Search This Blog

Wednesday 1 October 2014

2014 - அக்டோபர் மாத இராசிபலன்கள் (ஜோதிட வாசல் ஜோதிட இதழில் வெளியானது) துலாம்

2014 - அக்டோபர் மாத இராசிபலன்கள்

(ஜோதிட வாசல் ஜோதிட இதழில் வெளியானது)

துலாம்
( சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)

( இராசி  அறியாதவர்கள் பலன் அறிய, ரி, ரு, ரே, ரோ, , தி, து, தே )

    தங்கள் இராசிநாதன் சுக்கிரனால் செல்வம் சேரும். பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். எதையும் சாதிக்கும் திறமையும், சாமர்த்தியமும், நினைத்ததை நினைத்தபடியே முடிக்கும் திறனைத் தரும். மந்திரி பதவி போன்ற உயர்பதவிகள் கிடைக்கும். வாகன யோகம் ஏற்படும்.  பலவகை முன்னேற்றங்கள் ஏற்படும். சிலருக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம். கௌரவ பங்கமும் மன உளைச்சலும் உண்டாகும். இடமாற்றங்கள் ஏற்படலாம். சிலருக்குக் கையில் பணமும், மனதில் மகிழ்ச்சியும் நிலவும். நல்ல நண்பர்கள் அமைவர். மதிப்பும் மரியாதையும் உயரும். சிலருக்கு மனைவி, மக்களின் உடல் நிலையில் சிறு உபாதைகள் ஏற்படலாம்சிலருக்கு வழக்கு விவகாரங்கள் கவலை அளிக்கலாம். மொத்தத்தில் துலாராசி அன்பர்களுக்கு 60 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.

    குடும்பம் மற்றும் ஆரோக்கியம் : நல்லுறவுகளின் அனுசரணையாலும் அன்பாலும், குடும்பத்தில் நிலவிய குழப்ப நிலைகள் சீராகும். செல்வாக்கு மிக்க நண்பர்களின் உதவியால் பொருளாதார நிலைகள் வலுப்பெறும். வீட்டில் வீண் விவாதங்களையும், தர்க்கங்களையும் தவிர்ப்பது நல்லது. சிலருக்குத் திடீர் விபத்துக்களால் அபாயம் ஏற்படும். சிகிச்சைக்குப் பின்  உடல் நலம் சீராகும்.

    தொழில் மற்றும் வியாபாரம் : பணவரத்து அதிகரித்து, தொழில் மற்றும் வியாபாரத்தில் புதுத் திருப்பங்கள் ஏற்படலாம். பணியிலுள்ளவர்கள் மிகுந்த அக்கறையுடன் பணியில் ஈடுபட்டாலே, எதிர்பார்க்கும் பணி உயர்வுகளைப் பெற முடியும். சிறுதொழில் புரிவோருக்குத் தேவையான கடனுதவிகள் கிடைக்கும். உற்பத்தி பெருகி இலாபமும் அதிகரிக்கும். தொழில் முனைவோர் தேவையற்ற ரிஸ்க் எடுக்காதிருப்பது நல்லது.

    பெண்கள் : பணிபுரியும் பெண்கள் வீட்டிலும், பணியிலும் குழப்பமின்றி ஈடுபட்டு வெற்றிகளைக் குவிப்பர். தங்கள் மேலதிகாரிகளின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நன்மை பயக்கும்வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்பட்டு அதனால் ஆதாயம் பெருகும். சிலர் என்னதான் பணிவாக நடந்தாலும் மாமியார் மெச்சிய மருமகளாக ஆக முடியாத நிலைதான் இருக்கும். வீட்டில் விருந்தினர் வருகையால் வீட்டுப் பெண்களுக்கு வேலைப்பளு கூடும்.

    மாணவர்கள் ;-  மாணவர்கள் முகநூல் மற்றும் வலைத் தளங்களில் பொழுதைக் கழிக்காமல் படிப்பில் கவனம் செலுத்தினால் மட்டுமே அதிக மதிப்பெண்கள் பெற இயலும். எனவே கவனமாகப் படிக்கவும். காலம் பொன் போன்றது என்பதை உணர்ந்தாலன்றி வாழ்க்கையில் எந்தவித முன்னேற்றமும் அடையமுடியாது. அரசின் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் விரைவில் பணி நியமன ஆணைகளை எதிர்பார்க்கலாம்.

    ஜனன ஜாதகப்படி இராசிக்கு அட்டமத்தானத்தில் கோசாரச் சந்திரன் சஞ்சரிக்கும் காலமே சந்திராஷ்டம காலமாகும்இக் காலத்தில் சிக்கல்களும், சிரமங்களும் ஏற்படலாம். தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 11 – 10 - 2014 பகல் 2 - 23 மணிமுதல் 13 – 10 - 2014 இரவு 9 – 42  மணி வரை ஆகும். இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.

    அதிர்ஷ்ட எண்கள்;- 1, 2, 4,  மற்றும் 7 ஆகும். சாதகமான எண் 8 ஆகும். அனுகூலமற்ற எண்கள் 5, 6, 3 மற்றும் 9 ஆகும்.

    அதிர்ஷ்ட நிறம்;- ஆரஞ்ச், வெள்ளை மற்றும் சிகப்பு ஆகும். தவிர்க்க வேண்டிய நிறங்கள் பச்சை மற்றும் மஞ்சள் ஆகும்.

    அதிர்ஷ்டக் கற்கள்;-   வைரத்தைதங்கத்தில் அல்லது பிளாட்டினத்தில் பதித்த மோதிரத்தைத் வெள்ளிக் கிழமையன்று, பூஜைக்குப் பிறகு வலது கை மூன்றாவது விரலில் அணிவது உத்தமம்.

    ஆகாதஇராசிகன்னி, மாதம்தை, கிழமைவியாழன், நட்சத்திரம் -- சதயம், திதிகள்சதுர்த்தி, நவமி மற்றும் சதுர்த்தசி அல்லது அமாவாசை ஆகும். யோகம் --  சுக்கிலம், கரணம் -- தைதுலம்  ஆகும்.

    பரிகாரம்;- தொடர்ந்து ஶ்ரீ இராம்பிரானை வணங்கி,  நெய்த் தீபம் ஏற்றிவர, துன்பங்கள் தூர விலகும். சூரிய நமஸ்காரம் செய்தல், வெள்ளை வண்ண ஆடையணியவும்,  வெள்ளை மலர்களால் அர்ச்சித்தலும், வெள்ளிதானம் அல்லது மொச்சையைதானம் செய்வதும் தோஷநிவர்த்தி தரும்.

No comments:

Post a Comment