Search This Blog

Tuesday 7 October 2014

ஜோதிட வாசலில் வெளியான 12 இராசிகளுக்கான சனிப் பெயர்ச்சி பலன்கள் 2014 -- 2017







 12 இராசிகளுக்கான சனிப்  பெயர்ச்சி பலன்கள்
2014 -- 2017

கேது




16 – 12 – 2014
மார்கழி - 1
செவ்வாய்
பகல் 2.44. மணி
விருச்சிகச் சனி

செவ்
குரு
(அதிசா)
சூரி,புத
சுக்
சனி

சந்
இராகு

         சனிப் பெயர்ச்சி : ஜய வருஷம் மார்கழி மாதம் 1 ஆம் நாள் (16 – 12 – 2014) செவ்வாய்க் கிழமை நாழிகை 20 – 40 பகல் மணி 2 – 44 க்கு விசாக நட்சத்திரம் 3 ஆம் பாதம் துலா இராசியில் இருந்து விசாகம் 4 ஆம் பாதம் விருச்சிக இராசியில் வாக்கியப் பஞ்சாங்கப்படி பிரவேசிக்கிறார்.
( ஜய வருஷம் கார்த்திகை மாதம் 17 ஆம் தேதி (03-12-2014) ஆயில்யம் 4 ஆம் பாதம் கடக இராசியில் இருந்து மகம் 1 ஆம் பாதம் சிம்ம இராசிக்கு குரு அதிசாரம் ஆகிறார். மார்கழி மாதம் 7 ஆம் தேதி 22-12-2014 – மகம் 1 இல் இருந்து ஆயில்யம் 4 கடக இராசியில் வக்கிரமாகி, பங்குனி வரை வக்ரகதியில் உள்ளார்.)

      சனி  30 ஆண்டுகளுக்கு ஒருமுறை 12 இராசிகளையும் நிதானமாகக் கடக்கிறார். இதில் அவர் 3, 6, 11 ஆகிய இராசிகளில் தான் சுப பலன் தருகிறார். மற்ற 9 இராசிகளில் அசுப பலன்களே ஏற்படுகின்றது.

       4 இல் உள்ள சனியை அர்த்தாஷ்டமச் சனி என்றும், 7 இல் சனி  கண்டச் சனி என்றும், 8 இல் உள்ள சனியை அட்டமச் சனி என்றும், இராசி மற்றும் இராசிக்கு இரு புறமும் ( 12 ஆம் இடம், 1 ஆம் மற்றும் 2 ஆம் இடம் ) ஆகியவற்றில் இருக்க ஏழரைச் சனி என்றும் கூறுகிறோம். இந்த இரண்டரை வருடம் மட்டுமே மிக அதிக அசுப பலன் தருகிறார்.

       முதல் முறையாக வரும் சனியை மங்கு சனி என்றும், இரண்டாம் சுற்று பொங்கு சனி என்றும்
, மூன்றாம் சுற்று குங்கு சனி என்றும், 4 ஆம் சுற்று மரணச் சனி என்றும் அழைக்கிறோம்.

       மங்கு சனிஅரசால் கஷ்டம், படிப்பில் தடை, சோதனைகள், ஆரோக்கியக் குறைவு மற்றும் துயரமே மிஞ்சும்.

       பொங்கு சனிதிருமணம் மற்றும் மங்கள காரியங்கள், கடைசிப் பகுதியில், முற்பகுதியின் இழப்பைச் சரிக்கட்டும். பெற்றோருக்கு மாரகம் ஏற்படலாம்,

       குங்கு சனி ( குமுங்கு சனி ) – மன சஞ்சலம், கவலை, துயரம் மிகும். ஆயுர்தாயம் முடியுமென்றால், ஜாதகருக்கே மாரகம் ஏற்படலாம்.

       மரணச் சனிஎதற்கும் பயனில்லை. வயதுக்கு முற்றுப் புள்ளி வைக்க மரணமே வரும்,

       புலிப்பாணிச் சித்தர் சர இராசிக்கு அதிகக் கெடுதியும், ஸ்திர இராசிக்கு அதைவிடக் குறைவாகவும், உபய இராசிக்கு மிகவும் குறைவாகவும் அசுப பலன் தருவதாகக் குறிப்பிடுகிறார்.    இங்கு சனி பகவானின் பொதுப்பலனும், மூர்த்தி நிர்ணயப் படியான பலன்களும் சேர்த்து பலன் உரைக்கப்பட்டுள்ளது. இதன்படி மேஷம், மிதுனம், கன்னி, விருச்சிகம் மற்றும் மகரம் ஆகிய இராசி அன்பர்களுக்குச் சிறப்பான பலன்களும், ரிஷபம், சிம்ம இராசி அன்பர்களுக்கு நற்பலன்களும், கடகம், தனுசு மற்றும் மீன இராசி நண்பர்களுக்கு மத்திம பலனும், கும்பம் மற்றும் துலாம் இராசி அன்பர்களுக்கு சுமாரான பலன்களும் நடக்கலாம். தனிப்பட்ட ஜாதகருக்கு உரிய தசா/ புத்தி நாதர்களின் பலத்தைப் பொருத்து பலன்கள் மாறுபடும்.
      
மேஷம்

(அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்பரணி-1, 2, 3, 4 பாதங்கள்கார்த்திகை-1,2,3,4 பாதங்கள்)

( இராசி  அறியாதவர்கள் பலன் அறிய - சு, சே, சொ, , லெ, லு, லே, லோ, )

    தைரிய காரகனான செவ்வாயை அதிபதியாகக் கொண்ட மேஷராசி அன்பர்களே! 

