Search This Blog

Saturday 28 April 2018

மூன்றாம் பாவ இணைவுகளும், சூட்சுமங்களும்


மூன்றாம் பாவ இணைவுகளும், சூட்சுமங்களும்



சகோதர பாவம் பற்றி ஜோதிடக் களஞ்சியத்தில் குறிப்பிடப்படுவதாவது –

              துலங்கு மூன்றா மிடந்தனிலே

                  துணைவர் பலனை சொல்லுங்கால்

              இலங்கு, மூன்றா மதிபதியும்

                  இருந்தார் கண்டார் தமைக்கண்டு

              நளங்கொளா உச்சம் பகை நீச

                    நட்புமறிந்தே யுரை செய்யப்

               பலன் கொள் பெண்ணான் கிரகங்கள்

                    பார்த்துத் துணைவர் பலன் சொல்லே.

          மூன்றாம் இடத்தைக் கொண்டு சகோதர பலனை சொல்லும்போது அதில்


இடம் பெற்ற, பார்க்கும், மூன்றாம் அதிபதியோடு கூடி நின்ற கிரகங்களையும், 

அவர்களை பார்த்த கிரகங்களையும் கொண்டு உச்சம், நீசம், பகை, நட்பு ஆகியவற்றையும் 
நன்கு ஆராய்ந்து, ஆண், பெண் கிரகங்களைக் கொண்டும் உடன் பிறப்புகளின் பலன் சொல்லவேண்டும்.

          செவ்வாய் மூன்றாமிடத்தில் இருந்தாலும், சகோதரர் அற்பம், பதினொன்றில் 

செவ்வாய் இருந்தால் மூத்த சகோதரர்கள் அதிகம் என்றும், இரண்டில் செவ்வாய் இருக்க 
உடனே சகோதரர் பிறப்பார் என்றும் கூறல் வேண்டும். ஒவ்வொன்றும் மூன்று மூன்றாகப் 
பார்த்துக் கணக்கிட்டு சொல்வது நல்ல பலன் ஆகும்.

          மூன்றாம் அதிபதியும், செவ்வாயும், நான்காம் அதிபதியோடு கூடினாலும், 

நான்கில் இருந்தாலும் சகோதரர்களின் பங்கு மனை வந்து சேரும். ஜாதகர் தயாள குணம் 
இல்லாதவராகவும், விபசாரமுடையவராகவும், தாசிகளின் சவகாசம் உடையவராகவும் 

இருப்பார். குறைவான சகோதரர்களே இருப்பர். கோபக்காரராக இருப்பார். வாழ்க்கையில் 

திரவிய விருத்தி உண்டு.

          மூன்றில் புதன் இருந்தால் மூத்த சகோதரிக்கு ஆகாது. ஜாதகர் நல்ல 

அறுசுவை உணவுகளை உண்பார். செவ்வாய், இராகு இருக்கும் இராசியில் குரு 

வரும்போது மூத்த சகோதரர்களுக்கு பீடையோ, மரணமோ உண்டாகும்.

          மூன்றாம் அதிபதி, இலாபாதிபதி நட்பாகவும், நட்புடன் கூடியும் இலாப 

பாவத்தில் இருந்தால், இவருடன் எத்தனை கிரகங்கள் இருந்தனவோ, அத்தனை 

உடன்பிறப்புகள் ஜாதகனுக்கு உண்டு.


          மூன்றில் குரு இருக்க சகோதர விருத்தி உண்டு. ஜாதகன் இரக்கமுள்ளவன். 

விவசாயி, கல்வியில் வல்லவன் ஆவான். உடலைப் பேணிக் காப்பவன். தனது 

உறவுகளை ஆதரிக்கும் குணம் உள்ளவன்.

          மூன்றில் சுக்கிரன் இருக்க சகோதர விருத்தி உண்டு. வாத உடல், கோபம் 

உள்ளவன். கடகம், மீனம், விருச்சிகம் ஆகியவை இலக்னம் ஆகி, அந்த இலக்னத்தை 9 

பாகமாக்கி, 5 ஆவது பாகத்தில் ஆண் குழந்தை பிறந்து, அவனுக்குப் பின்னே பிறந்த 

பெண்ணுக்கு கடகமானால் உடம்பில் வடுக்களும், விருச்சிகமானால் பெண்ணுக்குக் 

கால்கள் குறுகியும், பருத்தும் இருக்கும். மீனமானால் கால்கள் இரண்டும் முடமாய் 

இருக்கும்.

         மூன்றாம் இடத்தில் சனி இருக்க சகோதர பீடை உண்டு. துஷ்ட குணமும், தாசி, 

வேசி சேர்க்கை உள்ளவனாகவும் இருப்பான்.  மூன்றாம் அதிபதி பாகையையும், 

செவ்வாயின் பாகையையும் கூட்ட வரும் பாகைக்குரிய இராசியில் புத்திர காரகன் குரு 

வரும் காலத்தே சகோதரர் உண்டாகும். இந்த இராசியில் இருந்து மேஷம் வரை எண்ண 

உடன் பிறப்புகளின் எண்ணிக்கை தெரியும். அதைப் பாவக் கிரகங்கள் பார்த்தால் அழிந்து 

போனது தெரியும்.

         இராகு, கேது இருக்க ஐஸ்வரியம் பெருகும். இலட்சுமி கடாக்ஷ்சம் உண்டாகும். 

அற்ப சகோதரர்களை உடையவனாய் இருப்பான். தைரிய முள்ளவனாகவும், அகால 

போஜனம் உள்ளவனாகவும் இருப்பான். இரண்டாம் அதிபதியும், இலாபாதிபதியும் 

மூன்றாம் இடத்தில் உச்சம், நட்பு பெற்றிருந்தால் ஜாதகன் போதை பொருள் பழக்கத்துக்கு 

அடிமையாவான். அவமானங்களுக்கும் அஞ்சமாட்டான்.

         மூன்றாம் இடத்தில் இராகு, கேது இருந்தாலும் சனி கூடினாலும் அல்லது 

பார்த்தாலும் ஜாதகருக்கு சகோதரம் இல்லை. புதன் நட்புக் கிரகத்தால் பார்க்கப்பட்டால் 

ஜாதகன் நன்மையுடைய சகோதரன் உடையவன் ஆவான். புதன் நீசமானால் உடன்பிறப்பு 

உற்பத்தியே நாசமாகும். உண்டானாலும், பிறந்தாலும் நாசம் அடையும். புதன் தனது 

சொந்தவீட்டில், கன்னி நவாம்சத்தில் இருந்தால் சகோதரன் செல்வந்தன் ஆவான்.

         மூன்றில் பாபர்கள் கூடியிருந்தால் ஜாதகன் பாவம் செய்தவன். அவர்களுடன் 

புதன் கூடியிருந்தால் புண்ணியம் செய்தவன். 3 இல் குரு, சுக்கிரன், சந்திரன், புதன் 

இருந்தால் எப்போதும் போகப் பிரியமுள்ளவன். நல்ல சம்பத்து உண்டாகும். சுபர் 

பார்க்கின் நற்சுகத்துடன் வாழ்வான்.

         மூன்றில் சூரியன், செவ்வாய், கேது, சனி, இராகு இவர்கள் இருந்தால் ஜாதகன் 

தீர்காயுள் உடையவன்.  மூன்றாம் அதிபதியும் செவ்வாயும் பெண் இராசியில் இருந்தால் 

ஜாதகனுக்குப் சகோதரிகள் அதிகம் உண்டு என அறியவும்.

ஜோதிட ப்ரவீணா . எஸ். விஜயநரசிம்மன். 

No comments:

Post a Comment