Search This Blog

Wednesday 1 October 2014

2014 - அக்டோபர் மாத இராசிபலன்கள் (ஜோதிட வாசல் இதழில் வெளியானது) மகரம்

2014 - அக்டோபர் மாத இராசிபலன்கள்

(ஜோதிட வாசல் ஜோதிட இதழில் வெளியானது)

மகரம்

( உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )

( இராசி  அறியாதவர்கள் பலன் அறியபோ, , ஜி, ஜூ, ஜே, ஜோ, கா, , கீ )

      தங்கள் இராசிநாதன் கர்ம பாவத்தில் அமர்ந்து உடல் உழைப்பை அதிகரிக்கிறான். எடுத்த காரியங்களில் வெற்றி மற்றும் முன்னேற்றங்கள் ஏற்படும். சிலருக்குப் புதிய மாற்றங்கள் ஏற்படும்இராகு, மதம் மற்றும் பக்தி மார்க்கத்திலும், புனித பயணங்களில் ஆர்வத்தை ஏற்படுத்தும். புதிய தத்துவ எண்ணங்கள் உருவாகும். சிலருக்கு உடன்பிறப்புக்களுடனான உறவில் விரிசல் ஏற்படலாம். கல்வியில் தடைகள் ஏற்படலாம். இலாபத்தில் உள்ள அங்காரகன் நற்பலன்களைத் தருவார். பூமி ,சொத்துச் சேர்க்கை ஏற்படும். நவீன ஆடம்பர வீட்டு உபயோகப் பொருட்கள் சேரும். வசதி வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.  கடின உழைப்பின் காரணமாக தொழிலில் அதிக இலாபத்தை அள்ளித் தருவான். தங்கள் வேலை அங்கீகரிக்கப்பட்டு, தகுந்த பரிசுகளும் கிடைக்கும். வித்தையில் தேர்ச்சியும், அறிவுத்திறனும் உண்டாகும். தாய், தந்தைக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம். சிலருக்குச் சில விஷயங்களில் முடிவுக்கு வரமுடியாமல் மனத் தடுமாற்றம் ஏற்படும். ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும். மொத்தத்தில் தனுசுராசி அன்பர்களுக்கு 60 சதவிகித நற்பலன்கள் ஏற்படும்.

    குடும்பம் மற்றும் ஆரோக்கியம் ;- மனைவியின் நடவடிக்கைகள் மகிழ்ச்சி தருவனவாய் இருக்கும். மனைவி குணவதியாய் தங்கள் சொல் கேட்டு நடப்பாள். சிலருக்குப் பத்திர பாக்கியம் ஏற்படும். வாசனாதி பரிமள திரவியங்கள் சேரும். தன் இனிய வாக்கால் அனைவரையும் கவர்வார், சுகவாழ்வுக்குத் தேவையான பொருள்கள் அனைத்தும் வீட்டில் நிறைந்திருக்கும்.

    தொழில் மற்றும் வியாபாரம் : இம் மாதம் புதிய பணிகளின் துவக்க காலமாகி, வாழ்வில்  புத்தொளி வீசும். பல காலமாய்க் கண்டு வந்த கனவுகள் மற்றும் விருப்பங்கள் அனைத்தும் பெரியவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளால் நிறைவேறும். உயர் பதவிகள் கிடைக்கும்சிலருக்கு இடமாற்றம், பதவியில் பிரச்சனை ஆகியவை ஏற்படலாம். ஓயாத உழைப்பு களைப்பை அதிகரிக்கும். காசியாத்திரை செல்லலாம்.

    பெண்கள் : தாங்கள் பணிபுரியும் பணியிடங்களில், தங்கள் விருப்பம் போல் இடமாற்றம் கிடைக்கும். வீட்டு மனைவிகள் தங்கள் கணவன்மார்களின் பரிபூர்ண அன்பைப் பெறுவர். குழந்தைகளின் போக்கு கவலையளிக்கும். குடும்பத்துடன் பல புண்ணிய ஸ்தல யாத்திரைகள் செல்வீர்கள். காதல் விவகாரங்களில் திடீர் திருப்பங்கள் ஏற்படும்.

    மாணவர்கள் ;- சுயமுன்னேற்றத்துக்கான திட்டங்கள் தீட்டவேண்டிய காலமாகும். மாணவர்கள் தங்கள் முழுத் திறமைகளையும் வெளிக்காட்டுவர்பல போட்டிகளில் பங்குபெற்று பல பரிசுகளைப் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்ப்பர். நல்ல நண்பர்களோடு பழகுதல் நலம்உயர் கல்வியில் கல்வித் தரத்தை சீராக வைக்க அதிக அக்கறை எடுத்துக் கொள்ளவேண்டும்.

    ஜனன ஜாதகப்படி இராசிக்கு அட்டமத்தானத்தில் கோசாரச் சந்திரன் சஞ்சரிக்கும் காலமே சந்திராஷ்டம காலமாகும்இக் காலத்தில் சிக்கல்களும், சிரமங்களும் ஏற்படலாம். தங்களுக்கு இம்  மாதம்  சந்திராஷ்டம  காலம் 18 – 10 - 2014     மாலை 6 - 54  மணிமுதல் 21 – 10 - 2014 காலை 6 – 27  மணி வரை ஆகும். இக் காலங்களில் கவனமுடன் செயலாற்றுங்கள்.

    அதிர்ஷ்ட எண்கள்;- 6, 9 மற்றும் 8 ஆகும். அனுகூலமற்ற எண் 3 ஆகும். மற்ற எண்கள் அனுகூலமானவையாகும்.

    அதிர்ஷ்ட நிறம்;- நீலம், சிகப்பு, கருப்பு மற்றும் வெள்ளை ஆகும். தவிர்க்க வேண்டிய நிறங்கள் மஞ்சள்  மற்றும் க்ரீம் ஆகும்.

    அதிர்ஷ்டக் கற்கள்;- நீலக்கல்லை தங்கத்தில் அல்லது பஞ்சலோகத்தில் பதித்து மோதிரத்தை சனிக் கிழமையன்று, பூஜைக்குப் பிறகு வலது கை இரண்டாவது விரலில் அணிவது உத்தமம்.

    ஆகாதஇராசிசிம்மம், மாதம் - ஆவணி, கிழமைசெவ்வாய், நட்சத்திரம் -- ரோஹிணி, திதிகள்சதுர்த்தி, நவமி மற்றும் சதுர்த்தசி  ஆகும். யோகம் --  வைதிருதி, கரணம் -- சகுனி  ஆகும்.

    பரிகாரம்;- தொடர்ந்து ஶ்ரீ ஆஞ்சனேயரை வணங்கி,  நெய்த் தீபம் ஏற்றிவர, துன்பங்கள் தூர விலகும். சூரிய நமஸ்காரம் செய்தல், கரிய வண்ண ஆடையணியவும்,  நீல மலர்களால் அர்ச்சித்தலும், இந்திரநீலக்கல் அணியவும் கருப்புப் பசு அல்லது எள்ளுத்தானம் செய்வதும் தோஷநிவர்த்தி ஆகும்.

No comments:

Post a Comment