         சனி மேஷ இராசிக்கு கர்ம மற்றும் லாப பாவாதிபதியாகிஅட்டமத்தானத்தில் அமர்ந்து, ரஜத மூர்த்தியாகி 50 சதவிகித நற்பலன்களையும், அசுப பலன்களையும் செய்கிறார். ரஜத (வெள்ளி) மூர்த்தியாகிப் பிரவேசிப்பதால்  வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் இருக்கும். விவசாயம் மூலமாக அதிக வருமானம். புகழ், அரசால் கௌரவிக்கப் படுதல், திருமணம் போன்ற மங்கள காரியங்கள் நடைபெறுதல் ஆகிய நற்பலன்கள் ஏற்பட்டு, அஷ்டமச் சனியானாலும் தீமைகள் குறையும். சிலருக்கு வெளியிடத்தில் சென்று வசிக்க வேண்டிய நிலை ஏற்படலாம். தந்தை மூலம் ஆதாயம் உண்டு.  புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும். அரசு வேலை கிடைக்கும் வாய்ப்பு வரலாம். சிலருக்கு மனவியுடன் கருத்து வேறுபாடுகளும், முயற்சிகளில் தடங்கல்களும் ஏற்படலாம். கூசாமல் பொய் பேசுவார். எப்போதும் மனதில் கவலைகளும், சோகங்களும் குடி கொண்டிருக்கும்.   சனி   10, 2 மற்றும் 5 ஆம் பாவங்களைப் பார்ப்பதால், எவரிடமும் பேசும் போது எச்சரிக்கையுடன் பேசுதல் வேண்டும். தனவரவு குறையும் காலமாதலால் வீண்செலவுகளைக் குறைப்பது அவசியம். உங்களால் கூறப்படும் ஒரு விஷயம் ஒன்பதாக மாறி பரபப்படும். நண்பர்கள் உதவுவர். ஜீவன சுகம் உண்டு. குழந்தைகளால் தொல்லையும், அறப்பளீசுர சதகத்தில் கூறியுள்ளபடிசொல்புத்தி கேட்காத பிள்ளையோ யாரெனின் அஷ்டமச் சனியாகுவான்எனப் பிள்ளைகள் கூட இவரின் பேச்சைக் கேளார். பங்குச் சந்தை விவகாரங்களில் இழப்பும் ஏற்பட வாய்ப்புண்டு. ஆரோக்கியக் குறைவு காரணமாக மருத்துவச் செலவுகள் கூடும். வெளிநாட்டில் இருந்து நல்ல தகவல்களை எதிர்பார்க்கலாம். திருநள்ளாறு திருத்தலம் மற்றும் திருக்கொள்ளிக்காடு ஆகிய திருத்தலங்களுக்குச் சென்று இறைவனை வேண்டிவர இன்னல்கள் அகலும். மொத்தத்தில் 50 சதவிகித நற்பலன்களை மேஷத்தார் எதிர்பார்க்கலாம்.

ரிஷபம்
( கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )

  ( இராசி  அறியாதவர்கள் பலன் அறிய, , , , , வி, வு, வே, வோ )

   களத்திரகாரகனான சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷபராசி அன்பர்களே!

         இந்த இராசிக்காரர்களுக்குத் தாமிர மூர்த்தியாக வரும் சனி  அளவற்ற செல்வங்களை அள்ளிதருவான். மனைவி, மக்கள் மகிழ்ச்சி அதிகரிக்கும். சொத்துக்கள் சேரும். செய் தொழில், வியாபாரம் மூலமான ஆதாயங்கள் பெருகும். உடல் மூலமான சுகங்கள் கூடும்.  கண்டச் சனி காலமானாலும் தாமிர மூந்த்தியாதலால் மேற்சொன்ன பலன்கள் நடைபெறும். ஆயினும், மங்கள காரியங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்க இயலாது, பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைப்பது அரிது. கிராம அதிகாரம், அரசு பதவிகள் கிடைத்தலும் அரிது. சிலருக்குக் குறிக்கோளற்ற அலைச்சல்களால் உடல் அசதி அதிகரிக்கும். பயணம் செய்யும் போது எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம். வீட்டுக்குள் நடக்கும் விஷயங்கள் நான்கு சுவர்களுக்குள் வைத்திருத்தல் நலம். வெளியில் தெரிந்தால் அசிங்க அவமானங்களைச் சந்திக்க நேரும். வரவுக்குத் தக்க செலவுகளைத் திட்டமிட்டுச் செய்வது நல்லது. தேவையற்ற செலவுகளுக்காக கடன் வாங்க நேரலாம். கண்டச் சனி காலமாக இருப்பதால் கஷ்டங்கள் அதிகரித்தாலும், குருவின் பார்வை சனியின் மீது விழுவதால் அனைத்து அனுகூலமற்ற பலன்களின் தாக்கங்களும் சிறிது மட்டுப்படும் நிலை ஏற்படலாம். எனவே, கவலை வேண்டாம். சிலருக்கு வெளிநாட்டு வாசம் ஏற்படும்.   1, 4, 9 ஆம் பாவத்தைப் பார்க்கும் சனி புதிய வீடு கட்டுவதற்கான முயற்சிகளில் தடைகளைத் தருவார். கடும் பிராயாசைக்குப் பிறகே உங்கள் அபிலாஷைகள் நிறைவேறும். சிலருக்கு இருக்கும் வேலையில் பிரச்சனைகள் ஏற்பட்டு, புதிய வேலையில் சேரவேண்டிய நிலை ஏற்பட்டலாம். வாகனங்களில் அடிக்கடி பழுது ஏற்படலாம். தந்தையின் உடல்நிலையில் அக்கறை தேவை  கல்வியில் எதிர்பாராத தடைகள் ஏற்படலாம். சனி பரிகாரத் தலங்கள் மற்றும் குலதெய்வ வழிபாடுகளால் துன்பங்கள் தூரவிலகும். குச்சானூர் சனி பகவானைத் தரிசனம் செய்ய குடும்பத்தில் குதூகலம் பிறக்கும். மொத்தத்தில் சனியின் பாதிப்பு 50 சதவிகிதம் இருக்கும்.


