பும் ஏற்படலாம். சொத்துக்களை ஆடைவதில் தடைகளும் இருக்கும். முதுமையிலும் முழு சுகத்தோடு வாழ்வார். சந்தோஷமும், புகழும் நிலைக்கும். நிலையான, நிரந்தர இலாபங்கள் இருக்கும். கையூடு வாங்கினாலும் மாட்டிக் கொள்ளமாட்டார். செல்வத்தைப் பராமரிக்கும், நம்பிக்கைக்குரிய, ஆரோக்கியக் குறைவுள்ள மனைவி அமைவார். 26 – 36 வயதுக்குள் அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டும்.
         கேது 2 இல் இருப்பதால் சொத்துக்களும், சந்தோஷமும் சேரும். இனிமையாகப் பேசுவார். அனுகூலமான பலன்களே ஏற்படும்.
          பாவாதிபதிகள் மாறி நின்ற பலன்கள்---
         இலக்னாதிபதி சுகபாவத்தில் இருப்பதால் தந்தைவழி சந்தோஷம் இருக்கும். பெற்றோரை தெய்வமாக மதிப்பார். சந்தோஷம், சுகவாழ்வு, அரசு ஆதரவு, தாயின் ஆசி ஆகியவை கிடைக்கும். உயர்ரக வாகன வசதிகள் அமையும். நீண்ட ஆயுள், வீடு, சொத்து, சுகம் ஆகியவற்றையும் அடைவார்.
                  2 ஆம் அதிபதி 5 இல் இருக்க.... மிகுந்த செல்வம் மிக்கவராகவும்மக்களால் செல்வமும் ,வருமானமுமே குறியென்றும் இருப்பார்.குடும்பத்தைப் பேணுவார். கடமையுணர்வுடன் இருப்பார். திறந்த மனதை உடையவர். தயாள குணம் இருக்கும். எப்போதும் பிறருக்கு உதவுபவாரக இருப்பார். மற்றவர்களின் வலிகளையும், கஷ்டங்களையும் நிவர்த்தி செய்வார்.

        மூன்றாம் அதிபதி 5 இல் நிற்க மாசற்றவராகவும்வலிமையான மனைவி மக்களையும் உடையவர்நல்ல அழகு, மன்னிக்கும் குணம் இருக்கும். உடன் பிறப்புகளையும், குழந்தைகளையும் நன்கு கவனித்துக் கொள்வார். ஆன்மிக சிந்தனை அதிகம் இருக்கும்.
         நான்காம் அதிபதி 6 இல் இருக்க – முன்கோபம், பகை உணர்வு, முரட்டுத்தனம் ஆகியவை உடையவர். சொத்துக்கள் சேரும். தாய்வழி உறவுகள் கசக்கும்.

        ஐந்தாம் அதிபதி 7 இல் இருக்க.... கெளரவம் தந்ததுசமயபற்றும் காதல் திருமணமும்வாரிசுகளால் இன்பத்தையும் தந்தது.மற்றவர்களுக்கு உதவும் குணத்தையும் தந்ததுஉயரமானர். தெய்வீகமானவர்.அழகிய மனைவி உடையவர். ஞானம் மிக்கவர். செல்வந்தர்.

        ஆறாம் அதிபதி 2 இல் இருக்க.... சாதனையாளராகவும்அறிவுமிக்க பேச்சுள்ளவராகவும்வெளிநாடு செல்லும் வாய்ப்பையும் ,புகழையும்சில சமயங்களில் சுயநல எண்ணத்தையும் தந்ததுநல்லதே பேசுவார். மத உணர்வுகளைதீவிரமாகப் பேணுவார். சொத்துக்களை சேர்க்க வல்லவர். மிக உயர்ந்த பதவிகளை அலங்கரிக்க வல்லவர். நண்பர்களால் பண இழப்பு ஏற்படும், குழந்தைகள் சொத்தை அபகரிக்க முற்படுவர்.

        ஏழாம் அதிபதி 2 இல் இருக்க.... மனைவியால் செல்வத்தையும்திருமணத்திற்குப் பின் நல் முன்னேற்றத்தையும் தந்ததுமனைவி குண்டாக இருப்பார். சுமாரான குணம் உடையவராகவும் இருப்பார். பண விஷயங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார். ஆண் மகவு இருக்காது. ஜாதகர் தன் குடும்பத்தின் மீது அதிக பாசம் உடையவராக இருப்பார்.

