Search This Blog

Sunday 29 September 2019





2019 – மூர்த்தி நிர்ணயப்படி குருப்பெயர்ச்சி பலன்கள்.


           ஒரு கிரகமானது, ஒரு இராசியினின்று மற்றோரு இராசிக்குப் பெயர்ச்சியாகும் போது, ஜன்ம இராசிக்கு எத்தனையாவது இராசியில் சந்திரன் வருகிறதோ , அந்தக் கணக்கின் படி சுவர்ணம்  (தங்கம்)  ரஜதம் (வெள்ளி),  தாமிரம்  (செம்பு) மற்றும் உலோகம் ( இரும்பு) என்ற மூர்த்திகளாக மாறி பலன் தருகிறார்கள்

   கிரகப் பெயர்ச்சியன்று -

             ஜென்ம இராசிக்கு 1,6,11 இல் சந்திரன் இருக்க அது சுவர்ண மூர்த்தி என்றும், 2, 5, 9 இல் இருக்க ரஜத மூர்த்தி என்றும், 3, 7, 10 இல் தாமிர மூர்த்தி என்றும், 4,8,12 இல் இருக்க உலோக மூர்த்தி என்றும் ஆகி பலன் தருவர்.

இராசி
சுப/அசுபத்
தன்மை
குரு இருக்கும்
பாவம்/பொது
விதி
அளவு
1
சிறப்பு விதி
மூர்த்தி
நிர்ணயம்
அளவு


2
மொத்த
அளவு
1 + 2
பலன்
அளவு
பலன்
மேஷம்
 10 இல் சந்
9
0.500
தாமிர
மூர்த்தி
0.125
0.625
3/4
மிக்க நன்மை
ரிஷபம்
 9 இல் சந்
8
ரஜத
மூர்த்தி
0.250
0.250
1/4
சுமார்
மிதுனம்
8 இல் சந்
7
0.500
உலோக
மூர்த்தி
0.0625
0.5625
½+
 நன்மை
கடகம்
7 இல் சந்
6
தாமிர
மூர்த்தி
0.125
0.125
1/8
தீமை
சிம்மம்
 6 இல் சந்
5
0.500
சுவர்ண
மூர்த்தி
0.500
1
1
மிக்க நன்மை
கன்னி
5 இல் சந்  
4
ரஜத
மூர்த்தி
0.250
0.250
1/4

சுமார்
துலாம்
4 இல் சந் 
3
உலோக
மூர்த்தி
0.0625
0.0625
1/16
தீமை
விருச்சிகம்
3 இல்சந் 
2
0.500
தாமிர
மூர்த்தி
0.125
0.5625
½+

 நன்மை
தனுசு
2 இல் சந் 
1
 
ரஜத
மூர்த்தி
0.250
0.250
1/4
 சுமார்
மகரம்
1 இல் சந்
12
சுவர்ண
மூர்த்தி
0.500
0.500
1/2

நன்மை
கும்பம்
12 இல் சந்
11
0.500
உலோக
மூர்த்தி
0.0625
0.5625
½+

நன்மை
மீனம்
11 இல் சந்
10
சுவர்ண
மூர்த்தி
0.500
0.500
1/2

நன்மை




        குரு இம்முறை பொது விதிப்படி விருச்சிகம் (2), கும்பம் (11), மேஷம் (9), மிதுனம் (7), சிம்மம் (5) ஆகிய ஐந்து இராசிக்காரர்களுக்கு நற்பலன்களை அளிக்கிறார்.

          ஆனால். சிறப்பு விதியான, மூர்த்தி நிர்ணயப்படி நன்மை தரும் சில இராசிகளுக்கு நன்மைகள் சிறிது குறைவதும், தீமைதரும் சில இராசிகள் நன்மை அடைவதும் அல்லது தீமைகள் சிறிது குறைவதுமாக மாறும் விதத்தைக் காணலாம்.

        சிறப்பு விதியின்படி : பொதுவிதிப்படி நன்மை தரும் இடங்களின் மூர்த்தி நிர்ணயப்படி, நன்மைகள் சிறிது குறைவதைக் காணலாம்.