மிதுனம்

(மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)

    கல்விக் காரகனான புதனை அதிபதியாகக் கொண்ட மிதுனராசி அன்பர்களே!

( இராசி  அறியாதவர்கள் பலன் அறியகா, கி, கு, , , , கே, கோ, )

         16 – 12 – 2014 இல் விருச்சிகத்துக்கு மாறும் சனி பொதுவான விதிப்படி      6 ஆம் இடத்தில் அமர்ந்து சுப பலன் 50 சதவிகிதமும் சிறப்பு விதியின்படி சுவர்ண மூர்த்தியாகி 6 சதவிகிதம் ஆக 56 சதவிகித நற்பலன்கள் தருவார். ஆயுள் மற்றும் பாக்கிய ஸ்தானாதிபதியான அவர் ருண பாவத்தில் அமர்ந்து, இதுநாள்வரை இருந்து வந்த இன்னல்களை நீக்கி இன்பம் தருவார். செல்வம் சேரும். பொன்னும், பொருளும் சேரும். குடும்பத்தில் உள்ளவர்கள் அனுசரணை அதிகரிக்கும். சுக போகங்கள் அதிகரிக்கும். எதிரிகளை வெல்வர். புது வீடு கட்டுதல் பொன்ற எல்லாமே நல்லதாக நடக்கும், அந்தஸ்து, பதவி, கௌரவம், உத்யோகம் அல்லது பதவி உயர்வு எல்லாமே தேடிவரும். உயர் தர உணவு என இந்த இரண்டரை ஆண்டுகள் இவர்களுக்கு இராஜ யோகம்தான். திருமணம், புத்திர பாக்கியம் ஏற்படும். உயர்தர வாகனங்கள் அமையும். அழகும் பொலிவும் கூடும், புத்தி தெளிவும், அறிவுக் கூர்மையும் ஏற்படும். பெயரும் புகழும் ஓங்கும். வேலை இல்லாது இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.. அவர் 3, 8, 12 ஆம் பாவங்களைப் பார்ப்பதால், சகோதரர்கள் உயர்வுக்கான செலவு அதிகமாகும். தாயின் ஆரோக்கியம் சீர்கெடும். எதிர்ப்புகள் மறையும். கஷ்டம் தரும் எட்டைப் பார்க்கக் கஷ்டங்கள் அனைத்தும் பஞ்சாய்ப் பறக்கும். தொழில் மேன்மை அடைவது உறுதி. புதிய வாய்ப்புக்கள் கதவைத் தட்டும். சனிக்கிழமை விரதம் பலன்தரும். வெளிநாட்டுப் பயண வாய்ப்புகள் வெற்றிதரும். புதிய பதவிகள், பொறுப்புகள் வந்து சேரும். விநாயகருக்கு மோதகப் பிரசாதம் படைத்து, ஆஞ்சனேயருக்கு வடைமாலையும் சாத்தி பிரார்த்தனை செய்ய மேலும் நன்மைகள் பெருகும். மொத்தத்தில் மிதுன இராசி அன்பர்களுக்கு 75 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.

கடகம்

(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)

   தாய்க்குக் காரகனான சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக இராசி அன்பர்களே!

( இராசி  அறியாதவர்கள் பலனறியஹி, ஹூ, ஹே, ஹோ, , டி, டு, டே, டோ )

         களத்திர மற்றும் ஆயுள் ஸ்தான அதிபாதியான  சனி   உலோக மூர்த்தியாகி  5 ஆம் இடமான விருச்சிகத்தில்  பிரவேசிப்பதால் மாறுபட்ட  பலன்களே ஏற்படும். குழந்தைகளுக்களின் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை தேவை. அவர்களால் தொல்லைகள் அதிகமாகும். சொன்ன பேச்சு கேட்கமாட்டார்கள். முழுமுயற்சி எடுத்தாலே முக்கியமான திட்டங்களால் கிடைக்க வேண்டிய ஆதாயங்கள் முழுமையாகக் கிடைக்கும். விபத்து நேரா வண்ணம் வாகனங்களை மிகவும் எச்சரிக்கையுடன் இயக்குவது நல்லது. அதனால் ஆஸ்பத்திரிச் செலவுகளையும் குறைக்கலாம்அக்கம் பக்கத்தாரை, நண்பர்களை அனுசரித்துச் செல்வதால் தேவையற்ற மனஸ்தாபங்கள் மற்றும் சண்டைகளைத் தவிர்க்கலாம். சிலருக்குக் குழந்தைகளைப் பிரிய நேரலாம். சனி 2, 7 மற்றும் 11 ஆம் இடங்களைப் பார்க்கிறார். வாக்கால் வருமானமும். குடும்பத்தில் குதுகலமும் ஏற்படும். மற்றவர்களின் குறிப்பாகப் பெரிய மனிதர்களின், முக்கியஸ்தர்களின் உதவியால் உயர்வு ஏற்பட வாய்ப்பு ஏற்படும்வீட்டில் திருமணம் போன்ற நற்காரியங்கள் தாமதமாக நடந்தாலும், ஓரளவு சிறப்பாக நடக்கும். பணிபுரிபவர்களுக்கு அதிகப் படியான வருமானங்கள் கிடைக்கும். குரு பார்க்கக் கோடி நன்மையென்பதால்வாழ்க்கை மகிழ்ச்சியாகக் கழியும். புத்தி சாதுர்யமும், அறிவும் விருத்தியாகும். அரசு மூலம் வெகுமதிகள் கிடைக்கும்.   புத்திர பாக்கியம் தருவார் சிலருக்குப் பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கலாம். வேத, மந்திர உபதேசம் பெறும் உயர்ந்த நிலை ஏற்படும்உற்ற நண்பர்கள் உறுதுணையாய் இருப்பர். தந்தை, மகனிடையே இருந்து வந்த மனக் கசப்புகள் தீரும். தெய்வ தரிசனம், தெய்வீகப் பயணங்கள் தேடிவரும். திருப்பரங்குன்றம் ஆலயத்தில் தனித்து நிற்கும் சனிபகவானை மனதார வேண்டி வணங்க மலைபோல் வந்த துன்பங்கள் அனைத்தும் பனிபோல் விலகும். மொத்தத்தில் கடக இராசி அன்பர்களுக்கு 50 சதவிகித பலன்கள் நல்லதாக அமையும்.


