Search This Blog

Wednesday 1 October 2014

2014 - அக்டோபர் மாத இராசிபலன்கள் (ஜோதிட வாசல் இதழில் வெளியானது)--கும்பம்

2014 - அக்டோபர் மாத இராசிபலன்கள்

(ஜோதிட வாசல் ஜோதிட இதழில் வெளியானது)


கும்பம்

( அவிட்டம் – 3,4 பாதங்கள்சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)

( இராசி  அறியாதவர்கள் பலன் அறியகு, கூ, கோ, , ஸீ, ஸூ, ஸே,ஸோ, தா )

      தங்கள் இராசிநாதன் பாக்கிய பாவத்தில் அமர்ந்ததால் சிலருக்கு பகைவரால் தொல்லை, வருமானக் குறைவு, பயணங்கள் ஆகியவை ஏற்படும். புதனின் அனுகூலமான நிலை தனலாபத்தையும், எடுத்த காரியங்களிலெல்லாம் வெற்றியையும், சந்தோஷத்தையும் தரும்.. புத்திர பாக்கியம் ஏற்படும். பூமி மற்றும் புதிய சொத்துச் சேர்க்கை, கூட்டாளிகளுடன் ஒற்றுமை, எதிர் பாலினரால் இன்பம், மணவாழ்க்கையில் மகிழ்ச்சி, புகழ், கௌரவம் மற்றும் எல்லாவகையிலும் முன்னேற்றம் ஆகியவை ஏற்படும். சிலருக்குக் குடும்பத்தில் பிரச்சனைகள், கணவன் மனைவிக்குள் கருத்து வேற்றுமை, வீண் செலவுகள் ஆகியவை ஏற்படும். பிறரின் பணம் வரும் வாய்ப்பு ஏற்படும். மனைவி வழி உறவுகளால் இலாபம் ஏற்படும்.  பலவகையான உயர்ரக வாகனங்கள் அமையும். கட்டளையிடும்படியான பெரிய பதவிகள் வந்துசேரும். புதிய பெண்களின் நட்பு உண்டாகும். செல்வம் சேரும். பணிவான ஆளடிமைகள், வேலையாட்கள் அமைவர். சிலருக்குத் தைரியக் குறைவு, உடன் பிறப்புக்களுடன் கருத்துவேறுபாடு ஏற்படலாம். வெளிநாட்டு வாசம் ஏற்படலாம். தானதர்மம் செய்வார். புத்திர பாக்கியம் ஏற்படும். வீட்டில் மங்கள காரியங்கள் நடைபெறும். அரசாங்க வேலை கிடைக்கலாம். மொத்தத்தில் கும்பராசி அன்பர்களுக்கு 60 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.

    குடும்பம் மற்றும் ஆரோக்கியம் ;-  தெய்வப் பிரார்த்தனையால் வேண்டிய காரியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் உடன் பிறப்புக்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பேச்சு பேச்சாக இருக்கவேண்டும். பேச்சில் கவனம் தேவை. கணவன் மனைவி உறவு நல்ல விதமாக அமையும். நீண்ட காலமாக வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும்.

    தொழில் மற்றும் ஆரோக்கியம் : சிலருக்கு எதிர்பாராத விதமாக வேலை கிடைக்கும். தங்கள் மீது நல்லெண்ணம் கொண்ட நண்பர்களின் உதவியால், கூட்டாளிகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் சுமுகமாகத் தீரும். சீரான வியாபாரத்திற்காக சோர்வின்றி கடுமையாக உழைக்க வேண்டிய நிலை ஏற்படும். தண்ணீர்ப் பழங்கள், பூக்கள், இரத்தின வகைகள் மற்றும் பல வடிவமைப்புக்கள் கொண்ட பொருட்கள் ஆகியவற்றின் வியாபாரம் லாபம் தரும்.
    பெண்கள் : தங்கள் பணிகளை நல்ல முறைகளில் செய்து வெற்றியடைவர். பணிபுரியும் பெண்கள் தங்கள் பணிகள் சிறக்க ஆர்வமுடனும், சிரத்தையுடன் ஈடுபடுவர். பணியிடங்களில் பிரச்சனை எழாமல் இருக்க தேவையற்ற பேச்சுக்களைக் குறைப்பது நல்லது. வெளிநாடுகளில் வேலை கிடைக்க வாய்ப்புண்டு. சிலர் தனிக்குடித்தனம் செல்ல முற்படுவர்.

    மாணவர்கள் : மாணவ, மாணவிகளின் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிலர் தேவையற்ற காதல் விவகாரங்களில் ஈடுபடுவதால் சிக்கல்கள் ஏற்படலாம். வாகனங்களில் செல்லும் போது கவனமாகச் செல்லுவதால் விபத்தைத் தவிர்க்கலாம். விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்று வெற்றிகளைக் குவித்து பள்ளிக்குப் பெருமை சேர்ப்பர்.

    ஜனன ஜாதகப்படி இராசிக்கு அட்டமத்தானத்தில் கோசாரச் சந்திரன் சஞ்சரிக்கும் காலமே சந்திராஷ்டம காலமாகும்இக் காலத்தில் சிக்கல்களும், சிரமங்களும் ஏற்படலாம். தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 21 – 10 - 2014 காலை      6 - 28 மணிமுதல் 23 – 10 - 2014 மாலை 04 – 33  மணி வரை ஆகும். இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.

    அதிர்ஷ்ட எண்கள்;- 3, 9, 2 மற்றும் 7 ஆகும். அனுகூலமற்ற எண்கள் 1, 4, 5, மற்றும் 8 ஆகும்அனுகூலமான எண் 6 ஆகும்.

    அதிர்ஷ்ட நிறம்;- மஞ்சள், சிகப்பு, வெள்ளை மற்றும் க்ரீம்  ஆகும். தவிர்க்க வேண்டிய நிறங்கள் பச்சை  மற்றும் நீலம் ஆகும்.

    அதிர்ஷ்டக் கற்கள்;- நீலக்கல்லை தங்கத்தில் அல்லது பஞ்சலோகத்தில் பதித்து மோதிரத்தை சனிக் கிழமையன்று, பூஜைக்குப் பிறகு வலது கை இரண்டாவது விரலில் அணிவது உத்தமம்.

    ஆகாதஇராசிமகரம், மாதம் - வைகாசி, கிழமைவியாழன், நட்சத்திரம் -- திருவாதிரை, திதிகள்திருதியை, அஷ்டமி மற்றும் திரோயதசி  ஆகும். யோகம் --  கண்ட, கரணம் -- கிம்ஸ்துக்னம்  ஆகும்.

    பரிகாரம்;- தொடர்ந்து ஶ்ரீ சாஸ்தாவை வணங்கி,  நெய்த் தீபம் ஏற்றிவர, துன்பங்கள் தூர விலகும். சூரிய நமஸ்காரம் செய்தல், கரிய வண்ண ஆடையணியவும்,  நீல மலர்களால் அர்ச்சித்தலும், இந்திர நீலக்கல் அணியவும் கருப்புப் பசு அல்லது எள்ளுத்தானம் செய்வதும் தோஷநிவர்த்தி ஆகும்.

No comments:

Post a Comment