                   விருச்சிகம் -    2 - தாமிர மூர்த்தியாவதால், அவர் அளிக்கும் நன்மை சிறிது            குறைகிறது. 85%
                  கும்பம் -  11  - உலோக மூர்த்தியாவதால்  நன்மை சிறிது குறைகிறது. 85%

          மேஷம்- 9 - தாமிர மூர்த்தியாவதால் அவர் அளிக்கும் நன்மை ஓரளவு குறைகிறது. 85%

          மிதுனம் – 7 - உலோக மூர்த்தியாவதால் அவர் அளிக்கும் நன்மை சிறிது குறைகிறது. 80%

                   சிம்மம் – 5 - சுவர்ண மூர்த்தியாவதால்  முழு நன்மை அளிக்கிறார். 95%


      சிறப்பு விதியின்படி : பொதுவிதிப்படி தீமை தரும் இடங்கள், மூர்த்தி நிர்ணயப்படி தீமைகள் சிறிது குறைவதையும் சில இராசிகள் நன்மையளிப்பதாக மாறுவதையும் காணலாம். குரு இம்முறை கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம், ரிஷபம்  மற்றும் கடகம் ஆகிய இராசிகளில் 4, 3, 1, 12, 10, 8, மற்றும் 6 ஆகிய இடங்களில் முறையே அசுபம் தருகிறார். ஆனால் மூர்த்தி நிர்ணயப்படி பலம்பெற்று சில இராசிகளுக்கு நன்மையாக மாறுவதைக் காணலாம்.

       கன்னிக்கு  ரஜத மூர்த்தியாகி சுப பலன் பெரும்பாலும் குறையும். (4) 70%

       துலாத்துக்கு -  உலோக மூர்த்தியாக இருப்பதால் சுப பலன் குறையும். (3) 60%

       தனுசுவுக்கு   ரஜத மூர்த்தியாக  சுமாரான பலன்கள் ஏற்படும்.  (1) 70%

       மகரத்துக்கு -  சுவர்ண மூர்த்தியாக இருப்பதால் சுப பலன் சிறிது குறையும்.(12) 70%
       மீனத்துக்கு -  சுவர்ண மூர்த்தியாக இருப்பதால் சுப பலன் ஏற்படும். (10) 80%

       ரிஷபத்துக்கு -  ரஜத மூர்த்தியாக இருப்பதால் சுப பலன்  குறையும். (8) 65%

       கடகத்துக்கு   தாமிர மூர்த்தியாக இருப்பதால், சுப பலன் குறையும்  (6).70%


      மூர்த்தி நிர்ணயப்படி பலன்களை ஆராயும் போது,  சிம்மம், (5) மகரம்.(12) மீனம்(10) ஆகிய  இராசிக்காரர்களுக்கு சுவர்ண மூர்த்தியாக இருப்பதால்  நற்பலன்கள் ஏற்படுவதைக் காணலாம். மேற்படி இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி சுவர்ண மூர்த்தியாக முதல் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு சொர்ண ஆபரணங்கள், அணிகலன்கள் சேர்க்கை உண்டாகி  நன்மை அளிக்கும்.     

              ரிஷபம், கன்னி, தனுசு ஆகிய இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி ரஜத மூர்த்தியாக இரண்டாம் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு வெள்ளி ஆபரணங்கள், பாத்திரங்கள் ஆகிய சேர்க்கை உண்டாகி நன்மை அளிக்கும்.

           மேஷம், கடகம், விருச்சிகம் ஆகிய இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி தாமிர மூர்த்தியாக மூன்றாம் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு செம்பாலான  பாத்திரங்கள்  சேர்க்கை உண்டாகி ஓரளவு நன்மை அளிக்கும். செப்பு பாத்திரங்களை ஆலயங்களுக்குக் காணிக்கையாக செலுத்துவது நல்லது.


             மிதுனம், துலாம், கும்பம், ஆகிய இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி உலோக மூர்த்தியாக நான்காம் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு இரும்பினாலான விவசாய, பொறியியல் உபகரண சேர்க்கை உண்டாகி குறைந்த அளவு நன்மை அளிக்கும். இரும்பினாலான உபகரணங்கள், பொருட்களை உழவாரப் பணிக்கு, ஆலயங்களுக்குக் காணிக்கையாக செலுத்துவது நல்லது.     


No comments:

Post a Comment