சிம்மம்

( மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)

    தந்தை காரகனான சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்மராசி அன்பர்களே!

( இராசி  அறியாதவர்கள் பலன் அறிய, மி, மு, மெ, மோ, டி, டு, டே, டோ )

         சிம்மத்திற்கு 4 ஆம் இடத்தில் தாமிர மூர்த்தியாகப் பிரவேசிக்கும் சனி அளவற்ற செல்வத்தை அள்ளித் தருவார். மனைவி மற்றும் மக்கள் மூலம்  மகிழ்ச்சி அடைவீர்கள். புதிய சொத்துக்கள் சேரும். வியாபாரிகள், தொழில் முனைவோர் ஆகியாருக்கு ஏற்றமான முன்னேற்றமான காலம். அதிகமான இலாபங்களையும் தருவார்.  ருண மற்றும் களத்திர  ஸ்தானாதிபதி சனி சுகபாவத்தில் அமர்வு. அர்தாஷ்டமச் சனியாக இருந்தாலும் தாமிர மூர்த்தியாக வருவதால் தீமைகள் குறையும். இருப்பினும் சுற்றியுள்ள சுற்றமும், நட்பும் பகைமை பாராட்டும் நிலை ஏற்படும். தேவையற்ற செலவுகள் ஏற்படும்சிலருக்குப் பெண்ணால் அவமானம் நேரலாம். வெளிநாட்டுப் பயண வாய்ப்புக்கள் ஏற்படலாம். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படாது ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் சென்றால் வேதனைகள் குறையும். வீட்டிலுள்ள அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சாதனங்களில் அடிக்கடி பழுதுகள் ஏற்பட்டுச் செலவும், தொல்லையும் கூடும். மனதில் எப்போதும்  தீய எண்ணங்களே தோன்றும்எந்த காரியத்தை எடுத்தாலும் தயக்கமும், பயமும் ஏற்படும். 1, 6 மற்றும் 10 ஆம் இடங்களின் மீது சனியின் பார்வை விழுவதால் 6 ஆம் பாவத்தின் மீதான பார்வை பணி உயர்வு தரலாம், இதுநாள் வரை இருந்துவந்த கடன்கள் சிறிது சிறிதாக அடையலாம். பிள்ளைகள் மூலமாகப் பணவரவுகள் அதிகரிக்கும். மனைவி மற்றும் கூட்டாளிகள் மூலமாக வீண்செலவுகள் அதிகரிக்கும்.   தேவையென்று வரும்போது கையிலிருக்கும் பணம் கூட உதவாமல் போகும். தான தர்மமெனக் கைப் பணம் கரையும். எதிலும் மிகவும் எச்சரிக்கை தேவை. சனி மீது குருவின் பார்வை விழும் காலங்களில் இத்தகைய இன்னல்கள் வெகுவாகக்குறையும் கவலை வேண்டாம்ஜென்ம நட்சத்திர நாளில் திருநள்ளாறு சென்று தீர்த்தமாடி, சனீஸ்வர பகாவானை தரிசித்து, அர்ச்சனையும் செய்துவர பாதிப்புகள் குறையும். மொத்தத்தில் 40 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.

கன்னி

( உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)

    புத்தி காரகனான புதனை அதிபதியாகக் கொண்ட கன்னிராசி அன்பர்களே!