         எட்டாம் அதிபதி 7 இல் இருக்க தாமதத் திருமணம்தொழிலில் சில பாதிப்புகளையும் தந்ததுகஞ்சராகவும் இருப்பார்.

         ஒன்பதாம் அதிபதி 6 இல் இருக்க தாய்வழி உறவால் நன்மையில்லை ,பகைவரால் தொல்லையும்முன்னெற்றத்தில் சிலபாதிப்புகளும் தந்தன. எதிரிகளும், கஷ்டங்களும் அதிகம் இருக்கும்.

         பத்தாம் அதிபதி 5 இல் இருக்க மக்களால் செல்வமும்அனுபவ அறிவால் அனைத்து ஆற்றலும் தந்ததுநற்செயல்கள் செய்வார். ராஜதந்திரி, அரசால் ஆதாயம் ஏற்படும்.

         பதினோறாம் அதிபதி 5 இல் இருக்க.... குழந்தைகளால் மகிழ்ச்சியும்நேர்மையும்இன்பத்தையும்சமயப்பற்றையும் தந்தது.ஆன்மிக எண்ணம், சந்தோஷங்கள் உண்டு. வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்.



                     12 
ஆம் அதிபதி 6 இல் இருக்க சொந்தமே பகையாகும்விபரீத ராஜ யோகம் ஏற்பட திடீர் ராஜ யோகம் தந்தது.  வெள்ளை மனது உடையவர். குழந்தைகளால் பிரச்சனை. ஆண் பிறப்பு இல்லை. உணர்ச்சி வசப்படக்கூடியவர்.


கிரக இணைவுகள் தரும் யோகங்கள்

சுனபா யோகம்:- சூரியன் தவிர ஏனைய கிரகங்கள் சந்திரனுக்கு 2 இல் இடம்பெற ஏற்படும் யோகம்இது ஜாதகருக்கு ஆஸ்திகளையும்,புத்திகூர்மையையும்புகழையும் தன் முயற்சியால் உயர்வையும்இசைநடனம் ஆகியவற்றால் சந்தோஷத்தையும் தரவல்லது.
அனபா யோகம்:- மேலே சோன்னது போல் சந்திரனுக்கு 12 இல் ஏனைய கிரகங்கள் இருக்க சொத்து சுகங்களையும்ஒழுக்கத்தையும்,பூர்ண பலத்தையும்ஆண்மைத் தோற்றையும்நற்புகழையும் , பரந்த மனத்தையும் தரவல்லது.

துருதுரா யோகம்:- சந்திரனுக்கு இருபுறமும், (2, 12 இல்கிரகங்கள் நிற்கஜாதகர் கைகளில் எப்போதும் பணம் புரளும்இரக்கமுடையவராகஇருப்பார்பெருந்தன்மை மிக்கவராகவும் இருப்பார்புகழ் இவரை அரவணைக்கும்வாகன யோகமும் உண்டு.
சசி மங்களயோகம்:- சந்திரன்செவ்வாய் இணைவு தரும் யோகம்அவசியம் ஏற்படும் போதெல்லாம் செல்வம் பெருகும்.

அகண்ட சம்ராஜ்ய யோகம்:- லக்னம் ஸ்திரராசியாக 9 ஆம் அதிபதி பலமிக்கவராகசந்திரன் பலமிக்கவராககுரு 5 இல் இருக்க ஏற்படும்யோகம்ஜாதகர் மற்றவர் மீது ஆதிக்கம் செலுத்துபவராக ஆக்கிவிடும்.

இந்து லக்னம்:- குரு இடம் பெற்ற கும்பமே இந்து லக்னமாகும்எனவேகுரு தசா காலத்திலேயேஇவருக்கு சினிமா உலகிலே உயர்வுஏற்பட தோடங்கியது.

