Search This Blog

Sunday 29 September 2019





குரு பெயர்ச்சி பலன்கள்பரிகாரங்கள் -2019 - 2020


                   நிகழும் சுப ஶ்ரீ விகாரி வருடம் ஐப்பசி மாதம் 18 ஆம் நாள், (திருக்கணிதப்படி) திங்கள் கிழமை, 04 – 11– 2019 அன்று  பகல் மணி 01 – 09 க்கு மகர இலக்னத்தில், விருச்சிக இராசியில் கேட்டை – 4 ஆம் பாதத்தில் இருந்து மூலம் – 1 ஆம் பாதம் தனுசு இராசிக்கு, வளர்பிறை அஷ்டமி திதியில், கண்ட யோகத்தில், பத்திரை கரணத்தில்  குரு பகவான்  பெயர்ச்சி ஆகிறார்.(வாக்கியப்படி ஐப்பசி-12 – 29-10-2019 செவ்வாய் கிழமை அதிகாலை மணி 3-49 க்கு தனுசு இராசியில் பிரவேசிக்கிறார்)


இராகு

குரு,சூரி
ராகு
சந்





இராசி
பகல் 01-09 – குரு - தனுசு



நவாம்சம்
புத
லக்// சந்


செவ்
சனி,கேது
குரு, சுக்,புத
சூரி
செவ்

சனி
கேது,சுக்
லக்//




கிரகங்களின் பாத சார விவரங்கள்
கிரகங்கள்
பாகை - கலை
நட்சத்திர பாதம்
இராசி
நவாம்சம்
சூரியன்
17 - 16
சுவாதி - 4
துலாம்
மீனம்
சந்திரன்
12 – 27
திருவோணம்-1
மகரம்
மேஷம்
செவ்வாய்
25 – 58
சித்திரை-1
கன்னி
சிம்மம்
புதன்
02 - 49
விசாகம்-4
விருச்சிகம்
கடகம்
குரு
29 - 56
கேட்டை-4
விருச்சிகம்
மீனம்
சுக்
08 - 40
அனுஷம்-2
விருச்சிகம்
கன்னி
சனி
21 - 19
பூராடம்-3
தனுசு
துலாம்
இராகு
17 – 19
திருவாதிரை-4
மிதுனம்
மீனம்
கேது
17 - 19
பூராடம்-2
தனுசு
கன்னி
இலக்னம்
25-03
அவிட்டம் - 2
மகரம்
கன்னி

                            குருவைப் பற்றி ...................
         குரு, சப்த ரிஷிகளில் ஒருவரான ஆங்கிரஸ மகரிஷியின் புத்திரர். இவரின் மனைவி தாரா வனப்பு மிக்க அழகியாவார். குருவுக்கு தனுசு, மீனம் ஆட்சி வீடாகும். உச்ச வீடு கடகம். நீச வீடு மகரம், ரிஷபம், துலாம், மிதுனம், பகை வீடும், மேஷம், சிம்மம், கன்னி, விருச்சிகம் ஆகியவை தோழமை வீடுகளாகும். அதிதேவதைஇந்திரன், பிரத்யதி தேவதைபிரம்மன் ஆவர். இவர் உத்திராயண காலத்தில் வலிமை மிக்கவர் ஆவார். இவருக்கு உரிய நட்சத்திரங்கள் புனர் பூசம், விசாகம், பூரட்டாதி ஆகும்.
குரு காயத்ரி
ஓம் வ்ருஷப த்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு ப்ரச்சோதயாத்.
ஓம் பரவரஸாய வித்மஹே
குரு வ்யக்தாய தீமஹி
தந்நோ குரு ப்ரச்சோதயாத்.
ஓம் குரு தேவாய வித்மஹே
பரம குருப்யோ தீமஹி
தந்நோ குரு ப்ரச்சோதயாத்.
ஓம் குரு தேவாய வித்மஹே
பரப்ரம்மாய  தீமஹி
தந்நோ குரு ப்ரச்சோதயாத்.
ஓம் ஆங்கிராய வித்மஹே
சுரசார்யாய  தீமஹி
தந்நோ குரு ப்ரச்சோதயாத்.
                  