( இராசி  அறியாதவர்கள் பலன் அறியடோ, , பி, பூ, , , , பே, போ )

         தங்கள் இராசிக்கு சனியின் பொதுப்பலனுடன் ரஜதமூர்த்தி பலனும் இணைந்து 100 சதவிகித பலன்களைத் தருகிறார். புத்திர மற்றும் ருண ஸ்தானாதிபதியான சனி சகோதர ஸ்தானத்தில் அமர்வு. இதன் காரணமாக அரசியல் அதிகாரம், அரசு மரியாதை ஆகியவை கிடைக்கும். பாக்கியம் பெருகும். பெரும்புள்ளிகள் சிலர் அறிமுகமாகி அதனாலும் முன்னேற்றமடைவர். சொகுசு கார் போன்ற வாகனங்கள் கிடைக்கும். பல வழிகளிலும் பணம் வந்து சேரும். வங்கி சேமிப்புக்கள் உயரும்.  எடுத்த காரியம் யாவினும் வெற்றி கிட்டும். பதவி உயர்வு, பணி நிரந்தரம் ஆகியவை ஏற்படும். காரிய வெற்றியும், சகோதரர்களிடம் மதிப்பும் உண்டாகும். தைரியமும், தன்னம்பிக்கையும் உயரும். குழந்தைகள் மூலமாக நன்மைகள் ஏற்படும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்குக் குழந்தை பாக்கியம் ஏற்படும். திருமணம் நடக்கும். வரவுக்கு ஏற்ற செலவுகள் ஏற்படும். மனைவியால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும்அஷ்டலட்சுமி கடாக்ஷமும் ஏற்படும். இந்த இரண்டரை வருடமும் இராஜயோகம்தான். உங்கள் காட்டில் மழைதான். கோழையாக இருப்பவரும் சீரும் சிங்கமாக மாறிவிடுவர். சனி  5, 9 மற்றும் 12 ஆம் இடங்களைப் பார்ப்பதால்,  பூர்வ புண்ணியத்தால் குலதெய்வ வழிபாடுகள் சிறக்கும். தாய் மூலம் வருமானம் உண்டு. பணியில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகள் வீண்செலவு வைப்பர்.  பெற்ற பிள்ளைகளால் பெருமிதம் கொள்வர். ‘ இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல்என்ற வள்ளுவன் வாக்கின் படி பிள்ளைகளால் அனைத்துப் புகழும் சேரும். ‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை ‘ - என மக்கள் தந்தையின் சொல் கேட்டு நடப்பர். தந்தை வழியில் அனுகூலம் உண்டு. புனித பயணங்கள் சென்று தெய்வ அருள் பெற்றுத் திரும்புவர். சுப விரயங்கள் ஏற்படும். ஏழரைச் சனி விலகுவதால் இனி எல்லாமே சிறப்பாக அமையும். கொடூர வெய்யிலில் இருந்து குளிர்ச்சியான நிழலுக்கு வந்தது போன்ற இனிய உணர்வு ஏற்படும். இனி எல்லாமே சிறப்பாக நடக்க வினாயகரைத் தொழுதால் விக்னங்கள் விலகும். மொத்தத்தில் கன்னி இராசிக்காரர்களுக்கு 80 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.

துலாம்

(சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)

( இராசி  அறியாதவர்கள் பலன் அறிய, ரி, ரு, ரே, ரோ, , தி, து, தே )

அசுர குருவான சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாராசி அன்பர்களே!

         சனியின் தனபாவ பிரவேசத்தால் மரியாதைக் குறைவு, பொருள் இழப்பு, இடமாற்றம், உயர் அதிகாரிகளின் அதிருப்தி என மாறுபட்ட பலன்களாகவே அமைந்தாலும், துலாராசிக்குரிய பொதுப்பலன் பூஜ்யமாகி, அவர் சுவர்ண மூர்த்தியாகி வருவதால் சுமார் 12 சதவிகித பலன்களை மட்டுமே அளிக்கிறார். தற்போது ஜன்மச் சனி விலகியுள்ளதால் இதுவரை இருந்து வந்த இன்னல்கள் ஓரளவு குறையும்ஏழரைச் சனியின் கடைசி இரண்டரை வருட காலமானதால், முக்கால் கிணறு தாண்டிவிட்ட உங்களுக்குச் சிறிது தெம்பாய் இருக்கும். எனவே தாங்கள் சிறிது மூச்சு விட்டுக் கொள்ளலாம். சுக மற்றும் புத்திர பாவாதிபதி சனி குடும்ப பாவத்தில் அமர்ந்தால், பெரியோர்களின் கோபத்துக்கு ஆளாக நேரும். மனைவி, மக்களுக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படும். முறைமாறின வழிகளில் பணம் சம்பாதிக்க வேண்டியது வரும். பிறர் தயவை எதிர்பார்க்க வேண்டிய சூழ்நிலைகள் உருவாகும். தேவையற்ற இடமாற்றங்கள் ஏற்படும். சனி பார்வை செய்யும் இடங்களான  4, 8 மற்றும் 11  ஆம் இடங்கள் தரும் பலனால், தன்னம்பிக்கை, மற்றும் முயற்சியின் வேகம் அதிகரித்து வெற்றிக்கான விளிம்பு தெரியத் துவங்கும். சிலருக்குப் பயணத்தில் விபத்து, கல்வியில் தோல்வி ஆகியவை ஏற்படும். சுப காரியங்கள் இனிதே நடக்கும். நிதி நிலைகள் மேன்மை அடையும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். செய்தொழில் இலாபம் மற்றும் உறவுகளால் நன்மை உண்டு. வம்பு, வழக்குகளில் வெற்றி கிட்டாது கலைஞர்களுக்குப் புகழும், பெருமையும் வருமானமும் அதிகரிக்கும். வெளியூர் பயணங்கள் ஏற்படும். குருவின் பார்வை சனி மீது விழும் காலங்களில் கஷ்டங்கள் குறைந்து நிம்மதி பிறக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு உத்யோக உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். கடினமாக உழைத்தால் மட்டுமே மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறக்க முடியும். சனி பகவானுக்கு கறுப்பு நிற வஸ்திரம் சாத்தி மனதார வேண்டிக் கொண்டால் பாதிப்புக்கள் ஓரளவு குறையும். மொத்தத்தில் இந்த இராசிக்காரர்களுக்கு 45 சதவிகித சாதக பலன்கள் ஏற்படும்.