21
26
31
30
25
சர்வாஷ்டவர்க்கம்
25
27
28
24
36
33
31

                  சர்வாஷ்டவர்க்கத்தை பார்க்கும்போது தனஸ்தானம்வெற்றி ஸ்தானம்தொழில் ஸ்தானம்லாபஸ்தானம்ஆகியவற்றில் பரல்கள் உயர்ந்து அனைத்திலும் வெற்றி தந்தது. 8 ஆம் இடத்தில் 21 பரல் இருக்க எதிரிகளை வெல்லும் சக்தி தந்தது.
29 – 1 – 2018 முதல் 27 -  6 – 2020 வரை புதன் திசை - புதன் புத்தி:- பலன்கள்

புதன் திசை

        சொத்து சேர்க்கை. மகிழ்ச்சி, புத்தக வெளியீடு, புகழ் ஆகியவை ஏற்படும். புனித தீர்த்தங்களில் நீராடுதல், புனித பயணங்கள் மேற் கொள்ளுதல் ஆகியவை ஏற்படும். ஓரளவு இலாபங்கள் இருக்கும். மந்திரி பதவி கிடைக்கும். இவரது தாக்கம் அதிக மக்களை வசப்படுத்தும்.  தலைமைப் பதவி, அரசு அதிகாரம் தேடிவரும். விவசாயம், புகழ் ஓங்கும்.

        புதன் புத்தி – கலை ஆர்வம், உலக சுகம், பொருளாதாரம், தர்ம காரியச் செயல்கள் ஆகியவை அதிகரிக்கும். மன மகிழ்ச்சி, குழந்தைகள் மூலமான சந்தோஷங்கள் பெருகும். வெற்றி மீது வெற்றி வந்து ரஜினியைச் சேரும். உறவுகள், நண்பர்கள் அன்பு மேலிடும். முக்கிய அரசியல் பிரமுகர்களுடன் சந்திப்புகள் நிகழும். குடும்ப ஆரோக்கியம் குறையும் ஆதலால் விஷ்ணு சகஸ்ரநாமம் செல்வது நல்லது.

தஜக நீலகண்டீயம் படி வருட பலன்கள்.-

         இந்த வருட ஜாதகப்படி - வருஷாதிபதி – குரு, முந்தா – என்ற முக்கிய புள்ளி மூன்றாம் பாவத்திலும், தனுசு இராசியிலும், முந்தாதிபதி – கர்ம பாவத்திலும் அமைந்துள்ளன. அதற்கான பலன்கள்.
           வருசேஷா குரு தரும் பலன்கள் – புதிய திட்டங்கள் வெற்றி பெறும். குழந்தைகள் மூலமாக சந்தோஷம் ஏற்படும். அரசியல் ஆதாயங்கள் ஏற்படும். அதிகார பதவியில் உங்கள் செயல்பாட்டுக்கு உதவுவர். சமூக அந்தஸ்து உயரும். மக்கள் ஆதரவு பெருகும். அரசியல் எதிரிகளை வெல்லலாம். எதிரிகள் தாங்களே வந்து தஞ்சமடைவர்.

          மூன்றாம் பாவ முந்தா தரும் பலன்கள் – வெற்றி மேல் வெற்றி, கௌரவம், மரியாதை உயருதல், நல்லாரோக்கியம், ஆன்மிகத் தேடல் ஆகியவை ஏற்படும். புதிய திட்டங்கள் தீட்டி, உயர்ந்த குறிக்கோள்களை அடைவர். அத்தகைய நிகழ்வுகள் சமூகத்தில் கௌரவத்தையும், மதிப்பையும் உயர்த்தும். விவாதங்களில் வெற்றி அடைவர். எதிரிகளை வெற்றி கொள்வர். மிகப் பெரிய பதவியில் உள்ளவர்கள் அனுகூலமாய் ஒத்துழைப்பர். குடும்பப் பிரச்சனைகள் எழலாம். கடவுள் நம்பிக்கை கூடும்.  ஆன்மிக தலைவர்கள், மத குருமார்களின்   சந்திப்புகள் நிகழும்.

          முந்தா இருக்கும் இராசி தரும் பலன் – முக்கிய பணிகள் யாவும் அனுகூலம் ஆகும். குடும்ப வாழ்க்கை இனிக்கும். ஞானிகளின், பெரியவர்களின் சந்திப்புகள் நிகழும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசியலில் பதவிகள் தேடி வரும்.

          கர்ம பாவத்தில் உள்ள முந்தேஷ் தரும் பலன்கள் – எதிர்பார்ப்புக்கு மேல் வெற்றிகள் குவியும். விருப்பங்களும், எதிர்பார்ப்புகளும் நிறைவேறும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பதவி உயர்வுகள் கிடைக்கும். சமூக அந்தஸ்து உயரும்.



        எனவேஅன்பர்களே புகழின் உச்சியிலிருக்கும்  ரஜினியின் ஜாதகத்தில் கோள்கள் நடத்திகாட்டிய கொண்டாட்டங்களை கண்டு களித்தோம்

No comments:

Post a Comment