Search This Blog

Wednesday 1 October 2014

2014-அக்டோபர் மாத இராசி பலன் ஜோதிட வாசல் - ஜோதிட இதழில் மிதுனம்

2014-அக்டோபர் மாத இராசி பலன்

ஜோதிட வாசல் - ஜோதிட இதழில்

மிதுனம்
(மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)
( இராசி  அறியாதவர்கள் பலன் அறியகா, கி, கு, , , , கே, கோ, )
        தங்கள் இராசிநாதன் உயரிய நிலையில் உள்ள புதனால்  ஆக்கபூர்வமான யோசனைகள் தோன்றும்சாமர்த்திய சாலிகளாவும், சுயகாரியப் புலிகளாகவும் இந்த இராசிக்காரர்கள் விளங்குவர். சுற்றுலா போன்ற இனிய பயணங்கள் ஏற்பட்டு சந்தோஷம் அதிகரிக்கும். இணைந்துள்ள சுக்கிரனால் உங்களுக்கென ஒரு உயர்வான வீடு அமையும். கல்வியில் உயர்வும் வெற்றியும் கிடைக்கும். உறவுகளின் ஆதரவால் வாழ்க்கை வளம் பெறும். குருவின் அனுகூல நிலை அழகும் பொலிவும் கூட்டும். செல்வநிலை உயரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.  செவ்வாய் தன, தானிய அபிவிருத்திகளைக் கொடுப்பார். இதுவரை இருந்து வந்த சண்டை, சச்சரவுகள் நீங்கும். வாக்கு வன்மையும், புகழும் ஏற்படும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். தெய்வப் பிரார்த்தனையால் வேண்டியது நிறைவேறும். செயல்திறன் மென்மேலும் பெருகும். வெற்றிமேல் வெற்றிவரும்.  பலவழிகளிலும் பணவரவு பெருகும். அரசாங்கத்தால் இலாபம் ஏற்படும். புதிய பதவி, அந்தஸ்து ஆகியவை கிடைக்கும். சிலருக்குத் திட்டங்களை முடிப்பதில் சிக்கல்கள் ஏற்படலாம். கெட்ட கனவுகள் தோன்றும். பயிர் விளைச்சல் அதிகரிக்கும். எல்லா வழிகளிலும் இன்பம் பெருகும். வியாபாரம் பெருகும். மொத்தத்தில் மிதுனராசி அன்பர்களுக்கு 65 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.
    குடும்பம் மற்றும் ஆரோக்கியம்: மணவாழ்க்கை மகிழ்ச்சியின் உச்சத்திற்குச் செல்லும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். மனைவியின் பக்திமார்க்கம் உங்களின் மத உணரவைத் தூண்டும். பழைய பகை மறைந்து புதிய நட்பு மலரும். புதிய உறவுகளால் மன மகிழ்ச்சி ஏற்படும்திருக்கோவில் திருப்பணிகள், அன்னதானங்கள் செய்வர்வெளிநாட்டுப் பயணங்கள் ஆதாயம் தரும். திருமணம் மற்றும் வம்ச குழந்தை பாக்கியம் ஏற்படும்.
    தொழில் மற்றும் வியாபாரம்: உத்தியோகம், வியாபாரம், தொழில் ஆகியவற்றைச் செயபவர்களுக்கு மிகுந்த அனுகூலமான காலமாகும். பலவழிகளிலும் பணமழைபொழியும். பிற்கால நலன் கருதிப் புதிய சேமிப்புக்களைத் துவங்குவீர்கள்.  வங்கிக் கடன்களும், அரசு உதவிகளும் கிடைக்கும். விவசாயப்பணிகளால் ஆதாயம் பெருகும். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் எதிர்பார்த்த இடத்திற்குக் கிடைக்கும்.
        பெண்கள்: பணிபுரியும் பெண்கள் தங்கள் வேலைகளை ரசித்து மகிழ்ச்சியுடன் மேற்கொள்வர். சிலருக்கு வாகனயோகம் ஏற்படும். வாகனங்களில் நிதானமாகச்  சென்றால் விபத்துக்ளைத் தவிர்க்கலாம். அதிகாரிகளின் ஆதரவால் பணி உயர்வுக்கான பரிந்துரைகள் செய்யப்படலாம். சுயதொழில் புரியும் பெண்களின் கடின உழைப்பால் உற்பத்திப் பெருக்கி, ஆதாயமும் பெருகும்.
    மாணவர்கள்: காலமுறைத் தேர்வுகளில் குறைவான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள், கவனமாகப் படிக்கவேண்டிய காலமிது. போட்டித்தேர்வுகள் எழுதும் மாணவர்கள் நீண்ட பயணங்களை மேற்கொள்ள நேரும். காதல் விவகாரங்களில் பல திருப்பங்கள் ஏற்படலாம். மாணவர்களுக்குக் கல்வியில் உயர்வும், விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வமும் ஏற்பட்டு, வெற்றிகளும் குவியும்.  
     சந்திராஷ்டமம்;- ஜனன ஜாதகப்படி இராசிக்கு அட்டமத்தானத்தில் கோசாரச் சந்திரன் சஞ்சரிக்கும் காலமே சந்திராஷ்டம காலமாகும்இக் காலத்தில் சிக்கல்களும், சிரமங்களும் ஏற்படலாம். தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 30 – 10 – 2014 காலை 09-12 மணி முதல், 01 –11 – 2014 பகல்11 – 43 மணிவரையாகும். இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.
    அதிர்ஷ்டக் எண்கள்;- 7 மற்றும் 3 ஆகும். கவரும் எண்கள் 5 , 6 மற்றும் 9 ஆகும். சாதகமான எண்கள் 1 மற்றும் 2 ஆகும். அனுகூலமற்ற எண்கள் 4 மற்றும் 8 ஆகும்.
    அதிர்ஷ்ட நிறம்;- மஞ்சள், பர்ப்பிள், பச்சை, நீலம் மற்றும் பிங்க் ஆகும். தவிர்க்க வேண்டிய நிறங்கள் கருப்பு மற்றும் சிகப்பு ஆகும்.
    அதிர்ஷ்டக் கற்கள்;- மரகதம், மஞ்சள் புஷ்பராகம் 3, 5, 7 அல்லது 10 கிராம் தங்கத்தில் பதித்து புதன் கிழமையன்று, பூஜைக்குப் பிறகு வலது கை நான்காவது விரலில் அணிவது உத்தமம்.
    ஆகாதஇராசிமகரம், மாதம்ஆடி, கிழமைதிங்கள், நட்சத்திரம் -- ஸ்வாதி, திதிகள்பிரதமை, சப்தமி மற்றும் துவாதசி ஆகும். யோகம் -- பரிகம், கரணம் -- கெளலவம்  ஆகும். இக் காலங்களில் நற்காரியங்கள் செய்யாதிருப்பது நல்லது.
    பரிகாரம்;- தொடர்ந்து பெருமாளுக்கு சனிக்கிழமைகளில் நெய்த் தீபம் ஏற்றிவர, துன்பங்கள் தூர விலகும். பச்சைப் பட்டாடையும், மரகதமும் அணிந்தாலும், ஸ்வர்ணதானம் அல்லது பாசிப்பயிறு தானம் செய்வது தோஷநிவர்த்தி தரும்.                     

No comments:

Post a Comment