விருச்சிகம்

( விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )

( இராசி  அறியாதவர்கள் பலன் அறியதோ, , நி, நு, நே, நோ, , , யு )

        தைரிய காரகனான செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக இராசி அன்பர்களே!

         அலைச்சல் மிக்க பயணங்களையும், பாதக நிலைகளையும் அளித்துக் கொண்டிருந்த சனி, தைரிய மற்றும் சுக பாவாதிபதி ஆகி, ஜன்மத்தில் சஞ்சரிக்கும் ஜன்மச் சனிக் காலமானாலும்  ரஜத (வெள்ளி) மூர்த்தியாகிப் பிரவேசிப்பதால்  வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் இருக்கும். விவசாயம் மூலமாக அதிக வருமானம். புகழ், அரசால் கௌரவிக்கப் படுதல், திருமணம் போன்ற மங்கள காரியங்கள் நடைபெறுதல் ஆகிய நற்பலன்கள் ஏற்பட்டும். ரஜத  மூர்த்தியானதால் தீய பலன்களைக் குறைத்து நற்பலன்களையும் தருவார். பொதுவான பலனைப் பார்க்கும் போது, பிறருடன் விரோதம், தன விரயம்என அனைத்து இன்னல்களையும் தரலாம். இதுநாள்வரை இருந்து வந்த இன்னல்கள் நீங்க ரஜத மூர்த்தியாகி, மூர்த்தி நிர்ணயபலன் 50 சதவிகித பலன் தந்து விருச்சிகத்தாருக்குச் சிறிது ஏற்றம் தருகிறார். இக்காலத்தில், சிலர் பிறர் தயவை நாடி நிற்க வேண்டியது வரும். ஏதாவது பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டு விடுபடமுடியாமல் தவிக்க நேரும்.   தெய்வீக காரியங்களில் ஈடுபட்டால் துன்பங்கள் மட்டுப்படும். .   சனியின் 3, 7 மற்றும் 10 ஆகிய பாவங்களின் மீதான பார்வை தரும் பலன், தூரதேசச் செய்திகள் மகிழ்ச்சி தரும். முயற்சிகள் அனைத்தும் வெற்றி தரும். எத்தகைய பிரச்சனைகள் இருந்தாலும் சாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும் செயல்பட்டுச் சமாளித்து, வாழ்க்கையில் எதிர்பார்த்த நல்ல முன்னேற்றங்களை சாத்தியமாக்கிக் கொள்வீர்கள். கூட்டாளிகளிடம் எச்சரிக்கையுடன் இருந்தால், அவர்களால் ஏற்படப்போகும் இழப்புக்களைத் தவிர்த்து இலாபம் காணலாம். தேவையற்ற பிரச்சனைகளில் தலையிட்டு மன அமைதியைக் கெடுத்துக் கொள்ளாதிருப்பது நல்லது. தொழில்களில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் ஓரளவு ஆதாயங்கள் இருக்கும். அரசுப் பணியாளர்கள் எச்சரிக்கையுடன் பணியாற்ற சிக்கல்களைத் தவிர்க்கலாம். முயற்சி திருவினையாக்கும் என்றபடி, எந்த ஒரு காரியத்திலும் தீவிர முயற்சிக்குப் பின்னரே சாதகமான, அனுகூலமான பலன்களை அடைய முடியும். இந்த அசுபபலன்கள், குருவின் பார்வை, சனியின் மீது விழும் காலங்களில், சிறிது அனுகூலமாக மாறும். அச்சம் வேண்டாம். மொத்தத்தில் இந்த இராசிக்காரர்களுக்கு 45 சதவிகித சாதக பலன்கள் ஏற்படும். ஶ்ரீ ஆஞ்சனேயருக்கு வடைமாலை, துளசி மாலைகள் சாத்தி மனமுருக வேண்ட மனக்கவலைகள், ரவி கண்ட பனிபோல் விலகும்.

தனுசு

 ( மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்ராடம் –1,2 பாதங்கள்)

( இராசி  அறியாதவர்கள் பலன் அறியயே, யோ, , பீ, பூ, , , டா, பே )

     தேவகுருவான குருவை அதிபதியாகக் கொண்ட தனுர் இராசி அன்பர்களே!

