Search This Blog

Wednesday 1 October 2014

2014 - அக்டோபர் மாத இராசிபலன்கள் (ஜோதிட வாசல் ஜோதிட இதழில் வெளியானது) சிம்மம்

2014 - அக்டோபர் மாத இராசிபலன்கள்

(ஜோதிட வாசல் ஜோதிட இதழில் வெளியானது)

சிம்மம்
( மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)

( இராசி  அறியாதவர்கள் பலன் அறிய, மி, மு, மெ, மோ, டி, டு, டே, டோ)

    தங்கள் இராசிநாதனால்  காரியத் தடைகள் ஏற்பட்டாலும், மற்ற கிரக நிலைகளால் நல்ஆரோக்கியமும், சந்தோஷமும், மன அமைதியும், இலாபமும் ஏற்படும். கல்வியில் சிறுதடைகள் ஏற்படலாம். உழைப்பு அதிகமாகி களைப்பும், சோர்வும் ஏற்படும். அரசு மரியதை கிடைக்கும். வித்தைகளில் தேர்ச்சியும். அறிவுத்திறனும் கூடும். சகோதர முன்னேற்றம், காரியவெற்றி,. தலைப்பதவி, வசதியான வீடு ஆகியவை அமையும். பெரும்புள்ளிகளின் அறிமுகத்தால் நன்மைகள் ஏற்படும். வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்படும். தலைமைப் பதவிகள் கிடைக்கும். சிலருக்கு உயர்குல வேற்றுப் பெண்ணால் அவப்பெயர் ஏற்படலாம். நிம்மதி குறைந்தாலும், தனச் சேர்க்கை ஏற்படும். சிலர் கோழைகளாக இருந்தாலும், வீரம் மிக்கவராவார். மனோதைரிய மிக்கவராவார். மொத்தத்தில் சிம்மராசி அன்பர்களுக்கு 55 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.

    குடும்பம் மற்றும் ஆரோக்கியம்: மிகவும் பிடித்தமான பழைய உறவுகளின் வரவால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கி வழியும். உறவினர் இல்ல விழாக்களில் கலந்து கொண்டு களிப்படைவீர்கள். குடும்பத்தில் ஆரோக்கியமும்வசதிவாய்ப்புக்களும் பெருகும்.    வெளிநாட்டுப் பயணங்களும் அதனால் இலாபமும் ஏற்படும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். நல்ல சந்ததிகள் உருவாகும்.

    தொழில் மற்றும் வியாபாரம்: தங்கள் முதலீடுளை வேறு புதிய திட்டங்களில் முதலீடு செய்ய முனைவீர்கள்.   வியாபாரத்தில் இருந்தவந்த மந்த நிலைகள் மாறி வேகம் பிறக்கும். வீடு சம்பந்தமான மற்றும் வீட்டு உயோகப் பொருட்களின் வியாபாரம் அதிகரிக்கும்பயிர் விளைச்சல் குறைவதன்  காரணமாக விவசாயிகளுக்கு இலாபம் குறையும். தோல் பொருள் வியாபாரிகளுக்குத் தேங்கிக்கிடந்த பொருட்கள் விற்பனையாகி இலாபம் பெருகும்.

    பெண்கள்பணிபுரியும் பெண்களுக்கு குடும்பத்தையும், அலுவலகப் பணிகளையும் ஒரு சேரச் சமாளிப்பதில் சங்கடங்கள் நிலவும். அதிக வேலைப்பழு காரணமாக ஓய்வு குறைவதால், ஆரோக்கிய பாதிப்பு ஏற்படும். ஆயினும், கணவன் மார்களின் அன்பும் பாசமும் ஆறுதல் தரும். பிள்ளைகளால் மனஅமைதி குறையும். அனைத்துப் பிரச்சனைகளையும் தங்கள் சமயோஜித புத்தியாலும், அறிவுக் கூர்மையாலும் முறியடித்து முன்னேறுவர்.

    மாணவர்கள் : தங்கள் இடைவிடாத கடின உழைப்பால் மட்டுமே, நன்கு படித்தால் தேர்வுகளில் வெற்றிபெற முடியும். எனவே, மாணவர்கள் கருத்துடன், கவனமாகப் படித்து முன்னேற முயலவேண்டும்.எந்தவொரு காரியத்தையும் ஒத்திப் போடாமல் உடனே செய்ய முற்பட்டு முன்னேறவும் முயலவேண்டும்.
 
    சந்திராஷ்டமம்;- ஜனன ஜாதகப்படி இராசிக்கு அட்டமத்தானத்தில் கோசாரச் சந்திரன் சஞ்சரிக்கும் காலமே சந்திராஷ்டம காலமாகும்இக் காலத்தில் சிக்கல்களும், சிரமங்களும் ஏற்படலாம். தங்களுக்கு இம் மாதம் சந்திராஷ்டம காலம் 07 – 10 - 2014  அதிகாலை 06 – 03 மணிமுதல் 09 – 10 - 2014 காலை 09 – 20  மணி வரை ஆகும். இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.

    அதிர்ஷ்டக் எண்கள்:- 1, 4, 5, 6 மற்றும் 9 ஆகும். சாதகமான எண் 3 ஆகும். அனுகூலமற்ற எண்கள் 2, 7 மற்றும் 8 ஆகும்.

    அதிர்ஷ்ட நிறம்:- ஆரஞ்சு, சிகப்பு மற்றும் பச்சை, க்ரீம், ஆகும். தவிர்க்க வேண்டிய நிறங்கள் நீலம், வெள்ளை மற்றும் கருப்பு ஆகும்.

    அதிர்ஷ்டக் கற்கள்:- தங்கத்தில்  பதிக்கப்பட்ட மாணிக்கம் அல்லது மரகத மோதிரத்தைத் தங்கத்தில் பதித்து ஞாயிற்றுக் கிழமையன்று, பூஜைக்குப் பிறகு வலது கை மூன்றாவது விரலில் அணிவது உத்தமம்.

    ஆகாதஇராசிமீனம், மாதம்ஆடி, கிழமைபுதன், நட்சத்திரம் -- மூலம், திதிகள்திருதியை, அஷ்டமி மற்றும் திரயோதசி ஆகும். யோகம் --  திருதி, கரணம் -- பவம்  ஆகும்.

    பரிகாரம்:- தொடர்ந்து அர்த்தநாரீஸ்வரரை  நெய்த் தீபம் ஏற்றிவர, துன்பங்கள் தூர விலகும். சூரிய நமஸ்காரம் செய்தல், சிகப்பு ஆடையணியவும், சிகப்பு மலர்களால் அர்ச்சித்தலும், கோதுமைதானம் அல்லது சிகப்புப் பசு தானம் செய்வதும் தோஷநிவர்த்தி தரும்,

No comments:

Post a Comment