குரு ஸ்தோத்திரம்.
                        தேவானா ம்ச ரிஷினாம்ச
                        குரும் காஞ்சன ஸந்நிபம்
                        புத்தி பூதம் த்ரி லோகேசம்
                        தம் நமாமி பிரகஸ்பதிம்.
குரு காயத்ரி, ஸ்தோத்திரம் ஆகியவற்றை அனுதினமும் பாராயணம் செய்பவர்களுக்கு உடல் நலமும், மன நலமும் சிறப்படையும். நினைத்த காரியங்கள் கைகூடி, பல நன்மைகளும் ஏற்படும்.
                  இன்று பலரும்  நவக்கிரகங்களில் ஒருவராகிய சுபராகிய குருவை ( வியாழன்பிரகஸ்பதி ) வழிபடுவதாக நினைத்து தென்முகக் கடவுளான தட்சிணா மூர்த்தியை வணங்கி, விளக்கு வைத்தல் பொன்ற பரிகாரங்களை செய்ய ஆரம்பிக்கின்றனர். இது தவறு. ஏனெனில் தட்சிணாமூர்த்தி சிவனின் அம்சம். குருவோ தேவர்களுக்கு குரு ஆவார். குரு – ‘ கு என்றால் இருள், ‘ ருஎன்றால் நீக்குபவர் என்று பொருள். ஜாதக தோஷங்களை நீக்க வல்லவர். குரு பார்க்கக் கோடி நன்மை என்பது வழக்கு. குரு, ஞானம், செல்வம், ஒழுக்கம், பெருமை ஆகியவற்றைத் தரவல்லவர்.

                  குருவுக்கு ஆகாத இல்லங்களான 1, 3, 4, 6, 8, 10, 12 ஆகிய இல்லங்களில் இடம் பெற்றவர்களுக்குத் தீய பலன்கள் ஏற்படுமாதலால், தீமைகள் விடுபட குருவுக்கு விசேஷமான கோவில்களில் பிரார்த்தனை அனுஷ்டிப்பது  தீமைகளைக் குறைக்கும். அதுபோல் நன்மை தரும் இடங்களான 2, 5 ,7, 9, 11 ஆகிய இடங்களில் குரு இடம்பெற அவர்கள் செய்யும் ஆலய வழிபாடுகள் நன்மையைக் கூட்டும் அல்லவா ?

  குரு வழிபாட்டுக்கான சிறப்புத் தலங்கள்
                   தஞ்சாவூர் மாவட்டம் திருவாரூர் சாலையில் நீடாமங்கலம்கும்பகோணம் செல்லும் வழியில் ( இரும்பூளை ) எனும் ஆலங்குடி குருவின் தலமான அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர்ழுவார் குழலி திருக்கோவிலில், குருவாரத்தன்றோ, குருவின் நட்சத்திரங்களான புனர்பூசம், விசாகம், பூரட்டாதி வரும் நாட்களில் மஞ்சள் வஸ்திரம், முல்லைப் பூமாலை சாற்றி, நெய் தீபம் ஏற்றி, கடலை மற்றும் சர்க்கரை கலந்து, நிவேதனம் செய்து அனைவருக்கும் அளித்தல் சிறப்பு.
                  குருவே, சூரியனை வழிபட்ட ஸ்தலமான சூரியனார் கோவில் ( கும்பகோணம்ஆடுதுறை ) உள்ள அனைத்து கிரகங்களையும் ஆராதிப்பது அல்லல்களைக் குறைக்கு மன்றோ ?
                 திருவாரூர் தியாகேஸ்வரர் கோவில், திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோவிலில் உள்ள குரு, மதுரை அருகே உள்ள குருவித்துறை. பட்ட மங்கலம்  ஆகிய கோவில்களில் உள்ள குருவை வழிபாடு செய்ய நலமே வாழலாம்.
                 எளிய வழிபாடாக உள்ளூர் கோவில்களிலுள்ள நவக்கிரகங்களில் தேவகுருவை அவருக்கு உரிய வஸ்திரம், மலர் சாற்றி மனதார வேண்டி பிரார்த்தனை செய்ய வந்த வினைகள் வந்த வழியே செல்லும்.
         
        

No comments:

Post a Comment