         தனுசு இராசி அன்பர்களுக்கு சனியின் பொதுப்பலன் பூஜ்யமாக இருந்தாலும், உலோக மூர்த்தியாகி 12 சதவிகித பலன்களைத் தரவல்லவர். தன மற்றும் சகோதர பாவாதிபதியாகி, விரய பாவத்தில் அமர்ந்துள்ளார். சாதகமான, மற்றும் சாதகமற்ற பலன்கள் மாறிமாறி வரும். இதுவரை 11 ஆம் இடத்தில் உச்சம் பெற்று உயர்வைத்தந்த சனி, 12 ஆம் இடத்திற்கு ஏழரையின் தொடக்கமாக இன்னல் தர வருகிறார். இன்பமும், துன்பமும் கலந்து வருவதுதானே வாழ்க்கை. எனவே, துன்பம் வரும்போது சிரிக்கக் கற்றுக் கொள்வதுதானே நியாயம். வரவுக்குத் தக்க செலவைச் செய்வது நல்லது. ஏனெனில், சக்திக்கு மீறிய கட்டுக்கடங்காத செலவுகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் அலட்சியம் கூடாது. பயனற்ற அலைச்சல்கள் ஏற்படும். எந்தத் தொழிலையும் செய்ய மனமின்மை மற்றும் இயலாத நிலை ஏற்படும். எனவே, பணிபுரியும் இடத்தில் கடமை தவறாது நடத்தல் அவசியம். நல்ல நண்பர்களின் தொடர்பு நலம் பயக்கும். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைத்தல் அரிது. அரசு மூலம் வெகுமதிகள் மற்றும் பரிசுகள் கிடைக்கும். பின்னர் கீழ்நிலையில் உள்ளவர்கள் உடனான சினேகத்தால் அவமரியாதை ஏற்படும்.  2, 6 மற்றும் 9 ஆம் பாவாத்தின் மீதான சனியின் பார்வை விழுவதால், எந்தக் காரியத்தையும் அவசரப்பட்டு எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யாமல் நிதானமாகச் செய்வதே நல்லது. கலைத்துறையில் உள்ளவர்களுக்குக் கடின உழைப்புக்குப் பின்னே அதிக வருமானம் கிட்டும். சிலருக்கு நண்பர்களிடையே மதிப்பு மரியாதையும் கூடும். கணவன் மனைவி உறவு சுமுக உறவாக இருக்க அனுசரித்துச் செல்லுதல் அவசியம். சிலருக்கு வாகன யோகம் உண்டு. சிலருக்கு இருக்கும் வேலையை விட்டுவிட்டு வேறு வேலை தேடும் நிலை ஏற்படலாம். வீண் விரையச் சுபச் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கலாம். வாக்குவன்மை உயரும். தாயாரின் ஆரோக்கியம் சிறப்படையும். மொத்தத்தில் 45 சதவிகித நற்பலன்கள் உண்டு. திருவாதவூர் சிவன் கோவிலில் அமர்ந்திருக்கும் சனீஸ்வர பகவானை வணங்கிவர வந்த துன்பங்கள் தீரும்.

மகரம்

( உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )

( இராசி  அறியாதவர்கள் பலன் அறியபோ, , ஜி, ஜூ, ஜே, ஜோ, கா, , கீ )

கர்மகாரகனான சனியை அதிபதியாகக் கொண்ட மகரராசி அன்பர்களே!
      சனி பகவான் இராசி மற்றும் தன  பாவாதிபதி ஆகி, இலாப பாவமான விருச்சிகத்தில்  ரஜத மூர்த்தியாகப் பிரவேசிக்கும் காலத்தில் பொதுவான பலனும், மூர்த்தி நிர்ணய சிறப்பு பலமும் இணைந்து 75 சதவிகிதம் நற்பலன்களை அளிக்கிறார். ரஜத (வெள்ளி) மூர்த்தியாகிப் பிரவேசிப்பதால்  வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் இருக்கும். விவசாயம் மூலமாக அதிக வருமானம். புகழ், அரசால் கௌரவிக்கப் படுதல், திருமணம் போன்ற மங்கள காரியங்கள் நடைபெறுதல் ஆகிய நற்பலன்கள் ஏற்பட்டும்.  மனைவி மூலமாக பூரண சுகம் கிடைக்கும். அரசு மூலம் வெகுமானம் கிடைக்கும். கல்வியில் தேர்ச்சி உண்டாகும். கணவனுக்கு அடங்கிய மனைவியாக இருப்பாள். அரசு மூலம் பரிசுகள் கிடைக்கும். பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். அதிகமாக செல்வம் சேரும். வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்படும். அரசு உயர் அதிகாரம், அமைச்சர் பதவி ஆகியவை தேடி வரலாம். ‘அவருக்கு என்னையா பெரிய மனுஷன்’ - என பிறர் சொல்லும் வண்ணம் வாழ்க்கை நிலை உயரும். அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகி, மனதிற்கு இதமான சுகபோக சுக வாழ்க்கை அமையும். இந்த இரண்டரை வருடமும் இராஜயோக வாழ்க்கைதான்.  1, 5, 8 ஆம் இடத்தின் மீதான பார்வையால் குழப்பங்கள் நீங்கும். நற்பெயர் ஏற்படும். இலாபம் பெருகும். பூர்வீகச் சொத்துக்கள் மூலமாக ஆதாயங்கள், அரசு ஊழியர்களுக்குப் பதவி உயர்வுகள் கிடைக்கும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி கிட்டும். வாழ்க்கையில் எதிர்பாராத முன்னேற்றங்கள், பொருளாதார உயர்வு, பிள்ளைகளால் மேன்மை ஆகியவையும் ஏற்படும். பயணங்கள் நன்மை தரும். மொத்தத்தில் மகர இராசி வாசகர்கள் காட்டில் மழைதான். நற்பலன்கள் 85 சதவிகிதம் உண்டு. வாழ்க வளமுடன். வினாயகப் பெருமானை வணங்கிவர விக்னங்கள் மறையும்.

கும்பம்

( அவிட்டம் – 3,4 பாதங்கள்சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)

( இராசி  அறியாதவர்கள் பலன் அறியகு, கூ, கோ, , ஸீ, ஸூ, ஸே,ஸோ, தா )

கர்ம பாவ காரகனான சனியை அதிபதியாகக் கொண்ட கும்பராசி அன்பர்களே!

          சனி பகவான் கும்பத்தாருக்கு விரய மற்றும் இராசி அதிபதி ஆகி கர்ம பாவ சஞ்சார காலத்தில்  பொதுப்பலன் குறைந்து, சுவர்ண மூர்த்தி பலத்துடன்  நற்பலன்களைக் குறைந்துத் தருகிறார். இதன் காரணமாக  சிலருக்கு சிறு உடல் உபாதைகள் ஏற்படலாம். ஏமாற்றங்கள், மனமகிழ்ச்சியற்ற மணவாழ்க்கை, கணவன் மனைவிக்கு இடையேயான ஊடல்கள் ஆகியவை தவிர்க்க முடியாத நிகழ்வுகளாகும்.   உழைப்பு அதிகமாகி, எதிர்பார்த்த ஊதியம் கிடைப்பது அரிதாகும். வீண் அலைச்சல்கள் அதிகரிக்கும். கல்வியில் தடைகள் வரலாம். எனவே, மாணவர்கள் மிக்க அக்கறையுடன் படித்தல் அவசியமாகும். பணியில் இருக்கும் பெண்கள் அலட்சியப் போக்கைக் கைவிட்டு அர்பணிப்பு உணர்வுடன் பணிபுரிந்தால் ஏற்றங்களை எதிர் பார்க்கலாம். சொந்த பந்தங்களே பகைமை பாராட்டுவதால் மன அமைதி குறையும். குருவின் பார்வை சனியின் மீது விழும் காலங்களில்  தீமைகள் ஓரளவு குறையும்சனி பகவானின் பார்வை 4, 7, 12,  ஆகிய பாவங்களின் மீதான  பார்வை சுக சௌகரியங்களைக் கூட்டும். குழந்தைகளால் தொல்லை உண்டு. தொழில் தடைகளை அகற்றி முன்னேற்றம் தரும், தேங்கிய பொருட்கள் விற்பனையாகி வருமானம் பெருகும். காரிய வெற்றி, அரசால் இலாபம் ஏற்படும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். வீடு, நிலம், வாகனம் ஆகியவை அபிவிருத்தி ஏற்படலாம். வெளிநாட்டுப் பயணமும், காசியாத்திரை போன்ற புனித பயணங்களும் மேற்கொள்ளுதல் நலம்.  வாக்கால் வருமானம் உயரும்.   ஆலயத்தில் சனி பகவானை வணங்கி சனி காயத்ரி சொல்லிவர நன்மை பயக்கும். மொத்தத்தில் கும்ப இராசி அன்பர்களுக்கு 45 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.

மீனம்

( பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)

( இராசி  அறியாதவர்கள் பலன் அறியதீ, து, , , ஶ்ரீ, தே,தோ, ச்ச, சீ )

    தேவகுருவான குருவை அதிபதியாகக் கொண்ட மீனராசி அன்பர்களே!

          சனிபகவான்  இலாப மற்றும் விரய பாவாதிபதி ஆகி பாக்கிய பாவத்தில் அமரவுள்ளார். சிறப்பு பலன்படி உலோக மூர்த்தியாகி சுமாரன பலன்களையே தரவுள்ளார். இக் காலங்களில் ஓய்வற்ற நிலைகுடும்ப உறவுகளுக்கு ஆரோக்கியக் குறைவு, ஆகியவை ஏற்படலாம். இது நாள் வரைமிருந்து வந்த அஷ்டமச் சனி தந்த இன்னல்களில் இருந்து சிறிது மூச்சு விட்டுக் கொள்ளலாம். தமிழ் நூல்களின் கருத்துப்படி இக் காலம் யோககாலம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. உலோக மூர்த்தி ஆவதால் நற்பலன்கள் குறையலாம். பொதுப் பலன்படி எடுத்த முயற்சிகள் யாவும் வெற்றி பெறும்.  சிலருக்குக் கட்டளை இடும்படியான பெரிய பதவிகள் தேடிவரலாம்வாகன யோகம் ஏற்படலாம்வடமொழி நூல்களின்படி வீண் செலவுகள் அதிகரிக்கும்தந்தையின் உடல் நிலையில் அக்கறை தேவைபணவரவு தாமதப்படலாம்இரண்டு நூல்களின் படியும் மத்திம பலன்களாக எடுத்துக் கொள்ளலாம்.   புனித காரியங்களில் ஈடுபாடு குறையும். தெய்வ பக்தியும் குறையலாம். சிலருக்கு அரசு உத்தியோகம் கிடைக்கலாம். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். சனியின் பார்வை  3, 6, 11,  ஆகிய பாவங்களின்  மீது விழுவதால் கடின உழைப்புக்குக் கட்டாயம் பலன் உண்டு. உழைப்பால் ஓய்வு குறையும்புதிய செய்திகள் வந்து சேரும். தகவல் தொடர்புத் துறையில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. நண்பர்கள் உதவி, உத்தியோக உயர்வு, விரும்பிய இடத்திற்கு இடமாற்றம், மதிப்பு மரியாதை கூடுதல், தீர்த்த யாத்திரைகள், தொழில் முன்னேற்றம், எதிர்பார்த்ததைவிட அதிக இலாபம் ஆகியவை ஏற்படும்புனித யாத்திரை இன்பத்தைப் பெருக்கும். மொத்தத்தில்  மீன இராசி அன்பர்களுக்கு 50 சதவிகித நற்பலன்கள் ஏற்படும். சனிக் கிழமைகளில் விரதம் இருந்து, எள் விளக்கு ஏற்றி வேண்டிவர இன்னல்கள் குறையும்.


                 --- ஜோதிட ப்ரவீணா. எட்டயபுரம். எஸ். விஜயநரசிம்மன்.
                                           எம். எஸ்ஸி. (அப்ளைடு அஸ்ட்ராலஜி).






No comments:

Post a Comment